Friday, July 30, 2010

சிநேகிதனே...............ய், சிநேகிதனே............ய்

இது மீள்பதிவு அல்ல மீள்பதிவு அல்ல

இந்த தொடர்பதிவினை நான் பங்கேற்றது போல இருந்தாலும் பங்குவகிக்காதது போன்ற ஒரு எண்ணம் இருப்பதால் சிநேகிதனின் அழைப்பை ஏற்று இந்த தொடர்கண்ணியில் ஒரு கண்ணியை இணைத்து விடுகிறேன்.


-------------------------------------------------------------------------------------------
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

SURESHKUMAR P இது பிளாக்கர் கணக்கில் தோன்றும் பெயர். உண்மைப் பெயரும் அதுதான்.




3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
 
 நான் ஆர்குட்டில் பகிர்ந்து கொண்ட சில நிகழ்வுகளை பதிவுலகில் பகிர்ந்துகொள்ளுமாறு ப்ருனோ சொன்னதால் பதிவுலகில் எழுத ஆரம்பித்தேன். அதற்கு முன் எனக்கு இவ்வளவு பெரிய உலகமே தெரியாது. அவரது சில இடுகைகளை மட்டும் படித்திருந்தேன். அடுத்த சில மாதங்களில் கால்பதித்திருப்பது எவ்வளவு பெரிய கடல் என்பதை உணர முடிந்தது.




4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

கொஞ்சம் நகைச்சுவையாக தலைப்புகள் வைத்திருக்கிறேன். சில நேரங்களில் கவர்ச்சியாகவும்

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு. உள்ளூரில் மட்டும் பாராட்டுகளும் திட்டுக்களும் வாங்கிக் கொண்டிருந்த நான் உலக அளவில் வாங்க ஆரம்பித்தேன்.


6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா

பொழுதுபோக்கு என்று சொல்ல முடியாது. பொழுதுபோக்கு, பிரச்சாரம் மற்றும் பழைய நண்பர்களுடன் தொடர்பை புதுப்பிக்க புதிய நண்பர்களுடனான பயணத்திற்கு என்று சொல்லலாம்.  

பதிவுகள் மூலம் இதுவரை பணம் சம்பாதித்தது இல்லை. இனியும் அந்த எண்ணம் இல்லை.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

கனவுகளே..,

 

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

 


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

எல்லாம் பிரமை

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

புருனோ,  அவர்தான் எழுத அழைத்தார். எனவே பாராட்டியே தீரவேண்டிய கட்டாயம் அவருக்கு.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
விருப்பம் இருக்கிறது,  தொடர்ச்சியாக இரண்டு வலைப்பூக்களையும் படித்து வாருங்கள் தெரிந்து கொள்ளுங்கள்  நிறைய எழுதும் எண்ணம் இருக்கிறது



Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails