Showing posts with label பள்ளிக்கூடம். Show all posts
Showing posts with label பள்ளிக்கூடம். Show all posts

Wednesday, June 24, 2009

சின்னப் பசங்க உருவாக்கப் பார்த்த மதக் கலவரம்

பள்ளி பருவத்தினை நினைத்துப் பார்க்கும்போது ஏற்பட்ட இன்னொரு சம்பத்தினை கண்டிப்பாக நினைவு படுத்தியே ஆக வேண்டும். நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு முறை கொடிக்காபுளி பிடுங்குவதற்காகச் சென்றோம்.

அந்த மரங்கள் வேம்பு, புளி அளவுக்கு கெட்டியானது அல்ல. ஆனால் அந்த மரத்தில் ஏறமுடியும். நாங்கள் கொக்கிச் சல்லையுடன் மரத்தில் ஏறியிருந்தோம். கொக்கியில் ஒரு கூர்மழுங்கிய கத்தியையும் சேர்த்திருப்பார்கள். கொடிக்காபுளி நன்றாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததது. நண்பர் இருவர் நன்றாக மேலே ஏறி செல்லமுடியும் அளவு சென்றுவிட்டார். இனியும் முன்னேறினால் ஒடிந்துவிடும் அளவு சென்றுவிட்டு கொக்கியைப் ப்யன்படுத்தி பிடுங்க வேண்டும். கீழே நிற்கும் நாங்கள் அதைப் பொறுக்கிக் கொள்வோம்.கடைசியில் பங்கு போட்டுக் கொள்வோம்.

அதே மரத்திற்கு ஊரின் இன்னொரு பகுதியைச் சேர்ந்த நண்பர்களும் வந்திருந்தனர். அவர்களில் ஒருவரும் அதே மரத்தில் ஏறியிருந்தார். அவரும் பிடுங்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். எங்கள் நண்பர் மேலே சென்று முயற்சித்துக் கொண்டிருந்தார் அல்லவா.., இவர் அவருக்கு கீழே நின்று கொண்டு இறங்கிறாயா? அல்லது மரத்தினை ஆட்டி கீழே விழவைக்கவா? என்ற ரீதியில் மிரட்டிக் கொண்டிருந்தார். அது மொத்தமாக குத்தகைக்கு விடப் படும் மரங்கள் சின்ன பசங்க என்னபெரிதாக பிடுங்கிவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். உரிமைக்காரர்கள் பார்த்தால் விரட்டுவார்கள். அதுகூட பெரிய அளவில் இருக்காது.

இவர் ஆட்டிய வேகத்துக்கும் மரம் ஆடிய வேகத்துக்கும் எல்லோருக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் நண்பர் கொஞ்சம் தைரியமானவர். அவர் அதற்கெல்லாம் அசராமல் தன்வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். கோபமடைந்த எதிர்குழு நண்பர் கொஞ்சம் காட்டமாக சாதிப் பெயரை உபயோகப் படுத்த ஆரம்பித்தார். அவருக்கும் கீழே இருந்த எங்கள் ந்ண்பர் வேகமாக மரத்தில் ஏறினார். பெரிய சண்டைவரும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். அவரால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மேலேசெல்ல முடியவில்லை. அவர் நின்ற இடத்திலிருந்து மேலே பார்ர்த்தார். எதிர் குழு நண்பர் அவருக்கு நேர் மேலே நின்றிருந்தார். எதிர்குழு நண்பர் லுங்கி அணிந்திருந்தார். அதையும் மடித்துக் கட்டியிருந்தார். அவர்களில் சிறுவர்கள் கூட லுங்கிதான் அணிந்திருப்பார்கள். அந்த நபர் உள்ளாடைகூட அணியவில்லை. கீழே நின்ற நண்பர் தனது கொக்கி சல்லையை மேலே உள்ளவர்மேல் பயன்படுத்த ரத்தம் கொட்டோகொட்டு என்று கொட்ட ஆரம்பித்தது. சிறுவர் உபயோக ப் படுத்திய கத்தி ஆகையால் பதம் என்பதே இல்லாமல் இருந்தது. இல்லையென்றால் முக்கிய உறுப்பு துண்டாகியிருக்கும். ரத்த வெள்ளத்தில் அந்த நபர் ஓட அவரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எங்களைத் தேட நாங்கள் எஸ்கேப். இதில் ஜாதிப் பிரச்சனை வேறு சேர அந்தப் பகுதியே பதட்டம் ஆனது.

கடைசியில் ஊர்பெரியவர்கள் களத்திற்கு வந்து சின்னப் பசங்க சண்டையை பெரிது படுத்தவேண்டாம் என்று கூறி காயம் பட்டவனுக்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து பிரச்சனையை முடித்தனர். ஆனாலும் கூட நாங்கள் எங்கள் பகுதியைவிட்டு மற்ற பகுதிகளுக்கு விளையாடச் செல்வது ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு தடைச் செய்யப் பட்டே இருந்தது.

========================================================

ஸ்டார்ஜன் அழைத்த தொடர்பதிவில் எனது பங்குப் பதிவினை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
முஸ்லிம் தொடக்கப் பள்ளியிலிருந்து.......,

இந்திரா காந்தி அவர்கள் இறந்த போது.., ஆகிய பகுதிகளையும் இந்தப் பதிவுடன் சேர்த்துப் படித்துக் கொள்ளுங்கள். இன்னும் நிறைய எழுத தோன்றுகிறது. கண்டிப்பாக அவை தொடரும்

==========================================================

இந்தத் தொடர்பதிவின் விதிகள்


விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !

==========================================================

ஆசிரியர்களைப் பற்றியும் எழுதிவிடுகிறேன். ஆனால் அனைவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைப்பதால் தனித் தொடராக அதை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

=========================================================

இந்தப் பதிவினைத் தொடர

அக்பர் http://sinekithan.blogspot.com

இது நம்ம ஆளு http://vanakamtamilan.blogspot.com/


குறையொன்றும் இல்லை http://yellorumyellamum.blogspot.com

ஆகியோரை அழைக்கிறேன்

இந்திரா காந்தி அவர்கள் இறந்த போது..,

சில நிகழ்ச்சிகல் மிகச் சிறிய வயதில் நடந்தால்கூட அது ஏற்படுத்தும்தாக்கம், மறக்க முடியாமல் போகும். உண்மையில் ஆறு,ஏழுவயதில் நடந்த நிகழ்ச்சி, உங்கள் மனதில் ஆழமாக பதிய முடியுமா? என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்லத் தெரியவில்லை. அதை அப்படியே இன்று உங்களால் திருப்பிச் சொல்ல முடியுமா என்ற கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.அதுபோலத்தான் இந்த நிகழ்ச்சியும் ஆனால் இந்த நிகழ்ச்சியை பலரும் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே வந்தததால் ஓரள்வு அப்படித்தான் என்ற எண்ணமே வந்து நிலைத்து நிற்கிறது..,

அந்த நாள் எப்படி ஆரம்பித்தது என்ற எண்ணம் எனக்கு நினைவில் இல்லை. பள்ளி உணவு இடைவேளைவிட்டபிறகு நேராக புத்தகப் பையுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். சாலையின் ஓரங்களில் கடைகளில் வாசலில் வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்ட போதுதெரிந்த விஷயம்தான் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொள்ளப் பட்ட செய்தி.

அப்படியே வீடு நோக்கி வந்த நான் தாயாரிடம் அப்படியே செய்தியைச் சொன்னேன். டேய், சின்னப் பசங்க அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா, என்று சொன்னார். இல்லமா அப்படித்தான் ரோட்ல பேசிக்கறாங்க. தாயாருக்கு பயங்கர கோபம் அப்படியேகையில் கிடைத்த ஒரு குச்சியை எடுத்து மிரட்ட ஆரம்பித்தார். எதோ ஒரு தவறு செய்து விட்டது போல தோன்றியது.

சரி, துணைக்கு அழைப்போம், என்று நினைத்து அம்மா மாமாவ வேணும்னாலும் கேட்டுப் பாரும்மா.., அவர் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். என்னை அவர்தான் பள்ளிக்கு அழைத்துச் செலவார். வீட்டிற்கு அருகிலேயேதான். அவரும் ஆமாம் போட்டார். நான் மாமாவைத்துணைக்கு அழைக்க தாயார் மாமாவின் தாயாரை துணைக்கு அழைத்தார். அவர் நெல் அல்லது அரிசியைப் போட்டு உரலில் குத்திக் கொண்டு இருந்தார். அவருக்கும் கடுமையான கோபம், அவர் உலக்கையுடன் எங்களை துரத்த ஆரம்பித்தார். எதோ தவறு செய்து விட்டோம் என்ற எண்ணத்தில் நானும், மாமாவும் ஓட ஆரம்பித்தோம். சற்று நேர துரத்தலுக்குப் பிற்கு அவர்கள் நின்று கொள்ள, நாங்கள் தெருவையே சுற்றி, சுற்றி ஓடிக் கொண்டு இருந்தோம். யாரும் பார்க்காத நேரத்தில் ஒரு புளிய மரத்தில் ஏறிவிட்டோம். அந்த மரம் சின்ன பசங்க கூட ஏறிவிடும் வகையில் வளர்ந்திருந்தது. படியில் ஏறுவது போல ஏறி கொஞ்சம் மேலே சென்று உட்கார்ந்து கொண்டோம். கொஞ்ச நேரத்தில் நாங்கள் சொன்ன செய்தியைப் பற்றி விவாதித்துக் கொண்டு பல இளைஞர்கள் கையில் தடிகளுடன் சுற்ற ஆரம்பித்தனர்.

சற்று நேரத்தில் எங்கள் உறவினர்களும் எங்கள் பெயரைக் கூவிக் கொண்டே எங்களைத்தேட ஆரம்பித்தனர். அவர்கள் கையிலும் தடிகள் இருந்தன. எங்களுக்கு பயம் கூடிக் கொண்டே போனது. அப்படியே பொழுது சாயத் தொடங்கியது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் வெறிச்சிடத் தொடங்கியது. இருந்த சின்ன சின்னகடைகளும் அடைக்கப் பட்டன. வெள்யே நடமாடுபவர்கள் கையில் தடிகளுடந்தான் சுற்றிக் கொண்டிருந்தனர். எங்களுக்கு பயம்.., பயம்.., மேலும் பயம்.....

எதோ எங்களால்தான் எல்லோரும் தடியுடன் சுற்றுவது போலவும் எங்களை அடிக்கத்தான் எல்லோரும் சுற்றுவது போலவும் எண்ணத்தில் அப்படியே தூங்கியும் விட்டோம் (பசி மயக்கமாய் கூட இருந்திருக்கலாம்). மறுநாள் காலையில் அந்த புளியமரத்தடியில் கூடிய ஐக்கிய நாட்டுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களில் ஒருவர் மேலே தலையையைத்தூக்கிப்பார்த்து அதில் தூங்கிக் கொண்டிருந்த எங்களை மீட்டார்களாம்..

===================================================

இது ஸ்டார்ஜான என்னை அழைத்த தொடக்கக் கல்வி பருவம் பற்றிய தொடர்பதிவின் இரண்டாம் பாகம். முதல்பாகம் இங்கே இருக்கிறது.

விரைவில் இந்த பதிவின் அடுத்த பகுதியைப் போட்டுவிடுகிறேன்.

இந்தத் தொடர் பதிவின்

விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails