Thursday, April 30, 2009

இறைவா வரிசை கவிதைகள்-இரண்டாம் தொகுதி

பேச்சுக்கும் நாக்கு
சுவைக்கும் நாக்கு
சுவையான பேச்சுக்கு
யார் பொறுப்பு
சொல் இறைவா....


சுரிதார் படைத்த
இறைவா
துப்பட்டாவை
ஏன் படைத்தாய்?

அதை
கழுத்தில் சுற்ற
கற்றுத்தந்தது
ஏன் இறைவா?


தேர்வுகள்
படைத்த இறைவா
முடிவுகள்
ஏன் படைத்தாய்?

வாகனங்கள் படைத்தாய்
இறைவா
கப்பலுக்கு தண்ணீரும்
விமானத்துக்கு ஆகாயமுமாய்
பிரிவினை
படைத்தது ஏன் இறைவா?

6 comments:

  1. ithellam en kitta ketka kudathu solliputen aama

    regards
    iraivan

    ReplyDelete
  2. அருமை.. கலக்குறீங்க..

    டாக்டர் சார்..

    ReplyDelete
  3. நன்றி சேரா பாலா சார்,

    லோகு சார்

    ReplyDelete
  4. நீங்கள் ஒரு டாக்டர்.

    எனக்குத் தெரிந்து டாக்டர்கள் எல்லோருமே பயங்கர பிஸி.

    உங்களுக்கு எப்படி தினமும் இவ்வளவு நேரம் கிடைக்கிறது இரெண்டு பதிவுகள் எழுத?

    ReplyDelete
  5. இதற்கெல்லாம் விடை தெரியவில்லை. ஆனால், இணையத்தையும் வலைப்பதிவுகளையும் படைத்த நோக்கம் புலப்படுகிறது. இது போன்ற சுவாரசியமான சிந்தனைகளைப் படிப்பதற்கே..!

    ReplyDelete
  6. gaveethai nallaa irukku doctor machaan. oosi ethuna maadhiri sullu sullunu kelvi kekkareega. arpudhamaana sirushtigarthaa neenga doctor sir.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails