Friday, June 24, 2011

900/1200 க்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட்

இன்றைய தேதியில் எம்பிபிஎஸ் சீட்டுக்காக பெற்றோர் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.  (சில பெற்றோர் லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் சீட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வோம்). தமிழ்நாட்டில் கட் ஆஃப் மதிப்பெண் ஒன்று இரண்டு குறைந்தால் கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் சில லட்சங்கள் அதிகம் ஆகிக் கொண்டே இருக்கிறதாம்.

ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர 900 மதிப்பெண் எடுத்தாலே கூடப் போதும். ஆனால் என்ன கீழே கொடுக்கப் பட்டிருப்பதுபோல மதிப்பெண் வாங்கி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

உயிரியல்- 200/200
வேதியியல் 200/200
இயற்பியல் 200/200
கணிதம் 100/200
தமிழ் 100/200
ஆங்கிலம் 100/200

நம்பினால் நம்புங்கள் மேலே உள்ளமாதிரி மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் கண்டிப்பாக உங்களது 900 மதிப்பெண்ணுக்கே எம்.பி.பி.எஸ் சீட் கண்டிப்பாக கிடைக்கும்.

Sunday, June 12, 2011

அசைந்த திரை அஞ்சன விழிகள் - நான் ஒரு வாசகன்


சென்ற பகுதியில் சுங்க அதிகாரி இளையபல்லவனை தனியாக அழைத்து பேசுகிறார் என்ற சந்தேகம் வந்த்தல்லவா? கலிங்கத்தின் ஊழிய்ம் செய்தாலும் பிறப்பால் தமிழனாக இருந்த்தால் அந்த சுங்க அதிகாரி கருண்காரப் பல்லவனுக்கு உதவி செய்வதாக சொல்லுகிறார் ஆசிரியர். (உடனே நமது உள்மனது நம்ப்பிட்ட்டோம் நம்ம்ம்ம்ப்பிட்ட்ட்டோம் என்று உரக்கச் சொல்கிறது)  கருணாகரப் பல்லவனே சில கேள்விகளை கேட்கிறார். முறையான பயணமாக முறைப்படிக் கப்பலில் வந்து அரச முத்திரை மோதிரத்தைக் காட்டியவனை அனுப்பாமல் ஏன் தனியே அழைத்து வந்தீர்கள் என்று கேட்கிறார்.  அதற்கு சுங்க அதிகாரி தங்கள் கொண்டு வரும் பத்திரத்தில் கலிங்க துறைமுகங்களை சோழநாட்டுக்குச் சொந்தமாக்கும் வகையில் எழுதப் பட்டுள்ளதால்  தாங்கள் சிறையில் அடைக்கப் படுவீர்கள் என்றும் பின்னர் கொள்ளப் படுவீர்கள் என்றும் சொல்கிறார்.  பத்திரத்தில் எழுதப் பட்டுள்ளதை சுங்க அதிகாரி சொன்னதைக் கேட்ட்தும் இளைய பல்லவன் அதிர்ச்சி அடைந்த்தாக நாவலாசிரியர் சொல்கிறார். 


ஏற்கனவே நம்ப்பிட்ட்ட்ட்டோம் என்று நமது உள்மனது சொன்ன வார்த்தைகள் இப்போது எதிரொலிக்க ஆரம்பிக்கின்றன.
சோழநாட்டு ஒற்ற்ர்கள் இங்கு அதிக அளவில் உலவுவதாகவும், சோழநாடு கலிங்கத்தின் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் உலாவுவதாகவும் அதனால் சோழநாட்டவர்கள் பலரும் கைது செய்யப் பட்டுவருவதாகவும் சொல்கிறார்.


இந்த நேரத்தில் பாலூர் துறைமுகத்திற்கும், தமிழகத்தின் மற்ற துறைமுகங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை சாண்டில்யன் விளக்குகிறார். ஆங்கில நாவலாசிரியர்கள் பொதுவாக தங்கள் நாவல்களில் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விளக்குவார்கள். 

குறிப்பாக ஒரு பைக் மெக்கானிக் பைக்கை ரிப்பேர் செய்வதாகட்டும் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதாகட்டும் ஒருவரியில் சொல்லாமல் அங்கும் நடக்கும் செயல்கள் நம் கண் முன்பே நடப்பது போல சொல்லுவார்கள்.  ஒவ்வொரு படியாக அதன சாதகபாதகங்கள் மாற்றுவழிகள் எல்லாவற்றையும் அலசுவார்கள். ஒரு நாவல் படிக்கும்போது பல்வேறு செய்திகளைப் பார்த்துப் பழகிய உணர்வினை வாசகனுக்கு ஏற்படுத்துவார்கள். தற்போதைய தமிழ் நாவல் ஆசிரியர்களில் தொழில்நுட்ப ரீதியாக வாசகனுக்கு கற்றல் அனுப்வத்தை கொடுப்பவர்கள் மிக்க் குறைவாக உள்ளனர். 


தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இரவில் நடமாடுவது கூட கண்காணிப்பிற்க்கு உள்ளாக்கப் பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அதுமட்டுமல்ல, அது மட்டுமல்ல என்ற ரீதியில் சிறிது நேரம் பேசி விட்டு சோழ நாட்டு இளவல் அம்மங்கா தேவியின் மகன் ராஜராஜ நரேந்திர செல்வனும் ( கவனிக்க சோழன் என்று சொல்லவில்லை ) கைது செய்யப் பட்டுள்ளதாக சொன்னதும்தான் சென்ற பகுதியின் கடைசியில் சொன்ன வாக்கியத்தை உணர்ச்சி வசப் பட்டு இளையபல்லவன் உச்சரிக்கிறான். (அத்தனை துணிவா கலிங்கத்து பீமனுக்கு)

சென்ற பகுதியிலேயே அதைக் கேட்ட வீர்ர்கள் இளையப்ல்லவனை நோக்கிப் பாய அவர்களை கொண்டுவிடுகிறான். அமளி துமளி கிளம்புகிறது. அராபியர் அங்கியுடன் இளையப்ல்லவன் தப்பிச் செல்கிறான். பின்னர் அந்த அங்கியைத்துறந்து பாலூரின் வீதிகளில் ஓடுகிறான். படிக்கும் நமக்கென்னவோ நாமும் சேர்ந்து ஓடுவதுபோலவே தோன்றுகிறது. அவனை கலிங்கத்து வீர்ர்கள் துற்த்துகிறார்கள்.


ஒரு வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறான். அந்த அறைக்கு ஒரு பெண் வருகிறார்கள் சாண்டில்யன் ரசிகர்களுக்கு உடனே நிமிர்ந்து உங்கார்ந்து கொள்வார்கள். வழங்கமான சாண்டில்யன் டச். ஆமாம் அந்தப் பெண் உடைமாற்ற தொடங்குகிறார். தமிழர் பண்பாட்டைக் காக்கும் வகையில் கண்களை மூடிக்கொண்ட இளைய பல்லவன் திறைச்சீலையைப் பிடிக்க சத்தம் கேட்டு அந்தப் பெண் இளையனைப் பார்க்க இந்தப் பகுதி அப்படியே அடுத்த பகுதிக்கு பயணம் செய்கிறது.


அந்தப் பெண் உடை மாற்றும் அழகை அப்படியே காப்பி பேஸ்ட் பாணியில் டைப் செய்யலாம். திரட்டிகள் நம் தளத்தை தடைசெய்து விட்டால் நாம் என்ன செய்வது என்ற அச்சத்தின் காரணமாக நாம் அதை ஒரே வரியில் முடித்து விட்டோம்.


இந்த பகுதியில் புதிதாக தப்பிப் போய் ஒரு பெண் உடைமாற்றும் மாளிகையில் ஒளிந்து கொள்வது மட்டுமே இணைந்துள்ளது.. மற்ற்படி சென்ற பாகத்தின்விளக்க உரையாக மட்டுமே இந்தப் பகுதி அமைந்துள்ளது..

இந்தப் பகுதியின் நமது சந்தேகங்கள். புதிதாக பெரியதாக் இல்லாவிட்டாலும் கூட இந்த நாவலின் கற்பனைக் கதாபாத்திரங்கள் எவை எவை என்ற எண்ணம் நமக்கு வருகிறது. பொதுவாக சரித்திர கதைகளில் சில கற்பனைக் கதாபாத்திரங்கள் உலவும். அந்த கதாபாத்திரம் இல்லாவிட்டால் அந்தக் கதையே நமக்குப் பிடிக்காமல் போய்விடக்கூடிய அபாயம் பல நாவல்களுக்கு நிகழ்ந்திருக்கிறது.

குறிப்பாக பொன்னியின் செல்வனில் ந்ந்தினி பாத்திரம் கற்பனை என்கிறார்கள்.  ந்ந்தினி இல்லாமல் பொன்னியின் செல்வனில் ஏதாவது கிக் இருந்திடுமா? குறைந்த பட்சம் ந்ந்தினி போன்ற கவர்ச்சி இல்லாவிட்டாலும் ஒரு கிழவியாவது இருந்திருந்தால்தானே பல இடங்கள் நகர்ந்திருக்க முடியும். சுத்தமாக ந்ந்தினியே இல்லையென்றால்......

சரி அதை அங்கேயே விடுங்கள் எனது எண்ணமெல்லாம் இதுவரை நாம் சந்தித்த எந்த எந்த பாத்திரங்கள் கற்பனை எவை உண்மை.  என்பதுத்தான். போகப் போகப் பார்ப்போம்.

Thursday, June 2, 2011

சாண்டில்யனின் கடல்புறா - ஒரு வாசகனின் அனுபவம்

இளைய பல்லவன்

காஞ்சி இருக்க கலிங்கம் குலைந்த களப்போர் என்ற வாக்கியத்தோடு கடல்புறா தொடங்குகிறது. சாண்டில்யன் ஒரு இளமைதுள்ளும் ஒரு எழுத்தாளரின் அடையாளமாக அந்த வரிகள் விளங்குகின்றன்.  காஞ்சியில் சோழமன்னன் குலோத்துங்கள் இருக்கும்போதே அவனது படைகள்  கலிங்க நாட்டை அழித்தது என்று கலிங்கத்து பரணியில் பாடி இருக்கிறார்களாம். அதைத்தான் மேற்கோள் காட்டுகிறார் என்று நினைத்தால் கூடவே இன்னொரு விளக்கமும் கொடுக்கிறார். அதாவது காஞ்சி என்பது பெண்களில் அணியும் ஒரு ஆபரணம். கலிங்கம் என்பது ஆடை. ஆக பெண்ணின் நகை களையாமல் உடைகள் குலைந்த களப் போர்.  என்பதாக அந்த வாக்கியத்தைக் குறிக்கிறார். முதல் வரி படிக்கும்போதே ஜிவ்வென்று இருக்கிறது. அந்தக் காலத்திலேயே இதைப் படித்திருந்தால் நமது அறிவு மேலும் வளர்ந்திருக்குமே என்ற ஏக்கம் வரத்தான் செய்கிறது.


பாலூர் துறைமுகம். பாலூரா துறைமுகம் என்றழைக்கப் படும் இடத்தில் நமது கதை துவங்குகிறது அந்த இடம் கோதாவரி ஆற்றின் முடிவில் இருக்கிறதாம். கோதாவரி ஆற்றீன் துணையாறுகள் கலந்து கடலில் கலப்பதையே புணர்தலுக்கு ஒப்பிடுகிறார் நாவல் ஆசிரியர். சித்திரா பவுர்ணமியின் அதிகாலை வேளையில் கடற்கரையை ஒப்பிட்டு அந்த இடத்தையே நம் கண்முன்னால் கொண்டுவரும் அவர் கிரேக்க, அரேப்பிய சீன் வணிகர்களையும் அவர்தம் தோற்றம்,. ஆடைகள் ஆகியவை பற்றி விளக்குகிறார்.  அதே  நேரத்தில் பேய் அடிமைகள் என்றொரு பதத்தினை அவர் உபயோகப் படுத்துகிறார். அவர்கள் நீக்ரோக்கள் ( எனது ஒரு இடுகையின்போது இந்தப் பதத்தினை நீக்குமாறு நண்பர் ஒருவர் வேண்டுகோள் விடுத்திருந்தார், அப்போது நீக்கிவிட்டேன். இப்போது இதற்கு பதிலாக வேறுபதம்  எனக்கு தெரியாத காரணத்தாலும் நாவலாசிரியர் உபயோகப் படுத்தியதாலும் அப்படியே எழுதியுள்ளேன். ) அவர்களை அரேபியர்கள் சீனர்களுக்கு விற்றதாக புதினத்தில் சொல்லப் பட்டுள்ளது.  ஆந்திர மக்களும் வட நாட்டினரும் கூட வாணிகம் செய்ய இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும். மேலைதேசம், கீழைநாட்டினரும் கலந்து இருந்த இடமாக இருந்தாலும் தமிழ் மக்கள் அங்கு அதிகம் வாழ்ந்ததாலேயே அந்த இடம் பாலூர் என்று அழைக்கப் பட்டதாக கூறியுள்ளார்.

கடல், கரை, மக்கள் , வாணிகம் ஆகியவற்றை விளக்கிவிட்டு நாயகன் அறிமுகம் செய்கிறார்.  ரஜினியின் அறிமுகக் காட்சியை விட விஜய் அறிமுகக் காட்சியை விட, ஏன் பவர் ஸ்டார் டாக்டர் ஸ்ரீனிவாசனின் அறிமுகக் காட்சியை விட இந்த கதை நாயகனின் அறிமுகக் காட்சி அமர்களமாக அமைந்திருக்கிறது.  ஒரு படகில் இருந்து புரவியுடன் நாயகன் இறங்கி வருகிறார். அவர் கால் வைத்த உடனேயே கலிங்கத்துப் போரின் வித்து விதைக்கப் பட்டதாகவும் கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பு அதிகரித்து விட்டதாகவும் சூரியனின் ஒளிக் கதிர்களுக்கே ஒளிவந்ததாகவும் சொல்லுகிறார். நெற்றி, முடி, கன்னம் கன்னத்தழும்பு என வர்ணித்துவிட்டு அவருக்கு வயது 21 என்று சொல்லுகிறார். மக்களே குறித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 21 வயதில் ஒரு ஆண்மகனுக்கு என்னென்ன பொறுப்புகள் இருக்கின்றன என்பது போகப் போக்த் தெரியும்.

அவர் கையில் வைத்திருக்கும் வாளினை விளக்கும்போது அவர் ஒன்று ஏழையில்லை என்று சொல்லி வர்ண்னை செய்கிறார்,.  அவரது வாளின் வர்ணனையே பிரமிப்பாக இருக்கிறது . இந்த வாளின் வர்ணனைகளை ராணாவிற்கு அப்படியே உபயோகப் படுத்திக் கொண்டால் நன்றாகத்தான் இருக்கும்.

அடுத்ததாக அந்த வீரர் சுங்கச் சாவடிக்குள் நுழைகிறார். அந்த சாவடியை மண்டபம் என்றே நமக்கு ஆசிரியர் அறிமுகப் படுத்துகிறார். அங்கு சுங்கப் பணம் வசூலிக்கப் படுவது, சுங்க முத்திரை இடப் படுவது என்பது பற்றியெல்லாம் சொல்லப் படுகின்றன.

ஒரு நாவலில் சொல்ல வேண்டிய இடங்களில் கதைகளோடு இன்னபிற பல செய்திகளும் பதியப் பட வேண்டும் என்பதில் ஆசிரியர் முனைப்புடனேயே இருக்கிறார். கடல்புறா முடிக்கும்போது நாம்  11ம்நூற்றாண்டின் பல செய்திகளையும் நம்மோடு  உள்வாங்கிக் கொண்டிருப்போம் என்றே நம்பலாம்.


நமது நாயகர் வணிகரல்லாத பயணிகளின் பரிசோதனைப் பகுதிக்கு வந்து தன் உடமைகளைப் பரிசோதிக்க கொடுத்துவிட்டு முத்திரை மோதிரத்தைக் காட்டுகிறார். அந்த முத்திரை மோதிரத்தைப் பார்த்த உடன் அந்த அதிகாரி நமது வீரரை தனியே அழைத்துச் செல்லுகிறார். அவ்வாறு அழைத்துச் செல்லும்போது தனது இடத்தில் வேறொரு நபரையும் இறுத்திச் செல்வதையும் நாவலாசிரியர் சொல்லிச் செல்லுகிறார். பதிலி நபர்கள் என்னேரமும் தயாராக இருக்கும் செய்தியையும் ஒவ்வொரு இடத்திலும் மக்களுக்கு சேவை செய்ய தேவையான நபர்கள் எந்நேரமும் இருக்கும் வகையிலும் திடீரென தற்செயல் விடுப்பு எடுத்தால் கூட அந்த இடத்திற்கு வேறொரு நபர் உடனடியாக பணியாற்றும் வகையில் செயல் பாடு இருந்தததையும் நம்மால் உணரமுடிகிறது.

தனியே அழைத்து வந்து மோதிரத்தின் மதிப்பைப் பற்றி கேட்கிறார் அந்த அதிகாரி. நமக்கென்னவோ  அதிலிருந்து பெர்செண்டேஜ் கேட்பார் போல என்று தோன்றியது. அதே எண்ணம்தான் வீரருக்கும் தோன்றியிருக்கும் போல ஆயிரம் பொற்கழஞ்சுகள் என்று மதிப்பைச் சொல்லி அதற்கும் வரிவிதித்தால் கட்டி விடுவதாகச் சொல்லுகிறார்.

அதிகாரி  இப்போது தெளிவாக அந்த மோதிரத்தை, முத்திரை ஒரு சிலரே அணிய முடியும் அதனால் கேட்டதாக சொல்ல அது தனக்குத் தெரியும் என்று வீரர் கூறுகிறார்.  அதுவும் ராஜ வம்சத்தினர் தான் என்று சொல்லி விட்டு தாங்கள் என்று ஒரு இழு இழுக்கிறார்,

கருணாகரப் பல்லவர் என்று பதிலைச் சொல்லுகிறார்.  இளைய பல்லவரா? என்று கேட்டு உறுதி படுத்திக் கொள்கிறா.  பிரமிப்புடன் இருக்கும்போதே இளைய பல்லவர் விடைபெற்றுக் கொள்ள தாங்கள் போகப் போகும் இடம் எது என்று கேட்கிறார் சுங்க அதிகாரி. அதற்கு இவர்  கோடிக்கரை கூளவாணிகன் மாளிகை என்று கூறுகிறார். அபப்டியென்றால் எனது வீட்டில் தங்கி நடு இரவில் செல்லுமாறு சொல்லுகிறார்.  ஏன் இப்போது செல்லவேண்டாம் என்று கேட்கும்போது  அந்த சுங்க அதிகாரி சில விஷயங்களை சொல்ல அந்த கலிங்க பீமனுக்கு அவ்வளவு துணிச்சலா என்று உரக்கச் சொல்லி விடுகிறார். அது கலிங்க சுங்கச் சாவடி ஆகையால அங்கிருக்கும் கலிங்க வீரர்கள் வாளுடம் அவரை நெருங்குகிறார்கள் இப்போது இந்த பகுதி முடிவடைந்து தொடரும் போடப் படுகிறது.


இப்போது நம் மனதில் எழக்கூடிய கேள்விகள். பதில்கள்

1.யார் இந்த இளைய , கருநாகர பல்லவர்.? பொதுவாக கருநாக என்று பெயர் வைத்திருந்தால் சரித்திர கதைகளில் வில்லனாகத்தான் இருப்பார்.

2.அவர் ஏன் கலிங்க துறைமுகத்திற்கு வருகிறார்?  அவர் வந்ததால்தான் இந்தக் கதை இந்த இடத்தில் துவங்கி இருக்கிறது.

3 சுங்க அதிகாரி ஏன் இளைய பல்லவரை ஓரம் கட்டுகிறார்? நடுநிசிவரை வீட்டில் மறைந்திருந்து இரவில் பயணம் செய்யச் சொல்ல காரணம் என்ன? இவரைப் பார்த்தால் கலிங்க தேசத் துரோகி போல் உள்ளது.

4. இளைய பல்லவருக்கு கோபம் வரும் அளவு அப்படி என்ன சொன்னார்? அது சில பாகங்களில் தெரிந்து விடக்கூடியது தான் என்றாலும் ஆவலாகத்தான் இருக்கிறது.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails