Showing posts with label எம்ஜியார். Show all posts
Showing posts with label எம்ஜியார். Show all posts

Monday, January 17, 2011

என்ன செய்தார் எம்.ஜி.ஆர்...?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவ்ர்களின் 95வது பிறந்த தினம் இன்று 17.1.2011. அவரிடமிருக்கும் கிடைக்கும் அரிய பல நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ள வேண்டிக்கொண்டு அவரை நினைவு கூறுவோம்.
........................................................................................................................

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள்.


அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…

1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்.ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி.. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.



திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!


லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.


சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.


லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?


துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!


ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!


சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!


சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!


குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!


சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.


திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.


சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.


திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.


சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!


திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.


ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு.
‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’
னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!


சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.


ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.


சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரைஇருக்கணுமே!


குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.


சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!


கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!


திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி!
‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’
ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்

எனக்கு நண்பர் ஒருவர் ஈ-மெயிலில் அனுப்பியிருந்தார்.

...................................................
ஒரு திரைப் படத்தில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களுக்குத் தேவையான கருத்துக்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி படத்தில் திணித்து அந்த பாடல்களை மக்கள் முணுக்க வைத்தவர். எம்.ஜி.ஆர் அவர்கள்.


இன்று சொல்லுகிறார்களே.." மக்கள் விரும்புகிறார்கள் அதனால்தான் இதுபோன்ற காட்சிகளை வைக்கிறோம்." எம்.ஜி.ஆர் படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்களுக்கு யார் பொறுப்பு? நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் திரையலகத்தில் இருந்த காலத்தில் இருந்த எத்தனையோ நடிகர்களுக்கு எழுதாத பாடல்களை இவருக்கு மட்டும் ஏன் கவிஞர்கள் எழுதினார்கள்?

  • இன்னும் சொல்லப் போனால் சிவாஜி அவர்களின் படத்தைத்தான் ரசித்துப் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தை பொழுது போக்கினை எதிர்பார்த்து வரும் ரசிகர்களே அதிகம் பார்ப்பார்கள். அப்படி பொழுது போக்கிற்கு வரும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல நினைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த ஒரு காரணத்திற்காகவே எவ்வளவு வேண்டுமானால் அவரை புகழ்ந்து கொண்டே இருக்கலாம்.


அவர் மிகக் குறைவாக வசனம் பேசும் நடிகராக வெறும் பொழுதுபோக்கு நாயகராக அவரை பார்க்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்காக ஒரு செய்தி. அவரே தயாரித்து அவ்ரே இயக்கிய படம் நாடோடி மன்னன். நான் அவன் இல்லை. என்று கூறிவிட்டு எம்.என். ராஜம் அவர்களிடம் பத்து நிமிடம் விடாமல் வசனம் பேசுவார். அதில் நவீன தொழில்நுட்பங்கள். காமிராவை கண்டபடி நகர்த்திக் கொண்டும் அவரும் கண்டபடி நடந்து கொண்டும் ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். நாற்பது வருடங்கள் கழித்துதான் அந்த உத்திகளை மற்றவர்கள் பரவலாக உபயோகப் படுத்தினார்கள்.

அதே போல் அவரது நூறாவது படம்கூட அவரது விருப்பக்கதைதான் அமைந்தது.



தாயைக் காப்பாற்ற வேண்டும். குழந்தைகளை நேசிக்க வேண்டும். தன்னையே நினைத்து கனவுகாணும் பெண்கள் தன் மனைவியாக இல்லாத சூழலில் தங்கையாகவே நினைக்க வேண்டும் முதலான கருத்துக்களை தொடர்ந்து திணித்து வந்து கொண்டிருந்தவர் அவர்.


எந்த சூழலிலும் படங்களில் மது குடிப்பதையோ புகைபிடிப்பதையோ செய்யாதவர். கூண்டுக்கிளி படத்தில் கூட எரியும் சிகரெட்டை கையில் வைத்திருந்து தூக்கியெரிந்து விடுவார். ஒளி விளக்கில் மது அருந்த நினைத்து பாட்டிலை எடுத்தவுடன் மனசாட்சி வந்து அவரை கண்ட படி திட்டுமாறு பாட்டு அமைத்திருப்பார்கள். இன்று சட்டம்போட்டு செய்யும் வேளையில் மனக் கட்டுப்பாட்டோடு நடத்திக் காட்டியவர் அவர்.

அவர் வில்லனாக நடித்த நினைத்ததை முடிப்பவனில் அவருக்குமுன்னால் சிகரெட் பிடிப்பவர்களை உடனே அடித்துவிடும் குணாதிசயம் படைத்தவராக வருவார். அந்தப் படம் வெளிவந்த காலத்தில்தான் நமது பகுதிகளில் வளர்ந்துவந்த நாகரிகம் அது. அதனை வெளிப்படையாக எதிர்க்கும்வண்ணம் அந்தப்பாத்திரப்படைப்பு அமைந்திருந்தது.


அவரது 95வது பிறந்த தினம் இன்று 17.1.2011. அவரிடமிருக்கும் கிடைக்கும் அரிய பல நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ள வேண்டிக்கொண்டு அவரை நினைவு கூறுவோம்.

Wednesday, December 23, 2009

அண்ணா, எம்.ஜி.யார், விஜய்



விஜய் அவர்களின் புதிய படமாக உரிமைக்குரல் வரப்போவதாக கில்லிகளின் வலைப்பூவில் செய்தி வெளியாகி உள்ளது. உடனடியாக உரிமைக்குரல் பழைய படத்தினை நினைவு படுத்திய போது தென்பட்ட பாடல்தான் இது. அதன் வரி வடிவம் இதோ

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )

சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )


உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்
(ஒரு தாய் )

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
(ஒரு தாய் )


எத்தனையோ பாடல்களை மறுவடிவம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற பாடல்களுக்கு மறுவடிவம் கொடுத்தால் மக்களிடம் சென்றடையுமே என்ற ஒரு ஆசை தோன்றியது. அதே நேரத்தில் இன்பமே பாடல் எங்கோ ஒலிப்பதும் கேட்டது. நல்ல பாடல்களை, நல்ல பாடல்களாகவே மக்களிடம் மறுவடிவம் கொடுத்து சேர்க்கமுடியவே முடியாதா?

பின்குறிப்பு:- விஜய்க்கும் பிடித்த வார்த்தை, ண்ணா. எல்லாப் படங்களிலும் இந்த வார்த்தையை பலமுறை உச்சரிக்கிறார். இந்தப் பாடலிலும் ண்ணா வருவதால் இந்த பாடலை அவர் உபயோகப் படுத்திக் கொள்வார் என நம்பலாம்.

2.இது ஒரு மீள்பதிவு

3. அண்ணா நூற்றாண்டுவிழாவில் நமது பங்களிப்புகளை இந்த இடுகைகள் மூலம் படித்துக் கொள்ளுங்கள்.
அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09

சமீபத்திய கேள்விகளுக்கு பதில்கள் 12.9.09

அண்ணா - சில கேள்விகள் 12.9.09

அண்ணா 11.9.09

Tuesday, March 17, 2009

டி.வி. ரைட்ஸ் வாங்கப் படாத ஒரு முழு நீள தமிழ்த்திரைபடம்

தமிழ்திரைப்படங்களில் அதுவும் வெளிவந்து சில ஆண்டுகள் ஆன திரைப்படங்களில் தொலைக்காட்சி உரிமை வழங்கப் படாத சில படங்களில் இதுவும் ஒன்று. ஒரு திரைப்படம் வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் பல நடைமுறை வாய்ப்புகளையும் மக்கள் மத்தியில் பேச வைத்த திரைப் படங்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும்.




ஒரு இயக்குநர் நினைத்தால் எந்த கதையையும் சுவாரசியமாக வழங்க முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். அவரே தயாரிப்பாளராக இருப்பது இன்னொரு வசதி. அதில் அவரே நாயகனாக நடிப்பது ஒட்டு மொத்த அறுவடையும் அவரே எடுத்துக் கொண்ட திறமை.




கண்ணதாசன் போன்ற வளரும் எழுத்தாளரின் முழுதிறமையையும் உபயோகப் படுத்திக் கொண்ட திறமை. முக்கிய கட்டத்தில் நாயகியைத் தூக்கிவிட்டு புதிய நாயகி அறிமுகப் படுத்திய மனவலிமை. ஒரு பெரிய தீவையே நீரில் மூழ்கடித்த கிளைமாக்ஸ் காட்சி சுனாமி பற்றி இந்தியாவில் பேச படுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப் பட்டிருப்பது போன்றவை இயக்குநரின் திறமைக்கு சான்றாக அமைகின்றன




கீழே தோன்றும் காட்சியைப் பாருங்கள், தொழில் நுட்பம் எவ்வளவு உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்






நாடோடி மன்னன்: கம்யூனிச சித்தாத்தங்களை எனக்கு அறிமுகப் படுத்திய படம். "நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நாங்கள் மக்களோடு இருந்து மாளிகையைப் பார்க்கிறோம்". படத்தின் மொத்தக் கதையை ஓரே வரியில் சொல்லும் வசனம்.
[nm_1.jpg]


அரச சபையில் வரும் ஒரு விவாதம் "அப்படியென்றால் நாட்டில் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள். அப்படித்தானே? தவறு. பணக்காரர்கள் இருப்பார்கள் ஏழைகள் இருக்க மாட்டார்கள்" கம்யூனிசத்தினை பாமரனுக்கும் கொண்டு செல்லும் முயற்சி. (ஆனால் இன்னும் நெறய பேருக்கு புரிந்தபாடில்லை)

"இந்த அரியாசனத்திற்கு தேவை நான் சொன்னதைக் கேட்கும் நடமாடும் ஒரு பொம்மை"
சர்வாதிகாரத்தின் குரல். அதைதான் இன்று நெறய பேர் தொடர்ராங்க.
'
கூரில்லாக் கலப்பை, அதிகாரமில்லா பதவி"
கடைசியாக படம் முடியும்போது வீராங்கன் மன்னரை எழுப்பி 'மன்னா மகாராணி குற்றமற்றவர்" என்று சொல்லிவிட்டு போவார். ஒரு action படத்தில் கடைசி வசனம் கூட கதைசொல்ல வைக்கும். ஆனால் மொழி புரியாவிட்டாலும் படம் புரியும்.

இது எனது தொடக்க காலப் பதிவு. அக்டோபர் 26,2008ல் எழுதியது.






டிசம்பர்-5,2008ல் பதிவர் முரளிக்கண்ணன் எழுதிய

1958ன் அபூர்வ படங்கள் இடுகையில் நாடோடி மன்னன் பற்றியும் எழுதியிருந்தார். அதில் நான் கொடுத்திருந்த பின்னூட்டங்கள்:-

//
SUREஷ் said...
மன்னனாவதற்கு தேவை, செங்கோல் தாங்கும் கை, மகுடம் தாங்கும் த்லை, ஆரணங்குகளை மயக்கும் அழகு, இவை எனக்கும்தான் இருக்கிறது. அதோடு சிந்தனை செய்யும் சக்தியும் எனக்கிருக்குறது. ந்ம்பியாரின் வசனம் இது.
//
SUREஷ் said...
நாடோடி மன்னன் படம் கூட நான்கு மணி நேரம் ஓடக் கூடியதே. இளவரசியி உடலில் உடை மாற்றும்போது மச்சத்தினை கண்டுபிடிப்பார்கள் இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி கிடையாது. மன்னன் அழிக்கும் மானியத்தில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்விலந்த மகளிருக்காகவும், மருத்துவ மனைக்காகவும் என் சொத்தில் நானும் பாதியை கொடுக்கிறேன்.(ராணி பேசுவது) நம் மன்னர் குடிகாரரா.......... கடைசிக் காட்சியில்... மன்னா, மகாராணி குற்றமற்றவர் நாடோடி,, மன்னனிடம் கூறவதும் கூறும் தோணியும்...
//
SUREஷ் said...
படத்திற்கு துளி கூட சம்பந்தம் இல்லாமல் இரண்டு பாடல்கள் படத்தில் உண்டு மற்ற தத்துவ பாடல்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கும் கீழ்கண்ட பாடல்களுக்கு திரைக்கதையில் ஒரு தொடர்பும் இருக்காது. ஆனால் படத்தின் கதைப் போக்கே அவைதான். எங்கும் இந்தப் பாடல்களை வெட்டுவதில்லை. அதில் இயக்குனர் வெற்றி பெற்றிருப்பார். உழைப்பதிலா உழைப்பை கொடுப்பதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுவதே இல்லை என் தோழா உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா ........... தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்திச்சு முன்னேற வேணுமடி வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து சேகரித்தால் இன்பம் திரும்புமடி நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான் நாளை வருவதை எண்ணி எண்ணி அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி எல்லாமே பாஸிடிவ் அப்ரோச் உடன் அமைக்கப் பட்டிருக்க்கும்.
//
SUREஷ் said...
நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம் 58லேயே இப்படி பாடியிருப்பார்//

எனக்கு வந்த பின்னூட்டங்களும், கருத்துப் பரிமாற்றங்களும்:-

முரளிகண்ணன் சொன்னது…
நல்ல பகிர்வு

பெயரில்லா சொன்னது…
Communism views are interesting to talk. It is not practical. It failed in all countries where communism is tried. Nehru tried socialism and that is the main reason for all the subsidies and other handnouts plaguing the country today. Look around. Communism countries are poor and Capitalistic countries are rich. That should tell you something.

நசரேயன் சொன்னது…
அருமை

SUREஷ் சொன்னது…
நன்றி முரளி கண்ணன் சார். நசரேயன் சார், மற்றும் அனானி சார். கம்யூனிசத்தைப் பற்றி அந்தப் படத்தில் தெளிவாக கூறியிருப்பார்கள் //பணக்காரர்கள் இருப்பார்கள் ஏழைகள் இருக்க மாட்டார்கள்// அதைப் பலரும் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர். வேலைக்கேற்ற ஊதியமே சரியான கொள்கை. ஆனால் ஒரு டீகடையில் வேலை செய்யும் ஆயாவுக்கும் டீ மாஸ்டருக்கும் சம்மான ஊதியம் என்னும்போது வேலை செய்யும் எண்ணம் குறைந்து அந்த நாடுகளின் வள்ர்ச்சி பாதிக்கப்பட்டது என்பதெ உண்மை

புருனோ Bruno சொன்னது…
//Nehru tried socialism// Nehru's ideas are 100 times better than the American Economy, the failure of which is for every one to see

பெயரில்லா சொன்னது…
//Nehru's ideas // Could you give me specific examples of Nehru's ideas. He followed Russsian model and introduced licenseing for everything killing free market. He protected indian industries by closing the country to outside investment. Result - Companies with outdated technology no way of surviving in open competetion and consumers are forced to pay more for substandard products. //are 100 times better than the American Economy, the failure of which is for every one to see// This is not the first economic crisis US faced and wont be the last one. Beauty of capitalism is it survives and in few years time no one will be talking about this crisis.







Sunday, December 7, 2008

சுவாரசியமான பாடல் காட்சிகள்

கதையின் நாயகனுக்கும் நாயகனின் முறைப்பெண்ணுக்கும் திருமணப் பேச்சுக்கள் நடை பெறுகிறதுஇருவரும் ஒருவர்மேல் ஒருவர் மிகவும் அன்புடன் பாசத்துடன் இருப்பவர்கள்முறைப் பெண்னுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை। ஆனால் மாமன்மகனின் ( நாயகனின்) மணம் வருத்தப் படுமே என்று தயங்கி தயங்கி ரொம்ப நிதானமாக
தாங்கள் மனம் வருந்தக் கூடாது। உங்கள் மீது மிகுந்த அன்பு பாசம், மரியாதை எல்லாம் வைத்துள்ளேன், ஆனால்......., ஆனால்..........., நான் நம்ம இன்ஸ்பெக்டர் செழியனை காதலிக்கிறேன்
மிகவும் தயங்கி பில்டப் கொடுத்து நாயகன் ஃபீல் பண்ணாம இருக்க ரொம்ப கஷ்டப் பட்டு டயலாக் பேசி சமாதானப் படுத்துவார்.


இந்த மாதிரி சூழலில் எவ்வளவு ஆழமான் சோகம் பிழிந்தெடுக்கும் பாடல் போட்டிருக்கலாம்। ஆனால் ஜாலியான ஒரு பாடலை போட்டிருப்பார்கள்। ஏன்னா நாயகனும் மாமன் மகளீன் தோழியை லவ்விட்டு இருப்பார்। அவரும் இதே மாதிரி ஃபீல் பண்ணுவார்।
அந்தப் பாடல் இதோ.....

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
(நல்ல வேளை )


நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் ஒரு திருப்பம்
என்னை நம்பியிருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
என்றும் அது தானே என் விருப்பம்
எதிர் காலம் ஒன்று புது கோலம் கொண்டு
மனவாசல் தேடி வருமே
(நல்ல வேளை )


கண் மேல் பிறந்து கை மேல் முடியும்
கதையில் என்ன தயக்கம்
மலர் கட்டில் அறையில் அன்று கிட்டும் வரையில்
சொல்லும் காவியத்தில் வரும் மயக்கம்
ஒரு பாதி அங்கும் மறு பாதி இங்கும்
சரி பாதி இங்கு வருமே
(நல்ல வேளை )


மடி மேல் துயிலும் கொடி போல் துவளும்
பேரழகை படம் பிடித்தேன்
அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால்
தொட்டு பார்க்கையிலே உயிர் துடித்தேன்
காதல் போன்ற உள்ளம் கரை மீறி துள்ளும்
உடல் சேரும் எண்ணம் வருமே
(நல்ல வேளை )

Friday, December 5, 2008

உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ராஜ் டி.வி.யில் நாளை..,

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சீனியர் இருந்தார்। அவரது காரில் சூப்பராய் ஒரு ஆடியோ சிஸ்டம் இருந்தது। அவர் தேர்வெழுதப் போவது தனி அழகாய் இருக்கும் காரில் செல்வதால் சில நண்பர்களும் செல்வார்கள்। பாட்டு ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்। அந்தப் பாட்டு






நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்।
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கும்।


மிகவும் ஜாலியாக தேர்வுகளுக்குச் செல்வார்।



அதன் பிறகு ஒருமுறை கே।ஜி। திரையரங்கில் அந்தப் படத்தை பார்க்க நேரிட்டது। அப்போதெல்லாம் தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் பழைய படங்களைப் போடுவார்கள்।அந்த சூழலில் நாங்கள் காலை காட்சிக்கு சென்றிருந்தோம். படத்தின் துவக்கமே அந்தப் பாடலோடுதான் துவங்குகிறது. வெற்றி என்ற வார்த்தைகளோடு விஞ்ஞானி முருகன் தனது கண்டுபிடிப்பினை செயலருக்குச் சொல்கிறார். வழக்கம்போல் இளமையான பெண் செயலர். வில்லனின் கையாள்,




ஒரு சிறிய குப்பியில் சூரிய சக்தியை அடைத்து வைத்து மாபெரும் அழிவு சக்தியாக அந்த கண்டுபிடிப்பு அமைகிறது. அதனை விஞ்ஞானிகளின் மாநாட்டில் நிரூபித்துவிட்டு அந்த கண்டுபிடிப்பு காகிதங்களை எரித்துவிடுகிறார். [உலக சமாதானம்]. ஆக்க சக்திக்கு ஆராய்ச்சியை தொடங்கப் போவதாக கூறிவிட்டு சுற்றுலா செல்கிறார். நீ இல்லாம ஜாலியா என்று கூறிவிட்டு நாயகியுடன் டூயடபோடுகிறார். பாடல் முடிவில் கொடியவகைத் துப்பாக்கியில் சுடப் படுகிறார். வில்லன் குலாம் அவரை கடத்தி செல்கிறது.

ஒரு வித்தியாசமான முன்னோட்டக்காட்சிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. ஒலி குறைவாக இருப்பதாக நினைப்பவர்கள் நீங்களே கூடுதலாக்கிக் கொள்ளலாம்




ஒரு ஓட்டலில் நடக்கும் துப்பாக்கி சாகஸ நிகழ்ச்சியில் குளிர் பாணம் குடித்துக் கொண்டே சுட்டு விஞ்ஞானியின் செயலரை தோற்கடித்து அறிமுகமாகிறார் ரகசிய உளவாளி ராஜூ. ( இரட்டை வேடம் பாஸூ)




விஞ்ஞானியின் காதலியை சந்தித்து ரகசிய காகிதங்களின் நகல் இருக்கும் இடங்களை தெரிந்துகொண்டு காகிதங்களையும் விஞ்ஞானியையும் மீட்க புறப் படுகிறார்.




காதலியை பலாத்காரம் செய்ய முயலும்போது விஞ்ஞானி மெதுவாக பல திரவங்களைப் போட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது தமிழுக்கு கண்டிப்பாக இன்றுவரை புதுசுதான். ஆராய்ச்சியின் முடிவில் வெடிபொருளைத் தயாரித்து காதலியை மீட்பார். கையுறையெல்லாம் அணிந்து கொண்டு ஆராய்ச்சி செய்வார். புத்தர் சிலையைப் பார்த்த உடன் சித்தம் தெளிந்து விட்டதாக கூறுவார்.




புத்த மடத்தில் ரகசிய காகிதங்களின் ஒரு பகுதியை கைப் பற்ற போகும்போது வில்லனின் அடியாள் அங்கு காத்திருக்க, ராஜூ அடியோ அடி என்று அடிவாங்குவார் வெளியே வந்தவுடன் புனிதமான இடத்தில் சண்டை போட விரும்பவில்லை என்று கூறி திரும்ப அடித்து....................... மத நல்லிணக்கத்தை காப்பாற்றுவார்




ஹாங்காங் கடலில் இருக்கும் ஒரு நபரை சந்திக்கும்போது அந்த வீட்டில் இருக்கும் பெண் ராஜூவுடன் டூயட் கனவில் பாடி விடுவார். அடுத்த நாள் அந்தப் பெண்ணை அழைத்து தன் காதலியை இவதான் உண் அண்ணி என்று அறிமுகப் படுத்துவார். அப்போது அந்தப் பெண் பார்ப்பாரே ஒரு பார்வை போயும்போயும் இவளையா பார்வையிலேயே சொல்லிவிடுவார்.






ஒரு பாடலை முழுக்க முழுக்க நீருக்கடியில் எடுத்திருப்பார்கள். சில க்ளோசப் காட்சிகளைப் பயன்படுத்தி டூப் பயன்படுத்தி இருப்பார்களாஇல்லை உண்மையில் நம்ம ஆளுங்கதானா என்ற சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் நீருக்கடியில் நடணத்தை அமைத்திருப்பார்கள்.




மற்றொரு பாடலில் காலுக்கு அடியில் விமாணம் பறக்கும். நாயகிகள் கவர்ச்சியில் ஜொலிப்பார்கள்.




கட்டைவிரலை மட்டுமே பயன்படுத்தி சண்டை போடுவதாகக்கூட அமைத்திருப்பார்கள்.




பெரிய பெரிய நாய்களுடன் வில்லன் வந்து வம்புக்கு இளுக்கும் போது நாயோட திறமைய அப்புறம் பாரு என்னோட திறமைய இப்ப பாரு என்று ஒரே ஜம்ப்பில் வெளியே வந்து .................................. என்ன சொல்ல










தொழில்நுட்ப பூங்காவில் ஒரு சுற்று சுற்றி.............. கடைசியில் பாட்டெல்லாம் பாடி கண்டு பிடிக்க ஸ்கேட்டிங் எல்லாம் செய்து சண்டை போட்டு கடைசியில் சுபம்.










இருப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து பார்த்தபோது கூட எங்களுக்கு இனித்த கமர்சியல் பாயசம். இந்த தீபாவளிக்கு ரீ ரிலீஸ் ஆகி ஒரு கலக்கி விட்டது . இரண்டுபேர் இந்த படத்தை தமிழில் ரீ மேக்கிக் கொண்டு இருக்குறார்களாம்.


இது ஒரு மீள்பதிவு
-------------------------

இந்தப் படத்தின் முடிவில் எமது அடுத்த வெளியீடு
கிழக்காப்பிரிக்க தீவில் ராஜூ
என்ற விளம்பரப் பலகை இடம் பெறும். விஜயக் காந்த் கூட இதே பெயரில்தான் அடுத்த படம் எடுக்க இருக்கிறாராம்.

===================================================
தீபாவளியன்று உலகத்தொலைக்காட்சி வ்ரலாற்றில் முத்ன்முறையாக ராஜ் டி.வி.யில் இந்தப் படம் ஒளி பரப்பப் படுகிறதாம். பார்த்து ரசியுங்களேன்
=============================================================
இப்போது இது மீள்பதிவு , தீபாவளியன்று படம் பார்த்துவிட்டீர்களா?

==================================================

வருகைக்கு நன்றி, அப்படியே தமிழ்மணம், தமிழீஷ் ஆகியவற்றில் ஓட்டுப் போட்டுவிடுங்கள்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails