Monday, December 29, 2008

ரஜினி, சரத், பாம்பே, பழனி

ரொம்ப நாள் ஆகிவிட்டமாதிரி இருக்கிறது நமது விருப்பத் தலைப்பான ரீமேக் சுவடே தெரியாத தமிழ் படங்கள் வரிசையை ஆராய்வது,



இந்த முறை இரண்டு சூப்பர் ஹிட் படங்களை ஆராயலாம். சில வருடங்களில் ரீமேக் செய்யப்படங்கள் இவை.

பா(ட்)ஷா:-
பாஷா கதையைப் பற்றி சொலவதற்கு என்ன இருக்கிறது. அந்தப்படம் வந்த போது பெரும்பாலான வலைஞர்கள் பம்பரமாக சினிமா பார்ர்க்கும் பருவத்தில் இருந்திருப்பார்கள் என்பதால் அந்தக் கதையை அப்படியே விடுகிறேன். இந்தப் படம் வந்தபோது நாங்கள் மாநிலம் தழுவிய பொது தேர்வில் பங்கெடுக்க இருந்ததால் படம் பார்க்க அனுமதி இல்லை. நகரத்தில் இருந்த மாணவர்கள் பார்த்துவிட்டு படத்தில் சுத்தமாக நகைச்சுவையே இல்லை. அப்புறம் எங்க.. என்பதே அவர்கள் விமர்சனமாக இருந்தது. நக்மாவுக்கு லிப்ட் கொடுக்கும் முதல் காட்சியில் மட்டுமே நகைச்சுவை தலை காட்டும்.


அப்புறம் மே மாதத்தில்தான் படம் பார்த்தோம். கல்லூரிக்கு போனபின் தான் தெரிந்தது எந்த ரஜினி படம் என்றாலும் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டுதான் படத்திற்குச் செல்ல வேண்டுமாம். அப்போதுதான் நமது ரசனைக்கு அங்கீகாரம் கிடைக்குமாம். ஆனால் எங்கள் சீனியர் ராம்ஸ் அந்தப் படம் சுற்றுவட்டாரம் பதினெட்டுப் பட்டியில் எங்கு படம் போட்டாலும் பார்ப்பார். துணைக்கு எங்களை மாதிரி யாரையாவது கூட்டிச் செல்வார். ஒவ்வொரு ஜூனியர் மாணவரும் இருபத்தைந்து முறையாவது பார்த்திருப்பார்கள். இந்த நிலை அவர் பாஸ் செய்து பி.ஜி. வாங்கும் வரை தொடர்ந்தது.

ஏய்:-

இதில் சரத் குமார் பழனியில் வந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார். அவரது லட்சியம் தங்கையை கலக்டெர் ஆக்குவது. ரஜினியும் அப்படியே... ஆனால் ரஜினிக்கு டாக்டர், இன்ஸ்பெக்டர். கல்யாணம் என்று பல லட்சியங்கள். இதில் தங்கை சொந்தத் தங்கை அல்ல. அதிலும் மாற்றாந்தாய் பிள்ளைகள்தான். இதில் நண்பன் சத்தியம் வாங்குகிறார். அதில் அப்பா...


ஃபிளாஷ்பேக்:- வில்லனின் அட்டூளியம் தாங்காமல் சரத் தனது நண்பருடன் சேர்ந்து பழி வாங்குகிறார். ரஜினியும் அப்படியே.. ரஜினியின் தந்தை கொல்லப் படுகிறார். இதில் நண்பன் கொல்லப் படுகிறார்.

தங்கைக்காக கண்டபடி அமைதி காக்கிறார்கள்

அவர்களுக்குள் அடங்கியிருக்கும் புயல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வ்ருவது தெரியும்.. விரல் மட்டும் தூக்குவது, ஒருதடவ சொன்னா என்று மட்டும் சொல்வது.. சரத்துக்கும் அப்படித்தான் கண் புருவம் துடிப்பது, சதைகள் இருகுவது என்று படிப்படியாக போகும்.

வில்லன் அவர்களது தங்கை மேல் கைவைக்க நினைக்க.. அவர்கள் சுயரூபம் வெளிப் படுகிறது. கடைசியில் வில்லன் அழிய சுபம்.


அதில் அவன யாருன்னு நினைச்ச என்று தாயார் ஆரம்பிப்பார். இதில் தங்கை பேசுவார்.


மிகவும் சீரியஸாக வந்த படம் பாஷா... வடிவேலு, தங்கை, நமிதா, மற்றும் பாட்டியுடன் சேர்ந்து நகைச்சுவையில் புகுந்து விளையாடி இருப்பார் சரத் குமார்.

இரண்டும் சூப்பர் ஹிட்தான். இருந்தாலும் நக்மாவைவிட நக்மாவின் ரீமேக் நமிதா சூப்பரோ சூப்பர் ஹிட்.





Wednesday, December 24, 2008

ரஜினிக்கு உதவும் ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் படங்கள் என்றாலே தனி மதிப்பு நம்மிடம் இருந்து கொண்டே இருக்கிறது। அவரது படங்களின் மீது நமக்கு என்றும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும்। அவரது நிகழ்காலப் படங்களும் எதிர்காலப் படங்களும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருந்து கொண்டே இருக்கும்।
அந்த வகையில் கதை எண் 1 பெரிய பொழுது போக்கு சித்திரமாக அமைந்தது।

இப்போது எந்திரனை கல்லூரியில் வைத்துப் பார்க்கும் நம்முடைய சின்ன ஆசை।


ரோபோ ஒரு கல்லூரி மாணவன்। இரண்டாம் ஆண்டு எந்த நேரமும் புத்தகம் கையுமாக இருப்பவர்। வம்பு தும்பு எதர்க்கும் போகாதவர்। (சூப்பர் ஸ்டாரின் இளமையான தோற்றத்திற்காக இருபது கோடி செலவிடப் படுகிறது)। அவரது அமைதியான அறிவான நடவடிக்கைகளாலும், கல்லூரியில் உள்ள எறும்புகளுக்கு கூட உதவும் எண்ணமும் இருப்பதாலும் கல்லூரியின் கனவுக் கன்னி ஐஸ்வர்யா அவர் மேல் காதல் கொள்கிறார்। [ஐஸ்வர்யாவின் இளமையான தோற்றத்திற்காக பத்துக் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது]। சூப்பர் ஸ்டார் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்। தனக்கு அதிகமான வேலைகள் இருப்பதாகவும் தன்னால் காதலில் எல்லாம் ஈடுபட முடியாது என்றும் கூறுகிறார்।
http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/07/enthiran.gif
அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யா தனது காதலில் என்ன குறை என்று ஆக்ரோஷமாக கேள்வி கேட்கிறார்। இன்றைய இளைஞர்கள் போல தான் ஒன்றும் டைம்பாசுக்காக காதலிக்க வில்லை என்றும் இரண்டுநிமிடங்கள் இடைவிடாது வசனம் பேசுகிறார்। இளைஞர்களைப் பற்றி பேசும்போது மட்டும் அவரது காது துடிக்கிறது। மற்றபடி அமைதியாக காதலிக்க முடியாது என்று கூறுகிறார்। கோபத்தின் உச்சிக்கே செல்லும் ஐஸ்வர்யா அந்தக் கேள்வியைக் கேட்டு விடுகிறார்


நீங்கென்ன மனுசனா? எந்திரனா? பேருதான் ரோபோன்னா ஆளும் ரோபா மாதிரி இருக்கீங்க।
கேட்டுக்கொண்டு இருக்கும் வானத்திற்கு பயங்கர கோபம் வருகிறது। மாநகரத்தின் ஓரத்தில் இருக்கும் கடலுக்கும் பயங்கர கோபம் வருகிறது। இடிமின்னல் கொந்தளிப்பு வருகிறது। ரஜினி அமைதியாக இருக்கிறார்। பக்கத்தில் ஓடும் ரயில் கூட தட தட வென்று ஓடுகிறது। ஐஸ்வர்யாவின் கண்களில் ரத்தம் வடிகிறது , அப்படியே மயங்கிசாய்கிறார்। அவரை ஒரு வயதானவர் தூக்கிகிறார்। மயக்கம் தெளிந்தவுடன் ஐஸ்வர்யாவைப் பார்க்கிறார்।


ரோபோ சாதாரண மாண்வன் இல்லைம்மா அவன நம்பி ஒரு நாடே இருக்கு। என்று சொல்லிக் கொண்டே ஃப்ளாஸ்பேக் போகிறார்।


இளமை கொஞ்சும் கிராமம்। அப்படியே வயல் வெளியிலேயேதான் ஊருக்குள்ளேயும் வெளியேயும் போகும்வழி, வரும்வழி। அதில்தான் பிரசன்னாவும் பிரியா மணியும் பள்ளிக் கூடம் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்। தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன। பிரசன்னாதான் பனிரண்டாம் வகுப்பில் முதல் மாணவன்। பிரியாமணி ஃபெயில்। நான் ஃபெயில் ஆனா என்ன நீதான் பெரிய படிப்பெல்லாம் படிக்க போறயே என்று பிரசன்னாவை வாழ்த்துகிறார்। மெடிக்கல், என்ஞ்னிய்ரிங், அக்ரி, டீச்சர், வக்கீல், போலீஸ் திருடன் என்று எல்லா படிப்புகளுக்கும் அப்ளிகேசன் போடுகிறார்। பிரியா மணியும் அதற்கெல்லாம் ஸ்டாம்ப் ஒட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்கிறார்। உனக்குத்தான் எதுவேனாலும் கெடைக்குமே ஏன் இப்படி டைம் வேஸ்ட் பண்ணிக் கொண்டு இருக்க, என்கிறார்। பிரசன்னா சிரித்துக் கொண்டே படிவங்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்। சிலநாட்கள் ஆட்டமும் பாட்டுமாக களிகிறது।

முதலில் மெடிக்கலில் இருந்து பதில் வருகிறது। சந்தோஷத்துடன் திறக்கிறார்। பிரசன்னா கடிதத்தை பிரித்த உடன் அப்படியே சோர்ந்து விடுகிறார்। வேகமாக ஓடி வந்து பார்க்கும் பிரியா மணி பிரசன்னாவின் முகத்தைப் பார்க்கும் விளிக்கிறார்। பிரசன்னாவின் விண்ணப்பம் மதிப்பெண்கள் இருந்தும் நிராகரிக்கப் பட்டு விடுகிறது। அடுத்து ஒவ்வொரு விண்ணப்பமும் நிராகரிக்கப் படுகிறது। எல்லா அலுவலகங்களுக்கும் சென்று காரணம் கேட்கிறார்கள் । எல்லா அலுவலகங்களிலும் காரணம் கேட்கிறார்கள்। எல்லா இடங்களிலும் ஒரே பதில்தான் நீ இந்த நாட்டின் குடிமகனே கிடையாது। இந்நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே நாங்க இடம் கொடுக்க முடியும் மற்ற நாட்டு காரர்கள் உங்கள் தூதரகம் மூலமாகத்தான் வரவேண்டும் என்று சொல்லி விடுகிறார்கள்।


அப்போதுதான் அந்த உண்மை தெரிகிறது। பிரசன்னா பிறந்த கிராமம் இன்னும் சுதந்திரம் அடையவே இல்லை। அங்கே யுரேனியம் அதிகம் கிடைப்பதால் ஒரு ஐரோப்பிய நாட்டின் பிடியிலேயே இருக்கிறார்கள்।
பிரசன்னா எங்கெங்கோ அலைந்து திரிந்தும் அவருக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்க வில்லை। மனம் உடைந்து போகிறார்। கூடவே பிரியா மணியும் சுற்றுகிறார்। அப்போதுதான் அந்த முடிவு எடுக்கிறார்கள்। இருவரும் ஒன்று சேர்கிறார்கள்।
இந்த மண்ணில் குழந்தைபிறந்தால் அது இந்த நாட்டு குடிமகன் ஆகிவிடுவான்,
எனவே நமது குழந்தையை இங்கேயே பெற்றுக் கொண்டு லட்சியத்தை நிறைவேற்றுமாறு கூறிக் கொண்டு உயிரை விடுகிறார்। குழந்தையை பெற்றபின் பிரியாமணியும் உயிரை விடுகிறார்। எந்திரத்தனமாக உழைக்க வேண்டும் என்ற காரணத்தில் ரோபோ என்று பெயர் வைக்கிறார்கள்।


கதையைக் கேட்டவுடன் ஐஸ்வர்யா நெகிழ்ந்து போகிறார்।
எங்க அத்தை எங்க மாமனாருக்கு உதவியது போல நான் இவருக்கு உதவுவேன் என்று சொல்லிக் கொண்டே காஃபி போட்டுக் கொடுக்கிறார்।
வெற்றீக் கொடி நாட்டு பாடல் ஆரம்பம் ஆகிறது। பாடலின் ஒவ்வொரு பத்திக்கும் ரஜினி ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி அடைகிறார்। கடைசி வரி வரும்போது அவர் ஐ। ஏ। எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று விடுகிறார்।

அவர் நிறைய மதிப் பெண்கள் பெற்றதால் அவரை நேரடியாக உள்துறைச் செயலராக நியமிக்கிறார்கள் , ( இது இரண்டாவது முறையாக நிகழ்த்தப் படும் சாதனை। ஏற்கனவே தென்னவனில் விஜயகாந்த் குறைந்தவயதில் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டு இருக்கிறார்) ।



அலுவலகத்தில் கோப்புகளைப் பார்த்துக் கொண்டே வருகிறார்। அப்போது அதிர்ச்சிகரமான உண்மை வெளிவருகிறது। பிரசன்னா பிறந்த கிராமத்தை ஆளூம் ஐரோப்பிய மன்னராக ஐஸ்வர்யாவின் தந்தையே இருந்து வருகிறார்। அதனால் ஜோடிகளுக்கு நடுவே பிரச்சனை வருகிறது। தலைவர் சோகமாக முந்திரி தோப்பைச் சுற்றிவந்து பாட்டுப் பாடுகிறார்।

இப்படி ஒரு கிராமம் இருப்பது மந்திரி ஒருவருக்கு தெரிந்து விடுகிறது। அவர் உலக பயங்கரவாதிகளுடன் கூட்டணி அமைத்து ஐஸ்வர்யாவின் தந்தை நாட்டைக் கைப் பற்றிவிடுகிறார்। பிரசன்னாவின் கிராமத்தில் உள்ள யுரேனியத்தைக் கைப் பற்றி உலக அணுஆயுதங்களை வளர்த்த் முயற்சிக்கிறார்। இந்த தகவல்களை ஐஸ்வர்யா வந்து சொன்னவுடன் பொங்கி எழும் சூப்பர் ஸ்டார்। தனி ஆளாக ஐஸ்வர்யாவின் நாட்டிற்குச் சென்று அவரது தந்தையை விடுவிக்கிறார்।
பிரதான வில்லனான அமைச்சருடன் ஒத்தைக்கி ஒத்தை சண்டை போட்டு அழிக்கிறார்।


ஐஸ்வர்யாவை மணந்து கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு மன்னராக திரும்பி வருகிறார்।

சுபம்।

=================================================================

ஹி ஹி மீள்பதிவுதான்,

வெளிவந்துள்ள எந்திரன் பாடல்கள் இந்தக் கதைக்கு மிக அழகாகப் பொருந்துவதைக் கவனியுங்கள்

இந்தக் கதை பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் மேல்நோக்கிய தமிழ்மணக் கட்டைவிரலிலும் தமிழீஷிலும் கிளிக் செய்து விடுங்கள்

Tuesday, December 23, 2008

இதற்கெல்லாம் ரஜினி கவலைப் படவேண்டியதில்லை

இந்த இடுகை மிகவும் காலந்தாழ்த்தி போடப் பட்டிருப்பதாக நினக்கலாம்। அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு। முதலாவது அப்போது நான் ப்ளாக் எதுவும் எழுதவில்லை। இரண்டாவது மேலும் காலந்தாழ்த்த நான் நினைக்கவில்லை।



குறைந்தபட்சம் ரஜினி ரசிகர்கள் மட்டுமாவது மகிழ்ச்சி அடைய இந்த இடுகை உதவும்। திண்டுக்கல் சாரதி படம் பார்த்தவர்கள் கூறுவது பேசாமல் குசேல்ன் படத்தை இதே இயக்குனரிடம் கொடுத்து இருக்கலாம் என்று கூறிவருகிறார்கள்



அன்புள்ள ரஜினிகாந்த் என்றொரு படம் அந்தப் படத்தின் கதையை முதலில் எம்ஜியருக்காக தயார் செய்யப் பட்டதாம்। அவர் முதல்வராகி விட்டதால் ரஜினி என்று கூட பேசிக் கொள்கிறார்கள்.


குசேலனுக்கு முன் சந்திரமுகி வந்தது। அதன் மலையால மூலத்திற்கும் கன்னட மூலத்திற்கும் பல மடங்கு மாற்றங்கள்। படம் வென்றதால் வாசு। சூப்பர் ஆகப் பேசப் பட்டார்। இதற்கு முன் லாவாரிஸ் என்றொரு இந்திப் படம் பார்க்கும்போதே கண்கள் பனிக்கும் இதயம் கணக்கும் கதை। அமிதாப் பச்சனின் அற்புத நடிப்பில் வெளியான படம் । ஒரு அனாதையின் வாழ்வின் கொடுமையையும் அவனது உள்ள குமுரல்களையும் அழகாக வெளிப் படுத்தி இருப்பார்கள்। அதே படத்தை தமிழில் பணக் காரனாக எடுத்தார்கள்। சுத்த கமர்சியலாக... சில பல மாற்றங்களுடன்......... ரஜினி மேடையில் பேசும் ஒரு காட்சியைத் தவிர மற்ற இடங்களில் பெரிய ஒரு பாதிப்பும் ஏற்படாத ஒரு கமர்சியல் படம் அது। வாசுவின் திறமை ரீமேக் திறமை பலமுறை வெளிப் படுத்தப் பட்டுள்ளது।



அன்புள்ள ரஜினி காந்த் வந்தபோது படத்தில் ஒரு குழந்தை ரசிகைக்காக ரஜினியே தனது நேரத்தை செலவிட்ட போது ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ரசித்தார்கள்। தங்களுக்காக வந்து தங்களுடன் நேரத்தை செலவிட்டதாக நினைத்தனர்।


ஆனால் குசேலன் படத்தில் ஒரு நண்பனுக்காக தலைவர் கண்கள் கலங்குவதை யாரும் ஏற்கத்தயாராக இல்லை। அந்த காரணத்திற்காக தலைவனின் கண்கள் கலங்குவதை மீண்டும் பார்க்க விரும்பாத ரசிகர்கள் மீண்டும் பார்க்காத காரணத்தாலேயே அந்தப் படம் தோல்வி அடைந்தது। ரசிகர்களின் பேராரதவாலேயே அந்தப் படம் தோல்வி அடைந்தது எனச் சொல்லலாம்। எனவே குசேலன் தோல்வி அடைந்ததற்கு வாசுவோ, ரஜினியோ வருத்தப் படவே தேவையில்லை।

Monday, December 22, 2008

எதிர் ஓட்டு போடுபவர்களே! இங்கே வாங்க

  • எல்லாத்திரைப்படத்திற்கும் லாஜிக் இருக்க வேண்டும் என்றும் லாஜிக் இல்லாமல் எடுக்கப் படும் திரைப்படங்கள் மக்களால் நிராகரிக்கப் படும் என்றும் பேசப் படுகிறது.
    ஆனால் ஒரு தமிழ் திரைப் படம் பெரும்பாலான முக்கிய காட்சிகள் அனைத்திலும் லாஜிக் மீறப் பட்டிருக்கும். சாதாரணமாக நடக்கவேஏஏஏ இயலாத சம்பவங்களைக்கொண்டு பின்னப் பட்டு வெற்றி பெற்ற படம் இது.

    இது நம்ம ஆளு

    பட்டணத்திற்கு வேளை தேடி வந்த நபர் சுண்டல் விற்க முன்வருகிறார். இதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். அடுத்து அதற்காக அந்தணர் வேடம் போடுகிறார். சுண்டல் விற்பதில் வரும் லாபத்தைப்போல பல மடங்கு செலவு செய்து போடப் படும் வேசம் இது. என்ன கொடுமை சார் இது

    அடுத்து ரோட்டில் பார்த்து அவரை புரோகிதம் செய்ய அழைகிறார்கள். எங்கேயாவது நடக்குமா?

    தவறாக மந்திரம் சொல்வதைப் பார்த்து அந்த ஊர் நாட்டாமை அந்தணர் அவருக்கு இருக்க இடம், படுக்க பாய், சம்பாதிக்க வேலை, அவ்வப்போது இலைப் போட்டு சோறு, தனியாக பாயசம், வடை வேறு கொடுக்கிறார். இந்த நாட்டாமைக் காரர் ஒழுங்காக மந்திரம் சொல்லாததால் தலையில் தீயைத் தூக்கிப்போட்டவர் என்ற பில்டப் வேறு.......

    இதையெல்லாம் பார்த்து லவ் வேறு வருமாம்.........

    ஒரு தெருவில் நடக்கும் பாட்டுப் போட்டியில் செயித்து கண் ஆபரேசன் செய்யும் அளவு பரிசாம்...............

    நாட்டாமைக்காரர் செட்டப் அப்பா அம்மாவைப் பார்த்ததும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்களாம். ஊரில் நடப்பதாக சொன்னாலும் இவ்வளவு படித்தவராக காட்டப்படும் நாட்டாமையை அடிமுட்டாள் ஆக்குகிறார்கள்.

    ஒரிஜினல் தன்மை தெரிந்தவுடன் அவர் வாங்கும் சத்தியம் உலகில் எங்கும் இல்லாத ஒரு சத்தியம். கொலை செய்திருக்கலாம். கோபத்தில் என்று நினைத்துக் கொள்ளலாம். இல்லை விவாகரத்து செய்திருக்கலாம். இதைச் செய்யாமல் பெண்ணைத் தொடக்கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். கொடுமையோ கொடுமை.

    இதற்கடுத்து பல பலான சங்கதிகள். கடைசியில் நடக்க வேண்டியது நடக்கிறது. இந்த படம் தீண்டாமை எதிராண கொள்கையை வலியுறுத்தி எடுக்கப் பட்டதாக ஒரு விளக்கம். எப்படி என்றுதான் தெரியவில்லை.

    இயக்குநர் பாலகுமாரனாம். இதுவே ஒரு லாஜிக் இல்லாத விஷயம். யாருக்காவது உண்மை தெரியுமா................
==========================================================

தமிழ் மணத்தில் புதிய ஓட்டுமுறை அறிமுகப் படுத்தப் பட்ட பிறகு

நான் எழுதிய

தமிழ்மணம் பரிந்துரை : 2/10

Pathivu Toolbar ©2009thamizmanam.com

யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?


இடுகை மொத்தம் பத்து ஓட்டுக்களும் அதில் எதிர் ஓட்டுகளைக் கழித்து இப்போதைய ஒட்டுமொத்த ஓட்டு மதிப்பு இரண்டு என்பதும் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது. ஓட்டுக்களின் மதிப்பு ஃப்யர் ஃபாக்ஸ் மற்றும் கூகிள் உலாவிகளில் தெரிகிறது. ஏனோ I E உலாவியில் தெரியவில்லை.

இந்த இடுகைக்கு என்ன நிலமை என்று பார்ப்போம்
===========================================================
இது ஒரு மீள்பதிவு. எழுத ஆரம்பித்த மாததில் பதிவிட்டது.

Saturday, December 20, 2008

தமிழில் யாரும் செய்யாத ஒரு முயற்சி. பதிவுலகில் புதுசு கண்ணா புதுசு

  • ௧+௭=௮
  • ௨+௭=௯
  • ௩+௭=௧0
  • ௪+௭=௧௧
  • ௫+௭=௧௨
  • ௬+௭=௧௩
  • ௭+௭=௧௪
  • ௮+௭=௧௫
  • ௯+௭=௧௬
  • ௧0+௭=௧௭
ஒரு ஆசைதான் தமிழ்ல வாய்ப்பாடு எழுதிப பார்க்கனும்னு । பிடிச்சிருந்தா தமிழ்மணம் மேல்நோக்கிய கட்டைவிரலிலும்
தமிழீஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்।


Thursday, December 18, 2008

குந்தவைதான் கொலையாளியா? ஆதாரங்களுடன் ஒரு அலசல்

பொன்னியின் செல்வன் படித்த போது பலரும் பலமாதிரி அந்த நூலை அலசியிருப்பார்கள். நாங்களும் சில நேரங்களில் அலசியபோது கொண்டுவந்த கருத்துகள்தான் இவை.



இந்த நூலினை மகாபாரதத்தையும், சாணக்கியன் சபதத்தையும் கொஞ்சம் நினைவு கூற வேண்டும். ச்குனியின் ராஜ தந்திரங்களையும் , சாணக்கியனின் ராஜ தந்திரங்களும் கொஞ்சமும் குறைந்ததல்ல. சாண்க்கியணை விட சகுனிக்கு காரணங்கள் அதிகம். ஆனால் சகுனி தோற்றதால் வில்லன் கதாபாத்திரமாகவும், சாணக்கியன் வென்றுவிட்டதால் ராஜ தந்திரத்திற்கு ஒரு உதாரணமாகவும் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். அதே நிலைப் பாட்டுடன் கல்கின் பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள்.



முதல் காட்சியில் வந்தியத் தேவன் தூதராக வருகிறார். கல்கி இங்கே தெளிவாகக் கூறுகிறார். இரண்டு ஓலைகளை எடுத்துக் கொண்டு என்று. தந்தைக்கு ஒன்று, தங்கைக்கு ஒன்று. கரிகால் ஆதித்யர் தங்கை குந்தவையை முழுவதும் நம்பியிருந்தால் ஒரே ஓலையில் தங்கைக்கு கடிதம் எழுதி மொத்த தகவல்களையும் அனுப்பியிருக்கலாம். அவருக்கு தங்கை மேல் நம்பிக்கை முழுவதுமாக இல்லை என்பதற்கு இரண்டு ஓலைகளே சாட்சி.

இரண்டாவது ஓலையில் நம்பிக்கையான ஒற்றன் என்று கூறுகிறார். இதை இரண்டு விதங்களில் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று தங்கைக்கு உதவுவதற்காக. இரண்டாவது. தங்கையின் செயல்பாடுகளை அவருக்கு தெரியாமலே கண்காணிக்க.


கல்கியின் எழுத்துக்கள் நமக்கு தெரிவிக்கும் உண்மைகள் இவை.

அடுத்ததாக கந்தமாறன் அரண்மனை நிகழ்வுகள்.


தனியாக ஒரு போட்டி பொதுக்குழு கூட்டப் படுகிறது. அது ஆதித்யர் அரசர் ஆவதை தடுக்க என்று கூறுகிறார்கள். சோழ நாட்டு எதிர்கால் நலனுக்காக என்று கூறுகிறார்கள். அங்கு நடந்த கூட்டத்தில் குந்தவையின் தலையீட்டினை எதிர்த்து மாபெரும் உரையாற்றுகிறார். பெரிய பழுவேட்டரையர். குந்தவையின் செல்வாக்கு ஆட்சியில் நுழைந்திருக்கிறது என்பதையும் கல்கி அவர்கள் நமக்கு காட்டுகிறார்.

ஆதித்யரின் ஆசைகளுக்கு குந்தவை குறுக்கிடுவதையும் அதற்கு காரணங்கள் புரியாதது போலவும் காட்டுகிறார். அது ஏன் குந்தவையின் ஆதிக்க மனப்பான்மையாக இருக்க கூடாது.


நந்தினியின் மேல் கொண்ட நிறைவேறாத காதலும், வீரபாண்டியனைக் கொல்லும்போது நின்ற நந்தினியின் கண்ணீரும் அவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அவரை காஞ்சி செல்லவைத்தது என்று கூறுகிறார்கள். நந்தினி தேவி கதாபாத்திரமே கற்பனை என்னும்போது ஆதித்யர் நாடு திரும்பாமல் இருந்ததற்கு காரணம் என்னவாக இருக்க முடியும். இதில் நாம் காணும் முடிவு என்னவென்றால் நந்தினியின் கதாபாத்திரம் கற்பனையாக இருக்கும் பட்சத்தில் அவருடைய இயல்புகள் குந்தவையின் பிம்பமாகவே இருக்க முடியும்.

கடம்பூர் மாளிகையில் கந்தமாறன் தங்கையை காதலுடன் நோக்குகிறான் வந்தியத்தேவன் . அது மட்டும் இல்லாமல் அதற்கு முந்தைய காலகட்டத்திலேயே இருவருக்கும் மணம் புரிவதற்கான பேச்சுக்கள் இருந்திருக்கின்றன என்றும் கல்கி தெளிவாக கூறுகிறார்.
கந்தமாறன் தங்கை கொலைப் பழியினைக் கூட ஏற்றுக் கொள்கிறார். அந்தப் பெண்ணை விட்டு விட்டு குந்தவை பின்னால் வந்தியதேவன் செல்கிறார்.


அதே போல ஆதித்யனை விட்டுவிட்டு குந்தவைக்கே முழு விசுவாசமாய் மாறிவிடுகிறார் வந்தியத் தேவன். இதுவும் கல்கியின் கூற்றுதான்.

அருண்மொழிக்குக் கூட தனது தோழிகளில் ஒருத்தியை மணம் முடித்து வைக்கவே விரும்புகிறார். குந்தவையும் வெளிநாடு ஒன்றுக்கு வாழ்க்கைப் பட்டு செல்ல விரும்பவில்லை என்பதை கல்கி அவர்களே மிகவும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறார்.


அகண்டபாரதம் அமைக்க ஆசைப்படும் உன்னத எண்ணம் கொண்டவராக குந்தவை தேவி காட்டப் படிகிறார். ஆனால் கடைசி கட்டங்களில் வடக்கு ஆதித்யனுக்கு தெற்கு அருள்மொழிக்கு என்றெல்லாம் பேச்சுக்கள் வருகின்றன. இதையும் கல்கி கூறிவிடுகிறார்.


ப்போது நான் வைப்பது மட்டுமே வாதம்.



தனது ஆதிக்கத்திற்கு வராத தன் அண்ணனிடம் பேச தனது காதலனை அனுப்புகிறார். அங்கு போய் சந்திக்கிறார். கல்கி நந்தினியும் ஆதித்யரும் பேசுவதாகக் காட்டும் இடத்தில் வந்தியத்தேவனும் இருக்கிறார். அவரும் ஏன் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டிருக்கக் கூடாது? நந்தினியை பல முறை பார்த்து ஜொள் விட்டவர்தான் வந்தியத்தேவன் . வாதங்களில் எல்லோரும் மாறி மாறி டென்சன் ஆகி ஏன்கொலை நடந்திருக்கக் கூடாது?


இதில் வந்தியத்தேவர் கடம்பூர் சென்றதையும், கொலையுண்ட இடத்தில் வந்தியத்தேவன் இருந்ததையும், வந்தியத்தேவனின் கத்தியால்தான் ஆதித்யர் கொலையுண்டார். என்பதையும் கல்கி எழுதியிருக்கிறார். இது மட்டும் அல்லாது கொலையைப் பார்த்த மணிமேகலை கடம்பூர் இளவரசியும் வந்தியத்தேவனை தப்புவிப்பதற்காக தன்மேல் பழியைப் போட்டுக் கொள்கிறாள். இதுவும் கல்கியின் எழுத்துத்தான்.

எனவே ஆட்சி அதிகாரத்தின் போதையில் இருந்த குந்தவையின் தூண்டுதலால்தான் வந்தியத்தேவன் இந்தக் கொலையைச் செய்திருப்பார் என்று நாம் ஒரு முடிவுக்கு வரமுடியும்.
கொலையை யார் செய்தார் என்பதை கல்கி சொல்லவே இல்லை என்பதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதை வெளியே சொல்ல விரும்பாத காரணத்தாலேயே அவர் அவ்வாறு செய்திருக்கிறார் என்று கூட சொல்லலாம். பழிதன்மேல் வராமல் இருப்பதற்காக உத்தம சோழனை டம்மி அரசனாக சில காலம் இருத்தி பின்னர் அருள்மொழி ஆட்சிக்கு வருகிறார். அந்த டம்மி அரசனும் குந்தவையின் சம வயதினருமான் உத்தம சோழனும் சில ஆண்டுகளீல் மரணம் அடைகிறார்.

ராஜ ராஜன் கூட பெரும்பாலும் ஊரில் இல்லாமல் போர்களிலேயே இருக்கிறார்.
குந்தவை சிறப்பாக ஆட்சி செய்தார் என்பதும் வரலாறு. சுருக்கஞ்சொன்னால் வென்றுவிட்டதால் குந்தவை சாணக்கியனுக்கு ஒப்பாகப் பேசப் படுகிறார், தோற்றிருந்தால் அவர் சகுனியாகவோ நந்தினியாகவோதான் கருதப் பட்டிருப்பார்.


----------------------------------------------
மிகப் பழைய இடுகைதான். இருந்தாலும் பல புதிய புதிய பதிவர்கள் இருப்பதால் அவர்களுக்கான மீள்பதிவு

------------------------------------------------
புதியவர்கள் பின்னூட்டங்களையும் சேர்ந்து நிதானமாகப் படித்து கருத்துக்கூறுங்களேன்.

கிரிக்கெட்??? ஏன் இப்படி

  1. கிரிக்கெட்டில் உள்ள வசதிகள்
  2. 1.கிரிக்கெட்டை யார் வேண்டுமானாலும் விளையாடிப் பார்க்கலாம். பெரும்பாலான விளையாட்டுகளை விளையாடி பார்க்கமுடியாது. கால்பந்து பத்து நிமிடங்கள் விளையாடினால் மூச்சு வாங்க ஆரம்பிக்கும். கைப்பந்து, டென்னிஸ் போன்றவைகளுக்கு பந்து கைக்கு வருவதற்கே பயிற்சி எடுக்க வேண்டும். தடகள விளையாட்டுகளை தவம் போல கருதுபவர்கள் மட்டுமே விளையாட முடியும். சில விளையாட்டுகளுக்கு செலவு அதிகம்.
  3. 2.கிரிக்கெட்டின் பரபரப்பை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். இன்னும் எத்தனை ரன்? எத்தனை பால்? எளிதில் புரியும். கால்பந்தில் கூட எத்தனை கோல் என கேட்க முடியும், ஆனால் கிரிக்கெட்டில் நிமிடத்திற்கு நிமிடம் புள்ளிவிவரங்கள் மாறும். பரபரப்பு கூடும். மற்ற விளையாட்டுகளுக்கு இந்த வசதி கிடையாது.
  4. 3.கால்பந்து, கைபந்துகளில் யார் சிறப்பாக விளையாடிகிறார்கள் என்பது பார்த்தால் மட்டுமே புரியும்.
  5. 4.அதுவும் விளையாட்டு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். கிரிக்கெட்டுக்கு அந்த அவசியம் கிடையாது.
  6. 5கிரிக்கெட் பற்றி நாள் பூரா கேட்டுக் கொண்டே இருக்கலாம். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் சீக்கிரம் முடிந்து விடும்.(20/20 பத்தி அப்புறம் பார்ப்போம்).
  7. 6.தூய வெள்ளை மற்றும் கவர்ச்சியான கல்யாண மாப்பிள்ளை போன்ற உடைகளுடன் கிரிக்கெட் விளையாடப் படுகிறது. மற்ற விளையாட்டுகளில் அப்படி இல்லை.(செஸ், துப்பாக்கி தவிர).
  8. 7.டி.வி.யில் பல கோணங்களில் காட்டும் வசதி கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. (ஸ்டம்பிலயே காமிரா வைக்கிறாங்களே)
  9. 8. ஐந்து நிமிடத்திற்கு ஒரு விளம்பரம் ஒளிபரப்பும் வசதி கிரிக்கெட்டிற்கு மட்டுமே உண்டு. அதனால் தொலைக்காட்சிக்கு தனிகாதலே உண்டு.
  10. 9.கிரிக்கெட் முடிந்த பின் அரைமணிநேரம் விவாதிக்க முடியும்.அதற்கு மேல கண்ட காரணங்களே உதவும்.
  11. 10.மூச்சு விடுவது கூட சாதனையாக கிரிக்கெட்டில் மட்டுமே கருதப்படுகிறது. தொடர்ச்சியாக 0 எடுப்பது கூட இங்கு சாதனை. தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் கடைசி பந்துகளில் 4 எடுத்தால் இந்த மைதானத்தில் இது 3ம் தடவை. இந்த நாட்டிக்கெதிராக இது 8ம் முறை. இந்த நவம்பர் மாதத்தில் இது முதல் முறை. அந்த நேரத்தி சச்சின் மிட் ஆனில் நிற்பது இது 15ம் முறை என்றெல்லாம் சாதனைப்பட்டியல் போடுவார்கள்.
  12. 11.இந்தியாவும் பாகிஸ்தானும் சமபலத்தில் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஹாக்கி கூட ஒரு காலத்தில் புகழுடன் இருந்தது நினைவு இருக்கலாம்.
  13. பின்குறிப்பு;- இது ஒரு மீள்பதிவு. போன மாதத்தில் எழுத ஆரம்பித்தபோது போட்டது. நிறைய பேர் படிக்கவில்லையோ என்ற ஆதங்கத்தில் மீள்பதிவு,

Wednesday, December 17, 2008

கலைஞருக்கே தெரியாத ரகசியம்?



படிக்காதவன் கிளைமாக்ஸ் பகுதியில் சிவாஜி ரஜினியைப் பார்த்து ஒரு டயலாக் சொல்வார்.

அண்ணன் நீதிபதி, ஒரு தம்பி குற்றவாளி, ஒரு தம்பி சாட்சி


என்று சொல்லி கண்ணீர் விடுவார்.

அதே மாதிரி காட்சி குற்றவாளி தம்பிக்கு பதிலாக தங்கச்சி. அது என்ன படம்


அந்த காட்சிக்கு முன் சூழ்நிலையை உணர்ந்த உடனே (குற்றவாளிக் கூண்டில் நிற்பது தம்பிதான் என்ற உண்மையும் சாட்சியாய் நிற்பது மற்றொரு உடன்பிறப்புதான் என்ற உண்மையும்) அண்ணன் நீதிபதி மயக்கம் அடைந்து விடுவிறார்.

அந்தப் படத்திலும் அப்படித்தான் ஆனால் முப்பது வருஷத்துக்கு முன் வந்தது.


சாட்சியாய் நிற்கும் தம்பிக்கு குற்றவாளி அண்ணன் தான் ஆதரவாய் இருப்பார்.

அதிலும் அப்படித்தான். குற்றவாளி தங்கச்சிக்கு கிறுக்கு அண்ணந்தான் துணையாக இருப்பார்.

ஆரம்ப கட்டத்திலேயே பெரிய அண்ணனை தம்பிகள் பிரிந்து விடுகிறார்கள். இதில் பெரிய அண்ணனை தங்கை பார்த்ததே கிடையாது. அடுத்த அண்ணனும் நடுவில் பிரிந்து விடுகிறார்.

படிக்காதவன் படத்திலும் அப்படித்தான். கடைசித்தம்பிக்கு பெரிய அண்ணனை அடையாளம் தெரியாது. ஆனால் நடுத்தம்பிக்கு மூத்தவரை நன்றாக அடையாளம் தெரியும்.

கடைசியில் யாரும் குற்றவாளி இல்லை என்று விடுதலை ஆகி குடும்பம் மொத்தமும் சேர சுபம்.

ஒன்று படிக்காதவன் என்றால் மற்றது பராசக்தி. உண்மை. சிவாஜி கணேசன் அவர்களின் அறிமுகப் படத்தில் வந்த பல முக்கிய காட்சிகளை மையப் படுத்தியே படிக்காதவன் படமும் வெளி வந்துள்ளது.


ஐயா! ஜாலி கலைஞருக்கே இந்த ரகசியம் தெரியுமான்னு தெரியல.., ஆனா நாம கண்டுபிடித்துவிட்டோம்
.........................................................................................................................................
திருடா திருடி மற்றும் அன்பே வா படங்களை ஏற்கனவே முதல் பாகத்தில் பார்த்திருந்தாலும் சற்று விரிவாகப் பார்ப்போம்.


அன்பே வா.

ஒரு நேர்மையான தொழிலழிபருக்கும் ஒரு கல்லூரி மாணவிக்கும் இடையே ஏற்படும் காதல்கதை.

திருடா திருடியில் வீட்டுக்கு அடங்க்காத பையனுக்கும் எடுத்தெரிந்து பேசும் பெண்ணுக்கும் இடைப்பட்ட காதல் கதை.

இரண்டு படங்களிலும் ஒருவரை ஒருவர் காலை வாரிக் கொண்டே இருப்பார்கள். உள்ளுக்குள் காதல் வைத்திருந்தாலும் வெளிப்படுத்தினால் எங்கே காமெடி கீமெடி பண்ணிவிடிவார்களோ என்றே நினைத்து கொண்டிருப்பார்கள்.

கிளை மாக்ஸில்கூட இந்த நிலைதான் நீடிக்கிறது. திருடா திருடியில் வீட்டு ஓனர் பொண்ணு வருவது போல் இதில் பழைய நண்பர் அசோகன் வருகிறார். இவர்கள் உள்ளே நுழைவதுகூட இரண்டு படங்களிலும் ஒரு சிறிய இடைவெளியை ஜோடிகளுக்கு நடுவே ஏற்படுத்துகிறது. பின்னர் இவர்களே படம் முடிவதற்கும் ஒரு ஏற்பாடு செய்கிறார்கள்.

கிளைமாக்ஸில் கூட சரோஜாதேவியை எம்ஜியார், துரத்திக் கொண்டே ஓட வில்லன் கூட்டம் வழிமறித்து சண்டை

இதிலும் திருடியை தனுஷ் பின் தொடர ஒரே சண்டை கம் ஜாலி.

பிடிந்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் தமிழ்மண மேல்நோக்கிய கட்டை விரலிலும் தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள் .
===========================================================

தமிழ் மணத்தில் சூடான இடுகைகளை எடுத்துவிட்டதாலும் இது மக்களை சென்றடைய வேண்டிய கட்டாயம் ஒன்று இருப்பதாலும் தொடர்ச்சியான பின்னூட்டங்களும் தொடர்ச்சியான ஓட்டுக்களும் இந்த இடுகைக்குத் தேவைப் படுகின்றன.

Sunday, December 14, 2008

உள்ளக் குமுறல்களோடு தமிழ்மண நட்சத்திர பதிவர் இளைய பல்லவன் அவர்களுக்கு

தலைப்பைக் கண்டு மிரண்டுவிட வேண்டாம். இது சென்ற ஆண்டில் நான் எழுதிய இடுகையின் மீள்பதிவுதான்.

பதிவுலகிலும், மருத்துவத்துறையிலும் பல புத்தகங்களையும், பதிவுகளையும் செய்துள்ள மரு.புருனோ அவர்களின் எழுத்துக்கள் இப்போது வெகுஜனப் பத்திரிக்கைகளிலும் வர ஆரம்பித்திருக்கின்றன. அவருக்கும் அவரது எழுத்துக்களை பிரசுரித்திருக்கும் ஆனந்த விகடனுக்கும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொண்டு 13.12.2008ல் எழுதப் பட்ட இடுகைக்குச் செல்வோம்.

=================================================




தமிழ் மண நட்சத்திர பதிவர் இளைய பல்லவன் அவர்களுக்கு நன்றியைக் கூறிக்கொண்டு துவங்கலாம். அவரது சக்கரவியூகத்தை விடாமல் படித்துவரும் தீவிர ரசிகர்களீல் நாணும் ஒருவன்.எல்லோரையும் போலத்தான் சிறுவர் மலரில்தான் தொடங்கியது எனது வாசிப்பனுபவம். ஓரே வித்தியாசம். நாங்கள் சிறுவர் வண்ண மலரில் இருந்தே ஆரம்பித்து விட்டோம்.


ரசித்து படிக்க ஆரம்பித்தது என எடுத்துக் கொண்டால் அது கடல் புறாதான். குமுதத்தில் வந்து கொண்டு இருந்தது. (கண்டிப்பாக முதல் முறை வந்தபோது அல்ல.) பிட் பிட் டாக படிப்போம். லதா படம் வேறு இருக்கும். ஏறக்குறைய பிட் பார்ப்பது போல்தான். நிரஞ்சனாவும் மஞ்சளழகியும்............ ம்....... அப்புறம் சரித்திர கதைகள் படித்தோம். பெரும்பாலும் சாண்டில்யன் கோவி இப்படித்தான் போனது. நாடோடி மன்னன் படம் வேறு பார்த்துவிட்டதால் சரித்திர கதைக ள் மீது ஒரு வெறியே உண்டாகி விட்டது.



இதெல்லாம் நாம் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடந்து கொண்டிருந்தது. அதுவரையில் நமக்கு தமிழ் பாடம் நினைத்தாலே கசக்கும். அதில் நான் வாங்கும் மதிப்பென்கள் என்னை ஒரு முன்னிலை மாணவனாக வரவிடாமலேயே செய்வதால் கூடுதல் எரிச்சல் வேறு....

பத்தில் திரு ஆறுமுகம் அவர்கள் தமிழாசிரியராக வந்தார். முதல் கேள்வி யாருக்கு தமிழ் கஷ்டம்? கையை தூக்கு விட்டேன். அவர் பல நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். அந்த வகுப்பில் மரபு கவிதை கூட எழுதுவோம் என்று சொல்லி சுற்றிக் கொண்டிருந்தோம். இங்குதான் பொன்னியின் செல்வன் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு காலாண்டு விடுமுறையில் அதைப் படித்தோம்.


பொன்னியின் செல்வன் கதையில் பொ.செ.வின் அறிமுகம் படு பிரமாண்டாமாய் ஆனால் பாதிக் கதைக்கு மேல்தான் அமையும். ஆனால் அவர் வந்தபிறகு ஒவ்வொரு காட்சியும் படு பிரமாண்டமாய் இருக்கும். அந்தக் காட்சிகளுக்கு பயந்துதான் திரைப் படம் எடுக்கும் முயற்சியை பெறீஈஈஈய பெறீஈஈஈய தலைகளெல்லாம் ஓடியிருப்பார்கள்.

அந்தப் புத்தகம் படித்தபிறகு எந்த கதை படித்தாலும் அதில் இருந்து எடுத்தது போலவே இருக்கும். தேவியின் குடும்ப கதைகள் படிக்கும்போது கூட அந்த உணர்வு வருவதை தடுக்க முடியவில்லை.


பத்து முடித்து பதிணொண்ணு வந்த பிறகு தொழிற்கல்வி படிக்க வேண்டும் தமிழில் பாஸ் செய்தால் போதும் என்று சொல்லி விட்டு அப்படி படி இப்படி படி என்று சொல்லி தீக்கதிர், தந்தி மணி மலரோடு நின்றது படிக்கும் வழக்கம்.


கல்லூரியில் சூப்பர். 150 ஏக்கரில் ஒரு கல்லூரி, விடுதி, விளையாட்டு மைதானம், மொத்தமாக ஒரு சுற்று சுவர். அதில் நூலகம் உண்டு துறை நூலகள் மட்டும். விடுதியில் வரும் ஹிண்டு மணி என சுருங்கியது வட்டம்.


அந்த கால கட்டத்தில் பல சுவர் பத்திரிக்கைகள் கல்லூரிக்குள் வலம் வரத் தொடங்கின. அதெல்லாம் படிக்கத் தொடங்கினோம். நம்பினால் நம்புங்கள். முதன்முதலில் மோனிகா லெவின்ஸ்கி மேட்டர் எனக்கு சுவர் பத்திரிக்கை கார்ட்டூன் மூலமாக தெரிந்தது.

பாடப்புத்தகங்கள் படித்தல் என்பதே ஒரு போராட்டம் என்ற சூழலிலேயே போன நூற்றாண்டும் கழிந்தது சில நாட்களில் கல்லூரியும், பிறகு பயிற்சியும். பட்டம் பெற்றபின் நேரே பிறந்த ஊருக்கே பயணம். திரும்பவும் படிக்க வேண்டுமாம். கசப்பு கசப்பாய் இருந்தபோது நான் பார்த்த புத்தகங்கள் மரு.புருனோ அவர்களுடையது. அவரது புத்தகங்கள் எனது நிலைப் பாட்டையே மாற்றியமைத்தது. துறை சார்ந்த நூற்களை அவரது புத்தகங்களின் உதவியுடன் படித்தபோது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.


அவரது வழிகாட்டலே இணையப் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்ததும் எழுத ஆரம்பித்தது. இப்போது இணையத்தில் எல்லாவற்றையும் படிக்க வாய்ப்பு கிடைப்பதால் பதிண்ம வயதில் படித்த உணர்வுடனேயே மீண்டும் படிக்க முடிகிறது. மீண்டும் ஒருமுறை இளைய பல்லவன் அவர்களுக்கு நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.


தனது வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள சதீசு குமார் அவர்களை
அழைக்கிறேன்.

Saturday, December 13, 2008

வெள்ளையாய் வத்தலாய் ஒரு பொண்ணு

கல்லூரி சுவர் பத்திரிக்கையில் வந்த விளம்பரம் இது

காதலி தேவை


மூன்றாம் ஆண்டு படிக்கும் சொந்தமாக டூவீலர் வைத்திருக்கும் மாணவனுக்கு காதலி தேவை.
தகுதிகள்

1.அழகான கையெழுத்தில் ரெகார்டு நோட் எழுதும் திறமை அவசியம்.


2.வகுப்பில் நடத்தும் பாடங்களை சொல்லித் தரும் திறமை அவசியம். அது இரண்டாம் ஆண்டு பாடமாய் இருந்தாலும் இருட்டில் சொல்லித் தந்தால் உத்தமம்.

3.காலையில் எழுந்ததும் மாணவர் விடுதிக்கு ஃபோன் செய்து எழுப்பி விடுதல் வேண்டும். மாலையில் அனைவரும் ஃபோனுக்காக காத்திருக்கும் போது தொடந்து ஃபோனில் பேசி எல்லரையும் காய விடுதல் அவசியம்.

4.டூ வீலரில் வருதல் அவசியம்.

5.கல்லூரி முன்னால் இருக்கும் பிள்ளையாரிடம் இருந்து தினமும் பிரசாதம் வாங்கித்தரவேண்டும்.

6.அவ்வப்போது கடன் தருவதற்கு திறமையான ஆளாய் இருத்தல் நலம். குறைந்தபட்சம் சங்கிலியை அடகு வைக்க கலட்டிக் கொடுப்பது வரவேற்கத்தக்கது.

7.நண்பர்களிடம் ஏன் இவ
ரை கெடுக்கறீங்க என்று கேட்டு தாக்க வேண்டும்.

8.அனிமியா, அனோரெக்சியா நெர்வோசா போன்ற வியாதிகள் இருக்கும் பெண்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப் படும்.

------------------------------------------------------------------------------------
இது ஒரு மீள்பதிவு
--------------------------------------------------------------------------------------
அனிமியா என்பது ரத்தச் சோகை நோயாகும். மிகவும் வெளுத்துக் காணப்படுவார்கள். பொன்னியின் செல்வன் வானதிபோல் அடிக்கடி மயங்கி விழுவார்கள்.அனோரெக்சியா நெர்வோசா என்பது உடல் எடையை குறைக்கும் எண்ணத்திலேயே இருக்கும் ஒருவகை மன நோய்.(இருப்பத்தைந்து கிலோ இருந்தாலும்..
================================================================

http://kanavukale.blogspot.com/2008/12/blog-post_4103.html இந்த அடையாளம் சொல்லும் இந்தப் பதிவின் வயதை.., அவ்வளவு பழைய  இடுகை. மீண்டும் மீள்பதிவு

Sunday, December 7, 2008

ரீமேக் பெயர் இல்லா திரைப்படங்கள் பாகம் 2

http://www.prakritifoundation.com/events03/indirav/c1.jpg


தில்லானா மோகனாம்பாள்
தமிழ் திரையுலகில் மாபெரும் வெற்றிச்சித்திரம் நாவலாக வந்து வெற்றி பெற்ற வெகு சில சினிமாக்களில் இதுவும் ஒன்றாம். நாதஸ்வர வித்வான் சிக்கல் சண்முக சுந்தரத்திற்கும் நாட்டிய பேரொளி மோகனாவுக்கும் இடையே யான ஈகோ கலந்த கலவையான மோதலுடன் கூடிய காதல் கதை. 68ல் வந்ததாம். அப்படி என்றால் இருவரின் வயதையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
சிவாஜி தனது நடிப்பாலும், பத்மினி தனது நடனத்திறமையாலும் அந்தக் குறை தெரியாமல் செய்து விடுவார்கள். ஆனால் போஸ்டரில் பத்மினியின் வயது தெரிந்துவிடும்.


நாதஸ்வர கலைஞருக்கும் நடனசிகாமணிக்கும் காதல்...
நடண்சிகாமணி யின் தாயின் தோழர் நடண சிகாமணியை ஜமீந்தார் ஒருவருக்கு சின்னவீடாக செட்டப் செய்ய முயற்சிக்கிறார். இதற்கு அவர்களின் ஈகோவை பயன்படுத்திக் கொள்கிறார். போட்டி நடக்குமுன் கத்திக் குத்து நடக்கிறது. நலந்தானா பாட்டு பாடுகிறார். பல செண்டிமெண்ட் காட்சிகளுடன் காதலர்கள் ஒன்று சேர்கிறார்கள்.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் சிக்கல் சண்முக சுந்தரத்திற்கும் ஜில்ஜில் ரமாமணிக்கும் [படத்தில் மனோரமா ஆச்சிக்கு பலபெயர்கள்] உள்ள தூய்மையான நட்பு. ஆயிரம் படங்கள் ஆண் பெண் நட்பை உயர்த்தி எடுத்துருந்தாலும் தமிழில் இவ்வளவு இயல்பாக ஆழமாக யாரும் எடுத்ததாக தெரியவில்லை.

கரகாட்டகாரன்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilEKkPEXKVCbWoy4DLSeQflvfw9G1cuht2YaBO49oXrW3S2W4V9x_jYTBSDvEc1e08nh-18otf1QIb46-2W0SqphKeoeN-sWRCw0uVQpyuJnt_0iYoY3Uz4qt5sk2JjkN27KSwZI1WwPw/s400/karagaattakkaaran.jpg

88ல் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வெற்றி பெற்ற படம். அதே போல் இரண்டு கலைஞர்கள். நாதஸ்வரத்தையம் நாட்டியத்தையும் ஒருங்கிணைத்து இருவரையும் நாட்டுப் புர கலையான கரகாட்டக் காரர்களாக மாற்றியிருப்பார்கள். அங்கே நாகேஷ் செய்த வேடத்தை இங்கே அக்கா கணவர் செய்வார். நாயகியை உள்ளூர் நாட்டாமைக்கு மணமுடித்து வைக்கப் பார்ப்பார். காதலர்கள் பிரிவுத்துயரைச் சந்தித்து போட்டு நடனம், பூமிதி நடணம் ஆடி கத்திக் குத்தெல்லாம் வாங்கி கடைசியில் சுபம்.

இந்தப் படத்தில் நகைச்சுவை சுவையாய் அமைந்து படத்திற்கு தூணாக நின்றது என்றே சொல்லலாம். வாழைப்பழ காமெடி, ஜப்பான்ல ஜாக்கி ஜான் கூப்டாஆஆக. அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்டாஆஆக.. ஜோக்கெல்லாம் பரபரப்பானவை.




Gamesfather Video

அண்ணன் -தங்கை, அக்கா-தம்பி என்று கூறிக் கொண்டு பின்னாலில் கழுத்தில் மாலையுடன் வந்து நிற்கும் கலாசாரத்தை சன்னமாக சாடி இருப்பார்கள்.

படத்தில் ஒரு ப்ளஸ் பாயிண்ட் ஜோடியில் இருவரும் இளைஞர்கள், சினிமா கரகத்தை அழகாக ஆடினார்கள்.


சங்கமம்



ஏ.ஆர்.ரெகுமான் இசையில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்டாக ஆன பின்னர் சுரேஷ் கிருஸ்ணாவின் இயக்கத்தில் 99ல் வந்தது. இதில் ஒருவர் நாட்டுப் புற ஆட்டக்காரர். {அது என்ன ஆட்டம் என்று தெளிவாய் தெரியவில்லை}. பெண்மணியோ பரதக் கலைஞர். இங்கேயும் ஈகோ வருகிறது. நடனப் பெண்மணிமேல் ஆசைப் படுகிறார். இங்கேயும் கத்திக் குத்து. சீனியர் ஆட்டக்காரரின் பிணத்தினை வைத்துக் கொண்டு தெருவில் ஆடி பரத கலைஞர் சம்பாதிக்கும் அதே அளவு பணத்தினை சம்பாதிக்கிறார். கடைசியில் என்னென்னமோ நடந்து சுபம்.

இது அதி பயங்கர தோல்வியை சந்தித்த படம். மேடையில் ஆடும் பரதம். எல்.கே.ஜி குழந்தை ஆடுவதைப் பார்ப்பது போல் பார்த்தால் மிக அழகாக இருக்கும் அதற்கு தகுந்த செட் எல்லாம் போட்டிருப்பார்கள். ரகுமாணும் தனது முழு உழைப்பைக் கொடுத்திருப்பார். ஏ.ஆர்.ஆர் முழு திறமையும் காட்டியிருப்பார்கள்.


முன்னதில் நலந்தானா.. இதி சௌக்கியமா...
மொத்தத்தில் ஆட்டம்

==================================================


ரீமேக் என்ற பெயர் இல்லாமல் வந்த மற்ற சில திரைப் படங்களையும் பற்றி அறிய இந்தச் சுட்டியை அழுத்துங்கள்





சுவாரசியமான பாடல் காட்சிகள்

கதையின் நாயகனுக்கும் நாயகனின் முறைப்பெண்ணுக்கும் திருமணப் பேச்சுக்கள் நடை பெறுகிறதுஇருவரும் ஒருவர்மேல் ஒருவர் மிகவும் அன்புடன் பாசத்துடன் இருப்பவர்கள்முறைப் பெண்னுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை। ஆனால் மாமன்மகனின் ( நாயகனின்) மணம் வருத்தப் படுமே என்று தயங்கி தயங்கி ரொம்ப நிதானமாக
தாங்கள் மனம் வருந்தக் கூடாது। உங்கள் மீது மிகுந்த அன்பு பாசம், மரியாதை எல்லாம் வைத்துள்ளேன், ஆனால்......., ஆனால்..........., நான் நம்ம இன்ஸ்பெக்டர் செழியனை காதலிக்கிறேன்
மிகவும் தயங்கி பில்டப் கொடுத்து நாயகன் ஃபீல் பண்ணாம இருக்க ரொம்ப கஷ்டப் பட்டு டயலாக் பேசி சமாதானப் படுத்துவார்.


இந்த மாதிரி சூழலில் எவ்வளவு ஆழமான் சோகம் பிழிந்தெடுக்கும் பாடல் போட்டிருக்கலாம்। ஆனால் ஜாலியான ஒரு பாடலை போட்டிருப்பார்கள்। ஏன்னா நாயகனும் மாமன் மகளீன் தோழியை லவ்விட்டு இருப்பார்। அவரும் இதே மாதிரி ஃபீல் பண்ணுவார்।
அந்தப் பாடல் இதோ.....

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
(நல்ல வேளை )


நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் ஒரு திருப்பம்
என்னை நம்பியிருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
என்றும் அது தானே என் விருப்பம்
எதிர் காலம் ஒன்று புது கோலம் கொண்டு
மனவாசல் தேடி வருமே
(நல்ல வேளை )


கண் மேல் பிறந்து கை மேல் முடியும்
கதையில் என்ன தயக்கம்
மலர் கட்டில் அறையில் அன்று கிட்டும் வரையில்
சொல்லும் காவியத்தில் வரும் மயக்கம்
ஒரு பாதி அங்கும் மறு பாதி இங்கும்
சரி பாதி இங்கு வருமே
(நல்ல வேளை )


மடி மேல் துயிலும் கொடி போல் துவளும்
பேரழகை படம் பிடித்தேன்
அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால்
தொட்டு பார்க்கையிலே உயிர் துடித்தேன்
காதல் போன்ற உள்ளம் கரை மீறி துள்ளும்
உடல் சேரும் எண்ணம் வருமே
(நல்ல வேளை )

Saturday, December 6, 2008

எனக்கொரு குவாட்டர் வேண்டுமடி..

வேலன் தொடர்ந்து யோசித்துக் கொண்டிருந்தான்। இன்று தண்ணியடித்தே தீருவது என்ற முடிவில் இருந்தான்। ரூம்மேட் சரக்கு வாங்கி வர சென்றிருந்தான்।
என்ன பிரச்சனை அவனுக்கு। பெரும்பாலான பசங்களுக்கு வருவதுதான்। பவித்ரா அவனை காதலிக்க முடியாது என்று கூறி விட்டிருந்தாள்। அதனால் தண்ணியடித்தே தீருவது என்ற முடிவில் இருந்தான்।
Photobucket




சென்ற மாதமும் இப்படித்தான்। தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டதால் தண்ணியடிக்க
நினைத்தான்। அவன் வீடு ஞாபகம் வந்தது அவனது வீட்டில் யாருமே தண்ணியடிக்கும் வழக்கம்
கிடையாது। தூரத்து உறவினர் ஒருவர் தண்ணியடிக்கும் வழ்க்கம் உள்ளவர் ஒருநாள்
அப்பாவைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார்। வரும்போது போதை எல்லாம் கிடையாது।
அதற்கே தாத்தா கொதித்து எழுந்து விட்டார்। குடிகார நாயுடன் எல்லாம் என்ன உனக்கு
பழக்கம் என்று அப்பாவை தாளித்து எடுத்து விட்டார்। அதை நினைத்த உடனே வியர்த்து
ஒழுகிவிட்டது। அப்புறம் எங்கே தண்ணியடிப்பது । வாங்கி வைத்த சரக்கெல்லாம்
ரூம்மேட் தான் அடித்தான்।





ஆறு மாதத்திற்கு முன் இப்படித்தான் வகுப்பு மாணவிகள் மைதானத்திற்கு வந்திருந்தனர்। கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது। வேலன் டக் அவுட்। அவமானம் பிடுங்கி கொண்டுவந்தது। தண்ணியடிக்க நினைத்தான்। காசில்லை। அருகில் உள்ள நகரில் சித்தப்பா போலிசாக இருந்தார்। அவரிடம் போய் ஏதாவது காரணம் சொல்லி காசு வாங்கி வரலாம் என்று । வீட்டில் சித்தப்பாவுக்கும் சித்திக்கும் சண்டை சித்தப்பா வீட்டில் சிகரெட் பிடித்தாராம்। பார்த்தால் பிள்ளைகள் கெட்டுவிடும் என்று கூறி சண்டை। சிகறெட்டிற்கே இப்படி என்றால் தண்ணியடிக்க ...................... பயந்துபோய் வந்துவிட்டான்।



டி।வி।யில் ஒரு சினிமா விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது। எதோ சாமி திருவிழா॥ சாராயம்
சாமிக்கு பிடித்ததாம் அதனால் அதற்கு கணக்குப் பார்க்க கூடாதாம்। சேய் நம்ம ஊரும்
தான் இருக்கிறதே........................



சைடி டிஷ் எல்லாம் ரெடி செய்து விட்டாயிற்று। செல்ஃபோன் சிணுங்கியது। பார்த்தான் பவித்ராதான்। ஒரு சப்பை ஃபிகர் மாட்டேன் என்று சொல்லிவிட்டாள்। எடுக்கலாமா வேண்டாமா ................................ யோசித்துக் கொண்டே இருந்தான்। ரூம் மேட் வரட்டும் । தண்ணியப் போட்டு விட்டு ஃபோனை போட்டு அவ நாக்கப் புடுங்கற மாதிரி கேள்வி கேட்க வேண்டும்। அவ மூஞ்சிய கண்ணாடியில் பார்த்திருப்பாளா.... பொங்கிக் கொண்டு வந்தது।




ரூம்மேட் வேறு இன்னும் காணவில்லை। அதற்குள் பவித்ரா நான்குமுறை ஃபோன்போட்டு
விட்டாள்। சரி பேசித்தொலைப்போம்। ஏற்கனவே யோசித்து வைத்த வசனங்களை ஒரு முறை
ரிகர்சல் பார்த்துக் கொண்டான்। ஃபோனை ஆன் செய்த உடன் காதில் வைத்தான்। பேச
நினைத்தான்। அந்த முனை பேசிக் கொண்டே இருந்தது। ஏதோ சொல்ல ஆரம்பித்தான்।
சிலவார்த்தைகள் பேசபேச மீண்டும் அந்தமுனை பேசிக்கொண்டே இருந்தது। கடைசியில் சோகமாக சரி என்று சொல்லி
முடித்தான்। ரூம்மேட் வந்தான்।



மச்சி......... வேலன் சோகமாக ஆரம்பித்தான்। கவலைய விடுரா இந்த பொம்பளங்களே இப்படித்தான் சிவப்பு ரோஜாக்கள் ஸ்டைலில் சொல்லிக் கொண்டே பரப்பி வைக்க ஆரம்பித்தான்।


இல்லடா। பவி இப்ப பேசிச்சு......................

சரி।


அவளுக்கு ஓ।கே।வாம்।


சரி விடுடா .................. வழக்கம்போல் நானே குடிக்கறேன்। உனக்கு சேத்தி வாங்கி உனக்கும் சேத்து தண்ணியடிக்கறது பழகி போன விஷயம் தானே॥ ரூம் மேட் சொல்லிக் கொண்டே ஊற்ற ஆரம்பித்தான்॥




இல்லடா... இந்த சந்தோஷத்த எல்லாரும் தண்ணியடிச்சு கொண்டாடுவோம்டா என்று சொல்லிக்
கொண்டே வேலணும் தண்ணியடிக்க ஆரம்பித்தான்.



இது ஒரு மீள்பதிவு
வழக்கம்போல் தமிழ்மண மேல்நோக்கிய கட்டைவிரலிலும், தமிழீஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்

Friday, December 5, 2008

உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ராஜ் டி.வி.யில் நாளை..,

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு சீனியர் இருந்தார்। அவரது காரில் சூப்பராய் ஒரு ஆடியோ சிஸ்டம் இருந்தது। அவர் தேர்வெழுதப் போவது தனி அழகாய் இருக்கும் காரில் செல்வதால் சில நண்பர்களும் செல்வார்கள்। பாட்டு ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்। அந்தப் பாட்டு






நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்।
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரலில் ஒலித்துக் கொண்டிருக்கும்।


மிகவும் ஜாலியாக தேர்வுகளுக்குச் செல்வார்।



அதன் பிறகு ஒருமுறை கே।ஜி। திரையரங்கில் அந்தப் படத்தை பார்க்க நேரிட்டது। அப்போதெல்லாம் தீபாவளிக்கு முந்தைய வாரங்களில் பழைய படங்களைப் போடுவார்கள்।அந்த சூழலில் நாங்கள் காலை காட்சிக்கு சென்றிருந்தோம். படத்தின் துவக்கமே அந்தப் பாடலோடுதான் துவங்குகிறது. வெற்றி என்ற வார்த்தைகளோடு விஞ்ஞானி முருகன் தனது கண்டுபிடிப்பினை செயலருக்குச் சொல்கிறார். வழக்கம்போல் இளமையான பெண் செயலர். வில்லனின் கையாள்,




ஒரு சிறிய குப்பியில் சூரிய சக்தியை அடைத்து வைத்து மாபெரும் அழிவு சக்தியாக அந்த கண்டுபிடிப்பு அமைகிறது. அதனை விஞ்ஞானிகளின் மாநாட்டில் நிரூபித்துவிட்டு அந்த கண்டுபிடிப்பு காகிதங்களை எரித்துவிடுகிறார். [உலக சமாதானம்]. ஆக்க சக்திக்கு ஆராய்ச்சியை தொடங்கப் போவதாக கூறிவிட்டு சுற்றுலா செல்கிறார். நீ இல்லாம ஜாலியா என்று கூறிவிட்டு நாயகியுடன் டூயடபோடுகிறார். பாடல் முடிவில் கொடியவகைத் துப்பாக்கியில் சுடப் படுகிறார். வில்லன் குலாம் அவரை கடத்தி செல்கிறது.

ஒரு வித்தியாசமான முன்னோட்டக்காட்சிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை. ஒலி குறைவாக இருப்பதாக நினைப்பவர்கள் நீங்களே கூடுதலாக்கிக் கொள்ளலாம்




ஒரு ஓட்டலில் நடக்கும் துப்பாக்கி சாகஸ நிகழ்ச்சியில் குளிர் பாணம் குடித்துக் கொண்டே சுட்டு விஞ்ஞானியின் செயலரை தோற்கடித்து அறிமுகமாகிறார் ரகசிய உளவாளி ராஜூ. ( இரட்டை வேடம் பாஸூ)




விஞ்ஞானியின் காதலியை சந்தித்து ரகசிய காகிதங்களின் நகல் இருக்கும் இடங்களை தெரிந்துகொண்டு காகிதங்களையும் விஞ்ஞானியையும் மீட்க புறப் படுகிறார்.




காதலியை பலாத்காரம் செய்ய முயலும்போது விஞ்ஞானி மெதுவாக பல திரவங்களைப் போட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது தமிழுக்கு கண்டிப்பாக இன்றுவரை புதுசுதான். ஆராய்ச்சியின் முடிவில் வெடிபொருளைத் தயாரித்து காதலியை மீட்பார். கையுறையெல்லாம் அணிந்து கொண்டு ஆராய்ச்சி செய்வார். புத்தர் சிலையைப் பார்த்த உடன் சித்தம் தெளிந்து விட்டதாக கூறுவார்.




புத்த மடத்தில் ரகசிய காகிதங்களின் ஒரு பகுதியை கைப் பற்ற போகும்போது வில்லனின் அடியாள் அங்கு காத்திருக்க, ராஜூ அடியோ அடி என்று அடிவாங்குவார் வெளியே வந்தவுடன் புனிதமான இடத்தில் சண்டை போட விரும்பவில்லை என்று கூறி திரும்ப அடித்து....................... மத நல்லிணக்கத்தை காப்பாற்றுவார்




ஹாங்காங் கடலில் இருக்கும் ஒரு நபரை சந்திக்கும்போது அந்த வீட்டில் இருக்கும் பெண் ராஜூவுடன் டூயட் கனவில் பாடி விடுவார். அடுத்த நாள் அந்தப் பெண்ணை அழைத்து தன் காதலியை இவதான் உண் அண்ணி என்று அறிமுகப் படுத்துவார். அப்போது அந்தப் பெண் பார்ப்பாரே ஒரு பார்வை போயும்போயும் இவளையா பார்வையிலேயே சொல்லிவிடுவார்.






ஒரு பாடலை முழுக்க முழுக்க நீருக்கடியில் எடுத்திருப்பார்கள். சில க்ளோசப் காட்சிகளைப் பயன்படுத்தி டூப் பயன்படுத்தி இருப்பார்களாஇல்லை உண்மையில் நம்ம ஆளுங்கதானா என்ற சந்தேகம் ஏற்படுத்தும் வகையில் நீருக்கடியில் நடணத்தை அமைத்திருப்பார்கள்.




மற்றொரு பாடலில் காலுக்கு அடியில் விமாணம் பறக்கும். நாயகிகள் கவர்ச்சியில் ஜொலிப்பார்கள்.




கட்டைவிரலை மட்டுமே பயன்படுத்தி சண்டை போடுவதாகக்கூட அமைத்திருப்பார்கள்.




பெரிய பெரிய நாய்களுடன் வில்லன் வந்து வம்புக்கு இளுக்கும் போது நாயோட திறமைய அப்புறம் பாரு என்னோட திறமைய இப்ப பாரு என்று ஒரே ஜம்ப்பில் வெளியே வந்து .................................. என்ன சொல்ல










தொழில்நுட்ப பூங்காவில் ஒரு சுற்று சுற்றி.............. கடைசியில் பாட்டெல்லாம் பாடி கண்டு பிடிக்க ஸ்கேட்டிங் எல்லாம் செய்து சண்டை போட்டு கடைசியில் சுபம்.










இருப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து பார்த்தபோது கூட எங்களுக்கு இனித்த கமர்சியல் பாயசம். இந்த தீபாவளிக்கு ரீ ரிலீஸ் ஆகி ஒரு கலக்கி விட்டது . இரண்டுபேர் இந்த படத்தை தமிழில் ரீ மேக்கிக் கொண்டு இருக்குறார்களாம்.


இது ஒரு மீள்பதிவு
-------------------------

இந்தப் படத்தின் முடிவில் எமது அடுத்த வெளியீடு
கிழக்காப்பிரிக்க தீவில் ராஜூ
என்ற விளம்பரப் பலகை இடம் பெறும். விஜயக் காந்த் கூட இதே பெயரில்தான் அடுத்த படம் எடுக்க இருக்கிறாராம்.

===================================================
தீபாவளியன்று உலகத்தொலைக்காட்சி வ்ரலாற்றில் முத்ன்முறையாக ராஜ் டி.வி.யில் இந்தப் படம் ஒளி பரப்பப் படுகிறதாம். பார்த்து ரசியுங்களேன்
=============================================================
இப்போது இது மீள்பதிவு , தீபாவளியன்று படம் பார்த்துவிட்டீர்களா?

==================================================

வருகைக்கு நன்றி, அப்படியே தமிழ்மணம், தமிழீஷ் ஆகியவற்றில் ஓட்டுப் போட்டுவிடுங்கள்.

Wednesday, December 3, 2008

தற்கொலையின் விளிம்பில்...........................

தற்கொலை செய்து கொள்பவர்கள் எழுதிய கடிதத்தை படித்தோ நண்பர்கள் சொல்லும் காரணங்களையோ கேட்டால் அனைவருக்கும் பரிதாபத்துடன் ஒரு சிரிப்பு தோன்றும்। இந்தப் பிரச்சனைகள் நமக்கும்தானே இருக்கின்றன। அப்புறம் ஏன் இவர்கள் மட்டும் தற்கொலை முடிவை தேடிகிறார்கள்। மனவலிமை இல்லாதவர்கள்தான் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றால் அதனையும் யாரும் ஏற்க மாட்டார்கள்। அதற்குத்தான் அதிகமான மனவலிமை அதிகம் தேவை என்றும் சொல்லிக் கொள்வார்கள்। புள்ளிவிவரங்களைப் பார்த்தால் அதிகமாய் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் பெண்களாகவும், அதில் வெற்றி பெருபவர்கள் ஆண்களாகவும் அமைகிறார்கள்।



முதற்காரணம் குறிப்பிட்ட சம்பவத்திக் காரணமான நிகழ்ச்சி நடைபெற்ற பின் மற்றவர்களை எதிர்கொள்வதை அவர்கள் தவிர்க்கப் பார்க்கிறார்கள்। உடனடியாக அந்த முடிவை எடுக்கிறார்கள்। பெரும்பாலும் இந்த எண்ணம் உடனடியாகவே ஏற்படுகிறது। இந்த எண்ணம் பெரும்பாலும் வெகு காலத்திற்கு முன்னரே ஏற்பட்டு குறிப்பிட்ட சம்பவம் தூண்டுகோளாக அமைகிறது।



இன்னொரு வகையினர் உடனிருப்பவர்களை பயமுறுத்துவதற்காக செய்வது இதில் அவர்கள் வெற்றியடைகிறார்கள்। அதாவது தோல்வியடைந்தால் அதில் வெற்றியாகவும் வெற்றியடைந்தால் அது தோல்வியாகவும் அமைகிறது। இதில் ஒரு வகையினர் ஒன்றுமே செய்யாமல் செய்து விட்டதாக சொல்லி ரகளை பண்ணுவார்கள்। இவர்களுக்கு கிராமத்தில் கொடுக்கும் மருந்து சிறப்பாக அமையும்



(...............................................................................................................) இன்னொருமுறையில் தளபதி ரஜினியை அடிப்பது போல் முழங்காலில் நிற்க வைத்து கைகளை பின்னால் கட்டி வைத்து வாந்தி எடுக்க வைத்தால் இரண்டாம் முறை முயற்சிக்கும் எண்ணமே தோன்றாமல் போய்விடும்



இன்னொரு வகை। நோய்வாய் பட்ட நிலையிலும் மற்றவர்களால் கைவிடப் பட்டநிலையிலும் எடுக்கப் படும் முடிவு। இதற்கு என்ன தீர்வு என்பது உங்கள் அனைவருக்குமே தெரியும்।


சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி பத்திரிக்கைகளில் வந்தது, மூன்றாம் முறையாக பெண்குழந்தை பிறந்ததால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்। இவர் எந்த உணர்வில் தற்கொலை செய்திருப்பார் என்று ஏதாவது தெரிகிறதா............................


இதி விடுபட்ட கருத்துக்களை பின்னூட்டமாகக்கொடுங்களேன்

Monday, December 1, 2008

நான்கு வகை பில்லா(டான்)கள்

அடிபிறழாமல் எழுதுக என்று தமிழ் பாடத்தில் கேட்பார்கள்। அது போல் அமைந்த படங்கள்தான்। அமிதாப்பின் டான்ம் ரஜினியின் பில்லாவும்।


தான் வளர்க்கும் குழந்தைகளுக்காக தன் உயிரையே பணயம் வைத்து உலகத்தையே அச்சுறுத்தும் கடத்தல் கூட்டத்தைப் பிடிக்க உதவும் தெருப்பாடகன் ராஜாவின் கதைதான் பில்லா॥ அதுதான் டான்। அமிதாப்பின் படத்தில் இருக்கும் கதை திரைக்கதை, கதாப்பாத்திரங்களின் உடைகள் பெயர்கள் அனைத்தும் ஒரே மாதிரி அமைத்திருப்பார்கள்। ரஜினிக்கு மட்டும் பில்லா என்று பெயர் வைத்து இருப்பார்கள்। யார் கொடுத்த யோசனையோ॥ தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரம் ப்ளாஷ்பேக் மற்றும் உடைகள் அனைத்தும் மறுபதிப்பு செய்யப் பட்ட படம் தான் பில்லா। டான் மேல் ரசிகர்களுக்கு ஏற்படும் மலைப்பும் அப்பாவி ராஜாமேல் ஏற்படும் பரிதாபமும், ரசிகர்களின் அனுதாபமும்... தப்பிக்க அவரது முயற்சிகளுக்கு ரசிகர்களின் விசில்களும் இரண்டின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தன। பில்லாவின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு। அது பெரும்பாலான தமிழ்ரசிகர்களுக்கு டான் ப்ற்றி தெரியாததும், தெரிந்தவர்கள் பார்க்க முடியாததுமே..........



இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ஷாரூக் கான் ரீமேக் செய்கிறார்। திரைக்கதையில் புதுமைகள் புகுத்த முற்படுகிறார்கள்। ஆனால் கதையிலேயே லேசான திருத்தங்கள் செய்யப் படுகின்றன। கதையில் ஏற்படுத்தும் சின்ன மாறுதல் எவ்வாறு கதையையே மாற்றீ விடுகிறது என்பதனை ஏற்கனவே பார்த்துள்ளோம்। விரும்புவர்கள் இந்தச் சுட்டியில் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்.



ஷாரூக்கினை ஆள்மாறாட்டத்திற்கு அனுப்பியவர்தான் கொள்ளைக் கூட்டத்தலைவன் என்னும்போது ஷாருக் மட்டுமல்ல நாம்கூட குழம்பி விடுகிறோம்। ஷாரூக் கொஞ்சம் யோசித்து ஒரு காரணம் கண்டு பிடித்து அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிக் கொள்ளும்போது நம் மணம் அதை ஏற்க மறுக்கிறது। இருந்தாலும் படம் பிரமாண்டமாகச் செல்லும் போது அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நாமும் சென்று விடுகிறோம்। இந்திய சினிமாக்களுக்கு லாஜிக் தேவையில்லை என்பது மற்றொரு முறை நிரூபணமாகிறது।



அடுத்து வைப்பதுதான் பெரிய ஆப்பு ரசிகனுக்கு வைப்பதாக நினைத்து தனக்குத்தானே வைத்துக் கொண்டது। கடைசியில் உயிருடன் இருப்பது ஒரிஜினல் டான் தானாம்। அப்பாவியை அவன் கொண்று விட்டதாக காட்டும்போது ரசிகர்களுக்கு ஏமாற்றமே..... மும்பை தாதாக்கள் வெற்றி பெறுவதாக அமைக்கப் படும் கதைகளுக்கு வைக்கப் பட்ட பெரிய ஆப்பாகவே கருத வேண்டும்। பாஷாவின் உயிரைக் காப்பற்றியது போல் டானைக் காப்பற்றியது ரசிகற்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை। இரண்டாம் முறை பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தில் வரும் திருப்பங்கள் உப்புச் ச்ப்பில்லாமல் அமைகின்றன। பாஷாவில் கதை தெரிந்தவர்களுக்கு பாஷா எப்பொது பொங்கி எழுவார் என்பது தெரிந்தாலும் ஒரு ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகும்। இதில் தெரிந்து விட்டதால் தேவையில்லாமல் டான் ஓடி ஒளிவதாகத் தோன்றும் ஒரு தமாஷாக அமைந்திருக்கும்।



இதே நிலைதான் கொடி பற்க்குது படத்துக்கும் ஏற்பட்டது। விக் வைத்த, விக் வைக்காத ரஜினிகள் மாறீ மாறி சவால் விடும்போது ஏற்படும் த்ரில் இருவரும் ஒரே ஆள் என்பது தெரிந்தபின் சப் பென்று ஆகிவிடுகிறது। இரண்டாம் முறை பார்க்கும்போது த்மாஷு தமாஷு.....



ஒட்டு மொத்தத்தில் டான் (ஷாருக்) எல்லாத்தையும் ஏமாத்திடுச்சு


அஜித்தின் பில்லாவின் வெற்றிக்கு ரஜினியின் பில்லாவும் ஒரு காரணம்। திரைக்கதையில் துணைப் பாத்திரங்களை மட்டும் வெட்டி விட்டு ஒரு ஆங்கில டப்பிங் படம் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்। இதற்கு நயன் மற்றும் நமீ ஆகியோரின் உதவி பெரும் பங்கு வகிப்பார்கள்। மொத்தத்தில் ஷாரூக் தோற்றதால் அஜித் வென்றார் என்றே சொல்லலாம்।


மறக்காமல் மேல் நோக்கிய தமிழ்மண கட்டை விரலிலும், தமிழிஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails