Sunday, June 27, 2010

ஏதோ நினைவுகள் (27.6.2010)

ஒரு பொண்ணு ஐ லவ் யூ சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க..,


ஆனால் நம்ம தலைவர் என்ன செய்தாருன்னு பாருங்க, அவரது தோழர் என்ன பேசுறார்ன்னும் கேட்டுங்கங்க



========================================================================

எப்படியெல்லாம் லவ் பண்னலாம் இந்த அம்மையார் பயிற்சிக் கொடுக்கிறார் பாருங்க



===========================================================================

அப்படி பண்ணாதவங்க கூட இப்படி பண்ணுறாங்க பாருங்க



========================================================================

இந்தப் பாட்டைக் கேட்கும்போது என்னமோ எங்கேயே குடைவதுபோல் இருக்கிறதே, ஏன்




=======================================================================

அந்தப் பாட்டுக்கும் இந்தப் பாட்டுக்கும் ஏதோ ஒரு பிணைப்பு



======================================================================
இந்தக் காணொளியைக் காணும்போது கிடைக்கும் அதிர்வுகளில் சிறு பகுதியைக் கூட மேலே காணும் அனைத்துக் காணொளிகளும் சேர்ந்தே கொடுக்க முடியவில்லையே..,  அது ஏன் ஏன் நண்பனே!

===================================================================


அனைத்து கல்லூரி நண்பர்களுக்கும்  , அனைத்துக் கல்லூரி நண்பர்களுக்கும் எங்களது batch day வாழ்த்துக்கள். 

Thursday, June 24, 2010

பொங்கி எழு: புறப்படு, ( தழுவல் அல்லது புனைவு) 24-6-2010

நண்பா புறப்படு,



கடமை இருக்கிறது,



அழைக்கிறது




ஏற்கன்வே செய்ததுதான்




காலத்தின் கோலம்




மீண்டும் நிகழ்ந்துவிட்டது




அன்று உன்னால்தான்




சாதிக்க முடிந்தது




அன்று நீதான்




மலையைத் தூக்கினாய்





கடலைத் தாண்டினாய்






விசுவாசத்தின் அடையாளமே




நீதான்




வீரத்தின் மறு உருவமே



நீதான்..,




உடனே புறப்படு





என்ன நடந்தது





என்றா கேட்கிறாய்.






ராவணன் சீதையை தூக்கிவிட்டானாம்




வாரணப் படைக்கு




அவசர அழைப்பாம்,





டிஸ்கி:- இப்போது வந்த குறுஞ்செய்தியின் புனைவு, தழுவல்

===============================================================

படித்து விட்டீர்களா?
எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....,

=============================================================



==============================================================



===============================================================

Saturday, June 19, 2010

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....,

1. சீதைக்கு ராவணன் மேல் காதல் வந்திருந்ததா? இல்லையா?

2.சூர்ப்ப நகை  ராம, லட்சுமணர்கள் மீது ஆசைப்பட்டாரா? இல்லையா?

3.வீரப்பனால் கடத்தப் பட்டவர்கள் அவனது உபசரிப்பு காரணமாக அவன்மேல் பற்றுக் கொண்டவர்களாக மாறி இருக்கிறார்களா? இல்லையா?

4.வசனம் எழுதுபவர்கள்  (இயக்குபவர்களும்கூட)  அந்த ஊர் மக்களிடையே போய் சில காலம் வசிக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாதா?

5.மனைவியை காஸ்ட்யூம் டிசைனராக போடுபவர்கள் எல்லாம் மனைவி கொடுக்கும் ஆடைகளைத்தான் அணிவார்களா?

6.புனைவு என்று சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் எடுக்கலாமா? இதை தமிழ்கூறும் நல்லுலகமும் பதிவுலகமும் ஆதரிக்கிறதா?

7.கீழ்த்தட்டு மனிதன் எளிதாக அடுத்தவன் மனைவி மேல் காதல் கொள்வானா? இல்லை அதை புணைந்தவர்களின் எண்ணப்படி காதல் கொள்கிறானா?

8.ஐஸ்வர்யாராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்து பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டது யாராவது கொண்டாடுவார்களா?

9.மேட்டுக்குடி, மேடல்லாத குடி பிரச்சனைக்கும் திருநெல்வேலிக்கும் உள்ள தொடர்பு சிலராலாவது பேசப்பட்டிருக்குமா?

============================================================
டிஸ்கி:- மேலும் உண்மை தெரியவேண்டுபவர்கள் பின்னூட்டங்களில் கேட்கலாம்.

Tuesday, June 1, 2010

நெளி 1.6.10

அனுஷ்காவிற்கு அவமானமாக இருந்தது. இப்படியெல்லாம் நடக்கும் என்று துளி கூட நினைக்கவில்லை.  அவள் சூழலில் அவள் செய்தது சரி என்றுதான் நினைத்தாள். இன்னும் கூட அவள் செய்தது சரிதான் என்றே நினைத்தாள். ஆனால் டார்ஜன் செய்த எதிர்வினையை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. 

அனுஷ்காவும் டார்ஜனும் கல்லூரி மாணவர்கள். அவர்கள் அனைவரும் கல்விச் சுற்றுலா வந்திருந்தனர். கல்விச் சுற்றுலா என்று பெயரே தவிர சராசரி மாணவர்களின் சுற்றுலாதான்.   அதில்தான் பூங்காவில் தோழிகளுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். எப்படி தனிமைப் படுத்தப் பட்டாள் என்றே தெரியவில்லை. திடீரென் அவள் அருகில் டார்ஜனும் நின்றிருந்தான்,. அப்போது கூட எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல்தான் பேசிக்கொண்டிருந்தான். திடீரென ஒரு கடிதத்தைக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லிவிட்டான். 

அனுஷ்காவிற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பெரியதாக கோபம் வரவில்லை, தனது குடும்ப சூழல், டார்ஜனின் குடும்ப சூழல் அவர்களது ஊர் இதைப் பற்றியெல்லாம் நீண்ட நெடிய சொற்பொழிவு ஆற்றினாள்.  டார்ஜனுக்கு கொஞ்சம் வியர்த்தாற்போல இருந்தது,  மனம் மாறியிருப்பான் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் இங்கு நடப்பதோ.....................


இரவு உணவு முடித்தபின்  மாணவர்கள் சிறிய கலைநிகழ்ச்சி நடத்துவதாக சொன்னார்கள். அதில் யாரோ ஒருவன் யாரிடமோ ஐ லவ் யூ சொல்ல பெண் பாத்திரத்தை ஏற்றவன் ஏற்ற இறக்கங்களுடன்  அனுஷ்காவின் சொற்பொழிவை சொல்லிக்கொண்டு இருந்தான்.  குரலில் பயன்படுத்திய வட்டார வார்த்தைகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் அது அனுஷ்காதான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. தோழர்களும் தோழிகளும் ஹோ..............ய் என்று கரவொலி எழுப்பிக் கொண்டிருந்தனர்.

அனுஷ்கா நெளிந்து கொண்டிருந்தாள்.

இந்த இடுகை இந்த இடுகையோடு தொடர்பு உடையது. புரியாதவர்கள் இந்த இடுகையை படித்தே தீரவேண்டும்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails