Saturday, May 18, 2013

டோனி! எனக்கு சோடா வேண்டும்



 வியாபார ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் வகிப்பது நம்ம ஐ.பி.எல் தான்.

அதன் வியாபாரத் தன்மையிலெயே சில பல சந்தேகங்கள் இருக்கின்றன்.

1. ஏற்கன்வே சச்சின், டோனி போன்றவர்கள் சந்தையில் பல விளம்பரங்களை கையில் வைத்திருக்கும்போது சில பல சிறுவர்களால் அந்த பொருட்களின் மார்க்கெட் கூடுமா? 

2.மேலே உள்ள சிலபல சீறுடைகளில் சிறு சிறு எழுத்துகளில் எழுதியிருக்கும் பொருட்களுக்கு அப்படி எழுதியதால் வியாபாரம் பெருக வாய்ப்பு இருக்கிறதா?
3.ஐ.பி.எல் போட்டிக்கு பல கோடி கொடுத்து பெப்ஸி என்று பெயர் வைத்திருப்பதால் கோக்கிற்கு ஏதாவது நஷ்டம் இருக்குமா?

4.ஷாரூக் போன்று ஒரு பெரிய பிஸினஸ் உள்ள ஒரு நடிகர் இரண்டுமாதம் கிரிக்கெட்டில் சுற்றுவதால்  ஷாருக் கானுக்கு லாபமா நஷ்டமா?  இதே கேள்வி  ப்ரீதி, ஷில்பா வைக்கூட கேட்கலாம். ஆனால் அவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்பதால் அந்த கேள்வி இல்லை

5.சின்ன அம்பானிகளும் கிரிக்கெட் கிரவுண்டில் தனி ஷோபா போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களே.., அவர்களுக்கு அவ்வளவு நேரம் வெட்டியாக இருக்கிறதா? அல்லது அவர்களுக்கு கிரிக்கெட் கிரவுண்டில் இருப்பதால்தான் லாபம் அதிகமா?

6. பூனே அணி அதிக போட்டிகளில் தோற்றதால் கண்ட லாபத்திற்கும். சென்னை அணி வென்றுகொண்டிருப்பதால் அடையும் லாபத்திற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமா?

7.கங்கூலி போன்ற ஒரு மூத்த முக்கிய வீரரை சும்மா உட்கார வைத்ததற்கு ஏன் கிரிக்கெட் உலகம் பொங்கி எழவில்லை.

8.ரிக்கி பாண்டிங் போன்ற ஒரு மாபெரும் காப்டனுக்கு இந்தியாவில் உள்ள பி தர வீரர் அளவு சம்பளம் கொடுத்து மரியாதை செய்ய என்ன காரணம்? 

9.லட்சுமி கரமான சில நடிகைகள் கிரிக்கெட் முக்கிய நபர்களுக்கு ஏற்கனவே நண்பர்களாக இருக்கிறார்களே.., அவர்களோடு இனிப் பேசிக் கொண்டிருந்தால்கூட சிபிஐ தவறாக நோக்குமா?

10.பெப்சி, கோக் போன்ற பொருட்கள் குக்கிராம பெட்டிக்களில்கூட கிடைக்கும்ப்போது, டோனி விளம்பரப் படுத்தும் கிளப் சோடா மட்டும் ஏன்  டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கூட கிடைப்பதில்லை?

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails