Saturday, January 29, 2011

அரவிந்தசாமியும் மணீஷாவும்


அது ஒரு காதலர் தினம்। நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது।। ஒரு வி।ஐ।பி। வருகிறார் என்று ஊரே பரபரப்பாக இருந்தது। எங்களுக்கும் ஒரு பரபரப்பாக இருந்தது। எங்கள் நண்பன் அரவிந்தசாமி, மணிஷாவிடம் காதலைச் சொல்லப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்। அவர்கள் காதலை சொல்லிக் கொள்ளவில்லையே தவிர மற்றபடி காதலர்கள்போல்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்।
அவர்களுக்கு அடிக்கடி பாடங்களில் சந்தேகம் வரும்। அதை சரி செய்ய இவர் இருக்கும் இடத்திற்கு அவரும் அவர் இடத்திற்கு இவரும் வருவார்। ஓரே வகுப்புதான்। ஆனால் செயல்முறை வேறுவேறு இடங்களில்।। அருகில் இருக்கும் எங்களிடம் எல்லாம் சந்தேகம் கேட்க மாட்டார்கள்। இவர்கள் ஒன்றாக படிப்பது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத காரணத்தால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம் என்றே நினைக்கிறேன்। பொதுவாக இது போன்று ஆரம்பிக்கும்போது மற்ற நண்பர்களை வெட்டி விடுவார்கள்।
லஷ்மி காம்ப்ளக்ஸில் என்னமோ வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தான்। அரவிந்தசாமி। । கல்லூரி விடுதியில் மதிய உணவு எடுத்தபின் கிரிக்கட் ஒன்பிச் விளையாடிக் கொண்டிருந்தபோது காந்தி புரத்தில் குண்டு வெடித்ததாக செய்தி வந்தது। இவன் வேற அங்கதானே போயிருக்கிறான்। ஒன்றும் புரியவில்லை। யூனிட்ஸ்க்கு என்ன ஆச்சோ என்று என் ரூம்மேட் வேறு புலம்ப ஆரம்பித்தான்। மனிஷாவும் அவனுக்கும் ஒரே இடத்தில் செயல்முறை வகுப்பு இருப்பதால் அப்படி।
சிறிது நேரம் கழித்தபின் நிஜமாகவே எங்களுக்கு படபடப்பு அதிகம் ஆனது। நாங்கள் சென்று பார்த்து வர வேண்டும் என்றால் எங்கள் சீணியர் மாணவர்கள் அனுமதிக்கவில்லை। (யாரும் வண்டி கடன் கொடுக்கவில்லை)। மாலைப் பொழுது ஆனது। அவர்களைப் பற்றி ஒரு தகவலும் இல்லை। ஆனால் ஊரில் ஆங்காங்கே குண்டு வெடிப்பதாக மட்டும் தகவல் வந்து கொண்டே இருந்தது। இந்த நேரத்தில் அரவிந்தசாமி வீட்டில் இருந்து வேறு பத்திரமாக இருக்கிறீர்களா? என்று போண் வேறு செய்துவிட்டார்கள்। அப்போது செல்போன் கிடையாது।
மிகக் கொடுமையான நேரங்கள் அது। அந்தநேரத்தில் அடுத்த தகவல் வந்தது। மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலேயே குண்டுவெடித்தது। செவிலியர்கள் பலி। மற்றும் படுகாயம்। யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்। உலகப் போர் காலத்தில் கூட மருத்துவமனைக்குள் குண்டு வெடித்து கிடையாதாம்।
நாங்கள் என்ன செய்ய முடியும் அரவிந்தசாமியின் வீட்டிலிருந்து மீண்டும் போன் வந்தால் என்ன சொல்வது। கூப்பிடுகிறோம் என்று சொல்லி வைத்துவிட்டோம்। அதன்பிறகு போண் பிசியாகவே இருந்தது। எல்லா மாணவர்களையும் அவர்கள் வீட்டில் விசாரித்துக் கொண்டிருந்தனர்।। இரவும் வந்துவிட்டது। அப்போது மருத்துவ மனையை விசாரித்து ரெண்டும் இருக்கா என்றும் கேட்டோம்। ஒரு தகவலும் இல்லை।
மருநாள் காலை। கோவையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை। ஆனால் மருத்துவ கல்லூரி படுவேகத்துடன் இயங்கி கொண்டிருந்தது। வேகமாக மருத்துவ மனைக்குச் சென்று காயம் அடைந்தவர்கள் மரணம் அடைந்தவர்கள் என்று எல்லா பகுதிகளையும் சுற்றி சுற்றீ வந்தோம்। மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பெரிய வேலை ஒன்றும் கிடையாது என்றாலும் அன்று பார்க்க வருபவர்களுக்கு கூட நிறைய வேலை இருந்தது।
ஒவ்வொரு முறை சுற்றும் போதும் தப்பித்து விட்டார்கள் என்று மனம் சந்தோஷப் படும்। அடுத்த வினாடியே இப்போது ஏதும் கொண்டுவந்திருப்பார்களோ நாம் சரியாய் பார்க்கவில்லையோ என்று துக்க பட வைக்கும்। உடனே மீண்டும் ஒரு சுற்று। நரக வேதணை என்பது அதுதான்। இப்போது கூட அன்று கண்ட காட்சிகள் குலைநடுங்க வைக்கின்றன। அடுத்த மூன்று நாட்களும் எல்லா வார்டுகளையும் சுத்தோசுத்து என்று சுத்தி ஒருவழியாக நிலமை கட்டுக்குல் வந்தது।
,
இவர்கள் என்ன ஆனார்கள்।? அங்கேதான் விதி।। காதலர் தினத்தை கொண்டாட முதலில் தேர்ந்தெடுத்த இடம்। ஈச்சனாரி பிள்ளையார் கோவில்। அவ்விடம் ஊரின் நுழைவாயிலில் இருக்கிறது। அங்கேயே செய்தி கிடைத்த உடன் அப்படியே அவனது பைக்கில் பொள்ளாச்சிக்கு (சொந்த ஊர்) போய் மணிஷாவையும் ஊருக்கு அனுப்பிவிட்டான்। மறுநாள் அவன் மாணவர் விடுதிக்கு போன் போட்டிருக்கிறான்। நாங்கள் பயிற்சி மருத்துவர்களுடன் இருந்திருக்கிறோம்।எங்களுக்கு மூன்று நாள் கழித்து தெரிந்தது.



எப்படியோ என்னோட ரூம்மேட் யூனிட்ஸ்க்கு ஒன்னும் ஆகல என்று மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.

 ==========================================================
மீள்பதிவுதான், முதலில் வெளியான தேதி முதல் பின்னூட்டத்தில்

Wednesday, January 26, 2011

சிவாஜி கணேசன் { ரகசிய} பேட்டி

இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த போது  இந்த ஒலிச் சித்திரத்தை கேட்க நேரிட்டது.
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/ntcal2011FP.jpg

சில சுவையான தகவல்கள் :
1. ஆண்களுக்கு பெண்களை விட நளினம் அதிகம்
2. இன்றைய படங்களில் நீளமான வசனம் இல்லையே என்று பிள்ளைகள் வருத்தப் படுகிறார்கள்.
3. சக நடிகர்கள் ஒத்து வந்தால் மட்டுமே ஒத்திகை இல்லாமல் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறேன்.
4.தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வது தவறே இல்லை.
5.கொடுத்து வாங்குவதுதான் நல்ல முறை
6. I belong to periyar
7.சிவாஜி கணேசனின் 125வது பட விழாதான் அண்ணா பேசிய கடைசிக் கூட்டம்.

முழுப் பேட்டியையும் கேட்க இந்த இடத்தைச் சுட்டுங்கள்

டிஸ்கி;- இது நிறையப் பேர் கேட்டிருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில்தான் ரகசிய என்ற பெயரை திணிக்க நேர்ந்திருக்கிறது

Monday, January 24, 2011

மகர ஜோதியின் எதிர்காலம்

மகரஜோதி மனிதன் ஏற்றுவதா இல்லை தானே தோன்றுவதா என்பது பற்றி நீதி மன்றத்தின் மூலம் கேள்விகள் எழ ஆரம்பித்துவிட்டன.

இதில் மகரவிளக்கு மனிதன் ஏற்றுவது என்றும் மகரஜோதி தானே தோன்றுவது என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். இதில் இவ்வளவு தூரம் குழப்பம் தேவையே இல்லை என்பதுதான் நம்து கருத்து.


மக்ரஜோதி மனிதன் ஏற்றுவது என்று சொன்னால்மட்டும்  இதனை சாதாரண விளக்காக் பார்க்கும் எண்ணம் வந்துவிடும் என்பது சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மகரஜோதி மனிதன் ஏற்றுவது செயற்கையானது என்றெல்ல்லம் முழுவதும் நிரூபித்தால் கூட  மக்கள் ஆண்டுகொருமுறை இறைவனுக்காக ஏற்றப் படும் புனித தீபத்தைக் கண்டால் மாபெரும் புண்ணியம் என்றுதான் மக்கள் நினைப்பார்கள். இதே போல்தான் இருப்பார்கள். 


மகரஜோதி இறைவனின் வடிவம் இயற்கையின் பிரதி என்றால் சொல்லவே வேண்டாம்.   அப்படியென்றால் அதை எப்படி கண்டறிவது ? அப்படி ஒரு வழி இருந்தா;ல் அந்த வழியிலேயே போய்  இயறகையையே வென்றுவிடலாமே . எப்படியோ  ம்கரஜோதிச் செய்திகள் மக்ரஜோதியை இன்னும் பிரபலமாக்கிக் கொண்டிருக்கின்றன. 


Sunday, January 23, 2011

நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

சுமித்ரா, நக்மா இரண்டு பேரும் காணாமல் போனது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாடா...,,, தலைக்கு வந்தது தலைப் பாகையோடு சென்றது என மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஏறக்குறைய கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன... இந்த சூழலில் எங்கள் தானைத் தலைவர், அன்பு அண்ணன், கடமைதவறா மாவீரன் டயபாலிக் எங்களை அழைத்தார். அவர் வகுப்புத் தலைவர் அல்லவா..., பொறுப்பு பொங்கி வழிந்தது....

என்னடா..,

போயி ரெண்டு பேரெயும் கூட்டிட்டி வாங்கடா..,

ரெண்டில்ல

ரெண்டோடு ரெண்டு நாலு..........


நாங்கூப்டாவல்லாம் வரமாட்டா.......... வேற யாராயவது அனுப்பு,


கடுப்பானார் டயபாலிக். சற்று கோபமாகவே சென்சார் செய்யக்கூட கூச்சப்படும் வகையில் தனது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி டயபாலிக் எங்களுக்கு உத்தரவிட்டார்..
==========================================================


கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம்பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. சுட்டிகளைப் பயன்படுத்திப் படித்துவிடுங்கள்.
=========================================================

முதல்பகுதியில்


எங்களில் முதலில் திருமணம் ஆனது சுமித்ராவிற்குத்தான். இன்னும் பயிற்சிக் காலத்தில் நாங்கள் அனைவரும் இருந்ததால் சுமித்ராவின் திருமணத்திற்கு எல்லோரும் சென்றிருந்தோம். மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.

"அடப்பாவி மணமேடையில்கூட என் வாழ்க்கையில் விளையாடுகிறாயா" என்று சொன்னாள் சுமிதரா.

(ஒரு ஞாபகத்துக்காக) கதை சுபமாகத்தான் முடியும்

=========================================================

வரவர டயபாலிக் ரொம்ப பண்றாண்டா..,, இவளுகல்லாம் வந்தா என்ன? போனால் என்ன? இவளுகப் போயி தேடச் சொல்றாண்டா.. புலம்பிக்கொண்டே வந்தான் சச்சின்.., அறிவைத் தவிர எல்லாம் வளர்ந்திருக்கும். அவ என்னைக்காவது நம்மள மதிச்சிருக்காளா? அவள ஏண்டா நம்ம தேடணும். சச்சினுக்கு நக்மா என்றாலே அலர்ஜி.. அல்ர்ஜி என்றால் சாதாரண அலர்ஜி அல்ல. அனாபைலாகிக்ஸ் என்று சொல்லக் கூடிய அளவு அதி தீவிர அலர்ஜி. கடுப்பின் உச்சத்தில் டயபாலிக்கை கொதறிக்கொண்டே இருந்தான். இத்தனைக்கும் அந்தப் பெண்களின் காதலர்கள் என்ற லேபிளில் ஆள் இருக்கும் போது தன்னை அனுப்புவதில் இன்னும் பெரிய கோபம்.

வாடா.., இன்னொரு முறை லால்பாக் சுத்திப் பார்க்கலாம். சற்று சமாதானப் படுத்திக்கொண்டே லால்பாக் கில் வலம்புரியாக சுற்ற ஆரம்பித்தோம். நண்பன் இங்கிலீஷ் குப்பனும், அஜித்தும் இடம்புரியாகச் சுற்ற ஆரம்பித்தார்கள்.

250 ஏக்கர் பரப்பலவில் பரந்துவிரிந்து கிடக்கும் பெரிய பூங்கா அது. தோட்டங்களாகவே பரவிக்கிடந்தது. அதில் செடிகளிலேயே கடிகாரம் செய்து வைத்திருந்தனர்.

டேய் அங்க பாரு சச்சின் கூவினான். என்னடா ட்ரெஸ் இது ஆம்பிளையா பொம்பளையான்னே தெரியல..............

போடா. இந்த ஊர்ல நெரயாப் பெண்கள் ஜீன்ஸ் போடறாங்க........ வந்த வேளையைப் பாரு..

ஆனா இந்த மாதிரி எந்தப் பொம்பளயும் ஜீன்ஸ் போட மாட்டா. எவ்ளோ பெரிய கூலர்ஸ் போட்டிருக்கா பாரு. நான்கூட வழியில வாங்கலாம்னு சொன்னேன். நீதான் மஞ்சுளா( உலகம் சுற்றும் வாலிபன் நாயகியேதான்) கண்ணாடி மாதிரி இருக்குன்னு சொல்லீட்டே.....

நாங்கள் போகும் வழியில் ஒரு அம்மன் கோவில் இருந்தது. அங்கு உள்ள பெட்டிக்கடையில் 20அல்லது30 ரூபாய் கண்ணாடிகள் குவித்துவைத்திருந்தனர். அதைக் கேட்டு சச்சின் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். நாங்கள்தான் கேவலமாக இருப்பதாகச் சொல்லித்தடுத்துவந்தோம். ஆனால் அதே மாதிரி கண்ணாடி இங்கே இன்னொரு பெண்..

பாதுகாப்பான தொலைவுக்கு சச்சினை அழைத்துவந்துவிட்டு நாங்கள் இருவரும் அந்த நாகரீக மங்கையை நோட்டமிட ஆரம்பித்தோம். ஒரு கையில் ஏதோஒரு சிப்ஸ், இன்னொரு கையில் வேறொரு ஐட்டம்.

டேய் வாக்மேன் பாருடா...

இல்லடா அவ பொண்ணுதான்.., எனக்கு நல்லாத்தெரியுது.

நானும் அதைத்தாண்டா சொல்றேன்..

வாக்மேன் எங்க மாட்டியிருக்கா பாரு...

எங்கே என்று வாய் கேட்டாலும் கண்களுக்கு அந்த இடம் கிடைத்துவிட்டது..

அந்த பெண் அணிந்திருந்த டி-சர்ட்டின் நெஞ்சுப் பகுதியில் வாக்மேனை செருகிக் கொண்டு இரண்டு கைகளிலும் ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு அந்தப் பெண் நடந்துகொண்டிருந்தாள்.. வாக்மேன் கருவி சற்று எடை கூடிய கருவி என்பது அது மாட்டிய இடத்தை கீழே இழுத்ததில் இருந்து எங்களால் உணரமுடிந்தது.

அவள்ந்டையே வேறொரு மாதிரி இருந்தது. அப்போது அந்த அவளின் தோழிப் பெண் வந்து சேர்ந்தால். தோழியைப் பார்த்த உடன் எங்களுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. அந்த நாகரீக வேற்று கிரகவாசி நக்மாதான் என்று.. வேகமாக அவள் அருகில் சென்றோம்.

நக்மா எங்கள் வகுப்பில் இருந்தாலும் கடந்த ஒரு ஆண்டில் அவளை நாங்கள் (நான்) அவ்வளவு அருகில் இருந்து பார்த்ததில்லை. தவிரவும் புடவை கட்டி கோட் போட்டுப் பார்த்த ஜீவராசியை நாகரீகக் கண்கொண்டு பார்த்ததில் எங்களுக்கு அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுவிட்டது. தனது ரசனையும், நக்மாவின் ரசனையும் கூலர் விஷயத்தில் ஒன்றாய் அமைந்தது சச்சினுக்கு மிகுந்த சந்தோஷம். டயபாலிக் எது செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும்டா.. (டயபாலிக்கின் பாத்திரம் வித்தியாசமானது அவர் எது சொன்னாலும் அவரது நண்பர்கள் அவரைத் திட்டுவார்கள். ஆனால் அவர் சொல்வதைத்தான் கேட்பார்கள்)

போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் டயபாலிக்குக்கே

என்ற எண்ணமே டயபாலிக் யின் நண்பர்களுக்கு இருந்தது.

டயபாலிக் யை புகழ்ந்து கொண்டே நக்மாவுடன் கடலை போட ஆரம்பித்தான். சச்சினுக்கு கல்லூரி வாழ்க்கையில் அதுதான் முதல் கடலை. அதுவே நன்கு விளைந்து கொண்டிருந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நடுவில் வாக்மேனின் கேசட் கூட மாற்றிவிட்டான்.அவள் இரண்டு கையிலும் வைத்திருந்த நொறுக்கு தீனிகளை கைகளை மாற்றாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இவன் பேசிக்கொண்டே இருந்தபோதிலும் காதில் இருந்த இயர்பீஸை கழட்டாமலேயே சச்சினுடன் கடலை போட்டுக் கொண்டுவந்தாள் நக்மா, கூடவே அல்லக் கையும்

பத்தடி தள்ளி நானும் அவர்கள் பின்னாலேயே பேருந்துவுக்கு வந்து சேர்ந்தேன்.

பேருந்தில் சுமித்ராவும் உட்கார்ந்திருந்தாள். இங்கிலீஸ் குப்பனையும் அஜித்தையும் பார்த்தியா? இது நான்



நாங்க ஏன் அவனுகள பார்க்கணும்? வழக்கம் போல் சுமித்ரா உதார்விடத்தொடங்கினாள்

உங்க ரெண்டு பேரையும் தேடிட்டுத்தான் வந்தானுக...

நாங்க என்ன சின்னப் பொண்ணுகளா... தொலஞ்சு போக சுமித்ரா கொஞ்சம் அமைதியாக பதில் சொன்னமாதிரி இருந்தது.

உங்களுக்காகத்தான் வண்டி ஒருமணிநேரம் காத்துக் கிடக்கு. இது இன்னொரு தோழி.

அவர்களைப் பார்ர்கவே இல்லை என்று சொல்லிவிட டயபாலிக் கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்கச் சொன்னான்.

கொஞ்ச நேரத்தில் இங்கிலீஷ் குப்பனும் அஜித்தும் வந்து சேர்ந்தனர்.

கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு வந்துக்கிட்டே இருக்க வந்ததும் கோபத்துடன் அஜித் சொன்னான்.

சுமித்ராவின் தோழி:- நான் அப்பவே சொன்னேன். இவதான்

கூப்ட்டா போகதடி. விவகாரம் புடிச்சவனுக ன்னு சொன்னா..

இங்கிலீஷ் குப்பன்:-உங்களத்தேடி நாங்க வந்தா எங்களுக்கு அல்வா கொடுத்துட்டு சுத்துரியா

சுமித்ரா:-இங்க பாரு நீ எங்கள தேடி வருவேன்னு எங்களுக்கு எப்படித் தெரியும். ஏதோ ரவுசு உடறேன்னு நினைச்சு அப்படிச் சொன்னேன். நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற.. முதல்ல வாய மூடு..

இங்கிலீஷ் குப்பன் பயங்கர கடுப்புடன் அடிங்க்............... என்று சொல்லிக் கொண்டு பாய்ந்தான் . மூடு என்பது அவர்களின் வட்டாரச் சொல்லில் ஒரு கெட்டவார்த்தை என்பது அதன்பின் தான் எங்களுக்குத் தெரிந்தது.

திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான் சுமன்குமார்

=========================================================

தொடரும்

Thursday, January 20, 2011

சூடு 20.1.11.

இப்போதைய பயங்கர சூடான இடுகை
முதலிடத்தில் இருக்கும் இந்த இடுகை   திரு .ராஜன் அவர்களால் எழுதப் பட்டுள்ளது.பகவத் ஆச்சார்யா என்பவர் தனது மனைவியுடன் மற்றும் சில குழந்தைகளையும் இணைத்து வெளியிட்ட குறும்படங்கள் பற்றி எழுதியுள்ளார்.

கலை மற்றும் வெளிப்புறப்படப்பிடிப்புகளைப் ப்ற்றி புகழ்ந்து எழுதியுள்ளார். க்ளைமாக்ஸ்ஸில் கரசேவை பற்றியும் எழுதியுள்ளார்.

============================================================

இரண்டாவது சூடான இடுகை திரு ஜாக்கி சேகருடையது. வழக்கம்போல் புகுந்து விளையாடி இருக்கிறார்.  சபரிமலையில் சம்பவத்தின் துவக்கத்தில் தடியடி நடந்தது என லேசாக பொறுத்திப் ஓட்டுள்ளார்.

ஒரு பிரிண்டர் வழியாக குழந்தை பிறப்பது போல ஒரு கார்ட்டூன் கொடுத்துள்ளார். குழந்தை பிறப்பு என்பது. பிரிண்டரில் பேப்பர் வருவது போல என்பது மிக மேம்போக்கான உதாரணம். குழந்தை பிறப்பு இதைவிட கடுமையானது. பார்ப்பதற்கு மிக சுலபம் போல இருந்தாலும் பிரிண்டரில் பேப்பர் பழுதடைவது போல குழந்தைகளும் கொஞ்சம் ஏமாந்தாலும் சிக்கல்தான்.

பிரசவகாலத் துணை பற்றி எழுதியுள்ளார். உங்களுக்குத் தெரியுமா? தமிழக்த்தில் பிரசவ நேரத்தின்போது துணையாக இருக்க்ப் போகும் பெண்ணுக்கு பிரசவத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்

=====================================================================

சி.பி.செந்தில்குமாரின் இடுகை இது. கவுண்டர் அட்டாக்கில் இருக்கும் இடுகை.  ஆன்லைனில் 10 பேருக்கும் குறைவாக இருந்தால் புது இடுகை போடுகிறாராம். நாங்களெல்லாம் ஒருநாளைக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை பத்துக்கும் கீழே இருந்தால்தான் புது இடுகை போடுவோம்.

==============================================================

மின்னல் அவர்களின் சூடான இடுகை ஒரு பத்திரிக்கைச் செய்தி அடிப்படையிலானது.

======================================================


=========================================================

பரிசல்காரன் அவர்களின் இடுகையும் சூடாகவே இருந்தது. இவரும் கூட சபரிம்லை விபத்து பற்றி அவர் பார்த்த நபரின் கருத்தை எழுதி யுள்ளார்.  அலைபேசிக்கு பதிலாக மின்னஞ்சல் உபயோகப் படுத்தப் போவதாக ஒரு நண்பர் தெரிவித்ததாக தெரிவித்து இருக்கிறார்.  அந்த 19 ரூபாய் மேட்டர். பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று?

=============================================================

காவலன் பாதுகாப்பாக இருக்க விஜயின் சிரமங்களை வருண் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள இடுகையும் சூடான இருக்கிறது.

=============================================================

ஆளுக்கொரு கேள்வி   கேள்வி இருக்கும் ஜீவன்சிவத்தின் கேள்விகளும் இளமையானவை. எப்போதும்  ஆளும்கட்சியைப் பார்த்தும், எதிர்க்கட்சியை பார்த்தும் எப்போதும் ஆளும்கட்சியைப் பார்த்தும் கேட்கக்கூடிய கேள்விகள். நாளை சிலம்பரசன் முதல்வரானாலும் இந்த கேள்விகளின் அடிப்படையில் சும்மா கிளீகிளி என்று கிளிக்கலாம்.

=================================================================


பச்ச புள்ள நிலாவ புடிக்க ஆசப்பட்ட மாதிரி......ன்னு தொடங்கி ஒரு வசனம் கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும். அப்படி ஆசைப்பட்ட ஒரு பச்சைக்குழந்தையின் கதையை விசா எழுதி இருக்கிறார்.


====================================================





நட்டநடுராத்திரியில், வெளிநாட்டு பாணியில்......,

கல்லூரியில் நண்பன் வீட்டில் goat cutting. எங்களை அழைத்திருந்தான். பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் போகும் வழியில் வீடு. {ஆனால் அதை ஊர் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவனே அதை தோட்டம் என்றுதான் கூறுவான்}.


அவனது குடும்பம் பற்றி முதலில் கூறிவிடுகிறேன். அவனது தந்தை திருப்பூரில் ஏற்றுமதியாளர். தவிர நிறைய விவசாயம். சுருக்கமாகச் சொன்னால் சூரிய வம்சம், நாட்டாமை சரத் குமார் வீடு மாதிரி. அவனது அண்ணன் சென்னையில் பொறியியல் துறையில் ஏதோ வேலை. அவனது அக்கா குழந்தைக்கு காது குத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில்தான் goat cutting. [கிடா வெட்டும் நிகழ்ச்சிதான்]



வசதி படைத்த குடும்பம் அல்லவா.. அதில் உணவுகள் எல்லாம் சிறப்பாக ஏற்ப்பாடு செய்திருந்தினர். வீட்டின் கீழ்ப்பகுதியில் தலைவாழை இலைபோட்டு சோறு, கூட்டு, குழம்பு, ரசம், பொறியல், வடை, ஆடு, முட்டை, கோழி என்று அமர்க்களப் படுத்தி இருந்தார்கள். எங்களுக்கு மாடியை ஒதுக்கிக் கொடுத்திருந்தனர்.

நாங்கள் ஏதோ அமெரிக்காவில் இருந்து வந்தது போல் நினைத்திருந்தார்களோ என்னவோ.. எங்களுக்கு உணவே வேறா மாதிரி இருந்தது. பஃபே முறை. நான், ஃபிரைடு ரைஸ்.. இன்னபிற பெயர் தெரியாத உணவுவகைகள் [மட்டுமே].


பார்த்த உடனேயே எங்களுக்கு ஒரே ஏமாற்றம் . இருந்தாலும் சமாளித்துக் கொண்டோம். இருந்தாலும் தட்டைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு இடமாக சாப்பாடு வாங்கத்தொடங்கினோம்.

டேய்.. மணி... நண்பனின் பால்ய சிநேகிதர்கள் கூட்டம் வர ஆரம்பித்தது. அதே நேரத்தில் கீழே உள்ள சொந்தங்களுக்கும் சப்பாத்தி, காளான், கறி வகையறாக்கள் சிறப்பு உணவாக வழங்கப் படுவது தெரிந்து அவர்களும் வர ஆரம்பித்தனர். சின்ன அறையில் வெளியே வராமல் உள்ளேயே நின்று கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர். அந்த அறையின் மொத்த கொள்ளளவினையும் தாண்டி............ வெளியே செல்லவும் வழியின்றி.... மறுபடியும் வாங்க படியேறி வரவேண்டுமே...... ஒரே நேரத்தில் எல்லாப் பொருட்களையும் தட்டில் வாங்கிக் குவித்து மொத்தமாய் பிசைந்து சாப்பிட...


எப்படியோ ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தோம். கீழே வந்தால் எல்லோரும் தலைவாழை இலைபோட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

எங்கு பஃபே முறையில் சாப்பிட்டாலும் அந்தக் காட்சிதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது.

Monday, January 17, 2011

தமிழ்மண விருதுகள்- ஒரு (மாதிரியான) பார்வை

தமிழ்மணத்தில்  சென்றவருட சிறந்த பதிவுகள் விருதுகள் அறிவித்துவிட்டார்கள். முதலில் விருது வழங்கியவர்களுக்கு நன்றிகளையும் விருதுகளைப் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வோம்.


பொதுவாக எந்த ஒரு கதை அல்லது படைப்புகளைப் பொறுத்த மட்டிலான போட்டி என்றால் அது நடுவர்களின் மனதிற்கு அல்லது அவர்களின் மனதில் உள்ள த்ராசின் கணிக்கப் பட்ட அளவிலானதுதான். எனவே இது போன்ற போட்டிகளில்  வெற்றிபெறாதவர்கள் கவலைப் பட வேண்டியது இல்லை என்பதே நமது கருத்து. அதை ஏற்கனவே வெறொரு இடுகையில் கூறியுள்ளேன்.


ஆனால் தமிழ்மணம் விருதுகள் என்பது முற்றிலும் வேறுபட்டது. அது ஓட்டுக்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவது. வாசகர்கள் ஆகட்டும்.  பதிவர்கள் ஆகட்டும் . அனைவருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் ஒரே ஒரு ஓட்டுத்தான் உண்டு.  அனைத்து மனிதர்களுக்கும் ஒரு நல்ல எண்ணம் மற்றும் பலவீனம் ஒன்று உண்டு. அதாவது தனது நண்பர்கள் முன்னிலை பெறவேண்டும்.  என்றே எண்ணுவார்கள். எனவே தங்கள் ஓட்டுக்களை பெறும்பாலும் ந்ந்ந்ந்ந்ந்ந்ந்நெருங்கிய நண்பர்களுக்கு அளிக்கவே விரும்புவார்கள். அவை போக மிச்சம் மீதி ஓட்டுக்கள் இருந்தால் அதை மற்ற நபர்களுக்கு பிரித்துக் கொடுப்பார்கள். எனவே  பெரும்பாலும் அதிக நண்பர்கள் உள்ளவர்கள் மற்றும் அதிக நண்பர்களிடம் நல்ல பெயர் எடுத்தவர்கள் ஆகியோரே இந்த வாக்கெடுப்பில் வெற்றி பெறமுடியும்.  அதிலும் அதிக நண்பர்கள் கணீனி வைத்திருக்கிறார்கள் என்பதையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இதில் வெற்றிபெற்ற இடுகைகளில் மூன்றாம் கட்ட நடுவர்கள் தேர்ந்தெடுத்தால்கூட முதல் இரண்டு கட்டங்களில் வெல்வது என்பது ஓட்டுக்களின் அடிப்படையில்தான்.

எனவே தமிழ்மணத்தில் சிறந்த இடுகைகளில் எழுதியும் முதல் இரண்டு கட்டங்களை தாண்டவில்லை என்று நினைத்தால் மற்றும் அடுத்த ஆண்டில் இந்த விருதுகளைப் பெறவேண்டும் என்று நினைத்தால் வாக்குரிமை படைத்த அனைவரையும் நேரில் சந்தித்து  அவர்களின் அன்பினைப் பெற்று அவர்களது வாக்கினையும் பெற முயற்சி செய்தால் கண்டிப்பாக அடுத்த ஆண்டு விருதுகளையும் பெற்றுவிடமுடியும்.  அதே ஓட்டுரிமை பெற்ற அதிக நண்பர்கள் இருந்தால் உங்கள் பதிவு  அடிக்கடி பரிந்துரைக்கப் பட்ட பதிவாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கும் ஏழு ஓட்டுக்கள் இருந்தாலே போதுமானது. பின்னர் என்ன புகுந்து விளையாடுங்கள்.

என்ன செய்தார் எம்.ஜி.ஆர்...?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவ்ர்களின் 95வது பிறந்த தினம் இன்று 17.1.2011. அவரிடமிருக்கும் கிடைக்கும் அரிய பல நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ள வேண்டிக்கொண்டு அவரை நினைவு கூறுவோம்.
........................................................................................................................

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள்.


அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…

1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்.ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி.. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.



திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!


லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.


சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.


லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?


துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!


ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!


சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!


சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!


குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!


சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.


திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.


சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.


திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.


சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!


திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.


ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு.
‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’
னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!


சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.


ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.


சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரைஇருக்கணுமே!


குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.


சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!


கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!


திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி!
‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’
ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்

எனக்கு நண்பர் ஒருவர் ஈ-மெயிலில் அனுப்பியிருந்தார்.

...................................................
ஒரு திரைப் படத்தில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களுக்குத் தேவையான கருத்துக்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி படத்தில் திணித்து அந்த பாடல்களை மக்கள் முணுக்க வைத்தவர். எம்.ஜி.ஆர் அவர்கள்.


இன்று சொல்லுகிறார்களே.." மக்கள் விரும்புகிறார்கள் அதனால்தான் இதுபோன்ற காட்சிகளை வைக்கிறோம்." எம்.ஜி.ஆர் படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்களுக்கு யார் பொறுப்பு? நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் திரையலகத்தில் இருந்த காலத்தில் இருந்த எத்தனையோ நடிகர்களுக்கு எழுதாத பாடல்களை இவருக்கு மட்டும் ஏன் கவிஞர்கள் எழுதினார்கள்?

  • இன்னும் சொல்லப் போனால் சிவாஜி அவர்களின் படத்தைத்தான் ரசித்துப் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தை பொழுது போக்கினை எதிர்பார்த்து வரும் ரசிகர்களே அதிகம் பார்ப்பார்கள். அப்படி பொழுது போக்கிற்கு வரும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல நினைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த ஒரு காரணத்திற்காகவே எவ்வளவு வேண்டுமானால் அவரை புகழ்ந்து கொண்டே இருக்கலாம்.


அவர் மிகக் குறைவாக வசனம் பேசும் நடிகராக வெறும் பொழுதுபோக்கு நாயகராக அவரை பார்க்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்காக ஒரு செய்தி. அவரே தயாரித்து அவ்ரே இயக்கிய படம் நாடோடி மன்னன். நான் அவன் இல்லை. என்று கூறிவிட்டு எம்.என். ராஜம் அவர்களிடம் பத்து நிமிடம் விடாமல் வசனம் பேசுவார். அதில் நவீன தொழில்நுட்பங்கள். காமிராவை கண்டபடி நகர்த்திக் கொண்டும் அவரும் கண்டபடி நடந்து கொண்டும் ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். நாற்பது வருடங்கள் கழித்துதான் அந்த உத்திகளை மற்றவர்கள் பரவலாக உபயோகப் படுத்தினார்கள்.

அதே போல் அவரது நூறாவது படம்கூட அவரது விருப்பக்கதைதான் அமைந்தது.



தாயைக் காப்பாற்ற வேண்டும். குழந்தைகளை நேசிக்க வேண்டும். தன்னையே நினைத்து கனவுகாணும் பெண்கள் தன் மனைவியாக இல்லாத சூழலில் தங்கையாகவே நினைக்க வேண்டும் முதலான கருத்துக்களை தொடர்ந்து திணித்து வந்து கொண்டிருந்தவர் அவர்.


எந்த சூழலிலும் படங்களில் மது குடிப்பதையோ புகைபிடிப்பதையோ செய்யாதவர். கூண்டுக்கிளி படத்தில் கூட எரியும் சிகரெட்டை கையில் வைத்திருந்து தூக்கியெரிந்து விடுவார். ஒளி விளக்கில் மது அருந்த நினைத்து பாட்டிலை எடுத்தவுடன் மனசாட்சி வந்து அவரை கண்ட படி திட்டுமாறு பாட்டு அமைத்திருப்பார்கள். இன்று சட்டம்போட்டு செய்யும் வேளையில் மனக் கட்டுப்பாட்டோடு நடத்திக் காட்டியவர் அவர்.

அவர் வில்லனாக நடித்த நினைத்ததை முடிப்பவனில் அவருக்குமுன்னால் சிகரெட் பிடிப்பவர்களை உடனே அடித்துவிடும் குணாதிசயம் படைத்தவராக வருவார். அந்தப் படம் வெளிவந்த காலத்தில்தான் நமது பகுதிகளில் வளர்ந்துவந்த நாகரிகம் அது. அதனை வெளிப்படையாக எதிர்க்கும்வண்ணம் அந்தப்பாத்திரப்படைப்பு அமைந்திருந்தது.


அவரது 95வது பிறந்த தினம் இன்று 17.1.2011. அவரிடமிருக்கும் கிடைக்கும் அரிய பல நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ள வேண்டிக்கொண்டு அவரை நினைவு கூறுவோம்.

Sunday, January 16, 2011

சின்னப் பசங்களுக்கு எச்சரிக்கை. மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

புத்தாண்டு கொண்டாட்டங்களில் முக்கியமான ஒன்று ஏதாவது ஓர் உறுதிமொழி எடுத்துக் கொள்வது.


சில உறுதிமொழிகள் உங்கள் உதவிக்கு:-

  • 1. காலையில் எழுந்ததும் கண்விழிப்பேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் தினமும் பல்விலக்குவேன் என்றும் குளிப்பேன் என்றும் உறுதி எடுப்பது கொஞ்சம் ஆபத்தானது.
  • 2.காலையில் காஃபி போடும் வேளையை இனிமேல் மனைவியிடம் கொடுத்துவிடுவேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் சோறு கிடைக்காமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.
  • 3. அடிக்கடி முகம் கழுவுவேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் மேக்கப் போடுவேன் என்று எடுத்து விடாதீர்கள் செலவு தாங்காது.
  • 4. சரியான நேரத்தில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு விடுவேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று உறுதிமொழி எடுப்பது ஆபத்தானது. கிட்டப் போனால் முட்டம் பகை என்று பழமொழியே இருக்கிறது. அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல நினைப்பவர்களுக்கு ஒரு வரமாக அமையும்.
  • 5. தினமும் இருசக்கரவாகனத்தில் செல்லலாம் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் உங்களுக்கு லிப்ட் கொடுப்பவர்கள் உங்களையும் வண்டி எடுத்து வரச் சொல்லும் அபாயமும் குறைந்தபட்சம் எரிபொருள் நிரப்பச் சொல்லும் வாய்ப்பும் இருக்கிறது.
  • 6.மது, புகை ஆகியவற்றை நிறுத்துமாறு உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். பத்தாவது முறையாக இருபதாவது முறையாக என்று சாதனை அளவுகளை குறித்துக் கொள்ள முடியும். ஆனால் உங்களை ரஜினிக்கு எதிரானவராக காட்டும் வாய்ப்பு இருக்கிறது.
  • 7.சினிமா பார்க்க மாட்டேன் என்று உறுதி எடுக்கலாம். ஆனால் ஐங்கரன் முதலிய பன்னாட்டு நிறுவனங்கள் நஷ்டமடைய நீங்கள் மறைமுக காரணமாகவும் உலக பொருளாதாரம் வீழ்ச்சிக்கு நீங்கள் பொறுப்பேர்க்க வேண்டி வரலாம்.
  • 8.ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றலாம் என்று முடிவு செய்யலாம். அனைத்து போஸ்டர்களையும் வேறொருவர் ஒட்டிவிட்டு உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கலாம்.
  • 9.ஏதாவது விளையாட்டு வீரனாக மாறி மாடலிங் உலகில் நிறைய சம்பாதிக்கலாம் என உறுதி எடுக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் பிரபுவின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் குறைந்தபட்சம் நாசர், டெல்லி கணேஷ் போன்றவர்களுக்கு போட்டி கொடுக்கமுடியுமா என்று சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
  • 10.கல்லூரி மாணவர்கள் யாரையாவது காதலிக்கலாம் என உறுதி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் கொலை கேசில் மாட்டும் வாய்ப்பு இருப்பதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நலம்.

உறுதிமொழி எடுத்துக் கொள்வது என்பது நமது மன உறுதிக்கும் செயலாற்றும் தன்மைக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். என்வே எடுக்கும் உறுதி மொழி உறுதியாக அமைத்துக் கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ இந்த புத்தாண்டில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..


புத்தாண்டுடன் பொங்கல் கொண்டாடிவிட்டு வீரவிளையாட்டுகளில் ஈடுபாடு உள்ளவர்கள் இங்கே சுட்டுங்கள்.

Wednesday, January 12, 2011

நடிகை கண்ணாம்பாவின் கதாபாத்திரத்தில் நடிகை சோனா

வெகுநாட்களுக்கு பிறகு குறுந்தகட்டின் உதவியுடன் ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. எம்.ஜி.ராம்சந்தர் என்ற பெயர் எடுத்துப்போடும்போது தென்பட்டது. கதாநாயகன் பெயரோடு சேர்ந்து  கீழே கடைசியில் தென்பட்டது. திரைப்படத்தின் துவக்கத்திலேயே தட்சசீலத்தை வென்றுவிட்டு  நாயகன் நாடுதிரும்புகிறார். அவரது புகழை பறைஅறிவிப்பவர் சொல்லும்போதெல்லாம்  குதிரை திரையின் ஒருபக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு ஓடுகிறது,

நாயகன் குணாளன் நேராக சென்று நாட்டின் பேரரசர் சாம்ராட் அசோகரைச் சந்திக்கிறார்.  அசோகர் கலிங்க போருக்குப் பின் சண்டையே போட்டதில்லை என்று சொல்கிறார்கள். கரீனா கபூரின் கண்ணீருக்குப் பின்னர் அவர் புத்தமதத்தைத் தழுவி விட்டதாக ஷாருக்கான் எங்களுக்குச் சொல்லிக் கொடுந்திருந்தார். இருந்தாலும் எம்.கே.தியாகராஜ பாகவதர் தட்சசீலத்தில் கலகக் காரர்களை ஒடுக்கி திரும்புவதாக ஒரு வசனத்தை பின்னர் வைக்கிறார்கள்.

குணாளன் தனது தந்தையைச் சந்தித்த உடன் தந்தை மணமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அவருக்கு அவரது சிற்றன்னையை அறிமுகப்படுத்துகிறார், குணாளன் போரில் இருந்த நேரத்தில் அவரது தந்தை மகாச் சக்கரவர்த்தி அசோகர் மணம்புரிந்து கொண்டாராம். அந்த சித்தியின் பெயர் மனத்தில் நிற்கவில்லை,. ஆனால் அவரை அழைக்கும்போதெல்லாம் த்ரிஷா என்ற உச்சரிப்பே எனது காதில் விழுந்தது. தந்தையின் மனைவியாக கண்ணாம்பா நடித்திருந்தார்,  கண்ணாம்பா என்றதும் மனோகரா கண்ணாம்பா உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம். ஆனால் நினைவிற்கு வரவேண்டியவர்  மனோகரா டி.ஆர் ராஜகுமாரி. அவரைவிட தளுக்கும் குளுக்கும் நிறைந்த ( வர்ணனை உதவி:- வசனகர்த்தா இளங்கோவன்)  உடல்மொழியுடன் கண்ணாம்பா வலம்வருகிறார்.

அவருக்கு பார்த்த உடனேயே எம்.கேடி.யை பிடித்துப் போய்விடுகிறது. அவரை அடையத்துடிக்கிறார், பலானபலான திட்டங்கள் போடுகிறார். சிறப்பாக அலங்கரித்துக்கொள்கிறார். அசோகரின் மூலமாக குணாளனை அந்தப் புரத்திற்கு அழைத்துவந்து பாடச் சொல்கிறார், தந்தையின் முன்பாக மகன் சிற்றன்னையின் அந்தப் புரத்தில் பாட்டுப் பாடுகிறார். கடவுள் வர்ண்ணை மாதிரி பாடுகிறார்.  அதில் கண்ணாம்பா மிகவும் மனம் உருகிவிடுகிறார்.

அவசர வேலை காரணமாக தந்தை அசோகர் வெளியே கிளம்ப மகன் குணாளன் அந்தப் புரத்தில் பாடுவதை தொடருகிறார்.

உன்னை கண்டு மயங்காத பேர்களுண்டோ....,

இந்தப் பாடல்கூட கடவுள் பக்தி பாடல்தானாம்.

சிற்றன்னை சொக்கிப் போய் நடனமும் ஆடுகிறார். இந்தப் பாடல் முடிந்த உடன் எம்.கே.டியை வழிக்குக் கொண்டு வர கண்ணாம்பா பல இலக்கிய விவாதங்களில் ஈடுபடுகிறார்.  இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்தால் சோனா பத்துக்கு பத்து மதிப்பெண்கள் பெற்றுவிடுவார்.

ஆனால் சோனாவால் இவ்வளவு பெரிய இலக்கிய விவாதத்தில் ஈடுபடமுடியுமா என்று தெரியவில்லை.

எம்கேடி அறிவுரை கூறிகிறார், இந்த நிலையில் அசோகர் அந்தப்புறத்தில் நுழைய குணாள் குற்றம்சாட்டப் பட்டு நாடுகடத்தப் படுகிறார்.

இளவரசன் குணாளுக்கு  ஆதாரவாக ஒரு பிட்சு பேசுகிறார், அவரை எண்ணெய் கொப்பரையில் போடுமாறு  உத்தரவிடுகிறார். புத்தபிட்சு எண்ணெய் கொப்பரையில் போட்ட உடன் தாமரையாய் மாறி தப்பிவிடுகிறார், இதை கேட்ட அசோகர் பிட்சு மகான் என்பதாக உணர்ந்து படுத்தபடுக்கையாகிவிடுகிறார்.


இவருக்கு வைத்தியம் பார்க்க வரும் வைத்தியரின் மகனாக இளம்வைத்தியராக என்.எஸ்.கிருஸ்ணன் வருகிறார், அவரை கண்ணாம்பாவின் அந்தரங்க தோழி மதுரம் ஆசைப் படுகிறார், அவரை தன்வழிக்கு கொண்டுவர அவரிடம் குழைந்து குழைந்து பேசுகிறார்,  அவரது பேச்சு சன் ம்யூசிக் நிகழ்ச்சிகளிடையே வரும் வாயாடிகளின் குழைவிற்கு நிகராக அமைந்திருக்கிறது. அதுவு,ம் காதல் நோயால் தான் வாடுவதாக இளம்வைத்தியரிடம் சென்று மருந்து கேட்க அவர் பல ஓலைச்சுவடிகளை எடுத்துப்படிக்க அவரது கைகள் மிகச் சிறப்பாக நடித்திருக்கும்.

எம்.கேடி.யின் மனைவி காஞ்சனை தனது சின்ன மாமியாரைப் பார்த்து தனது கணவனை மீட்க உதவி கேட்க செல்கிறார். இவருக்கு சின்னமாமியாருக்கு முன்பே திருமணம் ஆகியிருக்கும்.  அங்கு தன் கணவன் மேல் சின்ன மாமியார் ஆசைப் படுவது புரிந்து நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்.

மகேந்திரனிடம் அடைக்கலமாகி இருக்கிறார் குணாள். அவருக்கு சில கடிதங்கள் வருகின்றன. மகேந்திரனாக நடித்திருப்பவர் எம்.ஜி.ராம்சந்தர். அதாவது பிற்கால எம்.ஜி.ராமச்சந்திரன் (எ) எம்.ஜி.ஆர் அவர்கள்.

குணாளின் மனைவி மூன்று மாத கர்ப்பம் மற்றும் கடும் ஜூரம் என்று கடிதம் வர யாருக்கும் தெரியாமல் நாடுதிரும்பி தனது மனைவியைப் பார்க்க அந்தப் புரத்திற்குள் நுழைகிறார். அந்தப் புரத்தில் அவரது சிற்றன்னை ஒரு முன்னேற்பாட்டுடன் உள்ளே தங்கியிருக்கிறார்.

-----------------------------------------------------------------------------

இந்தக் காட்சியில் மின்சாரம் போய்விட்டதால் படத்தை தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. வாய்ப்புக்கிடைக்கும்போது படத்தைப் பார்த்துவிட்டு மீதவிமர்சனத்தை எழுதிவிடுகிறேன்.

இதன் தொடர்ச்சி இங்கே உள்ளது

Sunday, January 9, 2011

தெரிந்து கொள்ளுங்கள் டெண்டுல்கர்

ஒருவழியாக இந்த ஆண்டில் பொழுதுத் தொடர் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

எந்திரன் படம் போல விரும்பி வருபவர்களுக்கு கொஞ்சமும் குறை வைக்காமல் விருந்தளிப்பதற்கான ஐ.பி.எல். விரைவில் வெளிவரப் போகிறது. அதற்கான ஏலமும் ஒப்பந்தமும் நடந்து கொண்டே இருக்கின்றன.  சச்சின். டோனி போன்றவர்களை அந்தந்த அணியிலேயே ஒரு சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொண்டார்கள்.

இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் வீரர்களை ஏலம் விட்டத்தில் சச்சின், டோனி போன்றவர்களை விட காம்பீர் அதிகச் சம்பளம் பெற்றிருக்கிறார்.

ஒருவேளை சச்சின், டோனி போன்றவர்கள் கூட பொது ஏலத்தில் வந்திருந்தால் அதிகம் சம்பாதித்து இருப்பார்களோ?

=============================================================

கங்கூலியும் கூட ஏலத்தில் விடப் பட்டார்கள். சின்ன பையன்களைக்கூட எடுப்பவர்கள். கங்கூலியை எடுக்காமல் விட்டுவிட்டார்கள். யானை படுத்தாலும், குதிரை மட்டம்தானே?  தெரியவில்லை.  அவரைவிட திற்மையான 11 பேர் அணியில் தேர்வாவது போல இந்த நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ள முடியவில்லை. வெகு வெகு சிறிய ஆட்டக்காரர்கள் கூட ஏலம் போய் இருக்கிறார்கள். ஆனால் கங்கூலி இல்லை.

இந்த ஆண்டு கங்கூலிக்கு ஏற்பட்ட நிலை நாளைக்கு சச்சின், டோனி போன்றவர்களுக்கு ஏற்படாது என்ற உத்திரவாதம் இல்லை. ஆனால் அப்ப்டி சூழல் வந்தால் கும்ளே மாதிரி நாகரீகமாக தப்பித்து விடலாம் அதுவரை அவர்களுக்கு நிம்மதி.


========================================================

பழைய கால திரைப்படங்களை போல ஏலம் நடைபெறும் இடத்தில் மட்டை, பந்து போன்றவற்றை கொண்டு வந்து ஒரு ஆட்டம் போட்டிருந்தால் ஏலம் எடுத்திருக்க மாட்டார்களா?

குறைந்த பட்சம் பழைய் ஆட்டங்களையெல்லாம் தொகுத்து ஒரு டிவிடி போட்டு அதை ஒரு சுற்று விட்டிருக்கலாமோ!

முதலிலேயே உச்ச நீதிமன்றம் போய் ஏலம் எடுக்கப் படுவதற்கு ஒரு தடையில்லா சான்று வாங்கிக் கொடுத்திருக்கலாமோ!   ஏற்கனவே இவ்வாறு நடந்த நிகழ்வு பற்றி செய்தி இடத்திலும் அதைப் பற்றிய சில கருத்துக்கள் இந்த இடத்திலும் உள்ளன்.

தனது தீவிர ரசிகை ஒருவரை பினாமியாக போட்டு தனியாக ஒரு அணியை விலைக்குவாங்கி இருக்கலாமோ!

=================================================================
கிரிக்கெட் வீரர்களை இந்தப் பாட்டில் வைத்து கற்பனை செய்துபார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.., ஏனென்றால் ஐ.பி.எல் ஏலம் தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்பே இந்தப் பாட்டு வந்து விட்டது.



மின்னஞ்சலில் படிப்பவர்களுக்கு வீடியோ தெரியாதென்றால் இங்கும் லின்க் களில் ஒரு தட்டுத்தட்டி தளத்திற்குவந்து பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

கள்ள ஓட்டுப் போடத் தெரியுமா?

நீங்கள் திரட்டிகளில்  பிடித்த பதிவுகளுக்கு ஓட்டுப் போடும் எண்ணம் கொண்டவரா?

நம் ஒருவர் ஓட்டு என்ன செய்துவிடும் என்று எண்ணுபவரா?


கள்ள ஓட்டுக்களை சரமாரியாகப் போடும் திறமை வாய்ந்தவரா?

எப்படி இருந்தாலும் இந்த இடத்திற்குப் போய் அதில் அதில் மறுமொழி எண் 11ஐப் படியுங்களேன்

Saturday, January 8, 2011

பணம் இல்லாத லைஃப்பும் பர்சனாலிட்டி இல்லாத வைஃப்பும்

 பணம் இல்லாத லைஃப்பும்
பர்சனாலிட்டி இல்லாத வைஃப்பும் போர்
மேல்  நாட்டு ஞானி சொன்னதாக ஒரு நகைச்சுவை நடிகர்

இன்று வீட்டிற்குள் நுழையும்போது ஆதித்யா ஓடிக் கொண்டிருந்தது.  எம்.ஜி.யார் படம் போல .  எம்.ஜி.ஆர் படம் ஓடிக் கொண்டிருந்தது.  எம்.ஜி.ஆர்  மேஜர் சுந்தர் ராஜனிடம் அவரது வீட்டில் வைத்துத்தான்  விவாதித்துக் கொண்டிருந்தார்.  தான் கட்ட மறுத்த அபராதத்தை ஏன் கட்டினீர்கள்?அபராதம் கட்டியதால்  தான் தவறு செய்யததாக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடுமே என்று சொல்கிறார். அதற்கு நீதிபதியான மேஜர்  சட்டம் உன்னை குற்றவாளி என்றதால் உனக்கு தண்டனை  கொடுத்தேன். நீ நிரபராதி என்று எனது மனசாட்சி சொன்னதால் உனக்கான அபராதத்தை நான் கட்டினேன் என்கிறார்.

எனக்கு இதில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன.  நீதிமன்றங்களில் குற்றங்களை ஆராயும்போது சந்தர்ப்ப சாட்சியங்கள் அடிப்படையில் மட்டுமே நோக்கப் படுகின்றனவா? 

அதில் நீதிபதிகளின் சுய எண்ணங்கள் கருத்துக்களின் அடிப்படையிலான பார்வைகள் கொடுக்க மாட்டார்களா?

சட்டங்கள் , சாட்சியங்கள், வாதங்கள், பிரதிவாதங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுகின்றன என்றால்  ஒரே பென்ச்சில் இருக்கும் மூன்று நீதிபதிகளில்  ஒருவர் வேறுகருத்து கொள்வது எப்படி?  மூவரில் இருவர் ஆளுக்கொரு கருத்து கொள்கிறார்கள் என்றால் மூன்றாமவர் சொல்லும் கருத்துதான் தீர்ப்பாக அமையுமா?  மூன்றாமவர் என்ன முடிவு எடுத்தாலுமே அது சட்டட்த்துக்கு உட்பட்டுத்தானே அமையும்.  அப்படி என்றால் குற்றவாளிக்கு  ஆதாரவான  நிலையை மூன்றாம் நபர் எடுத்துவிட்டால் குற்றவாளி விடுதலை அடைந்து விட மாட்டார்களா? 


அதாவது வாதங்கள் , பிரதிவாதங்கள் சாட்சிகளின் அடிப்படையில்தான் முதலாமவர் குற்றவாளி என சொல்லுகிறார். ஆனால் மற்ற இருவரும் அதே அடிப்படையில் அவரை நிரபராதி என்று கருதிவிட்டால் நீதியின் நிலை என்ன ஆகும்.      பலநேரங்களில் பென்ச்சுகளில் இந்த கருத்து மாறுபாடுகள் ஏற்படுகின்றன. 

அப்படியென்றால் குற்றவாளிக்கு அதிர்ஷ்ட்டக் காற்று அடித்தால் அவனுக்கு ஆதரவான எண்ணங்களைக் கொண்ட நீதியாளர்கள் வந்தால் விடுதலையாகிவிடலாமா?

======================================================================

மேலே சொன்ன தத்துவம் இடம் பெற்றிருந்த படம் ரிக்‌ஷாக்காரன், ஐசரிவேலன், சோ அவர்களிடம் சொல்லுவதாக காட்சி அமைந்திருந்தது.  நீதிபதி கூட ரிக்‌ஷாகாரன் படத்தினைச் சேர்ந்தவர்தான்.


http://icdn.raaga.com/catalog/cd/T/T0000766.jpg

Sunday, January 2, 2011

கலைஞர், மு.வ, சாலமன் பாப்பையா செய்த தவறு.

கலைஞர்,  மு.வ, சாலமன் பாப்பையா மூவரும் தனித் தனியே ஒரே தவறை செய்திருப்பதாக இந்த வலைப்பூவில் எழுதியிருக்கிறார்கள் . ஒரு எட்டுப் ப்டித்துப் பாருங்களேன்.

முக்கியமாக அதில் அவர்கள் செய்திருக்கும் வாதம் கண்டிப்பாக படிக்க வேண்டியது.

Saturday, January 1, 2011

பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

ஆண்கள் , பெண்கள் விடுதி மாணவர்கள் மதியம் தாண்டியும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
முன்னிரண்டு நாட்களில் நடந்த கல்லூரி விழாவுக்காக விழிந்திருந்த அலுப்பும், முதல்நாளில் இரவில் நடந்த இசை இரவினை ரசித்த களைப்பும், விழாவில் சாதித்த ஒரு திருப்தியுமாக அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். விழாக்காலங்களில் கூட தங்கள் கடமை தவறாத மாணவ மாணவிகள் புத்தகங்களுடன் வீட்டுக்குச் சென்று விட்டதால் அப்போது விடுதிகளில் இருந்த அனைத்து மாணவ மாணவிகளும் விழாவில் பங்கெடுத்தவர்களாகவே இருந்தனர்.

எல்லோரும் எதாவது ஒரு போட்டியில் வென்ற இருந்தனர். சிலர் மேடை ஏறி பரிசு வாங்கி இருந்தனர். சிலர் முறைசாராப் போட்டிகளில் பரிசு வாங்கி இருந்தனர். முறை சாரா போட்டிகள் என்பது சற்று வித்தியாசமான போட்டிகள். வழக்கமான மேடை போட்டிகளுக்கு நடுவே போட்டி நடத்துபவர்கள் பார்வையாளர்களுக்கு நடுவே வந்து சில கேள்விகள் கேட்பார். அந்த கேள்விகள் பாட சம்பந்தமாக இருக்கலாம்.அல்லது முந்தைய போட்டியின் போட்டியாளரின் கருத்தில் இருக்கலாம், பார்வையாளருக்கு முன்னால், பின்னால் அமர்ந்திருக்கும் சக பார்வையாளரின் சட்டை, அல்லது புடவை வண்ணத்தை கூட கேட்பார்கள். மிகவும் எளிமையான கேள்வி அல்லது போட்டியாக அமையும். பொதுவாக கேட்கப் படும் பார்வையாளர் பரிசு பெறும் நோக்கிலேயே அந்த போட்டிகள் அமையும். எனவே எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதிலெல்லாம் கலந்து கொண்டு களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மாலை நேரத்தில் ஒவ்வொருவராக எழுந்து தேநீர் குடித்துவிட்டு வெளியே வந்து நடைபயில ஆரம்பித்திருந்தனர். அன்றைய தினம் சிறப்பு விடுப்பாக முதல்வரால் அறிவிக்கப் பட்டிருந்தது.

நடைபயிலும்போதே எல்லோருடைய கால்களும் பிள்ளையார் கோவிலை நோக்கியே அமையும். அது நடைமுறைச் சட்டம் ஆதலால் அவ்வாறாகவே நடந்து கொண்டிருந்தனர்.

அப்போது பிள்ளையார் கோவிலில் நண்பர் ஜில்லட்டின் குமார் ஒரு கூட்டத்தினைக் கூட்டி பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் சாராம்சம் இதுதான்.
இங்கிலீஷ் குப்பனின் கொட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. சகமாணவிகளை மதிப்பதில்லை. பெண்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட கொடுப்பதில்லை. எல்லோரும் ரசிக்கும் கலை நிகழ்ச்சிகளைக்கூட தனிநபர் தாக்குதல்களுக்கு உபயோகப் படுத்துகிறான். சமீபத்தில் நடந்த மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா நிகழ்ச்சியில் கூட பெண்களை மிக மோசமாக சித்தரிக்கிறான். இதை வளரவிட்டால் நம் கல்லூரியில் பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து விடும். நாமெல்லாம் கூடி பெண்ணுரிமையை காத்தே தீர வேண்டும்.

அவனது அந்தப் பேச்சினை அங்கே இருந்த சில பெண்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர். இதனை கண்டிப்பாக தட்டிக் கேட்டே தீர வேண்டும். என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்தனர். அந்தப் பெண்களில் சுமித்ராவோ போட்டிகளில் கலந்து கொண்டிருந்த பெண்களோ யாரும் இல்லை. ஆனாலும் ஜில்லட்டின் குமாரின் பேச்சிற்கு ஆட்கள் சேர்ந்து கொண்டிருந்தன்ர்.

-----------------------------------------------------------------------------------------------

குப்பன் கடந்த பல நாட்களாக தூங்காமல் இருந்ததால் மிகவும் அசந்து தூங்கிகொண்டு இருந்தான். இரவு எட்டுமணி அளவில் நண்பர்கள் எழுப்பினர்.

அரைதூக்கத்தில் இருக்கும்போதே சொல்ல ஆரம்பித்தனர்.

சுமித்ராவின் துப்பட்டாவை திருடிவிட்டதாக கல்லூரி முதல்வரிடம் புகார்கொடுக்க போறாளாம். சாட்சிக்கு நடன அரங்கில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பெண்கள் , அவன் சபதம் செய்தபோது அருகில் இருந்த மாணவர்கள், அவனை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்த சீனியர் மாணவர்கள், மாணிக் ஃபாத்திமா நாடகத்தினைப் பார்த்த ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் சாட்சிகளாகச் சொல்ல போகிறாளாம்.

இப்ப என்னடா செய்யறது?

தூக்கக் கலக்கத்திலேயே குப்பன் சொன்னான்..,

"நடக்கறது நடக்காம இருக்காது; நடக்காம இருக்கறது நடக்காது"


..............................................................................................................



தொடரும்


இதன் முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியையோ அல்லது அருகில் உள்ள சுட்டிகளையோ பயன் படுத்துங்கள்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails