Sunday, June 28, 2009

நட்சத்திர ஓட்டலில் ரஜினி போட்ட ஆட்டம்



இந்த ஒளி ஒலிக் காட்சி கூட எனது பழைய நினைவுகளை கிளருகிறது. நேரில் பார்த்தே பிறகே சக தோழர்கள் ரஜினி என்று நம்பினார்கள்.இப்போதுகூட ஏதாவது தொழில்நுட்ப ஏமாற்றுவேளை என்று சிலர் நினைக்கலாம். நம்பினால் நம்புங்கள். இவ்வளவு ஆட்டம் பாட்டம் உள்ள பாடலில் நடித்தது ரஜினியேதான், ஆடியதும் ரஜினியேதான். கல்லூரி அனைத்து இசை நிகழ்ச்சிகளிலும் தவறாது இடம்பிடித்த இந்தப் பாடல் அடுத்த வாரிசு படத்தில் இடம் பெற்றது. இளைய ராஜாவின் இசையில் வெளிவந்த இந்தப் பாடல் எப்போதுமே இளைய தலைமுறையைத் தன் வசம் வைத்திருந்தது

இந்தப் படத்தில் பேசக்கூடாது என்ற மெல்லிசைப் பாடலுக்கு ரஜினி சில்க் ஸ்மிதாவுடன் நடித்திருப்பார்.

இந்த பாட்டு ரஜினி பாட்டு என்று சொன்னபோது சக நண்பர்கள் பலரும் நம்பவே இல்லை.., வெகு காலத்திற்குப் பிறகு திரையில் இந்த படத்தை பார்த்த பிறகே ரஜினி படம் என்பதையே ஒத்துக் கொண்டார்கள்.

என்னால் இந்தப் பாடலின் ரீமிக்ஸ் பாடலை ரசிக்கவே முடியவில்லை. அதன் பின் வந்த எல்லா ரீமிக்ஸ் பாடலையும் நான் தவிர்ப்பதற்கு அடிப்படையே இந்தப் பாடலின் ரீமிக்ஸ்தான்.

இந்த இடுகைகாஞ்சித் தலைவனின் எக்சர்ஸைஸ் போட்டிக்காக எழுதப் பட்டது.

இந்த இடுகை காஞ்சித் தலைவனின் எக்சர்ஸைஸ் போட்டிக்காக எழுதப் பட்டது.

முன்குறிப்பு:= கேட்கப் பட்டுள்ள நீளம் மிகக் குறைவாக இருக்கிறது. இருந்தாலும் நமது திறமையை நிரூபிக்கும் வண்ணம் இருப்பதால் அந்த சவாலை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

அவர் கொடுத்துள்ள கதை மற்றும் விதிகள்
ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.

நமது ஆக்கம்


காட்சி 1:-
நகரத்திற்கு வரும் இளைஞனை ஒரு சேரியில் இறக்கிவிடுகிறார். அந்த ஆட்டோக்காரர்.

காட்சி2:-

தனது கற்பனை நகரத்திற்கும் , இந்த நகரத்திற்கும், கிராமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நினைத்து கண்கலங்கி ஒரு முடிவுக்கு வருகிறான்.

காட்சி3:-

சேரியில் உள்ள குப்பைகளை கூட்டத்தொடங்குகிறான். இரவு பகலாக சுத்தப் படுத்திக் கொண்டே இருக்கிறான்.

காட்சி4:-

சில மாதங்கள் கழித்து அந்த நகரம் முழுவதும் ஒரு கொடிய நோய் வருகிறது. அந்த சேரியில் மட்டும் இல்லை.

காட்சி5:-

சேரி மக்கள் உண்மையை உணர்ந்து கொண்டு தங்களுக்கு கொள்ளை நோய் வராமல் காப்பாற்றிய இளைஞனை நன்றிப் பெருக்குடன் நோக்குகின்றனர்.

காட்சி6:-

அந்த இளைஞனை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கின்றனர். அவர் வாழ்வும் சேரி மக்கள் வாழ்வும் வளம்பெறுகிறது.

அவர் வைத்த போட்டியை அறிய இந்தச் சுட்டியை சுட்டுங்கள்

Friday, June 26, 2009

ஆந்திராவில் மைக்கேல் ஜாக்ஸன்

தெய்வத்தின் தெய்வத்திற்காக மைக்கெல் ஜாக்ஸன்




நீ பார்த்திட்டுப் போனாலும் பார்க்காம போனாலும்......



அதில் நடுப்பகுதி மட்டும்





இது தம்முடு படப் பாட்டு நவநாகரிக மாந்தருக்கான வகையில் இசையமைக்கப் பட்டு மைக்கேல் ஜாக்ஸன் ஆடலோடு..,

Thursday, June 25, 2009

தமிழ்மணத்தில் ஓட்டுவாங்க என்ன செய்ய வேண்டும்?

தமிழ்மணம் பழம்பெருமை வாய்ந்த திரட்டிகளில் ஒன்று. மற்றவர்கள் எல்லாம் பதிவை இணைக்க மிகவும் எளிமையான வழிகளை வைத்திருக்க தமிழ்மணம் மட்டும் சில பல வழிமுறைகளைப் பயன்படுத்தி உலக சினிமா பார்ப்பது போல உருவாக்கி வைத்திருக்கிறார்கள். தமிழீஷில் யார் பதிவை யார் வேண்டுமானாலும் பதிவு என்றில்லை, எதோ ஒரு காகித வெட்டினைக்கூட இணைத்துவிடமுடியும்.

தமிழ்மணத்தில் இப்போது ஓட்டுப் போடுவது கொஞ்சம் கடினப் படுத்தி இருக்கிறார்கள். சில நேரங்களில் நமது இடுகைக்குக் கூட நம்மால் ஓட்டளிக்க முடிவதில்லை. வரலாறு பகுதியை அழித்துவிட்டு மீண்டும் ஓட்டளிக்க வந்தால் நமக்கு ஓட்டுரிமை கிடைப்பது கால தாமதம் ஆகிறது.

தமிழ் மணத்தில் ஓட்டு வாங்க ,முதலில் தமிழ்மணத்தில் நமது பதிவினை இணைக்க வேண்டும் அதைப் பற்றி இந்தப் பதிவில் சொல்லி இருக்கிறார்கள்.
http://www.tamilmanam.net/user_blog_submission.php

ஒவ்வொரு படியாக பயணிக்க சேர்த்துவிட முடிகிறது.

அடுத்து ஓட்டுவாங்க கருவிப் பட்டை அவசியமாகிறது. கருவிப் பட்டையை இணைப்பது எனபது பல கட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியது. அதற்காண வழிகளை கீழ் உள்ளமுறையில் கொடுத்திருப்பார்கள்.

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html


இதில்
1. உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்நுழைக (”login”)
2. ஆதாரக்கிடப்புகளை முகாமைப்படுத்து (“Manage Layouts”) பகுதிக்குச் செல்க (இப்போது அடைப்பலகை (“Template”) பகுதியில் இருப்பீர்கள்).
3. மீயுரை சீர்திருத்து (“Edit HTML”) என்கிற பகுதிக்குச் செல்க
4. உங்கள் அடைப்பலகையை திருத்தி மாற்றுமுன் அதன் நகலை சேமித்துக்கொள்வது நன்று. அதைத் தரவிறக்கி கணினியில் சேமித்துக்கொள்க
5. இப்பொழுது மிக முக்கியமான ஒன்று
6. சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் மேலே வலது மூலையில் இருக்கும் எடுநிலை அடைப்பலகையை விரி (“Expand Widget Templates”) என்ற சொடுக்குப் பெட்டியை தேர்வு செய்க.

blogger

வரையில் குழப்பம் இருக்காது.


7.சீர்திருத்துபெட்டி (“EditBox”) இன் உள் வைத்து எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து கீழிருக்கும் பெட்டியில் past செய்யவும்

அதைக் கூட நாம் செய்து விடுவோம்.

பேஸ்ட் செய்த பிறகு கீழே உள்ள அளி என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அழுத்திய உடனேயே நமக்கு கருவிப் பட்டையுடன் குறிப்புகள் கிடைக்கும். இங்கேதான் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பழைய குறிப்புகளுக்கும், கருவிப் பட்டையுடன் கூடிய குறிப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது. இதில்தான் நாம் குழம்பிப் போகலாம். அதாவது பெரிய மாற்றங்கள் நமக்கு சரியாக தெரியாது. இருந்தாலும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிறகு

8. ”அளி” என்ற பொத்தானை அழுத்தியவுடன் தமிழ்மண கருவிப்பட்டை நிரலி உங்கள் அடைப்பலகை நிரலியில் இணைக்கப்பட்டு மேலே உள்ள பெட்டியில் தெரியும்.

9.மேலே உள்ள பெட்டியின் உள் வைத்து எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து (Select All) அதை copy செய்து அதை உங்கள் சீர்திருத்துபெட்டி(“EditBox”) பெட்டியில் உள்ளவற்றை நீக்கிவிட்டு past செய்யவும்.

10.அடைப்பலகையை சேமிக்க

மேலதிக தகவல்களுக்கு பார்க்க தமிழ்மணம் பதிவு


தமிழ்மணத்தின் ‘பதிவு’ கருவிப்பட்டையிலே பிளாக்கர் பதிவுகளை இலகுவாக இணைக்கும் விதமாக, பதிவர் குழலி அடைப்பலகையை மேம்படுத்த எழுதியிருக்கும் நிரலை இங்கே காணலாம்.
http://www.kuzhali.co.nr/
இது குறித்த குழலியின் இடுகை
புது ப்ளாக்கர்க்கு தமிழ்மண கருவிப்பட்டையை சேர்ப்பது


========================================================

இது தமிழ்மணத்திலிருந்து எடுக்கப் பட்டது தான் கொஞ்சூண்டு பகுதி மட்டும் நமது சுய அனுபவ விளக்கம்

======================================================

நம் நண்பர்கள் சிலர் தமிழ்மணத்தில் இணைக்க சிரமப் பட்டுக் கொண்டு இருக்கிறார். குறிப்பாக கடைக்குட்டி..,



அவர்களுக்கு ஏதாவது உதவினால் நன்றுதானே

======================================================

அதற்குப் பிறகு நமது பட்டையிலுள்ள கட்டைவிரலை அழுத்தி உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கலாம்.
=======================================================

எப்படியோ நானும் ஒரு தொழில்நுட்ப பதிவு போட்டுவிட்டேன்

தல.., பின்னூட்டம் படிக்கலாம் வாங்க

சில நேரங்களில் நமக்கு வரும் பின்னூட்டம் நமது கருத்தினைவிட சிறப்பாக அமைந்திருக்கும். அப்படி ஒரு பின்னூட்டம்தான் இது. நான்

Saturday, June 20, 2009 அன்று எழுதிய

இன்றைய இறுதி ஆட்டமும், இந்திய அணியின் தோல்வியும் இடுகையில் நண்பர் ரஃபீக் ராஜா இட்ட பின்னூட்டம் போட்டிருக்கிறார். இடுகை வெளியாகி சில நாட்கள் ஆகிவிட்ட காரணத்தால், படித்த இடுகைதானே என்று மீண்டும் அங்கே மற்றவர்கள் செல்ல தயங்குவதாலும் அந்தப் பின்னூட்டத்தை மீண்டும் இடுகையாகவே வெளியிடுகிறேன்.
==========================================================

Rafiq Raja said...

நண்பர் சுரஷ்,

ஐபிஎல் போன்ற போட்டிகளின் தாக்கமே, நமது . இரண்டு வாரங்கள் முன்பு வரை தனி தனி அணிகளுக்கு தலைமை தாங்கி ஒருவரை ஒருவர் வீழ்த்த வியூகம் வகுத்து கொண்டு, உடனே ஒரு அணியில் ஆட சொன்னால் எப்படி என்பதற்கு இது உதாரணம்.

அதே வேளையில், நமது ஐபிஎல் அணிகளில் தன் பங்கை ஆற்றி விட்டு அவர்கள் அணிகளுக்கு திரும்பியவுடன், பட்டைய கிளப்பிய மற்ற தேசத்தவர்களை பார்த்து நாம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.

இத்தனை பிரச்சனைகளுக்கும் நடுவிலும் பாகிஸ்தான் அணி கோப்பையை கைபற்றி இருப்பது, அவர்கள் மன உறுதியை தெளிவுபடுத்துகிறது. நம் மக்களுக்கு விளம்பரங்களில் பிபசா பாசுவையும், இலியானாவையும் துரத்துவதற்கே நேரம் போதவில்லை... இவைகளை கவனிக்க எப்படி முடியும் :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல்

===========================================================

Wednesday, June 24, 2009

அடுத்தவன் மனைவி மேல் ஆசை.., ஏன்?

கல்தோன்றி மண் தோன்றி மனித சமுதாயம் தோன்றிய முதலே இருக்கும் தொழிலாக பாலியல் சேவை கருதப் படுகிறது. நாம் நமது சமூகத்தை மிகவும் தொன்மையானதாகவும், புனிதமானதாகவும் கருதி வருகிறோம்.

ஒருவனுக்கும் ஒருத்தி என்ற கலாச்சாரத்தில் ஊறி திழைத்து வருவதாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் பாலியல் சேவை செய்பவர்கள் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் உதவியை நாடி வருபவர்களில் வெகுசிலரே அவர்களின் தேவை மிகவும் அவசியமானதாக இருக்க முடியும். பெரும்பான்மையான மனிதர்களுக்கு அவர்களின் அவசியம் இல்லவே இல்லை. ஆனால் ஏன் அவர்களை நாடுகிறார்கள்?

மும்பையிலும் கல்கத்தாவிலும் தனியே ஒரு பகுதியே இருக்கிறதாக திரைப் படங்கள் காட்டுகின்றன. ( நாயகன், மகாநதி...) அத்தனை பேரும் ஒரே இடத்தில் குழுமி இருப்பதாக காட்டுகிறார்கள், அத்தனை பேர் அங்கே இருந்தால் அவர்களுக்கு போதுமான அளவு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா.... வாடிக்கையாளர்கள் இருப்பதால்தானே கொடிகட்டிப் பற்க்கிறது.... ஒரே நாளில் நான்கைந்து பேருக்கெல்லாம் ஒரே நாளில் சேவை புரிந்தால் எத்தனை எத்தனை லட்சம் வாடிக்கையாளர்கள்.. கணக்கிடவே முடியவில்லை. இங்கு செல்லும் அனைவரும் திருமண்மானவ்ர்களா... மனைவியிடம் திருப்தி அடையாதவர்களா.... அவர்களுக்கு இதுதான் தீர்வா.... அப்போது இந்த சேவை வளர்ந்து கொண்டேதான் போகுமா......

இத்தனை ஆண்கள் அங்கு போய் வந்துகொண்டிருந்தால் அவர்தம் மனைவியர் நிலை....... கணவன் மனைவி இருவருமே ஒரே தராசில்தானே வருவார்கள்.? இவர்களுக்கு இருக்கும் அதே நியாயங்கள் அவர்களுக்கும் இருக்கும் தானே..

இந்த கேள்விகளையெல்லாம் மனதில் சுமந்துகொண்டு இருந்த நேரத்தில்தான் கண்டபடி பேருந்து பயணங்களும் திரைப் படம் பார்க்கும் வாய்ப்புகளும் அமைந்தன. அறுபதுக்கு முந்தைய படங்களில் நாயகி மிகவும் மரியாதைக்குரியவராக வந்து போய் கொண்டிருந்தார்.


எழுபதுகளில் கவர்ச்சியாக இருந்து கொண்டு இருந்தார்கள். ( சிலர் கொடிகட்டிப் பறந்தார்கள்). இப்போதைய நாயகிகள் சும்மா.... பின்னி எடுத்து கொண்டிருக்கிறார்கள். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு பொருந்தும் முண்ணனி நடிகை நயந்தாராதானே..

நாமெல்லாம் திரைப்பட நடிகர்களை நமது லட்சிய புருஷர்களாகவும் தலைவர்களாகவும் பார்க்கும் இயல்புடையவர்கள் அல்லவா... நமது லட்சிய நாயகர்களின் ஜோடிகளையே மனைவிகளையே நாமெல்லாம் இப்படி அற்புதமான ரசனையில் பார்த்துக் கொண்டிருக்கிறோமா...


தங்கள் இதய தெய்வத்தின் அன்பு அண்ணனின் காதலியை வருங்கால இல்லத்தரசியை உரித்து வைத்து பார்க்கும் மனப் பான்மை எங்கு வளர்ந்ததோ அன்றே அடுத்தவன் மனைவியையும் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பார்க்கும் எண்ணம் வளர்ந்துவிடுகிறதே...,

நேற்று கவர்ச்சிக் காட்சிகள் நிறைந்த படத்திற்கு மறைந்துபோய் பார்த்தகாலம் போய் இன்று வரவேற்பறையிலே களியாட்டங்களை கண்டு ரசிக்க ஆரம்பித்துவிட்டோமே..
அப்படியென்றால் பிறன்மனை நோக்கா பேராண்மை என்பதெல்லாம்...

என்னமோ போங்க.......,

இது ஒரு மீள்பதிவு

சின்னப் பசங்க உருவாக்கப் பார்த்த மதக் கலவரம்

பள்ளி பருவத்தினை நினைத்துப் பார்க்கும்போது ஏற்பட்ட இன்னொரு சம்பத்தினை கண்டிப்பாக நினைவு படுத்தியே ஆக வேண்டும். நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு முறை கொடிக்காபுளி பிடுங்குவதற்காகச் சென்றோம்.

அந்த மரங்கள் வேம்பு, புளி அளவுக்கு கெட்டியானது அல்ல. ஆனால் அந்த மரத்தில் ஏறமுடியும். நாங்கள் கொக்கிச் சல்லையுடன் மரத்தில் ஏறியிருந்தோம். கொக்கியில் ஒரு கூர்மழுங்கிய கத்தியையும் சேர்த்திருப்பார்கள். கொடிக்காபுளி நன்றாகக் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததது. நண்பர் இருவர் நன்றாக மேலே ஏறி செல்லமுடியும் அளவு சென்றுவிட்டார். இனியும் முன்னேறினால் ஒடிந்துவிடும் அளவு சென்றுவிட்டு கொக்கியைப் ப்யன்படுத்தி பிடுங்க வேண்டும். கீழே நிற்கும் நாங்கள் அதைப் பொறுக்கிக் கொள்வோம்.கடைசியில் பங்கு போட்டுக் கொள்வோம்.

அதே மரத்திற்கு ஊரின் இன்னொரு பகுதியைச் சேர்ந்த நண்பர்களும் வந்திருந்தனர். அவர்களில் ஒருவரும் அதே மரத்தில் ஏறியிருந்தார். அவரும் பிடுங்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். எங்கள் நண்பர் மேலே சென்று முயற்சித்துக் கொண்டிருந்தார் அல்லவா.., இவர் அவருக்கு கீழே நின்று கொண்டு இறங்கிறாயா? அல்லது மரத்தினை ஆட்டி கீழே விழவைக்கவா? என்ற ரீதியில் மிரட்டிக் கொண்டிருந்தார். அது மொத்தமாக குத்தகைக்கு விடப் படும் மரங்கள் சின்ன பசங்க என்னபெரிதாக பிடுங்கிவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் பெரிதாகக் கண்டுகொள்ளமாட்டார்கள். உரிமைக்காரர்கள் பார்த்தால் விரட்டுவார்கள். அதுகூட பெரிய அளவில் இருக்காது.

இவர் ஆட்டிய வேகத்துக்கும் மரம் ஆடிய வேகத்துக்கும் எல்லோருக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் எங்கள் நண்பர் கொஞ்சம் தைரியமானவர். அவர் அதற்கெல்லாம் அசராமல் தன்வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். கோபமடைந்த எதிர்குழு நண்பர் கொஞ்சம் காட்டமாக சாதிப் பெயரை உபயோகப் படுத்த ஆரம்பித்தார். அவருக்கும் கீழே இருந்த எங்கள் ந்ண்பர் வேகமாக மரத்தில் ஏறினார். பெரிய சண்டைவரும் என்று நாங்கள் நினைத்திருந்தோம். அவரால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் மேலேசெல்ல முடியவில்லை. அவர் நின்ற இடத்திலிருந்து மேலே பார்ர்த்தார். எதிர் குழு நண்பர் அவருக்கு நேர் மேலே நின்றிருந்தார். எதிர்குழு நண்பர் லுங்கி அணிந்திருந்தார். அதையும் மடித்துக் கட்டியிருந்தார். அவர்களில் சிறுவர்கள் கூட லுங்கிதான் அணிந்திருப்பார்கள். அந்த நபர் உள்ளாடைகூட அணியவில்லை. கீழே நின்ற நண்பர் தனது கொக்கி சல்லையை மேலே உள்ளவர்மேல் பயன்படுத்த ரத்தம் கொட்டோகொட்டு என்று கொட்ட ஆரம்பித்தது. சிறுவர் உபயோக ப் படுத்திய கத்தி ஆகையால் பதம் என்பதே இல்லாமல் இருந்தது. இல்லையென்றால் முக்கிய உறுப்பு துண்டாகியிருக்கும். ரத்த வெள்ளத்தில் அந்த நபர் ஓட அவரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எங்களைத் தேட நாங்கள் எஸ்கேப். இதில் ஜாதிப் பிரச்சனை வேறு சேர அந்தப் பகுதியே பதட்டம் ஆனது.

கடைசியில் ஊர்பெரியவர்கள் களத்திற்கு வந்து சின்னப் பசங்க சண்டையை பெரிது படுத்தவேண்டாம் என்று கூறி காயம் பட்டவனுக்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து பிரச்சனையை முடித்தனர். ஆனாலும் கூட நாங்கள் எங்கள் பகுதியைவிட்டு மற்ற பகுதிகளுக்கு விளையாடச் செல்வது ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு தடைச் செய்யப் பட்டே இருந்தது.

========================================================

ஸ்டார்ஜன் அழைத்த தொடர்பதிவில் எனது பங்குப் பதிவினை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
முஸ்லிம் தொடக்கப் பள்ளியிலிருந்து.......,

இந்திரா காந்தி அவர்கள் இறந்த போது.., ஆகிய பகுதிகளையும் இந்தப் பதிவுடன் சேர்த்துப் படித்துக் கொள்ளுங்கள். இன்னும் நிறைய எழுத தோன்றுகிறது. கண்டிப்பாக அவை தொடரும்

==========================================================

இந்தத் தொடர்பதிவின் விதிகள்


விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !

==========================================================

ஆசிரியர்களைப் பற்றியும் எழுதிவிடுகிறேன். ஆனால் அனைவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைப்பதால் தனித் தொடராக அதை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

=========================================================

இந்தப் பதிவினைத் தொடர

அக்பர் http://sinekithan.blogspot.com

இது நம்ம ஆளு http://vanakamtamilan.blogspot.com/


குறையொன்றும் இல்லை http://yellorumyellamum.blogspot.com

ஆகியோரை அழைக்கிறேன்

இந்திரா காந்தி அவர்கள் இறந்த போது..,

சில நிகழ்ச்சிகல் மிகச் சிறிய வயதில் நடந்தால்கூட அது ஏற்படுத்தும்தாக்கம், மறக்க முடியாமல் போகும். உண்மையில் ஆறு,ஏழுவயதில் நடந்த நிகழ்ச்சி, உங்கள் மனதில் ஆழமாக பதிய முடியுமா? என்ற கேள்விக்கு என்னால் பதில் சொல்லத் தெரியவில்லை. அதை அப்படியே இன்று உங்களால் திருப்பிச் சொல்ல முடியுமா என்ற கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை.அதுபோலத்தான் இந்த நிகழ்ச்சியும் ஆனால் இந்த நிகழ்ச்சியை பலரும் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே வந்தததால் ஓரள்வு அப்படித்தான் என்ற எண்ணமே வந்து நிலைத்து நிற்கிறது..,

அந்த நாள் எப்படி ஆரம்பித்தது என்ற எண்ணம் எனக்கு நினைவில் இல்லை. பள்ளி உணவு இடைவேளைவிட்டபிறகு நேராக புத்தகப் பையுடன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தோம். சாலையின் ஓரங்களில் கடைகளில் வாசலில் வானொலிப் பெட்டியை வைத்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக மக்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக் கேட்ட போதுதெரிந்த விஷயம்தான் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொள்ளப் பட்ட செய்தி.

அப்படியே வீடு நோக்கி வந்த நான் தாயாரிடம் அப்படியே செய்தியைச் சொன்னேன். டேய், சின்னப் பசங்க அப்படியெல்லாம் பேசக் கூடாதுடா, என்று சொன்னார். இல்லமா அப்படித்தான் ரோட்ல பேசிக்கறாங்க. தாயாருக்கு பயங்கர கோபம் அப்படியேகையில் கிடைத்த ஒரு குச்சியை எடுத்து மிரட்ட ஆரம்பித்தார். எதோ ஒரு தவறு செய்து விட்டது போல தோன்றியது.

சரி, துணைக்கு அழைப்போம், என்று நினைத்து அம்மா மாமாவ வேணும்னாலும் கேட்டுப் பாரும்மா.., அவர் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். என்னை அவர்தான் பள்ளிக்கு அழைத்துச் செலவார். வீட்டிற்கு அருகிலேயேதான். அவரும் ஆமாம் போட்டார். நான் மாமாவைத்துணைக்கு அழைக்க தாயார் மாமாவின் தாயாரை துணைக்கு அழைத்தார். அவர் நெல் அல்லது அரிசியைப் போட்டு உரலில் குத்திக் கொண்டு இருந்தார். அவருக்கும் கடுமையான கோபம், அவர் உலக்கையுடன் எங்களை துரத்த ஆரம்பித்தார். எதோ தவறு செய்து விட்டோம் என்ற எண்ணத்தில் நானும், மாமாவும் ஓட ஆரம்பித்தோம். சற்று நேர துரத்தலுக்குப் பிற்கு அவர்கள் நின்று கொள்ள, நாங்கள் தெருவையே சுற்றி, சுற்றி ஓடிக் கொண்டு இருந்தோம். யாரும் பார்க்காத நேரத்தில் ஒரு புளிய மரத்தில் ஏறிவிட்டோம். அந்த மரம் சின்ன பசங்க கூட ஏறிவிடும் வகையில் வளர்ந்திருந்தது. படியில் ஏறுவது போல ஏறி கொஞ்சம் மேலே சென்று உட்கார்ந்து கொண்டோம். கொஞ்ச நேரத்தில் நாங்கள் சொன்ன செய்தியைப் பற்றி விவாதித்துக் கொண்டு பல இளைஞர்கள் கையில் தடிகளுடன் சுற்ற ஆரம்பித்தனர்.

சற்று நேரத்தில் எங்கள் உறவினர்களும் எங்கள் பெயரைக் கூவிக் கொண்டே எங்களைத்தேட ஆரம்பித்தனர். அவர்கள் கையிலும் தடிகள் இருந்தன. எங்களுக்கு பயம் கூடிக் கொண்டே போனது. அப்படியே பொழுது சாயத் தொடங்கியது. அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் வெறிச்சிடத் தொடங்கியது. இருந்த சின்ன சின்னகடைகளும் அடைக்கப் பட்டன. வெள்யே நடமாடுபவர்கள் கையில் தடிகளுடந்தான் சுற்றிக் கொண்டிருந்தனர். எங்களுக்கு பயம்.., பயம்.., மேலும் பயம்.....

எதோ எங்களால்தான் எல்லோரும் தடியுடன் சுற்றுவது போலவும் எங்களை அடிக்கத்தான் எல்லோரும் சுற்றுவது போலவும் எண்ணத்தில் அப்படியே தூங்கியும் விட்டோம் (பசி மயக்கமாய் கூட இருந்திருக்கலாம்). மறுநாள் காலையில் அந்த புளியமரத்தடியில் கூடிய ஐக்கிய நாட்டுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களில் ஒருவர் மேலே தலையையைத்தூக்கிப்பார்த்து அதில் தூங்கிக் கொண்டிருந்த எங்களை மீட்டார்களாம்..

===================================================

இது ஸ்டார்ஜான என்னை அழைத்த தொடக்கக் கல்வி பருவம் பற்றிய தொடர்பதிவின் இரண்டாம் பாகம். முதல்பாகம் இங்கே இருக்கிறது.

விரைவில் இந்த பதிவின் அடுத்த பகுதியைப் போட்டுவிடுகிறேன்.

இந்தத் தொடர் பதிவின்

விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும் !

Tuesday, June 23, 2009

சன் மற்றும் விஜய் குழுமங்களுக்கு

பொன்னியின் செலவன். தமிழில் வாசகன் என்று சொல்லிக் கொண்டு யார் சுற்றினாலும் பொன்னியின் செல்வன் பற்றி கொஞ்சமேனும் தெரிந்திருப்பர். இணையத்தளங்களில் சுற்றி சுற்றி சுழற்றி சுழற்றி வளைத்து நெளித்து எழுதிவருகிறார்கள்.

பொன்னியின் செலவனை திரையில் காண்பது என்பது அரை நூற்றாண்டுகளாக தமிழனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. பெரிய பெரிய புத்தகங்களாக ஐந்து பாகங்கள் எழுதப்பட்ட புதினம் அது. சில {பல} ஆண்டுகள் தொடர்கதையாக வந்த கதை . தனியாக திரைக்கதை எதுவும் எழுத வேண்டிய அவசியமில்லாமல் கதையே திரைக் கதையாய் அமைந்த நூல் அது. அவ்வளவு விறுவிறுப்பான கதை திரைக்கதை கையில் இருக்கும் போது அதை ஏன் திரைப்படமாக எடுக்கவில்லை?

நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், வஞ்சிக் கோட்டை வாலிபன் , ஒளவையார், போன்ற படங்கள் வந்த காலத்திலேயே எடுத்திருக்கலாம். பட்ஜெட் ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்திருக்கும். இருந்தாலும் எடுக்கவில்லை. எடுக்காததன் காரணமாக சில விஷயங்களை கூறலாம்.

கதையின் போக்கு:-
கதையில் பல இடங்களில் பலமுக்கிய கதாபாத்திரங்கள் தென்படுகின்றன. பொருத்தமான ஆட்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆதித்த கரிகாலர், அருண்மொப்ழிவர்மர், வந்திய தேவன் போன்ற பாத்திரங்களுக்கு சரியான ஆட்கள், ஈகோ விட்டுக் கொடுத்து நடிக்கும் சூழ்நிலை இல்லாமல் போயிருக்கலாம்.

பட்ஜெட்:-
எழுபதுகளில் நிறைய நாயகர்கள், நாயகிகள் இருந்தாலும் பட்ஜெட் அதிகமாக வந்திருக்கக் கூடிய வாய்ப்புகள். கலரில் எடுத்தாக வேண்டிய கட்டாயம். ஒருவேளை ராஜராஜ சோழன் படத்திற்கு கூட முதலில் இந்தக் கதையை தேர்ந்தெடுத்திருக்க கூடிய வாய்ப்புகளே அதிகம். பட்ஜெட் மிக மிக அதிகமாக போயிருக்கும்.

முடிவு:-
புதினத்தின் முடிவில் பொன்னியின் செல்வன் மகுடத்தைத் தூக்கி உத்தமச் சோழன் தலையில் சூடுவதை சினிமா பிரம்மாக்களும், சராசரி ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்களா.... கண்டிப்பாக வாய்ப்பில்லை. பெரிய நடிகர்களின் ரசிகர்கள் தீக்குளிக்க க் கூட தயங்க மாட்டார்கள். சரித்திர கதையாய் போய்விட்டதால் முடிவை மாற்றவேவேவே முடியாது.

கல்கி:-
கல்கியின் வர்ணனைகளை காட்சியாக்குவது என்பது ஒரு தவம் போன்று செய்யவேண்டிய ஒன்று. பல காட்சிகளை திரைக்கு கொண்டுவரும் அளவுக்கு தொழில்நுட்பம் சென்ற நூற்றாண்டின் இறுதிவரைக்கும் கூட கிடையாது.

80களில்
இளம் நடிகர்களின் ஆதிக்கத்தில் வந்ததால் பாத்திரங்களை தாங்கும் வல்லமை படைத்த நடிகர்களும். பட அதிபர்களும் இயக்குநர்களும் சரித்திர கதைகளிலிருந்து விலகியே இருந்தார்கள்.



இன்றைய சூழல்:-

இன்றைய சூழல் அற்புதமாக இருக்கிறது. முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன், உத்தம சோழன் கதாபாத்திரங்களை ஏற்றுக் கொள்ள சரியான ஆட்கள் இருக்கிறார்கள். ஆட்கள் என்பதைவிட ஆள் என்பது சரியாக இருக்கும். ஆம். கமலஹாசன்தான் அவர். அவரையே இந்த வேடங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லலாம். இறுதிக்காட்சியில் கமலஹாசனுக்கே பட்டம் சூட்டப் படுவதால் ரசிகணும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள், பராந்தகச் சோழன் மற்றும் பழைய காட்சிகளில் வரும் பல சோழச் சக்கரவர்த்திகள் கதாப்பாத்திரங்களையும் கமலஹாசனையே செய்யச் சொன்னால் அவருக்கும் ஒரு சாதனை படைத்த மாதிரி இருக்கும்.


வந்தியத் தேவன் கதாபாத்திரத்தைக் கூட கமல ஹாசனைச் செய்யச் சொல்லலாம். என்ன கூடுதல் மேக் அப் தேவைப் படும். [மற்றவர்கள் ஒரே வம்சத்தில் பிறந்தவர்கள். இவர் வேறு குலம். எனவே வித்தியாசம் தெரியவேண்டாமா..... } ஆனால் எந்த ஈகோ பிரச்சனை யும் ஏற்படாது.

நந்தினியாக நயந்தாராவையும், குந்தவையாக நமீதாவையும் போட்டுவிடலாம். வானதி, மணிமேகலை பாத்திரங்களுக்கு பாவனா, சமிக்ஷா போன்றவர்களைப் போட்டுவிடலாம். வீரப்பாண்டியன், பழுவேட்டரையர் போன்ற பாத்திரங்களுக்கு நெப்போலியன் பிரகாஷ்ராஜ் போன்றவர்களை உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.

கிராஃபிக்ஸ் உபயோகப் படுத்தி முடிந்தவரை கல்கியின் காட்சிகளை கொண்டுவந்துவிடலாம்.

படத்தின் செலவுதான் கண்டபடிஆகும். ஆனால் அதற்கு ஒரேவழிதான் இருக்கிறது. சன் டி,வி. அவர்களால்தான் இது முடியும். ஏற்கனவே பட்ஜெட் பிரச்சனையால் தள்ளாடிய பல படங்களை அவர்கள் காப்பாற்றியுள்ளனர். தமிழ் வாசகனின் பலநாள் ஏக்கத்தை அவர்களால் மட்டுமே தீர்க்க முடியும்.


திரைப்படமாக எடுக்கும் வாய்ப்பு அமையா விட்டாலும் குறைந்தபட்சம் மெகா சீரியலாகவாவது எடுக்க வேண்டும். நந்த்னிக்கும் குந்தவைக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள் பெண்கள் மத்தியில் பயங்கர வரவேற்பினைப் பெறும். நந்தினிக்கு நடக்கும் சோகங்கள் பெண்கள் மத்தியில் ரத்தக் கண்ணீரை வரவைக்கும்.


ஒட்டுமொத்த தமிழ்ரசிகர்களின் அரைநூற்றாண்டு கனவினைத்தீர்க்கும் வலிமை சன் டி.வி.க்கு மட்டுமே உண்டு. நிறைவேற்றி வைப்பார்களா?
=====================================================================
இது ஒரு மீள்பதிவு. இதை சன் டி.வி. மட்டுமல்ல , விஜய் டி.வி. கூட செய்ய முடியும். செய்வார்களா?
=====================================================================

இது தொடர்பாக ஏற்கனவே வெளிவந்துள்ள இடுகை இது. செப்-2007 எழுதப்பட்டது. புருனோ அவர்களால் பின்னூட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதும் இதுவே.

முஸ்லிம் தொடக்கப் பள்ளியிலிருந்து.......,

ஷேக் மைதீன் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவரது பூர்வாசிரமப் பேர் உங்களுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். பதிவுலகில் சுற்றிவரும் டார்ஜன் அவர். தற்காலத்தில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் அவர். அவர்தான் ஸ்டார்ஜன்.

மற்றொரு பிரபல பதிவர் கோவி. கண்ணனின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் ஒரு தொடர்பதிவினைப் போட்டுவிட்டு அப்படியே என்னையும் தொடருமாறு கேட்டுள்ளார். எனக்குத் தொடரலாம் என்று பதிவிட ஆரம்பிக்கலாம் என்று நினைத்தபோது சமீபத்தில் நான் எழுதிக் கொண்டிருக்கும் தோழிக்கு திருமணமான போது நடந்த சம்பவங்களும் அதற்கு முன்பின் நடந்த சம்பவங்களும் வந்து பயமுறுத்த ஆரம்பித்தன.

======================================================

முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம்பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

=======================================================

ஓரிரு பகுதிகளில் வெளிவிட நினைத்து அதுபாட்டுக்கு போய் கொண்டே இருக்கிறது. ஒரு பகுதி எழுத ஆரம்பித்தால் அது இரண்டு அல்லது மூன்று பகுதி விஷயங்கள் வந்து விழுகின்றன. நல்ல வேளை டயரி எழுதும் வழக்கம் இல்லை. யோசித்து எழுதும் போதே இப்படி என்றால் பார்த்து எழுதியிருந்தால் என்ன ஆகும் என்றே தெரியவில்லை. அந்த கதை முடிய இன்னும் சில மாதங்கள் ஆகும் போல. இதில் சில நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து சில நிகழ்ச்சிகளை விட்டுவிட்டதாகவும் அவற்றையும் சேர்க்குமாறு வேறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பேரையும் மாற்ற வேண்டாம் தங்கல் பேரையே உபயோகப் படுத்துமாறும் சொல்கிறார்கள். சுத்தமாக அந்தக் கதையின் போக்கு என் கட்டுப் பாட்டைத் தாண்டி விட்டது. அதனால் இந்த இடுகையை மிக எச்சரிக்கையாகவேதான் ஆரம்பித்திருக்கிறேன்.

=================================================

நான் துவக்கக் கல்வியைத் துவக்கியது ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் துவக்கப் பள்ளியில்.., பெரிய சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஏதும் மனதில் இல்லாவிட்டாலும் கூட அந்த நாட்களை நினைத்துப் பார்ப்பதே சுவாரசியமான நிகழ்ச்சிதானே...

அந்தப் பள்ளி முஸ்லிம் மக்கள் நிறையப் பேர் வாழும் பகுதியில் இடம் பெற்றிருந்ததாலும், பள்ளிவாசலுக்குச் சொந்தமான கட்டிடத்தில் வாடகைக்கு இருந்ததாலும் அந்த பள்ளிக்கு ஓராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப் பள்ளி என்று பெயர். அது மட்டுமல்லாமல் அங்கு வெள்ளி, சனிதான் வார விடுமுறை. ஞாயிறு அன்று பள்ளி நடக்கும். பள்ளிக்கு பெரிய அளவில் சீருடை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. அப்போதைய முதலமைச்சரின் தயவில் சட்டை, கால்சட்டை, செருப்பு, பல்பொடி, புத்தகம் போன்ற பொருட்கள் எங்களுக்கு இலவசமாகக் கிடைத்தன.


துவக்கத்திலிருந்தே நான் ஒழுங்காகப் பள்ளிக்குப் போனதாகவே ஞாபகம். ஆனாலும் கூட எங்கள் பள்ளியில் ஒரு பணியாளர் இருந்தார். அவரை நாங்கள் டீச்சர் என்றுதான் அழைப்போம். ஆனால் அவரது பணி என்னவென்று இன்றும் கூட தெரியாது, எங்கள் ஊரில் எல்லாத்தெருக்களுக்கும் அவர் பவனி வருவார். அவர் வந்தாலே மாணவர்கள் எல்லோரும் தலைமறைவு ஆகிவிடுவார்கள். மாலை வேளைகளில் அவரைப் பார்த்தால் கூட எங்களுக்கு வியர்த்துவிடும்.

நான் அங்கு படித்த காலத்தில் ரஜினிதான் பெரிய ஹீரோ.., அப்போது எங்களுக்கு மிகப் பரிச்சையமான பாடல் அண்ணனுக்கு ஜே..., காளையனுக்கு ஜே..., தான் ஆனாலும் கூட அந்தப் படமும் பாடலும் வந்து சில ஆண்டுகள் ஆயிருந்தன. ஆனால் எங்களுக்கு அவைதான் புதிய படம். அந்த சூழலிலும் எம்.ஜி.ஆருக்குத் தான் ரசிகர் அதிகம். நாங்கள் ரஜினியின் பெருமை பேசினால் அந்த மாணவர்கள் எப்போதும் எம்ஜியாரின் புகழ் பேசுவார்கள். எம்.ஜி.யார் அப்படியே பெரிய தீயைக் கூடத் தாண்டிக் குதிப்பார் என்பதை அவர்கள் எங்கள் மனதில் மிக ஆழமாகப் பதிந்து வைத்தனர். அதன் காரணமாகவே கூட பதின்ம வயது காலங்களில் நாங்கள் எம்.ஜி.ஆர் படங்களை துரத்தித் துரத்துப் பார்த்தோம் என்று சொன்னால் அதுதான் உண்மை.

அந்தப் பள்ளியில் ஏற்க்குறைய பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருந்தனர். ஓரிரு ஆண் ஆசிரியர்கள் மிதி வண்டியிலும் சிலர் பேருந்திலும் வருவார்கள்.

பேருந்தில் ஆசிரியர்கள் இறங்கி விட்டால் ஊர் முழுவதும் செய்தி பரவும். டீச்சர் வந்திட்டாங்க, சீக்க்கிரம் ஓடுங்கடா என்ற பேச்சு எல்லா வீட்டிலும் கேட்கும். தலைசீவிக் கொண்டோ, சட்டையை போட்டுக் கொண்டோ பள்ளிக்கு ஓடுவோம்

நாங்கள் படித்த காலத்தில் இரண்டு சம்பவங்கள் நடந்தன. ஒன்று இந்தியப் பிரதமரின் படுகொலை, மற்றொன்று தமிழக முதல்வரின் மரணம்

அவைகளைப் பற்றி அடுத்த இடுகைகளில்.........

==============================================================
சின்னப் பசங்க உருவாக்கப் பார்த்த மதக் கலவரம்

இந்திரா காந்தி அவர்கள் இறந்த போது..,

 

Sunday, June 21, 2009

டி.ஆர்.மகாலிங்கத்திடம் பிடித்த பனிரெண்டு

1. பாட்டு பாடுவதற்கு முன் நீளமாக இழுப்பீர்களே ( சில்லென்று என்பதுபோல) அது பிடிக்கும்
http://allaboutgoogle.files.wordpress.com/2008/01/tn_trmahalingam_jpg.thumbnail.gif
2. வேதாள உலகம் படத்தில் உங்க அப்பா, சித்தப்பா, அண்ணன்கள் சுயம்வரத்திற்குப் போன அதே பெண்ணிற்காக நீங்களும் சுயவரம் போவீர்களே அது பிடிக்கும். நீங்கள் சிறுவனாக இருந்தபோதே சுயம்வரம் நடத்தப் பட்ட பெண்ணையே கடைசியில் திருமணம் செய்து கொள்வீர்களே அந்த தியாக உள்ளம் ரொம்பவே பிடிக்கும்

3. பேசும் போது இரண்டு கையையும் சேர்த்துவைத்து பேசிவிட்டு முடிக்கும்போது சடாரென்று விரிப்பீர்களே, அந்த ஸ்டைல் பிடிக்கும்

4. அணுகுண்டு என்ற பொருளை கடலை உருண்டை ரேஞ்சுக்கு எடுத்து மடியில் கட்டிக் கொண்டு போவீர்களே அந்த குருட்டு தைரியம் மிகப் பிடிக்கும்.

5.உங்கள் பாடலைக் கேட்டுத்தான் கடவுள் பாடக் கற்றுக் கொண்டாராமே.., அந்தக் கதை கூட எங்களுக்குப் பிடிக்கும்

6. உங்களுக்காக ஒரு காமெடிக்காரரோ அல்லது ஒரு வயோதிக நடிகரோ துப்பறிவதாக வரும் படங்களிலேயே நடித்தீர்களே அந்தப் பெருந்தன்மை ரொம்பவே பிடிக்கும்.

7.உங்கள் மீசை அதன் அடர்த்தி எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.

8. எம்.கே.டி. நடிக்காமலிருந்த போது சூப்பர் ஸ்டார் இடத்தை பாதுக்காத்து தான்வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.யாரிடம் தூக்கிக் கொடுத்த அந்த கடமை உணர்வு மிகவும் பிடிக்கும்

9.ஆட்ட்க்கார நாயகிகள் இருந்தாலும் நடந்து கொண்டே மூச்சுமுட்டப் பாடுவீர்களே அது ரொம்ப பிடிக்கும்

10.ஒரு கையில் எண்ணைக் குவளையை வைத்துக் கொண்டு உலகம் சுற்றிவந்து அகத்தியருடன் டூயட் பாடுவீர்களே.., அந்த பக்தி ரொம்ப பிடிக்கும்

11.பொன்னியின் செல்வனோடு தென்றலோடு பிறந்தவளாம் செந்தமிழ் பெண்ணாள் என்று சொல்லச் சொல்ல இசை அமைப்பீர்களே அந்த நடிப்பு ரொம்பவே பிடிக்கும்.

12.இன்றும் ரசிகர்களோடு இருக்குறீர்களே அது ரொம்ப பிடிக்கும்

உரையாடல் போட்டிக்கான இடுகைகளைப் படிக்க நினைக்கிறீர்களா?

போட்டிக்கு அனுப்பப் பட்டிருக்கும் நூறு இடுகைகள்

http://tamil.blogkut.com ல் வெளியாகியுள்ள நூறு இடுகைகளின் பெயர்கள்

இன்னும் நாட்கள் இருப்பதால் இன்னும் நூற்றுக்கும் மேல் நாம் எதிர் பார்க்கலாம்



போட்டிக்கான இடுகைகள்:
1. ஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்
2. புத்தகம் : rathnapeters
3. தாவணி தேவதை : நசரேயன்
4. போனாகானா முதலியாரின் தேசபக்தி : மணிப்பயல்
5. மாண்புமிகு முதல்வர் மணிப்பயல் : மணிப்பயல்
6. மணிப்பயலும் சில மத்தாப்புகளும் : மணிப்பயல்
7. இழந்தது என்ன ? : கிருஷ்ணா
8. பசி : உழவன்
9. எப்போ பூ பூக்கும்? : லக்கிலுக்
10. கால்குலேட்டர் : பினாத்தல் சுரேஷ்
11. தாய் மனம் : என்.கணேசன்
12. நான் அல்லது நான் : நந்தாகுமாரன்
13. வரிப்புலித்தைலம் : arvinstar@gmail.com
14. முருகன் தருவான் : karki bavananthi
15. தெரு கூத்து…! : குகன்
16. உன்னை கொல்ல வேண்டும் : Raju
17. அக்கரைப் பச்சை : ஸ்ரீவித்யா பாஸ்கர்
18. வழியனுப்பிய ரயில் : உமாசக்தி
19. சாராயக் கடைகளில் கேட்ட சல்லாபக் கதைகள் - 1 : X R
20. \" யாதெனின்...யாதெனின்...\'\' போட்டிக்கான சிறுகதை : T.V.Radhakrishnan
21. கில்லி..! (Gilly) : அபுஅஃப்ஸர்
22. நிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை : மொழி
23. நூல் : Keith Kumarasamy
24. மன்மதனின் முடிவு : Covairafi
25. காத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்
26. அப்பா வீடு : கே.பாலமுருகன்
27. பச்சை பெல்ட்டும் குள்ள(ம்) மாமாவும்! (உரையாடல் சிறுகதை போட்டிக்கு) : அபி அப்பா
28. இடைவெளியே ஓடிவிடு :
29. தங்கையுடையான் : முரளி குமார் பத்மநாபன்
30. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் : கடைக்குட்டி
31. கனவு : ரத்னாபீட்டர்ஸ்
32. “வலி” : ஜாக்கிசேகர்
33. குட்டிப் பாப்பா : வெட்டிப்பயல்
34. என் தோழியின் இருப்பு : பாலமுருகன் கேசவன்
35. வக்கிரம் : நர்சிம்
36. மனையியல். : இரா. வசந்த குமார்.
37. பொட்டலம் [\'உரையாடல்\' சிறுகதை போட்டிக்கு] : ராமலக்ஷ்மி
38. தற்செயலாக பறிக்கப்பட்ட ஒரு மலர் : ‘அகநாழிகை‘ பொன்.வாசுதேவன்
39. வன்முறையின் தொடக்கம் : அரவிந்த்
40. தங்கையுடையான் : முரளிகுமார் பத்மநாபன்
41. எழுத்துப் பிறவி : ஸ்வாமி ஓம்கார்
42. பசி........ : அது சரி
43. பாஸ்கட் பால் : முரளிகண்ணன்
44. தொலைபேசி (சிறுகதை - உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு) : சுழியன்
45. செயற்கை மணம் ! (சிறுகதை போட்டிக்காக) : கோவி.கண்ணன்
46. அவள் பத்தினி ஆனாள்- சிறுகதைப் போட்டிக்காக : ramachandranusha(உஷா)
47. மௌனம் சூழ்ந்த உறவு (போட்டிச்சிறுகதை) : தொடர்பவன்
48. கதை சொல்லும் கதை! : வால்பையன்
49. நாலணா : அமிர்தவர்ஷினி அம்மா
50. தேவதைகளும், சாபங்களும் இன்னும் பிறவும்! : Jeeves
51. சரணாகதி : ‘உயிரோடை‘ எஸ்.லாவண்யா
52. ஆசை வந்தது போலவே : தவறு
53. ஹெலிகாப்டர் : அற்புதன்
54. கொள்ளி.. கொள்ளி.. : சந்துரு
55. கதையின் தலைப்பு ஒருவேளை உங்களிடமே இருக்ககூடும். : கும்க்கி
56. &&& தாய்மை &&& : சுமஜ்லா
57. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் : நிலாரசிகன்
58. சின்னு : நாடோடி இலக்கியன்
59. செல்லம்மாள்.. : ஆ.ஞானசேகரன்
60. எதிர்பார்ப்பு : S.A. நவாஸுதீன்
61. விலைமகளே பரவாயில்லை : SUREஷ்
62. மைய விலக்கு : சத்யராஜ்குமார்
63. கூரை மீதினிலே ஒரு பூனைக் குட்டி : சாம்ராஜ்ய ப்ரியன்
64. \"இது நியாயமா, கிருஷ்ணா????\"- : \'இனியவன்\' என். உலகநாதன்
65. அம்மாவும் அப்பாவும் தூங்கட்டும்....... : அன்புடன் அருணா
66. தங்கம் இட்லிக் கடை. : ஆ.முத்துராமலிங்கம்
67. பிரிக்கப்பட்ட நேரங்கள் (போட்டிக்கான சிறுகதை ) : எஸ்ரா இராஜசேகரன்
68. ஆனந்த கண்ணீர் : ஷாகுல்
69. போட்டிக்கான சிறுகதை:மண்குதிரை நம்பி... : அக்னி பார்வை
70. ராமன் சைக்கிள் --சிறுகதை போட்டிக்கு! : குசும்பன்
71. இது \'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு\' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது : Saravanan, P
72. சாக்லேட் சாப்பிட்டிராத சிறுவன் - ஒரு பக்கக்கதை : சாணக்கியன்
73. ஹரி அ . ரி அ . . . ரி : அனுஜன்யா
74. அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க : தமிழ் பிரியன்
75. நீரும் நெருப்பும் : வெண்ணிலா
76. ஓர் உரையாடல். : இரா.வசந்த குமார்.
77. பெரியவர் : பிரகாஷ்
78. முதல் ரகசியம் : அரவிந்த் மனோ
79. வெறுப்பு : Madhan.S
80. இன்னும் இரண்டு வருடம் : Thamizhan
81. நம்பிக்கை..!!(சிறுகதை போட்டிக்காக..) : Anbu Mathy
82. குற்றங்கள் : vinoth gowtham
83. தம்பியும், எம்பேரனும் ஒரு வயசு : அப்பாவி முரு
84. நாய்களின் நகரம் : டோமி
85. மல்லீ : Dubukku
86. மனத்திரை : Mahesh
87. அப்பா, நான் பாஸாயிட்டம்பா : தராசு
88. காற்றோடு பேசும் இளங்குருத்து : ஒளியவன்
89. டெர்மினேட்டர் - ஜட்ஜ்மெண்ட் டே : என்.விநாயகமுருகன்
90. பலி : கோகுலன்
91. ஒரு மழைப்பொழுதில் கரையும் பச்சை எண்கள் : முனிஸ்வரன்
92. பேரம் : Ambi
93. பனங்குடி அப்பிச்சி : தேவன் மாயம்
94. ஒரு மழைநாள் இரவு : ஆதிமூலகிருஷ்ணன்
95. ஒரு நிமிடக் கதை : சீனு
96. வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் : PPattian : புபட்டியன்
97. அம்மாவின் மோதிரம் : எம்.ரிஷான் ஷெரீப்
98. ராமன் எத்தனை ராமனடி... (உரையாடல் போட்டிச் சிறுகதை) : மதுவதனன் மௌ
99. எழவு வீட்டுக்குப் போனவர்கள்..!!! : மா.கார்த்திகைப் பாண்டியன்
100. காதோரமாய் : ஸ்ரீதர் நாராயணன்

Saturday, June 20, 2009

இன்றைய இறுதி ஆட்டமும், இந்திய அணியின் தோல்வியும்

இன்று ஒருவழியாக 20-20 உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் நடக்க இருக்கிறது. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அந்த ஆட்டத்தைப் பார்க்கும்முன் கல்லூரி நாட்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்க்கத்தோன்றுகின்றது.

==========================================================

எங்கள் கல்லூரியில் ஆத்தா என்ற பாத்திரம் மிக முக்கியமானது. அதிர்ஷ்ட தேவதையை நாங்கள் ஆத்தா என்று அழைப்போம். அதேபோல் ஆத்தா கண்ணைக் குத்திடுவா என்ற வாக்கியமும் பிரபலம். அதிர்ஷ்ட தேவதை வாய்ப்புக் கொடுத்தும் உபயோகப் படுத்திக் கொள்ளாவிட்டால் அதிர்ஷ்ட தேவதை பழிவாங்கிவிடுவாள் என்ற ரீதியில் சொல்லப் படும் வார்க்கியம் அது.

தேர்வுக்குச் செல்லும்போது கூட ஆத்தாதான்... என்று சொல்வார்கள். ஆத்தா நம்ம பக்கம் இருந்தால் தெரிஞ்ச கேள்வியா வரும். அப்படியே தெரியாத கேள்வி வந்தா கூட நம்ம சொல்ற பதில் சரியா இருக்கும் என்பார்கள்.

அவனுக்கு ஆத்தா ஆட்றாடா... பார் அவன் எந்த பந்தை தொட்டாலும் அது பவுண்டரிக்குப் போகுது. அவன் சும்மா நின்னாலும் பந்து தானா வந்து பட்டு ஃபோர் போகுது பார். என்றெல்லாம் சொல்வதுண்டு.

எத்தனை ஆத்தா இருந்தும் என்ன பிரயோஜனம். லவ் ஆத்தா மட்டும் கண்ணத்தொறக்க மாட்டேங்கறாளே என்பது போன்றும் பேசப் படுவதுண்டு.

மொத்தத்தில் ஆத்தா என்பது அதிர்ஷ்டம், பயம், நகைச்சுவை எல்லாம் சேர்ந்து ரத்தத்தில் ஊறிய ஒரு பாத்திரம்

=====================================================

பத்ம விருது கொடுக்கப் படும்போது தோனி போகாததன் காரணமாகவே ஆத்தா கோபம் கொண்டு டோணிக்கு இவ்வளவு சிரமம் கொடுக்கிறாளோ? என்று இப்போது உங்களுக்குத் தோண்றுகிறதா?

===========================================================

ஐ.பி.எல் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஆடியதில் அவர்களது பலம் ,பலவீனம் ஆகியவை எல்லா வீரர்களுக்கும் தெரிந்து விட்டது. உண்மையில் இந்தப் பிரச்சனியிலிருந்து மீண்டவர்கள்தான் சச்சின் போன்றவர்கள். இதில் சச்சினைவிட மிக அற்புதமாக கிரிக்கெட் சகாப்தத்தைத் தொடங்கிய காம்ப்ளி சிக்கிக் கொண்டு கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர் அணிக் காரர்கள் எல்லாம் நண்பர்களாக மாறிவிட்டதால் ஒரு போட்டி, போராட்ட மணப்பான்மை குறைந்து விட்டது. அதேபோல் இந்திய அணீயிலும் உள்ளுக்குள் போட்டி, போராட்டம் அதிகரித்து இருக்கலாம்.

ஐ.பி.எல் நிறைய ஆடியதால் வெற்றி, தோல்விகளைச் சமமாக எடுத்துக் கொள்ளும் மனப் பான்மை வந்துவிட்டது என்றே சொல்லலாம். தோற்றால் அதற்காக வருந்துவதில்லை. நம்ம சங்ககாரா, நம்ம கிப்ஸ், நம்ம குல் என்ற எண்ணம் வளர்ந்திருக்கலாம். ஜெயித்தவர்கள் தோற்றவர்களுடன் சேர்ந்து மச்சி, மச்சி என்று ஷாம்ப்பெயின் பார்ட்டிகள் கொண்டாடுவதால் தோற்ற உணர்வே வருவதில்லை.

ரசிகர்களுக்குக் கூட முதலில் இருந்த ஒரு வெறி, கோபம் இல்லை பாருங்கள். அவர்கள் சாந்தமாக தொடர்ச்சியாக போட்டிகளைப் பார்த்துவருகிறார்கள்.

சற்று காயம் அடைந்தவர்கள் கூட கொஞ்ச நேரம்தானே ஆடினால் போயிற்று என்று விளையாடுவது கூட தோல்விக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

========================================================

இன்று உலகக் கோப்பை ஆத்தா யாரைப் பார்த்து கண்விழிப்பாள் என்று யோசித்த போது சில விவரங்கள் மனதில் ஓடியது?

1.எந்த நாட்டில் இப்போது கிரிக்கெட் தள்ளாடிக் கொண்டிருக்கிறது?

2.எந்த நாட்டு வீரர்களுக்கு விளம்பரதாரர்கள் மிகக் குறைவாக வருகின்றன?

3.எந்த அணி ஜெயித்தால் உள்நாட்டில் ஒரு அலை ஏற்படும்?

4.எந்த அணி வென்றால் அந்த அணி வீரர்களுக்கு ஐ.பிஎல்லில் கூடுதல் வருவாய் கிடைக்கும்?

5எந்த நாட்டு அணியை அடுத்த ஐ.பி.எல்லில் சேர்க்க முடியும்?

6.எந்த நாட்டில் ஐ.பி.எல்லுக்கு நிகரான போட்டிகளை நடத்த முடியும்?

இப்படி எல்லாம் ஒரு கணக்கு ஆத்தாவுக்கு இருக்க வேண்டும்.

நாம் இப்படி எல்லாம் நினைத்துப் பார்த்தால் கூட கிரிக்கெட் ஆத்தா என்ன நினைக்கிறாள் என்பது இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்.

இலவசமாய்......,

சக்கரத்தை சேர்த்தே வைத்தாய் இறைவா
சாவியையும் கையில் கொடுத்தாய் இறைவா
எஞ்சினையும் உள்ளே வைத்தாய் இறைவா
எட்டுத் திக்கும்போகச் சொன்னாய் இறைவா

சொகுசாய் இருக்கைகள் கொடுத்தாய் இறைவா
சொகுசாய் பாதைகள் கொடுத்தாய் இறைவா
மாமியார் ஓட்டினாலும் மருமகள் ஓட்டினாலும்
மாற்றம் இல்லாப்பாதை தந்தாய் இறைவா

சக்கரத்தின் ஓட்டத்திற்கும் இறைவா உள்ளே
சக்திவாய்ந்த குழலை வைத்தாய் இறைவா
காற்றினை அடிக்கச் சொன்னாய் இறைவா
காற்றைப்போல் ஓட்டச் சொன்னாய் இறைவா

எல்லாமும் எமக்குத் தந்தாய் இறைவா
எளிமையாய் கற்றுத் தந்தாய் இறைவா
எரிபொருளைப் போடச் சொன்னாய் இறைவா
இன்னொருவன் கையில் கொடுத்ததேன் இறைவா

ஒவ்வொரு முறையும் காசு கொடுத்தால்தான்
ஒருசொட்டு எரிபொருள் கிடைக்குமாம் இறைவா
எல்லாம் கொடுத்த இறைவா -எரிபொருளையும்
இலவசமாய் கொடு இறைவா

காசு மேலே போனா கீழே வந்துதானே தீரும்



அயர்லாந்து அணித்தலைவர் வில்லியம் பீட்டர்ஃபீல்டு காசு சுண்டும் காட்சி


இந்தியப் பெண்கள் அணித் தலைவர் காசு சுண்டுகிறார்.



தலைவர் டோனி காசு சுண்டுகிறார்




டோனி வங்க தேசத்திற்கு எதிராக காசு சுண்டுகிறார். இவர்கள் உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவை ஒரேயடியாகத் தோற்கடித்ததன் காரணமாகவே அடுத்த வந்த 20-20ல் விளையாட பெருந்தலைகள் தயங்கியதாகவும் டோனிக்கு த்லைவர் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப் படுகிறது.

Tuesday, June 16, 2009

கமல்-விஜய் விருதுகள் ஒரு குழப்பம்

முன்குறிப்பு:- இந்த இடுகை கமல் அவர்களின் திறமையைப் பார்த்து வியந்துதான் எழுதப் படுகிறது.

விஜய் விருதுகள் கொடுத்துவிட்டார்கள். ரசிகர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப வழங்கப் படும் விருதுகளாக இந்த விருதுகள் கருதப் படுகின்றன.

ஆனாலும் ரசிகர்களால் ஏகோபித்த வரவேற்பு பெற்ற ஏகன், குருவி போன்ற படங்களுக்கு ஒரு விருது கூட கொடுக்கப் படவில்லை. இதென்ன ஜன்நாயகம் என்று சக நண்பர்கள் குமுறிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கமலுக்கு மட்டும் நான்குவிருதுகள்.

திரைக்கதைக்கு, அபிபான நடிகருக்கு, வில்லனுக்கு, நகைச்சுவையாளருக்கு, என வழ்ங்கி யுள்ளனர். கமல் இதெற்கெல்லாம் தகுதியானவர்தான். திரைக்கதைக்கு கொடுத்ததைப் பற்றி மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. படம் பிடிக்காதவர்கள் கூட பத்துக் கதாபாத்திரங்களை வைத்து ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைத்ததை பிரமித்துத்தான் பார்த்திருப்பார்கள்.

வில்லனுக்குக் கொடுத்துள்ளார்கள். அதில் ஃப்ளெட்சர் பாத்திரத்தை வில்லனாகக் கருதியிருக்கிறார்கள். அவர் கதையின் வில்லன் அல்ல, திரைப் படத்திற்கே அவர் வில்லன். கொடூரமான நகைச்சுவையான, வெகுளியான, பைத்தியக்காரத்தனமான வில்லன்களையே பார்த்த நமக்கு எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாத அமெரிக்க பாத்திரம் மிகவும் புதியது. எங்கே கோவிந்துவை போட்டுத் தள்ளுவதற்குப் பதிலாக படத்தையே போட்டுத் தள்ளிவிடுவாரோ என்று ரசிகர்களையே நடுங்க வைத்த பாத்திரம்தான் அந்த அமெரிக்கர். அவர் நடை உடை பாவனைகளைப் பார்த்த பிறகுதான் சுல்தான் தி வாரியர் படம் எடுக்கும் எண்ணம் கூட தோன்றியிருக்கலாம். அந்த வகையில் வில்லன் விருதுக்கு பொறுத்தமானவர் அந்த அமெரிக்கர்.


நகைச்சுவையாளர்

உண்மையில் இந்தப் படத்தில் சிறந்த நகைச்சுவையாளராக விளங்கியவர்களில் அமெரிக்க வில்லனுக்கும், உயர்ந்த மனிதருக்கும் கடும் போட்டி நிலவிவந்தது. அமரிக்கரின் நடை உடை முக பாவனைகளில் கொடுரம் காட்ட முயற்சி செய்தாலும் நகைச்சுவையே மேலோங்கி நின்றதை யாரும் மறக்க முடியாது. அதைவிட உயந்தவரின் பாத்திரமே ஒரு நகைச்சுவை. அதில் அவரது ஒப்பனை நகைச்சுவையில் ஒரு மைல்கல், அவரது குரல் நகைச்சுவையின் உச்சகட்டம். இவர்களையெல்லாம் விடுத்து அதை பல்ரம் நாயுடுவுக்கு கொடுத்திருக்கிறார்கள் அதுவும் கூட நகைச்சுவைதான்.

நாயக நடிகர்

வழக்கமாக யாருக்கு டூயட் இருக்கோ அவர்தான் நாயகன் என்ற எண்ணத்தில் படத்தைப் பார்த்தால் கோவிந்த் தான் நாயகன். கோவிந்த்க்கு டூயட் இல்லையே, அப்ப சிங்தான் நாயகன், மல்லிகா கூட கல்யாணம் ஆனதால் அமரிக்கர்தான் ஹீரோ..

ஆனால் உண்மையான ஹீரோ யார்..,

உண்மைகளைக் கண்டறிபவர். நாட்டிற்கு நன்மைதரும் துப்பறியும் பணியில் இருப்பவர். எவ்வளவு சிரமம் வந்தாலும் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடியவர் பலராம் நாயுடு, அவர்தான் இந்தப் படத்தின் நாயகனாகவும் அபிமான நடிகராகவும் இருக்க முடியும்.

அசின் பலவந்தப் படுத்தப் ப்டும்போது கூப்பிட்ட குரலுக்கு விளக்கு, மற்றும் ஒலிபெருக்கிகளோடு வந்து காப்பாற்றுகிறாரே வின்செண்ட் பூவராகவன் அவர்தான் ஹீரோவா, அவர்தான் மண்பற்றி பேசுகிறார். தனக்கு தீமை செய்தவனுக்கு கூட நன்மை செய்கிறார். அதுவும் உயிரைக் கொடுத்து.., இப்படியெல்லாம் நன்மை செய்தால் அவர் இரண்டாம் நாயகனாகவே இருக்க முடியும்.

எண்டர் தி டிராகன் மாதிரி தங்கை மரணத்திற்கு பழிவாங்க வருகிறாரே.., ஒருவேளை அவர்தான் நாயகனா?

பழைய சிம்பு படங்களில் ஒரு வசனம் வரும்.

பேசறது நான். பேச வைக்கரது அவரு.
அப்போதே டைட்டில் கார்டு விழும்,

அதுபோல் பேச வைச்சாரே அவர்தான் ஹீரோவா.. எல்லாமே கமல்தான் என்பதால் குழப்பம் இல்லாமல் விருதினை அவருக்கு வழங்கி இருக்கிறார்கள்.

எப்பூடி!

ஆனாலும்கூட இந்தச் சுட்டியில் உள்ள பதிவில் உள்ளதை கமல் யோசித்திருப்பாரா என்று தெரியவில்லை.

Monday, June 15, 2009

செக்ஸ் கல்வி- இப்பவே கண்ணக் கட்டுதே பாகம்-2

ஏற்கனவே எழுதப் பட்ட செக்ஸ் கல்வி - இப்பவே கண்ணக் கட்டுதே! இடுகையில்




Barari June 15, 2009 3:06 PM
ATHAVATHU KARPPAMAAKAAMAL EPPADI PALIYAL THODARBU KOLVATHU ENBATHAI SOLLI THARA POKOREERKAL.
இப்படி ஒரு பின்னூட்டம். அதற்கான பதில் எழுத ஆரம்பிக்க பெரிய பதிலாகவந்ததால் இந்த இடுகை.



============================================================

மிகவும் தவறான புரிதல் பராரி,

பாலியல் கல்வி என்பது உடல் மற்றும் பருவ மாறுதல்களை விளக்கி இயல்பானதுதான் என்ற கருத்தை ஏற்படுத்துவது. பெரும்பாலும் இந்த ரகசியங்களை தெரிந்து கொள்ளும் முயற்சிதான் பல தவறுகளுக்கு இடம் கொடுக்கின்றன.

அடுத்த கட்டமாக இந்த இயல்பான மாறுதல்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதை விளக்கும் வகையில் அமைய வேண்டும். உடல் உறவு என்பதன் அடிப்படை இனப் பெருக்கம்தான் என்பதை புரியும் படி உணர்த்த வேண்டும்.

(கருத்து வேறுபாட்டில் நிற்கும் தம்பதியிடம்தான் உடலுறவு என்பது மிக இனிமையானது அதை அனுபவிக்க வேண்டும் என்று பேச வேண்டும். அது பாலியல் கல்வியின் மிக மிக கடைசிக் கட்டத்தில் வர வேண்டும்)


அதற்கடுத்த புரிய வைக்க வேண்டிய உண்மைகள் சில உண்டு. அடிப்படையில் அனைத்து பெண்களும் (ஆண்களும் ) அடிப்படையில் ஒரேவகையானவர்களே என்ற உண்மை அதில் மிக முக்கியமானது. இதில் பல பெண்களை சேர்வது என்பது தேவையற்றது மற்றும் அதனால் தனித்துவம் வாய்ந்த இன்பம் ஏதும் இல்லை என்பதை புரிய வைக்க வேண்டும்.

இது கூட பாலியல் கல்விதான். அதற்கடுத்து இவ்வாறு பல்வேறு தொடுப்புகள் இருப்பதால் ஏற்படும் உடல்ரீதியான, மன ரீதியான சமுதாய ரீதியான பாதிப்புகளைச் சொல்ல வேண்டும். அதையும் கூட உடனடி, சிறிது காலத்திற்குப் பின், நீண்டகாலத்திற்குப் பின், எனப் பிரித்துச் சொல்லலாம்.

சில சந்ததிகள் கழித்துக் கூட ஏற்படும் விளைவுகளைச் சொல்லலாம்.

இதெல்லாம் முடிந்த பின் உடல் ஹார்மோன்கள் பற்றிச் சொல்லலாம். இதில் பால் ஹார்மோன் மட்டுமல்லாமல் சர்க்கரை நோய்க்கு காரணமான இண்சுலின் முதற்கொண்டு சொல்லலாம். அப்போதுதான் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்க முடியும்.

அதற்கடுத்து உடல் உறுப்புகள் செயல்பாடுகள் (கவனிக்க இங்கு கூட உடலுறவு முறைகள் சொல்லி தர வேண்டிய அவசியம் இல்லை) இதயம் மூளை செயல்பாடுகள் சொல்லித்தருவது போல கர்ப்பப்பை, கருப்பை, விந்தகம், ப்ராஸ்டேட் பற்றிச் சொல்லித் தரலாம். இதய பாதிப்பு வராமல் தடுக்கும் வழி முறைகள் சொல்லித்தருவது போல பால் உறுப்புகள் பாதிப்பு வராத தூய்மையான வாழ்க்கைப் பற்றிச் சொல்லித் தரலாம் (இப்போதும் உடலுறவு பற்றிய பேச்சே ஆரம்பிக்க வேண்டிய அவசியமில்லை)

அதற்கடுத்து எந்த வய்தில் குழந்தை பெறுவது ஆரோக்கியம், எந்த வயதிற்குப் பிற்கு குழந்தை பெறுவதை தவிர்க்கலாம்? சொந்தத்தில் திருமணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் என்ன? என்பது போன்றவற்றைக் கற்றுக் கொடுக்கலாம்.

இவ்வாறு போகும் பாலியல் கல்வியில் எங்கு தவறு நேரமுடியும் என்று நினைக்கிறீர்கள்.

செக்ஸ் கல்வி

செக்ஸ் கல்வி

இதில் எந்த விதமான உதாரணங்களைச் சொன்னாலும் நகைப்பிற்கும் கேலிக்கும் உள்ளாக்கப் படும் விஷயங்களாகவே உள்ளன.

சொல்லித் தெரிவதல்ல மன்மதக் கலை என்று சொல்லி இருக்கிறார்கள். படுக்கை அறை பாடம் என்பது வேறு; பாலியல் கல்வி என்பது வேறு.

பள்ளிகளில் பாலியல் கல்வி என்ற சொல்லே ஏதோ ஒரு கெட்ட வார்த்தை என்ற அளவில் யோசிக்கப் படுகிறது. பள்ளிகளில் மன்மதக் கலையைச் சொல்லிக் கொடுத்தால்தான் அது விவாதத்திற்குரிய விஷயமாக இருக்கும்.

அனைவருக்குமே எதிர்பாலினர் மேல் ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். அது இயற்கையான இயற்கை.

அந்தக் குறுகுறுப்பையே பலரும் காதலாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்குகின்றனர். அந்தக் குறுகுறுப்பு உணர்வுடன் திரைப்படம் பார்க்கத் தொடங்கினால் அதில் உள்ள உணர்வு தூண்டல் காட்சிகள்(இதனை காதல் காட்சிகள் என்றும் சொல்லுவார்கள்), பார்க்கும் சூழலில் அந்த இருவரும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்கிறார்கள். இன்னும் இணையம் மூலமாக நமது மக்களின் படிக்கும் ஆர்வம் வேறு வளர்ந்து வருகிறது. அதில் அவர்கள் படிக்கும் இலக்கியங்கள் வேறு பற்பல தவறுகளை ஏதோ தவறில்லாத் தவறுகளாக எண்ணக் கூடிய சூழல் கூட உருவாகிக் கொண்டு இருக்கிறது.

விளைவுகளாக பல தேவையில்லாத கருத்தறிப்புகளையும், அவசியமே இல்லாத திருமணங்களையும் விவாகரத்துக்களையும் சந்திக்கவேண்டியிருக்கிறது.

இதனைத் தவிர்க்கத்தான் பாலியல் கல்வி அவசியமாக இருக்கிறது. பாலியல் கல்வி என்பது பால் என்றால் என்ன? பால்வேறுபாடு என்றால் என்ன? வளரிளம் பருவத்தில் ஏற்படும் இயல்பான மாறூபாடுகளையும் அதன் அடிப்படைகளையும் எடுத்துச் சொல்லும் வகையில் அமைதல் நலம்.

பதின்ம வயது குழந்தைகளிடம் வயதுக்கு வருதல், அந்த கால கட்டத்தில் உடலில் ஏற்படும் மாறுதல்களையும், அதன் அடிப்படைத் தத்துவங்களையும் எடுத்துச் சொல்லுதல் எப்படி தவறாக இருக்க முடியும். ஒரு வய்துக்கு வராத பெண்ணிடம் வயதுக்கு வருதல் என்றால் என்ன? உதிரப் போக்குவந்த உடன் செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றி பெரும்பாலானவர்கள் சொல்லித்தானே வைக்கிறோம். அதையே கொஞ்சம் அறிவியல் கண்ணோடு பார்ப்பதுதான் பாலியல் கல்வி.

ஏன் வயதுக்கு வருகிறோம். அந்த சூழலில் பெண்களின் உடலில் நடப்பது என்ன? ஆண்களில் நடப்பது என்ன?

சமீபத்தில் ஒரு இடுகையில் படித்தேன். அக்குளில்முடி இருப்பதைப் பார்த்து அந்தப் பெண்ணின் கணவன் , பெண்ணின் பெண்மையில் சந்தேகம் கொள்வதுபோல் சூழல் ஏற்படும்வகையில் ஒரு தவறான புரிதலை திரைப்படம் கொண்டுவருவதாக எழுதி இருந்தார் (எழுதியவரின் கருத்தும் கோணமும் சரியே). உண்மையில் அக்குளில் முடி இல்லாவிட்டால்தான் அந்தப் பெண்ணின் பெண்மையில் சந்தேகம் கொள்ள வேண்டும். பருவ மாற்றங்களில் மிக முக்கியமான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று.

அதேபோல்தான் உடலில் முடி வளருவது, மார்பகங்கள் வளருவது, அதன் அடிப்படைத் தேவை, காரணங்கள் போன்றவற்றையும் சொல்லித் தருவதிலும் உடல் பாகங்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது பற்றி சொல்லித் தருவதும் கூட பாலியல் கல்விதான். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவணம் எடுத்துச் சொல்லித் தந்தால் தானாகவே இனப்பெருக்கம் பற்றியும் எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லித் தர முடியும்.

அடுத்த பாலினரைப் பற்றி தேவையில்லாத கற்பனைகளுக்கு முற்றுப் புள்ளிவைத்தாலே பல பிரச்சனைகளைத் தவிர்க்க முடியுமே.

ஆண்கள் உடைகளிலேயே எல்லாப் பணிகளையும் செய்யும் பெண்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். இந்த உடைகள்தான் வசதியாக இருப்பதாகச் சொல்க்கிறார்கள். அதையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பெண் உடையில் இருக்கும் ஆண்களைப் ப்ற்றிய கண்ணோட்டம் எவ்வாறு இருக்கிறது. இதைப் பற்றி நண்பர் புருனோ பல இடுகைகளில் தெளிவாக கொடுத்துவிட்டதால் நான் தனியாக இங்கே நீட்டப் பொவதில்லை.

உண்மையில் பதின்ம வய்து வளர்ச்சி பற்றி தெளிவான கருத்து நம்மில் பலருக்கும் இருக்கவில்லை. கிராமப் புறங்களில் கூட வளரிளம் பெண்களுக்கான பயிற்சி முகாம்களை தொடர்ச்சியாக அரசு நடத்திவருகிறது. அதில் மருத்துவர், சட்ட வல்லுநர்கள், விளையாட்டு வீரர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள். அதில் கூட ஓரளவு நடுத்தர வர்க்கத்தினர்மற்றும் பெரியவீட்டுப் பெண்கள் கலந்து கொள்வதில்லை. ஆண்களுக்கான கல்வி சக நண்பர்களிடம்தான் கிடைக்கிறது. அது ஒரு கட்டத்தில் துண்டுஅணியாத் துண்டுப் படங்களில் வந்து நிற்கிறது.

அதனால் பாலியல் கல்வி அவசியம் என்றுதான் தோன்றுகிறது.

பாலியல் கல்வியை அறிமுகப் படுத்துவதில் உள்ள முக்கியப் பிரச்சனை என்னவென்றால் பாலியல் கல்வி என்பதை மன்மதக் கலையைச் சொல்லித் தருவதுபோல பலரும் நினைத்துக் கொண்டு இருப்பது தான் முக்கியக் காரண்மாக தோன்றுகிற்து. அதனால்தான் கற்றறிந்தவர்கள்கூட பொது அவச் சொல்லுக்கு பயந்து அதனை எதிர்பதாகவே தோன்றுகிறது.

இதற்கு ஒரு தீர்வு உண்டு. கூச்சப் படாமல் இதற்கு வேறு ஒரு பெயர் வைத்து விடலாம். அந்தப் பெயரில் மன்மதன்,ரதி, பால்,செக்ஸ் போன்ற வார்த்தைகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது எனப்து இந்தக் கல்வியை மக்களுக்கு கொண்டு சேர்க்கும். இல்லையன்றால் பெரும் எதிர்ப்பை மீண்டும் சந்திக்க வேண்டி இருக்கும்.

================================================

தோழர் பராரியின் பின்னூட்டத்திற்கு பதில் இந்த இடுகையில் இருக்கிறது
செக்ஸ் கல்வி- இப்பவே கண்ணக் கட்டுதே பாகம்-2

Sunday, June 14, 2009

உதவிக் கேப்டன் யுவராஜ் உதவுவாரா? உதறுவாரா?

இந்திய கிரிக்கெட் அணிக்கு இன்று வாழ்வா, சாவா போராட்டம். இன்று ஞாயிற்றுக் கிழமைவேறு. ஞாயிற்றுக் கிழமையாக இல்லாவிட்டாலும் பெரிய தொந்தரவு இல்லை. ஆட்டம் இரவு பத்து மணிக்குத்தான் ஆரம்பிக்கப் போகிறார்கள். இதுமாதிரி ஒரு சூழலில் விளம்பரதாரர்கள் பணத்தைக் கொட்டுவார்கள். மூன்றுமணிநேரமும் மக்களை தொலைக்காட்சியில் உட்கார வைக்கலாம் என்ற கனவில் இருப்பார்கள்.

சென்ற கோப்பையின் போது கூட நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளோடு விளையாடும்போது இந்திய அணிக்கு இப்படி ஒரு அழுத்தம் இருந்ததுதான்.

ஆனால் அப்போதைய மந்திரம் வேறு.

என்ன கொண்டுவந்தோம்;இழப்பதற்கு


எண்ணத்தில் ஆடிய ஆட்ட்ம் அது.

இன்று நடப்புச் சாம்பியன் இந்திய அணிதான்.

ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி நடையைக் கட்டியாகிவிட்டது.

இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை அணிகளை அந்த மண்ணில் வைத்து தோற்கடித்து இருக்கிறது. இன்று இங்கிலாந்து மண்ணில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை.

சென்ற கோப்பையின் போது யுவராஜ் அருமையான ஒரு ஓவர் ஆடினார். அனைத்துப் பந்துகளிலும் ஆறு. அந்த ஓவர் இல்லாமல் பார்த்தால் இந்தியா வென்று இருப்பது சிரமமே.., http://newsimg.bbc.co.uk/media/images/41350000/jpg/_41350926_winners_ap300.jpg

இன்று அந்த ஓவர் திரும்பவும் கிடைக்குமா..., யுவராஜ் செய்வாரா?


Yuvaraj Six Sixes in One over in T20 - Funny home videos are a click away


சென்ற உலகக் கோப்பை நடக்கும்போதுதான் டிராவிட் ராஜினாமா செய்தி வந்தது. இந்த முறை துவக்கத்திலிருந்தே சேவக் பற்றிய பேச்சுக்கள்தான்.

பொறுப்பு, பொறுப்பு என்று சொல்லி டோனியின் வேகமான ஆட்டத்தை நிதானமாக மாற்றியாகிவிட்டது. நிதானமான பேச்சை வேகமான பேச்சாக செய்தாகிவிட்டது.

ஒருவேளை முடிவெட்டிக் கொண்டதுதான் தவறா?
http://www.cricnews.in/wp-content/uploads/2008/04/dhoni.jpg
சிங்கம்போல சீறிவர்ரான் எங்க பேரண்டி என்று பரவைபாட்டிய பாடச் சொல்லலாம்.

பார்ப்போம் எப்படி திட்டம் அமைந்திருக்கிறது என்று?

Saturday, June 13, 2009

திருப்பதியாரின் பாதங்களுக்கு ஒரு மடல்

அன்பும், பாசமும் கருணையும் கொண்ட திருப்பதி ஏழுமலையான் அவர்களுக்கு,

உங்களுக்கு ரூ45 கோடி மதிப்பிலானா ஒரு வைர கிரீடம் காணிக்கையாக கிடைத்துள்ளதாக செய்திகள் சொல்லுகின்றன. மிகவும் மகிழ்சி. உங்கள் மீதுதான் அந்த பக்தருக்கு எவ்வளவு அன்பு?

இரண்டரை அடி உயரம் கொண்ட இந்த கிரீடம், 34 கிலோ 800 கிராம் எடையுடன் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், 35,700 பெல்ஜியம் வைரக்கற்களும், 819 ஆப்ரிக்க பச்சை கற்களும் பதிக்கப்பட்டுள்ளன.இந்த கிரீடத்தை பொற்கொல்லர்கள் ஒன்பது மாதங்கள் வேலை செய்து தயார் செய்துள்ளனர். வைரக் கிரீடத்தின் கீழ் பாகத்தில், தாமரைப் பூ வடிவத்தின் மையப்பகுதியில் திருநாமம் போன்ற வடிவத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு பச்சைக்கல், ஆப்ரிக்க நாட்டில் ஒரு கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்புடையது என செய்திகள் கூறுகின்றன.

Align Left




























எங்களுக்குக் கூட உங்கள் மீது மிகவும் அன்பு உண்டு: ஆனால் அதை வெளிக்காட்டக் கூடிய வாய்ப்புதான் கிடைக்கவில்லை.

வெள்ளிமுதல் இந்தக் கீரிடம் உங்களுக்கு அணிவிக்கப் பட்டு 15 நாட்கள் எங்களுக்கு நீங்கள் காட்சி அளிப்பீர்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

மிகவும் மகிழ்ச்சி.

உங்களுக்கு இதே போல் ரூ.45 கோடியில் கீரிடம் கிடைப்பது ஏழாவது முறையாகும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் பாருங்கள் திருப்பதியாரே...., எங்கள் ஊர்களிலும் வெங்கடேசர்கள் இருக்கிறார்கள். அவர்கள் துளசி மாலையோடு திருப்தி அடைந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் இவர்களுக்கு சுண்டலும் எப்போதாவது புளியோதரை, பொங்கல் கிடக்கிறது.


அவர்களுக்கும் இதேபோல் ஏழு இல்லாவிட்டாலும் ஒன்றாவது ஏதோ சில லட்சங்களிலாவது கிடைத்தால் நன்றாக இருக்கும். எங்கள் ஊர் மக்களையும் அந்த அளவு நீங்கள் தயார் செய்து கொடுத்தால் அவர்களும் இது போல் வாரி வழங்கும் வள்ளல்களாக மாறுவார்கள்.

உங்களுக்கு எங்கள் ஊர் வெங்கடேசர்களும் , நாராயணர்களும் பிடிக்கும்தானே?

இங்ஙனம்
இது போன்ற பொருட்களை
செய்திகளில் மட்டும் பார்க்கும்
உன் பக்தன்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails