Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

Tuesday, May 14, 2019

CSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்


IPL துவங்கும்போது உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்றார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இரு வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றார்கள். தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப ஏலத்தின் அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயித்தார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடி நட்புறவு வளர்க்கவும் , விளையாட்டுத் திறனை வளர்க்கவும் ஒரு களம் என்றார்கள். எல்லாம் அப்படித்தான் துவங்கியது.
தற்போதைய நிலையில் போட்டிகளில் உள்ளூர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியம் என்ற விதி இல்லாமல் போய் விட்டது. தகுதி திறமை என்ற அதே அளவுகோலில் உள்ளூர் ஆட்டக்காரர்கள் ஒதுக்கப் பட ஆரம்பித்தாயிற்று. தற்போதைய CSK அணியையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆர். அஸ்வினை வேண்டாம் என்று சொல்லிவிட்டது. அவரை பஞ்சாப் அணி வாங்கி கேப்டன் ஆக்கியது. ஒரு அணிக்கு கேப்டன் ஆகும் திறமை உள்ளவரையே ஒதுக்கும் காட்சிகள் அரங்கேறிவிட்டது. ஆர்.அஸ்வின் ஏற்கனவே தன்னை நிரூபித்து விட்டதால் அவரை பஞ்சாப் அணி வாங்கியது. இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் டிஎன்பிஎல் போட்டிகளில் பல சாதனைகள் செய்தவர். அவரை பெங்களூரு அணி வாங்கி ஒரு ஓரமாகவே உட்கார வைத்து இருந்தது. தொடர் வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒருவேளை அடுத்த டெண்டுல்கராகவோ, கங்கூலியாகவோ வரக் கூடிய வாய்ப்பு உள்ள வீரர். ஒருவேளை தமிழக கேப்டன் சென்னையில் இருந்திருந்து வாஷிங்டன் சுந்தர் சென்னையில் இருந்திருந்தால் தொடர் வாய்ப்புகள் கிடைத்திருக்கும் (ரெய்னா போல, ராயுடு போல). அப்படித்தான் ஆர். அஸ்வின் தலைமையில் மு.அஸ்வினுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
CSK வில் வாட்ஸனுக்கு பனிரெண்டு ஆட்ட்டம் நன்றாக விளையாட நிலையிலும் தன்னை நிரூபிக்க தொடர்வாய்ப்பு கொடுக்கப் பாட்டது. ஆனால் முரளி விஜய்க்கு வாய்ப்பில்லை. தமிழக வீரர் ஜெகதீசன் CSK வில் தேர்ந்தெடுக்கப்பட்டும் டோனி விளையாடாத போட்டியில் கூட கீப்பர் என்ற முறையிலும் கூட அவருக்கு வாய்ப்பில்லை. இறுதிப் போட்டியில் ஒரு தமிழக வீரரும் சென்னை அணியில் இல்லை.
முன்னர் கூறியது போல சம்பளமும் (ஏலத்தொகை) இவர்களுக்கு முழுமையாக வராது. விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் சதவிகிதக் கணக்கில்தான் வரும்,
தகுதி , திறமை என்ற அடிப்படையில் நீட் மற்றும் இன்னபிற போட்டித் தேர்வுகளிலும் எந்த கட்டுப் பாடும் இன்று வெளி மாநிலத்தவரை அனுமதித்தால் தற்போதைய தமிழக வீரர்களுக்கு CSK வில் நடந்ததைப் போன்ற ஒதுக்கப் படும் நிலைதான் தமிழக மாணவர்களுக்கும் நிகழும்.
ரெய்னாவிற்கும் வாட்ஸனும் நல்ல வாய்ப்புகள் பெறும் சுழலில் முரளி விஜய்யும் ஜெகதீசனும் வாய்ப்புகளை இழப்பார்கள். இந்த கட்டுப்பாடில்லாத வெளி மாநில மாணவர்கள் , பணியாளர்கள் உள் அனுமதியால் நடக்கும்.
வாஷிங்டன் சுந்தர், போன்ற மாணவர்கள் வெளி மாநிலங்களில் சென்று வாய்ப்பே வழங்கப்படாமல் டம்மி பீஸ் என்று பெயர் சூட்டப்பட்டு திருப்பி அனுப்பப் படுவார்கள்.
எங்கோ ஒரு சில மு.அஸ்வின்கள் ஆர். அஸ்வின்கள் போன்ற சீனியர்களால் வாய்ப்பு பெறலாம். ஆனால் அது வெகு அபூர்வமாகவே நிகழும்.
சென்னை என்ற பெயர் இருக்கும் ஒரே காரணத்தால் சென்னைக்கு ஆதரவு அளித்தவர்கள், தகுதி திறமை அடிப்படையில் டோனி, வாட்ஸன் கிடைத்ததை நினைத்து மகிழ்பவர்கள் தலையில் வைத்து கொண்டாடுபவர்கள், தோல்விக்காக அழுது புலம்புவரக்ள். CSK என்ற அணி பல தமிழக வீரர்களை புறகணித்து, வெளி மாநில வெளிநாட்டவர்களை வைத்து உருவாக்கப் பட்ட அணி என்பதை உணர வேண்டும்.
NEET மற்றும் கட்டுபாடில்லா வெளி மாநில பணியாளர்களை உள்ளே அனுமதித்தால் சிஎஸ்கே அணியைப் போல வெற்றி இருக்கும். ஆனால் உள்ளூர் அணி வீரர்கள் இருக்க மாட்டார்கள். வெளிமாநிலக் காரர்கள் உள்ளூர் பணியாளர்களாக இருக்கும் போது, முக்கியமாக தருணத்தில் தேவையற்ற ரன் அவுட், எல்பிடபிள்யூக்கள் நடக்கும். மொத்தத்தில்அணி வென்றாலும் தோற்றாலும் தமிழகத்திற்கு தோல்விதான் மிஞ்சும்.

Friday, January 27, 2017

நாட்டு மாட்டினங்கள் வளர என்ன செய்ய வேண்டும்?

நாட்டு மாட்டினங்கள் வளர என்ன செய்ய வேண்டும்?
நாட்டு மாட்டினங்கள் வளர்ப்போரின் வருமானம் பெருக வேண்டும்.
பால் உற்பத்தியை பெருக்கினால் மாடு வளர்ப்போரின் வருமானம் பெருகுமா?
பெருகும். ஆனால் நாட்டு பசுக்கள் கொடுக்கும் பால் நம் தேவையை விட மிகக் குறைவு. கலப்பினங்களும் இறக்குமதி இனங்களுமே பால் தேவையை சமாளிக்க முடியும்.
விவசாய வேலைக்கு மாடுகளை உபயோகப் படுத்துவதன் மூலம் காப்பாற்ற முடியுமா?
நவீன கருவிகள் வந்துவிட்ட நிலையில் மீண்டும் நாட்டு மாடுகள் உபயோகம் என்பது வேலை மிக மெதுவாக நடைபெறச் செய்து செலவை அதிகரிக்க வைத்து விடும்.
சல்லிக் கட்டுகள் மூலம்?
சில வகை மாடுகள் மட்டுமே சல்லிக் கட்டுக்கு பயன்படுத்த முடியும்.தவிர சல்லிக் கட்டு மாடுகள் மூலம் வரும் வருமானத்தை விட பல மடங்கு செல்வழித்தால் மட்டுமே களத்தில் மாடுகள் மானம் காக்கும்.
அடிமாட்டுக்கு போகும் மாட்டை தடுப்பதன் மூலம்...,
அதனால் வயோதிக மாட்டுக்கான பராமரிப்பு செலவு அதிகரிக்கும், அவ்வளவுதான், நீண்டகால அளவில் பெரிய மாற்றம் ஒன்றும் வந்து விடாது.
பின்னர் என்னதான் வழி?
பிராய்லர் கோழி வளர்ர்பு போல நாட்டு மாடுகளை வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோழிகளை சாப்பிடுவார்கள். எனவே நல்ல விற்பனை ஆகும் வருமானமும் கூடும்.
நாட்டுமாடுகளை..,
நாட்டு மாட்டுக் கறிகளை வெளிநாட்டில் உண்பார்கள். எனவே சரமாறியாக ஏற்றுமதி செய்யலாம்.
இந்தியாவிலேயே 125கோடி மக்கள் இருக்கிறார்களே..,
அவர்கள் மாட்டை சாபிட்டாலோ உயர் ரக மனிதர்களால் கொடுரமாக தாக்கப் படும் வாய்ப்பு இருப்பதால் அதை மட்டும் செய்யக் கூடாது,

Tuesday, October 18, 2016

பாகிஸ்தானிலிருந்து பிரம்மபுத்ரா வழியாக

பிரம்மபுத்திரா ஆறு திபெத்தின் வடக்குப் பகுதியில் உற்பத்தியாகி, சீனாவிற்குள் நுழைந்து இமயமலையின் ஓரமாகவே பயணம் செய்து அருணாச்சல் பிரதேசம் வழியாக இந்தியாவிற்குள் நுழைகிறது. அருணாச்சல் பிரதேசம், அஸ்ஸாம் பூடான் வழியாக வங்கதேசம் அடைந்து கங்கையுடன் கலந்து வங்கக் கடலை அடைகிறது.

வற்றாத ஜீவ நதிகளில் இதும் ஒன்று. இந்த ஆறு 3848 கி.மீ நீளமானது.கடும் மழை பொழிவினாலும், வெப்ப காலங்களில் இமயமலையில் உள்ள பனி உருகுவதாலும் எப்போதுமே வெள்ளப் பெருக்கில் இருக்கும் ஆறு இது.  துணை ஆறுகள் தவிர்த்து பிரம்மபுத்ரா மட்டுமே விநாடிக்கு 700,000 கன அடி நீரைத் தருகிறது.

பிரம்ம புத்திரா இந்தியாவில் பாயும் பகுதியானது land of seven sisters என்று அழைக்கப்படக் கூடிய வட கிழக்குப் பகுதி. அங்கே பெய்யும் மழையிலேயே பிரம்மபுத்ரா ஓடிக்கொண்டேதான் இருக்கும்.  பிரம்மபுத்ரா ஆறினை முழுவதுமான அணைக்கட்டித் தடுக்கவே முடியாது. அவ்வளவு நீர் இருக்கும் ஆறு அது.  காவேரி அணைகளிலேயே மழைக் காலங்களில் திறந்து விட்டு விடுகிறார்கள். அப்படி இருக்கும்போது பிரம்மபுத்ராவில் அணை கட்டினாலும்கூட அது இந்தியாவுக்கு தெரிய வாய்ப்பும் இல்லை. அதை அவர்கள் சொல்லவும் போவதில்லை. 1990களிலேயே இவ்வாறு ஒரு வதந்தி கிளம்பி அதை அவர்கள் மறுத்து இருக்கிறார்கள். 

2011ல் மஞ்சள் ஆறு (பிரம்மபுத்ராவை விட பெரிய ஆறு) அணை கட்டப் பட்டதால் புவியியல் ரீதியாக பல பிரச்சனைகள் ஏற்பட்டு அதை சரி செய்ய சீன அரசு போராடி வருகிறது.

இந்த மாதிரி ஒரு சூழலில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து சீனா பிரம்மபுத்ரா ஆறை தடுத்து நிறுத்தி இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு வேளை பிடித்து வைத்திருந்தால் இந்திய அரசு சீனப் பொருள்களின் மீது தடை விதித்து இருக்கும் ஆனால் அப்படி இந்திய அரசு செய்ய வில்லை. 
தவிரவும் சீனாப் பொருட்களுக்கு இந்தியாதான் பெரிய மார்க்கெட் என்னும்போது  அவர்கள் இந்தியாவை பகைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. அவர்களுக்கு லாபம் எங்கோ அந்தப் பக்கம்தான் சேர்வார்கள்

அப்புறம் எப்படி சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வாட்ஸ் அப் செய்திகள் பரவுகின்றன? பதில் மிக சுலபமானது. சீன மொபைல்கள் இந்தியாவுக்கு மார்க்கெட் வந்தபின் மைக்ரோமாக்ஸ், லாவா போன்ற இந்திய கம்பெனிகள் அதை அப்படியே வாங்கி இந்த்யாவில் விற்பனை செய்வது போன்றே.

மலிவு விலை சீனப் பொருட்களை இங்கிருக்கும் முதலாளிகள் வாங்கி இந்தியப் பெயரில் விற்கப் போகிறார்கள். அதற்கான முதல்படியாகவே தோன்றுகிறது. அதாவது சில்லறை வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் முதலாளிகளுக்கு போகப் போகிறது.

முடிந்தவரை இந்தியத் தயாரிப்பில் உருவான பொருட்களையே வாங்குங்கள். சீனப் பொருட்கள் விஷயத்தில் இந்திய அரசு எதுவும் சொல்லும்முன் எந்த பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம்.

Wednesday, September 14, 2016

நன்றி அமித் ஷாஜி

இந்த நாள் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்துடன் நகர்ந்து கொண்டிருக்கிறது.  மகா சக்கரவர்த்தி மகாபலியின் வருகை உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. உண்மையில் மகாபலியின் வருகையை கேரளா தாண்டி கொண்டு சென்ற பெருமை அமித் ஷாவையே சேரும். 

மன்னன் மகாபலியின் பெருமையை வெறும் சடங்காக சம்பிரதாயமாக பாடிக் கொண்டிருந்த மக்களை உணர்ச்சிப் பூர்வமாக ஒவ்வொரும் பகிர்ந்து கொள்ளக் காரணமே அமிஷ் தான் அவர் போட்ட வாமன ஜெயந்தி போஸ்டர்தான்.  நம்ம ஊரில் பிள்ளை சதுர்த்தி திருவிழா போல வாமன ஜெயந்திக்குஅடி போட்ட போஸ்டரை எதிர்த்து கேரளாவே பொங்கிக் கொண்டு இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் நான் போட்ட பதிவு

வடக்கத்தியர் எதிர்க்கும் ஓணம் பண்டிகை

இன்று ஒவ்வொருவரும் மகாபலி பற்றிச் சொல்லுகிறார்கள். மகாபலி ஆட்சியில் பஞ்சம் இல்லை, பசி இல்லை, பட்டினி இல்லை, இள வயது மரணம் இல்லை, சாதி இல்லை. அனைத்து மக்களும் சாதி வேறுபாடு இன்றி சமத்துவத்துடன் வாழ்ந்து வந்ததாக கூறுகின்றனர். வந்துள்ளவர் தானம் என்று கேட்டால் எதையும் கொடுக்கும் மனதோடு வாழ்ந்து வந்திருக்கிறார்.  அவர் ஆட்சியில் யாரும் கெட்ட எண்ணத்துடன் தானம் கேட்டதில்லை.  வந்திருப்பவர் கபட வேடதாரி என்று  எச்சரிக்கப் பட்டும் தானம் கொடுக்க சம்மதிக்கிறான்.  

அவன் நாட்டில் பார்த்த முதல் வேட தாரி வாமனன்.  உள்ளன்றொரு வைத்து புறம் ஒன்று பேசும் முதல் நபர் வாமனன்.   

இன்று கேரளாவில் உள்ள ஒவ்வொரு ட்விட்டரும், முகநூலாரும் வாமன அவதாரத்தின் வஞ்சனையையும்  மகாபலியின் பெருமைகளையும் ஆரிய திராவிட வித்தியாசத்தையும் தெளிவாக ஆவணப் படுத்தி பேசுகிறார்கள்.  நேரில் பார்ப்பவர்களிடம் ஓணம் வாழ்த்துக்கள் என்று சொன்னாலே அவர்கள் மகாபலியின் பெருமை பேசி பதில் சொல்கிறார்கள்.

இப்படி ஓர் ஆரிய எதிர்ப்பு திராவிட வாழ்த்து சமீப காலத்தில் வந்ததே இல்லை. இப்படி ஒரு சூழல் வந்ததற்கு  அமித் ஷா அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

பின்குறிப்பு:- கேரள நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது இன்னொரு நண்பர் சொன்ன செய்தி, மகாபலிக்கு முற்பிறவி சாபமாம் அதனால்தான் வாமணன் அவரை பாதாள உலகம் அனுப்பினாராம்.

பின்குறிப்பு 2:-  வாமனனை வில்லனாக கொண்ட இந்த கதைக்கும் விஷ்ணுவை பெண்ணாக்கி அவருக்கு குழ்ந்தையையும் கொடுத்த கதைக்கும் ஏதாவது அரசியல் தொடர்ப்பு இருக்குமா?

பின்குறிப்பு 3:- நாம் ஏன் தீபாவளியைக் கூட  பூமாதேவியின் மகனான நரகாசுரனின் மீள் வருகை நாளாக மாற்றிக்கொண்டாடக் கூடாது?


Thursday, December 19, 2013

HUM- திரை விமர்சனம்.

ஹம் படம் தமிழ்நாட்டு மக்களுக்கே பரிச்சயம் ஆன ஒரு படம். இந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு சத்யா மூவிஸ் எடுத்த படம். அந்தப் படத்தின் வெற்றி விழா . அதைத் தொடந்து சத்யா மூவிஸ் நிர்வாகிக்க்கு ஏற்பட்ட பிரச்ச்னைகள் போன்றவை தமிழ்நாட்டுக்கே அந்த ஆண்டு பிஸியாக அமைய வைத்தன.
http://www.webmallindia.com/img/film/hindi/hum_1323173487.jpg
சத்யா மூவீஸாரின் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்றாலும் ஹம் படத்தில் ரஜினி ஹீரோ அல்ல. பாஷாவில் தம்பியாக ஒரு போலீஸ் வருவாரே அந்தப் பாத்திரம்தான் ரஜினிக்கு. நீங்க யாரு.., பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று ரஜினியைப் பார்த்து பேசுவது போல ரஜினி அந்தப் படத்தில் இவர் பேரு டைகர், பம்பாயில் ஒரு கிரிமினல் என்றுஅமிதாப்பைப் பார்த்து பேசுவார். அவ்வளவுதான். இத்தனைக்கும் இந்தப் படம் 1991ல் வந்திருக்கிறது. 91ல் தளபதி, மன்னன் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும் கூட மாப்பிள்ளை, பணக்காரன் என்று எல்லாமே ஹிட்டோஹிட்தான்.  ராமராஜன், மைக் மோகன், டி.ஆர். பாக்கியராஜ் போன்ற வெள்ளிவிழா குரூப்ஸ் தங்கள் கடையை காலி செய்து கொண்டிருக்கும்போது, டெண்டுல்கர் போல நின்று நிலையாக ஹிட்களைக் கொடுத்துக் கொண்டு  தான் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த ஆண்டு அது. அந்த ஆண்டில் அப்படி ஒரு படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.


அதற்கு முந்தைய சில வருடங்களில் அமிதாப் பச்சனின் படங்கள் வரிசையாக வெற்றியடையாமல் போயின. அமிதாப்பின் வெற்றிப் படஙக்ள் பலவும் ரஜினியால் ரீமேக் செய்யப் பட்டு இங்கு  ஹிட் ஆனவை. தவிரவும் ரஜினி, கமல் ஆகியோர் இந்தியில் நுழைந்த போது அந்தப் படங்கள் ஒரு துவக்கம் கொடுப்பதற்காக அமிதாப் நடித்துக் கொடுத்திருக்கிறார்.  90களில் ரஜினிக்கு தென்னிந்தியா முழுவதுமே ஒரு மார்க்கெட் இருந்தது. நம்பினால் நம்புங்கள் 94- 95 களில் பல தெலுங்கு படங்கள், வெறுமனவே ரம்பாவையும், ரம்யா கிருஷ்ணனையும் நம்பி இங்கு கல்லா கட்டியுள்ளன. இது இல்லாமல் சிரஞ்சீவி, விஜ்யசாந்திக்கெல்லாம் இங்கு தனி மார்க்கெட்டே உண்டு. அதே கணக்கில் பார்த்தால் ரஜினி நடித்திருப்பது தென்னிந்திய சிறு நகரங்களில் ஒரு நல்ல துவக்கத்தையே கொடுத்திருக்கும். இதில் அமிதாப்பிற்கு ஜோடி இருக்கு ஆனால் இல்லை.. அப்போதைய இளைஞன் கோவிந்தாவும் அதில் நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பிற்கு நிஜமாகவே அமிதாப் ஒரு ஓய்வு எடுத்தார். அதுவரை இதுதான் கடைசி, இதுதான் கடைசி என்றே சொல்வார்கள். ஆனால் அடுத்த படம் வரும். இந்தப் படம் ஓரளவு ஹிட்தான். அமிதாப்பும் ஓய்வு எடுத்தார். அந்த ஹிட்டுக்கு உதவுவதற்காக ரஜினி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்ததாகவே எனக்குத் தோன்றுகிறது.

=======================================================================

கதைன்னுப் பார்த்தா ஒரு வரிசையில் சொல்லலாம் மூன்று அண்ணன் தம்பிகள். ஒரு குடும்பப்பாட்டு கிளைமாக்ஸ் காட்சியில் அந்தப் பாட்டைப் பாடி எல்லோரும் ஒன்று சேர்வார்கள்.  யதோன் கி பாரத் என்ற பெயரில் வந்த படம். அதில் அண்ணன் தம்பிகள் ரயிலில் பிரிவார்கள். இதில் மூவரும் சேர்ந்தே ஏறிவிடுவார்கள். அதனால் பிரியவெ மாட்டார்கள். கிளைமாக்ஸில் வில்லன் கட்டி வைத்த பின்னர் குடும்பப் பாட்டை பாடி சேர்ந்து விடுவார்கள்.  இது போலவே  அண்ணன் தம்பிகள் கடைசி வரையில் பிரியாமல் நின்று படம் முடிந்த பின் குடும்பப் பாட்டு பாடுவார்கள் விஜய காந்த் நடித்த வானத்தைப் போல படத்தில் ., அதையும் கூட இந்தப் படத்தின் ரீமேக் என்று சொல்லலாம். ஆனால் ஏனோ சொல்லவில்லை

==============================================================
பாஷா இந்தியில் மீண்டும் ரீமேக் செய்யப் பட்டு அங்கும் நன்றாக ஓடியதாகச் சொல்கிறார்கள். அந்த அளவு ஹம் மிலிருந்து பாஷா மாற்றப் பட்டுள்ளது.

இந்தியில் இந்த ஃப்ளாஷ் பேக் அதனுள் ஒரு ஃப்ளாஷ் பேக் என்றெல்லாம் கிடையாது. சீரான வரிசையாகக் காட்சிகள்தான்.   டைகர் (அவர்தாம் மாணிக் பாஷா) ஒரு கோபக் கார இளைஞர் .அவரது நண்பர்  கோன்சால் கண்ணாடி போட்ட இன்னொரு இளைஞர். இவர்கள்  மும்பை தாதா பாக்தாவர் (நம்ம ஆண்டணி)ஐ  எதிர்கிறார்கள்.  கோன்சாலின் சகோதரி ஜும்மா ஒரு நடனமாது. அவரோடு டீ கப் வைத்துக் கொண்டு ஒரு குத்துப் பாடல் இரண்டு முறை இருக்கிறது.



 டைகரின் அப்பா , மாணிக்கத்தின் அப்பாவைப் போலவே வில்லனிடம் வேலை பார்க்கிறார். டைகரின் அப்பாவுக்கும் இரண்டாம் தாரம் உண்டு. இரு மகன்கள்.  டைகரின் நண்பரைக் கொல்ல, டைகர் கொதித்து எழ  டைகரை காப்பாற்ற டைகரின் அப்பாவும் மாற்றாந்தாயும் பலியாகிறார்கள். கொதித்தெழுந்த டைகர் பாக்தாவாரின் சாம்ராஜ்யத்தை சூரையாடி விட்டு பாக்தாவரை கொல்லப் போகும்போது அங்கொரு டேஞ்சர் காமெடி போலீஸ் அனுபம் கேர் வந்து டைகரை போகச் சொல்லி விடுகிறார். வில்லனின் வீட்டை சூறையாடி விட்டு. அந்த ஊர் ஆண்டனியின் மனைவி குழந்தையை கொன்று விடுகிறார்.

டேஞ்சர் காமெடி போலிஸ் டைகர் ஒரு கெட்டவன் என்று அலுவலக குறிப்பு எழுதி வைத்து விட்டு தொழிலதிபராக செட்டில் ஆகி விடுகிறார். டைகர்தான் வில்லனின் வீட்டைக் கொள்ளையடித்துவிட்டு மனைவி குழந்தையை கொன்றதாக கதை பரப்பி விடுகிறார்.

டைகர் ரயிலில் பாம்பேயை விட்டு வெளியெறுகிறார், அவரது தோழியோடும் சின்னத் தம்பிகளோடும் ஓடும் ரயில் ஏறுகிறார். எல்லோரும் ஏறிய பின் உனது பழைய வாழ்க்கை எதுவும் வேண்டாம். நீ உன் தம்பிகளிடம் முழு அன்பைச் செலுத்து என்று சொல்லி விட்டு ஜும்மா நின்று விடுகிறார்.


கொஞ்சம் மொக்கையாகத் தெரிகிறதா?  அதனால்தான் சத்யா மூவீஸ் கதை இலாகா பிச்சுப் பிச்சு ஃபிளாஷ்பாக் ஆக்கியிருக்கிறார்.



அடுத்த காட்சியில் நேராக ஊட்டிக்கு வந்து விடுகிறார்கள்.  பெரிய தம்பி நல்லா படிச்சு இன்ஸ்பெக்ட்ராகி கல்யாணம்  ஆகி நன்றாக பாட்டுப் படிக்கக் கூடிய பெரிய சைஸ் குழந்தை ஒன்றும் இருக்கிறது.  ஃப்ளாஷ் பாக்கில் அவரை விட ச்ற்றே சின்னப் பையனாக இருக்கும் சின்னத்தம்பி கல்லூரி மாணவனாகவே  இருக்கிறார். மக்குப் பையன் ப்போல..

வீட்டில் ஒவ்வொருவரும் அவரை விரட்ட பம்பரமாய் சுற்றி வேலை செய்கிறார். அந்த வேகத்தில் அவர் கீழே விழுகிறார். விழுந்த உடன் இந்தக் குடும்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை என்று கூறி அழுகிறார். உடனே  குடும்பப் பாட்டைப் பாடி சமாதானப் படுத்துகிறார்கள்.



சின்னத் தம்பி  கோவிந்தா ஒரு பெண்ணைக் காதலிக்க பெண்ணின் தந்தையின் விருப்பத்திற்கேற்ப ஒரு மிலிட்டரிக்காரராக வேடமிட்டு அமிதாப் குடும்பட்த்துடன் செல்ல குட்டு  வெளிப்பட   பெண்ணின் வீட்டில் அவரை த் துப்புகிறார். உடனே ரஜினியின் மனைவியாக வரும் பெண் ஐந்து விரல்களையும் காட்டி குடும்பப் பாட்டை ப் பாடுகீறார்.



இதே மாதிரி தங்கையின் திருமணத்திற்காக ரஜினி பேசும்போது அவர்து மாற்றாந்தாய் ரஜினியைப் புகழ்ந்து பேசுவார். ரஜினி எல்லாத்தையும் விட்டு கொடுப்பதாகப் பேசுவார். இதில் பெரிய தம்பியின் மனைவி கூட்டுக் குடும்பத்தைப் ப்ற்றியே பேசுவார்.


அப்படியே படம் செல்ல மெயின் வில்லன் வெளியேறி வருகிறார். உடைந்து போன தன் வீட்டைப் பார்த்து விட்டு டைகரைத்தேட ஆள் அனுப்புகிறார்.  கடைசியில் ஊட்டி வீட்டைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்.

ரஜினியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று மாமியாருக்கும், மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை என்று இவர்களுக்கும் தந்தி வருகிறது.

ரஜினியின் மனைவி, குழந்தையை வில்லன் கடத்தி, தனது உடைந்து போன பழைய வீட்டில் அடைத்து வைக்கிறார். அமிதாப் வீட்டிற்கு ஃபோன் செய்து டைகரைக் கேட்கிறார். ரஜினிக்கு பழசெல்லாம் தெரியாததால் கோன் டைகர் என்று சொல்லி ஃபோனை கட் செய்கிறார்.   ரஜினியின் மனைவி மற்றும் குழந்தையைத் தேடி பெங்களூருவுக்குச் செல்கிறார்கள். இருவரையும் விசாரிக்கும்போது ஒரு டிரைவர் தவறாகப் பேச அமிதாப் கொதித்தெழுந்து அவனைப் புரட்டி விடுகிறார். அதற்கு ஈடாக தமிழில் ரஜினிக்கு கோபம் வரும் காட்சி  படும் பயங்கரமாக இருக்கும்.


அமிதாப் டைகரைப் பற்றி தெரிந்த தன் கடந்த கால நண்பர்களுடன் ஃபோன் செய்ய  ஜும்மா பெங்களூரில் இருப்பது தெரிய வருகிறது. அவரைப் பார்க்க போகிறார். இந்தக் காட்சி வரை படம் வானத்தைப் போல படம் மாதிரியே ஒரு திகிலுடன் தான் செல்கிறது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்த உடன் இந்தக் காட்சி வருகிறது.



ஜும்மா பழைய பாடல் ஒரு குஜாலாகப் பாடுகிறார்.  படம் அப்படியே கமர்ஷியல் ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு திரும்பவும் ஃபோன் வருகிறது. உன் அண்ணந்தான் டைகர் என்று சொல்கிறது. உடனே அவர் பழைய ஃபைல்களை எடுத்துப் பார்க்கிறார். அதில் இன்ஸ்பெக்டர் கிரிதர் அவரைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி இருப்பதை படித்து விட்டு வருகிறார்.  வீட்டிற்கு நுழைந்த உடன் அமிதாப்பை இவர் ஒரு பயங்கர ரவுடி என்று வீட்டிற்குள் திட்டுகீறார்.

இந்தக் காட்சியில் அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்பது நினைவுக்கு வந்து துப்பாக்கியைக் காட்டி அண்ணனை கைது செய்யப் பார்க்க சின்னத் தம்பி குறுக்கே பாய்ந்து தடுக்க அண்ணன் தப்பிச் செல்ல இணைந்த கைகள் எதிரும் புதிருமாக மாறுகின்றன. அமிதாப் தப்பிச் சென்றவுடன் ஜும்மா பேச ஆரம்பிக்கிறார். தம்பிகளுக்காக அவர் வாழ்க்கையையே தியாகம் செய்ததையும், அதுவும் மாற்றாந்தாய் வழித் தம்பிகள் என்பதையும் எடுத்துச்சொல்கிறா. உடனே ரஜினி திருந்தி விடுகிறார். கதையின் பிற்பகுதி ரஜினியின் மனைவி குழந்தையைச் சுற்றி வந்தாலும் இந்தக் கதாபாத்திரம் 1991ம் ஆண்டு ரஜினிக்கானது அல்ல.   கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே தெரியும் உண்மை. மார்க்கெட்டிங்கிற்காக நடித்துக் கொடுத்தது போலவே இருக்கிறது.


அதற்குள்  அமிதாப் வில்லனின் இடத்திற்குள் சென்று விட ரஜினியின் குடும்பத்தை வெடி குண்டால் கட்டி வைத்து அவரைச் சுற்றி பெரிய அடியாள் படையுடன் வில்லன் நிற்கிறார். வழக்கம்போல உரத்த குரலில் அமிதாப் பேசுகிறார். சண்டை உனக்கும் எனக்கும்தான் . உன் குடும்பத்தை நான் ஒன்றும் செய்யவில்லை என்று பாஷா போலவே பேசுகிறார். குடும்பத்தைக் கொன்றது. சூரையாடியது எல்லாம்  இன்ஸ்பெக்டர் கிரிதர்தான் என்று சொல்கிறார். அதை உறுதி படுத்துவதற்காக சிரிப்பு போலீஸ் கிரிதர் ஹெலிகாப்டரில் வந்து அத்தனை அடியாட்களை மெஷின் கன் வைத்து சுட்டுவிட்டு படத்தின் முக்கிய வில்லனாக பிரமோசன் பெறுகிறார்.  சகோதரர்கள் பாட்டுப் பாடிவிட்டு ஒருவரை ஒரு கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்படியே ரஜியின் மனைவியைத் தூக்கி தண்ணீருக்குள் போட்டு விடுகிறார்கள்.  சண்டை நடக்கிறது.  கடைசியில் ராணுவம் வருகிறது.  பழைய வில்லன் புதிய வில்லன்மேல் வெடிகுண்டினை மாட்டிவிட பாஷா போல அமிதாப் தலைமேல் அவரைத் தூக்கி இவர் போல போடுகீறார். வெடிகுண்டு வெடித்து வில்லன்கள் சாக  இவர்கள் எல்லோரும் ஒன்று சேருகிறார்கள். சுபம்.


படத்தின் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் டைகர் ஒரு சராசரி கோபக்கார இளைஞர்.  பாஷா அதிபயங்கர சக்திவாய்ந்த கடத்தல் மன்னன்.

மற்றபடி சிரிப்பு போலீஸ்- கேசவன், கோவிந்தா யுவராணி அப்படி இப்படி என்று சின்ன சின்ன மாறுதல்தான்.


வில்லனின் பெண்ணை தூக்கிக் கொண்டு போய் வளர்ப்பதாக சின்ன வயதில் ஏதோ ஒரு படத்தில் பார்த்த நினைவு. ஆனால் ஹம்மில் தாய் மகள் இருவரையும் கொன்று விடுகிறார். அது எந்த படம் என்று இல்லை.

ஜும்மா பாத்திரத்தை ஃபிளாஷ்பாக் காட்சிகளில் தமிழ்படத்தில் காட்டவேவில்லை . ஃப்ளாஷ்பாக்கிலும் நக்மா வந்திருந்தால் ரசிகர்கள் குழம்பாமல் இருந்திருப்பார்கள். படத்தின் பிற்பகுதியில் வரும் ஜும்மா நக்மா போலத்தான் இளமையாக இருக்கிறார்,.



Saturday, December 14, 2013

கல்யாண சமையல் சாதம்- ஏ கிளாஸ்

டிஸ்கி:- முன்னொரு காலத்தில் முத்துராமன் மஞ்சுளா நடிப்பில் மறுபிறவி என்றொரு படம் வந்தது. 1995-98ல் சன் டிவியை இரவு 12க்கு மேல் பார்த்த ரசிக கண்மனிகளுக்கு அந்தப் படம் ரொம்பவும் பரிச்சயம். அடுத்த கட்டத்தில் கார்த்திக் ராதா நடிப்பில் வாலிபமே வா வா என்றொரு படம். அதுவும் பிரபலம்தான்.  இப்போது அடுத்த காலகட்டம். அதே போன்றதொரு கதை. ஆனால் கவுதம் கார்த்திக் நடிக்கவில்லை. பிரசன்னா நடித்து இருக்கிறார். அந்தப் படம் தான் கல்யாண சமையல் சாதம்.


முதலில் இந்தப் படம் ஆகா போன்றதொரு படம்போல என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் தயிர் சாதம் மட்டும் சாப்பிடும் எண்ணத்தில் படம் பார்க்க ஆரம்பித்தவனுக்கு ஓப்பனிங்கே ஒரு இன்ப அதிர்ச்சிதான்.  பொண்ணு உட்கார்ந்துட்டா, ஓ உட்கார்ந்துட்டாளா..., நானும்தான் உட்கார்ந்துட்டேன் என்று ஆரம்பித்து,  if u want to talk, first learn WHISPER, உடனே ஒரு கெக்கெபிக்கே சிரிப்பு என்று டைட்டில் போடுகிறது.

முதல் படத்தில் கல்யாணத்திற்கு பிறகு முத்துராமனுக்கு அதில் ஒரு பலஹீனம் தென்படும். அவரது மனைவி தனது தளராத முயற்சியால் அதை சரிசெய்வார்.

இரண்டாவது படத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் ராதா போடும் சண்டை, மற்றும் கார்த்திக்கின் ஃபேவரிட் குத்துச் சண்டை வீரரின் மேல் திணிக்கப் படும் சதியின் காரணமாக கார்த்திக் தானும் ஒரு பலவீனமான மனிதரோ என்று வீட்டைவிட்டு ஓட கிளைமாக்ஸில் ராதா தானே களத்தில் இறங்கி, அவரும் வெற்றி பெற்று கார்த்திக்கையும் வெற்றியடையச் செய்வார். அவர்கள் இருவரும் வெற்றி யடைந்ததை அவர்களது சொந்தக் காரர்கள் வரிசையாக வந்து பார்த்து மகிழச்சியடைந்து செல்வார்கள்.

இந்தப் படத்தில் என்னவென்றால் முழுக்க முழுக்க ஒரு அரேஞ்சுடு மேரேஜ். பார்த்ததும் நாயகியிடம் விழுந்து விடுகிறார். ஹீரோ .   அவரது தாசானுதாசன் ஆகி விடுகிறார்.  திருமணத்துக்கு முன்பே ஒரு முயற்சித்துப் பார்க்க்க ..........., முயற்சி தோல்வி அடைகிறது.    இந்த முயற்சிக்கு முன்னால் சில டயலாக்குகள்,, இப்பெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிய மக்கள் களத்தில் இறங்கிடறாங்க,, இன்னும் சிலர் கல்லூரியின் போதே.., நீ அப்படி இல்லையில்ல என்று......  அதாவது ஹீரோ ஹீரோயின் சுத்தமானவங்களாம்........., 


இந்த இடத்தில்தான்  பழையகால விமர்சனங்கள் சில நினைவுக்கு வ்ந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், அரங்கேற்றம் போன்ற சில ப்டங்கள் பற்றிய பேச்சுவந்த போது அந்த ப் படத்தின் நாயகிகள் எல்லாம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக படைப்பக்கப் பட்டிருப்பார்கள்,  அதற்காக சிலர் கொதித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது படைப்பாளிகளால் சொல்லப் பட்ட ஒரு விளக்கம். பொதுவாக நாயகி கெட்டுப் போகிறார் என்றால் அவர் சுத்தமானவர் என்பதை மக்களிடம் காட்டவேண்டுமாம். இயல்பான கதாநாயகி கெட்டுப் போகிறார் என்றால் மக்களிடம் அதிர்ச்சி எதுவும் வராதாம். அதனால் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த கதாநாயகியைக் காட்டுவார்களாம். அவர்கள் கெட்டுப் போனால் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி உருவாகுமாம. ஒரு வேளை அதே தியரிதான் இங்கு உபயோகப் படுத்தப் பட்டு நாயகனையும் நாயகியையும் குறிப்பிட்ட சமூகத்தில் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் கூட எழுகிறது.

நாயகி மனதளவில் நாயகனுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்.  மறுபிறவியில் திருமணம் முடிந்து விட்டதால் மஞ்சுளா தனது கணவனை மீட்டெடுக்க கண்டபடி போராடுவார். பார்க்கும் நமக்கு தண்ணீரே வந்துவிடும் கண்களில்.



வாலிபமே வா வாவில் கார்த்திக்கின் போராட்டம்தான் படம் முழுவதும் ராதாவின் அதிரடி கிளைமாக்ஸில்தான்.  கிளைமாக்ஸ் முடிந்ததும் அவர்களின் சொந்தக்காரர்கள் பார்த்து சந்தோசப் படுவதுபோல் நாமும் சந்தோஷப் படுவோம்.



 இதில் கல்யாணம் ஆகவில்லை. தவிரவும் இவர்கள் சுத்தமானவர்கள். அதனால் அவருக்கு முழு அளவில் ஆதரவு கொடுக்கிறார் மனதளவில்.  பல இடங்களில் உட்கார்ந்து இது பற்றிப் பேசுகிறார்.

கோபத்தில் மாப்பிள்ளை ஒரு புஸ்ஸூ என்று சொல்லுவிட்டு ஹீரோ வருத்தப் படுவாரோ என்று இவர் வருத்தப் படுகிறார். மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்ச்னை இருப்பது தெரிந்தும் மாமனார் திருமணத்தை தொடர்ந்து நடத்துகிறார். வாழ்க அந்த மாமனார்.   இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்வதற்குக்கூட பிரசன்னா அவ்வளவு கூச்சப் படுகிறார். அந்த அளவுக்கு அவர் நல்லவராம்.  இவ்வாறாக பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்பதிலேயேபடத்தை கொண்டு போகிறார்கள். கடைசியில் அவருக்கு எப்படி சரியானது என்பது தெரியாமலேயே சரியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

Monday, December 9, 2013

நீங்களும் ஆகலாம் அர்விந்த் கஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வாக்குகள் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும். ஊழலுக்கு எதிராக அவதாரம் எடுத்திருக்கும் கட்சியாக துடைப்பம் கொண்டு துடைக்கக் கூடிய பொருளாக ஊழலை கற்பனை செய்து கொண்டுள்ள மக்களுக்கு ஆம் ஆத்மி ஒரு அவதாரமாகவே தோன்றும். அவர்களிடம் ஊழலை கழுவி சுத்தம் செய்யக்கூடாதா, எரித்து சுத்தம் செய்யக்கூடாதா என்பதெல்ல இந்த இடுகையின் நோக்கம்,  ஆம் ஆத்மியின் வெற்றியில் நமக்கு தெரியும் செய்தி என்ன? என்பதுதான்.

அஸ்ஸாம் கனபரிசத் கட்சியின் வரலாறு தெரியாதவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம்.  ஆனானப் பட்ட அஸ்ஸாம் கனபரிசத் கட்சியே இப்போது பத்தோடு பதினொன்ரு எண்ணும்போது மற்றவர்களைப் பற்றி பேச வேண்டியதே இல்லை.

கஜ்ரிவால் போல திட்டம் போட்டால் யாவருமே வெற்றியை நோக்கிப் போக முடியும்.  கஜ்ரிவால் நினைத்திருந்தால் அகில உலக தேசிய கட்சியை ஆரம்பித்திருக்க முடியும். ஆரம்பித்து ஐந்து மாநில தேர்தல்களில் ஒரு கலக்குக் கலக்கி ஒரு விஜய காந்த் ஆகவோ அல்லது ஒரு சிரன்சீவி ஆகவோ மாறி இருக்கலாம். ஆனால் அவர்கள் டெல்லியில் மட்டும் தனது வேட்டையைக் காட்டி ஒரு சூப்பர் ஹீரோவாக மாறிவிட்டார். 

சமுதாயத்தை ஊழலற்றதாக மாற்ற நினைக்கும் மக்கள் நம் ஊரில் கூட மாநகராட்சி அளவில், நகராட்சி அளவில் கட்சி அல்லது கட்சி போன்ற அமைப்பை ஆரம்பிக்கலாம். உள்ளூரிலேயே ஆயிரக் கணக்கில் பிரச்சனைகள் இருக்கின்றன.  மாநகராட்சி போன்ற அமைப்புகள் நினைத்தால் அதிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் நினைத்தால் மிக்ச் சிறப்பான நிர்வாகத்தை தரமுடியும்.

முழுநேர அரசியலில் ஈடுபடும் அளவிற்கு வசதி இருப்பவர்கள் அவரவர் ஊர்களில் ஒன்று சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பியுங்களேன். இன்று ஒரு சில பிரதிநிதிகளின் வருமானத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் பாதி அளவுக்கு மக்களுக்கு செலவு செய்தாலே மக்கள் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

Monday, October 14, 2013

சச்சினுக்குப் பின் டோனி?

இன்றைய விளையாட்டு வீரர்களில் மிக அதிகமாக சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் டோனியும் ஒருவர். டோனியின் சரித்திரம் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்தது.

அதில் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிஷமும் நானே செதுக்கினது என்று டோனி பெறுமை பட்டுக் கொள்ள முடியாது. அதில் பலரும் செதுக்கி உள்ளனர், ஆனால் அவர் ஒரு குட் ஃபினிஷர்,  ஒவ்வொன்றையும் கடைசியில அவர் செதுக்கி விட்டிருக்கிறார்.  டோனியின் கீப்பர் வாழ்க்கை டிராவிட் என்ற பேட்ஸ்மேனால் ஒரு குச்சியும், பர்த்தீவ் பட்டீல் என்ற குழந்தைப் பையனால் ஒரு குச்சியும்  தினேஷ் கார்த்திக் என்ற கொடுத்துச் சிவந்த கரங்களால் மற்றொரு குச்சியும் நடப் பட்டு அதற்குப் பின்னால் துவங்கியது. இதில் யாராவது ஒருவர் காட்டடி மன்னனாக இருந்திருந்தால் டோனி வந்தே இருக்க முடியாது. எதைப் பற்றியும் கவலைப் படாமல் அடி பிண்ணிஎடுக்க ஆரம்பித்தார் டோனி. அப்படியே ஒரு அதிரடி ஆட்டக் காரராக கில் கிரிஸ்ட் பாணியில் உருவாக  அணியில் நுழைந்து விடுகிறார்.

அடுத்ததாக அவர் கேப்டன் ஆகிய கதை இன்னும் சுவாரசியமானது. உன்னால நான் கெட்டேன். என்னால நீ கெட்டேன் என்ற நிலையில் உலகக் கோப்பையில் இருந்து இந்திய அணி திரும்பி வர  எப்படியும் டி 20லும் தோற்று விடுவோம் என்றே எல்லோரும் நினைத்திருந்த நிலையில் கங்கூலி, டிராவிட், சச்சின் ஆகியோர் அணியிலிருந்து வெளியேறுகின்றனர். இளைஞர்களுக்கு வழி விடுவதாக கூறினார்கள்  நாமும் அதை அப்படியே நம்பி விட்டோம்.  டி20ல் கேப்டனாக சச்சினின் ஆசிர்வாதம் இருந்ததாகவும் சொல்வார்கள்.


அவர் சில முடிவுகளை எடுத்தார்.  அதை பலராலும் யூகிக்க முடியாத நிலையில் அவர் எடுத்த பல முடிவுகளில் வெற்றியும் பெற்றார்.


அப்போது கிரிக்கெட்டின் கடவுளாக சச்சினை அவரது ரசிகர்கள் முன்னிறுத்தி வந்தனர். அவரைப் பற்றி பல ஸ்டேடஸ்கள் போட்டு லைக்குகளையும்  பெற்று வந்தனர்.

அதே நேரத்தில் கிரிக்கெட்டில் கங்கூலி, டிராவிட், சேவக் போன்றவர்களும் இருந்தனர். அவர்களும் ரசிகர்கள் இருந்தனர்.  அவர்களில் பலரும் சச்சினின் சாதனைகளுக்கு தங்கள் தலைவனின்  சாதனைகள் சளைத்தவை அல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள்தான். அவர்களுக்கு சச்சின் மேல் கொஞ்சம் கோபம், பிரமிப்பு கூட உண்டு. தங்கள் தலைவனின் சாதனைகளை சிறியதாக்கிய சச்சினை கொஞ்சம் வெறுத்தர்வர்கள் கூட உண்டு.

ஆனால் சச்சினை அவர்கள் ரசிகர் தூக்கி கொண்டாடிய நேரத்தில் அவர்களுக்கு போட்டியாக தங்கள் ஆளின் சாதனைகளை காட்டலாம் என்றால் அவர்கள் ஏறக்குறைய ஓய்வு பெற்றிருந்தனர்.  அந்த நேரத்தில்தான் டோனி வருகிறார்.  டோனியின் ஃபேஸ்பு க்  ரசிகர்களைப் பார்த்தால் ஒரு விஷயம் நன்றாகத் தெரியும்.  பெரும்பாலும் அவர்கள் ஏதாவது ஒரு விஷ்யத்தில் சச்சினை மட்டம் தட்டுவதிலே கவனம் செலுத்தி இருப்பார்கள்.


இப்படியான டோனி ரசிகர்கள்தான் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள். ஆபூர்வமாக உண்மையாக டோனி ரசிகர்கள் இருக்கலாம். ஆனால் ஃபேஸ் புக்கில் அடித்து ஆடும் பலரும் சச்சின் ரசிகர்களின் எதிர்ப்பாளர்களே.., சச்சின் ஓய்வு பெற்றுவிட்டால் அவர்களுக்கு போர் அடித்து விடும்.

எம்ஜியார் திரைப்படத்துறையை விட்டு விலகிய பின்னர் சிவாஜி படத்தைப் பார்ப்பதை குறைத்துக் கொண்ட சிவாஜி ரசிகர்கள்போல  ரஜினி திரைப் படத்துறையை விட்டு ஒதுங்கிய பின்னர் கமல் படங்களைப் பார்ப்பதை குறைத்துக் கொண்ட கமல் ரசிகர்கள் போல் சச்சினின் ஓய்விற்குப் பின் டோனியின் ஃபேஸ் புக் ரசிகர்களின் அதகள ஆட்டம் குறைந்துவிடும் என்றே தோன்றுகிறது.

Monday, May 27, 2013

ஐபிஎல் இறுதிப் போட்டி உணர்த்தும் உண்மைகள்

  1. இறுதிப் போட்டியில் தோற்றதன் மூலம் லீக் ஆட்டங்களில் தோற்றது சூத்தாட்டத்தினால் அல்ல. தங்கள் திறமையால்தான் என சூப்பர் கிங்ஸ் நிரூபித்து உள்ளது.
  2. சூப்பர் கிங்ஸ்க்கு போடப் பட்ட கடைசிப் பந்து வைடு ஆக ஆனதால் இதற்கு முன் சில ஆட்டங்களில் போடப் பட்ட கடைசி நோ பாலும் இதே போல் ஏதேச்சையாக நிகழ்ந்த நிகழ்வுதான் என நிரூபிக்கப் பட்டுள்ளது.
  3. விக்கெட் வரிசையாக விழும்போது பத்ரிநாத் ப்ராவோவைக் களம் இறக்கியதன் மூலம் வீரர்களுக்கு போட்டிகளின் முக்கியத் தருணங்களில் வாய்ப்பு தரும் மகா மனிதர் டோனி என்பது மீண்டும் நீருபிக்கப் பட்டுள்ளது,
  4. மும்பை வாலாக்கள் களத்தில் இறங்கினால்  அனைத்தும் சட்ட ரீதியாகத்தான் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
  5. இடியே விழுந்தாலும் கலங்காமல் இருக்கும் மிஸ்டர் கூல் என்பதை டோனி உலகத்துக்கும் அவரது மனைவிக்கும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி விட்டார்.
  6. இந்த போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டதால் இளைஞர்களுக்கு வழிவிடுபவர் என்பதை டெண்டுல்கரும் நிரூபித்துவிட்டார்.
  7. வெளிநாட்டு கேப்டனை விட உள்நாட்டு கேப்டன் தான் ஐபிஎல் அணிகளுக்கு சரிப் பட்டு வருவார்கள் என்பதை ரோஹித் சர்மா நிரூபித்து விட்டார். 
  8. இதையெல்லாம் விட ஒரு சிறப்புப் படம் ஒன்று ஃபேஸ் புக்கில் பட்டது. அது டோனியின் பக்தியை மெச்சுவதாக உள்ளது அந்தப் படம்.https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc1/391666_10151668132389134_489713509_n.jpg 
  9. மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பெண்களுக்கு எதிரான பழமொழியை மாமனார் மருமகனுக்கு மாற்றி எழுதிய பெருமையும் இந்த ஐபிஎல்லையே சாரும். மருமகன் உள்ளே மாமனார் வெளியே .
  10. தங்கள் அணியை வெற்றிப் பெற செய்ய அணி உரிமையாளர் ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருப்பார் என்பதும் இந்த ஐபிஎல்லில் நிரூபணம் ஆகியுள்ளது.    படித்துவிட்டீர்களா? 
  11. IPL இறுதிப் போட்டி -  இறுதிச் சடங்கு?
  12.  IPL மகாபாரத யுத்த விளக்கம்
  13. டிஸ்கி:- மஞ்சள் சீருடை ஒருவேளை பச்சைச் சீருடையாக மாறினால் முக்தி கிடைக்குமோ என்னமோ?

IPL மகாபாரத யுத்த விளக்கம்

 ரோஹித் சர்மா: (மீடியாக்களைப் பார்த்து )உங்களால் அல்லவா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாங்கள் தோற்கடித்தோம்.

மீடியா: உன் ஒருவனால் அவரை தோற்கடிக்க முடியுமா? உங்களுக்கு முன்பே ஆறு பேர் அவர்களை தோற்கடித்து விட்டார்கள். செத்த அடித்துவிட்டு நாங்கள்தான் தோற்கடித்தோம் என்று வீணே மார்த்ட்டுகிறீர்கள்.

  1. பெர்மணண்ட் பிளேயர்களால் மற்றவர்கள் விளையாட வாய்ப்பில்லாமல் பாதி அணியை அவர்களே அழித்து விட்டார்கள்.
  2. ஸ்ரீனிவாசனை வெளியேறச் சொல்லி  சென்னை அணியையே தடை ஆகும் வாய்ப்பை உருவாக்கி விட்டார்கள்.
  3.  லட்சுமிராயுடனான ஃபோட்டோவைப் போட்டு அவரது நண்பர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டனர்.
  4. மும்பை போலீஸ் மும்பை இண்டியன்ஸ்காக மாரல் சப்போர்ட் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தனர்.
  5. டெண்டுக்கரும் ரிக்கி பாண்டிங்கும் கூடுதலாக இரண்டு வீரர்களை உங்கள் அணியில் விளையாட வழிவகுத்துக் கொடுத்தனர்.
  6. காக்க வேண்டிய நேரங்களில் ப்ராவோவையும் பத்ரிநாத்தையும் அனுப்பி விழுந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையை டோனி அதிகரித்து விட்டார்.

இப்படி ஏற்கனவே பல பேரால் தோற்கடிக்கப் பட்ட அணியை தோற்கடித்துவிட்டு நாங்கள்தான் தோற்கடித்தோம் என்று வீணே மார்தட்டுகிறாய். பேர் வாங்கப் பார்க்கிறாய். போப்பா போய் ஒழுங்கா விளையாடி டீம்ல இடம் பிடிக்கற வழியப் பாரு.




Friday, May 24, 2013

இதெல்லாம் படிக்கற பசங்களுக்கு நல்லதா?

 நாயக் நஹீ.., கல்நாயக் ஹூன் மே

டிஸ்கி;- இதெல்லாம் படிக்கற பசங்களுக்கு நல்லதா? ,  நாயக் என்ற இந்தி திரைப்படத்தைப் பார்த்து செய்திருக்கலாம். இல்லை முதல்வன் என்ற மூலப் படத்தைப் பார்த்தும் செய்திருக்கலாம்.

//மத்திய பிரதேச மாநிலத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.8 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்த மாணவி, ஒருநாள் கவுரவ மேயர் பதவி அளித்து கவுரவிக்கப்பட உள்ளார்.//

//மாணவியை கவுரவிக்கவும், மாணவ, மாணவிகளை கல்வியின் மேல் ஆர்வம் கொள்ளச் செய்யும் வகையில் அவருக்கு ஒரு நாள் மேயர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நகரின் மேயர் ஷோபா யாதவ் அறிவித்துள்ளார். வருகிற 28 ஆம் தேதியன்று மாணவி சுனந்தா மேயர் பொறுப்பு ஏற்கிறார்.

அன்று காலை முதல் மாலை வரை மேயர் இருக்கையில் அமர்ந்து மேயர் பணிகளை கவனிப்பார். இதற்கான சட்ட நடைமுறைகளை செய்து, அரசிடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளார் மேயர் ஷோபா யாதவ்.

28 ஆம் தேதியன்று மேயர் பதவியில் அமரும் மாணவி சுனந்தா, அன்றைய தினம் நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரூ.40 லட்சம் செலவில் சாலை அமைக்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார்//

 http://kalvi.vikatan.com/index.php?aid=1655#cmt241

செய்தி மேலே உள்ள சுட்டியில் வந்துள்ளது,. அங்கே போனால் முழுச் செய்தியையும் படித்துக் கொள்ளலாம்.


============================================================

முதல்வன் படத்தைப் பார்த்து இது போன்ற ஐடியாக்கள் தோன்றி இருக்கலாம். ஆனால் எல்லா ஊர்களிலும் மேயர் பதவி இல்லையே என்ன செய்யலாம் என்று மக்கள் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கலாம்.  எப்படியாவது விளம்பரம் பெற்றே ஆக வேண்டிய நிலையில் யாராவது யோசித்துக் கொண்டிருக்கலாம். பதவி ஏற்ற பின்  அவர்கள் ஏதாவது எக்குத்தப்பாக முடிவெடுத்து ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் கூட இருக்கலாம். அந்த சிறுவர்கள் கூட முதல்வன் படம் பார்த்து இருக்கலாம் அல்லவா? 

அவர்களுக்கு மேயர் , சேர்மன் பதவிதான் கொடுக்க வேண்டும் என்றில்லை. ஷெரிஃப், நாட்டாமை போன்ற வழக்கொழிந்த பதவிகளைக் கூட கொடுக்கலாம்.  நாட்டாமை பதவியை  வைத்துக் கொண்டு  போட்டாவுக்கு போஸ் மட்டுமே கொடுக்கலாம்.

17 வயது மாணவருக்கு அந்தப் பதவிகள் கொடுக்க முடியுமா?  கௌரவ பதவியாகக் கொடுத்த பதவியை கொண்டு உத்தரவுகள் போட முடியுமா? என்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டாம்.


பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் அரசியலுக்கு வருவதும் நிர்வாகப் பதவிகளுக்கு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் நல்லதுதான்.




ஆனால் வெறுமனே இது போன்ற ஒரு பதவியில் சிறு குழந்தைகளை தூக்கி வைப்பது தேவையில்லாமல் அவர்களுக்குள் ஒரு அதிர்வினை ஏற்படுத்தி  எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது.

ப்ளஸ் டூ படிப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதால் அடுத்த கட்ட கல்வியில் வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அவ்வளவுதான். மேற்கொண்டு அவர் பார்க்கவேண்டிய களங்கள் நிறைய உள்ளன. அதற்குள் இதுபோன்ற கிரீடஙக்ள் அவர்களுக்கு முள் கிரீடங்கள் ஆகி விடக் கூடாது.




Wednesday, May 22, 2013

எதிர்பார்த்தபடியே எதிர்பாராத நிகழ்வுகள் (ipl)

IPL-2 கிரிக்கெட் போட்டிகள். இன்றும்கூட இந்திய மக்களின் விடுமுறைக் கொண்டாட்டங்களில் முதலிடம் வகிக்கிறது. (தேர்தல் என்பது நமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிகழ்வாக இருப்பதால் அதை பொழுதுபோக்கு செய்திகளில் சேர்க்கக் கூடாது)

வெற்றிகரமான கிரிக்கெட் போட்டிகளில் சுற்று ஆட்டங்களில் பாதி ஆட்டங்களுக்கு மேல் முடிந்த நிலையில் மேற்கொண்டு என்ன நடக்கப் போகிறது? இன்றய சூழலில் ஹைதராபாத் அணி முண்ணனியில் இருக்கிறார்கள். அந்த அணியில் சென்ற ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் செய்துள்ள ஒரே மாற்றம் தலமை மாற்றமே..,

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆ.......டிக் கொண்டு இருக்கிறார்கள். இனிவரும் ஆட்டங்களில் இவர்கள் சூப்பராய் ஆட ஆரம்பித்துவிடுவார்கள். அரையிறுதியிருதிக்கு தகுதி பெற ஆறு அல்லது ஏழு அணிகள் ஏற்க்குறைய சமநிலையில் இருந்து சின்ன வித்தியாசங்களுடன் நான்கு அணிகள் உள்ளே நுழைவார்கள்.

ஒரு ஆட்டம் அதிகம் எதிர்பார்க்கப் படுவதாகவும் இன்னொரு ஆட்டம் யானைக்கும் பானைக்குமான போட்டியாக எதிர்ப்பார்க்கப் படும். இறுதி ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப் படும் ஆட்டம் ஒரு தலை பட்சமாக முடியும்.
==============================================================
கைமாறும் கிரிக்கெட் அணிகள் சில பரபரப்பான வெற்றிகளைப் பெறுவார்கள். அப்போதுதான் புதிதாக வாங்க நினைக்கும் உரிமையாளர் சற்று அதிகப் பணம் கொடுத்து வாங்குவார்கள்.
=============================================================
போட்டித்தொடர் முடிந்த பின்னர் சில ஆட்டக்காரர்களின் தலைமை பண்பு சிறப்பாக பேசப் படும். அப்போது அவர்களை இந்திய 20-20 அணிக்கு தலைமையாக்கச் சொல்லுவார்கள். அப்பொதுதான் டோனியின் சுமை குறையும் என்பார்கள். குறிப்பிட்ட நபர் தலைவராக இருக்கும் அணிக்கு விளம்பரங்கள் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதால், வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதால் இந்தக் குரல் ஓங்கி ஒலிக்க வாய்ப்பு இருக்கிறது.

==========================================================

இந்தப் போட்டியின் பணச்சுழற்சியைப் பார்த்தால் மற்ற நாடுகளுக்கு வயிற்றில் புளியைக்கரைக்கும் வாய்ப்பு இருப்பதாலும் பல வெற்றிகள், எதிர்ப்பார்த்தபடியே அமைவதாலும் , எதிர்பார்த்தபடியே சற்றும் எதிர்ப்பாராதா முடிவுகளை ஏற்படுத்துவதாலும் முடிவுகள் ஏற்கன்வே நிர்ணயிக்கப் படுவதாக வெளிநாட்டவர்களால் பேசப் படும் வாய்ப்புகள் கூட இருக்கின்றன.

=========================================================

ம் .. நடக்கட்டும்  (இதுவரைக்கும் முதல் பதிப்பில் எழுதியது)

=========================================

பாருங்க தல..,  போன வருஷம் எழுதியது இந்த வருஷத்துக்கும் அப்படியே பொருந்துகிறது. குறிப்பாக சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டம் பற்றிய கருத்துக்கள் ( இு முபிப்பில்ோட்டு)
============================================ 
இன்னும் எத்ை வம் ஆனாலும் அப்பியே பொரந்தும் போல இருகே! (இு ஒரு மீள்ீள்பிப்பு)

Thursday, May 16, 2013

ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று நான் நம்புகிறேன்

செய்தி Three Rajasthan Royals players, S. Sreesanth, Ajit Chandila and Ankit Chavan, were detained early on Thursday morning by the Delhi police for allegations of spot-fixing.

The BCCI has swiftly moved in to suspend all three cricketers pending investigation.

Seven bookies in Mumbai and three in Delhi have also been detained along with the three.

AUSTRALIAN PLAYER UNDER SCANNER

The Delhi commissioner of police Neeraj Kumar said “more arrests are likely”. He did not mention if the arrests would be of players, administrators or bookies.  

http://cricket.yahoo.com/news/sreesanth--chandila--chavan-arrested-by-delhi-police-052841701.html 

போன வருஷம் கூட இந்த மாதிரி ஒன்னு ரெண்டு பேர  மாட்ச் ஃபிக்சிங்ல போலீஸ் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. இந்த முறையும் கொஞ்ச பேர கைது பண்ணி யிருக்காங்க.  

நாங்க எப்போதுமே ஐபில் பார்க்கும்போது ரஜினி படம் மாதிரித்தான் பார்ப்போம். ஜாலியா இருக்கும். ரஜினி எவ்வளவு அடிவாங்குனாலும் அவமானப் பட்டாலும் ரஜினிதான் ஜெயிப்பார். ரஜினி தோற்கிற மாதிரி இருந்தா கிளைமாக்ஸில ஜெயிக்கறது இன்னொரு ரஜினியாத்தான் கதை அமைந்திருக்கும். ஜாலியா பார்ப்போம்.  ரஜினி அடிவாங்கறார் என்பதற்காக நாங்கள் கலங்கியதே இல்லை.  அவமானப் படுகிறாரே என்று அதிர்ந்ததே இல்லை. கடைசில் எஸ் பி முத்துராமனும், கே எஸ் ரவிக்குமாரும் அவரை ஜெயிக்க வைத்து விடுவார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு எப்பவும் உண்டு. 


போன வருஷம் ஐ.பி.எல்ல அரெஸ்ட் ஆன பசங்களால எந்த மேட்ச் ஆவது அவஙக் ஜெயிச்சிருக்காங்களான்னு பார்த்தா ஒன்னும் தெரியல.  அவங்க யாருன்னே தெரியல. ஒரு அசாருதீன், ஒரு ஜடேஜா ரேஞ்சுக்கு பேப்பர் ந்யூஸ்  போட்டு எல்லாரும் பார்த்தாங்க. இந்த வருஷம் அரெஸ்ட் ஆன ஆட்கள் பேர பார்த்தா அதுல ஸ்ரீசாந்த பேர் இருக்கு. ஸ்ரீசார்ந்த பேட்டிங் பண்ணியோ இல்ல பந்து வீசியோ அவரால ஒரு டீம் ஜெயிச்சு இருக்கா?   இல்ல அவர் போட்ட பந்துகள யாராவது விலாசோ விலாசுன்னு விலாசி ஜெயிச்சு இருகாங்களா? (அப்படி ஒரு ஓவர் விலாசின பிறகும் அவருக்கும் ஓவர் த ந்திருந்தா அவரோட கேப்டனும், அணி உரிமையாளரும் காரணமாகத்தான் இருந்திருக்கணும்).


ஆனா ஸ்ரீசாந்த் அப்படி பட்டவர் அல்ல.  அவரால் அவுட் ஆக்கும் வகையில் அல்ல. அடித்துவிளையாடும் வகையில்கூட பந்து வீசத் தெரியாது. ஒரு அப்பிராணியின் மீது கேஸ் போட்டு உள்ளதாகவே தோன்றுகிறது.  சிங்கம் பாணி திரைப்படங்களில் அனுப்பப்படும் தோரணை தெரிகிறது. 

ஆனால் ஸ்ரீசாந்த் உறவினர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஏற்கனவே கொச்சி அணி காணாமல் போனதிலேயே அரபிக் கரையோர மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.

Sunday, May 12, 2013

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் கொண்டாடும் விழாக்கள் பல. அதில் பொங்கல் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதில் மாட்டுப் பொங்கல் தனித்தன்மை வாய்ந்தது.

விவசாயத்திற்கு பலவிதங்களில் மாடுகளின் பங்கு முக்கியமானது. காளைகள் உழுவதற்கு உதவுகின்றன. வண்டிகளை இழுப்பதன் மூலம் பயணத்திற்கும் சரக்கு இடமாற்றத்திற்கும் மிகவும் உதவுகின்றன. பல எந்திரங்களும் எந்திரங்களின் மூலம் இயங்கும் வாகனங்கள் உபயோகத்தில் இருந்தாலும் காளைகளின் பங்கு முக்கியமானது. பசுக்களும் சளைத்தவை அல்ல. பால் பொருட்கள் இல்லாமல் நம்மால் நமது வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாடுபோல உழைப்பு என்பதே விசுவாததிற்கும் கடின உழைப்புக்கும் கூறப் படும் வார்த்தையாக இருக்கிறது.

அவ்வளவு கடுமையாக உழைக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. அன்று அதிகாலையிலேயே மாட்டைக் குளிப்பாட்டி விடுவார்கள். அன்றைய தினம் விரும்பிய வண்ணம் மாட்டுக்கு மேய்ச்சல் இருக்கும். விரும்பிய வண்ணம் வண்ணங்கள் தீட்டி, கொம்புகள் அலங்கரித்து சில இடங்களில் துணிகள் கூட அணிவித்து மகிழ்வார்கள்.

மாலைப் பொழுதில் பொங்கல்வைத்து அதனை மாட்டுக்கு ஊட்டி அழகு பார்த்து பின்னரே குடும்பத்தினர் உண்டுமகிழ்வார்கள்.

குறிப்பாக அன்றைய தினம் மாட்டுக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டார்கள்.

========================================================================

குடும்பத்திற்காக கடினமாக உழைக்கும் இன்னொரு ஜீவன் உண்டு. அவர்தான் அன்னை. அவர் எவ்வள்வு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் குடும்பத்தின் அடிப்படை வேலைகள் அனைத்தையும் செய்வார். குழந்தை வளர்ப்பில் அவரது பங்கு மிக முக்கியமானது.

வெள்ளையர் கண்டுபிடித்த MOTHER'S DAY அன்று அன்னையருக்கு அனைவரும் மரியாதை செலுத்துவார்களாம்.
அன்றும் கூட இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து கொண்டாடினால் அதையும் அன்னைதான் செய்ய வேண்டியிருக்கிறது. தாயாருக்கு மட்டும் புத்தாடை என்பதை அந்த தாயாரே விரும்புவதில்லை.


எனவே அன்னையர் தினத்தை அனுதினமும் கொண்டாடி அன்னையரைப் போற்றுவோம். (அதற்காக இன்று கொண்டாடாமல் இருந்து விடவே வேண்டாம். அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்). அன்னை என்றால் உங்களைப் பெற்ற அன்னையை மட்டுமல்ல.
உங்கள் குழந்தையைப் பெற்ற அன்னையையும் தான்.

=======================================================================
இவரும் கூட அம்மாதான்




=================================================================


சில குடும்பங்களில் அம்மா செய்யும் வேலைகளுக்காகத்தான் வேலைக்காரி வைத்திருக்கிறார்கள். பல குடும்பங்களில் அம்மாதான் அந்த வேலைகளைச் செய்கிறார்.

நாளைய தினம் பதிவர்கள் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய கலந்துரையாடலுக்குச் செல்லப் போவதால் இந்தப் பதிவினை இன்றே வெளியிட்டு உள்ளேன்.

குழந்தைகள் மீதான வன்முறைபற்றி நான் எழுதிய இந்தப் பதிவில்

பின்னூட்டத்தில்

"குழந்தையை வேலைக்காரி மாதிரி நடத்தாதே" என்று சொல்லும்போதே, வேலைக்காரிக்கும், வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் எளிதில் புரிந்துவிடும். இதில் நீங்கள் குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை.
என்று நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

எனது பதிலில்



பல நேரங்களில் சின்ன சின்னவேலைகளுக்குக் கூட வேலையாட்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நம்வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளும் நாம் செய்ய வேண்டிய வேலைகள்தான். இதில் வேலைக்காரி மாதிரி நடத்தாதே. என்ற வாக்கியத்தின் பொருளைக் கூற முடியுமா? வேலைக்காரர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்ல. உங்கள் வேலையையைச் செய்ய உங்கள் உடலும் நேரமும் இடம் கொடுக்காததால் விலை கொடுத்து வேலையை வாங்குகிறோம். அப்படிப்பார்த்தால் உங்களைவிட வேலைக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகமாக இருக்கவேண்டும். வேலைக்காரர்களைப் போல் குழந்தையை நடத்தாதே என்ற வாசகம் எழும்போதே வேலைக்காரர்களையும் குழந்தைகளையும் அடிமையாக நடத்துவதாக பொருள்படும் அல்லது உங்கள் வேலையை மற்றவர்கள் மேல் திணிக்கும் கொடூர பழக்கத்திற்கு குழந்தையை அடிமைப் படுத்துவதாகப் பொருள்படாதா......


மேலும் இது தொடர்பான விவாதங்களைப் படிக்க இங்கே செல்லவும்

கலந்துரையாடலுக்குச் செல்லும் முன் இது போல இன்னும் பல கேள்விகளுடன் செல்லுங்கள். தெளிவு படுத்திக் கொண்டுவாருங்கள்

டிஸ்கி;- மீள்பதிவுதான். முதன்முதலில் வெளிவந்த தேதியறிய முதல் பின்னூட்டம் பார்க்கவும்

Friday, May 10, 2013

தமிழ் மணப் பட்டையில் பிரச்சனை

இந்த வலைப்பூவில் தமிழ்மண ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போடும் வையில் மாறாமல் அப்படியே நிற்கிறது.   submit to thamil manam  என்றே வருகிற்து. தமிழ் மணத்தில் கொடுக்கப் ப்ட்ட வழிகளில் முயற்சித்துப் பார்த்து விட்டேன் என்ன செய்வது? தவிரவும் எஃபுளோரர் கொண்டு திறக்கவும் முடியவில்லை. எப்படி சரிசெய்வது?

Sunday, May 5, 2013

அமெரிக்கப் பொருளாதார வீழ்ச்சியும் சி.எஸ்.கேவும்

இந்த அரியாசனத்துக்குத் தேவை நான் சொன்னதைக் கேட்டு நடமாடும் ஒரு பொம்மை - ராஜகுரு பி.எஸ்.வீரப்பா

உலகச் சரித்திரத்திற்கும் கிரிக்கெட் சரித்திரத்திற்கும் ஒரு பெரிய ஒற்றுமை உண்டு. மிக மிகப் பெரியஅ அணிகள் என்று பேசப் பட்ட அணிகள் எல்லாம் குறிப்பிட்ட காலம் வரை ஒவ்வொரு வீரர்களாக மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அணிவீரர்கள் நிரந்தர இடம் பிடித்துவிடுவார்கள். குறிப்பாக கேப்டன்.. அப்படி நீண்டகாலம் ஒருவரே கேப்டனாக இருந்துவிட்டால் அவர்களுக்குப் பின் அந்த அணிக்கு வரும் தடுமாற்றம் மிக மோசமாக இருந்திருக்கிறது. லாயிட்ஸ்,  இம்ரான்கான்,  ரணதுங்க, குரோன்யே, சமீபத்தில் ரிக்கி பாண்டிங்.  இந்த நீண்ட கால கேப்டன் நிரந்தரக் கேப்டன் போன்றவர்க்ள் மிக அதிக வெற்றிகளை குவித்து இருந்தாலும். அணியின் அடுத்த தலை ததிகிணத்தாம் போடும் சூழல்தான் இருக்கிறது.

 சாம்ராஜ்யங்களில் விக்டோரியா ராணியின் சாம்ராஜ்யத்தில் சூரியன் மறையாமல் இருந்தது. ஆனால் அதற்கடுத்த கட்டங்களில்  ஐரோப்ப்பாவின் ஒரு ஓரத்துக்கே சென்றுவிட்டது. ஔரங்கசீப்பிற்குப் பின் முகலாய சாம்ராஜ்யமே  அம்பேல் ஆனது.  நீண்ட நாளைக்குப் பின் மன்னரான ராஜராஜரின் வம்சம் கூட ராஜேந்திரருக்குப் பின் சில ஆண்டுகளில் அடியோடு அழிந்து போனது.  சோழநாட்டை ஆள ஆள் வேண்டுமென்று ராஜராஜரின் மகளின் வாரிசை (சாளுக்கிய தேசக் காரர்) கூப்பிட்டுவிட்டிருந்துக்கிறார்கள். இப்போது சோழவாரிசு என்று சொல்பவர்கள் எப்படி என்று தெரியவில்லை.


இதையெல்லாம் கண்டுதானோ என்னவோ  அமெரிக்காவில் யாரும் இருமுறைக்கு மேல் அதிபராகக் கூடாது என்று சட்டம் போட்டிருக்கிறார்கள். ஆனாலும் கூட புஷ் மகன் புஷ் என்று ஒரு குடும்பத்தின் கீழ் 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததன் பலன்  பெரிய பொருளாதார ஆட்டம். 

இவ்வளவு முன்னோடிகள் இருந்தும்  சி எஸ் கே அணியில்  கேப்டன் உட்பட பலரும்  நிரந்தர இடம் பிடித்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  சுதாரித்துக் கொண்டால் நல்லது.

Saturday, April 27, 2013

எம்ஜியார், ரஜினிகாந்த்,சல்மான்கான்,சிவாஜி சேர்ந்து செய்த காரியம்

உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா  - பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்

தமிழ்மணம் இடுகைகளை நாம் படிக்க மிகவும் உதவி செய்யும் ஒரு தளம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நமக்குப் பிடித்த இடுகைகளை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அவ்வாறு ஒரு சிறந்த இடுகையை இன்று படிக்க நேர்ந்தது.  சரி பரிந்துரை செய்தவர்களுக்கு நன்றி சொல்லுவோம் என்று எண்ணி அவர்கள் பெயரைப் பார்த்த போது கீழ்கண்ட பெயர்கள் இருந்தன. 

இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்



kamalhassan shahrukhkhan mgramachandran salmankhan kkarun09 kumanan5183 kaleelullahkhan satwik nisanthika bagavathar aamirkhan alexpandian geminiganesan sivajiganesan Hajahmohamed rajnikanth senthilkkum

சன்னலை மூடு

ரஞ்சிக் கோப்பைக்கு IPLகாரர்கள் சொல்லித்தரும் பாடம்

ஐ.பி. எல். கிரிக்கெட் ஆரம்பித்த இரண்டாம் வருடத்திலேயே உலகம் சுற்றப் போய்விட்டது. நம்மூர் சின்னப் பசங்க எல்லாம் தென்னாப்பிரிக்கா பார்க்க போய்விட்டார்கள்.(போயிருக்கற பசங்கல விளையாடவிட்டால் பரவாயில்லை) சென்ற முறை உலககோப்பை நடந்த போது அங்கே அழகிகளின் நடனம் நடந்ததே. யாராவது மறக்க முடியுமா.. ஒவ்வொரு சிக்ஸ்ருக்கும் ரசிகர்கள் போல்டு ஆனார்களே... அதே மாதிரி இந்த வருடம் கூட எதிர்பார்க்கலாம்.

ஆரம்பித்த இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு பேரும்புகழும் பெற்ற போட்டிகளைப் பார்த்தாவது ரஞ்சி கோப்பைக்காரர்கள் சுதாரிக்க வேண்டும்.

ரஞ்சிக்கோப்பை அணிகளையும் ப்ரீத்தி, சில்பா போன்றோருக்கு ஏலம் கொடுத்துவிடலாம். ஏலம் எடுக்காவிட்டால் இலவசமாகவாவது கொடுத்துவிடலாம். பெரிய பெரிய திரை எல்லாம் வைத்து கிரிக்கெட் போட்டியை மைத்தானத்துக்குள்ளேயே ஒளிபரப்புகிறார்கள். அதே போல் பெரிய பெரிய திரை வைத்து போட்டியை ஒளிபரப்ப வேண்டும். கிரிக்கெட் போரடித்தால் அதில் ப்ரீத்தி, ஷில்பா போன்றோர் நடித்த பாடல்களை ஒளிபரப்பலாம். பொன்வைக்கும் இடத்தில் பூ வைப்பது என்பார்களே அப்படி. பெரிய பெரிய திரைகளில் ப்ரித்தியின் நடனத்தைப் பார்க்கவாவது ரசிகர்கள் வருவார்கள். அந்தக் காட்சிகளையும் 3D படங்களாக ஒளிபரப்பலாம். தனியாக கண்ணாடிகளை விற்று காசு பார்க்கலாம்.

அவ்வாறு இலவசமாகக் கூட வாங்க மாட்டேன் என்று சொன்னால் அதற்கும் கவலைப் பட வேண்டியதில்லை. IPL காரர்களிடம் பேசி அந்த அணியை ஏலம் எடுக்க caution depositஆக இந்த அணிகளை ஏலம் எடுக்கவேண்டும் என்ற ஒரு புதிய விதியை கொடுக்கலாம்.

ஆட்டத்தின் போது அக்சய் குமார் வகையாறாவைச் சேர்ந்த ஃபேசன் ஷோ கலைஞர்களைக் கூட்டிக் கொண்டு சென்றால் கூட்டம் அலை மோதத் தொடங்கிவிடும்.
(படத்தைப் பற்றிய விவாதங்கள் இங்கே)அவர்களை மைதானத்திலேயே விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் கொடுக்கச் சொன்னால் ரசிகர்களும் உற்சாகம் கொள்வார்கள். இது போண்ற ஃபேஷன் ஷோ ஆட்களை வைத்து அப்போதே கிளிந்து போன ஆடைகளையும் ஜிப் போன ஆடைகளையும் நல்லவிலைக்கு விற்று விடலாம்.

அனுஷ்கா,மந்திரா பேடி மாதிரி திறமை வாய்ந்த ஆட்களை சின்னத்திரை https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrfpAidiL5VuI7igEMHix_Fb9QHnGTdkbnNlrjvxfjhjXh88Yh3NDxZxVbuIg2T2s9cuheyoCmTaW8aKjqhfZCbCLWtXQF2-W_qaIgDAMC-ZQNWJgluZMPTQlwsaqwtCwIorJWnDpfXcd4/s400/anushka-0003.jpghttp://www.bosey.co.in/blogpics/mandira.jpg
வர்ணனையாளர்களாக நியமித்து அவர்களது கருத்துக்களை ஒளிபரப்பிக் கொண்டே இருந்தால் கிரிக்கெட் ரசிகர்கள் ஐந்து நாட்களும் ஆட்டத்தின் போது தொலைக்காட்சியைவிட்டு நகராமல் இருப்பார்கள். ஆறு, நான்கு, விக்கெட் நிகழ்வுகளின்போது மட்டும் கிரிக்கெட் காட்டினால் போதும். விளம்பர வருவாய் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

ஓரளவு ரஞ்சிக் கோப்பை போட்டிகளும் பிரபலம் அடைந்துவிட்டால் உலகம் பூராவும் நமது போட்டிகளை நடத்தலாம். அங்குள்ள நடிகர்கள், நடிகைகள், விளம்பர மாடல்கள் போன்றோரை உபயோகப் படுத்திவந்தால் உலகின் அனைத்து வித மைதானங்களிலும் விளையாடும் திறமையை நமது ஆட்டக்காரர்கள் பெறுவார்கள். பணமும் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு எத்தனை நாள்தான் குண்டுசட்டியில் குதிரை ஓட்டப் போகிறார்கள்

டிஸ்கி;- மிகப் பழைய பதிவு, மீள்பதிவாக வருகிறது. வெளிவந்த காலம் அறிய முதல் பின்னூட்டத்தின் தேதி பாருங்களேன்.

Wednesday, April 3, 2013

காதல் கோவணம்

அம்மணமாக சுற்றும் ஊரில் கோவணம் கட்டிக் கொள்வது போன்றதுதான் காதல் திருமணம். சிலர் அந்தக் கோவணத்தைக் கழட்டி தலையில் சுற்றிக் கொள்வதாலேயே காதல் திருமணம் என்பது முழுவதும் ஒதுக்க வேண்டியது என்ற முடிவுக்கு வரவேண்டியது இல்லை.
 

பெரும்பாலும் காதல் திருமணத்திற்கு எதிரி என்று பார்த்தால் பெற்றோர் என்று சொல்லுவார்கள். பார்த்தால் அப்படியும் இருக்காது. கூட இருக்கும் சொந்தங்கள் பந்தங்கள் என்று சொல்லிக் கொண்டு சுற்றுபவர்கள். இந்தப் பெண்ணையும் மாப்பிள்ளையும் குறிவைத்து சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் இவர்கள்தான் பெரிய எதிரியாக இருந்து இம்சை கொடுப்பார்கள். இவர்களுக்கு பயந்துதான் பெரும்பாலும் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்., கருணைக் கொலைகள் தான் ஒரு மானஸ்தன் என்பதை  தன் சாதிக்காரனுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். 

200- 300 கிமீ தள்ளி உள்ள, சில நேரங்களில் பக்கத்து மாநிலங்களில் உள்ள பெண்ணையோ, மாப்பிள்ளையையோ மெட்ரிமோனியலில் தங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இருந்த ஒரே காரணத்துக்காக மணம் முடித்து வைக்கும் பெற்றோர்களால் ஏன் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பெண்ணையோ மாப்பிள்ளையையோ திருமணம் முடித்து வைக்க முடியவில்லை? இந்த சுற்றமும் சூழ நிற்கும் கூட்டங்களால் வந்த வினைதான் இது. 

தங்கள் சாதியிலேயே திருமணம் செய்து கொண்ட பலரையும் பாருங்களேன். அவர்களது கஷ்ட காலங்களில் இந்த சுற்றமும் சூழ வந்து கும்மியடித்தவர்கள் யாராவது வந்து உதவி செய்து இருக்கிறார்களா என்று?   காதல் திருமணம் செய்தவனானாலும், பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் ஆனாலும் அவனவனாகப் பார்த்து அந்தக் கஷ்டங்களைச் சமாளித்தால்தான் உண்டு.

அப்புறம் எப்படித்தான் இதைத் தாண்டுவது எனப் பாருங்கள்.  காதலிப்பவர்கள் இருவரும் சொந்தமாக ஒரு வேலை தேடிக் கொண்டு பிறந்த ஊரை விட்டு தள்ளி இருக்கும் நகரத்துச் சென்றவர்கள் காதல் திருமணம் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்குக்கு போனவர்கள் கதிதான் அதோ கதி ஆகியிருக்கிறது.

சொந்த ஊர், சொந்த மண் என்ற நினைப்போடு இருந்தால் கருணைக் கொலையை  சந்தித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது, இதில் தலித், தலித் அல்லாதவர்கள் என்ற வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை.   ஆனால் சாதி வேறுபாடு பார்த்தல் என்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சாதி பார்க்காமல் பழகும் மக்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அப்படி சாதி பார்க்காமல் பழகுபவர்கள்கூட சாதி மறுப்பு திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்களா என்பது சற்று சந்தேகம் தான். 

எனக்குத் தெரிந்தவரை  சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள்  சொந்த ஊர் பக்கம் போகாமல் இருப்பது. இருவருமே நல்ல வேலையில் இருப்பது.ஆகிய காரணங்கள் மட்டுமே அவர்களது திருமணத்தை வாழ வைக்கும். இதை பயந்து ஓடுதல் என்று நினைக்கத் தேவையில்லை. புதிய வாழ்க்கை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். முடிந்தால் உங்களை பெற்றவர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்களும் கண்டிப்பாக உங்களுடன் வந்து மகிழ்ச்சியாகத் தான் இருப்பார்கள்.  அப்படி உங்களோடு வர மறுத்தால்  பெற்றோர் பார்த்து வைத்து திருமணங்களில் எத்தனை பேர் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டினால் அவர்களும் மனம் மாறக் கூடும்.

=================================================================
இன்றைய இளைஞர்கள் ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்ள எனக்குத் தெரிந்து சில காரணங்கள்.

1. அவர்களை யாருமே காதலிக்க மறுப்பது.., சிலர் சிலபல முயற்சிகள் செய்தும் பலனிக்காமல் போயிருக்கும்.

2.இதுவரைக்கும் பெற்றோர் சொன்னதை கேட்கவில்லை. இதை மட்டுமாவது பெற்றோர் விருப்பதுக்கு விட்டு விடுவோம் என்று ஒதுங்குவது ( இதில் அவர்களது சோம்பேரித் தனமும் இருக்கிறது)

3.நமக்கு நல்ல துணை கிடைத்து விட்டது. நமது சகோதர / சகோதரிக்கு நல்ல துணை கிடைக்குமா என்ற சந்தேகம். ( பம்பாய் அரவிந்த சாமி மாதிரி யாருக்கும் பதில் சொல்லத் தெரிவதில்லை)

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails