tag:blogger.com,1999:blog-11255878778397561772023-11-16T12:44:51.945+05:30கனவுகளே..,நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comBlogger423125tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-42731293473271862972019-05-14T16:05:00.000+05:302019-05-14T16:05:40.014+05:30CSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px;">
<br /></div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
IPL துவங்கும்போது உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்றார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இரு வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றார்கள். தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப ஏலத்தின் அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயித்தார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடி நட்புறவு வளர்க்கவும் , விளையாட்டுத் திறனை வளர்க்கவும் ஒரு களம் என்றார்கள். எல்லாம் அப்படித்தான் துவங்கியது.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தற்போதைய நிலையில் போட்டிகளில் உள்ளூர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியம் என்ற விதி இல்லாமல் போய் விட்டது. தகுதி திறமை என்ற அதே அளவுகோலில் உள்ளூர் ஆட்டக்காரர்கள் ஒதுக்கப் பட ஆரம்பித்தாயிற்று. தற்போதைய CSK அணியையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆர். அஸ்வினை வேண்டாம் என்று சொல்லிவிட்டது. அவரை பஞ்சாப் அணி வாங்கி கேப்டன் ஆக்கியது. ஒரு அணிக்கு கேப்டன் ஆகும் திறமை உள்ளவரையே ஒதுக்கும் காட்சிகள் அரங்கேறிவிட்டது. ஆர்.அஸ்வின் ஏற்கனவே தன்னை நிரூபித்து விட்டதால் அவரை பஞ்சாப் அணி வாங்கியது. இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் டிஎன்பிஎல் போட்டிகளில் பல சாதனைகள் செய்தவர். அவரை பெங்களூரு அணி வாங்கி ஒரு ஓரமாகவே உட்கார வைத்து இருந்தது. தொடர் வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒருவேளை அடுத்த டெண்டுல்கராகவோ, கங்கூலியாகவோ வரக் கூடிய வாய்ப்பு உள்ள வீரர். ஒருவேளை தமிழக கேப்டன் சென்னையில் இருந்திருந்து வாஷிங்டன் சுந்தர் சென்னையில் இருந்திருந்தால் தொடர் வாய்ப்புகள் கிடைத்திருக்கும் (ரெய்னா போல, ராயுடு போல). அப்படித்தான் ஆர். அஸ்வின் தலைமையில் மு.அஸ்வினுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
CSK வில் வாட்ஸனுக்கு பனிரெண்டு ஆட்ட்டம் நன்றாக விளையாட நிலையிலும் தன்னை நிரூபிக்க தொடர்வாய்ப்பு கொடுக்கப் பாட்டது. ஆனால் முரளி விஜய்க்கு வாய்ப்பில்லை. தமிழக வீரர் ஜெகதீசன் CSK வில் தேர்ந்தெடுக்கப்பட்டும் டோனி விளையாடாத போட்டியில் கூட கீப்பர் என்ற முறையிலும் கூட அவருக்கு வாய்ப்பில்லை. இறுதிப் போட்டியில் ஒரு தமிழக வீரரும் சென்னை அணியில் இல்லை.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
முன்னர் கூறியது போல சம்பளமும் (ஏலத்தொகை) இவர்களுக்கு முழுமையாக வராது. விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் சதவிகிதக் கணக்கில்தான் வரும்,</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
தகுதி , திறமை என்ற அடிப்படையில் நீட் மற்றும் இன்னபிற போட்டித் தேர்வுகளிலும் எந்த கட்டுப் பாடும் இன்று வெளி மாநிலத்தவரை அனுமதித்தால் தற்போதைய தமிழக வீரர்களுக்கு CSK வில் நடந்ததைப் போன்ற ஒதுக்கப் படும் நிலைதான் தமிழக மாணவர்களுக்கும் நிகழும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
ரெய்னாவிற்கும் வாட்ஸனும் நல்ல வாய்ப்புகள் பெறும் சுழலில் முரளி விஜய்யும் ஜெகதீசனும் வாய்ப்புகளை இழப்பார்கள். இந்த கட்டுப்பாடில்லாத வெளி மாநில மாணவர்கள் , பணியாளர்கள் உள் அனுமதியால் நடக்கும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
வாஷிங்டன் சுந்தர், போன்ற மாணவர்கள் வெளி மாநிலங்களில் சென்று வாய்ப்பே வழங்கப்படாமல் டம்மி பீஸ் என்று பெயர் சூட்டப்பட்டு திருப்பி அனுப்பப் படுவார்கள்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
எங்கோ ஒரு சில மு.அஸ்வின்கள் ஆர். அஸ்வின்கள் போன்ற சீனியர்களால் வாய்ப்பு பெறலாம். ஆனால் அது வெகு அபூர்வமாகவே நிகழும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 6px; margin-top: 6px;">
சென்னை என்ற பெயர் இருக்கும் ஒரே காரணத்தால் சென்னைக்கு ஆதரவு அளித்தவர்கள், தகுதி திறமை அடிப்படையில் டோனி, வாட்ஸன் கிடைத்ததை நினைத்து மகிழ்பவர்கள் தலையில் வைத்து கொண்டாடுபவர்கள், தோல்விக்காக அழுது புலம்புவரக்ள். CSK என்ற அணி பல தமிழக வீரர்களை புறகணித்து, வெளி மாநில வெளிநாட்டவர்களை வைத்து உருவாக்கப் பட்ட அணி என்பதை உணர வேண்டும்.</div>
<div style="background-color: white; color: #1d2129; display: inline; font-family: Helvetica, Arial, sans-serif; font-size: 14px; margin-top: 6px;">
NEET மற்றும் கட்டுபாடில்லா வெளி மாநில பணியாளர்களை உள்ளே அனுமதித்தால் சிஎஸ்கே அணியைப் போல வெற்றி இருக்கும். ஆனால் உள்ளூர் அணி வீரர்கள் இருக்க மாட்டார்கள். வெளிமாநிலக் காரர்கள் உள்ளூர் பணியாளர்களாக இருக்கும் போது, முக்கியமாக தருணத்தில் தேவையற்ற ரன் அவுட், எல்பிடபிள்யூக்கள் நடக்கும். மொத்தத்தில்அணி வென்றாலும் தோற்றாலும் தமிழகத்திற்கு தோல்விதான் மிஞ்சும்.</div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-52684375706204983472017-11-26T22:19:00.001+05:302017-11-27T05:19:03.457+05:30சங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது.<br />
<div>
<br /></div>
<div>
சங்கதாரா என்ற போது சாரங்கதாரா என்ற படத்தின் பெயர்தான் நினைவுக்கு வரலாம். சிவாஜி நடித்த படம், சிவாஜியின் தந்தையின் மனைவி சிவாஜியை கரெக்ட் செய்ய முயற்சிக்கும் ராஜபுத்ர கதை. வசந்த முல்லை போல வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே இடம் பெற்ற படம். பொன்னியின் செல்வனில் கூட நந்தினி வீர பாண்டியனின் மனைவியா, மகளா அல்லது இரண்டுமேவா என்ற ஓர் ஏடாகூடா உறவு உண்டு. பெயரிலேயே ஒரு கிளுகிளுப்பு வந்திருக்க கூடும்.</div>
<div>
<br /></div>
<div>
சிறுவயதில் கண்ட கண்ட புத்தகங்களைப் படித்த போது பொன்னியின் செல்வனையும் படித்திருந்தாலும் இரண்டாம் வாசிப்பு பணியில் சேர்ந்த பின் தான். அந்த கதையை படிக்க ஆரம்பித்த போது எந்த சூழலிலும் ஏடு தந்தானடி தில்லையிலே என்று பாடும் எஸ், வரலட்சுமியின் முகம் எனக்குத் தோன்றவே இல்லை. </div>
<div>
<br /></div>
<div>
நான் பள்ளியில் படிக்குபோது சில நண்பர்கள் உண்டு. அவர்களின் தாயார்கள் அவர்கள் மீது அதீத பாசம் கொண்டவர்கள். எந்த அளவுக்கு என்றால் கிரிக்கெட் பேட் எடுத்துக் கொண்டு விளையாட வருபவனை யாருக்கும் பேட்டை கொடுத்து விடாதே, உடைத்து விடுவார்கள் என்று அட்வைஸ் செய்வார்கள். பள்ளிக்கு தீனி கொடுத்து விடும்போது யாருக்கும் கொடுக்காமல் நீ மட்டும் சாப்பிடு என்று சொல்லி அனுப்புவார்கள். அதுவும் என்னை மாதிரி பசங்களின் காதுகளில் விழ வேண்டும் என்பதற்காக சொல்லுவது போல சொல்லுவார்கள். </div>
<div>
<br /></div>
<div>
அது போன்ற பாசமிகு தாயார், தமக்கை பாத்திரமாகவே எனக்கு குந்தவை , பாத்திரம் தோன்றியது. இத்தனைக்கும் பொன்னியின் செல்வனில் குந்தவைதான் பெரிய பாத்திரம், பொன்னியின் செல்வனை விட பெரிய ஹீரோ அவர்தான். எனக்கு படிக்கும் போதே கொஞ்சம் சுய நலம் பிடித்த பிறரை மதிக்காத அரசியல்வாதியாகவே தோன்றினார். கதையின் போக்கு செல்லச் செல்ல பல பிரச்சனைகளையும் வரும்முன் தடுக்காமல் இவரே வளரவிட்டு சரிசெய்து தனது ஹீரோயிசத்தை தக்க வைத்துக் கொள்கிறாரோ என்று தோன்றியது.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
நாவல் முடிக்கும்போது ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது. முடிந்த பின் கல்கியின் முடிவுரையில் ஒரு கூற்றினைக் கொடுத்திருந்தார். சேந்தன் அமுதனும், மதுராந்தகனும் ஒரே நபராக எழுத ஆரம்பித்ததாகவும் பின்னர் சிலபல விமர்சனங்களைத் தவிர்க்க தனித் தனிப் பாத்திரமாகவும் கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். </div>
<div>
<br /></div>
<div>
அதே போல என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. ஆம் அதே போல நந்தினியும், குந்தவையும் ஒரே பாத்திரமாக இருந்திருந்து கதாசிரியர் வசதிக்காக வேறு வேறு பாத்திரமாக மாற்றி விட்டாரொ என்ற எண்ணம் தோன்றியது போது தான் அந்த விபரீத கற்பனை தோன்றியது. குந்தவை தான் நந்தினிதான் என்றால் நந்தினிதான் கொலை குற்றவாளி என்றால் .............., உண்மை கொலையாளி யார்?</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<h3 class="post-title entry-title" itemprop="name" style="background-color: white; color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 22px; font-stretch: normal; font-weight: normal; line-height: normal; margin: 0.75em 0px 0px; position: relative;">
<a href="https://kanavukale.blogspot.com/2008/12/blog-post_301.html" target="_blank">குந்தவைதான் கொலையாளியா? ஆதாரங்களுடன் ஒரு அலசல்</a> என்ற இடுகை 2008ல்</h3>
</div>
<div>
<br /></div>
<div>
நான் எழுதினேன். 2010ல் சங்க தாரா வெளியாகியுள்ளது. கண்டிப்பாக சில பல ஆண்டுகள் உழைத்து இருப்பார். நூல் வரும்முன்பே எழுதி விட்டதால் எனது கற்பனை என்றே மனதை தேற்றிக் கொள்ள்லாம் அல்லவா? </div>
<div>
<br /></div>
<div>
கல்கியின் எழுத்துக்களின் வாயிலாகவே அவர் குந்தவைதான் குற்றவாளி என்பதாக சொல்லாமல் சொல்லியிருக்கிறார் என்று நம்பினேன். பணிச்சூழல் அதற்கான ஆதாரங்கள் தேடும் அளவிற்கு எனக்கு சுதந்திரம் தரவில்லை. </div>
<div>
<br /></div>
<div>
இன்றுதான் சங்க தாரா வைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2010ல் எல்லாம் தினமும் பிளாக்கில் எழுதுவேன் அப்படியும் எனக்கு இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனது சந்தேகங்களுக்கு பதில்களை ஆதாரத்துடன் அவித்து வைத்திருக்கிறார். குந்தவைதான் கொலைக்குக் காரணம் என்று நம்பினாலும் யாரை வைத்து கொன்றிருப்பார்? அதற்கான சூழல் எப்படி அமைந்திருக்கும் ? என்பதற்கான விடையாக இந்த நாவல் அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.</div>
<div>
<br /></div>
<div>
நந்தினி வீரபாண்டியனுக்கு மகளாகவும் மனைவியாகவும் இருந்தது போல பொன்னியின் செல்வம் போகும் . அதே நந்தினி ஆதித்ய கரிகாலனுக்கு சகோதரி போலவும் காதலி போலவும் கதையில் தோற்றம் வரும். நான் வேறு குந்தவையும் நந்தினியும் ஒருவரே என்று முழுக்க முழுக்க நம்ப வருகிறேன். கல்கி வேறு நந்தினி ஒரு கற்பனைப் பாத்திரம் என்று சொல்லி விட்டார்.</div>
<div>
<br /></div>
<div>
சங்க தாராவிலும் நந்தினி போன்ற இரண்டு பெண்கள் வருகிறார்கள். குணாதிசிய அடிப்படையில் இரண்டு கதையிலும் குந்தவை ஒருவராகவே வருகிறார். குந்தவை தொடர்புடைய காட்சிகள் சில அப்படியே பொன்னியின் செல்வனிலிருந்து அதே நேரத்தில் மாற்றுக் கோணத்தில் தரப் பட்டுள்ளது. சில பல இடங்களில் ஆதாரங்கள் தரப் பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் வயது இரண்டு கதைகளிலும் மாறுபாடு நிறைய கொண்டுள்ளது.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
சாம்பவி பாத்திரம் சங்கதாராவில் புதியது. ஆனால் இது போன்ற பாத்திரங்கள் சரித்திரக் கதையில் தவிர்க்க முடியாதது. கதையில் வரும் சம்பவங்களை கோர்வைப் படுத்த இத்தகைய பாத்திரம் அவசியம். நாம் சிறுவயதில் தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடர் பார்த்த போது அதில் காலச் சக்கரமே வந்து அந்த வேளையைச் செய்யும். ஆனால் சாம்பவி பாத்திரத்தின் பின்புலம் சற்றும் எதிர்பாராதது. அதுவும் பொன்னியின் செல்வனின் பாத்திரப் படைப்பில் இருந்தே இதை கொண்டு வருகிறார். சாம்பவியின் ரகசியத்தை கடைசியில் அவிழ்த்தாலும் கதை படிப்பவர்களுக்கு சாம்பவியின் பின் புலம் எளிதில் புரியும் வண்ணம் ஊரறிந்த ரகசியமாகவே கொண்டு செல்கிறார். </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
செம்பியன் மாதேவிக்கு குழந்தை பிறந்த சில நாட்களில் கண்டாதித்தர் காணாமல் போகும் நிகழ்வே குறிப்பிட்ட ஒரு கேள்வியை வைத்து கதையின் முடிவில் பதிலைத் தருகிறது.</div>
<div>
<br /></div>
<div>
சூரிய மந்திரத்தை உபயோகப் படுத்தும் போதே கதையின் போக்கு ஒரளவு யூகிக்க முடிகிறது. அதற்கேற்றார்போல் ஓராண்டு சண்டி விரதமும் வருகிறது. கதை முடிந்தபின் மலேசியாவில் உள்ள கல்வெட்டுக்களை ஆதாரமாக காட்டுகிறார் கதாசிரியர்.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
ஆதித்ய கரிகாலனின் கோபமும், அவரது சிறந்த பண்பு நலன்களும் இதில் கூறப் பட்டுள்ளது. ஆனால் அவரது நற்பண்புகளுக்கு ஆதாரம் கதையில் கொடுக்கப் படவில்லை. நாயகனின் நற்பண்புகளுக்கு ஆதாரமும் தேவையில்லையே. </div>
<div>
<br /></div>
<div>
வந்தியத் தேவனின் பாத்திரம் தியாகம் செய்வதற்கே அவதாரம் எடுத்தது போல கல்கி அமைத்திருந்தாலும் வந்தியத் தேவனின் கத்தியால்தான் ஆதித்ய கரிகாலன் இறந்ததாக கதை அமைத்திருப்பார். அதுவும் கூட நான் குந்தவையை சந்தேகப் பட ஒரு காரணம். சங்கதாராவில் வந்தியத்தேவனை ஒரு டபுள் ஏஜண்டாகவே காட்டியிருக்கிறார்கள். அவரிடம் இரண்டு சத்தியங்கள் கல்கி காட்டியிருக்கும் பல ஆதாரங்களை மெய்ப்பிக்கின்றன்.</div>
<div>
<br /></div>
<div>
ஆதிச் சோழன் கதையையும் கூட எடுத்தாண்டிருக்கிறார் காலச்சக்கரம் நரசிம்மா</div>
<div>
<br /></div>
<div>
கதாசிரியர் பல இடங்களில் சொந்தக் கவிதைகளைப் போட்டு இடம் நிரப்பியிருக்கிறார்</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<a href="https://kanavukale.blogspot.com/2008/12/blog-post_301.html" target="_blank">அந்த இடுகையை</a> எழுதிய போது பின்னூட்டத்தில் ப்ரூனோ கேட்டிருந்தார். குந்தவையை சந்தேகப் படும் நீங்கள் ஏன் அருண்மொழியை சந்தேகப் படவில்லை என்று. நான் உடனடியாக அவர் அக்காபிள்ளை, தனியாக சந்தேகப் பட ஒன்றும் இல்லை என்று. .சங்கதாராவில் இதற்காக ஒரு கல்வெட்டே ஆதாரமாக இருக்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கதையில் விரு விருப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கிறது. காலச் சக்கரம் நரசிம்மாவின் உழைப்பும் கற்பனையும் ஒவ்வொரு பக்கத்திலும் ஆனந்த தாண்டவம் ஆடுகிறது. இருந்தாலும் கூட ஒவ்வொரு அத்தியாயத்தையும் இன்னும் விலாவாரியாக விளக்கியிருக்கலாம். இது போன்ற கதைகளுக்கு பக்கங்கள் ஒரு தடையாக இருக்கக் கூடாது. கதாசிரியர் தான் சொல்ல வருவதை வாசகர்களுக்கு சோர்வு கொடுக்காமல் விளக்க வேண்டும். உடையார் முதல் பாகம் அவ்வாறான ஒரு அயர்ச்சியை கொடுக்கும்.</div>
<div>
<br /></div>
<div>
கிளைமாக்ஸில் குந்தவை பெரிய கோவில் நந்தியின் காதில் சொல்லும் ரகசியம் ஏற்கனவே ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனுக்கு ஏற்கனவே தெரிந்ததைப் போன்ற கல்வெட்டுகள் காட்டப் படுகின்றன்.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
கதையில் நெகடிவ் என்று பார்த்தால்</div>
<div>
<br /></div>
<div>
1.இந்த கதையின் தலைப்பு பொன்னியின் செல்வனை கொஞ்சம் கூட உறவு கொண்டாடவில்லை. சங்கதாரா சோழ மன்னர்கள் முடி சூட பயன்படுத்தும் பொருட்கள். அதை விளக்கியிருந்தாலும் கூட ஏதோ ராஜ புத்திர கதையை மொழிபெயர்த்தது போன்று தலைப்பு அமைந்துள்ளது.</div>
<div>
<br /></div>
<div>
2.குமுதம், ஆனந்த விகடன் போன்ற ஏதாவது ஒரு புத்தகத்தில் தொடராக வந்திருந்தால் நிறையப் பேரை சேர்ந்திருக்கும், கதையை இன்னும் நீளமாக இழுத்திருக்கலாம்.</div>
<div>
<br /></div>
<div>
3, கதை முடியும்போது சாம்பவி சொல்லும் விஷயங்கள், தோழிப் பெண் சொல்லும் விஷயங்கள் ஏதாவது ஒரு இடத்தில் சஸ்பெண்ஸ் வைத்து உடைத்திருக்கலாம்.</div>
<div>
<br /></div>
<div>
4,பல இடங்களில் வரும் சொந்தக் கவிதைகள்</div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-83225564324946492512017-02-04T11:56:00.000+05:302017-02-04T11:56:17.494+05:30CBSE என்ற போர்வையில் வரும் ஏமாற்று வேலை.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நீட் தேர்வு எதிர்ப்புக்கு நான் சொல்லும் முக்கிய காரணம் ஸ்டேட் போர்டு மாணவர்களை CBSE பாடத்திட்டத்தில் தேர்வெழுதச் சொல்லுவதே, நம் மக்களின் உடனடி எதிர்வினை எப்படியென்றால் எல்லோரையும் CBSE பாடத்திட்டத்திலேயே படிக்க வைக்கச் சொல்லலாமே என்கிறார்கள்.<br />
<br />
பிதாகரசு தேற்றமோ, sin, cos, tan வகையறாக்களோ, ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், அனுக்கள், பிளவுகள், போன்றவை எல்லா பாடத்திட்டத்திலும் ஒன்றுதான். வித்தியாசப் படுவது நமது மொழி, வரலாறு போன்றவைகளை படிக்கும் போதுதான் . இந்தியா போன்றதொரு மிகப் பெரிய நாட்டின் ஒவ்வொரு மாநில மக்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமும் அடையாளங்களும் உண்டு. அவைகளை அடுத்தவர் பார்க்கும் பார்வை படு கேவலமாக இருக்கும். வடக்கிலும் தெற்கிலும் விதவை மறுமணம் ஒவ்வொரு சமூகத்திலும் எந்தப் பார்வையில் இருந்தது என்று ஒவ்வொரு 20 ஆண்டுகள் பின்னோக்கி போனாலே ஓரளவு புரியும்.<br />
<br />
இதற்கு உதாரணமாக ஒரு முகநூல் குழுவில் நிகழ்ந்த உடையாடலைச் சொல்ல முடியும். அந்த குழுவில் நண்பர் ஒருவர் வீட்டில் வைக்கக் கூடாத கடவுள்கள் படங்கள் என்ற தலைப்பில் பழனி முருகன் மூல்வர் படத்தையும் போட்டிருந்தார்.<br />
<br />
நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.<br />
<br />
சாஸ்திரப் படி என்றுவேறு போட்டிருந்தார். சாஸ்திரம் என்றால் எந்த சாஸ்திரம் என்று கேட்டிருந்தேன். அவரிடமிருந்தும் அந்த போஸ்ட்டை ஆஹா ஓஹோ என்று சிலாகித்து எழுதியிருந்தவர்களிருந்தும் பதில் இல்லை. அதற்கு பதிலாக என்னிடம் ஏன் விதண்டாவாதம் புரிகிறீர்கள் என்ற கேள்வியும் உலகில் பழனி முருகன் மட்டும்தான் முருகனா? வேறு முருகன் படம் வைத்து கும்பிட வேண்டியதுதானே என்று பதில் கேள்வி.<br />
<br />
நான் எந்த கடவுளையும் இந்த போஸ்ட் மூலம் கேள்வி எழுப்பவில்லை. எனது ஊர் பழநி. பழநி முருகன் மூலவர் சிலையின் படத்தை வைக்கக் கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள் காரணம் கேட்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. பதில் சொல்ல வேண்டிய கடமை போஸ்ட் போட்டவருக்கும் ஆதரித்து குரல் எழுப்புவர்களுக்கும் இருக்கிறது. பதிலைச் சொல்லுங்கள் என்று உறுதியாக நின்றேன்.<br />
<br />
இப்போது வேறு மாதிரியான பதில் வருகிறது. துறவிக் கோலத்தில் நிற்கும் முருகனைப் பார்த்தால் நெகடிவ் இம்பாக்ட் வரும். உங்களுக்கு விருப்பம் என்றால் வைத்துக் கொண்டு கஷ்டப் படுங்கள் என்ற மிரட்டலான பதில். பல மடாதிபதிகளும் துறவிக் கோலத்தில்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்கள் படங்களுக்கு இல்லாத ஒரு பயமுறுத்தல் தத்துவம் பழநி முருகன் மூலவர் படத்திற்கும், இன்ன பிற சக்தி வடிவங்களுக்கும் தருகிறார்கள். அந்த செய்தி படிக்கும் பலருக்கும் வாட்ஸ் அப் மூலம் கிடைத்திருக்கும். இது ஒரு வகையான மென்மையான மூளைச் சலவை.<br />
<br />
இன்று படத்தை வைக்கக் கூடாது என்பார்கள். அடுத்து நல்ல காரியங்களுக்கு வைக்கக் கூடாது என்பார்கள். பின்னர் நல்ல காரியம் முடிந்த பின் போகக் கூடாது என்பார்கள். படிப் படியாக அவர்கள் தெய்வத்தை திணிப்பார்கள்.<br />
<br />
பழநியிலேயே பழநியாண்டியை தரிசிக்க அந்த அலங்கார நேரத்திற்கு செல்லும் நபர்கள் நிறைய உண்டு. திருமணம் முடிந்த கையோடு வனதுர்க்கை கோயிலுக்கும் பத்ரகாளியம்மன் கோவிலுக்கும் செல்பவர்கள் பல குடும்பங்களை நான் அறிவேன். அந்தக் குடும்பங்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.<br />
<br />
இதெல்லாம் அவர்கள் புரியாதது போலவே தமிழ் கடவுள்களை மட்டம் தட்டுவார்கள்.<br />
<br />
இதுதான் CBSE க்கும் ஸ்டேட் போர்டுக்கும் உள்ள வித்தியாசம். தமிழ்நாட்டு பாடத்திட்டம் சரியில்லை என்றால் அந்த பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும். கணிதம், அறிவியில் , புவியியல், உலக வரலாறு ஆகிய பாடங்களை பொதுமைப் படுத்தலாம். மொழி, பிராந்திய வரலாறு போன்றவைகளை அந்த் அந்த மாநிலங்களிடம் விட்டுவிடலாம். மருத்துவக் கல்லூரி தரம் போதாது என்றால் மருத்துவக் கவுன்சில் மூலமாக தரமுயர்த்தலாம்.<br />
<br />
அதை விடுத்து விட்டு ஸ்டேட் போட்டு மாணவனை CBSEல் தேர்வு எழுதச் சொல்லுவதுதான் தரத்தை உயர்த்தும், ஊழலை தவிர்க்கும் என்பது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை. இதில் நீட்டை தவிர்த்தால் மாணவர்கள் பல தேசிய அளவிலான வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்ற மிரட்டல் வேறு. நீட் என்ன மாதிரியான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது, நீட்டைத் தவிர்த்தால் இழக்க என்ற கேள்விக்கு பதில் இல்லை.<br />
<br />
தமிழக அரசு காசு போட்டி கட்டி நடத்தும் மருத்துவக் கல்லூரியில் தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் சேர CBSE தேர்வினை எழுத வேண்டும் என்ற ஏமாற்றுத்திட்டமான நீட்டை நாமெல்லாம் எதிர்த்தே ஆக வேண்டும். </div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-4220197133930835122017-01-27T11:03:00.000+05:302017-01-27T11:03:44.387+05:30நாட்டு மாட்டினங்கள் வளர என்ன செய்ய வேண்டும்?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}" id="js_u">
நாட்டு மாட்டினங்கள் வளர என்ன செய்ய வேண்டும்?<br />
நாட்டு மாட்டினங்கள் வளர்ப்போரின் வருமானம் பெருக வேண்டும்.<br />
பால் உற்பத்தியை பெருக்கினால் மாடு வளர்ப்போரின் வருமானம் பெருகுமா?<br />
பெருகும். ஆனால் நாட்டு பசுக்கள் கொடுக்கும் பால் நம் தேவையை விட மிகக்
குறைவு. கலப்பினங்களும் இறக்குமதி இனங்களுமே பால் தேவையை சமாளிக்க
முடியும்.<br />
விவசாய வேலைக்கு மாடுகளை உபயோகப் படுத்துவதன் மூலம் காப்பாற்ற முடியுமா?<br />
நவீன கருவிகள் வந்துவிட்ட நிலையில் மீண்டும் நாட்டு மாடுகள் உபயோகம்
என்பது வேலை மிக மெதுவாக நடைபெறச் செய்து செலவை அதிகரிக்க வைத்து விடும்.<br />
சல்லிக் கட்டுகள் மூலம்?<br />
சில வகை மாடுகள் மட்டுமே சல்லிக் கட்டுக்கு பயன்படுத்த முடியும்.தவிர
சல்லிக் கட்டு மாடுகள் மூலம் வரும் வருமானத்தை விட பல மடங்கு செல்வழித்தால்
மட்டுமே களத்தில் மாடுகள் மானம் காக்கும்.<br />
அடிமாட்டுக்கு போகும் மாட்டை தடுப்பதன் மூலம்...,<br />
அதனால் வயோதிக மாட்டுக்கான பராமரிப்பு செலவு அதிகரிக்கும், அவ்வளவுதான், நீண்டகால அளவில் பெரிய மாற்றம் ஒன்றும் வந்து விடாது.<br />
பின்னர் என்னதான் வழி?<br />
பிராய்லர் கோழி வளர்ர்பு போல நாட்டு மாடுகளை வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.<br />
கோழிகளை சாப்பிடுவார்கள். எனவே நல்ல விற்பனை ஆகும் வருமானமும் கூடும்.<br /> நாட்டுமாடுகளை..,<br />
நாட்டு மாட்டுக் கறிகளை வெளிநாட்டில் உண்பார்கள். எனவே சரமாறியாக ஏற்றுமதி செய்யலாம்.<br />
இந்தியாவிலேயே 125கோடி மக்கள் இருக்கிறார்களே..,<br />
அவர்கள் மாட்டை சாபிட்டாலோ உயர் ரக மனிதர்களால் கொடுரமாக தாக்கப் படும் வாய்ப்பு இருப்பதால் அதை மட்டும் செய்யக் கூடாது,</div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-47695494006907436212016-12-08T23:03:00.001+05:302016-12-08T23:06:31.331+05:30சோ வுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கும் திமுக<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}" id="js_r">
1996<br />
அதிமுக மீதும் அதன் தலைமை மீதும் சண்டிவி , வருமான வரி துறை ஆகியவை மிகப் பெரிய வெறுப்பை விதைத்து வைத்திருந்தன.<br />
<br />
<br />
வைகோவால் திமுக ஒரு பிளவை சந்திருந்தது. 18 மாவட்ட செயலாளர்கள் வைகோ
பக்கம். பேச்சாளர்கள், சொந்த செல்வாக்கு உடையவர்கள். மிகப் பெரிய பிளவாகவே
அரசியல் பிரமுகர்கள் கருதினார்கள்.<br />
<br />
<br />
பாஷா பட விழாவில் ரஜினி
பேசியதற்காக பாஷா படத் தயாரிப்பாளரும் சத்யா (எம்ஜிஆரின் அம்மா பெயர்,
எம்ஜிஆர் நடித்த காலத்தில் எம்ஜிஆரை வைத்து மட்டுமே படம் எடுத்த கம்பெணி
அது. பினாமியா என்றெல்லாம் எனக்குத் தெரியாது) மூவீஸின் உரிமையாளர் ஆர் எம்
வீர்ப்பன் கட்சியை விட்டு ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தார். ரஜினிகாந்த்,
தளபதி ,மன்னன், அண்ணாமலை, பாஷா என்று புகழில் உச்சத்தில் இருந்தார்.
சில்வண்டுகள் முதல் 50 வயது வரையிலான ரசிகர்கள் அவர் என்ன சொன்னாலும் செய்ய
தயாராக இருந்தார்கள்.ரஜினியும் சிலபல காரணங்களுக்கா அப்போதைய
ஆட்சியாளர்களை எதிர்த்து வந்திருந்தார்.<br />
<br />
<br />
கட்சித் தலைவராக ஆர்.எம்.வீ யும்
முதல்வர் வேட்பாளராக ரசினியும் வைத்து ஒரு கட்சி உருவாகியிருந்தால்
ஆட்சியைப் பிடித்திருக்கும் வாய்ப்பு மிக அதிகமாக இருந்த சூழல்.<br />
<br />
அப்போது ஒரு பத்திரிக்கையாளர் தமாகவை உருவாக்கி திமுக
தமாகவை உருவாக்கி அதற்கு ரஜினியின் வாய்மொழி ஆதரவையும் அண்ணாமலையிலிருந்து
உபயோகப் படுத்தப் படாத ஒரு புகைப் படத்தையும் வாங்கிக் கொடுத்து திமுக வை
ஆட்சியில் அமர்த்தினார். அந்தப் பத்திரிக்கையாளர் சோ அவர்கள். அந்த வகையில்
சோவுக்கு திமுக மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.</div>
<div class="_3x-2">
<div data-ft="{"tn":"H"}">
<div class="mtm">
<div class="_5cq3" data-ft="{"tn":"E"}">
<a class="_4-eo" data-render-location="permalink" data-testid="theater_link" href="https://www.facebook.com/photo.php?fbid=10209290919523185&set=a.1410066444856.2053858.1028319651&type=3" rel="theater" style="width: 314px;"></a><br />
<div class="uiScaledImageContainer _4-ep" id="u_0_w" style="height: 300px; width: 314px;">
<a class="_4-eo" data-render-location="permalink" data-testid="theater_link" href="https://www.facebook.com/photo.php?fbid=10209290919523185&set=a.1410066444856.2053858.1028319651&type=3" rel="theater" style="width: 314px;"><img alt="Image may contain: 1 person" class="scaledImageFitWidth img" height="300" src="https://scontent-sjc2-1.xx.fbcdn.net/v/t1.0-9/15380409_10209290919523185_5374938366733278015_n.jpg?oh=d8048d17678a9daea0ed4d2210ed00a1&oe=58B0DA30" width="314" /></a></div>
<a class="_4-eo" data-render-location="permalink" data-testid="theater_link" href="https://www.facebook.com/photo.php?fbid=10209290919523185&set=a.1410066444856.2053858.1028319651&type=3" rel="theater" style="width: 314px;">
</a></div>
</div>
</div>
</div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-16609525308537983612016-10-18T16:02:00.001+05:302016-10-18T16:02:24.856+05:30பாகிஸ்தானிலிருந்து பிரம்மபுத்ரா வழியாக<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பிரம்மபுத்திரா ஆறு திபெத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி, சீனாவிற்குள் நுழைந்து இமயமலையின் ஓரமாகவே பயணம் செய்து அருணாச்சல் பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம் பூடான் வழியாக வங்கதேசம் அடைந்து கங்கையுடன் கலந்து வங்கக் கடலை அடைகிறது.<br />
<br />
வற்றாத ஜீவ நதிகளில் இதும் ஒன்று. இந்த ஆறு 3848 கி.மீ நீளமானது.கடும் மழை பொழிவினாலும், வெப்ப காலங்களில் இமயமலையில் உள்ள பனி உருகுவதாலும் எப்போதுமே வெள்ளப் பெருக்கில் இருக்கும் ஆறு இது. துணை ஆறுகள் தவிர்த்து பிரம்மபுத்ரா மட்டுமே விநாடிக்கு 700,000 கன அடி நீரைத் தருகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPoYI-6XCV_eUIRFoH6WX41Q2qBT_9Zxn876IIB5a2Zoey4ESwNq8J4nATnKlBZXr6M7tVl7HV1GLQiN19ie17XzALfjFz3AI4q4XiMwSsluGuq5FrOOSrnhD7BlIFr3FCIE4P2ebvcFDf/s1600/Ganges-Brahmaputra-Meghna_basins.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="177" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPoYI-6XCV_eUIRFoH6WX41Q2qBT_9Zxn876IIB5a2Zoey4ESwNq8J4nATnKlBZXr6M7tVl7HV1GLQiN19ie17XzALfjFz3AI4q4XiMwSsluGuq5FrOOSrnhD7BlIFr3FCIE4P2ebvcFDf/s320/Ganges-Brahmaputra-Meghna_basins.jpg" width="320" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4YPE35pyN0YlmKvBKj8woyIBffJFXc7dI17ph6_GaMrxVbJRrs6S-Jec9z1pr9KWZg_a7R1rwfUpvNO5UBKQI8RgpZr8X8oezrU3SN5RsoG4Fyf5EZF0WcQ7WKPancn7GSmX0bBNqdTVA/s1600/Map.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="279" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4YPE35pyN0YlmKvBKj8woyIBffJFXc7dI17ph6_GaMrxVbJRrs6S-Jec9z1pr9KWZg_a7R1rwfUpvNO5UBKQI8RgpZr8X8oezrU3SN5RsoG4Fyf5EZF0WcQ7WKPancn7GSmX0bBNqdTVA/s320/Map.jpg" width="320" /></a></div>
பிரம்ம புத்திரா இந்தியாவில் பாயும் பகுதியானது land of seven sisters என்று அழைக்கப்படக் கூடிய வட கிழக்குப் பகுதி. அங்கே பெய்யும் மழையிலேயே பிரம்மபுத்ரா ஓடிக்கொண்டேதான் இருக்கும். பிரம்மபுத்ரா ஆறினை முழுவதுமான அணைக்கட்டித் தடுக்கவே முடியாது. அவ்வளவு நீர் இருக்கும் ஆறு அது. காவேரி அணைகளிலேயே மழைக் காலங்களில் திறந்து விட்டு விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பிரம்மபுத்ராவில் அணை கட்டினாலும்கூட அது இந்தியாவுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. அதை அவர்கள் சொல்லவும் போவதில்லை. 1990களிலேயே இவ்வாறு ஒரு வதந்தி கிளம்பி அதை அவர்கள் மறுத்து இருக்கிறார்கள். <br />
<br />
2011ல் மஞ்சள் ஆறு (பிரம்மபுத்ராவை விட பெரிய ஆறு) அணை கட்டப் பட்டதால் புவியியல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்பட்டு அதை சரி செய்ய சீன அரசு போராடி வருகிறது.<br />
<br />
இந்த மாதிரி ஒரு சூழலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து சீனா பிரம்மபுத்ரா ஆறை தடுத்து நிறுத்தி இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேளை பிடித்து வைத்திருந்தால் இந்திய அரசு சீனப் பொருள்களின் மீது தடை விதித்து இருக்கும் ஆனால் அப்படி இந்திய அரசு செய்ய வில்லை. <br />
தவிரவும் சீனாப் பொருட்களுக்கு இந்தியாதான் பெரிய மார்க்கெட் என்னும்போது அவர்கள் இந்தியாவை பகைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு லாபம் எங்கோ அந்தப் பக்கம்தான் சேர்வார்கள்<br />
<br />
அப்புறம் எப்படி சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வாட்ஸ் அப் செய்திகள் பரவுகின்றன? பதில் மிக சுலபமானது. சீன மொபைல்கள் இந்தியாவுக்கு மார்க்கெட் வந்தபின் மைக்ரோமாக்ஸ், லாவா போன்ற இந்திய கம்பெனிகள் அதை அப்படியே வாங்கி இந்த்யாவில் விற்பனை செய்வது போன்றே.<br />
<br />
மலிவு விலை சீனப் பொருட்களை இங்கிருக்கும் முதலாளிகள் வாங்கி இந்தியப் பெயரில் விற்கப் போகிறார்கள். அதற்கான முதல்படியாகவே தோன்றுகிறது. அதாவது சில்லறை வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் முதலாளிகளுக்கு போகப் போகிறது.<br />
<br />
முடிந்தவரை இந்தியத் தயாரிப்பில் உருவான பொருட்களையே வாங்குங்கள். சீனப் பொருட்கள் விஷயத்தில் இந்திய அரசு எதுவும் சொல்லும்முன் எந்த பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம்.</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-91298258324866510052016-10-09T15:42:00.000+05:302016-10-09T15:42:03.882+05:30சில்லறை வியாபாரிகளை வாழ வைக்கும் சீனப் பொருட்கள்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பாகிஸ்தானுக்கு சீனா தான் ஸ்பான்சர் செய்வதாகக் கூறி சீனப் பொருட்களை புறக்கணிக்கக் கோரி ஆங்காங்கே குரல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் நாம் அனைவருக்குமே பல ஆண்டுகளாக தெரிந்த ஒரு விஷயம். பாகிஸ்தானுக்கு பெரிய ஸ்பான்சர் அமெரிக்கா என்பது. திடீரென ஏன் சீனா மேல் மட்டும் இப்படி ஒரு எதிர்ப்பு?<br />
<br />
சீனா இந்தியாவில் கொட்டி இருக்கும் பொருட்கள் பெரும்பாலும் மலிவு விலை வீட்டு உபயோகப் பொருட்கள். இந்த விலையில் இந்திய தயாரிப்புகள் கிடைக்க இப்போது வழியே இல்லை. 100 ரூபாய் கொசு பேட் இந்தியா தயாரிப்பு என்றால் குறைந்தது. 500ஆவது ஆகும்.<br />
<br />
இந்திய மார்க்கெட் வளர வேண்டும் என்று நினைத்தால் அன்னிய பொருட்களையே எதிர்க்கலாமே..,<br />
<br />
பாகிஸ்தான் ஸ்பான்சர் என்றால் அமெரிக்க சீனப் பொருட்களைப் புறக்கணிக்கலாமே<br />
<br />
பெப்சி, கோக்கை விடவா சீனப் பொருட்கள் இந்தியப் பொருளாதாரத்தை சுரண்டி விடுகின்றன்? <br />
<br />
அப்புறம் ஏன் சீனப் பொருட்கள் மட்டும் புறக்கணித்தல்?<br />
<br />
சீனப் பொருட்களைப் புறக்கணித்தால் அடுத்த நிலையில் உள்ள பிற பன்னாட்டு கம்பெனிகளுக்கு லாபம் கிடைக்கும். அவர்கள் கொள்ளை அடிப்பது சீனாவால் தடுக்கப் பட்டு வருகிறது. ஏன் என்றால் சீனப் பொருட்கள் விலை மிகக் குறைவு.<br />
<br />
அடுத்ததாக சீனப் பொருட்கள் இந்தியாவில் பெருமளவில் சில்லறை விற்பனையில் கிடைக்கிறது. ஓரளவு சில்லறை வியாபாரிகளுக்கும் லாபம். மக்களுக்கும் மலிவு விலையில் கிடைக்கிறது.<br />
<br />
இதே பன்னாட்டு கம்பெனிகள் என்றால் அவர்கள் வைத்த விலை. பெரிய கடைகளில் மட்டுமே கிடைக்கும்.<br />
<br />
எனவே நமது முதல் தேர்வு - இந்தியப் பொருட்கள்<br />
<br />
இரண்டாவது தேர்வு: சீன தயாரிப்புகள்( இந்தியப் பொருட்கள் இல்லா நிலையில்)<br />
<br />
நாம் ஒதுக்க வேண்டிய பன்னாட்டு நிறுவனத் தயாரிப்புகளே..,</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-59504165631658544442016-10-07T22:21:00.005+05:302016-10-07T22:21:38.204+05:30RESERVATION – 10 Questions and Answers<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}" id="js_3">
<br />
Q 1: What is reservation?<br />
The word reservation is a misnomer. The appropriate word for it used in
the Indian Constitution is Representation. It is not given to anyone in
his individual capacity. It is given to individual as a representative
of the underprivileged community. The beneficiaries of reservations are
in turn expected to help their communities to come up.<br />
<br />
Q 2: Why reservation?<br />
The policy of reservations is being used as a strategy to overcome
discrimination and act as a compensatory exercise. A large section of
the society was historically denied right to property, education,
business and civil rights because of the practice of untouchability. In
order to compensate for the historical denial and have safeguards
against discrimination, we have the reservation policy.<br />
<br />
Q 3: Were Reservations incorporated by the founding fathers of the constitution only for first 10 years?<br />
Only the political reservations (seats reserved in Loksabha,
Vidhansabha, etc) were to be reserved for 10 years and the policy review
was to be made after that. That is why after every 10 years the
parliament extends political reservations.<br />
The 10 year limit for
reservations is not true for the reservations in education and
employment. The reservations in educational institutions and in
employment are never given extension as it is given for the political
reservations.<br />
<br />
Q 4: Why give reservations on basis of caste?<br />
To answer this question we must first understand why the need for the
reservations has arisen. The cause for the various types of disabilities
that the underprivileged castes in India face / have faced, is the
systemic historical subjugation of a massive magnitude based on caste
system having a religious sanction. Therefore if the caste system was
the prime cause of all the disabilities, injustice and inequalities that
the Dalit-Bahujans suffered, then to overcome these disabilities the
solution has to be designed on basis of caste only.<br />
<br />
Q 5: Why not on basis of economic criterion?<br />
Reservations should never be based on economic status for various reasons as follows:<br />
1. The poverty prevailing among the Dalit-Bahujans has its genesis in
the social-religious deprivations based on caste system. Therefore
poverty is an effect and caste system a cause. The solution should
strike at the cause and not the effect<br /> 2. An individual’s Economic
status can change. Low income may be taken to mean poverty. But the
purchasing value of money, in India, depends upon caste. For example a
Dalit can not buy a cup of tea even in some places.<br />
3. Practical difficulties in proving economic status of individual to the state machinery are many. The weak may suffer.<br />
4. In caste ridden India infested with rampant corruption, even for an
unchangeable status like caste, the false “Caste Certificate” can be
purchased. How much easier will it be to purchase a false “Income
Certificate”? So income based reservation is impractical. It is no use
arguing when both certificates can be bought, why caste only should form
basis of reservation. It is certainly more difficult to buy a false
caste certificate than a false income certificate.<br />
5. Reservation
is not an end in itself. It is a means to an end. The main aim is to
achieve the active participation and sharing by the “socially excluded”
humanity in all the fields of the affairs of the society. It is not
panacea for all ills, neither it is permanent. It would be a temporary
measure till such time the matrimonial advertisements in newspaper
columns continue to contain the mention of caste.<br />
<br />
Q 6: Should there be a creamy layer criterion or not?<br />
The demand from anti-reservationists for introduction of creamy layer
is ploy to scuttle the whole effectiveness of reservations. Even now out
of all seats meant for SC/STs in IITs , 25-40 % seats remain vacant
because it seems IITs do not find suitable candidates. Just imagine what
would happen if by applying creamy layer criterion the SC/ST middle
class, lower middle class people who are in position to take decent
education are excluded from reservations benefit ! Will the poor among
SC/STs be able to compete with these ‘privileged ‘students’ trained
under Ramaiah and at various IIT-JEE training centers at Kota ?<br /> Of course Not.<br /> This will lead to 100 % seats in IITs for SC/STs going vacant.<br />
<br />
Q 7: How long should the reservations continue?<br />
The answer to this question lies with the anti-reservationists. It
depends on how sincerely and effectively the policy makers which
constitute “privileged castes” people in executive, judiciary and
legislature, implement the reservations policy.<br /> Is it just on part
of “privileged castes” people who have enjoyed undeclared exclusive
reservations for past 3000 years and continue to enjoy the same even in
21st century in all religious institutions and places of worship, to ask
for the timelines for reservations policy?<br /> Why do not they ask, how
long the exclusive reservations for particular community in the
religious institutions and places of worship are going to continue?<br />
The people who have acquired disabilities due to inhuman subjugation for
3000 years will need substantial time to come over those disabilities.
50 years of affirmative action is nothing as compared to 3000 years of
subjugation.<br />
<br />
Q 8: Will not the reservations based on castes lead to divisions in the society?<br />
There are apprehensions that reservations will lead to the divisions in
the society. These apprehensions are totally irrational. The society is
already divided into different castes. On the contrary reservations
will help in annihilating the caste system. There are around 5000 castes
among the SC/ST and OBCs. By grouping these various castes under 3
broad categories of SC, ST and OBC, the differences among 5000 separate
castes can be abridged. This is a best way of annihilation of castes.
Therefore rather than making rhetoric about reservations leading to
divisions in the society the anti-reservationists should make honest and
sincere efforts to annihilate castes. Have these people made any
efforts towards this direction? In most of the cases the answer is NO.
The people making these anti-reservations rhetoric, all this time have
been enjoying all the privileges that the Indian caste system offers to
the “Privileged Castes”. As long as they enjoy the privileges of the
caste system they do not have any qualms regarding it. But when it comes
to making castes as basis for achieving social equality by providing
representations these same people make noises. These are the double
standards of highest order practiced by the ‘privileged’ people.<br />
<br />
Q 9: Will not reservations affect the Merit?<br />
As regards to how Merit is defined in a very narrow sense and what it
actually means, following is the quote from an article by Prof Rahul
Barman of IIT Kanpur.<br />
Reservations of more than 60 % have existed
in the 4 states of southern India and around 40 % in Maharashtra since
last 50 years. On other hand in the north Indian states the 15 %
‘privileged castes’ have been enjoying 77 % of the seats in educational
institutions and in employment (assuming that 23 % reservations for
SC/STs are totally filled, which is not the case). The World Bank study
has found that all the 4 south Indian states are much ahead of north
Indian states in terms of their human development index. It is a common
knowledge that all the southern states and Maharashtra are much ahead in
fields of education, health, industrial development, in implementing
poverty alleviation schemes, etc. than the north Indian states. This
shows that reservations have indeed helped the southern Indian states in
making progress on various fronts. Whereas lack of adequate
reservations is responsible for the lack of development in most of the
north Indian states.<br />
<br />
Q 10: Have existing reservations for SC/STs been effective or not?<br />
The reservation policy in the public sector has benefited a lot of
people. The Central government alone has 14 lakh employees. The
proportion of Scheduled castes in class III and IV is well above the
quota of 16 per cent and in class I and II, the proportion is around
8–12 per cent. So, the middle and the lower middle class that we see
today from the Dalit community is because of reservation.</div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-71019411061144082922016-10-07T21:22:00.002+05:302016-10-07T21:22:50.494+05:30வாழ்த்துக்கள் அம்பேத்கர் 125, தேசிய கருத்தரங்கம் நெல்லை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="_5pbx userContent" data-ft="{"tn":"K"}" id="js_3">
பத்தாம்
வகுப்பில் முதல் தமிழ் வகுப்பு,உங்களில் யாருக்கு தமிழ் தெரியாது என்று
ஆசிரியர் அ.ஆறுமுகம் கேட்கிறார். உடனடியாக கையைத் தூக்கிவிட்டேன்.<br />
<br />
நான் படித்த போது சுற்று வட்டாரத்திற்கு அது ஒன்றுதான் மேல் நிலைப் பள்ளி,
எனவே பல ஊர்களிலிருந்தும் மாணவர்கள் சேர்ந்திருந்தனர்.ஒன்பதில் ஐ பிரிவு
வரை உண்டு. ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு சூப்பர் படிப்ஸ் உருவாகியிருந்தாலும்
எங்கள் பிரிவில் முதலிடம் பெறும் நான் ஒரு சூப்பராகவில்லை. அதற்கான காரணம்
தமிழ். என்ன காரணத்தாலோ நிறைய தமிழ் வகுப்புகளில் வெளியே அனுப்பப் பட்டு
விடுவேன். (சில பல காலங்களுக்கு பின் என்னால் காரணத்தை யூகிக்க முடிந்தது,
அந்தக் காரணமாக இருக்கக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்). தமிழில்
குறையும் மதிப்பெண்ணால்தான் அந்த சூப்பர் படிப்ஸ் அங்கீகாரம் எனக்கு
கிடைக்காமலேயே இருந்தது.<br />
<br />
தமிழ் ஆசிரியர் கடுப்பாகி இருப்பார் என்றே
நினைத்திருந்தேன். ஆனால் இல்லை என்பது பின்னர் புரிந்தது. என்னை
முன்வரிசையில் தரையில் வந்து அமரச் சொல்லி விட்டார், நான் சரி என்றால்
மட்டுமே வகுப்பு மேற்கொண்டு நகரும். மிகச் சிறந்த ஆசிரியர். அவரால்தான்
எனக்கு அண்ணா அறிமுகம். ஏற்கனவே எம்.ஜி.ஆர் பாடல்கள் மூலம் அண்ணா என்ற
பெயரும் பில்டப்பும் தெரிந்திருந்தாலும் அண்ணா என்ற ஆளுமை அவர் மூலமே
அறிமுகம். யார் அவர்? எந்த சூழலில் அவர் அரசியலில் நுழைந்தார் என்பது போன்ற
விவரங்கள் பாடங்களில் நடு நடுவே வந்து விழும். அவர் என்றுமே பாடத்தை
விட்டு வெளியே போனதில்லை. தமிழ் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலுமே அவரது
கருத்துக்களைச் சொல்லுவார். அவர் ஏற்படுத்திய ஆவலில் அண்ணாவின்
எழுத்துக்களை நூலகத்தில் படிக்க ஆரம்பித்தேன். பின்னர் அடுத்த ஆண்டில்
இன்னோரு ஆசிரியர். அவர் மூலமே வி.பி.சிங். பற்றி உணர முடிந்தது. 93ல் இது.
அதற்கு முன் எனக்கு வி.பி.சிங்கின் அறிமுகம் துக்ளக் மூலம். மண்டல்
கமிஷனும் துக்ளக் மூலம். 93 களில் ஓரு இதழ் விடாமல் துக்ளக்
படித்தவர்களுக்கு தெரியும். அந்த அறிமுகம் எப்படி இருக்கும் என்று,<br />
வி.பி.சிங் பற்றிய கருத்துக்கள் மாற தொடங்கிய போது மண்டல் கமிஷன் தெரிய
தொடங்கியது. இவரே அண்ணாவைச் சுற்றி பெரியாரையும், கலைஞரையும் அறிமுகப்
படுத்துகிறார். கலைஞரை அறிமுகப் படுத்துகிறார் என்றால் ஒரு இலக்கிய
வாதியாக, சமூகப் போராளியாக, இன்றும்கூட நமக்கு பல அரசியல் வாதிகளை அரசியல்
வாதிகளாக மட்டுமே நமக்கு தெரியும். சமூக நலன்கொண்ட முற்போக்குவாதிகளாக
பலருக்கும் அறிமுகம் கிட்டுவதில்லை. ஆனால் இவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
இன்றும் கூட கலைஞரை சுவாசிக்கும் பலருக்கும் எம்.ஜி.ஆரைப் பிடிக்காது ஏன்
என்று கேட்டுப்பாருங்கள். கலைஞரை எதிர்த்தது மட்டுமே காரணமாகச்
சொல்லுவார்கள். சிலரால் மட்டுமே கருத்து ரீதியாக காரணம் சொல்ல முடியும்.<br />
<br />
அண்ணாவையும் கலைஞரையும் பற்றி பேசும்போதும் மண்டல் கமிஷன் பற்றி பேசும்
போதும் பெரியாரும் வந்து விடுவார். தமிழகத்தில் நாமெல்லாம் மனிதர்களாக
மதிக்கப் படுவதற்கு காரணமே பெரியார்தான் என்பது ஓரளவு புரிந்திருந்தது.
தமிழகத்தில் பெரியார் போல அகில இந்திய இஅளவில் அம்பேத்கர் என்ற அளவில்தான்
நமக்கு அம்பேத்கர் அறிமுகம். தமிழகத்தின் எந்த அரசியல் கட்சியாக
இருந்தாலும் பெரியார் படத்தை முன்னிலைப் படுத்திக் கொள்வார்கள். ஆனால்
பட்டியலினத்திற்கான கட்சிகள் கூட அம்பேத்கர் படத்தினை ஒரு ஓரத்தில்
போடுவார்கள். சட்டக் கல்லூரிக்கு அவர் பேர் இருந்தாலும் உபயொகத்தில் மிகக்
குறைவாகவே இருக்கும். அண்ணா நகர், எம்.ஜிஆர் நகர், காமராஜ் நகரெல்லாம்
ஊருக்குள் இருந்தாலும் அம்பேத்கர் தெரு ஊரின் கடைசியில்தான் இருக்கும்.
பெரியார் சமத்துவபுரம் தவிர்த்த பெரியார் நகர்களும் அரிதே.<br />
<br />
காந்தியைப் படிக்கும்போது தவிர்க்கமுடியாமல் அம்பேத்கர் வருவார்.
அப்போதெல்லாம் அம்பேத்கர் செய்தது சரியே என்றே தோன்றும். சமீப காலங்களில்
இணைய விவாதங்களின் மூலமாகவே அம்பேத்கர் நமக்கு புலப்பட ஆரம்பிக்கிறார்.
அவரது வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது இப்போது நடக்கும் பல சதிகள் புலப்
படுகின்றன. பொருளாதார அடிப்படையில் சலுகைகள். அம்பேத்கர் வெளிநாட்டில்
படிக்கும்போது மன்னர் அளிக்கும் உதவித்தொகை நிறுத்தப் படுகிறது. படிப்பும்
பாதியில் நின்றுவிடுகிறது. இத்தனைக்கும் அவரது தந்தை ஒரு மிலிட்டரி ரிடர்ன்
.அடிப்படை சொத்து என்று ஏதும் இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்
என்பதால் ஒவ்வொரு முறையும் எவ்வளவு போராடுகிறார் என்பது புலப்படும். இன்றைய
இணையத்தில் இனிக்க இனிக்க பேசி எப்படியெல்லாம் உரிமைகளை பறிக்கப்
பார்க்கிறார்கள் என்பதும் அவரது வாழ்க்கைவரலாற்றைப் படிக்க நினைத்தாலே
புலப் படும். இந்தியா என்ற நாடு பாகிஸ்தான் போன்று இல்லாமல் ஒரு ஜனநாயக
நாடாக இருப்பதில் அம்பேத்கரின் பங்கும் மிக முக்கியமாகவே இருந்திருக்கிறது.<br />
<br />
பெரியாரைப் பற்றி <a class="profileLink" data-hovercard="/ajax/hovercard/user.php?id=100000968942101" href="https://www.facebook.com/oviyathamizh">தமிழ் ஓவியா ஓவியா</a> மூலம் விளாவாரியாக படிக்க முடிவதை போல அம்பேத்கரை பற்றியும் விளாவாரியாக மாணவர்கள் படிக்க முடியும் சூழலை உருவாக்க வேண்டும்.<br />
<br />
நான் கூட அம்பேத்காரை பற்றி மிக ஆரம்பத்திலேயே படித்திருந்தால் பள்ளியில்
கல்லூரியில் ஏற்பட்ட சில சங்கடங்களை மென்மையாக தவிர்த்திருக்க முடியும்
என்று தோன்றுகிறது.<br />
<br />
நாளை நெல்லையில் நடைபெறும் அம்பேத்கர் 125 தேசிய கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடைபெறவும் வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.</div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-29117502792177486222016-09-14T14:32:00.000+05:302016-09-14T14:32:46.578+05:30நன்றி அமித் ஷாஜி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த நாள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. மகா சக்கரவர்த்தி மகாபலியின் வருகை உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. உண்மையில் மகாபலியின் வருகையை கேரளா தாண்டி கொண்டு சென்ற பெருமை அமித் ஷாவையே சேரும். <br />
<br />
மன்னன் மகாபலியின் பெருமையை வெறும் சடங்காக சம்பிரதாயமாக பாடிக் கொண்டிருந்த மக்களை உணர்ச்சிப் பூர்வமாக ஒவ்வொரும் பகிர்ந்து கொள்ளக் காரணமே அமிஷ் தான் அவர் போட்ட வாமன ஜெயந்தி போஸ்டர்தான். நம்ம ஊரில் பிள்ளை சதுர்த்தி திருவிழா போல வாமன ஜெயந்திக்குஅடி போட்ட போஸ்டரை எதிர்த்து கேரளாவே பொங்கிக் கொண்டு இருக்கிறது.<br />
<br />
சில நாட்களுக்கு முன் நான் போட்ட பதிவு <br />
<h3 class="post-title entry-title" itemprop="name">
<a href="http://kanavukale.blogspot.com/2016/09/blog-post_9.html" target="_blank">வடக்கத்தியர் எதிர்க்கும் ஓணம் பண்டிகை</a></h3>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
இன்று ஒவ்வொருவரும் மகாபலி பற்றிச் சொல்லுகிறார்கள். மகாபலி ஆட்சியில் பஞ்சம் இல்லை, பசி இல்லை, பட்டினி இல்லை, இள வயது மரணம் இல்லை, சாதி இல்லை. அனைத்து மக்களும் சாதி வேறுபாடு இன்றி சமத்துவத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறுகின்றனர். வந்துள்ளவர் தானம் என்று கேட்டால் எதையும் கொடுக்கும் மனதோடு வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் ஆட்சியில் யாரும் கெட்ட எண்ணத்துடன் தானம் கேட்டதில்லை. வந்திருப்பவர் கபட வேடதாரி என்று எச்சரிக்கப் பட்டும் தானம் கொடுக்க சம்மதிக்கிறான். </div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
<br /></div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
அவன் நாட்டில் பார்த்த முதல் வேட தாரி வாமனன். உள்ளன்றொரு வைத்து புறம் ஒன்று பேசும் முதல் நபர் வாமனன். </div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
<br /></div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
இன்று கேரளாவில் உள்ள ஒவ்வொரு ட்விட்டரும், முகநூலாரும் வாமன அவதாரத்தின் வஞ்சனையையும் மகாபலியின் பெருமைகளையும் ஆரிய திராவிட வித்தியாசத்தையும் தெளிவாக ஆவணப் படுத்தி பேசுகிறார்கள். நேரில் பார்ப்பவர்களிடம் ஓணம் வாழ்த்துக்கள் என்று சொன்னாலே அவர்கள் மகாபலியின் பெருமை பேசி பதில் சொல்கிறார்கள்.</div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
<br /></div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
இப்படி ஓர் ஆரிய எதிர்ப்பு திராவிட வாழ்த்து சமீப காலத்தில் வந்ததே இல்லை. இப்படி ஒரு சூழல் வந்ததற்கு அமித் ஷா அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.</div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
<br /></div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
பின்குறிப்பு:- கேரள நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது இன்னொரு நண்பர் சொன்ன செய்தி, மகாபலிக்கு முற்பிறவி சாபமாம் அதனால்தான் வாமணன் அவரை பாதாள உலகம் அனுப்பினாராம்.</div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
<br /></div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
பின்குறிப்பு 2:- வாமனனை வில்லனாக கொண்ட இந்த கதைக்கும் விஷ்ணுவை பெண்ணாக்கி அவருக்கு குழ்ந்தையையும் கொடுத்த கதைக்கும் ஏதாவது அரசியல் தொடர்ப்பு இருக்குமா?</div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
<br /></div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
பின்குறிப்பு 3:- நாம் ஏன் தீபாவளியைக் கூட பூமாதேவியின் மகனான நரகாசுரனின் மீள் வருகை நாளாக மாற்றிக்கொண்டாடக் கூடாது?</div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
<br /></div>
<div class="post-title entry-title" itemprop="name" style="text-align: left;">
<br /></div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-42482236882163361402016-09-09T23:21:00.002+05:302016-09-10T06:15:20.764+05:30பூவே உனக்காக அவசர ரீமேக்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பூவே உனக்காக 1996ல் வந்த படம், நாங்கள் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த காலம் அது நண்பர் கிரிஸ்டல் செந்திலுடன் பார்த்த விஷ்ணு படம்தான் கோயமுத்தூரில் எனது கணக்கை துவக்கியது என்ற வகையில்விஜய் நமக்கு நெருக்கமானவரே..,<br />
<br />
பூவே உனக்காக வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் முகநூலில் எனது நண்பர் மகேஷ் குமார் இந்த படம் வராமல் இருந்திருந்தால் என்று ஒரு கேள்வி எழுப்பி இருந்தார்.<br />
<br />
சற்றே இந்தக் கேள்வியை மாற்றி இந்தப் படம் இப்போது வந்திருந்தால் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வேளை இளைஞர்களை கவர்ந்திருந்தால், மனங்களை மாற்றி இருந்தால்.........<br />
<br />
<span style="color: #cc0000;"><b>1. தான் காதலித்த பெண் தன்னைக் காதலிக்க வில்லை என்றாலும்கூட அவளது நல்வாழ்வுக்க்காக வே உழைப்பான்.</b></span><br />
<span style="color: #cc0000;"><b><br /></b></span>
<span style="color: #cc0000;"><b>2. தனது காதலியைத் தவிர வேறெந்த பெண்ணையும் மனதாலும் நினைக்க மாட்டான்.</b></span><br />
<span style="color: #cc0000;"><b><br /></b></span>
<span style="color: #cc0000;"><b>3.இது போன்ற இளைஞர்களின் மத்தியில் எந்த பெண்ணுமே பாதுகாப்பாக உணருவார்கள்.</b></span><br />
<br />
<span style="color: #cc0000;"><b>4.மதம் தாண்டிய திருமணங்கள் இயல்பாக நடக்கலாம்.</b></span><br />
<br />
<span style="color: #cc0000;"><b>5.மதம் தாண்டிய திருமணங்களுக்கு ஆதரவு தரும் இளைஞர்களும் அதிகரிக்கலாம். </b></span><br />
<br />
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++<br />
<br />
எஸ்.ஏ.சந்திர சேகரின் இயக்கத்தை விட்டு வெளி இயக்குநர்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்தபின் விஜயின் இரண்டாவதோ மூன்றாவதோ படம்தான் இது. ஏற்கனவே இதயம் படத்தில் காதலை மூக்கின் நுணியிலேயே வைத்திருந்து முரளி இதய நோயாளியாகி இருப்பார். காதல் படங்களின் துவக்கமாக அது இருந்த போதும் சரியான நாயகர்கள் இல்லாத சூழல் நிலவிய கால கட்டம். முரளியே சீனியர் நாயகர் ஆகியிருந்தார். இருந்தாலும் கூட அவர் கல்லூரி மாணவனாக 97ல் வெளிவந்த காலமெல்லாம் காதல் வாழ்கவில் வெற்றிக் கொடி கட்டியிருப்பார். <br />
<br />
கிராமத்திலிருந்து வரும் அப்பாவி இளைஞன் பாத்திரத்திற்கு சரியான தேர்வாக விஜய் அமைந்திருப்பார். அப்போது பல என்சினியரிங் கல்லூரிகள் துவங்கி மாணவர்கள் கூட்டம் கூட்டமாக நகரை நோக்கி வந்து கொண்டிருந்த காலம் அது. தங்களைப் போன்ற எளிய தோற்றத்தில் இருந்த விஜயயை அவர்கள் சுலபமாக ஏற்றுக் கொண்டு விட்டனர். அதன் பிறகு விஜய்யும் அஜித்தும் விதவிதமாக காதலித்துக் கொண்டே இருந்தார்கள். அதன் பின்னர் பணக்கார பையன்களின் காதலும் படமானது. விஜய் திருமலையானதும் அந்த இடத்தில் தனுஷ் போய் உட்கார்ந்து கொண்டார்.<br />
<br />
டி.ஆர் சிலம்பரசனை தயாரித்தது போல எஸ்.ஏ.சி விஜயை தயாரித்திருந்தார். வித்தியாசம் என்னவென்றால் எஸ்.ஏ.சி கதை திரைக்கதை இயக்கம் இசையெல்லாம் விஜய்க்கு சொல்லித்தரவில்லை. வித வித மாக காதலித்தே விஜய் அடுத்த தலைமுறையில் நம்பர் ஆகியிருந்தார்.<br />
<br />
இந்த படம் வந்திருக்காவிட்டால் விஜய் முழுநேர ஆக்ஷன் ஹீரோவாக சங்கவி, யுவராணி போன்றவர்களை வைத்து தேவா, செந்தூரபாண்டி,செல்வா போன்ற பல கிராமத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களை நடித்துக் கொடுத்திருப்பார். தெலுங்குப் படங்களை அப்படியே ரீமேக் கொடுத்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே வருங்கால முதல்வராக மாறியிருப்பார். தமிழக மக்களும் காதல் என்பது தொட்டபட்டா ரோட்டில் சாப்பிடும் முட்டை பரோட்டாவாக எண்ணியிருந்து இருப்பார்கள். காதல் தோல்விக்காக கொலை செய்வது, ஆளை வெட்டுவது, தற்கொலை செய்து கொள்வது போன்றெல்லாம் இல்லாமல். திரிஷா இல்லையென்றால் நயந்தாரா என்ற நிலைக்கு முதலிலேயே வந்திருப்பார்கள்.<br />
<br />
<br />
ஆனால் இதயம், கோகுலம் மற்றும் இந்திக் காதல் படங்கள், மகுடமாக டைட்டானிக் (ஆங்கிலத்திலேயே கோவையில் 100நாள் ஓடியது) போன்ற படங்கள் அணிவகுத்த நிலையில் சில வருடங்கள் தாமதமாகியிருந்தாலும் பூவே உனக்காக வந்தே இருக்கும். ஒருவேளை இப்போது இந்தப் படத்தை ரீமே செய்தால் இளைஞர்களின் காதல் உணர்வுகள் மொட்டு விட்டு மலர்ந்து வன்முறைகள் குறைந்தாலும் குறையலாம்.</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-3786491625383724182016-09-09T13:06:00.003+05:302016-09-09T13:06:48.471+05:30வடக்கத்தியர் எதிர்க்கும் ஓணம் பண்டிகை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஓணம் பண்டிகை ஒவ்வொரு வருடமும் கேரளத்தில் கொண்டாடப் படும் விமரிசையான பண்டிகை. தமிழகத்திலும் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் ஒருநாள் விடுப்பு விடும் அளவிற்கு எல்லோரும் கொண்டாடும் ஒரு பண்டிகை.<br />
<br />
மகாபலி மன்னனை வாமன அவதாரம் எடுத்து மூன்றடி கேட்டு கதைமுடித்தார் விஷ்ணு என்பதுதான் கதை. அந்த மகாபலி மன்னன் தன்னுடைய நாட்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வருவதாகவும் மக்களுக்கு நல்லாசிகள் வழங்குவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது. இன்றுவரை மக்களை அவரை அன்போடுதான் வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். <br />
<br />
மகாபலி மன்னனின் ஆட்சிச் சிறப்பை இந்த ஒரு பாடலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.<br />
<blockquote class="tr_bq">
<br />
<span style="background-color: yellow;"><span style="font-size: large;"><span style="font-family: Times,"Times New Roman",serif;">Maveli nadu vaneedum kalam,<br /> manusharellarum onnupole<br /> amodhathode vasikkum kalam<span class="text_exposed_show"><br /> apathangarkkumottillathanum.<br /> adhikal vyadhikalonnumilla<br /> balamaranangal kelppanilla<br /> Dushtare kankondu kanmanilla<br /> Nallavarallathe illa paaril..illa paaril<br /> kallavum illa chathiyumilla<br /> ellolamilla polivachanam<br /> kallampparayum cherunazhiyum<br /> kallatharangal mattonnumilla<br /> Vellikolaadikal naazhikalum<br /> Ellam kanakkinu thulyamaayi..thulyamaayi</span></span></span></span></blockquote>
<div class="text_exposed_show">
<span style="color: #274e13;"><span style="font-size: large;">When Maveli ruled the land,<br /> All the people were equal-<br /> Times when people were joyful and merry;<br /> They were all free from harm.<br /> There was neither anxiety nor sickness,<br /> Deaths of children were unheard of,<br /> No wicked person was in sight anywhere<br /> All the people on the land were good.<br /> There was neither theft nor deceit,<br /> And no false words or promises.<br /> Measures and weights were right;<br /> There were no lies,<br /> No one cheated or wronged his neighbor.<br /> When Maveli ruled the land,<br /> All the people formed one casteless race</span></span><br />
<br />
<br />
<br />
<span style="color: #274e13;"><span style="font-size: large;"><span style="color: black;"><span style="font-size: small;"> மகாபலி மன்னரின் ஆட்சியில் மக்கள் அனைவரும் சமமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திருக்கின்றனர். துன்பங்கள், துயரங்கள் நீங்கி வாழ்ந்திருக்கின்றனர். சிசு மரணம் அவன் ஆட்சியில் இல்லை. (இன்றும்கூட ஒரு நாட்டின் மருத்துவ வசதியினை தெரிந்துகொள்ள குழந்தைகள் மரணவிகிதத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றனர்.) அங்கு பொய், புரட்டு கிடையாது, ஏமாற்று கிடையாது. சாதி வித்தியாசமற்ற ஒரு இனத்தை உருவாக்கி வாழ்கின்றனர் என்று இந்தப் பாடல் சொல்கிறது.</span></span></span></span><br />
<br />
<br />
<span style="color: #274e13;"><span style="font-size: large;"><span style="color: black;"><span style="font-size: small;">இவ்வளவு நல்லவரான மகாபலி சக்கரவர்த்தியினை போரிட்டு ஜெயிக்க முடியாத விஷ்ணு மூன்றடி பிச்சை கேட்டு பாதாள உலகத்திற்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். இந்தக் கதையில் எப்படிப் பார்த்தாலும் <span style="color: #351c75;"><u><b>மகாபலிதான் ஹீரோ , விஷ்ணுதான் வில்லன். </b></u></span></span></span></span></span><br />
<br />
<span style="color: #274e13;"><span style="font-size: large;"><span style="color: black;"><span style="font-size: small;">மகாபலியை கதை முடிப்பதற்கு பொறாமையைத்தவிர வேறு காரணம் தேடினாலும் கிடைக்கவில்லை.</span></span></span></span><br />
<br />
<br />
<span style="color: #274e13;"><span style="font-size: large;"><span style="color: black;"><span style="font-size: small;">இந்த கதைகளை, இது போன்ற பாடல்களை ஒவ்வொரு ஆண்டும் சொல்லிதான் கேரள மக்கள் தங்கள் மக்களை வளர்க்கிறார்கள். அதனால் கூட கேரளாவில் அதிக அளவில் இந்துக்கள் அல்லாத மக்கள் (பெரும்பாலும் மதம் மாறிய மக்கள்) இருப்பதாகச் சொல்லலாம். இது போன்ற கதைகள் கேரளாவை விட்டு வெளியே சொல்லப் படுவது பழம் நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதாக வடநாட்டு பழமை வாதிகள் நினைக்கிறார்களாம். அதனால் ஓணம் பண்டிகை கேரளாவை விட்டு வெளியே கொண்டாடப் படுவதை அவர்கள் விரும்பவில்லையாம். </span></span></span></span><br />
<br />
<br />
<span style="color: #274e13;"><span style="font-size: large;"><span style="color: black;"><span style="font-size: small;">பின்னினைப்பு:- ஒருவேளை நரகாசுரன் கதையும் இப்படித்தானோ? </span></span></span></span><br />
<br />
<span style="color: #274e13;"><span style="font-size: large;"><span style="color: black;"><span style="font-size: small;">பின்னிணைப்பு:- வாமன அவதாரத்திற்கு பிறகு அடுத்தடுத்த யுகங்களில்தான் ராம, கிருஷ்ண அவதாரங்கள் வருகின்றன. ஒருவேளை மகாபலி உயிருடன் இருந்தால் அவர் உருவாக்கிய சாதி வித்தியாசம் அற்ற ஏற்ற தாழ்வற்ற சமுதாயம்தான் இருந்து இருக்குமா? </span></span></span></span></div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-7727032247222496882016-09-05T16:08:00.000+05:302016-09-05T16:08:00.098+05:30மினி, ஜெனி மற்றும் மலர் டீச்சர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
என் நண்பர்(மருத்துவர்) ஒருவர் சமீபத்தில் PG சேர்ந்தார். அவர் ட்ரீட்
கொடுத்தார். நானும் என்னைப் போல சிலரும் கலந்து கொண்டோம். அவர்
வாங்கியிருந்த மதிப்பெண்களுக்கு சிட்டி காலேஜே கிடைக்கும் என்ற நிலையில்
அடுத்த நிலைக் கல்லூரியை எடுத்திருந்தார். அந்த ஊர் அவர் ஊருக்கு பக்கமும்
அல்ல. காரணம் கேட்ட பொழுது அங்கதான் அந்த கோர்ஸ் நல்லா சொல்லித் தருவாங்கடா
என்றார். நாங்களும் அதை நம்பி விட்டோம். சமீபத்தில் அந்த கல்லூரியைச்
சேர்ந்த மற்றொரு நண்பரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் அந்தக் கல்லூரியில்
இருக்கும் நண்பர்களைப் பற்றி பொதுவாகக் கேட்டோம். அப்போதுதான் ஒரு உண்மை
தெரிந்தது.முதல் நண்பர் சேர்ந்திருக்கும் கல்லூரி , கோர்ஸ்ஸில் தான் அவரது
கல்லூரிக் க்கால மினி, ஜெனி , இந்நாளில் மலர் டீச்சராக உதவிப் பேராராசியராக
இருக்கிறாராம்..., <br /> )<br /> )<br /> )<br /> அடப் பக்கி இன்னும் சில வருஷம் பொருத்திருந்தீன்னா அந்த அம்மா chiefஆவே ஆகியிருக்குமேடா...,<br />
நண்பர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-49130746560535930792016-09-04T00:38:00.000+05:302016-09-04T00:38:28.171+05:30தர்ம துரை யின் மூன்று நாயகிகள்- ஓர் உள்ளார்ந்த பார்வை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தர்ம துரை நாயகிகளைப் பற்றி மட்டும் நாம் பார்ப்போம்.<br />
<br />
முதலில் ஸ்டெல்லா,<br />
<br />
தன்னை முதன்முதலாக தொட்டுத் தூக்கிய ஆண்மகனை காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். அவன் தன்னை நிராகரித்தது தெரிந்த பின்னர் தண்ணி போட்டுக் கொண்டு இரவில் ஹீரோவின் அறைக் கதவைத் தட்டுகிறார். ஹீரோ தன்னை வெறுக்கவில்லை என்பதை தொடர்ந்து ஹீரோவுடன் தொடர்ந்து பழகுகிறார். ஹீரோவின் நிழலாக இருக்கிறார். ஹீரோவுக்கு கஷ்டம் என்றவுடன் துடிக்கிறார். படிப்பு முடிந்த உடன் தன்னை வந்து பெண் கேட்குமாறு ஹீரோவுடன் சொல்கிறார். இந்த அனைத்து நிகழ்விலும் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்காக சுபாஷிணி இருக்கிறார்.<br />
<br />
அன்புச்செல்வி<br />
<br />
ஹீரோ பயிற்சி பெறும் கிராம மருத்துவமனைக்கு கிராமத்து பாட்டிகளுடன் அவர்களுக்கு உதவியாக வருகிறார். அவரது தாயார் மருத்துவ வசதி இல்லாததால் மரணம் அடைந்ததால் பிறருடன் உதவிக்கு வருவதாகச் சொல்லுகிறார். பார்க்கும் அனைத்து ஆண்களையும் அண்ணே.., என்று அழைக்கிறார். இவரைப் பார்த்த உடன் ஹீரோவுக்கு பிடித்து விடுகிறது. ஊர் பெயர் விசாரித்து பெண் கேட்கிறார். ஹீரோவின் சாதிக்காரராக காட்டுகிறார்கள். பத்தாம் வகுப்பு படித்தவராக காட்டப் படுகிறார். ஆனால் பத்திரிக்கைகளுக்கு துணுக்குகள் எழுதும் எழுத்தாளராக காட்டப் படுகிறார். தனது மாப்பிள்ளை என்று தெரிந்த உடன் ஹீரோவை மாமா என்று அழைக்க ஆரம்பித்து விடுகிறார்.திருமணம் நடக்காது என்ற சூழலில் தற்கொலை செய்து கொள்கிறார்.<br />
<br />
முழுக்க முழுக்க தற்கால சிறுநகர, கிராமப்புற ஆண்களின் விருப்பமாக இருக்கிறார்.<br />
<br />
புத்திசாலியாக இருக்க வேண்டும். ஆனால் பெரிய புத்திசாலியாக இருக்க கூடாது. பெரிதாக படித்திருக்க கூடாது.ஆனால் நாகரீகமாக இருக்க வேண்டும். நடுவகிடெடுத்து சீவி ஒற்றை சடை போட்டு புடவை கட்டி இருக்க வேண்டும். அனைவரையும் அண்ணனாக நினைக்க வேண்டும். தன் ஒருவனை மட்டும் மாமாவாக பார்க்க வேண்டும். ஹீரோ விலகினால் தற்கொலை பண்ணிக் கொண்டு சாக வேண்டும்.<br />
<br />
எதற்காக இந்தப் படைப்பு என்று தெரிய வில்லை. ஸ்டெல்லாவையே அவர் திருமணம் செய்து கொள்ள நினைத்து அது நடக்காமல் போனதால் ஹீரோ குடிகாரனாக சற்றே மனநிலை சிதறியவராக காட்டி இருக்கலாம். புதிதாக ஒரு பாத்திரம் ஏன் என்று தெரியவில்லை.<br />
<br />
ஒரே காரணம் மட்டுமே தோன்றுகிறது. அன்புச் செல்வி அவரது சாதிக்காரர். ஸ்டெல்லா வேறு மதத்தவர். ஸ்டெல்லாவை அவரது சாதிக்காரர் மதத்துக் காரராகக் காட்டி இருந்தால் நிராகரிப்பு இருந்திருக்காது, கதை நகர்ந்திருக்காது. மதத்தின் காரணமாக நிராகரிப்பு என்பதை காட்ட விரும்பாத காரணத்தால் இயக்குநர் ஒரு புதிய கதா பாத்திரத்தை படைத்து சாக வைக்கிறார்.<br />
<br />
மீண்டும் ஸ்டெல்லா<br />
<br />
வீட்டிலிருந்து தப்பி ஓடும் மது அடிமை, மனநலம் பிறழ்ந்த ஹீரோ முதலில் ஸ்டெல்லாவை நாடிப் போகிறார். அங்கு ஸ்டெல்லா விபத்தில் இறந்ததாகச் சொல்லி விடுகிறார்கள். . அதாவது அன்புச் செல்வி, ஸ்டெல்லா இரண்டும் பாத்திரங்களும் இறந்து விடுவதாக காட்டப் படுவதாலேயே இரண்டும் ஒரே பாத்திரம் என்றும் இயக்குநர் சில பல காரணங்களுக்காக இரண்டு பாத்திரங்களையும் பிரித்து வைக்கிறார் என்பது புலப் படும்.<br />
<br />
சுபாஷிணி<br />
<br />
ஸ்டெல்லா இறந்தது தெரிந்த பின்னர் ஹீரோவின் பயணம் சுபாஷிணியைத் தேடி, சுபாஷிணி கணவனைப் பிரிந்து வாழ்கிறார். ஹீரோ சுபாஷிணியைச் சேர்ந்த உடன் மதுவிலிருந்து மீள ஆரம்பிக்கிறார். மனநலம் பெறுகிறார். சுபாஷிணியும் விவாகரத்து பெற்று விடுகிறார். விவாகரத்து வழக்கு முன்னரே துவங்கப் பட்ட ஒன்று என்று காட்டுகிறார்கள். சுபாஷிணியுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறார். சொந்தமாக கிளினிக் வைத்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.<br />
<br />
<br />
ஹீரோ சுபாஷிணியை சேர்ந்த உடனேயே எல்லாமே சுபம் ஆகி விடுகிறது. சுபாஷிணியும் ஹீரோவுக்காகவே காத்திருந்தது போல இருக்கிறது. ஏதோ ஒரு முன் ஜென்ம பந்தம் தொடர்வது போல காட்டப் படுகிறது. அப்படி என்றால் கல்லூரியிலேயே இருந்து இருக்க வேண்டுமே, ஆம் கலை நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து perform செய்திருக்கிறார்கள். ஆனால் கல்லூரியில் ஏன் இருவருக்கும் அந்தக் காதல் வர வில்லை என்ற கேள்வி கேட்கும் போது மறைமுகமாக நமக்கே அந்தப் பதில் தோன்றுகிறது. ஸ்டெல்லாவும் சுபாஷிணியும் ஒருவரே.., <br />
ஹிரோ சுபாஷிணியை சேர்ந்து விடுவதால் அவரது கல்லூரிக் காலக் காதலை சேர்ந்து மகிழ்ச்சியான வாழ்க்கையை மீண்டும் பெறுகிறார். பின்னர் எதற்காக இத்தனை கதாபாத்திரங்கள் ? யோசிக்கும்போது தோன்றுவது இதுதான்<br />
<br />
ஹீரோ கல்லூரியில் ஒரு பெண்ணை விரும்புகிறார். அவர் வேறு மதம் அல்லது சாதியைச் சேர்ந்தவர். ஹீரோ அவ்வாறு காதலிப்பதை இயக்குநர் விரும்ப வில்லை. அது மட்டுமல்லாமல் அவரது வீட்டினரும் விரும்பவில்லை. எனவே அவரது திருமணத்திற்கு ரகசிய வழியில் முட்டுக்கட்டை போடுகிறார்கள். நொந்து போன ஹீரோ மது அடிமையாகி விடுகிறார். வீட்டிலே இருந்து கொண்டு அனைவரையும் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பத்தினரே அவரை கொள்ள முடிவெடுப்பதால் அவரது தாய் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார். அவர் தனது காதலை தேடிப் போய் மகிழ்ச்சியாக வாழ்கிறார். <br />
<br />
<br />
மூன்று பெண்கள் இருப்பதன் முழு காரணமும் இயக்குநரே.., ஹீரோ சாதி மீறி ஒரு பெண்ணை காதலிப்பதாகச் சொல்ல அவர் விரும்பவில்லை. இறுதியில் சுபாஷிணியைக் கூட அவர் மணம் செய்து கொள்ளாமல்தான் வாழ்கிறார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.<br />
<br />
#darmaduraipsk</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-18026784937675672482016-09-03T15:03:00.000+05:302016-09-03T15:03:08.457+05:30காதல், களவு தமிழர் பண்பாடே 3.9.16<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
தனக்கு பிடித்த ஒருவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தன் வாழ்க்கையை தேடிச் செல்வது என்பது பழந்தமிழர் வாழ்க்கையில் இயல்பான ஒன்றே. அதற்கான ஓர் ஆதாரம் இதோ<br />
<br />
கழிய காவி குற்றும் கடல<br />
வெண் தலைப் புணரி ஆடியும் நன்றே<br />
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர<br />
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்<br />
பரல் பாழ் படுப்பச் சென்றனள் மாதோ<br />
செல் மழை தவழும் சென்னி<br />
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.<br />
<br />
குறிந்தொகை 116, கோடன் கொற்றனார் எழுதியது<br />
<br />
கழிய – ஆறு கடலோடு சேருமிடம், மனைவி கணவனோடு சேருமிடமாகவும் கொள்ளலாம்<br />
<br />
காவி –தாம்பூலத்தின் வண்ணம், மலர்கள் ,<br />
<br />
குற்றும் – பறித்தும்,அரிசி குத்தும் செயலில் வரும் குத்தும் என்ற பொருளிலும் கொள்ளலாம்<br />
<br />
கடல – கடலில் உள்ள,<br />
<br />
வெண்டலைப் –
வெள்ளைத் தலைகளையுடைய ,<br />
<br />
புணரி ஆடியும் – அலைகளில் ஆடியும்,<br />
<br />
நன்றே – மிக,<br />
<br />
பிரிவு இல் ஆயம் – பிரிவு இல்லாத தோழியருடன்,<br />
<br />
உரியது ஒன்று அயர –
எல்லோருக்கும் உரிய விளையாட்டையும் புரிய,<br />
<br />
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் –
இந்த வழிக்கு ஒத்துக் இருக்காமல், <br />
<br />
அவ்வழி – அந்த வழியில்,<br />
<br />
பரல்பாழ்
படுப்பச் சென்றனள் – சிலம்பில் உள்ள கற்கள் பாழாக்கும்படி சென்று
விட்டாள்.<br />
<br />
மாதோ – அசை,<br />
<br />
செல்மழை – செல்லும் மழைமேகங்கள்,<br />
<br />
தவழும் சென்னி –
தவழும் மலை உச்சி, <br />
<br />
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே – வானத்து
அளவும் உயர்ந்த மலைகள் உள்ள நாட்டிற்கு
(சென்று விட்டாள் )
<br />
<div>
.</div>
<div>
இது ஒரு செவிலித் தாய் பாடியதாக உள்ள பாடல். இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை படித்து இதில் உள்ள பொருட்களோடு உங்களுக்கு தோன்றும் பொருளையும் சேர்த்து படிக்கும்போது வெளிப்படும் உணர்வுகள் சுவையாக இருக்கும்.</div>
<div>
</div>
<div>
இந்தப் பாடல் ஒரு செவிலித்தாயானவள் தனது மகள் காதலனோடு சென்று விட்டதை சொல்லும் வண்ணம் அமைந்த பாடல். இது போன்ற பாடல்களை பள்ளிகளிலேயே சொல்லித் தர ஆரம்பித்தால் காதல் எண்பது மிக இயல்பான ஒன்று என்பதை மிக ஆரம்பத்திலிருந்தே புகட்ட முடியும்.</div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-32553300997680637222016-09-02T21:37:00.001+05:302016-09-02T21:37:47.460+05:30ஆண்டைகளை அம்பலப் படுத்திய கே.எஸ்.ரவிக்குமார்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முதலில் இந்தப் படத்தில் ஆண்ட பரம்பரையின் சாதியை சொல்லாமல் விட்டதற்காக கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதனால்தான் அந்த ஆண்ட பரம்பரை பற்றி நம்மால் பேச முடிகிறது.<br />
<br />
1.நாட்டாமையில் வரும் ஆண்ட பரம்பரை பாராளும் வம்சம், பச்சை தண்ணியில் விளக்கெரியும் என்ற பில்டப் அல்லது மூட நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்<br />
<br />
2.நீதி நேர்மை, நியாயம் காப்பதையே தங்கள் வாழ்க்கையின் உன்னத லட்சியமாக கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வழங்கும் நீதியின் லட்சனத்தை இரண்டு கேஸ்களில் கே.எஸ்.ரவிக்குமார் கிளித்திருப்பார்.<br />
<br />
3.எதையும் தீர ஆராயாமல் தனது தம்பி பசுபதிக்கே ஒரு தவறான தீர்ப்பை தந்து விடுவார்.<br />
<br />
4.மனோரமாவின் மகன் செய்த தவறுக்கு குடும்பத்துக்கே தண்டனை தருவார்<br />
<br />
5.கற்பழித்த பெண்ணை தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை கற்பழித்தவனுக்கே திருமணம் செய்து வைப்பார்கள். பின்னரும் அந்த பாவப் பட்ட பெண்ணை ஊரைவிட்டே தள்ளி வைத்து தீர்ப்பு வழங்குவார்கள்.<br />
<br />
6.தவிர தவறான தீர்ப்பை தந்து விட்டது தெரிந்ததும் உயிரை விடும் கவுர தற்கொலை ஆசாமிகள்தான் அந்த நாட்டாமைகள் என்பதை தோலுரித்திருப்பார்.<br />
<br />
7.வெளியில் போய் வீடு திரும்பும் கணவனுக்கு பணிவிடை செய்வதே முழுமுதல் கடமையாக வலியுறுத்துவதே நாட்டாமை குடும்பத்தார்க்கு உகந்ததாக காட்டுவார்கள்.<br />
<br />
8.சொத்தை பிரிக்கவே பிரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.<br />
<br />
9சொத்தில்லாத தம்பிகள் என்ன செய்வார்கள் என்பதை செந்தில் ( நாட்டமையின் பங்காளி ) பாத்திரம் மூலமாக அழகாக காட்டி இருப்பார்கள்.<br />
<br />
10.நாட்டாமையின் பங்காளியின் நடவடிக்கைகளால் மிச்சர் சாப்பிடும் ஒரு குரூப் உருவானதை அழகாக ஆவணப் படுத்தி இருப்பார்.<br />
<br />
11.நாட்டாமை தைரியம் தந்தால் பெண்கள் தங்கள் தந்தையையே தூக்கி எரிவார்கள் என்பதை சங்கவி மூலம் ஆவணப் படுத்தி இருப்பார்.<br />
<br />
12.தீர்ப்பு ஊருக்காக இருந்தாலும் நேரிடையாக மீற மாட்டார்கள் என்றாலும் தேவைப்படின் மறைமுகமாக மீற தயங்க மாட்டார்கள் என்பதை மனோரமாவுக்கு தண்ணீர் கொடுக்கும் காட்சியில் ஆவணப் படுத்தி இருப்பார்கள்.<br />
<br />
13.ஊர் மக்கள் மட்டுமல்ல சொந்த தம்பிகளே அவருக்கு அடிமைதான் என்ற உணர்வில்தான் அந்த பகுதி மக்கள் அனைவரும் உருவாக்கப் பட்டிந்ததையும் ஆவணப் படுத்தி இருப்பார்.</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-4147505111549054472016-09-02T06:51:00.000+05:302016-09-02T06:51:18.426+05:30காதலும் களவும் தமிழர் ஒழுக்கம் 31.8.16<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நான் சொல்ல வருவது இந்தப் பாடலில் உள்ள செய்தி அல்ல.., இது போன்ற
செய்திகளை பொதுவில் சொல்ல பழந்தமிழ் மகளிருக்கு உரிமை இருந்திருக்கிறது.
என்பதே ஆகும். ஆணுக்குக்கு இருக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பது
புரிந்தாலே, காதலுக்காக சோகமாக சுற்றுவதும் காதலிக்க மறுத்தவளை கொல்வதும்
தவிர்க்கப் பட்டுவிடும்.<br />
<br />
<br />
யாரும் இல்லை தானே கள்வன்<span class="text_exposed_show"><br /> தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ<br /> தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால<br /> ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்<br /> குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.</span><br />
<br />
<br />
<div class="text_exposed_show">
இது கபிலர் எழுதிய பாடல், குறுந்தொகை 25<br />
குறிஞ்சித் திணை அதாவது புணர்தலும் புணர்தல் நிமித்தமுமான பாடல்கள் இந்த குறிஞ்சித் திணையில் வரும்.<br />
<br />
//யாரும் இல்லை தானே கள்வன்// <br />
அந்த நிகழ்ச்சி நடக்கும்போது யாரும் இல்லை. தானே கள்வன் என்று சொல்வதால்
அவன் திருடிவிட்டான் என்று பொருள் கொள்ளலாம். என்ன திருடிவிட்டான்.
குறிப்பாக சொல்லாததால் நாயகியின் அகம், அல்லது புறம் என்று நமக்கு வசதியாக
பொருள் கொண்டு விடலாம்.<br />
<br />
<br />
//<br /> தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ//<br /> நான் நெனச்சது பொய்யாக போனால் யார் என்ன செய்ய முடியும்?<br />
<br />
<br />
//தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால<br /> ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்<br /> குருகும் உண்டுதான்// திணைப் பயிரின் தாள் மாதிரி சின்ன
பசுமையான(இளமையான அப்படி எடுத்துக்கலாமா) காலில் ஒழுகும் நீர்... ஆரல்
பார்க்கும் குருகும்..,, ஆரல்- ஒரூ வகை மீன் குருகு அப்படின்னா
குருத்து..,அதாவது மீனைப் பார்க்கும் குருத்து.<br />
<br />
<br />
<br />
//குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.//<br />
இந்த மேட்டர்ல்லாம் திருமணம் நாளிலிருந்தே<br />
<br />
<br />
இதையெல்லாம் திரும்ப ஒருமுறை துவக்கத்திலிருந்து மீண்டும் ஒருமுறை
படித்துப் பார்த்து. உங்களுக்குத் தோன்றும் பொருளை எடுத்துக் கொள்ளலாம். <br />
நான் சொல்ல வருவது இந்தப் பாடலில் உள்ள செய்தி அல்ல.., இது போன்ற
செய்திகளை பொதுவில் சொல்ல பழந்தமிழ் மகளிருக்கு உரிமை இருந்திருக்கிறது.
என்பதே ஆகும். ஆணுக்குக்கு இருக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பது
புரிந்தாலே, காதலுக்காக சோகமாக சுற்றுவதும் காதலிக்க மறுத்தவளை கொல்வதும்
தவிர்க்கப் பட்டுவிடும்.<br />
<a class="_58cn" data-ft="{"tn":"*N","type":104}" href="https://www.facebook.com/hashtag/kadhalpsk?source=feed_text&story_id=10208447644001824"><span class="_5afx"><span class="_58cl _5afz">#</span><span class="_58cm">kadhalpsk</span></span></a></div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-42386894242389482172013-12-25T16:04:00.001+05:302013-12-25T16:05:49.758+05:30பாட்ஷா பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இப்போது சன் டிவியில் பாட்ஷா படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் இந்தியில் வந்த ஹம் படத்தில் தழுவல் என்பார்கள். இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட வித்தியாசங்களை படிக்க <a href="http://kanavukale.blogspot.com/2013/12/hum.html" target="_blank">இந்த இடத்தை கிளிக் செய்து</a> படித்துப் பாருங்கள்.<br />
<br />
<br />
சாம்பிள் வரிகள் சில<br />
<br />
///////////////////////சத்யா மூவீஸாரின் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்றாலும் ஹம் படத்தில் ரஜினி
ஹீரோ அல்ல. பாஷாவில் தம்பியாக ஒரு போலீஸ் வருவாரே அந்தப் பாத்திரம்தான்
ரஜினிக்கு. நீங்க யாரு.., பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று
ரஜினியைப் பார்த்து பேசுவது போல ரஜினி அந்தப் படத்தில் இவர் பேரு டைகர்,
பம்பாயில் ஒரு கிரிமினல் என்றுஅமிதாப்பைப் பார்த்து பேசுவார். அவ்வளவுதான்.
இத்தனைக்கும் இந்தப் படம் 1991ல் வந்திருக்கிறது. 91ல் தளபதி, மன்னன்
என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும் கூட
மாப்பிள்ளை, பணக்காரன் என்று எல்லாமே ஹிட்டோஹிட்தான். ராமராஜன், மைக்
மோகன், டி.ஆர். பாக்கியராஜ் போன்ற வெள்ளிவிழா குரூப்ஸ் தங்கள் கடையை காலி
செய்து கொண்டிருக்கும்போது, டெண்டுல்கர் போல நின்று நிலையாக ஹிட்களைக்
கொடுத்துக் கொண்டு தான் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த
ஆண்டு அது. அந்த ஆண்டில் அப்படி ஒரு படத்தில் ரஜினி நடித்திருக்கிறார்
என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.///////////////// </div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-62437277649037316022013-12-19T14:04:00.001+05:302013-12-19T14:12:16.478+05:30HUM- திரை விமர்சனம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஹம் படம் தமிழ்நாட்டு மக்களுக்கே பரிச்சயம் ஆன ஒரு படம். இந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு சத்யா மூவிஸ் எடுத்த படம். அந்தப் படத்தின் வெற்றி விழா . அதைத் தொடந்து சத்யா மூவிஸ் நிர்வாகிக்க்கு ஏற்பட்ட பிரச்ச்னைகள் போன்றவை தமிழ்நாட்டுக்கே அந்த ஆண்டு பிஸியாக அமைய வைத்தன.<br />
<img alt="http://www.webmallindia.com/img/film/hindi/hum_1323173487.jpg" class="decoded" src="http://www.webmallindia.com/img/film/hindi/hum_1323173487.jpg" /><br />
சத்யா மூவீஸாரின் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்றாலும் ஹம் படத்தில் ரஜினி ஹீரோ அல்ல. பாஷாவில் தம்பியாக ஒரு போலீஸ் வருவாரே அந்தப் பாத்திரம்தான் ரஜினிக்கு. நீங்க யாரு.., பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று ரஜினியைப் பார்த்து பேசுவது போல ரஜினி அந்தப் படத்தில் இவர் பேரு டைகர், பம்பாயில் ஒரு கிரிமினல் என்றுஅமிதாப்பைப் பார்த்து பேசுவார். அவ்வளவுதான். இத்தனைக்கும் இந்தப் படம் 1991ல் வந்திருக்கிறது. 91ல் தளபதி, மன்னன் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும் கூட மாப்பிள்ளை, பணக்காரன் என்று எல்லாமே ஹிட்டோஹிட்தான். ராமராஜன், மைக் மோகன், டி.ஆர். பாக்கியராஜ் போன்ற வெள்ளிவிழா குரூப்ஸ் தங்கள் கடையை காலி செய்து கொண்டிருக்கும்போது, டெண்டுல்கர் போல நின்று நிலையாக ஹிட்களைக் கொடுத்துக் கொண்டு தான் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த ஆண்டு அது. அந்த ஆண்டில் அப்படி ஒரு படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.<br />
<br />
<br />
அதற்கு முந்தைய சில வருடங்களில் அமிதாப் பச்சனின் படங்கள் வரிசையாக வெற்றியடையாமல் போயின. அமிதாப்பின் வெற்றிப் படஙக்ள் பலவும் ரஜினியால் ரீமேக் செய்யப் பட்டு இங்கு ஹிட் ஆனவை. தவிரவும் ரஜினி, கமல் ஆகியோர் இந்தியில் நுழைந்த போது அந்தப் படங்கள் ஒரு துவக்கம் கொடுப்பதற்காக அமிதாப் நடித்துக் கொடுத்திருக்கிறார். 90களில் ரஜினிக்கு தென்னிந்தியா முழுவதுமே ஒரு மார்க்கெட் இருந்தது. நம்பினால் நம்புங்கள் 94- 95 களில் பல தெலுங்கு படங்கள், வெறுமனவே ரம்பாவையும், ரம்யா கிருஷ்ணனையும் நம்பி இங்கு கல்லா கட்டியுள்ளன. இது இல்லாமல் சிரஞ்சீவி, விஜ்யசாந்திக்கெல்லாம் இங்கு தனி மார்க்கெட்டே உண்டு. அதே கணக்கில் பார்த்தால் ரஜினி நடித்திருப்பது தென்னிந்திய சிறு நகரங்களில் ஒரு நல்ல துவக்கத்தையே கொடுத்திருக்கும். இதில் அமிதாப்பிற்கு ஜோடி இருக்கு ஆனால் இல்லை.. அப்போதைய இளைஞன் கோவிந்தாவும் அதில் நடித்திருப்பார்.<br />
<br />
இந்த படத்திற்கு பிற்கு நிஜமாகவே அமிதாப் ஒரு ஓய்வு எடுத்தார். அதுவரை இதுதான் கடைசி, இதுதான் கடைசி என்றே சொல்வார்கள். ஆனால் அடுத்த படம் வரும். இந்தப் படம் ஓரளவு ஹிட்தான். அமிதாப்பும் ஓய்வு எடுத்தார். அந்த ஹிட்டுக்கு உதவுவதற்காக ரஜினி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்ததாகவே எனக்குத் தோன்றுகிறது.<br />
<br />
=======================================================================<br />
<br />
கதைன்னுப் பார்த்தா ஒரு வரிசையில் சொல்லலாம் மூன்று அண்ணன் தம்பிகள். ஒரு குடும்பப்பாட்டு கிளைமாக்ஸ் காட்சியில் அந்தப் பாட்டைப் பாடி எல்லோரும் ஒன்று சேர்வார்கள். யதோன் கி பாரத் என்ற பெயரில் வந்த படம். அதில் அண்ணன் தம்பிகள் ரயிலில் பிரிவார்கள். இதில் மூவரும் சேர்ந்தே ஏறிவிடுவார்கள். அதனால் பிரியவெ மாட்டார்கள். கிளைமாக்ஸில் வில்லன் கட்டி வைத்த பின்னர் குடும்பப் பாட்டை பாடி சேர்ந்து விடுவார்கள். இது போலவே அண்ணன் தம்பிகள் கடைசி வரையில் பிரியாமல் நின்று படம் முடிந்த பின் குடும்பப் பாட்டு பாடுவார்கள் விஜய காந்த் நடித்த வானத்தைப் போல படத்தில் ., அதையும் கூட இந்தப் படத்தின் ரீமேக் என்று சொல்லலாம். ஆனால் ஏனோ சொல்லவில்லை<br />
<br />
==============================================================<br />
பாஷா இந்தியில் மீண்டும் ரீமேக் செய்யப் பட்டு அங்கும் நன்றாக ஓடியதாகச் சொல்கிறார்கள். அந்த அளவு ஹம் மிலிருந்து பாஷா மாற்றப் பட்டுள்ளது. <br />
<br />
இந்தியில் இந்த ஃப்ளாஷ் பேக் அதனுள் ஒரு ஃப்ளாஷ் பேக் என்றெல்லாம் கிடையாது. சீரான வரிசையாகக் காட்சிகள்தான். டைகர் (அவர்தாம் மாணிக் பாஷா) ஒரு கோபக் கார இளைஞர் .அவரது நண்பர் கோன்சால் கண்ணாடி போட்ட இன்னொரு இளைஞர். இவர்கள் மும்பை தாதா பாக்தாவர் (நம்ம ஆண்டணி)ஐ எதிர்கிறார்கள். கோன்சாலின் சகோதரி ஜும்மா ஒரு நடனமாது. அவரோடு டீ கப் வைத்துக் கொண்டு ஒரு குத்துப் பாடல் இரண்டு முறை இருக்கிறது.<br />
<br />
<br />
<br />
டைகரின் அப்பா , மாணிக்கத்தின் அப்பாவைப் போலவே வில்லனிடம் வேலை பார்க்கிறார். டைகரின் அப்பாவுக்கும் இரண்டாம் தாரம் உண்டு. இரு மகன்கள். டைகரின் நண்பரைக் கொல்ல, டைகர் கொதித்து எழ டைகரை காப்பாற்ற டைகரின் அப்பாவும் மாற்றாந்தாயும் பலியாகிறார்கள். கொதித்தெழுந்த டைகர் பாக்தாவாரின் சாம்ராஜ்யத்தை சூரையாடி விட்டு பாக்தாவரை கொல்லப் போகும்போது அங்கொரு டேஞ்சர் காமெடி போலீஸ் அனுபம் கேர் வந்து டைகரை போகச் சொல்லி விடுகிறார். வில்லனின் வீட்டை சூறையாடி விட்டு. அந்த ஊர் ஆண்டனியின் மனைவி குழந்தையை கொன்று விடுகிறார்.<br />
<br />
டேஞ்சர் காமெடி போலிஸ் டைகர் ஒரு கெட்டவன் என்று அலுவலக குறிப்பு எழுதி வைத்து விட்டு தொழிலதிபராக செட்டில் ஆகி விடுகிறார். டைகர்தான் வில்லனின் வீட்டைக் கொள்ளையடித்துவிட்டு மனைவி குழந்தையை கொன்றதாக கதை பரப்பி விடுகிறார்.<br />
<br />
டைகர் ரயிலில் பாம்பேயை விட்டு வெளியெறுகிறார், அவரது தோழியோடும் சின்னத் தம்பிகளோடும் ஓடும் ரயில் ஏறுகிறார். எல்லோரும் ஏறிய பின் உனது பழைய வாழ்க்கை எதுவும் வேண்டாம். நீ உன் தம்பிகளிடம் முழு அன்பைச் செலுத்து என்று சொல்லி விட்டு ஜும்மா நின்று விடுகிறார்.<br />
<br />
<br />
கொஞ்சம் மொக்கையாகத் தெரிகிறதா? அதனால்தான் சத்யா மூவீஸ் கதை இலாகா பிச்சுப் பிச்சு ஃபிளாஷ்பாக் ஆக்கியிருக்கிறார்.<br />
<br />
<br />
<br />
அடுத்த காட்சியில் நேராக ஊட்டிக்கு வந்து விடுகிறார்கள். பெரிய தம்பி நல்லா படிச்சு இன்ஸ்பெக்ட்ராகி கல்யாணம் ஆகி நன்றாக பாட்டுப் படிக்கக் கூடிய பெரிய சைஸ் குழந்தை ஒன்றும் இருக்கிறது. ஃப்ளாஷ் பாக்கில் அவரை விட ச்ற்றே சின்னப் பையனாக இருக்கும் சின்னத்தம்பி கல்லூரி மாணவனாகவே இருக்கிறார். மக்குப் பையன் ப்போல.. <br />
<br />
வீட்டில் ஒவ்வொருவரும் அவரை விரட்ட பம்பரமாய் சுற்றி வேலை செய்கிறார். அந்த வேகத்தில் அவர் கீழே விழுகிறார். விழுந்த உடன் இந்தக் குடும்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை என்று கூறி அழுகிறார். உடனே குடும்பப் பாட்டைப் பாடி சமாதானப் படுத்துகிறார்கள்.<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/x3JGaxQQQ04?rel=0" width="420"></iframe><br />
<br />
சின்னத் தம்பி கோவிந்தா ஒரு பெண்ணைக் காதலிக்க பெண்ணின் தந்தையின் விருப்பத்திற்கேற்ப ஒரு மிலிட்டரிக்காரராக வேடமிட்டு அமிதாப் குடும்பட்த்துடன் செல்ல குட்டு வெளிப்பட பெண்ணின் வீட்டில் அவரை த் துப்புகிறார். உடனே ரஜினியின் மனைவியாக வரும் பெண் ஐந்து விரல்களையும் காட்டி குடும்பப் பாட்டை ப் பாடுகீறார்.<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/YVVb9CAY3Og?rel=0" width="420"></iframe><br />
<br />
இதே மாதிரி தங்கையின் திருமணத்திற்காக ரஜினி பேசும்போது அவர்து மாற்றாந்தாய் ரஜினியைப் புகழ்ந்து பேசுவார். ரஜினி எல்லாத்தையும் விட்டு கொடுப்பதாகப் பேசுவார். இதில் பெரிய தம்பியின் மனைவி கூட்டுக் குடும்பத்தைப் ப்ற்றியே பேசுவார்.<br />
<br />
<br />
அப்படியே படம் செல்ல மெயின் வில்லன் வெளியேறி வருகிறார். உடைந்து போன தன் வீட்டைப் பார்த்து விட்டு டைகரைத்தேட ஆள் அனுப்புகிறார். கடைசியில் ஊட்டி வீட்டைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்.<br />
<br />
ரஜினியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று மாமியாருக்கும், மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை என்று இவர்களுக்கும் தந்தி வருகிறது.<br />
<br />
ரஜினியின் மனைவி, குழந்தையை வில்லன் கடத்தி, தனது உடைந்து போன பழைய வீட்டில் அடைத்து வைக்கிறார். அமிதாப் வீட்டிற்கு ஃபோன் செய்து டைகரைக் கேட்கிறார். ரஜினிக்கு பழசெல்லாம் தெரியாததால் கோன் டைகர் என்று சொல்லி ஃபோனை கட் செய்கிறார். ரஜினியின் மனைவி மற்றும் குழந்தையைத் தேடி பெங்களூருவுக்குச் செல்கிறார்கள். இருவரையும் விசாரிக்கும்போது ஒரு டிரைவர் தவறாகப் பேச அமிதாப் கொதித்தெழுந்து அவனைப் புரட்டி விடுகிறார். அதற்கு ஈடாக தமிழில் ரஜினிக்கு கோபம் வரும் காட்சி படும் பயங்கரமாக இருக்கும். <br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/UVUqeFssESo" width="560"></iframe><br />
<br />
அமிதாப் டைகரைப் பற்றி தெரிந்த தன் கடந்த கால நண்பர்களுடன் ஃபோன் செய்ய ஜும்மா பெங்களூரில் இருப்பது தெரிய வருகிறது. அவரைப் பார்க்க போகிறார். இந்தக் காட்சி வரை படம் வானத்தைப் போல படம் மாதிரியே ஒரு திகிலுடன் தான் செல்கிறது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்த உடன் இந்தக் காட்சி வருகிறது.<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/Aa4DQUiy3Bs" width="420"></iframe><br />
<br />
ஜும்மா பழைய பாடல் ஒரு குஜாலாகப் பாடுகிறார். படம் அப்படியே கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லராக மாறுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு திரும்பவும் ஃபோன் வருகிறது. உன் அண்ணந்தான் டைகர் என்று சொல்கிறது. உடனே அவர் பழைய ஃபைல்களை எடுத்துப் பார்க்கிறார். அதில் இன்ஸ்பெக்டர் கிரிதர் அவரைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி இருப்பதை படித்து விட்டு வருகிறார். வீட்டிற்கு நுழைந்த உடன் அமிதாப்பை இவர் ஒரு பயங்கர ரவுடி என்று வீட்டிற்குள் திட்டுகீறார். <br />
<br />
இந்தக் காட்சியில் அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்பது நினைவுக்கு வந்து துப்பாக்கியைக் காட்டி அண்ணனை கைது செய்யப் பார்க்க சின்னத் தம்பி குறுக்கே பாய்ந்து தடுக்க அண்ணன் தப்பிச் செல்ல இணைந்த கைகள் எதிரும் புதிருமாக மாறுகின்றன. அமிதாப் தப்பிச் சென்றவுடன் ஜும்மா பேச ஆரம்பிக்கிறார். தம்பிகளுக்காக அவர் வாழ்க்கையையே தியாகம் செய்ததையும், அதுவும் மாற்றாந்தாய் வழித் தம்பிகள் என்பதையும் எடுத்துச்சொல்கிறா. உடனே ரஜினி திருந்தி விடுகிறார். கதையின் பிற்பகுதி ரஜினியின் மனைவி குழந்தையைச் சுற்றி வந்தாலும் இந்தக் கதாபாத்திரம் 1991ம் ஆண்டு ரஜினிக்கானது அல்ல. கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே தெரியும் உண்மை. மார்க்கெட்டிங்கிற்காக நடித்துக் கொடுத்தது போலவே இருக்கிறது.<br />
<br />
<br />
அதற்குள் அமிதாப் வில்லனின் இடத்திற்குள் சென்று விட ரஜினியின் குடும்பத்தை வெடி குண்டால் கட்டி வைத்து அவரைச் சுற்றி பெரிய அடியாள் படையுடன் வில்லன் நிற்கிறார். வழக்கம்போல உரத்த குரலில் அமிதாப் பேசுகிறார். சண்டை உனக்கும் எனக்கும்தான் . உன் குடும்பத்தை நான் ஒன்றும் செய்யவில்லை என்று பாஷா போலவே பேசுகிறார். குடும்பத்தைக் கொன்றது. சூரையாடியது எல்லாம் இன்ஸ்பெக்டர் கிரிதர்தான் என்று சொல்கிறார். அதை உறுதி படுத்துவதற்காக சிரிப்பு போலீஸ் கிரிதர் ஹெலிகாப்டரில் வந்து அத்தனை அடியாட்களை மெஷின் கன் வைத்து சுட்டுவிட்டு படத்தின் முக்கிய வில்லனாக பிரமோசன் பெறுகிறார். சகோதரர்கள் பாட்டுப் பாடிவிட்டு ஒருவரை ஒரு கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்படியே ரஜியின் மனைவியைத் தூக்கி தண்ணீருக்குள் போட்டு விடுகிறார்கள். சண்டை நடக்கிறது. கடைசியில் ராணுவம் வருகிறது. பழைய வில்லன் புதிய வில்லன்மேல் வெடிகுண்டினை மாட்டிவிட பாஷா போல அமிதாப் தலைமேல் அவரைத் தூக்கி இவர் போல போடுகீறார். வெடிகுண்டு வெடித்து வில்லன்கள் சாக இவர்கள் எல்லோரும் ஒன்று சேருகிறார்கள். சுபம்.<br />
<br />
<br />
படத்தின் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் டைகர் ஒரு சராசரி கோபக்கார இளைஞர். பாஷா அதிபயங்கர சக்திவாய்ந்த கடத்தல் மன்னன்.<br />
<br />
மற்றபடி சிரிப்பு போலீஸ்- கேசவன், கோவிந்தா யுவராணி அப்படி இப்படி என்று சின்ன சின்ன மாறுதல்தான்.<br />
<br />
<br />
வில்லனின் பெண்ணை தூக்கிக் கொண்டு போய் வளர்ப்பதாக சின்ன வயதில் ஏதோ ஒரு படத்தில் பார்த்த நினைவு. ஆனால் ஹம்மில் தாய் மகள் இருவரையும் கொன்று விடுகிறார். அது எந்த படம் என்று இல்லை.<br />
<br />
ஜும்மா பாத்திரத்தை ஃபிளாஷ்பாக் காட்சிகளில் தமிழ்படத்தில் காட்டவேவில்லை . ஃப்ளாஷ்பாக்கிலும் நக்மா வந்திருந்தால் ரசிகர்கள் குழம்பாமல் இருந்திருப்பார்கள். படத்தின் பிற்பகுதியில் வரும் ஜும்மா நக்மா போலத்தான் இளமையாக இருக்கிறார்,.<br />
<br />
<br />
<br /></div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-47825894431076474622013-12-14T15:10:00.000+05:302013-12-14T15:16:20.916+05:30கல்யாண சமையல் சாதம்- ஏ கிளாஸ்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
டிஸ்கி:- முன்னொரு காலத்தில் முத்துராமன் மஞ்சுளா நடிப்பில் மறுபிறவி என்றொரு படம் வந்தது. 1995-98ல் சன் டிவியை இரவு 12க்கு மேல் பார்த்த ரசிக கண்மனிகளுக்கு அந்தப் படம் ரொம்பவும் பரிச்சயம். அடுத்த கட்டத்தில் கார்த்திக் ராதா நடிப்பில் வாலிபமே வா வா என்றொரு படம். அதுவும் பிரபலம்தான். இப்போது அடுத்த காலகட்டம். அதே போன்றதொரு கதை. ஆனால் கவுதம் கார்த்திக் நடிக்கவில்லை. பிரசன்னா நடித்து இருக்கிறார். அந்தப் படம் தான் கல்யாண சமையல் சாதம்.<br />
<br />
<br />
முதலில் இந்தப் படம் ஆகா போன்றதொரு படம்போல என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் தயிர் சாதம் மட்டும் சாப்பிடும் எண்ணத்தில் படம் பார்க்க ஆரம்பித்தவனுக்கு ஓப்பனிங்கே ஒரு இன்ப அதிர்ச்சிதான். பொண்ணு உட்கார்ந்துட்டா, ஓ உட்கார்ந்துட்டாளா..., நானும்தான் உட்கார்ந்துட்டேன் என்று ஆரம்பித்து, if u want to talk, first learn WHISPER, உடனே ஒரு கெக்கெபிக்கே சிரிப்பு என்று டைட்டில் போடுகிறது.<br />
<br />
முதல் படத்தில் கல்யாணத்திற்கு பிறகு முத்துராமனுக்கு அதில் ஒரு பலஹீனம் தென்படும். அவரது மனைவி தனது தளராத முயற்சியால் அதை சரிசெய்வார்.<br />
<br />
இரண்டாவது படத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் ராதா போடும் சண்டை, மற்றும் கார்த்திக்கின் ஃபேவரிட் குத்துச் சண்டை வீரரின் மேல் திணிக்கப் படும் சதியின் காரணமாக கார்த்திக் தானும் ஒரு பலவீனமான மனிதரோ என்று வீட்டைவிட்டு ஓட கிளைமாக்ஸில் ராதா தானே களத்தில் இறங்கி, அவரும் வெற்றி பெற்று கார்த்திக்கையும் வெற்றியடையச் செய்வார். அவர்கள் இருவரும் வெற்றி யடைந்ததை அவர்களது சொந்தக் காரர்கள் வரிசையாக வந்து பார்த்து மகிழச்சியடைந்து செல்வார்கள்.<br />
<br />
இந்தப் படத்தில் என்னவென்றால் முழுக்க முழுக்க ஒரு அரேஞ்சுடு மேரேஜ். பார்த்ததும் நாயகியிடம் விழுந்து விடுகிறார். ஹீரோ . அவரது தாசானுதாசன் ஆகி விடுகிறார். திருமணத்துக்கு முன்பே ஒரு முயற்சித்துப் பார்க்க்க ..........., முயற்சி தோல்வி அடைகிறது. இந்த முயற்சிக்கு முன்னால் சில டயலாக்குகள்,, இப்பெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிய மக்கள் களத்தில் இறங்கிடறாங்க,, இன்னும் சிலர் கல்லூரியின் போதே.., நீ அப்படி இல்லையில்ல என்று...... அதாவது ஹீரோ ஹீரோயின் சுத்தமானவங்களாம்........., <br />
<br />
<br />
இந்த இடத்தில்தான் பழையகால விமர்சனங்கள் சில நினைவுக்கு வ்ந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், அரங்கேற்றம் போன்ற சில ப்டங்கள் பற்றிய பேச்சுவந்த போது அந்த ப் படத்தின் நாயகிகள் எல்லாம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக படைப்பக்கப் பட்டிருப்பார்கள், அதற்காக சிலர் கொதித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது படைப்பாளிகளால் சொல்லப் பட்ட ஒரு விளக்கம். பொதுவாக நாயகி கெட்டுப் போகிறார் என்றால் அவர் சுத்தமானவர் என்பதை மக்களிடம் காட்டவேண்டுமாம். இயல்பான கதாநாயகி கெட்டுப் போகிறார் என்றால் மக்களிடம் அதிர்ச்சி எதுவும் வராதாம். அதனால் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த கதாநாயகியைக் காட்டுவார்களாம். அவர்கள் கெட்டுப் போனால் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி உருவாகுமாம. ஒரு வேளை அதே தியரிதான் இங்கு உபயோகப் படுத்தப் பட்டு நாயகனையும் நாயகியையும் குறிப்பிட்ட சமூகத்தில் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் கூட எழுகிறது.<br />
<br />
நாயகி மனதளவில் நாயகனுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். மறுபிறவியில் திருமணம் முடிந்து விட்டதால் மஞ்சுளா தனது கணவனை மீட்டெடுக்க கண்டபடி போராடுவார். பார்க்கும் நமக்கு தண்ணீரே வந்துவிடும் கண்களில்.<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/EF4q6KMsGcE?rel=0" width="420"></iframe><br />
<br />
<br />
வாலிபமே வா வாவில் கார்த்திக்கின் போராட்டம்தான் படம் முழுவதும் ராதாவின் அதிரடி கிளைமாக்ஸில்தான். கிளைமாக்ஸ் முடிந்ததும் அவர்களின் சொந்தக்காரர்கள் பார்த்து சந்தோசப் படுவதுபோல் நாமும் சந்தோஷப் படுவோம்.<br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/28DxOOPr7eQ?rel=0" width="420"></iframe><br />
<br />
இதில் கல்யாணம் ஆகவில்லை. தவிரவும் இவர்கள் சுத்தமானவர்கள். அதனால் அவருக்கு முழு அளவில் ஆதரவு கொடுக்கிறார் மனதளவில். பல இடங்களில் உட்கார்ந்து இது பற்றிப் பேசுகிறார்.<br />
<br />
கோபத்தில் மாப்பிள்ளை ஒரு புஸ்ஸூ என்று சொல்லுவிட்டு ஹீரோ வருத்தப் படுவாரோ என்று இவர் வருத்தப் படுகிறார். மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்ச்னை இருப்பது தெரிந்தும் மாமனார் திருமணத்தை தொடர்ந்து நடத்துகிறார். வாழ்க அந்த மாமனார். இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்வதற்குக்கூட பிரசன்னா அவ்வளவு கூச்சப் படுகிறார். அந்த அளவுக்கு அவர் நல்லவராம். இவ்வாறாக பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்பதிலேயேபடத்தை கொண்டு போகிறார்கள். கடைசியில் அவருக்கு எப்படி சரியானது என்பது தெரியாமலேயே சரியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். </div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-28692070675687572382013-12-09T20:48:00.000+05:302013-12-09T20:48:00.853+05:30நீங்களும் ஆகலாம் அர்விந்த் கஜ்ரிவால்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வாக்குகள் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும். ஊழலுக்கு எதிராக அவதாரம் எடுத்திருக்கும் கட்சியாக துடைப்பம் கொண்டு துடைக்கக் கூடிய பொருளாக ஊழலை கற்பனை செய்து கொண்டுள்ள மக்களுக்கு ஆம் ஆத்மி ஒரு அவதாரமாகவே தோன்றும். அவர்களிடம் ஊழலை கழுவி சுத்தம் செய்யக்கூடாதா, எரித்து சுத்தம் செய்யக்கூடாதா என்பதெல்ல இந்த இடுகையின் நோக்கம், ஆம் ஆத்மியின் வெற்றியில் நமக்கு தெரியும் செய்தி என்ன? என்பதுதான்.<br />
<br />
அஸ்ஸாம் கனபரிசத் கட்சியின் வரலாறு தெரியாதவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனானப் பட்ட அஸ்ஸாம் கனபரிசத் கட்சியே இப்போது பத்தோடு பதினொன்ரு எண்ணும்போது மற்றவர்களைப் பற்றி பேச வேண்டியதே இல்லை.<br />
<br />
கஜ்ரிவால் போல திட்டம் போட்டால் யாவருமே வெற்றியை நோக்கிப் போக முடியும். கஜ்ரிவால் நினைத்திருந்தால் அகில உலக தேசிய கட்சியை ஆரம்பித்திருக்க முடியும். ஆரம்பித்து ஐந்து மாநில தேர்தல்களில் ஒரு கலக்குக் கலக்கி ஒரு விஜய காந்த் ஆகவோ அல்லது ஒரு சிரன்சீவி ஆகவோ மாறி இருக்கலாம். ஆனால் அவர்கள் டெல்லியில் மட்டும் தனது வேட்டையைக் காட்டி ஒரு சூப்பர் ஹீரோவாக மாறிவிட்டார். <br />
<br />
சமுதாயத்தை ஊழலற்றதாக மாற்ற நினைக்கும் மக்கள் நம் ஊரில் கூட மாநகராட்சி அளவில், நகராட்சி அளவில் கட்சி அல்லது கட்சி போன்ற அமைப்பை ஆரம்பிக்கலாம். உள்ளூரிலேயே ஆயிரக் கணக்கில் பிரச்சனைகள் இருக்கின்றன. மாநகராட்சி போன்ற அமைப்புகள் நினைத்தால் அதிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் நினைத்தால் மிக்ச் சிறப்பான நிர்வாகத்தை தரமுடியும்.<br />
<br />
முழுநேர அரசியலில் ஈடுபடும் அளவிற்கு வசதி இருப்பவர்கள் அவரவர் ஊர்களில் ஒன்று சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பியுங்களேன். இன்று ஒரு சில பிரதிநிதிகளின் வருமானத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் பாதி அளவுக்கு மக்களுக்கு செலவு செய்தாலே மக்கள் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-74607847442563034362013-12-08T08:55:00.000+05:302013-12-08T08:55:44.998+05:30சச்சினை வீழ்த்திய பிபாசா பாசு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
டிஸ்கி:- இது கொஞ்சம் காலதாமதமாக வந்த இடுகையாக இருந்தாலுன் கூட இப்போது அலசுவது என்பது கொஞ்சம் நடுநிலையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.<br />
<br />
சச்சின் ரசிகர்களால் அப்படி இப்படி பேசப்பட்டாலும் உண்மையில் வெளியான போது தோல்வியான திரைக்கதை அது. சச்சின் வெளியான போது நான் திரைப் படம் பார்க்காமல் இருந்த காலகட்டம் தவிர அப்போது பிளாக்கர் எல்லாம் இருந்ததா என்றும் தெரிய வில்லை. நானும் களத்தில் இல்லை.<br />
<br />
சமீபத்தில்தான் எனக்கு இந்தப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் ரசிகர்கள் சிறப்பாகவே சொல்லியிருந்ததால் நானும் நல்ல எதிர்பார்ப்புடந்தான் பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபின் அது ஒரு படத்துக்கான எல்லா விஷயங்களுடந்தான் இருந்தது. இருந்தாலும் படத்தின் தோல்விக்கான் காரணத்தை அலசியபோது சில் விஷயங்கள் வெளிப்படையாகவே தெரிந்தன.<br />
<br />
<br />
1.இது போன்ற ஜனரஞ்சகமான படத்துக்கு ஏ சர்டிஃபிகேட் அனாவசியம். குறிப்பாக அதைத் தவிர்த்திருக்க வேண்டும். முக்கியமாக குஷி மும்தாஜ் கதாபாத்திரத்திற்கு அந்த வயோதிக தோற்றம் உடைய பிபாசா அம்மையார் தேவையே இல்லை. அதுவும் கல்லூரி முடிய 30 நாட்கள் இருக்கும் நிலையில் நடனப் பயிற்சி எல்லாம் செய்யும் செய்யும் பெண்மணி தேவையே இல்லை.<br />
<br />
<br />
2.குஷி வெற்றியடைந்திருந்த சில வருடங்கள் வெளிவந்த திருடா திருடியும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டும் ஈகோ அடிப்படையில் வெளிவந்த படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருடா திருடிக்கும் எம்ஜியாரின் அன்பே வாவுக்கும் உள்ள தொடர்பு ரீமேக் லேபிளை சுண்டி தெரிந்து கொள்ள முடியும். இந்தப் படத்திலும் சரோஜா தேவி சொல்லும் அதே காரணத்தை ஜெனிலியா கிளை மாக்ஸில் சொல்லுகிறார். இந்தப் படத்தை குஷி பார்ட் 2 என்றே ரிலீஸ் செய்து இருக்கலாம்.<br />
<br />
3.இது போன்ற படங்களுக்கு நல்ல காதல் பாடல்கள் அவசியம். இந்த படத்தில் அவை சுத்தமாக மிஸ்ஸிங். ஒருவேளை நல்ல பாடல்கள் இருந்திருந்தால் இந்தப் பாடல்களும் ஹிட் அடித்திருக்கும். <br />
<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="//www.youtube.com/embed/85LjZp05RPY?rel=0" width="420"></iframe><br />
<br />
4. அந்தப் படம் வந்த போது நாயகி தேர்வைப் பற்றியும் குறை சொல்லி பத்திரிக்கைகளில் எழுதியதாக நினைவு. ஒரு வேளை படம் வெற்றி பெற்றிருந்தால் ஜெனிலியாவை சரியான தேர்வு என்று சொல்லி இருப்பார்கள். இப்போது பார்க்கும்போது பாத்திரத்தில் அவர் சரியாகத்தான் பொருந்தி இருப்பதாகத் தோன்றுகிறது.<br />
<br />
<br />
மொத்தத்தில் மிக லேசான சருக்கல்களால் மிகப் பெரிய வெற்றிப் படமாக வந்திருக்க வேண்டிய படம் தூங்கி விட்டதாகவே தோன்றுகிறது. சருக்கல்கள் இருந்தாலும் இன்று மீண்டும் ரிலீஸ் செய்தாலும் படம் வெளியான போது கிடைத்த வர வேற்பை விட இன்று நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-37997322812521650562013-11-07T16:19:00.002+05:302013-11-07T16:19:11.543+05:30இது அது மாதிரியா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3BLOdv5TYLZmlCxDjWrdkGfv2rvHOnSQKdBppOw_eRZEn520-wnC3nNUs_g8dp4HbFUHjJ6xmlsoCfuykkAe4lwCpGiVn3r4tGk1Ge9ERAycrbjVEROvUv2EqlvQFjRJFALDwWidoBiYV/s1600/player.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="360" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3BLOdv5TYLZmlCxDjWrdkGfv2rvHOnSQKdBppOw_eRZEn520-wnC3nNUs_g8dp4HbFUHjJ6xmlsoCfuykkAe4lwCpGiVn3r4tGk1Ge9ERAycrbjVEROvUv2EqlvQFjRJFALDwWidoBiYV/s640/player.JPG" width="640" /></a></div>
</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-9190449714686811982013-11-01T14:47:00.000+05:302013-11-01T14:47:37.394+05:30ஆதித்ய கரிகாலன் மன்னன் ஆகிருந்தால்.....,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
டிஸ்கி:-<br />
<br />
நமக்கு பிடித்தவர்களை நாயகனாக்கி பல காவியங்கள் எழுதுவது மரபுதான். அது கல்தோன்றி மண் தோண்றா காலத்தில் துவங்கி இன்றைய சினிமா வரைக்கும் இருப்பதுதான். இது ஒரு சுவையாக கற்பனை. சின்ன வயதில் நான் மன்னனானால்.........., எதிர்காலத்தில் நான்....., என்றெல்லாம் பேச்சுப் போட்டி நடத்துவார்கள். இதுவும் அது போலத்தான்.<br />
<br />
<br />
என் மனதில் வெகுநாட்களாக இருந்து கொண்ட அரிப்புதான். தமிழ் சமுதாயம் ஏன் இவ்வளவு சிரமப் பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த தமிழ் சமுதயாத்தின் இழி நிலைக்கு காரணம் தான் என்ன என்றெல்லாம் நானும் உள்ளங்கிடங்கோடு போராடிக் கொண்டிருந்தவன் தான். <br />
<br />
அப்படி யோசித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் தீடீரென்றா தீயாய், காற்றாய், புயலாய் தோன்றியதுதான். ஆதித்ய கரிகாலன் சக்ரவர்த்தி ஆகி இருந்தால் தமிழ் சமுதாயத்தின் இந்த இழிநிலை மாறியிருக்குமோ என்றுதான் தோன்றியது.இதற்கான காரணங்கள்.<br />
<br />
<br />
<br />
1. ஆதித்ய கரிகாலன் ஒரு அதிரடி இளவரசன், இணை அரசன், போர்கள் பல பறந்திருக்கும். சோழப் பேரரசு விரைவில் உருவாகி இருக்கும்.<br />
<br />
2.ஆதித்ய கரிகாலன் தளிச் சேரிப் பெண்டிரை ஆதரித்த சுவடுகள் எதுவும் இல்லை. எனவே தேவரடியார் என்ற தனிப் பிரிவினர் வந்திருக்க மாட்டார்கள். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நிலையும், சமுதாயத்தில் அவர்களது நிலையும் அனைவருக்கும் தெரிந்ததே..,<br />
<br />
3.அவர் அக்கனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார். நாட்டுக்கு ஒரே ஒரு ராஜாதான் இருந்திருப்பார்.<br />
<br />
4.ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தமிழகத்தில் ஜாதி வாரி பிரிவுகள் வளர்ந்ததாகச் சொல்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் மன்னனாகி இருந்தால் இது தவிர்க்கப் பட்டிருக்கலாம். ( பட்டிருக்கலாம் என்றெல்லாம் இல்லை, கண்டிப்பாக ஜாதியாக இருந்திருக்காது.)<br />
<br />
5. ராஜ ராஜன் காலத்தில்தான் கலைஞர்கள் எச்சில் துப்புவதை சேகரிக்க தனி ஆட்கள் நியமிக்கும் பழக்கம் வந்தது.<br />
<br />
6. ஆதித்யன் தஞ்சை சக்கர வர்த்தி ஆகியிருந்தால் அருள்மொழி ஈழ சக்கரவர்த்தி ஆகி இருக்க வாய்ப்பு அதிகம். ஒரு வேளை அது நடந்திருந்தால் இந்திய துணைக் கண்ட அரசியலே வேறு மாதிரி ஆகியிருக்கும்.<br />
<br />
7. ஆதித்ய கரிகாலன் தாய் தந்தையர்க்கு செலவு செய்து வீடுகட்டும் இயல்பு கொண்டவன். ராஜராஜனோ பெருத்த செலவு செய்து கோவில் கட்டியன். அவனது மகனே அந்தக் கோவிலும், நகரும் பிடிக்காமல் வேறு ஒரு ஊருக்கு ஒதுங்கியது வரலாறு. <br />
<br />
<br />
டிஸ்கி:-<br />
<br />
எதிர்காலத்தில் ஔவையார் அரசாட்சி செய்திருந்தால் எப்படியிருக்கும், மருத நாயகம் பிரதமர் ஆகி\யிருக்க வேண்டும். கோச்சடையான் ஜனாதிபதி ஆகியிருக்க வேண்டும் என்றெல்லாம் பழ இடுகைகள் போடும் எண்ணம் இருக்கிறது.</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1125587877839756177.post-36807377045139956902013-10-30T13:10:00.000+05:302013-10-30T13:10:05.543+05:30மப்பும் மந்தாரமும்.., கொப்பும் குலையுமாய்..,<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன், கூடுதலாய் சில ஆண்டுகளுக்கு முன்
என்றும் கூட சொல்லலாம். தமிழ்நாட்டில் மது பற்றிய ஒரு எண்ணம், கசப்பாய்,
இனிப்பாய், புளிப்பாய் என்று கூட சொல்லலாம். நாம் பதின்ம வயதில் காலடி
எடுத்து வைத்திருந்த கால கட்டம்.., <br />
<br />
சூப்பர்
ஹீரோவாய் எதுவும் செய்ய முடியாவிட்டாலும் சூப்பர் ஹீரோ செயல் செய்பவர்களை
சுற்றி, அவர்களது பிரதான அடிபொடிகளாய் நம்மை அடையாளப் படுத்திக்
கொண்டிருந்த காலம் அது. <br />
<br />
அப்போதெல்லாம் தெருவிக்கு
ஓரிரு வீடுகளில் டி.வி. இருக்கும் ஓரிரு வீடுகளில் டிவிஎஸ் 50 இருக்கும்.
சில ஊர்களிலெல்லாம் தெருவே ஒன்றிரண்டுதான் இருக்கும். அப்படிப் பட்ட கால
கட்டம். <br />
<br />
மலிவு விலை மதுக்கடைகள் அப்போது அங்காங்கே
இருந்ததுண்டு. பாக்கெட், இப்போது ஆங்காங்கே விற்கும் தண்ணீர் பாக்கெட்
வடிவில் இருக்கும். ரூ2 அல்லது 3 என்று நினைக்கிறேன். நான் வாங்கியதெல்லாம்
கிடையாது. பிற்காலத்தில் எனக்கு கிடைத்த பொது அறிவுத் தகவல்கள் அவை. <br />
<br />
அப்போதெல்லாம்
ஊரில் சில சலம்பல் பார்டிகள் மட்டும் தண்ணி அடிப்பார்கள். அடித்துவிட்டு
தெரு முக்கு வரை சலம்பல்கள் பறக்கும். ஊரின் நுனி வந்த உடன் அப்படியே
பெட்டி பாம்பாய் அடங்கி விடுவார்கள். அப்படியே ஒரு ஓரமாய் நடந்துபோய்
வீட்டில் அடங்கி விடுவார்கள். சில ஆட்கள் மட்டும் தண்ணி போட்டு விட்டு
வந்து மனைவியை அடிப்பது உண்டு. அவர்களை எல்லாம் தெருவில் இருப்பவர்கள்
கண்டபடி திட்டுவார்கள், பெரும்பாலும் முதுகுக்குப் பின் தான்.<br />
<br />
வெகுசிலர்
போதையில் சண்டை போடுவது உண்டு. வெகு சிலர் என்றால் மொத்த மக்கள் தொகையில்
வெகுசிலர். இன்று யோசித்துப் பார்த்தால் அவர்கள் போதை ஏற்றாவிட்டாலும்
சண்டைதான் போட்டிருப்பார்கள். <br />
<br />
யோசித்துப்பார்த்தால்
ஒரு ஒற்றுமை தெரிகிறது. அன்றைய தேதியில் மதுபோதையை நாடியவர்களை அவர்களது
மக்கள், உறவினர்கள் பெரும்பாலும் வெறுத்துத்தான் இருக்கிறார்கள். மதுவை
மட்டுமல்ல, மதுவின் நண்பர்களையும்தான்.<br />
<br />
<br />
இன்றைய
நிலையை யோசித்துப்பார்த்தால் மதுவால் ஏற்பட்ட படப்போகும் தீமைகள் ஒன்றும்
குறைந்து போய்விடவில்லை. ஆனால் மது மற்றும் மதுவின் உறவினர்களை
வெறுக்கிறார்களா என்று பார்த்தால் , அப்படியெல்லாம் வெறுப்பவர்களாகத்
தெரியவில்லை. நேற்று போதை அதிகமாகிவிட்டது என்பதை தேநீரில் இனிப்பு அதிகம்
என்பது போல சொல்லுகிறார்கள். திரைப்படங்களைப் பார்த்தாலே இது நன்றாக
விளங்கும். மது மயக்கத்தில் பாடுவதுபோல ஒரு பாடல் கண்டிப்பாக
இடம்பெற்றுவிடுகிறது. புகை பிடிப்பவர் ஒரு ஓரமாய் இருந்தால்கூட எச்சரிக்கை
ஸ்லைடு போட்டு தெளிவாக்கி விடுகிறார்கள். <br />
<br />
மதுவை எதிர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால்<br />
<br />
1.அரசியல்ரீதியாக நன்மைக்காக<br />
<br />
2.சீர்திருத்தவாதியாக
பெயர் எடுத்தவர்கள். இதிலும் சில புரட்சிவாதிகள் தன்னால் தண்ணி
அடித்தால்தான் பேச எழுத முடியும் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.<br />
<br />
3.இன்றுவரை
மதுவிற்கு அடிமையாகாமல் இருந்து எங்கே தங்கள் வாரிசுகள், அதில் சிக்கிக்
கொள்வார்களோ என்று என்ற பயத்தில் எதிர்ப்பவர்கள் என மிக குறுகிய சில்
வட்டத்துக்குள் அடிக்கிவிட முடியும். <br />
<br />
தனது சக மாணவன் தண்ணி அடிப்பதால் அவனை வெறுக்கும் அல்லது அவனது சகஜமாக பழக மறுக்கும் மாணவன், மாணவி இன்று உண்டா....,? <br />
<br />
மதுப்
பழக்கம் உண்டு என்ற காரணத்திற்காக தனது காதலனை வெறுக்கும் காதலி, கணவனை
வெறுக்கும் மனைவிகள் இன்று குறைந்து கொண்டே வருகிறார்கள். வீட்டில் சிக்கன்
வறுத்துக் கொடுக்கும் இல்லத்தரசிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே
செல்கிறது. எதிர்காலத்தில் இவர்களும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும்
காலம் வரலாம் என்றே தோன்றுகிறது. <br />
<br />
குறுகிய காலத்தில்
இதெல்லாம் நடந்து விடுமோ என்று தோன்றுகிறது. மதுவை வெறுக்கும் மனப் போக்கு
குறைந்துகொண்டே வருகிறது என்பதாக உலகம் போய் கொண்டு இருக்கிறது. <br />
<br />
இப்படி
மப்பும் மந்தாரமாய் மக்கள் போய் கொண்டே இருந்தால் கொப்பும் குலையுமாக
விபத்தில் மாட்டிக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே
தான் போகும். என்ன சொல்லி என்ன பிரயொசனம்? மக்களிடையே மதுவிற்க்கான
எதிர்ப்பை வளர்க்காத வரையில் மது ஒழிப்பு சாத்தியமே இல்லை என்றுதான்
தோன்றுகிறது .</div>
SUREஷ்(பழனியிலிருந்து)http://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com6