Thursday, October 29, 2009

எத்தனை தாவணி? ஒரு புலனாய்வு

ஒரு ஊரில ஒரு சின்னப் பையன் இருந்தான். அவன் சின்னப் பையனாக இருக்கும்போதே நற்பணி மன்றம் ஒன்றில் உறுப்பினராக இருந்து வந்தான்.

Wednesday, October 28, 2009

பொதுவில் ஒரு மறுமொழி

http://tvrk.blogspot.com/2009/10/5_28.html   
தளத்தில் ஒரு பாடலும் பொருளும் அழகாகக் கொடுத்துள்ளார் நமது திரு. T.V.Radhakrishnan  அவர்கள்.

Sunday, October 25, 2009

உருகும் மனிதன், பேசும் தனித்தலை

கோயமுத்தூரில் அரசுப் பொருட்காட்சி காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெறும். தொடர்குண்டுவெடிப்பிற்கு முந்தைய கால கட்டத்தில் கதை நடைபெறுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள் நண்பர்களே..., மாலை நேரத்தில் கோவை மருத்துவகல்லூரி சார்பாக இரண்டு ஸ்டால்கள் போடப்படும்.

Monday, October 19, 2009

பதினெட்டு பூர்த்தியாகிவிட்டது

25வது வாரமாக ஒரு தொடர்கதை போய் கொண்டு இருக்கிறது. கோவை மருத்துவக் கல்லூரி பின்புலத்தில் ஏப்ரல் 28நாள் நான் எழுதத் தொடங்கிய இந்தத் தொடர்கதை உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் பதினெட்டு பகுதிகளை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு முழுமையான கற்பனைக்கதைக்கு உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்


ஒரு மணிநேரத்திற்குப் பிறகு திடீரென சிந்தனையில் ஒரு அடைப்பு. கருத்துக்கள் வெளியே வரமால் தடுமாறியபோது பக்கத்தில் யாரிடமாவது உதவி கிடைக்குமா என்று ஆராந்தபோது சுமித்ராவும் சுமனும் அந்தக் கால கங்கூலியும் டெண்டுல்கரும் போல கூட்டணி அமைத்து தேர்வெழுதி கொண்டிருந்தனர். 

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

எங்களிடம் சிக்கிய மாணவனிடம் விசாரித்த போது இது கடந்த ஒரு வாரமாக நடப்பதாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெயர் ஊர் ஆகியவற்றை விசாரிப்பதற்கும் புதிய மாணவன் என்னை ஒன்னும் பண்ணாதீங்க சார் என்று அழ ஆரம்பித்து விட்டான்.

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி


மறுநாள் அன்று அந்த ஜூனியர் மாணவன் முழு பயோ டேட்டாவுடன் வந்து நின்றான். எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. சீனியர் மாணவர் கேட்டார் என்று ஏறக்குறைய மிரட்டி முழு விவரங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டான். பின்னாளில்தான் தெரிந்தது சீனியர் கேட்டார் என்றே நிறைய மாணவிகளின் முழுவிவரங்களையும் வாங்கி வைத்திருக்கிறான். எத்த்னை பேருக்கு என்னைக் காட்டி விவரங்கள் வாங்கினானோ தெரியவில்லை.


ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஒரு குழுவாக நடு இரவில் கால்பந்து மைதானத்தின் நடுவில் அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். கால்பந்து மைதானத்தில் அமர்ந்து மந்திர ஆலோசனை செய்வதில் பல வசதிகள் இருந்தன. எத்தனை பேர் வேண்டுமானாலும் அமரமுடியும். பேசும் விஷயங்களை யாரும் ஒட்டுக் கேட்க முடியாது.

Sunday, October 18, 2009

சிரிப்பொலி தொலைக்காட்சியின் குசும்பு

சிரிப்பொலித் தொலைக்காட்சியில் பொதுவாக நகைச்சுவைக் காட்சிகள் போடுவார்கள். அந்தக் குழுமத்தில் நகைச்சுவைக்கான அலைவரிசை இது. சில நேரங்களில் திரைப்படங்களும் போடுவார்கள். பொதுவாக நகைச்சுவைப் படங்களே வரும்.

இன்று தேவர் மகன்

இது காசு படைத்த இரு அண்ணன் தம்பிகளின் குடும்பங்கள் எப்படி வெட்டி கவுரவத்திற்காக  ஊரை இரண்டு படுத்தி நாசமாக போகிறார்கள் என்பதைக் கதையாக படைத்திருப்பார்கள்

Friday, October 16, 2009

விடுமுறை தின சிறப்பு இடுகை 17/18.10.2009

எண்ணைக் குளியல்
அழைத்தான்

வந்தாள்

சொன்னான்

செய்தாள்

அவள் வந்தால்

நிதானமா?

போனால்தான்

வேகமா?

எதற்கோ

அழைத்து

ஏனோ

போகச் சொல்லி...

அவளை என்ன

ராகுல் டிராவிட் என்று

நினைத்துக் கொண்டார்களா?

=====================================================================

சிறப்புப் படையல்

இது எத்தனையோ யுகங்கள் தாண்டி நடக்கும்வகையிலான கதை. அதனால் கொஞ்சம் கற்பனைக் குதிரையில் ஏறி இந்தக் கதையைப் படித்தல் நலமாக அமையும்.

அந்த யுகத்தில் நமது கதைக்கு இரண்டு நாடுகள் தேவைப் படுகின்றன. ஒரு நாட்டினை ஜி தேசம் எனவும், மற்றதை ஏதேசம் எனவும் அழைப்போம்.

தொழில்நுட்பங்கள் மிகக் கடுமையாக வளர்ந்துவிட்டிருந்த காலம் அது. மிக நவீன ஆயுதங்கள் போர்களத்தில் பயன்படுத்தப் பட்டுவந்தன. மனித உடலிளேயே  ஆயுதங்களை இயக்கும் மென்பொருட்களை இனைத்திருந்தனர்.   அதற்கான தனி தொழிற்நுட்பப் பிரிவு ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டுவந்திருந்தது.

ஏதேசத்தின் தலைவன் திருவாளர் எம்.  பலபல போர்களை ஜிதேசத்தின் மீது பல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். இதனால் மனம் வெறுத்துப் போன ஜிதேசத்தவர்களின் உயர்மட்டக்குழுவினர் அதைப் பற்றிய ஆலோசனைகளை செய்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே ஜிதேசத்தவர்கள்  ஏதேசத்தவர்களை ஏமாற்றி அழியாவண்ணம் ஒருமென்பொருளை தங்கள் உடலில் பொறுத்தியிருந்தனர். இப்போது திருவாளர்.எம் மை எப்படி அழிப்பது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டபோது அவரது உடலில் இருந்த ஆண்டி-வைரஸ் பற்றிய தகவல்கள் அம்பலமானது . அவரது உடலில் இருந்த ஜீன்கள், புரதங்கள், அமினோ அமிலங்கள் போன்றவை மிகக் கடுமையாக ஆராயப் பட்டன. அந்த ஆண்டி வைரஸை அழிக்க வேண்டுமானால் அவர்மீது தாக்குதல் நடத்துபவரின் உடலில் Y குரோமோம் இருக்கவே கூடாது என்றவகையில்

Sunday, October 11, 2009

யார் கை மாறினாலும் ஜக்குபாய் ஜக்குபாய்தான்

ஏற்கனவே ரஜினிக்காக ஜக்குபாய் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பூஜை போட்ட கே.எஸ்.ரவிக்குமார் அதே பெயரில் சரத் குமாரைவைத்து, அவருக்காக இயக்கும் படமாக ஜக்குபாய் வர இருக்கிறது. ரஜினிக்கு பூஜை போட்ட கதைதான் இதுவா. அதே கதைதான் என்றாலும் திரைக்கதை அதேதானா, என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை.

காதல் வானிலே

உன் பெயர்

Tuesday, October 6, 2009

குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

சக மாணவி மூக்கில் ரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்தால் என்ன தோன்றும்? இருந்தாலும் மாணவர்கள் எழுப்பிக் கொண்டே இருந்தனர் .

Sunday, September 27, 2009

ரசிகன் 27.9.09

ரசிகர் மன்றம் ஏன்? யார் நடத்துகிறார்கள் ?

வளரிளம் வாலிபர்கள்தான் ரசிகர் மன்றத்தின் தூணாக விளங்குகிறார்கள். அவர்கள் ஏன் ரசிகர் மன்றத்தில் சேருகிறார்கள் என்று யோசித்து இருக்கிறீர்களா?

உண்மையில் அவர்கள் ஏதாவது சாதிக்கத் துடிக்கும் சிங்கங்ளின் சங்கமமாகவே இருக்கும்.

தமிழகத்தின் ஆரம்ப கட்ட ரசிகர்மன்றங்களை நோக்கிப் பார்த்தாலே தெரியும். ஒரு அமைப்பு தேவைப் படுபவர்கள், அந்த அமைப்பின் மூலம் பெயர் வாங்க நினைப்பவர்கள் நாடும் இடமாகவே ரசிகர்மன்றம் இருக்கிறது. ஓரளவு படிப்பும் வேலையும் இருப்பவர்கள் தங்கள் வேலை பார்க்கும் இடத்தில் சங்கம் மூலமாகவோ அமைப்பு மூலமாகவோ ஏதாவது செய்கிறார்கள்.

விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் 27.9.09

புதுமை.., புதுமை.., புதுமை...,


மணலுக்குள் வீரர்கள் புதைந்து ஒளிந்திருந்து தாக்குவது தமிழுக்க்கு புதியது

ஒளிந்திருக்கும் வீரர்கள் சுவாசிக்க சிறுகுழல்கள் பயன்படுத்துவது மிகவும் புதியது

இசைக்கலவைகளும் கோர்வையும் என்றும் புதியது

நல்லத கண்டா நமக்குப் பொறுக்காதே வசனம் என்றும் இளமையானது.

இசைக்கருவிகள் வைக்கும் இடமும் வாசிக்கும் முறையும் எப்போதுமே புதுமையானது.


..........................................................................

அநேகமாக நம் நண்பர்கள் இந்திப் படங்களை பார்க்க ஆரம்பித்தது இந்தப் படத்திற்கு பின்னராகத்தான் இருக்க வேண்டும்.

மேலே பார்த்த பாடல்போன்ற காட்சி அமைப்புதான். சில ஆண்டுகள் கழித்துவந்த படம். வில்லன் கூடாரத்தில் இசைவிருந்து. வார்த்தைகளில் பெரிய அளவில் மாறுதல்களுடன்..,
என்ன இருந்தாலும் தமிழ் முதலிடம்தானே..,


..........................................................................

சிவாஜி கணேசன் அவர்களின் பல படங்களின் காட்சிகளின் தொகுப்பு இது
கூடவே சில பெரிய மனிதர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்



..........................................................................

கிரிக்கெட் பார்த்திருப்ப்பீர்கள். அதில் சில சுவாரசியமான ஆட்டமிழத்தல்கள்



.........................................................................

காந்தியை ஏன் கைது செய்யக் கூடாது?

Tuesday, September 22, 2009

ஒரிஜினல் காமன் மேன்

காமன் மேன் யாரு எப்படி இருக்க வேண்டும் என்று எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.பதிவுகளைப் படிக்கும்போது நானும் கூட பாமரத்தன்மையுடன் கூடிய நடிகர் யார்? என்று யோசித்துப்பார்த்தேன்.

அப்போது எழுந்த சந்தேகம் பாமர மனிதன் தான் காமன் மேனா? கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை சராசரி மனிதன் தான் காமன் மேன் என்பவனா? அப்போது அவரேஜ் மேன் என்பவன் யார்? காமன் மேன் தான் அவரேஜ் மேனா... இல்லை ஆவரெஜ் மேன் தான் காமன் மேனா? காமன் மேன் அபவ் ஆவரேஜ். இல்லை பிலே ஆவரேஜ்.?

Monday, September 21, 2009

விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் 21.9.09

பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு தங்களின் இன்றைய பொழுதினை பக்தியில் களிக்கும் நண்பர்களுக்கு இன்றைய பொழுது போதாமல் இருக்கும்.

ஆனால் இன்று வெறும் விடுமுறை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கான சிறப்பு இடுகை. முழுக்க முழுக்க பொழுது போக்க மட்டுமே...

Saturday, September 19, 2009

மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி 19.9.09

ஆத்தா வையும், சந்தைக்குப் போகணும் காசு குடு
என்று பதினாறு வயதினிலே கமல் சொல்லுவது சுமித்ரா சொல்லிக் கொண்டிருந்தாள். ஏன் எதற்கு? என்று கேட்பவர்கள் sweet sixteen பகுதியைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

நாளைக்கு நான் தான் கேஸ் பிரசண்ட் பண்ண போறேன். சீஃப் கிளாஸ். நான் போய் ப்ரிப்பேர் பண்ணனும். சுமித்ரா புலம்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் பேசிய பிறகு சொல்வதைக் கவனிக்க ஆரம்பித்தாலும் அவளுக்கு மறுநாள் புறநோயாளிகள் பகுதியில் துறைத்தலைவரின் முன்னிலையில் பேசப் போகும் நிகழ்ச்சியே அவள் மனதில் ஆக்கிரமித்திருந்தது.

Tuesday, September 15, 2009

மிட்நைட் மசாலா

நள்ளிரவில் இனிமேல் ஆபாச நிகழ்ச்சிகள் ஒலி,ஒளிபரப்பப் படலாம் என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

சிலரெல்லாம் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தொலைக்காட்சிகளெல்லாம் இரவில் மட்டும் தான் இயங்கும். பகலில் ஒளிபரப்பு இருக்காது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஆபாசம் இல்லை என்றுதானே தனியாக ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதற்காக நமது சில் யோசனைகள்:-

Monday, September 14, 2009

அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09




















இந்த ஓவியங்கள் அறிஞர் அண்ணா தன் கைப்பட வரைந்தவை. இது தாய்தளமான இந்தத் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவை.படங்கள் முழுக்க முழுக்க அவர்களுக்கே சொந்தமானவை. அண்ணாவின் படைப்புக்களை பலரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளேன். அறிஞர் அண்ணாவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த ஆவணங்கள் தகவல்கள் ஏதும் இருந்தால் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள அந்தத் தளத்தை ஒரு சுற்றுச் சுற்றிவாருங்கள்

Sunday, September 13, 2009

தேவதையின் கடைக்கண் பார்வை என் மீதும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA3fK-fCPW4ISY-suqIyxs5fueekv_AypRFqrhWhVnQ-XpvoceSISPYiUXfBaeQDNU1Rmn-2ffx8VR0lvr38vEZsfMDTHC52APe2N0R5qAbYXZ2bdEqDBS9pcRtZx2IPDL8wUwy_6t-K4/s400/angel-59.pngஇந்த பதிவை எழுத அழைத்த அருமைத் தலைவர் சிங்கக் குட்டிக்கு நன்றி!!

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?

Saturday, September 12, 2009

சமீபத்திய கேள்விகளுக்கு பதில்கள் 12.9.09

அண்ணா 11.9.09இடுகைக்கான பதில்கள்

1. ஒரு முதலமைச்சர் (சம்பவம் நடக்கும்போது அல்ல) ஒரு நாடகத்தில் மூன்று வேடங்களில் நடித்து இயக்கினார். அவர் யார்? அந்த நாடகம் எது? அந்த நாடகத்தை எழுதியவர் யார்?

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails