அனானி மற்றும் பெயரில்லா போன்றவர்களின் கொட்டத்தை அடக்குவதாக நினைத்துக் கொண்டு இத்தனை நாட்களாக அனானி உள்ளே வருவதையே தடை செய்து வைத்திருந்தேன். நான் மட்டுமல்ல நண்பர்கள் பலரும் அவ்வாறு வைத்திருக்கிறோம்.
ஓபன் ஐ.டி. பின்னூட்டம் போடக் கூட வழியில்லாமல் கதவுகளை இருக்க மூடி வைத்திருந்த எத்தனையோ பதிவர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன்.
ஆனால் அதனால் கண்ட பலன் என்ன? பார்த்தால் ஒன்றும் இல்லை. பல்வேறு நகைச்சுவை ரசிகர் மன்றர்கள், அனானி மற்றும் ஓப்பன் ஐ.டி. உபயோகப் படுத்தி பல்வேறு வகையான பல்வேறு சுவையான பின்னூட்டங்களை கொடுக்கின்றன்ர். நாகரிகமற்ற பின்னூட்டங்களை கட்டுப் படுத்த நமக்கு பல வழிகள் இருக்கின்றனவே.., அப்புறம் எதற்கு பின்னூட்டக் கதவுகளை இருக மூடி வைக்க வேண்டும்?
கூகிள் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும்தான் பின்னூட்டம் இடமுடியும் என்ற வகையில் பின்னூட்டப் பெட்டியை வைத்திருந்தால் கூட நாகரிகமற்ற பின்னூட்டமிடவே தனி கணக்கு வைத்திருப்பவர்கள் இருக்கிறார்களே..,
அப்புறம் எதற்கு பின்னூட்டப் பெட்டியை இருக்கிவைக்க வேண்டும். தாராள மயமாக்குவோம். அனானியை அனுமதிப்போம்.