Friday, November 1, 2013

ஆதித்ய கரிகாலன் மன்னன் ஆகிருந்தால்.....,

டிஸ்கி:-

நமக்கு பிடித்தவர்களை நாயகனாக்கி பல காவியங்கள் எழுதுவது மரபுதான். அது கல்தோன்றி மண் தோண்றா காலத்தில் துவங்கி இன்றைய சினிமா வரைக்கும் இருப்பதுதான். இது ஒரு சுவையாக கற்பனை.  சின்ன வயதில் நான் மன்னனானால்..........,    எதிர்காலத்தில் நான்....., என்றெல்லாம் பேச்சுப் போட்டி நடத்துவார்கள். இதுவும் அது போலத்தான்.


என் மனதில் வெகுநாட்களாக இருந்து கொண்ட அரிப்புதான். தமிழ் சமுதாயம் ஏன் இவ்வளவு சிரமப் பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த தமிழ் சமுதயாத்தின் இழி நிலைக்கு காரணம் தான் என்ன என்றெல்லாம் நானும் உள்ளங்கிடங்கோடு போராடிக் கொண்டிருந்தவன் தான். 

அப்படி யோசித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் தீடீரென்றா தீயாய், காற்றாய், புயலாய் தோன்றியதுதான். ஆதித்ய கரிகாலன் சக்ரவர்த்தி ஆகி இருந்தால் தமிழ் சமுதாயத்தின் இந்த இழிநிலை மாறியிருக்குமோ என்றுதான் தோன்றியது.இதற்கான காரணங்கள்.



1.  ஆதித்ய கரிகாலன் ஒரு அதிரடி இளவரசன், இணை அரசன், போர்கள் பல பறந்திருக்கும்.  சோழப் பேரரசு விரைவில் உருவாகி இருக்கும்.

2.ஆதித்ய கரிகாலன் தளிச் சேரிப் பெண்டிரை ஆதரித்த சுவடுகள் எதுவும் இல்லை. எனவே தேவரடியார் என்ற தனிப் பிரிவினர் வந்திருக்க மாட்டார்கள். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நிலையும், சமுதாயத்தில் அவர்களது நிலையும் அனைவருக்கும் தெரிந்ததே..,

3.அவர் அக்கனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார். நாட்டுக்கு ஒரே ஒரு ராஜாதான் இருந்திருப்பார்.

4.ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தமிழகத்தில் ஜாதி வாரி பிரிவுகள் வளர்ந்ததாகச் சொல்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் மன்னனாகி இருந்தால் இது தவிர்க்கப் பட்டிருக்கலாம். ( பட்டிருக்கலாம் என்றெல்லாம் இல்லை, கண்டிப்பாக ஜாதியாக இருந்திருக்காது.)

5. ராஜ ராஜன் காலத்தில்தான் கலைஞர்கள் எச்சில் துப்புவதை சேகரிக்க தனி ஆட்கள் நியமிக்கும் பழக்கம் வந்தது.

6. ஆதித்யன் தஞ்சை சக்கர வர்த்தி ஆகியிருந்தால்  அருள்மொழி ஈழ சக்கரவர்த்தி ஆகி இருக்க வாய்ப்பு அதிகம். ஒரு வேளை அது நடந்திருந்தால் இந்திய துணைக் கண்ட அரசியலே வேறு மாதிரி ஆகியிருக்கும்.

7. ஆதித்ய கரிகாலன் தாய் தந்தையர்க்கு செலவு செய்து வீடுகட்டும் இயல்பு கொண்டவன். ராஜராஜனோ பெருத்த செலவு செய்து கோவில் கட்டியன். அவனது மகனே அந்தக் கோவிலும், நகரும் பிடிக்காமல் வேறு ஒரு ஊருக்கு ஒதுங்கியது வரலாறு.


டிஸ்கி:-

எதிர்காலத்தில் ஔவையார் அரசாட்சி செய்திருந்தால் எப்படியிருக்கும்,  மருத நாயகம் பிரதமர் ஆகி\யிருக்க வேண்டும். கோச்சடையான் ஜனாதிபதி ஆகியிருக்க வேண்டும் என்றெல்லாம் பழ இடுகைகள் போடும் எண்ணம் இருக்கிறது.

4 comments:

  1. பதிவு சரி டிஸ்கி மிக்க கொடுமை விட்டு விடுங்கள்

    ReplyDelete
  2. டாக்டர் ஸார்... நலமா? நீண்ட நாட்களாயிற்று! தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நலம், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

      Delete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails