Showing posts with label அட்சய திரிதியை. Show all posts
Showing posts with label அட்சய திரிதியை. Show all posts

Sunday, April 26, 2009

கணவன்களுக்கான நீதிக்கதை (அட்சய திரிதியை ஸ்பெஷல்)

அட்சய திரியைக்கும் ஆதிசங்கரருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

ஆதிசங்கரர் துறவி வாழ்க்கை ஏற்றதும் ஒரு வீட்டில் பிச்சை வாங்க சென்றாராம். அந்த வீட்டில் இருந்த பெண்மணி தனது வறிய நிலையையும் பொருட்படுத்தாது அவருக்க்கு ஒரு நெல்லிக் கனி கொடுத்தார். இவ்வளவு வறிய நிலையிலும் பிறருக்கு உதவுகிறாரே..........
இவரிடம் செல்வம் இருந்தால்..........................................

கனகதாரா மந்திரத்தைப் பாடி தெய்வத்தை வணங்குகிறார். தெய்வமும் அந்தப் பெண்மணிக்கு தேவையான செல்வத்தை வழங்கியதாகக் கூறுகிறார்கள். இது நடந்தது அட்சய திரியை அன்று...

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கேரளாவில் உள்ள காலடியில் தங்க நெல்லிக்கனி கொடுத்து வெகுவிமரிசையாக அட்சய திரிதியை பூஜைகள் செய்கிறார்கள்

................................................................................................................................


இந்தக் கதையில் நாம் அறியும் நீதி:-

நீங்கள் மாபெரும் பணக்காரராக மாறவிரும்பினால் நீங்கள் அட்சய திரிதியை அன்று தானங்கள் கொடுங்கள். அது தானம் பெறுபவரின் உள்ளத்தை குளிர்ச்சி படுத்துவதாக இருந்தால் மகாலட்சுமி உங்களுக்கு நிறைய செல்வம் கொடுப்பார்.



தானம் பெறுபவர் உங்கள் ஊரில் இல்லையென்றால் இன்று தங்கம் வாங்கி அதை கடவுளுக்கு சமர்ப்பித்து விடுங்கள். புண்ணியம் கிடைக்கும்

......................................................................................................................................

தங்க நகைக்கடையில் தங்க நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்பதான கதைகள் (கி.பி.2000க்கு முந்தியது) ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails