Tuesday, December 29, 2009

டபுள் மீனிங் 29-12-09

வழக்கம்போல் சுதந்திரப் பறவையாகவே சுமித்ரா சுற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உள்ள சாதாரணப் பொறுப்புக்களைக்கூட உடன் படிக்கும் மாணவர்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டே இருந்ததால்  அவளுக்கு தான் ஏதோ ஒரு சாதனை மங்கை போன்ற பெயர் வந்துவிட்டிருந்தது.  அதுவும் சுமன் முன்மொழிந்த நார்த்தி பீஸைத் தோற்கடித்துவிட்டதால் தனக்கு ஒட்டு மொத்த மாணவர்கள் செல்வாக்கும் நிறைந்து இருப்பதாகத் தனக்குத் தானே நினைத்துக் கொண்டிருந்தாள்.  அவளை ஓட்ட நினைக்கும் மாணவர்கள் அவள் கையசைத்தாலும் கண்ணசைத்தாலும் சூப்பர் சூப்பர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அவள் தும்மினால் கூட 1967லிருந்து இந்தக் கல்லூரியி இவ்வளவு சூப்பராக தும்ம ஆளே இல்லை என்று சொல்ல ஆரம்பித்திருந்தனர், அதையும் சுமித்ரா நம்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.


இப்படி அதீத நினைப்பில் சுற்றிக் கொண்டிருந்தவளிடம் உன்னுடன் வந்திருப்பவன் பெயர்  தீஃபக் குமார் என்றதும் அவள் கண்களில் பொறிபறக்க ஆரம்பித்தது.

கொஞ்சம் உங்கள் கால்கள் துவளுவது போலத் தோன்றியது.  அவள் த்னியாகத்தான் பொருட்காட்சிக்கு கிளம்பினால் பொருட்காட்சி வாசலில் ஹாய் சொல்லிக் கொண்டு தீபக் குமார் வந்தான். அவளும் ஒரே கல்லூரி என்பதாலும் இப்போதெல்லாம் பலரும் பல பிரச்சனைக்கு தன்னை அனுகுவதாக நினைத்துக் கொண்டிருந்ததாலும் அவனுடன் பேசிக் கொண்டுவந்திருந்தாள்.  ஆனால் இவர்கள் இப்படி பேசுவதற்கு உதட்டளவில் எதிர்ப்பு தெரிவித்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் உதருவதாகவே தோன்றியது.

தீபக் குமார் அப்போது கையில் பெரிய சைஸ் அப்பளத்துடன் வந்தான். ஒரு அப்பளத்தை  சுமித்ராவிடம் கொடுத்தான். மற்ற மாணவர்களிடம் என்ன பாஸ் நீங்க இதை ஏற்கனவே டேஸ்ட் பண்ணியிருப்பிங்களே...,


பாருடா டபுள் மீனிங் பேசறான். சுமனின் நண்பன் ஒருவன் தனக்கும் தன் அருகில் இருந்தவனுக்கும் மட்டும் கேட்பதுபோல் சொல்லிக் கொண்டது  சுமிதராவுக்கும் சேர்ந்து கேட்டுத் தொலைத்தது. 

இல்லை  எங்களுக்கு இதிலெல்லாம் இண்டரெஸ்ட் இல்ல இது சுமன்..,

நான் அப்படி இல்லப்பா ..,   டேஸ்ட் பண்ணனும்னு நினைச்சா சான்ஸ் கிடைச்ச உடனே டேஸ்ட் பண்ணிடுவேன்..,

ஆனால் பாரு..,  இதெல்லாம் ஒருநாள் சாப்பிட்டா ஓ.கே.., டெய்லினா  வயிறும் தாங்காது.., பாக்கெட்டும் தாங்காது..,

ஏண்டா.., இவன் அப்பளத்தைதான சொல்றான்,  எனக்கு என்ணென்னமோ தோணுதுடா..,

ஓ.கே பாஸ் நாங்க கிளம்புறோம். நீங்க நம்ம ஸ்டால பாத்துக்கங்க.., நாங்க சுத்திப் பார்க்கறதுக்கு நிறைய இருக்கு. சுமித்ரா போலாமா?

போம்ம்மா போ..,  போய் சுத்திப்பாரு...,  சுமன் சொன்ன குரல் அவனுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது,

தொடரும்............................................................>>>>>

முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

============================================================

Monday, December 28, 2009

நீ அறிவாயா?

எழுதிய கடிதம்

உனக்கானது

எழுதிய எழுத்தும்

உனக்காகவே

வடித்திருக்கும்

உணர்வும்

உணக்காகவே..,

கடைசியில்

கையெழுத்திட்டவனும்

உனக்கானவனே..,


உண்மை ஒன்று

உனக்காக

சொல்ல நினைத்தது

ஆனால்

சொல்ல மறந்தது

உனக்காக

அமைந்தது

உனக்கானவனால்

கையெழுத்திடப் பட்டது

வழக்கம்போல்

அடுத்த காகிதத்தில்

அடுத்த உணர்வுகளுடன்

இப்போதெல்லாம்

குப்பைத் தொட்டிக்கு மட்டும்

Friday, December 25, 2009

விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பிடித்த ஒரு ரீமேக் படம்

விஜய்யின் ரீமேக் படங்களை பார்த்து ஒரு புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்  வலையுலக கண்மணிகளுக்காக இந்த புதிய ரீமேக் முயற்சி.

இன்றைய விஜய்யின் ரசனைக்கு ஒப்ப, இன்றைய ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில்  இங்கே ஒரு ரீமேக் ஆக்கும் முயற்சி நடைபெறுகிறது.

==========================================================================
விஜய்  பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகிறார். வீட்டில் அவர் அப்பா தனது  பல தொழில்கள் சம்பந்தமான டாகுமெண்ட்களை வைத்துக் கொண்டு ஏதாவது ஒன்று நிறுவணத்தை நிர்வகிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். ஆனால் விஜய் தான் படிக்க வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கும் அவரது அப்பாவுக்கும் சண்டை வருகிறது.  அவரது அம்மா இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறார். விஜய்  மெரினாவுக்கு நண்பர்களுடன் வந்து விடுகிறார்.

----------------------------------------------------------------------------

நாற்கரச்சாலையில் ஒரு டாப்லெஸ் காரினை பல சுமோக்கள் டயோட்டாக்கள் துரத்துக்கின்றன.  பல வாகனங்களையும் தடைகளையும் தாண்டி வாகனமானது  கத்திபாரா பாலத்தின் மேல் ஏறுகிறது.  காரின் வேகத்தினைக் கட்டுமடுத்த முடியாமல்  தடுமாற அதிலிருக்கும் நாயகி தமன்னா அப்படியே வானத்தில் பறந்துவந்து  மெரினாவில் விழுகிறார்.  அவர் விழும் இடத்திற்கு அருகில்  விஜய் குளித்துக் கொண்டிருக்கிறார்.  இருவரது கண்களும் பேசிக் கொள்கின்றன

இங்கு ஒரு ரீமிக்ஸ் பாட்டு

விழியில் விழிமோதி இதயக் கதவொன்று திறந்ததே

ஐஸ்ஸும்  ஐஸ்ஸும் க்ராசாகி  ஹார்ட் ஓபன் ஆனதே

கண்ணும் கண்ணும்தான் தெறந்தாச்சு

இப்படி கலவையான பாடல் ஒன்று ஒலிக்கிறது.

-------------------------------------------------------------------------------------

பாடலின் முடிவில்  தமன்னா அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். விஜய்யும் அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

சில நாட்கள் கழித்து  விஜய்  பைக்கில் சென்னை வீதிகளில் உலா வருகிறார். அப்போது சில சமூக விரோதிகள் அருகில் உள்ள சேரிப் பெண் வம்புக்கிழுக்க  அந்தப் பெண்  அந்த வீதியில் போவோர்  வருவோரையும்  பார்த்துக் காப்பாற்றுமாறு கதறுகிறார்.

அவரது அண்ணா என்ற குரல்  விஜய்  காதில் விழுகிறது.

உடனே அந்தத் தங்கையைக் காப்பாற்ற விஜய் பறந்து வருகிறார்.

அடியாள்: ஏய் யார்ரா நீ.........

விஜய்:  செவுத்தில வந்தா பல்லி..,

பறந்து வர்ரவன் கில்லி.., டா.......

அடியாட்கள் கூட்டத்தினை அடித்து நொறுக்குறார். குறிப்பிட்ட கட்டத்தில் அடியாட்கள் அதிகரித்துக் கொண்டே இருக்க விஜய் அடித்து நொருக்கிக் கொண்டே இருக்கிறார். அப்போது  ராயப்பேட்டை மருத்துவ மனையில் இடம் இல்லை என்று விஜய்க்கு குறுஞ்செய்தி வருகிறது.  உடனே சமுதாய நோக்கு கொண்ட விஜய்  வண்டியைத் திருப்பிக்கொண்டு சென்னையை விட்டு வெளியே வருகிறார்.  கத்திபாரா மேம்பாலம் நோக்கி வரும்போது  கலவரத்தை ஆரம்பித்த  முக்கிய அடியாள் தனது சுமோ வாகனத்துடன் மோதுகிறான். விஜய்  முக்கிய அடியாள் இருவரும் வானத்தில் பறக்கிறார்கள்.

நீ போக வேண்டியது ராயப்பேட்டை ஆஸ்பத்திரி இல்லடா..,

தண்டையார் பேட்டை ஆஸ்பத்திரி.., 

http://www.thehindu.com/2009/06/14/images/2009061450310101.jpg
என்று சொல்லி ஒரு உதை விடுகிறார். முக்கிய அடியாள் நேரடியாக தண்டையார் பேட்டையில் போய் விழுகிறார்.

விஜய் அப்படியே வானத்தில் பறந்து  அருகில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரின் கீழ் கம்பிகளை பிடித்துக் கொள்கிறார். அந்த ஹெலிகாப்டரை தமன்னா ஓட்டிவருகிறார்.

இருவரின் கண்களும் மீண்டும் பேசிக் கொள்கின்றன..  பழைய ட்யூன் மீண்டும் ஒலிக்கிறது.  விஜயின் கை வழுக்குகிறது. தமன்னா தனது இடுப்பு பெல்ட்டை கழட்டிக் கொடுக்கிறார். விஜய் அதன் துணையுடன்   தொடர்ந்து பறந்து வந்து ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் குதித்து விடுகிறார், அடுத்து உள்ள பெண்கள் கல்லூரியில் தமன்னா இறங்கிக் கொள்கிறார். 

விஜய் ஹெலிகாப்டர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டுவந்த நிகழ்ச்சியை  தொலைநோக்கி மூலம் அவரது அண்ணன் தலைவாசல் விஜய் பார்த்துவிடுகிறார். அவர் ராணுவத்தில் ஒரு உயர் பதவியில் வகிப்பவர்.


விஜயின் தலையில் பொறி பறக்கிறது. கட்டிடத்தில் குதித்த விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கிறார். உடனே தலையில் பறக்கும்பொறி நெஞ்சில் பறக்கிறது.  ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே..,




விஜய் தனது தந்தையிடம் சொல்லி  தனது நிறுவனம் ஒன்றைப் பார்க்க ஆரம்பிக்கிறார்.


விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கும் விவகாரம் ராணுவத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குதெரிந்து விடுகிறது. அவர் விஜயை மிரட்டுகிறார்.  தமன்னாவின் அண்ணன் என்பதால் விஜய் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்.


விஜய்க்கு புத்திமதி சொல்லும் வகையில்  விஜயின் நிறுவனத்திற்கு வந்து செல்கிறார். இந்தக் காட்சிகளை விஜயின் தொழில் போட்டியாளர்கள் கவனித்து விடுகிறார்கள். அவர்கள் தமன்னாவைத் தூக்க தயாராகிறார்கள்.
தமன்னாவை மறக்க முடியாமல் தடுமாறும் விஜய் தூக்கத்தை இழக்கிறார். அதை சரிசெய்யும் வகையில் அனைத்து நிறுவனங்களின் நிர்வாகத்தையும் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். பல நாட்கள் தூங்காமல் தொடர்ச்சியாக வேலை பார்க்கும் ரக்சியம்  கின்னஸ் புத்தகத்திற்கு தெரிந்துவிடுகிறது. விஜய் தூங்க நினைக்கும்போதெல்லாம் தமன்னா மிஸ்டு கால் கொடுத்து கடலை போடுவதால் விஜய் துளியும் தூங்காமல் வேலை செய்கிறார்.

விஜய் தூங்க நினைப்பதால் என்னைத்தாலாட்ட வருவாளா என்று பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிறார்.  விஜயைப் பார்த்து தூங்க வைப்பதற்காக தமன்னா விஜயின் நிறுவனத்தை அனுகுகிறார்.  கின்னஸ் சாதனையை நேரடியாக ஒளிபரப்பும் கேமிரா மேனா இருக்கும் மூன்றாவது அண்ணன் தமன்னா விஜயிடம் நேரில் கடலை போடுவதைப் பார்த்து காட்டிரி ஆகிரார்.  விஜயைக் கொள்ள முயற்சிக்கிறார்.  விஜயின் நண்பர்களை காப்பாற்றி அவரை அவரின் அப்பாவிடம் அழைத்துச் செல்கிறார்கள்.

விஜயின் அப்பா தமன்னாவைப் பார்த்து இது போன்ற சப்பை ஃபிகர்களை விட்டுவிடுமாறும்  விஜய்க்கு  குருவி த்ரிஷா, அ.த,ம. ஷ்ரேயா, வில்லு நயந்தாரா, வேட்டைக்காரன் அனுஷ்கா போன்று நச் ஐட்டமாக பார்ப்பதாகச் சொல்லுகிறார்.

அதெல்லாம் மார்க்கெட் போன ஆளுங்க...,  
இவ இவ இவ..  
மார்கழி மாசத்துக்கு ஏத்த ஆளு...,  என்று பன்ச் டயலாக் விடுகிறார்.  டரியலான அவரது அப்பா அடியாட்களை அனுப்புகிறார்.  இரு குடும்பத்தாரும் மிரட்டுவதால் விஜயின் நண்பனின் தந்தை  மும்பை தாதாவிடம் அனுப்புகின்றனர்.

மும்பை தாதா  தனது அடியாட்களுடன்  இந்திப் பாடல் பாடி ஆடிக் கொண்டு இருக்கிறார். அவரிடம்  விஜயின் நண்பர் அறிமுகப் படுத்தி வைக்கிறார்.

இந்த மும்பை மாநகரிலே முமைத்கான் முன்னிலையிலே நாளை உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று  மும்பைதாதா அறிவித்துவிடுகிறார்.  முமைத் கானின் ஆட்டமும் நடக்க ஆரம்பித்து விடுகிறார்.

திருமணத்திற்கு முன்பு ஜோடிகள் இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்து உடை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

உடை மாற்றும்போது  ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொள்கின்றனர்.  இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்துக் கொண்டு சென்னையை நோக்கி வந்து விடுகிறார்கள்


=============================================================

வீட்டிற்கு திரும்பிய விஜய் மற்றும் தமன்னா எதிலும் பிடிப்பே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரூக்கிறார்கள், அப்போது விஜயின் பழைய அழுக்குத் துணிகள் சலவைக்குப் போய் திரும்பிவருகின்றன, அப்போது அதில் இருக்கும் லேடிஸ் பெல்ட விஜயின் அம்மாவின் பார்வைக்கு தட்டுப் படுகிறது.
அது ஒரு முக்கிய தருணத்தில் தமன்னாவிடம் இருந்து விஜய்யின் இடுப்பில் சிக்கிக் கொண்டு அவரிடமே தங்கி விட்ட ஒரு நினைவுச் சின்னம்.


பின்னர் அவர் தமன்னாவின் அப்பாவிடம் பேசி பெல்ட்டைத் திருப்பிக் கொடுக்க வருவதாக  சொல்லுகிறார். விஜய் அப்பா, அம்மா, நண்பர்கள் சகிதம் தமன்னாவின் வீட்டிற்குள் செல்கிறார். அங்கே  தமன்னாவின் பெரிய, சிறிய நடு அண்ணன்கள் வரிசையாக நின்று வரவேற்கிறார்கள்.


அவர்கள் கையில் துப்பாக்கி, விஜயின் அப்பாவிடம் அவரது சொத்து மற்றும் நிறுவனங்களை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு மிரட்டுகிறார்கள். உடனே  விஜயும் தனது கையிலிருந்து அதிவேக துப்பாக்கியால் பெரிய அண்ணனை மடக்கிவிடுகிறார்.

தனிவழில வர நான் தளபதியில்லடா 

உன்வழியிலயே வந்து 

உன்னையே மடக்குற இளைய தளபதிடா...,

உடனடியாக ஃபிளாஷ்பேக் விரிகிறது
================================================
ஃபிளாஷ்பேக் காட்சி:-


உலக பயங்கரவாதியான தமன்னாவின் குடும்பத்தினரை பிடிக்க இண்டர்போல் போலிஸ் தனித் திட்டம் போடுகிறார்கள்.  அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவனாக நடிக்கிறார். பின்னர் அவர் தமன்னாவை நெருங்குவது, மும்பை ஆட்களை மடக்க முடியாமல் போனது போன்றவை ஃபிளாஷ் பேக்கில் வருகின்றன..,


தமன்னாவின் காதல் உண்மைக்காதல் என்பதால் சட்டம் அவரை குற்றவாளியல்ல என்று விடுதலை செய்து விடுகிறது

இந்தியாவைக் காத்த இந்தியாவின் இளைய தளபதிக்கு பதக்கங்களும் மாலை மரியாதைகளும் குவிகின்றன
விஜய் தமன்னாவை மணந்து கொண்டு காதலுக்கு மரியாதை செய்து விடுகிறார்

============================================================

அடியாள்;  நீ யார் மேல கைவெச்சிருக்க தெரியமா?

ஹீரோ:-  உன்மேல யார் கைவச்சிருக்கா தெரியுமா?

வசனம் இடம் பெற்ற படம் மனதில் இருக்கிறதா  நண்பர்களே...,

=============================================================
இது மீள்பதிவாக இருந்தாலும் வாசகர்கள் ஓட்டுக்கள் போட்டால் தமிழ்மணப் பரிந்துரை பகுதிக்குச் செல்லும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

Thursday, December 24, 2009

50% கண்ணீர் 50% செந்நீர்

விஜயின் அடுத்த படத்திற்கான அதிரடிக் கதை  நமது வலைப்பூவில் வெளியாக இருக்கிறது..,

நீங்கள் ஏற்கனவே பார்த்து ரசித்த கதைக்கு புதிய ட்ரீட்மெண்ட்..,

கண்ணீரும் செந்நீரும் கலந்து எழுதப் பட்ட காதல் சரித்திரம்..,

அதிரடி சந்திப்பு,, அருமையான காதல்

பாம்பே கடத்தல் மன்னர்களிடம்  புகுந்து வெளியேறல்

கடத்தல் முதலைகளின் பாசப் பிணைப்பு

தியாகம் உருக்கம்

பின் இணைப்பு

கிளைமாக்ஸில் ஃபிளாஸ்பேக்

சுபம்

விரைவில் எதிர்பாருங்கள்.

==========================================================

Mummy motherfolk, danger not leave
Heat or cyclone, never I never tell
There there hunger take means, many savoury
Measurement food is one time
For pregnancy I come free mummy
Your child also name one I keep mummy
Letter lacking person ada trusting us and coming
Address lacking street ada auto fellow knowing
Achak means achak only Gumuk means gumuk only
Achak means achak only Gumuk means gumuk only...

இது எனது இடுகைக்கு வந்த ஒரு பின்னூட்டத்தின் ஒரு பகுதி. எழுதியவர் விரும்பினால் அவரது பெயர் வெளியிடப்படும். விரும்பாவிட்டாலும் சிலகாலம் கழித்து வெளியிடப்படும். ஏனெனில் இது என்னை ரசிக்க வைத்த பகுதி

Wednesday, December 23, 2009

மகன்களுக்குள் பிரச்சனை இல்லை. மூன்றாவது மருமகளே காரணம் .=நன்றி முகிலன்

ஒரு ஊரில் ஒரு குடும்பம். அங்க மூணு பசங்க.., மூணு பேருக்கும் மூணு வகையான வேலை..,  மூணாவது பையன் கொஞ்சம் வசதியா இருக்காராம். (அவருக்கு ஐ.டி. பார்க் வச்சுக் கொடுத்ததெல்லாம் குடும்ப தலைவர்தான் என்பது சரித்திரம்) .  இப்போ மூணாவது பையனோட வருமானத்துக்குத் தகுந்த வாழக்க்கைத்தரம் இல்லைனு மூணாவது மருமகள் நினைக்கிறாராம்ம். அதனால் சாம பேத தான தண்டங்களை உபயோகப் படுத்தி தனிக்குடித்தனத்துக்கு  உறுதி வாங்கி இருக்கிறாராம்.

எனது


தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

பதிவிற்கு தொடர்ச்சியாக முகிலன் அவர்கள்


குற்றம் - நடந்தது என்ன?  இடுகை இட்டிருக்கிறார்.


ஆனால் அந்த இடுகையிலேயே  இது குடும்பத்தை வளர்ப்பதற்கான முயற்சி அல்ல. தனிக்குடித்தனம்  மூன்றாவது மருமகளின்  வீம்புக்காகவும், வரட்டுக் கவுரவத்திற்கான முயற்சியே என்று என்னைப் போன்றவர்களின் எண்ணத்திற்கு ஆதரவு இடுகை போட்டிருக்கிறார் அவருக்கு நன்றி.


=====================================================
அவரது இன்னொரு இடுகையில்

கேள்வி: தெலுங்கானா பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: இந்தக் கேள்வி மிகவும் சுலபம். தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கி அதில் ஆந்திராவையும் ராயலசீமாவையும் சேர்த்துவிட்டால் போச்சு. அப்புறம் யாரும் தனித் தெலுங்கானா கேட்க மாட்டார்கள்.

என்று சொல்லி யிருக்கிறார். அந்த இடுகையையும் ரசித்துவிடுங்கள்.

அண்ணா, எம்.ஜி.யார், விஜய்



விஜய் அவர்களின் புதிய படமாக உரிமைக்குரல் வரப்போவதாக கில்லிகளின் வலைப்பூவில் செய்தி வெளியாகி உள்ளது. உடனடியாக உரிமைக்குரல் பழைய படத்தினை நினைவு படுத்திய போது தென்பட்ட பாடல்தான் இது. அதன் வரி வடிவம் இதோ

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )

சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )


உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்
(ஒரு தாய் )

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
(ஒரு தாய் )


எத்தனையோ பாடல்களை மறுவடிவம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற பாடல்களுக்கு மறுவடிவம் கொடுத்தால் மக்களிடம் சென்றடையுமே என்ற ஒரு ஆசை தோன்றியது. அதே நேரத்தில் இன்பமே பாடல் எங்கோ ஒலிப்பதும் கேட்டது. நல்ல பாடல்களை, நல்ல பாடல்களாகவே மக்களிடம் மறுவடிவம் கொடுத்து சேர்க்கமுடியவே முடியாதா?

பின்குறிப்பு:- விஜய்க்கும் பிடித்த வார்த்தை, ண்ணா. எல்லாப் படங்களிலும் இந்த வார்த்தையை பலமுறை உச்சரிக்கிறார். இந்தப் பாடலிலும் ண்ணா வருவதால் இந்த பாடலை அவர் உபயோகப் படுத்திக் கொள்வார் என நம்பலாம்.

2.இது ஒரு மீள்பதிவு

3. அண்ணா நூற்றாண்டுவிழாவில் நமது பங்களிப்புகளை இந்த இடுகைகள் மூலம் படித்துக் கொள்ளுங்கள்.
அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09

சமீபத்திய கேள்விகளுக்கு பதில்கள் 12.9.09

அண்ணா - சில கேள்விகள் 12.9.09

அண்ணா 11.9.09

இறைவனிடம் சில கேள்விகள்..

1.
வானத்தை மேலும்
பூமியைக் கீழும்
ஏன் படைத்தான்
இறைவா..

2.
தமிழை தமிழனும்
ஆங்கிலத்தை ஆங்கிலேயனும்
தாய்மொழியாக கொள்ளுமாறு
ஏன் படைத்தாய்
இறைவா...


3.
தலையில் ஏன்
முடி படைத்தாய்...
பின்னர்
வழுக்கை என்றோர்
நிலையை
ஏன் படைத்தாய்....


4.
காய்களை சைவம் என்றாய்
மாமிசத்தை அசைவம் என்றாய்
ஏன்..


5.
பெட்ரோலை
உலகிற்களித்தாய்.. ஆனால்
அதில்
டீசல், மண்ணெண்ணெய்
என்ற பிரிவுகளையும் படைத்தாய்.
ஏன் இறைவா.. ஏன்..?

ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன

Monday, December 21, 2009

தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

Telungana....some stupid questions 


என்ற ஆங்கில் வலைப்பூ பக்கம்  போக நேர்ந்தது. பின்னே ஃபாலோவர் என்றால் போய் படித்துவிடுவோமே..,  அதில் இருந்த சில கேள்விகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

1. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தெலுங்கானா மாவட்டங்களிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரிலிருந்து வந்தனர்?  மாஸ்கோ அல்லது நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்களா? அவர்கள் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தனர்?


2.ஒருவேளை தெலுங்கானா என்று ஒரு மாநிலம் கொடுக்கப் பட்டால் அப்போது அங்கிருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்? 

இப்போது தெலுங்கானா பகுதியில் இருக்கும் சோமாலியன் நிலப்பிரபுக்களும் உகாண்டாவைச் சேர்ந்த புரட்சிக்காரர்களும் தூக்கி யெறியப் படுவார்களா?


3. ஒருவேளை அப்படி ஒரு மாநிலம் கொடுக்கப்பட்டால் அங்கு ஆட்சி புரிய எந்த கட்சிகள் வருவார்கள்? காங்கிரஸ்,தெலுகுதேசம், தெலுங்கானா ராஸ்ட்ரீய சமிதி,பிரஜா ராஜ்யம்?   இத்தனைநாள் தெலுங்கானா முன்னேற்றத்திற்கு உதவாத கட்சிகளிடம் இனிமேல் எப்படி எதிர்பார்க்கமுடியும்?


==============================================

இவை தவிர மேலும் பல கேள்விகளை கேட்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

==================================================

இவர் தவிர இவர் மகனுக்கும் பல  சந்தேகங்கள் தோன்றுவதுண்டு.. குறிப்பாக வேட்டைக்காரன் படம் பார்த்தபின் தோன்றிய சந்தேகங்கள் அர்த்தமுள்ளவை. ஒரு எட்டுவேண்டுமானால் போய் படித்துவாருங்கள்.

The incomplete man

Sunday, December 20, 2009

பிந்தொடர்பவர்கள் பட்டியலில் பிரச்சனையா?

பல பதிவுகளில் தங்கள் பிந்தொடர்பவர்களைக் காணவில்லை என்று இடுகைகளைப் பார்த்திருக்கிறோம்.

சிலர் முகப்புக் களத்தில் இருக்கும்போது மட்டும் பிந்தொடர்பவர்களாக இருப்பதாகவும் முகப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டால் அவர்களும் ஒதுங்கிக் கொள்வதாகவும் கூட ஒரு பேச்சு அடிபடுகிறது.

இப்படிப்பட்ட பேச்சுக்கள் அடிப்பட்ட காலத்திலேயே பின்னூட்டப் பெயர்களின் மூலமாக நண்பர்களின் இடுகைக்குச் செல்லும்போது அவர்களின்   /profile/  ல் நமது பெயர் இருக்கிறதா என்று பார்ப்பது உண்டு. பிந்தொடர்பவர்கள் பற்றி பிரச்சனை ஆரம்பித்த காலத்திலேயே எனது வலைப்பூவிற்கு தொடர்வருகையாளர் ஒருவரின்  /profile/ ல் பிந்தொடரும் வலைப்பூக்களில் என்வலைப்பூவின் பெயர் இல்லை.  எனது பிந்தொடர்பவர் பட்டியலிலும் அவர்பெயர் இல்லை.  ஆனால் இன்றுவரை எனது இடுகைகளைத் தொடர்ச்சியாக படித்து பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கிறார். 

கண்டிப்பாக அவர் பிந்தொடர்பவர்கள் பட்டியலிருந்து தனது பெயரை துண்டித்திருக்க மாட்டார். அவர் மட்டுமல்ல யாருமே பெயரை துண்டிக்கும் அளவுக்கு மெனக் கெட மாட்டார்கள் என்பது எனது கருத்து. விருப்பம் இல்லையென்றால் இடுகையைப் படிக்க மாட்டார்கள் அவ்வளவுதான்.

எனது  சச்சின், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்பதிவர்களுடன் ந...  

இடுகையின்போது கூட நட்புடன் ஜமால் மற்றும் லோகு ஆகியோர் தங்கள் பெயரை நான் விட்டுவிட்டதாக உரிமையுடன் சுட்டிக் காட்டினர். 

அப்படியென்றால் ஒரு முடிவுக்குத்தான் வரமுடிகிறது. பிந்தொடர்பவர் பட்டியல் தொழில்நுட்பத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது.  எனது கருத்தினை நான் சொல்லிவிட்டேன். தொழில்நுட்பப்பதிவர்கள் வழிகாட்டுவார்கள் என்று நம்புவோம்.

பின்குறிப்பு:- இன்று எனது பிந்தொடர்பவர்கள் பட்டியலில் எண்ணிக்கை குறைந்துவிட்டது அதனால்தான் இப்படி ஒரு இடுகை.

Saturday, December 19, 2009

வேட்டைக்காரனுக்கு நன்றி

வறட்சியாய் போய் கொண்டிருந்த பதிவுலகில் ஹிட் மழைகளை குவிய காரணமானவன் வேட்டைக்காரன்.


முண்ணனி பதிவர்களே ஒரு நாளைக்கு ஐந்நூறு ஹிட்டுகளுக்கு நாக்கு தள்ளிக் கொண்டிருந்த காலம் போய்  வேட்டைக்காரன் என்ற பெயர் கொண்ட பதிவுகள் எல்லாம் இன்று ஆயிரம் ஹிட்டுகள் குவித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணமாக அமைந்த வேட்டைக்காரனுக்கு
நன்றி
நன்றி 
நன்றி

http://www.southgossips.com/wp-content/uploads/2009/12/vettaikaran-12_001.jpg










http://icdn.indiaglitz.com/tamil/gallery/Movies/vettaikkaran/vettaikaran091209_19.jpg 



==============================================================


முதல் பகுதி வேட்டைக்காரன் இனிய துவக்கம்    
அமெரிக்க ஜனாதிபதியாக யாரைத் தேர்ந்தெடுப்பது பற்றி அமெரிக்க மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. அனைவரும் தொடர்ச்சியாக வேட்டைக்காரனுக்கு தந்தி அடிக்கிறார்கள். அந்த தந்திகள் தமிழ்நாட்டை வந்தடைகிறது. தந்திகாரர் வேட்டைக்காரன் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் வேட்டைக்காரனின் இருப்பிடத்தைத் தேடுகிறார்.

அப்போது ஒரு பெரியவர்: நீ நிக்கறதே அவரோட எல்லையிலதான். நீ தந்தியைப் படி அப்பு.., வேட்டைக்காரனுக்கு கண்டிப்பா கேட்கும்
என்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்

=================================================



இரண்டாம்பாகம்நாசாவுக்குள் போன நம்மாளு
நாசாவின் ஈசானி மூலையில் ஒரு ஒருவம் அசைவது கண்காணிப்பு காமிராவில் தெரிய ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தபோது அந்த உருவம் ஆசிய முகமாகத் தெரிய வந்தது.

மீசையில்லாத மொழுமொழு உருவம்.... அது...



ஹண்ட்டர்..,

அமெரிக்க அதிபர் இருக்கையை விட்டு எழுந்து விட்டார். ஹண்ட்டர் இப்போது வளர்ந்துவரும் ஒரு கடத்தல் மன்னன். அவன் எப்படி இங்கே?

உடனே அதிபர் ஹண்ட்டருக்கு அலைபேசியில் அழைக்கிறார்.

நான் ரொம்ப பிஸி. அப்புறம் ஃபோன் பண்ணுங்க என்று ஹண்ட்டர் பதில் சொல்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்
===================================================================



மூன்றாம் பாகம்வேட்டைக்காரச் சாமி


நான்
ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்..
இனி திருமபவெல்லாம் முடியாது. என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அங்கே பதினைந்து வயது தமிழரசன் நிற்கிறான்.


நீங்கெல்லாம் படிக்க போங்க.. நான் படிக்க வைக்கறேன்.


பதினைந்து வய்து தமிழரசனின் குரல் உறுதியாக ஒலிக்கிறது.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்


 ============================================

நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக்

உலக அமைதி கொஞ்ச நாட்களாகவே கேள்விக் குறியானது. ஆஃப்பிரிக்க நாடு ஒன்றில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக உலகப் பொருளாதாரமே நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பின்னே அந்த நாட்டில் இருந்துதானே உலக நாடுகளுக்கு தங்கமும் வைரமும் வருகின்றன.

இதனால் இந்திய நாட்டில் நடக்கும் பல திருமணங்களில் நகைகளுக்குப் பதிலாக பணத்தையும், பணம் அடங்கிய சூட்கேஸ்களையும் காதுகளிலும், மூக்குகளிலும். கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் தொங்க விட ஆரம்பித்தனர்.  


முழுதும் படிக்க அழுத்துங்கள்

=================================================


Friday, December 18, 2009

வேட்டைக்காரன் விமர்சனம் கல்கியில்

[Vettaikaran[10].jpg]


 கல்கியில் வந்த வேட்டைக்காரன் விமர்சனம் இது. இது பற்றிய முழு இடுகையை அகொதீகழகப்  பிரமுகர் வரைந்திருக்கிறார். இங்கே சென்று பார்த்துக் கொள்ளுங்கள்

Wednesday, December 16, 2009

உலர்ந்த உணர்வுகள்

தெரியவில்லை

மீண்டும்

உன்னைப் பார்த்தபோது

உள்ளுக்குள் வந்த

உணர்வுகளின் தன்மை..,

கல்லூரி தேவதையாய்  நீ

உலவிய போது கூட

ரசிகனாய் கூட

இருந்த நினைவு இல்லை

நட்பாய் பழகிய

நாட்களில் கூட

நண்பனாய்  இருந்த

நினைவு இல்லை.

ஒரு பெண்ணாய்

உன்னைப் பார்த்த

நினைவு

இல்லவே இல்லை,


ஆனால்

இன்று

இப்படி ஒரு பெண்

என்னோடு

பல காலம்

பழகியிருக்கிறாள்

என்பதாக

தோன்றும்போது

காரணம்

புரியவில்லை,

எப்போது

என் கண்களுக்கு

பெண்ணானாய்?

ஒன்றும்

புரியவில்லை





உன்முகத்தின்

ஜொலிப்பு


நகைப்பின் தகைப்பு


பேச்சோடு அசையும்

கைவிரல்கள்

காற்றோடு

உலாவும்

முடிக் கற்றைகள்

உடலோடு இணைந்த

உடைகள்

நாம் பழகிய

நாட்களிலும்

இப்படித்தான்

இருந்தாயா?


ஏனோ தெரியவில்லை

உன்னைப்

பார்த்தபின்

உன்னை

மறந்து விட்டேன்.

புதிய

உணர்வை

உணர்ந்துகொண்டேன்

உணர்வின்

உணர்வு

உணர முடிந்தால்

நீயும் உணர்ந்திருப்பாய்

இல்லை

உணர்வில்

உலர்ந்திருப்பாய்

உணர்வுகள்

உலர்ந்திருந்தால்

உன்னைக்

கண்டிருக்கலாம்

உன்னைக்

கண்டதால்

உணர்வுகள்

உணர்த்தியிருக்கலாம்,

உண்மையைச்

சொன்னால்

உன்னை நான்

கண்டிருக்கவே கூடாது..,

Saturday, December 12, 2009

அசோக் குமார்

குணாளின் வாழ்க்கையில் இதற்கு முன் என்ன நடந்தது என்பதை அறிய இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்
http://www.nilacharal.com/images/212/mkthyagarajan.jpgகுணாளின் தன் மனைவியின் படுக்கையறையில் தனது தந்தையின் இளம்மனைவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இனிமேல் உன்முகத்தையே பார்க்க மாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு வெளியேறிவிடுகிறார்.

அசோகர் புத்திர சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். நாடு கடத்தப்பட்ட மகனை திரும்ப அழைக்கும் விதமாக கடிதம் எழுதச் சொல்லி அதில் கையெழுத்திடுகிறார், ஆனால் அந்த கடிதத்தில் குணாளின் கண்களை குடுடாக்கும்படி எழுதி அதை தட்ச சீலத்திற்கு அணுப்புகிறார் அசோகரின் இளம் மனைவி. தட்ச சீலத்தின் பொறுப்பில் இருக்கும் மகேந்திரர் இந்த கடிதத்தை குணாளிடம் காட்ட குணாள் ஐந்து நிமிடங்கள் வசனம் பேசுகிறார், பின்னர் தனது தந்தையின் சபத்தை நிறைவேற்ற தனது கண்களை தானே குருடாக்கிக் கொண்டு தட்ச சீலத்தைவிட்டு வெளியேறுகிறார்,

அப்போது புத்த துறவி அவருக்கு வழிகாட்டுகிறார்.  நாட்டைவிட்டு வெளியேறிய குணாளின் மனைவி தனது கணவனின் பாடலைக்கேட்டு அவரைக் கண்டுபிடித்துவிடுகிறார்.  இருவரும் ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒருநாள் பிச்சை எடுத்து வரும்போது  குழந்தை இறந்துவிடுகிறது, அது தெரியாமலேயே குணாள் தாலாட்டுப் பாடுகிறார்.

பின்னர் வேறொரு நகரம் நோக்கிச் செல்கிறார்கள்.  அந்த நகரத்திற்கு அசோகச் சக்க்ரவர்த்தி வந்திருக்கிறார், அவருக்கு புத்த பிட்சுவின் பாடல் கேட்கிறது,. அசோகர் புத்த பிட்சுவை அழைத்துவரச் சொல்கிறார். காவலர்கள் குணாளனை அழைத்துவருகிறார்கள். குருடர்களை அரசர் பார்க்கக்கூடாது என்பதற்காக அவரை திரைச்சீலைக்கு பின்னாள் இருந்து பாடச் சொல்கிறார்கள் . குணாள் அந்தப் பழைய பாடலைப் பாட  அசோகர் அவரைக் கண்டு பிடித்துவிடுகிறார்.

பின்னர் தன் மகனின் கண்கள் குருடான விதத்தினை அறிந்து பொங்கி எழுகிறார், அப்போது பழைய புத்த பிட்சு வந்து புத்தர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு பாட்டைப் பாட குணாளின் கண்கள் திறந்து கொள்ள

சுபம்.


அதில் இடம் பெறிருந்த சில பாடல்கள்

-------------------------------------
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ
காலமும் செல்ல மடிந்திடவோ உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே

-------------------------------------

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

அண்டரிலே அண்டரிலே நில மண்டலமேல்
அண்டரிலே நில மண்டலமேல் பல
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தீரத்திலே தீரத்திலே உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரதிலே
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானதிலே சரச கானத்தில் தேவா

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உன்னைக் கண்டு மயங்காத பேகளுண்டோ?

மேலும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

Thursday, December 10, 2009

கருணை காட்டுமா? தமிழ்மணம்

நான் தமிழ்மணம் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.  நான் கலந்துகொள்ள தொடுப்புகள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

விருதுகள் 2009 - உங்கள் இடுகைகளை பரிந்துரை செய்து விட்டீர்களா ?

 

 இடுகையில் பலமுறை பின்னூட்டம் மூலம் சொல்லிவிட்டேன்.  7ம்தேதியிலிருந்து பின்னூட்டம் மூலம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 7, 8 தேதிகளில் கணினியில் அமர நேரம் இல்லாததால் அலைபேசி மூலம் பின்னூட்டம் இட்டிருந்தேன். நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.  எப்படி அனுப்புவது என்று புரியவில்லை.


Tuesday, December 8, 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

அறிவிப்பு:  இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. அதனால் இதில் வரும் கருத்துக்களுக்கு நான் சொந்தக்காரன் அல்ல. யாருக்கேனும் மனம் புண்பட்டால் நீக்கிவிடுகிறேன்.  இதை முதலில் எழுதியவர் பெயர் அல்லது பதிவின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் அவர்களின் பெயரையும் தொடுப்பையும் போட்டுவிடுவோம்.

இது எனது கற்பனை அல்ல என்பதற்கு இதில் உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கும் எனக்கும் வெகுதூரம் என்பதே சாட்சி.

Friday, November 27, 2009

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?

தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது என்பது ஏழுகடல் ஏழுமலை தாண்டி குகைக்குள் குடியிருக்கும் முனிவரின் வாயில் புகுந்து வியர்வை வழியாக வெளியேறுவதைப் போன்று சிரமமான காரியமாக இருந்து வருகிறது.

இதற்கு முன் இருந்தமுறையில் ஒவ்வொரு முறை கணிணியைத் திறக்கும்போது ஒரு போடும் அளவு எளிமையாக இருந்தது. இப்போது நமது ஓட்டைக்கூட நமக்குப் போட்டுக் கொள்ளமுடியாத சூழல் சில நேரங்க்ளில் ஏற்பட்டுவிடுகிறது.

இதனால்தானோ என்னவோ தமிழீஷில் ஓட்டுக்கள் நிறைய வாங்கியும் சில நேரங்களில் தமிழ்மணத்தில் ஓட்டு வாங்க முடியாமல் போய்விடுகிறது.

எப்போதெல்லாம் நமது ஓட்டுக்கள் விழவில்லை என்று கவனித்த போது ஒரு ஒற்றுமை தெரிந்தது.

கணிணியில் எப்போதெல்லாம் நாம் வரலாற்றை அழிக்கிறோமோ அதற்கடுத்து ஓட்டுப் போட முயற்சித்தால் மோசமான கையொப்பம் என்று நிராகரிக்கப் பட்டுவிடுகிறது.

அதன்பிறகு நமது மின்னஞ்சல் முகவரிக்குள் நுழைந்துவிட்டு பின்னர் நாம் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் தமிழ்மணம் நமது மின்னஞ்சல் முகவரியை உறுதிபடுத்தச் சொல்லும். நமது  முகவரியையும் கடவுச் சொல்லையும் கொடுத்தால் ஓட்டு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. நாம் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையாமல் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் உறுதிப்படுத்துப்படுத்தும்போது சரியான கடவுச்சொல் கொடுத்தாலும் மோசமான கையொப்பம் என்றே வருகிறது. முதல் முறை ஓட்டுப் போட்டுவிட்டால் அதன்பிறகு நாம் மின்னஞ்சலுக்குள் நுழையாமல் ஓட்டுப் போட்டால் கூட ஓட்டுவிழுகிறது.   ஆனால் கணிணி உபயோக வரலாற்றை அழித்துவிட்டால் மீண்டும் அதேபோல்தான் ஆகிறது.

இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்தபின் தமிழ்மணத்தில் எனது ஓட்டு சரியாக விழுந்துவிடுகிறது.

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள். அதை இந்த இடுகைக்கே முயற்சித்துப் பாருங்கள்.

-------------------------------------------------------------------------------------------------

சில நேரங்களில்,சில இடங்களில்  தமிழ்மண ஓட்டு தமிழீஷ் ஓட்டைவிட அதிகமாகிவிடுகிறது. அது எப்படி என்றுதான் புரியவில்லை.

Thursday, November 26, 2009

யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?

யார்க்கர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஓரளவு பரிச்சையம் ஆன வார்த்தை இது. கடைசி ஓவர்களில் அல்லது பந்து பழசான நிலையில் இந்த ஆயுதத்தை உபயோகப் படுத்துவார்கள்.

இந்த யார்க்கர் பந்து வீச்சான மட்டையாளரின் காலுக்கு மிக அருகாமையில் தரையில் படும். குறிப்பாகச் சொன்னால் மட்டையாளர் மட்டைவீசும்போது அவரது மட்டைக்கும் தரைக்கும் உள்ள மிகச் சிறிய இடைவெளியில் பந்து தரையில் பட்டு உள்ளே புகுந்து விக்கெட் குச்சியை வீழ்த்தும். இதற்கு கொஞ்சம் வேகமும் அவசியம்.

வேகம் இல்லையென்றால் மட்டை பிடிப்பவர் இரண்டடி நடந்து வந்துஅல்லது பின்னால் நகர்ந்து தனது தோள்வலிமையில் ஒருவீசு வீசினால் பந்து மைதானதுக்கு வெளியே போய் விழும்.

எனவே துள்ளியமாக வீசுவது அவசியம். கொஞ்சம் தவறினாலும் பந்து புல்டாசாக மாறி வெளியே போய் விழும் அபாயம் அதிகம். அக்ரம் போன்றவர்கள் முதல்பந்திலேயே யார்க்கர் போடுவதில் வல்லவர்கள்.

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது யார்க்கர் வீசும் அளவு தோள்வலிமை இருக்காது. அப்படி யார்க்கர் நீளத்தில் போட்டால் பந்து போட்டால் மட்டைக்காரர் கொஞ்சம் நடந்துவந்து கால்களை நகர்த்தி இடது கால் பக்கத்தில் வீசி நான்காக்கி விடுவார். சில முறை இவ்வாறு நடந்தால் பந்துவீச்சாளன் தனது கைப்பந்து, கால்பந்து இன்னிங்க்ஸ்களை துவக்கி விட வேண்டிய சூழலுக்கு உள்ளாவார்கள். என்வே பள்ளிக் காலங்களில் யார்க்கரை யாரும் முயற்சித்துக் கூடப் பார்ப்பதில்லை.

ஆனால் புல் டாஸ் பந்து என்பதும் சாதாரணமானது அல்ல. நேராக மட்டையில் வந்து விழும். மட்டைக்காரனை ஓங்கி அடிக்கவைக்கும். கொஞ்சம் தூக்கியே போட்டுக் கொடுத்தால் தூக்கி அடிக்க வைக்கும். சற்றே அழகாக கோழி அமுக்கும் கைகளை உடைய களத்தடுப்பாளரை நிறுத்தி வைத்தால் புல்டாசில் விக்கெட் கிடைப்பது மிக எளிது. குறிப்பாக பின்வரிசை ஆட்டக்காரர்கள் எவ்வளவுதான் தூக்கி அடித்தாலும் மேலே போகும் பந்து புவியீர்ர்பு விதியை பூர்த்தி செய்து கீழே இறங்கும். விதியின் காரணமாக அங்கே நிற்கும் தடுப்பாளர் கோழியைப் பிடித்து வெளியே அனுப்பி விடுவார். நேராக மட்டைக்கே இறங்கும் வகையில் போடுவதால் மட்டைக்காரர் தனது கால்களை மாற்றி அமைக்கும் வாய்ப்பு குறைவே.

எனவே பள்ளிநாட்களில் யார்க்கர் பந்தினைவிட ஃபுல் டாஸ் பந்திலேயே விக்கெட் விழும் வாய்ப்பு அதிகம் என்பதால் எனது ஓட்டு ஃபுல் டாஸுக்கே..

கல்லூரி வந்தபிற்கு ஓங்கி அடித்து பந்தினைக் காணாமல் போகச் செய்யும் வாய்ப்பு இருப்பதால் போடும் வந்து கொஞ்சம் வேகம் பிடிக்கும் காரணத்தாலும் அங்கு நிலைமை மாறிவிடும்.

எனவே யார்க்கர் போட்டாலும் ஃபுல்டாஸ் போட்டாலும் களத்தடுப்பில் திட்டம் நன்றாக இருப்பின் விக்கெட் கண்டிப்பாக விழும்.

Friday, November 13, 2009

2012 ஒரிஜினல் தமிழில் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டாருக்குன்னே உருவான ஒரு கதையை வெளிநாட்டு ஆளுங்க படம் எடுத்திட்டு இருக்காங்க..,  நாம சூப்பர் ஸ்டாரை வைத்தே அந்தப் படத்தப் பார்ப்போம்.

====================================================

படத்தின் துவக்கத்தில் கிராமச் சூழலில் ஒரு கவிநயம் மிக்க குத்துப்பாட்டு.

மாயா.. மாயா எல்லாம் மாயா

சாயா  சாயா எல்லாம் சாயா

போயா போயா எல்லாம் போயா

வாயா வாயா எல்லாம் வாயா

காயா காயா எல்லாம் காயா

நாயா நாயா எல்லாம் நாயா

பாயா பாயா எல்லாம் பாயா

என்று ஒரு தத்துவப் பாடலோடு சூப்பர் திரையில் நுழைகிறார். அந்த ஊரே அந்தத் திருவிழாவில் ஆடுகிறது.
http://4.bp.blogspot.com/_03G3R_dD0Cc/SolXPYv_0AI/AAAAAAAAAc0/bLmVdKwdYxE/s320/aaa.jpg
பெரிய மீசையோடு பிரபு வருகிறார். அங்கு நின்றிருக்கும் பூசாரியிடம் சாமி என் பையன் குருவுக்கு  இன்னிக்கு பொறந்தநாள் அதுதான் உங்க ஆசீர்வாதம் வாங்க வந்தோம் என்று சொல்கிறார்.

பூசாரி அருள்வந்து ஆடுகிறார்.  தெயவமே என்ற வார்த்தையோடு அமைதியாகிவிடுகிறார்.  அடுத்ததாக பழைய கால நயந்தாரா மாதிரி இருக்கும் பாவாடை சட்டை பெண்ணை  அழைத்து சாமி இவளையும் ஆசிர்வாதம் பண்ணுங்க இவதான்  குரு கட்டிக்கப் போற பொண்ணு. அடுத்தவருஷம் படிப்பு முடிஞ்சதும் குருவுக்கும் இவளுக்கும் கல்யாணம் என்கிறார் பிரபு.

பூசாரி கூர்ந்து பார்த்துவிட்டு  நீ தலைகீழா நின்னாலும் உனக்கு குரு கிடையாது, நீவேற ஆளப் பார்த்துக்க. அடுத்த வருஷம் குரு இந்த உலகத்திலய இருக்க மாட்டார்   என்று சொல்லிவிட்டு மயங்கிச் சரிகிறார்.

மாயன் கோவிலில் சொன்னால் சொன்னது நடக்கும் என்பது ஐதீகம். அதனால் எல்லோரும் சோகமாக மாறுகிறார்கள். ஆனால் குரு மட்டும்  பகுத்தறிவு வாதம் பேசுகிறார். ஆமாம் குருதான் நம்ம சூப்பர் ஸ்டார்.

இதெல்லாம் பழைய கால மூட நம்பிக்கைங்க..,  நீங்களெல்லாம் சொன்னதுனால் நான் அங்க வந்தேன். அங்க வந்தா என்னெல்லாமோ உளர்றாங்க...,

நான் ஒரு முற்போக்கு பத்திரிக்கைக்காரன். நாலு ஜனங்களுக்கு மூட நம்பிக்கை பற்றி எடுத்துச் சொல்லிட்டு இருக்கேன். என்னோட வலைப்பூ பூரா மூட நம்பிக்கை பற்றித்தான் எழுதிட்டு இருக்கேன். என்கிட்டயே கதை விடுறீங்களா..., என்று சொல்கிறார்.

அப்படியே பழையகால அச்சு இயந்திரத்தின் மேல் அவர் முகம் தெரிகிறது

நான் ஒரு பத்திரிக்கைக்காரன்,

சண்டை சச்சரவுக்கு கத்திரிக்காரன்

நான் எழுதுவது கத்தி முனையிலே

நான் நடப்பது என் பேனா வழியிலே

என்று தத்துவப் பாடல் பாடுகிறார்.

அப்போது அவர் பின்னால் நாட்டில்  உலகில் உள்ள அனைத்து பத்திரிக்கைக் காரர்களும் அவர் பின்னால் குவிகின்றனர்.

அவரின் பின்னால் பல மதரீதியான பத்திரிக்கைக்காரர்களும் வருகின்றனர். அவருக்குப் பின்னால் வந்த உடன் அனைவரது எழுத்தும் பகுத்தறிவுச் சிந்தனையோடு எழுத ஆரம்பிக்கின்றனர்.

மாயன் கோவில் மர்மம் பற்றி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஆய்வு செய்கிறார்கள். அதற்காக தமன்னா நியமிக்கப் படுகிறார். அவர் அடிக்கடி  நான் மாயவரத்துப் பொண்ணு, மாய வரத்துப் பொண்ணு என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அவர் மாயவரத்துப் பொண்ணு என்ற சொன்ன உடனே அவருடன் வந்திருக்கும் சந்தானம் எ ட்ரூ பீஸ் என்ற கூடுதல் வசனத்தை சொல்லிக் கொண்டே வருகிறார்.

அதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் என்ன டூ பீஸா என்று கேட்கிறார். திரும்பிப் பார்க்கும் தமன்னா உடனே தலைவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

மாயவரத்துப் பொண்ணு  இவ

மாயன் கோவில் வந்திருக்கா

ட்ரூ பீஸ் கண்ணு  இப்ப

டூ பீஸில் ஆடி    வாரா..,

என்று அழகான ஜோடிப் பாடல் அங்கே அரங்கேற்றமாகிறது.

தொலைக்காட்சியில் மாயன்கோவிலில் சொன்ன குறிகள் பலிதம் ஆகியிருப்பது ஊர்ஜிதம் ஆன பலசெய்திகள்வெளிவருகின்றன.

சூப்பர் ஸ்டார் பற்றிய தகவல் உண்மையா என்பதை அறிய சூப்பர் ஸ்டாருக்கே தெரியாமல்  அவரைப் பற்றி நேரடி ஒலிப்பரப்பு செய்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் வழக்கம்போல வலைப்பூ எழுதிக் கொண்டும் பின்னூட்டம் போட்டுக் கொண்டும் காலம் தள்ளுகிறார். அவரைப் பற்றிய செய்தி எதுவும் அவருக்குத் தெரியாமல் நடக்கிறது.

அப்போது உலகை அழிவில் இருந்து காக்க ஒரு யாகம் நடத்தப் படுகிறது. யாகத்தின் போது வெளியிடப் படும் புகையால் ஓசோன் மண்டலம் பாதிக்கப் பட்டு உலகம் நேரிடும் என்று சூப்பர் பிரச்சாரம் செய்கிறார். அந்தப் பாடலுக்கு ஓசோன் ஓட்டையால் செய்யப்பட்ட  ஆடை அணிந்து முண்ணனி இந்தி நடிகை ஒருவர் ஆட்டம் போடுகிறார்.  யாகம் தடுத்து நிறுத்தப் படுகிறது.  அதனால் யாகம் நடத்த நினைத்த கோடீஸ்வரர்  சூப்பரைக் கொல்ல ஆள் அனுப்புகிறார். சூப்பர் ஸ்டாரின் வீட்டில் வெடி குண்டு வைத்து விடுகிறார்கள்.

அப்போது சூப்பர் ஸ்டார் தனது லேப் டாப்புடனருகிலுள்ள மலை மேல் அமர்ந்து வலைப்பூ எழுதிக் கொண்டும், பின்னூட்டம் போட்டுக் கொண்டும் இருக்கிறார். அப்போது ஒரு வலைப்பூவில் இருந்த லின்க் மூலம் செய்தித்தாளுக்குப் போய் அங்கு தன்வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதை தடுக்க ஓடிவருகிறார்,

அதற்குள் அவர் வீட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்துவிடுகிறது. ஆனால் அவரது தந்தை  தோட்டத்தில் இருப்பதால் தோட்டத்திற்குச் செல்கிறார்.

ஆனால் அதற்குள் வீட்டிற்குள் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளிவருகின்றன. சூப்பர் ஸ்டாரின் படுக்கை அறையின் அடியில் இருந்த எரிமலை வெடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குள் அந்த ஊரே நெருப்பு குழம்புக்குள் மூழ்க ஆரம்பிக்கிறது.  வேகமாக காரை எடுக்கும் சூப்பர் மின்னல் வேகத்தில் செல்கிறார். அதற்குள் சூப்பரின் கார் வெடித்துவிடுகிறது. 


வெடித்த சிதறலில் இருந்த சூப்பர் அப்படியே வானத்தில் பறக்கிறார். அப்படியே பறந்துவந்து பூமியைப் பெயர்த்து கையில் வைத்துக் கொண்டு அந்தரத்தில் நிற்கிறார். சில நாட்களில் பூமி குளிர்கிறது.

பெயர்தெடுத்த பகுதியில் இருந்த பிரபு

குருவே சரணம்

என்று சொல்ல சூப்பர் ஸ்டார் புதிய யுகத்தின் கடவுளாக மாறிவிடுகிறார்.

http://i11.tinypic.com/42vh3r8.jpg

Wednesday, November 11, 2009

ரிக்கி பாண்டிங் எழுதாத கடிதம்

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்...,

நண்ப! டோனி நீங்களும் உங்கள் அணியும் செய்திருக்கும் உதவி இந்த வையகம் இருக்கும் வரையில் ஆஸ்திரேலிய அணியும், நானும் மறக்கவே மாட்டோம். முதலிடம் முடியிலிருந்து போய்விடும் என்றார்கள், உலகக் கோப்பையை விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்றார்கள். ஆனால் டோனி..., இந்தியர்கள் என்றும் வந்தாரை வாழவைப்பார்கள் என்ற சொல்லுக்கு இலக்கணமாக எங்களுக்கு தன்னம்பிக்கையும், வெற்றியையும் பரிசாக அளித்தீர்கள்.

உங்கள் துவக்கமும், மத்தியமும் படுவலிமையானது என்று சொல்லிச் சொல்லி பயமுறுத்தி அனுப்பிருந்தார்கள். பந்துவீச்சு படுதுள்ளியம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அந்த வள்ர்ந்த சிறுவன்கூட என்னை கொஞ்சம் நடுநடுங்கத்தான் வைத்திருந்தான்.

கோபம் வந்தால் தாயைப் பற்றிப் பேசும் சுழல்சுறாவளி கூட கொஞ்சம் டென்சனைத்தான் கொடுத்திருந்தார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி இப்படியெல்லாம் யாரும் பயமுறுத்தியதில்லை. கிளார்க்க் வேறு என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தார், ஆனால் அவரும் எங்களோடுவரவில்லை. ஒருவேளை தோற்றிருந்தால் அவர் இல்லாததால்தான் தோற்றொம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்.

பார்டர், டெய்லர், வாக் போன்றவர்கள் அணியை மற்றவர்களிடன் கொடுக்கும் போது மிக வலிமையான அணியாகத்தான் கொடுத்தார்கள். என்னால் அப்படிக் கொடுக்க முடியாதோ என்ற பயம் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

பயிற்சியில் ஈடுபடமுடியாத எங்கள் சிறுவர்களிடம் ஒருநாள் பயிற்சியில் ஒன்றும் பெரிய வித்தியாசம் வராது என்ற நம்ப்பிக்கைச்சொல்லை நீங்கள் கூறிய போதே ஒரு ஒளி தெரிந்தது. எங்கள் அணியில் இருந்த ஒவ்வொரு வீரரின் திறமை அறிந்து அதனைக் கொணர்ந்த உங்கள் திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை நண்பரே..,

எங்கே கடைசி ஆட்டம் மழையால் பாதிக்கப் பட்டுவிடுமோ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆறாம் ஆட்டத்தில் எங்கள் வெற்றிக்காகப் போராடிய உங்கள் விருந்தோம்பல் பண்பினை என்னவென்று புகழ்வது?
http://www.thedipaar.com/pictures/politics/10391.jpgஉண்மையில் சொன்னால் டோனி என் கிரிக்கெட் வாழ்நாளில் தலைவன் என்று ஒரு ஆள் தனியே தேவைப்படாத அணிக்குத்தான் நான் தலைமை தாங்கி இருக்கிறேன். என் அணியில் இருந்த கில்லி, வார்னே போன்றவர்கள் எல்லாம் ஐ.பி.எல்லில் தலைமை தாங்கி வெற்றிகளைக் குவித்தவர்கள். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார்களாகத்தான் இதுவரை இருந்தார்கள். ஆனாலும் வளரும் இளைஞர்களை அழைத்து வருவது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கும் உங்கள் அணியின் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தால்தானே இப்படி ஒரு வெற்றியை பரிசளித்து இந்த அணியையும் ஒரு அணியாக அங்கீகாரம் வாங்கி கொடுத்திருக்கிறீர்கள்.

எங்கே 1986ல் கபில்தேவ் செய்த செயலை நீங்கள் செய்துவிடுவீர்களோ என்று பயந்து கொண்டுதான் இருந்தேன். அப்படி எதுவும் நடந்திருந்தால் ஐயகோ.., இந்திய மாணவர்களையே அடிக்கும் இளைஞர்கள் இந்தியாவிலிருந்து தோல்வியுடன் போனால் எங்களை என்ன செய்வார்களோ ? கடைசியில் காப்பாற்றிவிட்டீர்கள் டோனி. உங்களுக்கும் உங்கள் அணியினருக்கும் கோடானு கோடி நன்றிகளை உறித்தாக்கிக் கொள்கிறேன்.


இப்படிக்கு

20-20லிருந்து கட்டாய ஓய்வு கொடுக்கப் பட்ட 2011 உலகப் கோப்பை கனவினை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டுள்ள உங்கள் நண்பன் பாண்டிங்.

Saturday, November 7, 2009

மின்னல் வேகத்தில் வார்ப்புரு மாற்றுவது எப்படி?

வார்ப்புரு மாற்றுவது எப்படி?

வார்ப்புருவை மாற்றுவது கொஞ்சம் கடினமான செயல் போல தோன்றும்.

Classic Template க்குள் சென்றால் பதினாறு வார்ப்புரு மட்டுமே இருக்கும். அதை நாம் விரும்பும்போது மாற்றிக் கொண்டே இருக்கலாம். இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது எந்த Gadgetம் தவறாது. அதே நேரத்தில் இது பெரும்பாலானோர் வைத்திருப்பது போன்றே இருக்கும். அதில் சில வகை வார்ப்புருக்களை எப்படி மாற்றினாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். சில அடிப்படை வார்ப்புருக்களை அமைத்துக் கொண்டால் வண்ணங்களை மாற்ற மாற்ற புதிய வார்ப்புரு போலவே இருக்கும். இதில் ஹெட்டர் படத்தினையும் அவ்வப்போது மாற்ற தினம் ஒரு வார்ப்புரு அமைவது போன்ற ஒரு தோற்றத்தினைக் கொடுக்கும்.

வெளியாட்கள் கொடுக்கும் வார்ப்புருக்களை உபயோகப் படுத்த விரும்பினால் அதில் 7 அல்லது 8 காலம்கள் இருக்கக்கூடிய ஒன்றை உபயோகப் படுத்தலாம். அதிலும் மேற்சொன்ன வழியைப் பயன்படுத்தி சில காலம்களை உபயோகப் படுத்தாமல் விடுவதன் மூலமும், ஹெட்டர் படத்தினை மாற்றுவதன் மூலமும் புத்தம் புதிய வார்ப்புருவாக மாற்றம் செய்து கொண்டே இருக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் ஒரு வார்ப்புருவிலிருந்து மற்றொரு வார்ப்புருவுக்கு மாற்ற விரும்பினால் நாம் சந்திக்க்கும் பிரச்சனை முக்கிய Gadget கள் இழக்க நேரிடுதல். அதை இழக்காமல் தடுக்க ஒரு வழி இருக்கிறது.

பிளாக்கர் வழங்கும Gadget களை மனதில் வைத்துக் கொள்ளவும். வார்ப்புரு மாற்றியவுடன் அவைகளை add செய்து கொள்ளலாம். வெறும் லின்க் ஆக மட்டும் இருக்கும் Gadgetகளை எல்லாம் ஒரே Gadget ல் போட்டுவைத்துக் கொள்ளவும். அதைத் தனியே ஏதாவது ஒருவடிவத்தில் சேமித்துக் கொள்ளவும். புதிய வார்ப்புரு வந்தவுடன் ஒரே ஒரு பெட்டியைச் சேர்த்து அவைகளை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஹிட் கவுண்ட்டர் முதலான சில விஷயங்களை மட்டும் தனியே வைத்து தனித் தனி பெட்டிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை ரிஸ்க் எடுத்தும் எளிமையாகச் செய்யலாம். தனியாக சேமிப்பதற்கு பதிலா page elements பகுதிக்கு வந்து ஒவ்வொரு Elementஐயும் தனியாக எடிட் செய்ய திறந்து வைத்துக்கொள்ளலாம்.   பின்னர்   இன்னொரு   உலாவியைத் திறந்து புதிய வார்ப்புருவை வடிவமைத்துக்கொண்டு அதில் இதை காப்பி பேஸ்ட் முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த முறைகளில் சில நிமிடங்களில் பழைய வார்ப்புருவை மிக எளிமையாக புதிய வடிவத்திற்கு மாற்றிவிடலாம்.

அடிப்படை Minima template ஐ உபயோகப் படுத்திக் கொண்டு பிண்ணனியை மட்டும் மாற்றிக் கொண்டே இருந்தால் வார்ப்புருவே புதிதாக மாறியது போல இருக்கும். மற்ற வார்ப்புருக்களிலும் இவ்வாறு செய்யலாம். அவைகளில் மாற்றினால் பிண்ணனி மாறியது மட்டுமே தெரியும்.

அந்த வசதியை நிறைய தளங்கள் தருகின்றன. 

http://bloggerblogbackgrounds.blogspot.com/ 

தளமும் அதில் ஒன்று. இவர்கள் தரும் பிண்ணனியை ஒரு  Gadget ல் போட்டு சேர்த்துக் கொள்ளமுடியும். அதை மட்டும் மாற்றினாலே வார்ப்புறு புதிது புதிதாக மாறிவிடும்.

முயற்சி செய்து பாருங்களேன். அவ்வப்போது ஹெட்டர் படத்தையும் மாற்றினால் புதுப்புது வார்ப்பு வருவது போல தோற்றம் கொடுத்துக் கொண்டே இருக்கலாம்.

====================================================================

இது இல்லாமல் பாரம்பரிய முறையிலும் ஒவ்வொரு 

Elementஐயும்   Gadgetஐயும் அதற்குரிய பகுதியில் போய்  ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்துக் கொள்ளலாம். அல்லது edit templateல் போய் குறிப்பிட்ட பகுதியை copy எடுத்து வைத்துக் கொண்டு பின்னர்  paste செய்தும் புதிய வார்ப்புருவை முழுமை படுத்திக் கொள்ளமுடியும்

====================================================================

புதிய  template ல் பதிவு வரும்போது  புதிய திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வினை வாசகர்களுக்கு ஏற்படுத்தலாம்.  தொடர்ச்சியாக படிக்க வருபவர்களுக்கு ஒரு பிரமிப்பினையும் கொடுக்க இயலும்.

=====================================================================

பின்குறிப்பு:- எனக்கும் கணிணிக்கும் உள்ள உறவு சில மாத பந்தமே.., இந்த இடுகையில் ஏதாவது தவறோ அபத்தமோ இருப்பின் சொல்லுங்கள். சரி செய்து கொள்கிறேன். இந்த முறைகளில்தான் நான் வார்ப்புருக்களில் வித்தியாசம் காட்டிக் கொண்டு இருக்கிறேன். அதனால் ஆநேகமாக அனுபவ ரீதியில் சரி என்றுதான் நினைக்கிறேன்


Wednesday, November 4, 2009

சாலமன் பாப்பையாவை வஞ்சம் தீர்த்துக் கொண்ட பதிவு

தொடர்பதிவு என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி ஒரு மகிழ்ச்சியான விஷயம். நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் போடுவது போல இன்னொருவரின் கற்பனைக்கு நாம் ஒரு சட்டைப் போட்டு அனுப்பலாம். சட்டை ரசிக்கப் படும். பாராட்டப் படும். பரிசளிக்கப்படும். இப்போது  மாதவராஜ் அவர்களின் கற்பனை நான் ஒரு சட்டைப் போட்டு அனுப்புகிறேன். இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த   இனியவன்   லால்குடி என். உலகநாதன்,      
அவர்களுக்கு நன்றி.


1.அரசியல் தலைவர்
பிடித்தவர்:- விஜய டி.ஆர். ஆதரித்து பேசினாலும் எதிர்த்துப் பேசினாலும் ஆணித்தரமாக பேசுவார். சில நிமிடங்களில் தனது நிலையை மாற்றிக் கொண்டாலும் அதற்கான காரணத்தை மிக அழுத்தமாக மற்றவர் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்ற வகையில் பேசுவார்.

பிடிக்காதவர்:- ரஜினிகாந்த் .  இவரை நம்பி அரசியல் பயணம் மேற்கொள்ள நினைத்தவர்களை நட்டாற்றில் விட்டவர். 


2.எழுத்தாளர்
பிடித்தவர்:  கல்கி
பிடிக்காதவர்: பாலகுமாரன்   அவரின் கதையை இவர் தொடர்வதாகச் சொல்லி எழுதிய காரணத்தாலேயே எனக்கு இவரைப் பிடிக்காது. தவிரவும் இவரது ரசிகர்கள் செய்யும் அலப்பரை மற்றும் ரசனை பற்றிய விமர்சனங்களாலும் எனக்கு இவரை பிடிக்காது

3.கவிஞர்

பிடித்தவர்: வாலி  எல்லா வகைப் பாட்டுகளையும் எழுதுவார்.


பிடிக்காதவர்:விஜய டி.ஆர்.



4.இயக்குனர்

பிடித்தவர்: எம்.ஜி.யார் தனது திரைப்படத்தில் தனது கருத்துக்களை படித்திற்கு சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திணிக்கத்தெரிந்தவர். பல வித நல்ல கருத்துக்களை பாமர மக்களையும் முணுமுணுக்க வைத்தவர்.  இவருக்கு அரசியல் சாயம், மற்றும் நாயகன் வேடம் இல்லாமல் இருந்திருந்தால் திரைப்படத்தின் மூலமே ஒரு சமூகப் புரட்சி நடந்திருக்கும். தான் நடிக்கும் படத்தில் ரீமேக் படத்தில் கூட சிகரெட் பிடிக்கும் காட்சி வைக்காதவர். தண்ணியடிப்பதை தவிர்த்தவர். உடற்பயிற்சியை கடைசிப் படம் வரை வலியுறுத்தியவர். மாற்றுக்கருத்து இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துவிட்டு வரவும் 

பிடிக்காதவர்: விசு,   இவரது தம்பியின் மறைவுக்குப் பின் இவரது கற்பனை சுத்தமாக வரண்டுவிட்டது.


5.நடிகர்

பிடித்த நடிகர்:சிவாஜிக்கு அடுத்து தலைவாசல் விஜய் காதல் கோட்டை படத்திற்கு முன்பே ஆளவந்தான் கொலைவழக்கில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

பிடிக்காத நடிகர்: சாலமன் பாப்பையா (இடுகையின் தலைப்பின் நாயகர்)


6.பிடித்த விளையாட்டு: கால்பந்து


பிடிக்காத விளையாட்டு: பெரிய சைஸ் பேக்கரி கம் கூல்டிரிங்க்ஸ் கடைகளில் பந்தை உருட்டி உருட்டி  விளையாடுவார்களே அந்த விளையாட்டு. இதே போல் புரியாத விளையாட்டுக்களும் நிறைய இருக்கின்றன.

7.பிடித்த பேச்சாளர்: அறிவொளி


பிடிக்காத பேச்சாளர்: ஐ.லியோனி


இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


இதைத் தொடர  இளைய பல்லவன் மற்றும் ஸ்டார்ஜன் ஆகியோரை அழைக்கிறேன்.



 

Monday, November 2, 2009

விஜய், அஜித் யார் முதல்ல?

எத்தனையோ படங்களில் ரஜினி சிகரெட் பிடித்திருக்கிறார். எத்த்னையோ விதங்களில் அவர் சிகரெட் பற்றவைத்து இருக்கிறார். ஆனால் அவர் செய்யாத ஒரு முறையில் ஜூனியர் எண்டியார் பத்தவைக்கிறார் பாருங்கள். 




அஜித் விஜய் படங்களெல்ல்லாம் இப்போது பலவிதமான சண்டைப் படங்களாகவே வருகின்றன. ஆனால் கீழே உள்ள சண்டைக்காட்சி போன்ற சண்டைக்காட்சி இவர்களுடைய எந்த படத்துலும் இடம் பெற்றதாக தெரியவில்லை. யார் படத்தில் இந்த சண்டைக்காட்சி முதன் முதலில் இடம் பெறப்போகிறதோ தெரியவில்லை

Sunday, November 1, 2009

சில ரகசியங்கள்

மீண்டும் ஒருமுறை தொடர்பதிவிற்கு என்னை அழைத்து பெருமை கொள்ள வைத்திருக்கும் வருங்கால ஐ.நா.சபை பொது செயலாளர் காஞ்சித்தலைவன் இளைய பல்லவன் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

இந்த வலைப்பூவே என்னைப் பற்றி சுய தம்பட்டம் ஆகவே இருக்கிறது. எனவெ சிறு குறிப்பு என்பதை விட நெடுங்குறிப்பு என்று ஏற்றுக் கொண்டு இந்த வலைப்பூவை பிந்தொடர்பவராக மாறி எனது இடுகைகளைத் தொடர்ச்சியாக படித்துவருமாறு அனைவரையுமே கேட்டுக் கொள்கிறேன். 

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

அந்தச் சம்பவத்தை இன்னொரு வலைப்பூவில்  இந்த இடுகையில் போட்டு இருக்கிறேன். வாசித்துவிட்டு தங்கள் கருத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.


3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

பழனியில்


4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

வழக்கம்போல் சிறுவர்கள் வீட்டுக்கு வெளியேதான் கொண்டாடுகிறார்கள்.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

திருமணத்திற்கு பின் அதுபற்றி எனக்குத் தெரியாது. 



6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எங்கள் பாட்டி காலத்தில் தீபாவளிக்கு இட்லி சுடுவார்களாம். அவர்கள் காலத்தில் எங்கள் கிராமத்திற்கே சிறப்பு உண்வே அதுதானாம்.  அது என்னவோ தெரியவில்லை நகரத்தில் தீபாவளிக்காக இனிப்புகளாக செய்து குவித்து, வாங்கிக் குவித்து சாப்பிடுவது என்பது எனக்கு நகைச்சுவையாகவே தெரிகிறது.


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

தீபாவளிக்கு மட்டும் என்பதாக வைத்துக் கொண்டு பதில்


பதில் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்வதுண்டு. மின்னஞ்சல், அட்டை எப்படி வாழ்த்துவந்தாலும் பதிலுக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிடுவதுண்டு. நேரிடையாக சொல்பவர்களுக்கு நேரிடையாக வாழ்த்து சொல்லிவிடுவேன்.


8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

பள்ளிக் காலங்களில் நண்பர்களுடன் ஊர்சுற்றுவேன். கல்லூரி காலங்களில் மதியம் கிளம்பி இரவுக்கு முன் விடுதிக்குச் சென்று தீபாவளிக் கொண்டாட்டங்கள். பயிற்சி மருத்துவரான பின் அனைத்து தீபாவளியும் மருத்துவமனையில்தான். தலை தீபாவளிமட்டும் எல்லோரையும் போல


9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

நல்ல கேள்வி. இந்த இடுகையின்மூலம் ஒரு நல்ல சிந்தனை துளிர்விட்டிருப்பதை நினைக்கையில் மகிழ்ச்சி. 


10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அக்பர்  சிநேகிதன்

T.V.Radhakrishnan    தமிழா...தமிழா..

Thursday, October 29, 2009

எத்தனை தாவணி? ஒரு புலனாய்வு

ஒரு ஊரில ஒரு சின்னப் பையன் இருந்தான். அவன் சின்னப் பையனாக இருக்கும்போதே நற்பணி மன்றம் ஒன்றில் உறுப்பினராக இருந்து வந்தான்.

Wednesday, October 28, 2009

பொதுவில் ஒரு மறுமொழி

http://tvrk.blogspot.com/2009/10/5_28.html   
தளத்தில் ஒரு பாடலும் பொருளும் அழகாகக் கொடுத்துள்ளார் நமது திரு. T.V.Radhakrishnan  அவர்கள்.

Sunday, October 25, 2009

உருகும் மனிதன், பேசும் தனித்தலை

கோயமுத்தூரில் அரசுப் பொருட்காட்சி காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெறும். தொடர்குண்டுவெடிப்பிற்கு முந்தைய கால கட்டத்தில் கதை நடைபெறுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள் நண்பர்களே..., மாலை நேரத்தில் கோவை மருத்துவகல்லூரி சார்பாக இரண்டு ஸ்டால்கள் போடப்படும்.

Monday, October 19, 2009

பதினெட்டு பூர்த்தியாகிவிட்டது

25வது வாரமாக ஒரு தொடர்கதை போய் கொண்டு இருக்கிறது. கோவை மருத்துவக் கல்லூரி பின்புலத்தில் ஏப்ரல் 28நாள் நான் எழுதத் தொடங்கிய இந்தத் தொடர்கதை உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் பதினெட்டு பகுதிகளை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு முழுமையான கற்பனைக்கதைக்கு உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்


ஒரு மணிநேரத்திற்குப் பிறகு திடீரென சிந்தனையில் ஒரு அடைப்பு. கருத்துக்கள் வெளியே வரமால் தடுமாறியபோது பக்கத்தில் யாரிடமாவது உதவி கிடைக்குமா என்று ஆராந்தபோது சுமித்ராவும் சுமனும் அந்தக் கால கங்கூலியும் டெண்டுல்கரும் போல கூட்டணி அமைத்து தேர்வெழுதி கொண்டிருந்தனர். 

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

எங்களிடம் சிக்கிய மாணவனிடம் விசாரித்த போது இது கடந்த ஒரு வாரமாக நடப்பதாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெயர் ஊர் ஆகியவற்றை விசாரிப்பதற்கும் புதிய மாணவன் என்னை ஒன்னும் பண்ணாதீங்க சார் என்று அழ ஆரம்பித்து விட்டான்.

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி


மறுநாள் அன்று அந்த ஜூனியர் மாணவன் முழு பயோ டேட்டாவுடன் வந்து நின்றான். எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. சீனியர் மாணவர் கேட்டார் என்று ஏறக்குறைய மிரட்டி முழு விவரங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டான். பின்னாளில்தான் தெரிந்தது சீனியர் கேட்டார் என்றே நிறைய மாணவிகளின் முழுவிவரங்களையும் வாங்கி வைத்திருக்கிறான். எத்த்னை பேருக்கு என்னைக் காட்டி விவரங்கள் வாங்கினானோ தெரியவில்லை.


ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஒரு குழுவாக நடு இரவில் கால்பந்து மைதானத்தின் நடுவில் அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். கால்பந்து மைதானத்தில் அமர்ந்து மந்திர ஆலோசனை செய்வதில் பல வசதிகள் இருந்தன. எத்தனை பேர் வேண்டுமானாலும் அமரமுடியும். பேசும் விஷயங்களை யாரும் ஒட்டுக் கேட்க முடியாது.

Sunday, October 18, 2009

சிரிப்பொலி தொலைக்காட்சியின் குசும்பு

சிரிப்பொலித் தொலைக்காட்சியில் பொதுவாக நகைச்சுவைக் காட்சிகள் போடுவார்கள். அந்தக் குழுமத்தில் நகைச்சுவைக்கான அலைவரிசை இது. சில நேரங்களில் திரைப்படங்களும் போடுவார்கள். பொதுவாக நகைச்சுவைப் படங்களே வரும்.

இன்று தேவர் மகன்

இது காசு படைத்த இரு அண்ணன் தம்பிகளின் குடும்பங்கள் எப்படி வெட்டி கவுரவத்திற்காக  ஊரை இரண்டு படுத்தி நாசமாக போகிறார்கள் என்பதைக் கதையாக படைத்திருப்பார்கள்

Friday, October 16, 2009

விடுமுறை தின சிறப்பு இடுகை 17/18.10.2009

எண்ணைக் குளியல்
அழைத்தான்

வந்தாள்

சொன்னான்

செய்தாள்

அவள் வந்தால்

நிதானமா?

போனால்தான்

வேகமா?

எதற்கோ

அழைத்து

ஏனோ

போகச் சொல்லி...

அவளை என்ன

ராகுல் டிராவிட் என்று

நினைத்துக் கொண்டார்களா?

=====================================================================

சிறப்புப் படையல்

இது எத்தனையோ யுகங்கள் தாண்டி நடக்கும்வகையிலான கதை. அதனால் கொஞ்சம் கற்பனைக் குதிரையில் ஏறி இந்தக் கதையைப் படித்தல் நலமாக அமையும்.

அந்த யுகத்தில் நமது கதைக்கு இரண்டு நாடுகள் தேவைப் படுகின்றன. ஒரு நாட்டினை ஜி தேசம் எனவும், மற்றதை ஏதேசம் எனவும் அழைப்போம்.

தொழில்நுட்பங்கள் மிகக் கடுமையாக வளர்ந்துவிட்டிருந்த காலம் அது. மிக நவீன ஆயுதங்கள் போர்களத்தில் பயன்படுத்தப் பட்டுவந்தன. மனித உடலிளேயே  ஆயுதங்களை இயக்கும் மென்பொருட்களை இனைத்திருந்தனர்.   அதற்கான தனி தொழிற்நுட்பப் பிரிவு ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டுவந்திருந்தது.

ஏதேசத்தின் தலைவன் திருவாளர் எம்.  பலபல போர்களை ஜிதேசத்தின் மீது பல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். இதனால் மனம் வெறுத்துப் போன ஜிதேசத்தவர்களின் உயர்மட்டக்குழுவினர் அதைப் பற்றிய ஆலோசனைகளை செய்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே ஜிதேசத்தவர்கள்  ஏதேசத்தவர்களை ஏமாற்றி அழியாவண்ணம் ஒருமென்பொருளை தங்கள் உடலில் பொறுத்தியிருந்தனர். இப்போது திருவாளர்.எம் மை எப்படி அழிப்பது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டபோது அவரது உடலில் இருந்த ஆண்டி-வைரஸ் பற்றிய தகவல்கள் அம்பலமானது . அவரது உடலில் இருந்த ஜீன்கள், புரதங்கள், அமினோ அமிலங்கள் போன்றவை மிகக் கடுமையாக ஆராயப் பட்டன. அந்த ஆண்டி வைரஸை அழிக்க வேண்டுமானால் அவர்மீது தாக்குதல் நடத்துபவரின் உடலில் Y குரோமோம் இருக்கவே கூடாது என்றவகையில்

Sunday, October 11, 2009

யார் கை மாறினாலும் ஜக்குபாய் ஜக்குபாய்தான்

ஏற்கனவே ரஜினிக்காக ஜக்குபாய் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பூஜை போட்ட கே.எஸ்.ரவிக்குமார் அதே பெயரில் சரத் குமாரைவைத்து, அவருக்காக இயக்கும் படமாக ஜக்குபாய் வர இருக்கிறது. ரஜினிக்கு பூஜை போட்ட கதைதான் இதுவா. அதே கதைதான் என்றாலும் திரைக்கதை அதேதானா, என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை.

காதல் வானிலே

உன் பெயர்

Tuesday, October 6, 2009

குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

சக மாணவி மூக்கில் ரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்தால் என்ன தோன்றும்? இருந்தாலும் மாணவர்கள் எழுப்பிக் கொண்டே இருந்தனர் .

Sunday, September 27, 2009

ரசிகன் 27.9.09

ரசிகர் மன்றம் ஏன்? யார் நடத்துகிறார்கள் ?

வளரிளம் வாலிபர்கள்தான் ரசிகர் மன்றத்தின் தூணாக விளங்குகிறார்கள். அவர்கள் ஏன் ரசிகர் மன்றத்தில் சேருகிறார்கள் என்று யோசித்து இருக்கிறீர்களா?

உண்மையில் அவர்கள் ஏதாவது சாதிக்கத் துடிக்கும் சிங்கங்ளின் சங்கமமாகவே இருக்கும்.

தமிழகத்தின் ஆரம்ப கட்ட ரசிகர்மன்றங்களை நோக்கிப் பார்த்தாலே தெரியும். ஒரு அமைப்பு தேவைப் படுபவர்கள், அந்த அமைப்பின் மூலம் பெயர் வாங்க நினைப்பவர்கள் நாடும் இடமாகவே ரசிகர்மன்றம் இருக்கிறது. ஓரளவு படிப்பும் வேலையும் இருப்பவர்கள் தங்கள் வேலை பார்க்கும் இடத்தில் சங்கம் மூலமாகவோ அமைப்பு மூலமாகவோ ஏதாவது செய்கிறார்கள்.

விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் 27.9.09

புதுமை.., புதுமை.., புதுமை...,


மணலுக்குள் வீரர்கள் புதைந்து ஒளிந்திருந்து தாக்குவது தமிழுக்க்கு புதியது

ஒளிந்திருக்கும் வீரர்கள் சுவாசிக்க சிறுகுழல்கள் பயன்படுத்துவது மிகவும் புதியது

இசைக்கலவைகளும் கோர்வையும் என்றும் புதியது

நல்லத கண்டா நமக்குப் பொறுக்காதே வசனம் என்றும் இளமையானது.

இசைக்கருவிகள் வைக்கும் இடமும் வாசிக்கும் முறையும் எப்போதுமே புதுமையானது.


..........................................................................

அநேகமாக நம் நண்பர்கள் இந்திப் படங்களை பார்க்க ஆரம்பித்தது இந்தப் படத்திற்கு பின்னராகத்தான் இருக்க வேண்டும்.

மேலே பார்த்த பாடல்போன்ற காட்சி அமைப்புதான். சில ஆண்டுகள் கழித்துவந்த படம். வில்லன் கூடாரத்தில் இசைவிருந்து. வார்த்தைகளில் பெரிய அளவில் மாறுதல்களுடன்..,
என்ன இருந்தாலும் தமிழ் முதலிடம்தானே..,


..........................................................................

சிவாஜி கணேசன் அவர்களின் பல படங்களின் காட்சிகளின் தொகுப்பு இது
கூடவே சில பெரிய மனிதர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்



..........................................................................

கிரிக்கெட் பார்த்திருப்ப்பீர்கள். அதில் சில சுவாரசியமான ஆட்டமிழத்தல்கள்



.........................................................................

காந்தியை ஏன் கைது செய்யக் கூடாது?

Tuesday, September 22, 2009

ஒரிஜினல் காமன் மேன்

காமன் மேன் யாரு எப்படி இருக்க வேண்டும் என்று எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.பதிவுகளைப் படிக்கும்போது நானும் கூட பாமரத்தன்மையுடன் கூடிய நடிகர் யார்? என்று யோசித்துப்பார்த்தேன்.

அப்போது எழுந்த சந்தேகம் பாமர மனிதன் தான் காமன் மேனா? கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை சராசரி மனிதன் தான் காமன் மேன் என்பவனா? அப்போது அவரேஜ் மேன் என்பவன் யார்? காமன் மேன் தான் அவரேஜ் மேனா... இல்லை ஆவரெஜ் மேன் தான் காமன் மேனா? காமன் மேன் அபவ் ஆவரேஜ். இல்லை பிலே ஆவரேஜ்.?

Monday, September 21, 2009

விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் 21.9.09

பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு தங்களின் இன்றைய பொழுதினை பக்தியில் களிக்கும் நண்பர்களுக்கு இன்றைய பொழுது போதாமல் இருக்கும்.

ஆனால் இன்று வெறும் விடுமுறை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கான சிறப்பு இடுகை. முழுக்க முழுக்க பொழுது போக்க மட்டுமே...

Saturday, September 19, 2009

மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி 19.9.09

ஆத்தா வையும், சந்தைக்குப் போகணும் காசு குடு
என்று பதினாறு வயதினிலே கமல் சொல்லுவது சுமித்ரா சொல்லிக் கொண்டிருந்தாள். ஏன் எதற்கு? என்று கேட்பவர்கள் sweet sixteen பகுதியைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

நாளைக்கு நான் தான் கேஸ் பிரசண்ட் பண்ண போறேன். சீஃப் கிளாஸ். நான் போய் ப்ரிப்பேர் பண்ணனும். சுமித்ரா புலம்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் பேசிய பிறகு சொல்வதைக் கவனிக்க ஆரம்பித்தாலும் அவளுக்கு மறுநாள் புறநோயாளிகள் பகுதியில் துறைத்தலைவரின் முன்னிலையில் பேசப் போகும் நிகழ்ச்சியே அவள் மனதில் ஆக்கிரமித்திருந்தது.

Tuesday, September 15, 2009

மிட்நைட் மசாலா

நள்ளிரவில் இனிமேல் ஆபாச நிகழ்ச்சிகள் ஒலி,ஒளிபரப்பப் படலாம் என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

சிலரெல்லாம் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தொலைக்காட்சிகளெல்லாம் இரவில் மட்டும் தான் இயங்கும். பகலில் ஒளிபரப்பு இருக்காது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஆபாசம் இல்லை என்றுதானே தனியாக ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதற்காக நமது சில் யோசனைகள்:-

Monday, September 14, 2009

அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09




















இந்த ஓவியங்கள் அறிஞர் அண்ணா தன் கைப்பட வரைந்தவை. இது தாய்தளமான இந்தத் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவை.படங்கள் முழுக்க முழுக்க அவர்களுக்கே சொந்தமானவை. அண்ணாவின் படைப்புக்களை பலரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளேன். அறிஞர் அண்ணாவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த ஆவணங்கள் தகவல்கள் ஏதும் இருந்தால் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள அந்தத் தளத்தை ஒரு சுற்றுச் சுற்றிவாருங்கள்

Sunday, September 13, 2009

தேவதையின் கடைக்கண் பார்வை என் மீதும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA3fK-fCPW4ISY-suqIyxs5fueekv_AypRFqrhWhVnQ-XpvoceSISPYiUXfBaeQDNU1Rmn-2ffx8VR0lvr38vEZsfMDTHC52APe2N0R5qAbYXZ2bdEqDBS9pcRtZx2IPDL8wUwy_6t-K4/s400/angel-59.pngஇந்த பதிவை எழுத அழைத்த அருமைத் தலைவர் சிங்கக் குட்டிக்கு நன்றி!!

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?

Saturday, September 12, 2009

சமீபத்திய கேள்விகளுக்கு பதில்கள் 12.9.09

அண்ணா 11.9.09இடுகைக்கான பதில்கள்

1. ஒரு முதலமைச்சர் (சம்பவம் நடக்கும்போது அல்ல) ஒரு நாடகத்தில் மூன்று வேடங்களில் நடித்து இயக்கினார். அவர் யார்? அந்த நாடகம் எது? அந்த நாடகத்தை எழுதியவர் யார்?

அண்ணா - சில கேள்விகள் 12.9.09

1.அறிஞர் அண்ணா படித்த தொடக்கப் பள்ளியின் பெயர் என்ன?

2.அண்ணாவின் முதல் சிறுகதை எந்த ஆண்டு, அந்தப் பத்திரிக்கையில் வெளியானது?

3.அண்ணா, பெரியாரை எங்கு முதன்முதலில் சந்தித்தார்?

Friday, September 11, 2009

திருமண வயதை எட்டிய பிரபல பதிவர்

பிரபல பதிவர் ஒருவர் தனது 21வயதை வரும் செப்-12ல் பூர்த்தி செய்யப் போகிறார். ஓட்டுப் போடும் வயது என்று சொல்லியிருக்கலாம். காலத்தின் கட்டாயத்தால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த தகுதியை அவர் அடைந்துவிட்டார்.

அண்ணா 11.9.09

1. ஒரு முதலமைச்சர் (சம்பவம் நடக்கும்போது அல்ல) ஒரு நாடகத்தில் மூன்று வேடங்களில் நடித்து இயக்கினார். அவர் யார்? அந்த நாடகம் எது? அந்த நாடகத்தை எழுதியவர் யார்?

2.புதுக்கவிதைக்கு அண்ணா பயன்படுத்திய சொல் தெரியுமா?

Thursday, September 10, 2009

அரசியலுக்கு வர விஜய்க்கு உள்ள தகுதிகள்

1. விஜய் தமிழ்நாடு முழுவதும் தெரிந்த மிகச் சில மனிதர்களில் ஒருவர்.

2.அவரால் எந்த ஒரு இடத்திலும் ஒரு கூட்டத்தைக் கூட்ட முடியும்.

3.அவர் சொன்னால் ரத்தம் தானம் செய்யவும், நோட்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கவும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

Monday, September 7, 2009

வறண்ட தொண்டை

சேகருக்கு தலைகால் புரியாமல் நின்றான். பின்னே கௌதமன் சார் வீட்டுக்குப் போறதுன்னா.., கௌதம் சார் வந்த பிறகுதான் அவன் ஆங்கிலம் ஒழங்காக படிக்க ஆரம்பித்தான். வழக்கமாக சங்கர்தான் போவான். அங்கு போனால் சாரின் மனைவி குடிப்பதற்கு மோர் கொடுப்பாராம். அது தேன் போல தித்திக்குமாம்.

கௌதம் சார் என்றாலே சேகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் பள்ளியில் ழ கரத்தை அழுத்தமாக உச்சரிக்கக் கூடிய ஆள் அவர்தான். அவரது வகுப்புகளை கவனிக்கும்வரை தாங்கள் எல்லோரும் ழ கரத்தைச் சரியாக உச்சரிப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

Sunday, September 6, 2009

கந்தசாமி ஏன் பதிவர்கள் மற்றும் இன்னபிற நண்பர்களுக்கு பிடிக்கவில்லை?

1.இணைய தள மக்களும் வலைப்பூ மக்களும் தங்கள் மின்னஞ்சல், மற்றும் தள முகவரிகள் எங்கே ஹேக் செய்யப் பட்டுவிடுமோ என்ற பய்த்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது கந்த சாமி ஒருவங்கிக் கணக்கையே ஹேக் செய்வது என்பது நமது வலைஞர்களாலே ஜீரணிக்க முடியாத ஒரு காரியமாக அமைந்துவிட்டது. அந்த ஒரு காரணத்தினாலேயே கந்த சாமியை வெறுத்துவிடலாம்.

2. தமிழக போலீஸ் ஒரு சி.பி.ஐ அதிகாரியை உண்மையை ஒப்புக் கொள்ள அவருக்கு பிடித்த பெண்ணை கற்பழிக்கும் அளவுக்கு போவார்கள் என்பதாக காட்சி அமைத்திருப்பது கோடாணு கோடி தமிழ் மக்களுக்கு பிடிக்கவில்லை

(சி.பி.ஐ.அதிகாரி அதை நம்புவதுபோலவும், கற்பழிப்பைத் தடுப்பதற்காக உண்மையை ஒப்புக் கொள்வது போலவும் காட்சி அமைத்திருப்பதால் இந்தமாதிரி வழக்கம் இருப்பதுபோல அழுத்தமாக கருத்தினை பதிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் இதற்கெல்லாம் மனசு விடவேண்டியதில்லை. இதைவிட அலைபேசி வெளிச்சத்தில் அறுவைசிகிச்சையை பார்த்தவர்கள் அல்லவா நாம்)

Friday, September 4, 2009

Thursday, September 3, 2009

கொஞ்சம் தைரியம் வந்து..,

நேற்று

கொஞ்சம் தைரியம்வந்து

உன்னிடம் பேச நினைத்தபோது

அருகில்வந்த

உன் தோழியைப் பார்த்து

கொஞ்சம்பயந்து

கொஞ்சம் நடுங்கி

திரும்பிச் செல்ல

நினைக்கையில்

எதிரே தென்பட்ட

பிள்ளையார்கோவில் பிரசாதம்

நாக்கில் எச்சில்

ஊரச்செய்து

அருகே அழைக்க

போய் கையை நீட்டி

வாங்கினேன்

பிரசாதத்தையும்

என்னவளின்

முதல்பார்வையையும்

Wednesday, September 2, 2009

கந்தசாமியின் வெற்றி எப்படி? ஒரு அலசல்

வலைப்பூவில் எழுதுவதில் நம்மைக் கவர்ந்த எழுத்தாளர்களின் சாயல் தென்படுவது இயல்பு. நமக்கு வலைப்பூவை அழைத்த எழுத்தாளாரை பின்பற்றியே எழுதிவருகிறார்கள். சமீபத்தில் பலதொடர்பதிவுகள் போட்டு நண்பர்கள் பலரையும அழைத்து தொடர்பதிவை எழுதச் சொல்கிறார். அதைப் படிப்பவர்கள் எல்லோரும் தொடர்பதிவாக அதைப் போடுகிறார்கள். பொதுவாக ஒத்த கருத்தைக்க் கொண்டவர்களே தொடர்பதிவுக்கு அழைக்கப் படுவதால் அதே போன்ற விமர்சனமே தொடர்ந்து கிடைக்கிறது.


ஒரு வலைப்பூவைப் படிக்கும்போது அதில் உள்ள கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தையும் யாரும் தொடர மாட்டார்கள். அந்தக் குறிப்பிட்ட வலைப்பூ பக்கமும் வர மாட்டார்கள். குறைந்தபட்சம் அந்த இடுகையின் பக்கம்.., இதில் விதிவிலக்காக அதிகம்பேர் படிக்கும் வலைப்பூ என்றால் எதிர்கருத்துடைய சில பதிவர்கள் மட்டுமே தொடர்ந்து எதிர்ப்பார்கள். மற்றபடி ஆதரித்து பின்னூட்டம் மட்டுமே பொதுவாக வரும். எதிர்கருத்துடைய பெரும்பாலானாவர்கள் அடுத்த வலைப்பூ பக்கம் சென்றுவிடுவார்கள்

கந்தசாமி விமர்சனம் கூட அந்த வகையில் பார்க்கலாம். முதல்நாளிலியே ஏறக்குறைய இருபத்தைந்துக்கும் மேற்பட விமர்சன இடுகைகளை வாசிக்க நேரிட்டது. பலரும் அடுத்த நாளும் பார்த்துவிட்டு மறக்காமல் விமர்சனம் எழுதுவதிலேயே குறியாக இருந்தனர். இதற்கு முன் வந்த விஜய். அஜித் தின் படங்களுக்கெல்லாம் வராத எண்ணிக்கையில் விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு வந்தன. முதல் சில நாட்கள் வந்த ஒட்டுமொத்த விமர்சங்களை இந்த இடத்தில் பார்க்கலாம்

படம் சரியில்லை என்று நாம் மிகவும் மதிக்கும் பதிவர் எழுதிய பின்னரும் கூட மனசு கேட்காமல் அந்தப் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற மனநிலையில் பார்த்துவிட்டு அந்த ஏமாற்றத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள் பதிவர்கள்.

எனக்கென்னவோ அதே தியரி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வேலை செயகிறதோ என்று தோன்றுகிறது. பெரும்பாலான ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று சொன்னாலும் கூட அடுத்த ஆளும் பார்த்துவிட்டு

ஆமாம் படம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை தோன்றுகிறது.

அதுவும் படம் சரியில்லை என்று சொல்பவர்கள். விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். ஷ்ரேயாவும் சிறப்பாக திறமை காட்டியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு படம் சரியில்லை என்று சொல்கிறார்கள்.

மற்றவர்களும் அந்த ஆசையிலேயே படம் பார்த்துவிட்டு படம் சரியில்லை என்று சொல்லிவிட்டு அவர்களின் பார்வையில் கூடுதலாக சில கருத்துக்களை அள்ளித் தெளித்துவருகிறார்கள்.

பார்ப்போம். நன்றாக இல்லை என்று சொல்லி வரும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படம்பார்த்து விட்டு மேலும் மேலும் குறைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார்களோ என்னவோ!

இல்லை காக்க காக்க மாதிரி இந்தப் படமும் தோல்விப்படம் ஆகி அதன் நாயகனும் இயக்குநரும் திட்டுவாங்கியது போல இந்தப் பட ஆட்களும் திட்டு வாங்குவார்களோ!
=======================================================

கந்தசாமி தமிழ் கடவுள்
தமிழ் கடவுளை தோற்கடிக்க தமிழர்கள் விடமாட்டார்கள். திட்டியாவது வெற்றி பெறச் செய்து விடுவார்கள்

=======================================================

Sunday, August 30, 2009

சிவாஜியை ரசிக்க மேலும் இரு காரணங்கள்

இன்றைய தலைமுறை திரைப்படங்களில் எதைச் செய்தாலும் அதை ஏற்கனவே சிவாஜி செய்து விட்டார் என்று சொல்லி விடலாம். அந்த மாதிரி இரண்டுகாட்சிகள்தான் இவை. இதை தயாரித்த நண்பர்களுக்கு நன்றிகள்.



Saturday, August 29, 2009

V.I.P யின் பார்வையில் QUICK GUN முருகன்




படத்தின் மேல் கிளிக் செய்யவும்
கடைசிக் கட்டத்தில் தமிழ் இலக்கணம் பற்றிய ஒரு காட்சியும் இருக்கிறது. கண்டிப்பாக காணொளியின் 3.14க்குப்பின் பார்க்கவும்.

இதற்கு முன் வந்த QUICK GUN முருகன் காட்சியையும் பார்த்து விடுங்கள்



எனது விமர்சனம் விரைவில் போட்டுவிடுகிறேன்.

Friday, August 28, 2009

மு.க. நகைச்சுவையாய் சொன்னது இன்று நடந்தே விட்டது

ஜூன் 25ம் நாள்..,


நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்


என்று நினைக்கிறேன்.

இருந்தாலும்

அன்று சிரித்த சம்பவம்

இன்று நடந்துவிட்டது

மேலும் படிக்க இந்த சுட்டியை தட்டுங்கள்

Monday, August 24, 2009

நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் 24.8.09

அடுத்த ஆண்டின் துவக்கம். முதல் வேளையாக கல்லூரி பேரவைக்கு பிரதிநிதி தேர்ந்தெடுக்கும் வேலை ஆரம்பம் ஆனது. அந்தப் பிரதி நிதியே வகுப்பின் தலைவனாகவும் இருப்பான். டேஞ்சர் டயபாலிக் விருப்பம் இல்லாமல் ஒதுங்கிக் கொண்டான்.

ஜில்லட்டின் குமார் ஏற்கன்வே குரூப் ஸ்டடி என்ற பெயரில் ஒரு கூட்டத்தைச் சேர்த்து வைத்திருந்தான். அவனது கூட்டத்தினர் அவன் சொல்வதை பெரும்பாலும் தலையாட்டிக் கொண்டிருந்த காரணத்தால் அவன்தான் இந்த ஆண்டின்ப் பிரதிநிதி என்பதாகவே எல்லோரும் நினைத்திருந்தார்கள்.

ஆனால் நடந்ததோ வேறு

பெண்ணுரிமை, பெண் விடுதலை என்று பேசி பேசி இருந்ததால் அவன் அணி சார்பாக ஒரு பெண்ணைத்தான் நிறுத்த வேண்டும் என்பதில் அந்தப் பெண்கள் மிகவும் உறுதியாக இருந்தனர் . ஜில்லட் ங்ஏ என்று விழித்துக் கொண்டிருந்தான். பெண்களில் வலிமை வாய்ந்தவளும் எதற்கும் அஞ்சாதவளும் எல்லோரிடமும் தைரியமாக நிற்கக் கூடியவளுமான சுமித்ராவே தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவள் என்பதாக அந்தக் குழுமம் முடிவு செய்திருந்தது. வழக்கம் போல் அந்தக் கூட்டத்திற்கும் குழுமி இருந்த அனைவருக்கும் ஜில்லட்டின்தான் குளிர்பானம் வாங்கிக் கொடுத்தான்.

அன்று மாலை அந்த வகுப்பு மாணவர்களின் பொதுக்குழு கூடியது. தேர்தல் பொறுப்பாளராக டேஞ்சர் டயபாலிக்தான் இருந்தான். வகுப்பினில் ஜில்லட்டின் நிற்பான் என்ற எண்ணம் இருந்ததால் ஆண்கள் யாரும் தேர்தலில் நிற்கவில்லை. ஜில்லட்டின் எழுந்து சுமித்ராவின் பெயரை முன் மொழிந்த உடன் ஆண்கள் பலர் சற்று அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவர்களால் ஒரு பெண்மணியை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. புதிதாக தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுக்கும் அவகாசம் இல்லாத நிலையில் குழப்பாகவே நின்றிருந்தனர்.

ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் படலாம் என்ற சூழலில்

சுமன் எழுந்தான். ரங்கீலா தத்தா வின் பெயரை முன் மொழிந்தான். ரங்கீலா பெயரைப் போலவே வண்ணமயமானவள். மாணவர் மனதில் இடம் பிடித்தவள். ரங்கீலா சுமன் பேசியே நாங்கள் பார்த்ததில்லை. தேர்வு மும்மரத்தில் எந்த எந்த கூட்டணி எப்படி இடம் மாறியது என்றே தெரியவில்லை. சைக்கிள் சின்னம் என்.டி.ஆரை விட்டு பிரிந்ததைக் கேட்டதைவிட மக்கள் அதிகமான அதிர்ச்சியை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

வேறு யாராவது நிற்பதற்கு விரும்புகிறீர்களா என்று கேட்ட போது இங்கிலீஷ் குப்பன், டயபாலிக் போன்றவர்கள் பெயர்களையும் பலரும் முன் மொழிந்தனர். (ஜில்லட்டின் பெயரும் முன்மொழியப் பட்டது. அவன் சுமித்ராவை முன்மொழிந்த காரணத்தால் அவனும் ஒதுங்கிக் கொண்டான்.) ஆனால் அவர்கள் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டதால் இறுதிப் போட்டியாளர்களாக ரங்கீலா தத்தாவும், சுமித்ராவும் போட்டியிட்டன்ர்.

------------------------------------------------------------------------------




----------------------------------------------------------------------------------

கொக்கு ஒன்னு காத்திருக்கு

கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது



----------------------------------------------------------------------------------

வடக்கும் தெற்கும் மோதிக் கொண்டதில் அதிபயங்கர திருப்பங்கள் நிகழ்ந்தன.
முதலில் சுமித்ரா நிற்பாள் என்பதே யாரும் எதிர்பாராத ஒன்று. ஜில்லட்டின் குமாரின் வகையறாவில் இல்லாத ஒருத்தி அவர்கள் சார்பாக நிறுத்தப் பட்டிருக்கிறாள். அடுத்ததாக சுமித்ராவில் முன்னாள் சைக்கிள் சாரதியான சுமனின் ஆதரவோடு ரங்கீலா தத்தா நிற்கிறார்கள்.

மூத்த மாணவர்கள் மத்தியில் ஒரு பத்திரிக்கையாளர் கம் அரசியல்வாதியின் தோற்றத்தில் சுமன்குமார் சித்தரிக்கப் பட்டிருந்தான். கிங் மேக்கர், குயின் மேக்கர் என்றெல்லாம் புகழப் பெற்றான்.

சுமித்ராவின் பதவியை முடிக்க வந்த கோடரிக் காம்பாக சுமன் சித்தரிக்கப் பட்டான். ரங்கீலாவிற்காக மாணவர்கள் மத்தியில் அவன் தான் ஓட்டுச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து வட நாட்டுப் பெண்களும், உள்ளூர் சேட்டுப் பெண்களும் மாணவர்களைத் தேடித்தேடிச் சென்று அளவளாவியதில் மாணவர்கள் தத்தாவிற்கே ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்பது போல தோன்றியது.

ஏற்கனவே இங்கிலீஷ் குப்பன் - சுமித்ரா உரசலில் அவளது சரமாரியான தமிழ் சொற்பொழிவுக்கு உள்ளூர் பாஷையில் பொருள் கொண்ட மக்கள் கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தனர்.

ரங்கீலா மற்றும் தோழிகள் எந்த அலட்டலும் இல்லாமல் கொஞ்சும் தமிழும், குழைந்த குரலுமாய் ஓட்டுக் கேட்க மாணவர்களின் ஓட்டுக்களை அப்படியே அள்ளும் நிலையில் இருந்தாள்.

தேர்தலுக்கு முதல்நாள் காலை:-

தமிழ் மகளின் பிரச்சார பாணியே மாறியது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஊர் மற்றும் பக்கத்து ஊர் மாணவர்களை அனுகினர். மொழிஆர்வத்தையும் மண் பாசத்தையும் உணர்த்தும்விதம் சொற்பொழிவாற்ற ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு வார்டிலும் சராசரியாக ஐந்து மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பரிசோதனை செய்வார்கள். அந்த ஒரு நோயாளியைப் பற்றி உதவிப் பேராசியர்களிடம் கல்ந்துரையாடல் செய்வார்கள். என்வே தினசரி வகுப்புகளுக்கும் அடுத்தடுத்த நாட்களில் எஸ்கேப் ஆவதற்கும் சகமாணவியரின் உதவி தேவை என்பதால் அவர்களின் பிரச்சாரம் வேலை செய்தது.

(சுமத்ராவும், சுமனும் அடுத்தடுத்த பெயர் என்பதால் அவர்கள் ஒரே வார்டில் ஒரே யூனிட்டில் இடம் பெற்றிருந்தனர் ) பொதுவாக கடைசி ஆண்டுவரை இதே நிலைதான் நீடிக்கும்.

மற்றும் வடக்கத்தி மாணவர்களை யாருக்கும் பிடிக்காது என்பதால் அவர்களை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யப் பட்டது. காலை முதல் மாலை வரை நடந்த பிரச்சாரத்தில் நன்கு பலன் இருந்தது.

தேர்தல் நடந்தது. கடும்போட்டியில் சுமித்ரா வென்றாள்.

சில நாட்களில் பேரவை பதவியேற்பு நடந்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பிரதிநிதியாக சுமித்ராவை அழைத்தனர். முக்காடு போட்டுக் கொண்டு சென்றாள். நடந்தாள், நடந்தாள்......, நடந்தாள்......., அவளது சக தோழியர் பாஷா..., பாஷா.., என்ற குரலை அதே தோணியில் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதே போன்ற சம்பவம் மாணிக ஃபாத்திமாவின் துப்பட்டா பகுதியிலும் இருந்தது என்பதை தெரியாதவர்கள் இந்த சுட்டியை த்ட்டிப் பாருங்கள்

அவள் அணிந்திருந்த துப்பட்டா .., அதே வண்ணம், அதே வடிவம், அதே வேலைப்பாடுகள், மொத்தத்தில் அன்று வந்த அதே துப்பட்டா.

எப்படி?

குப்பன் பக்கம் பார்வையைத் திருப்பிய போது அவன் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் தென்படவில்லை. அவன் மட்டுமல்ல அவனோடு சேர்ந்த யாரின் முகத்திலுமே எந்தவித உணர்ச்சியும் தென்படவில்லை

தொடரும்...,

----------------------------------------------------------
கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

தொடரும்..,

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails