Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Sunday, May 5, 2013

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியும் சி.எஸ்.கேவும்

இந்த அரியாசனத்துக்குத் தேவை நான் சொன்னதைக் கேட்டு நடமாடும் ஒரு பொம்மை - ராஜகுரு பி.எஸ்.வீரப்பா

உலகச் சரித்திரத்திற்கும் கிரிக்கெட் சரித்திரத்திற்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. மிக மிகப் பெரியஅ அணிகள் என்று பேசப் பட்ட அணிகள் எல்லாம் குறிப்பிட்ட காலம் வரை ஒவ்வொரு வீரர்களாக மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அணிவீரர்கள் நிரந்தர இடம் பிடித்துவிடுவார்கள். குறிப்பாக கேப்டன்.. அப்படி நீண்டகாலம் ஒருவரே கேப்டனாக இருந்துவிட்டால் அவர்களுக்குப் பின் அந்த அணிக்கு வரும் தடுமாற்றம் மிக மோசமாக இருந்திருக்கிறது. லாயிட்ஸ்,  இம்ரான்கான்,  ரணதுங்க, குரோன்யே, சமீபத்தில் ரிக்கி பாண்டிங்.  இந்த நீண்ட கால கேப்டன் நிரந்தரக் கேப்டன் போன்றவர்க்ள் மிக அதிக வெற்றிகளை குவித்து இருந்தாலும். அணியின் அடுத்த தலை ததிகிணத்தாம் போடும் சூழல்தான் இருக்கிறது.

 சாம்ராஜ்யங்களில் விக்டோரியா ராணியின் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறையாமல் இருந்தது. ஆனால் அதற்கடுத்த கட்டங்களில்  ஐரோப்ப்பாவின் ஒரு ஓரத்துக்கே சென்றுவிட்டது. ஔரங்கசீப்பிற்குப் பின் முகலாய சாம்ராஜ்யமே  அம்பேல் ஆனது.  நீண்ட நாளைக்குப் பின் மன்னரான ராஜராஜரின் வம்சம் கூட ராஜேந்திரருக்குப் பின் சில ஆண்டுகளில் அடியோடு அழிந்து போனது.  சோழநாட்டை ஆள ஆள் வேண்டுமென்று ராஜராஜரின் மகளின் வாரிசை (சாளுக்கிய தேசக் காரர்) கூப்பிட்டுவிட்டிருந்துக்கிறார்கள். இப்போது சோழவாரிசு என்று சொல்பவர்கள் எப்படி என்று தெரியவில்லை.


இதையெல்லாம் கண்டுதானோ என்னவோ  அமெரிக்காவில் யாரும் இருமுறைக்கு மேல் அதிபராகக் கூடாது என்று சட்டம் போட்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட புஷ் மகன் புஷ் என்று ஒரு குடும்பத்தின் கீழ் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததன் பலன்  பெரிய பொருளாதார ஆட்டம். 

இவ்வளவு முன்னோடிகள் இருந்தும்  சி எஸ் கே அணியில்  கேப்டன் உட்பட பலரும்  நிரந்தர இடம் பிடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  சுதாரித்துக் கொண்டால் நல்லது.

Monday, May 4, 2009

மகிழ்ச்சிக் கடலில் அமெரிக்கா மூழ்கியது

அமெரிக்க பொருளாதாரத்தை ஸ்தம்பிக்கச் செய்யவும், அமெரிக்க தேர்தலை ஒத்திப் போடும் முயற்சிகளும் துவங்கப் பட்டுள்ளன. இந்த முயற்சிகளை தொடரும்போது அமெரிக்க நாட்டு விளையாட்டுகளின் வண்ணம் மாறத் தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்காவின் அரசியல் மற்றும் விளையாட்டு வீரர்கள் கதற தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் 20-20 போட்டிகள் நடத்தப் பட வேண்டும் என ஐ.சி.சி தெரிவித்து இருப்பது. அமெரிக்க வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக கருதப் படுகிறது. 20-20 போட்டிகள் ஆண்டுதோறும் நடக்கத்தொடங்கினால் ஒரு பெரிய திருவிழா போல் ஆகிவிடும் என்பதாலும், நடன குழுக்கள் அமெரிக்க கலாச்சாரத்திற்கேற்ப தங்கள் உடைகளை மைதானத்திலேயே மாற்றக் கூடும் என்பதாலும் அமெரிக்காவில் 20-20 கிரிக்கெட் போட்டிகள் மிகப் பெரிய அளவில் பிரபலம் அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு 20-20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போது எந்த இடையூறும் நிகழக் கூடாது என்பதற்காக அமெரிக்கத்தேர்தல் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப் படலாம் என்று பரவலாகப் பேசப் படுகிறது.

20-20 போட்டிகள் அமெரிக்காவில் ந்டைபெறுவது பற்றி பிற விளையாட்டுவீரர்களிடம் கருத்துக் கேட்டபோது

கால்பந்து வீரர்:-

விளையாட்டுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த போட்டிகள் அமைகின்றன. இதே போல் கால்பந்திலும் 5-5-5 என்ற அளவில் நடத்த வேண்டும். ஒவ்வொரு பாதியும் ஐந்து நிமிடம் மட்டும் நடைபெறுவதால் முதல் வினாடியிலிருந்தே கோல் அடிக்க வேண்டும் என்ற உணர்வு வருவதால் போட்டி இன்னும் ஆக்ரோசமாக அமையும் என்று தெரிவித்தார். இதையே ரக்பி,கைப்பந்து மற்றும் ஹாக்கி வீரர்களும் தெரிவித்தனர்.

கூடைப் பந்துவீரர்கள் இதை பற்றிக் கூறும்போது 20-20ஐப் பின்பற்றி கூடைப் பந்திலும் அளவுகளை மாற்ற வேண்டும். கூடையை 2 அடி உயரத்தில் வைத்தால் இன்னும் அதிகமான புள்ளிகள் எடுத்து போட்டி மேலும் அதிக பரபரப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

ஓட்டப்பந்தயவீரர்கள் கூறும்போது ஏற்கனவே இந்த நடைமுறை ஓட்டப் பந்தயத்தில் இருப்பதாகவும், ஆனால் நூறு மீட்டர் என்ற அளவை 20மீ என்று குறைத்தால் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்று கூறினார்.

நீச்சல் வீரர் கூறுகையில் நீச்சல் போட்டிகளி ஐந்து மீட்டர் என்ற அளவில் வைத்தால் இன்னும் பரபரப்பாக இருக்கும் என்றார். இவ்வாறு தூரங்களை குறைத்தால் நீச்சல் தெரியாத வீரர்கள் கூட நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொண்டிருந்தனர்.


பொருளாதார நிபுணர்களிடம் கேட்டபோது

20-20 போட்டிகள் அமெரிக்காவில் நடப்பது என்பது சரிந்து கொண்டிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி விடும்.

சுற்றுலாவிற்கு வரும் அரபு தேசத்தவர்கள் மூலம் பல் ஆயிரம் கோடி டாலர்கள் அந்நியப் பணம் கிடைக்கும்.

உள்நாட்டில் வேலை செய்யும் ஆசியர்கள் கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்று விட்டால் அந்த வேலைகளை அமெரிக்கர்களுக்கே கொடுத்துவிடலாம். என்வே தற்காலிகமாக பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

நடன குழுக்கள் நிறைய அமைப்பது மூலம் ஒரு லட்சம் பேருக்கு நிரந்த வேலை வாய்ப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமையும்..

தேர்தல் நூறு ஆண்டுகளுக்கு தள்ளிப் போட படுவதன் மூலம் நூறு லட்சம் கோடி கண்டெயினர் டாலர்கள் மிச்சம் ஆகும் என்று கூறினார்.

மொத்தத்தில் ஐ.சி.சியின் அறிவிப்பால மொத்த அமெரிக்காவும் மகிழ்ச்சி கடலில் (மூழ்க ) மிதக்கப் போகிறது என்பதே உண்மை


இது ஒரு மீள்பதிவு

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails