Monday, May 27, 2013

IPL மகாபாரத யுத்த விளக்கம்

 ரோஹித் சர்மா: (மீடியாக்களைப் பார்த்து )உங்களால் அல்லவா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாங்கள் தோற்கடித்தோம்.

மீடியா: உன் ஒருவனால் அவரை தோற்கடிக்க முடியுமா? உங்களுக்கு முன்பே ஆறு பேர் அவர்களை தோற்கடித்து விட்டார்கள். செத்த அடித்துவிட்டு நாங்கள்தான் தோற்கடித்தோம் என்று வீணே மார்த்ட்டுகிறீர்கள்.

  1. பெர்மணண்ட் பிளேயர்களால் மற்றவர்கள் விளையாட வாய்ப்பில்லாமல் பாதி அணியை அவர்களே அழித்து விட்டார்கள்.
  2. ஸ்ரீனிவாசனை வெளியேறச் சொல்லி  சென்னை அணியையே தடை ஆகும் வாய்ப்பை உருவாக்கி விட்டார்கள்.
  3.  லட்சுமிராயுடனான ஃபோட்டோவைப் போட்டு அவரது நண்பர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டனர்.
  4. மும்பை போலீஸ் மும்பை இண்டியன்ஸ்காக மாரல் சப்போர்ட் நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தனர்.
  5. டெண்டுக்கரும் ரிக்கி பாண்டிங்கும் கூடுதலாக இரண்டு வீரர்களை உங்கள் அணியில் விளையாட வழிவகுத்துக் கொடுத்தனர்.
  6. காக்க வேண்டிய நேரங்களில் ப்ராவோவையும் பத்ரிநாத்தையும் அனுப்பி விழுந்த விக்கெட்டுகளின் எண்ணிக்கையை டோனி அதிகரித்து விட்டார்.

இப்படி ஏற்கனவே பல பேரால் தோற்கடிக்கப் பட்ட அணியை தோற்கடித்துவிட்டு நாங்கள்தான் தோற்கடித்தோம் என்று வீணே மார்தட்டுகிறாய். பேர் வாங்கப் பார்க்கிறாய். போப்பா போய் ஒழுங்கா விளையாடி டீம்ல இடம் பிடிக்கற வழியப் பாரு.




No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails