Friday, September 2, 2016

ஆண்டைகளை அம்பலப் படுத்திய கே.எஸ்.ரவிக்குமார்.

முதலில் இந்தப் படத்தில் ஆண்ட பரம்பரையின் சாதியை சொல்லாமல் விட்டதற்காக கே.எஸ்.ரவிக்குமாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதனால்தான் அந்த ஆண்ட பரம்பரை பற்றி நம்மால் பேச முடிகிறது.

1.நாட்டாமையில் வரும் ஆண்ட பரம்பரை பாராளும் வம்சம், பச்சை தண்ணியில் விளக்கெரியும் என்ற பில்டப் அல்லது மூட நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்

2.நீதி நேர்மை, நியாயம் காப்பதையே தங்கள் வாழ்க்கையின் உன்னத லட்சியமாக கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் வழங்கும் நீதியின் லட்சனத்தை இரண்டு கேஸ்களில் கே.எஸ்.ரவிக்குமார் கிளித்திருப்பார்.

3.எதையும் தீர ஆராயாமல் தனது தம்பி பசுபதிக்கே ஒரு தவறான தீர்ப்பை தந்து விடுவார்.

4.மனோரமாவின் மகன் செய்த தவறுக்கு குடும்பத்துக்கே தண்டனை தருவார்

5.கற்பழித்த பெண்ணை தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை கற்பழித்தவனுக்கே திருமணம் செய்து வைப்பார்கள்.  பின்னரும் அந்த பாவப் பட்ட பெண்ணை ஊரைவிட்டே தள்ளி வைத்து தீர்ப்பு வழங்குவார்கள்.

6.தவிர தவறான தீர்ப்பை தந்து விட்டது தெரிந்ததும் உயிரை விடும்  கவுர தற்கொலை ஆசாமிகள்தான் அந்த நாட்டாமைகள் என்பதை தோலுரித்திருப்பார்.

7.வெளியில் போய் வீடு திரும்பும் கணவனுக்கு பணிவிடை செய்வதே முழுமுதல் கடமையாக வலியுறுத்துவதே நாட்டாமை குடும்பத்தார்க்கு உகந்ததாக காட்டுவார்கள்.

8.சொத்தை பிரிக்கவே பிரிக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

9சொத்தில்லாத தம்பிகள் என்ன செய்வார்கள் என்பதை செந்தில் ( நாட்டமையின் பங்காளி ) பாத்திரம் மூலமாக அழகாக காட்டி இருப்பார்கள்.

10.நாட்டாமையின் பங்காளியின் நடவடிக்கைகளால் மிச்சர் சாப்பிடும் ஒரு குரூப் உருவானதை அழகாக ஆவணப் படுத்தி இருப்பார்.

11.நாட்டாமை தைரியம் தந்தால் பெண்கள் தங்கள் தந்தையையே தூக்கி எரிவார்கள் என்பதை சங்கவி மூலம் ஆவணப் படுத்தி இருப்பார்.

12.தீர்ப்பு ஊருக்காக இருந்தாலும் நேரிடையாக மீற மாட்டார்கள் என்றாலும் தேவைப்படின் மறைமுகமாக மீற தயங்க மாட்டார்கள் என்பதை மனோரமாவுக்கு தண்ணீர் கொடுக்கும் காட்சியில் ஆவணப் படுத்தி இருப்பார்கள்.

13.ஊர் மக்கள் மட்டுமல்ல சொந்த தம்பிகளே அவருக்கு அடிமைதான் என்ற உணர்வில்தான் அந்த பகுதி மக்கள் அனைவரும் உருவாக்கப் பட்டிந்ததையும் ஆவணப் படுத்தி இருப்பார்.

2 comments:

  1. கபாலியை விடாவா இது குப்பை!
    குப்பை மேடு கபாலியை பார்க்கும் இது எவரெஸ்ட்!

    ReplyDelete
  2. டே அநாநி உன் நாடி நரம்பெல்லாம் கபாலியோட அம்சம் ஓடுது போல.., எங்க பார்த்தாலும் வந்து கபாலி கபாலின்னு சொல்லிட்டு சுத்தற

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails