Showing posts with label குழந்தைகள் மீதான வன்முறை. Show all posts
Showing posts with label குழந்தைகள் மீதான வன்முறை. Show all posts

Sunday, May 12, 2013

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் கொண்டாடும் விழாக்கள் பல. அதில் பொங்கல் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதில் மாட்டுப் பொங்கல் தனித்தன்மை வாய்ந்தது.

விவசாயத்திற்கு பலவிதங்களில் மாடுகளின் பங்கு முக்கியமானது. காளைகள் உழுவதற்கு உதவுகின்றன. வண்டிகளை இழுப்பதன் மூலம் பயணத்திற்கும் சரக்கு இடமாற்றத்திற்கும் மிகவும் உதவுகின்றன. பல எந்திரங்களும் எந்திரங்களின் மூலம் இயங்கும் வாகனங்கள் உபயோகத்தில் இருந்தாலும் காளைகளின் பங்கு முக்கியமானது. பசுக்களும் சளைத்தவை அல்ல. பால் பொருட்கள் இல்லாமல் நம்மால் நமது வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாடுபோல உழைப்பு என்பதே விசுவாததிற்கும் கடின உழைப்புக்கும் கூறப் படும் வார்த்தையாக இருக்கிறது.

அவ்வளவு கடுமையாக உழைக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. அன்று அதிகாலையிலேயே மாட்டைக் குளிப்பாட்டி விடுவார்கள். அன்றைய தினம் விரும்பிய வண்ணம் மாட்டுக்கு மேய்ச்சல் இருக்கும். விரும்பிய வண்ணம் வண்ணங்கள் தீட்டி, கொம்புகள் அலங்கரித்து சில இடங்களில் துணிகள் கூட அணிவித்து மகிழ்வார்கள்.

மாலைப் பொழுதில் பொங்கல்வைத்து அதனை மாட்டுக்கு ஊட்டி அழகு பார்த்து பின்னரே குடும்பத்தினர் உண்டுமகிழ்வார்கள்.

குறிப்பாக அன்றைய தினம் மாட்டுக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டார்கள்.

========================================================================

குடும்பத்திற்காக கடினமாக உழைக்கும் இன்னொரு ஜீவன் உண்டு. அவர்தான் அன்னை. அவர் எவ்வள்வு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் குடும்பத்தின் அடிப்படை வேலைகள் அனைத்தையும் செய்வார். குழந்தை வளர்ப்பில் அவரது பங்கு மிக முக்கியமானது.

வெள்ளையர் கண்டுபிடித்த MOTHER'S DAY அன்று அன்னையருக்கு அனைவரும் மரியாதை செலுத்துவார்களாம்.
அன்றும் கூட இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து கொண்டாடினால் அதையும் அன்னைதான் செய்ய வேண்டியிருக்கிறது. தாயாருக்கு மட்டும் புத்தாடை என்பதை அந்த தாயாரே விரும்புவதில்லை.


எனவே அன்னையர் தினத்தை அனுதினமும் கொண்டாடி அன்னையரைப் போற்றுவோம். (அதற்காக இன்று கொண்டாடாமல் இருந்து விடவே வேண்டாம். அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்). அன்னை என்றால் உங்களைப் பெற்ற அன்னையை மட்டுமல்ல.
உங்கள் குழந்தையைப் பெற்ற அன்னையையும் தான்.

=======================================================================
இவரும் கூட அம்மாதான்




=================================================================


சில குடும்பங்களில் அம்மா செய்யும் வேலைகளுக்காகத்தான் வேலைக்காரி வைத்திருக்கிறார்கள். பல குடும்பங்களில் அம்மாதான் அந்த வேலைகளைச் செய்கிறார்.

நாளைய தினம் பதிவர்கள் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய கலந்துரையாடலுக்குச் செல்லப் போவதால் இந்தப் பதிவினை இன்றே வெளியிட்டு உள்ளேன்.

குழந்தைகள் மீதான வன்முறைபற்றி நான் எழுதிய இந்தப் பதிவில்

பின்னூட்டத்தில்

"குழந்தையை வேலைக்காரி மாதிரி நடத்தாதே" என்று சொல்லும்போதே, வேலைக்காரிக்கும், வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் எளிதில் புரிந்துவிடும். இதில் நீங்கள் குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை.
என்று நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

எனது பதிலில்



பல நேரங்களில் சின்ன சின்னவேலைகளுக்குக் கூட வேலையாட்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நம்வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளும் நாம் செய்ய வேண்டிய வேலைகள்தான். இதில் வேலைக்காரி மாதிரி நடத்தாதே. என்ற வாக்கியத்தின் பொருளைக் கூற முடியுமா? வேலைக்காரர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்ல. உங்கள் வேலையையைச் செய்ய உங்கள் உடலும் நேரமும் இடம் கொடுக்காததால் விலை கொடுத்து வேலையை வாங்குகிறோம். அப்படிப்பார்த்தால் உங்களைவிட வேலைக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகமாக இருக்கவேண்டும். வேலைக்காரர்களைப் போல் குழந்தையை நடத்தாதே என்ற வாசகம் எழும்போதே வேலைக்காரர்களையும் குழந்தைகளையும் அடிமையாக நடத்துவதாக பொருள்படும் அல்லது உங்கள் வேலையை மற்றவர்கள் மேல் திணிக்கும் கொடூர பழக்கத்திற்கு குழந்தையை அடிமைப் படுத்துவதாகப் பொருள்படாதா......


மேலும் இது தொடர்பான விவாதங்களைப் படிக்க இங்கே செல்லவும்

கலந்துரையாடலுக்குச் செல்லும் முன் இது போல இன்னும் பல கேள்விகளுடன் செல்லுங்கள். தெளிவு படுத்திக் கொண்டுவாருங்கள்

டிஸ்கி;- மீள்பதிவுதான். முதன்முதலில் வெளிவந்த தேதியறிய முதல் பின்னூட்டம் பார்க்கவும்

Saturday, April 25, 2009

குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய லக்கிலுக் அவர்களின் பதிவும் எனது குழப்பங்களும்

[Child-Abuse.jpg]



லக்கி லுக் ஐயாவின் வலைப் பூவில் மேற்கண்ட படத்தினை பார்க்க நேர்ந்தது. குழந்தைகளின் மீதான வன்முறை பற்றிய படம் என்பதால் அவரை கேட்காமலேயே அந்தப் படத்தினை உபயோகப் படுத்தி உள்ளேன். பொறுத்துக் கொள்வாராக.


இந்தப் படத்தில் இருப்பதில் பெரும்பாலான நிகழ்வுகள் குழந்தைகளின் மீதான வன்முறைதான். இதில் எள்ளளவும் சந்தேகம் இருக்கமுடியாது. ஆனால் சில் விஷ்யங்களில் எனது கருத்து கொஞ்சம் மாறுபடுகிறது. அதைப் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

1.குழந்தைகளை வேலைக்காரர்களாகப் பயன்ப்டுத்துவது... அது சொந்தக் குழந்தையாக இருந்தால் கூட.....

கண்டிப்பாக குழந்தைகளை வேலைக்காரர்களாகப் பயன்படுத்துவது கொடுமைதான். ஆனால் சொந்த வீட்டில் குழந்தைகளை அவ்வப்போது சின்ன சின்ன வேலைகளைச் செய்யச் சொலவது என்பது வன்முறையில் வருமா....
சட்டத்தின் முன் குழந்தைகளை கொடுமைப் படுத்தவில்லை. என்பதை நிரூபிப்பது எப்படி?

அல்லது குழந்தைகளை ரிமோட் எடுத்துத் தருமாறு சொல்வது எல்லாம் வன்முறை என்ற வட்டத்துக்குள் கொண்டுவந்து விடுவார்களா,,,,

2.அழுக்கான கிழிந்த உடைகளை குழந்தைகள் அணிந்திருக்கும் நிலைகூட குழந்தைகளுக்கெதிரான வன்முறையில் அடங்குகிறதாம்.

அதற்கு என்ன தீர்வு? சட்டப் படி யாருக்கு தண்டனை கொடுப்பது? நல்ல உடைகள் கொடுக்கும் வசதியும், நல்ல உணவும் கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் இல்லாத பெற்றோரை என்ன செய்வது?

3.குழந்தைகளுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும் செய்து கொடுக்காத நிலை குழந்தை மீதான வன்முறையாக அமைகிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரை இந்த இரண்டும் இலவசமாக கிடைத்தாலும் இரண்டு மூன்று கிலோமீட்டர் சென்று அதைப் பெறுவது என்பதனைக் கூட கடினமான வேலையாகக் கருதும் நிலையுல் உள்ள அப்பாவி பெற்றோரை நாம் என்ன செய்ய முடியும்.? மந்தரித்தல் மட்டுமே குணப் படுத்தும், மருந்தும் மாத்திரைகளும் துணை வழிகள்தான் என நினைக்கும் பெற்றோர் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.

4. கண்காணிப்பிலாத சூழலில் குழந்தையை விடுதல்.

இன்றைய வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில் தாத்தா பாட்டி இல்லாத நிலையில் வேலைக்காரர்களில் மேற்பார்வையில் குழந்தைகள் இருப்பதும் கண்காணிப்பில்லாத சூழலே என்பது என் கருத்து. ஆனால் பெரும்பாலான நகரக் குழந்தைகள் இந்த நிலையில் தான் இருக்கின்றன.

................................................................................................................

பள்ளியில் தண்டனைகள்:-

பள்ளியில் குறும்புகள் செய்யும் குழந்தைகளைச் சரி செய்வது என்பது மிகப் பெரிய செயலாகவே இருக்கிறது.

மன ரீதியான தண்டனையோ உடல் ரீதியான தண்டனையே கொடுக்கப் படுகின்றன.

தண்டனைகள் இல்லாவிட்டால் எப்படி சரி செய்வது?

நீ செய்வது தவறு என்று சொன்னால் குழந்தையின் மனம் வருத்தப் படும் என்றால அது வன்முறையில் வருமா?

மனரீதியான தண்டனையைவிட உடல்ரீதியான தண்டனைக் கொடுத்தல் பரவாயில்லை என்றால் கொண்டை பிரம்பு கொண்டு அடித்தல் குழந்தையை திருத்தி விடுமா?

ஏதோ ஒரு பள்ளியில் குழந்தை தவறு செய்தபோது ஆசிரியை தன்னைத்தானே அடித்துக் கொண்டதாகவும் அதனால் மணவன் மனம் திருந்தி தவறை ஒத்துக் கொண்டதாகவும் செய்திகள் வந்தன. இது அந்த குழந்தையின் மனத்தை க் காயப் படுத்துவது ஆகாதா? இதைப் பின் பற்றி குழந்தைகள் பெற்றோரை மிரட்டச் செய்ய மாட்டார்களா...?


ஒரு கேள்விக்கான பதிலை நூறுமுறை எழுதுமாறு பணிக்க படுவதால் குழந்தைகளின் தூக்கம் கெடாதா? அது வன்முறை என்று சொல்லப் படுமா? அப்படி என்றால் இரவு முழுவதும் குழந்தைகளை கண்விழித்துப் படிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்துதல் வன்முறைதானா? அந்த வன்முறை தவிர்க்கப் பட்டால் குழந்தைகள் எப்படி பெரிய அதிகாரிகளாகவும் தொழிலதிபர்களாகவும் வரமுடியும்? அப்படி என்றால் அவர்களை தூங்கச் சொல்லி அவர்களது எதிர்கால வலர்ச்சியை சுருக்குவது கூட வன்முறைதானா?

........................................................................................................................................

பிரம்பால் குழந்தைகளை அடிப்பதை எம்ஜியார் படத்தில் கத்திவீசுவது போல் மிகத்திறமையாகச் செய்யும் ஆசிரியர்களை ஊக்குவிப்பது யார்?

மைதானத்தை சுற்றி வருவதால் உடல் வலிமையடையும் என்றால் குழந்தையின் தாங்கும் சக்தி கூட தெரியாத நிலையில் ஆசிரியர் இருந்தால் அதற்கு யார் பொறுப்பு?
..........................................................................................................................................


இது எல்லாவற்றையும் விட பெரிய வன்முறை ஒன்று பெரும்பாலான குழந்தைகள் மீது நடந்து வருகிறது. பெற்றோர் பள்ளியில், பெற்றோர் விரும்பும் பாடங்களில் பெற்றோர் விரும்பும் விளையாட்டுகளில் குழந்தைகளை கட்டாயப் படுத்துவது.., இதற்கு ஒரு விடிவு காலம் எப்போது வருமோ தெரியவில்லை?

அப்படி வரும் காலகட்டத்தில் மாணவர்களுக்கு இந்தப்பாடம் எடுத்தால் இந்த வளர்ச்சி கிடைக்கும் என்ற முதிர்ச்சி கண்டிப்பாக இருக்குமா ? அதுவும் தெரியவில்லை.

ஆனால் இன்றைய சூழலில் பெற்றோருக்கே அது தெரியாமா என்றும் தெரியவில்லை...

..........................................................................................................................

இது குழந்தைகளின் மீதான வன்முறைதானா? என்பது எனக்குத்தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன்.

பல வீடுகளில் சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறேன் பேர்வழி என்று குழந்தையை வைத்துக் கொண்டு ஒருமணிநேரம், இரண்டு மணிநேரம் உணவு ஊட்டுகிறார்கள். இது நகர்புறத்தில் ஓரளவு வளர்ந்து கொண்டிருக்கும் கிராமங்களில் குடும்பத்தலைவியாக இருக்கும் தாய்மார்களிடம் சாதாரணமாக காணப் படுகிறது. ஒவ்வொருவேளையும் ஒருமணிநேரத்திற்கு மேல் உணவு ஊட்டுவது வன்முறையா இல்லையா?

சிலநேரங்களில் அவர்களுக்கு பிடித்த ருசியில் சமைத்துவிட்டு சாப்பிடுமாறு குழந்தைகளை கட்டாயப் படுத்துகிறார்கள். சில நேரங்களில் கணவன்மார்களையும் கட்டாயப் படுத்துகிறார்கள். இது வன்முறையா? இல்லையா?

...........................................................................................................................

குழந்தைகளின் மீதான வன்முறை பற்றி பேசும் போது பெற்றோரையும் ஆசிரியர்களையும் தனித்தட்டில் வைத்துப் பார்க்க வேண்டும். அவர்களையும் ஒட்டு மொத்த வன்முறையாளர்களுடன் சேர்ப்ப்து அதைப் பற்றிய பேச்சுகளை நீர்த்துப் போகவே செய்யும்.

பெற்றோர்களுக்கு ஏற்கனவே பல பயிற்சி வகுப்புகள் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (அரசுமருத்துவ மனைகள்) தரப் படுகின்றன. ஆசிரியர்களுக்கும் கூட மாணவர்களின் மனவியல் தொடர்பான பாடங்கள் இருக்கும் என்றே நினைக்கிறேன். அவைகளை இன்னும் தரம் உயர்த்தி உணர்ந்து படிக்கச் சொன்னால் அந்தப் பிரச்சனைகளையும் சரி செய்து விடலாம்.

ஒட்டு மொத்த குழந்தைகள் மீதான வன்முறை என்று பேசுவது பல மோசமான கொடுமைகளையும் வீட்டுப் பாடம் எழுத கட்டாயம் படுத்துவதையும் ஓரே தட்டில் வைத்து பார்க்க வழிவகுத்துவிடும்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails