Thursday, May 5, 2011

தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள் (இருபத்தைந்தாம் பாகம்)


சுமித்ராவின் ஊருக்குள் நுழையும்போது எங்களுக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. பெண் விஷயம் அதுவும் ஆள் கடத்தல்,  அரிவாள் கல்யாணம் என்றெல்லாம் கொஞ்சம் குடல் நடுங்கித்தான் போய் இருந்தது,  இருந்தாலும் சுமன் உடன் வந்ததால் எங்களுக்குப் பயம் இல்லாமல் ஊருக்குள் நுழைந்தோம்.

வழியிலே சுமத்ராவின் தந்தையை பார்த்தோம்.  தீஃபக் குமாரை மீட்பதற்காக எங்களுடன் வந்த தீஃபக்கின் நண்பர்கள் ஆடையுடன் சிறுநீர் கழித்து விடுவதைப் போல நடுநடுங்கி அமர்ந்திருந்தனர். சச்சின் தான் எதைப் பற்றியும் கவலைப் படாமல்

அன்கிள்,  சுமன் வீட்டுக்கு வந்தோம். உங்க தோட்டமும் இங்கதான் இருக்குன்னு சொன்னாங்க, அதுதான் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போலாம்னு வந்தோம்.

ஒன்னுமே நடக்காதுபோல சுமன் கூறியது அங்கிருந்த மற்றவர்களுக்கு கிளியைக் கொடுத்தது.

அவரும் மாணவர்களை வரவேற்றுப் பேசி இள்நீர் எல்லாம் போட்டுக் கொடுத்து உபசரித்தார்.

காணாமல் போன தீபக்கைப் பற்றி விசாரிக்குமாறு அவன் நண்பன்கள் கேட்டபோதும் அவனைப் பற்றி நேரடியாக விசாரிக்க தைரியம் இல்லாமல் இருந்தனர்.

அவரிடம் இருந்து விடை பெறும்நேரம் வந்த போது அவரும் தனது அறிவிப்பினை வெளியிட்டார்.   சுமித்ராவிற்கு தேர்வுகள் முடிந்த பிரகு திருமணம் செய்வதாக இருக்கிறோம்.


மாப்பிள்ளை.., இழுத்தோம்.

ம் அதெல்லாம் பார்த்து பலகாலம் ஆச்சுப்பா....,  இவ படிப்ப முடிச்ச உடனே கல்யாணம் செய்ய வேண்டியதுதான்.   உங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கும்ப்பா..  அவர்தங்கச்சி கூட உங்க கல்லூரில கொஞ்ச நாள் படிச்சா.., அப்புறம் அவங்க ஊர் பக்கமே இடம் மாற்றம் வாங்கிட்டு போய்ட்டா........


எங்களுக்கு ஒன்றும் நினைவில் இல்லை. (எங்களைப் போலவே நீங்களும் 2, 3, 4 ம் பாகங்களை படித்தால் நினைவிற்கு வரும்).

அப்போதும் கூட தீபக்கைப் பற்றி விசாரிக்க எங்களுக்கு தைரியம் வரவில்லை.

எல்லோரும் கிளம்பிய பின்னர் டேஞ்சர் டயபாலிக் அவரை அணுகி அன்கிள் காலேஜில கொஞ்சம் பிரச்சனை.

கேள்விப் பட்டேன்ப்பா..  சுமித்ராட்ட சொல்லியிருக்கறேன். இது அவளது தந்தையார்

முடிஞ்ச வரைக்கும் நீயே சமாளி, முடியலேண்ணா எங்கிட்ட சொல்லு.., அப்புறம் பாரு கதையைன்னு..,

 நீங்களே கதைய முடிச்சிடுவீங்களா..., ஏனோ எங்கள் வாயை விட்டு வார்த்தைகள் வெளிவரவில்லை


அவ எம்பொண்ணுல்ல  எந்த ஒரு பிரச்சனையும் அள்ளி முழுங்கிடுவா., மீசையை முறுக்கிக் கொண்டே அவர் சொன்னார்.

சுமித்ராவின் திமிருக்கு ஆணிவேரே இவர் மீசை முறுக்குவதில் இருக்கிறதா? 




சுமித்ரா ஜடைய சுத்திக்கிட்டே பேசுறது கூட இவர் மீசை முறுக்கிக்கிடே பேசற மாதிரித்தானா?



அப்படி என்றால் தீ*பக் குமார் காணாமல் போனதற்கும் சுமத்ராவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?  திகிலுடன் வெளியேறி விடுதி வந்து சேர்ந்தோம்.


பின்னர் விசாரித்ததில்  தீபக் குமார் அவர் பெயருக்கு ஏற்ப ஒரு தோழியுடன் ஊட்டி சென்று விட்டார் என்பதும் அவரது நண்பர்கள் அலப்பறை விட்டு இருந்ததனர் என்பதும் தெரிந்தது.

=======================================================

பின்னர் பயிற்சிக் காலத்தில் சுமத்ராவிற்கு திருமணம் நடைபெற்றது.  சுமன் சிலநாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டுவந்து மாப்பிள்ளை வீட்டாருக்கு கடும் ஒத்தாசை செய்து கொண்டிருந்தான்.  திருமண நாளன்று ஹ்ருத்திக் ரோஷன் நினைப்பில் லேசான தாடியுடன் திருமண மேடைக்கு எங்களோடு வந்தான்.


அப்போதுதான் சுமத்ராவின் கணவர் அவனைப் பார்த்து அந்தக் கேள்வி கேட்டார். எந்த கேள்வி என்பதை அறிய முதல் பாகத்திற்குச் செல்லுங்கள். அதனால் என்ன நடந்தது என்பதை அறிய அடுத்தடுத்த பாகங்களுக்குச் செல்லுங்கள்.


சுபம்      


கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும்

பதினாறாம் பகுதி sweet sixteen

பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி

பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை

இருபதாம் பகுதி டபுள் மீனிங்

இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள்

இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே

இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா

இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க?




இந்தப் பாடலின் முதல் மூன்று வரிகள் எழுதிய பாடகர் யாரென்று கண்டுபிடியுங்களேன்

6 comments:

  1. கூவின பூங்குயில்...கூவின கோழி

    குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்

    யாவரும் அறிவறியாய்! எமக்கு எளியாய்!

    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

    இவைதான் அதிலுள்ள முதல் நான்கு வரிகள்

    ReplyDelete
  2. //////////இந்தப் பாடலின் முதல் மூன்று வரிகள் எழுதிய பாடகர் யாரென்று கண்டுபிடியுங்களேன்////////////


    தலைவா யார் என்று சொல்லுங்கள் தெரியவில்லை

    ReplyDelete
  3. வாருங்கள் பனித்துளி சங்கர். அவரை கவிஞர் என்றும் சொல்லலாம்.

    அவர் ஒரு முன்னாள் நிதி அமைச்சர் என்பது கூடுதல் தகவல்.

    ReplyDelete
  4. இந்த பொண்ணுங்களே இப்படித்தான் போல... :)


    நல்லாயிருக்கு தல‌

    ReplyDelete
  5. //சிநேகிதன் அக்பர் said...

    இந்த பொண்ணுங்களே இப்படித்தான் போல... :)


    நல்லாயிருக்கு தல‌
    //

    வாங்க தல. இந்தக் கதையின் நாயகி தைரியசாலி தல

    ReplyDelete
  6. முடிஞ்சிடுச்சா? உங்ககிட்டே இருந்து இன்னும் எதிர்பார்த்தேன் ;) ... Superb... அருமையான எழுத்து நடை especially நகைச்சுவை, காலேஜ் கிண்டல் :)

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails