Tuesday, April 26, 2011

அவன் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுது அவன் கெட்டவந்தான்

http://2.bp.blogspot.com/_6V2wLbrjr_Q/TItl7r-Sn-I/AAAAAAAAALc/4Re9oY2MMzw/s1600/9137_big.jpg

ஜான் டேவிட் 1996-97 களில் பத்திரிக்கைகளில் தவறாது இடம் பெற்ற பெயர். உச்ச நீதி மன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்கு பின்னர் மீண்டும் பத்திரிக்கைகளில் இடம் பெற்று வருகிறது.  சுடச் சுட செய்திகளையும் விமர்சனஙகளையும் தரும் வலைப்பூக்கள் மீண்டும் அந்த நிகழ்ச்சிகளை அசை போட்டு வருகின்றன.   இந்த இடுகை அந்த நிகழ்ச்சி பற்றியோ தீர்ப்புக்கள் பற்றியோ பேசப் போவதில்லை. குறிப்பாக ராக்கிங்கிற்கு துளிகூட ஆதரவு தரப் போவதில்லை. ராக்கிங் ஒழிய காரணமானவர்களை கைகூப்பி நன்றி சொல்பவர்களில் நானும் ஒருவந்தான்.

தீர்ப்பு வெளிவந்த உடன் வந்த இடுகை ஒன்றில் பின்னூட்டம் போட்டவர்கள் சொன்ன சில வார்த்தைகளே என்னை இதை எழுதத் தூண்டின.

ஒரு நபர் தன்னை ஜான் டேவிட்டுடன் படித்ததாக அறிமுகப் படுத்திக்க்கொண்டு ஜான் டேவிட் பள்ளியிலேயே கராத்தா கற்றுக் கொண்டு ஒரு அடிதடிப் பையனாக இருந்தார் என்று கூறுகிறார்.


படிக்கும் காலங்களில் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொள்வது என்பதும், தவறுகளைப் பார்த்துக் கோபப் படுவதும் என்னைப் பொறுத்தவரை மிகவும் நல்ல விஷயங்கள். பள்ளிக் காலங்களில் வரும் கோபத்தால் வரும் பின்விளைவுகளையும் அதனை சமாளிக்கும் வல்லமையும் பள்ளிக் காலத்திலேயே வருவது மிகப் பெரிய வரம். பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் நமக்கு உதவ பெற்றோர் நண்பர்கள் என்று பலரும் வருவார்கள். பிற்காலத்தில் அதே தவறை நாம் செய்தால் நமக்கு உதவ மிகச் சிலரே வருவார்கள் அவர்களும் யோசித்துத்தான் செய்வார்கள். கல்லூரிக் காலங்களில் இது போன்ற தவறுகளைப் பார்த்து பொங்கும் இயல்புடையவர்கள்தான் மாணவர் பேரவை போன்ற அமைப்புகளை நடத்த முடியும்.  மாணவர் பேரவை வழிநடத்துவது என்பது மிகப் பெரிய நிறுவனத்தை வழிநடத்துவது போன்ற அதில் கிடைக்கும் அனுபவங்கள் விலை மதிப்பற்றவை.


இன்னொரு பெருந்தகை அவன் முகத்தைப் பார்த்தாலே சகிக்கவில்லை. வில்லன் போல உள்ளது என்கிறார். அகத்தின் அழகு முகத்தில் என்று சொன்னால்கூட அவரவர் பார்க்கும் கோணத்தில்தான் அது அமையும். முகம் என்பது நம்மால் விரும்பிப் பெற்றுக் கொள்வது அல்ல. நம் முன்னோர் நமக்கு அளிக்கும் சொத்து. அது தவிர அவரவர் வழித்தோன்றல்களே அவரவர்க்கு அழகாகத் தெரிவார்கள். உலக அழகி லாரா தத்தா, யுக்தா முகி போன்றவர்கள் இந்திய மக்களுக்கு அழகிகளாகவா தெரிந்தார்கள்.   மேற்கத்த்தியவர்க்கு மேற்கு அழகு, கிழக்கத்தியவற்கு கிழக்கு அழகு .அழகு என்று மெச்சிக் கொள்ளலாமே தவிர ஒரு குறிப்பிட அமைப்பில் முகம் உடையவர்களை கொடியவர்கள் என்று சொல்ல யார் அவர்களுக்கு உரிமை கொடுத்தது?


உங்களுக்கு அந்த முக அமைப்பு பிடிக்கவில்லை என்றால் அவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் அவ்வளவுதான் சொல்லமுடியும்.



எங்கள் கல்லூரியில் மூத்த நண்பர் இருந்தார். அவரது நடந்து போனாலே இளையவர்கள் பயந்து நடுங்குவார்கள். எனக்குத் தெரிந்து யாரையும் அவர் அடித்ததோ, திட்டியதோ கிடையாது.  அவர் பார்வையே ராஜபார்வை என்று சொல்லலாம். அவரது வகுப்பு மாணவர்களுக்கு அவர் மிக இனிமையானவர். எங்களைப் போல சில இளையவர்களுக்கு அவர் இனிமையானவர் மட்டுமல்ல  ஒரு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர்.  கல்லூரியின் பெரும்பகுதி மாணவர்கள் பயந்து நடுங்கிய அவர் நிர்வகிக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்ற ஆண்டு ஐ.எஸ். ஓ 9000 தரச் சான்று இந்த ஆண்டு பெற்றிருக்கிறது. நெய்வேலிப் பகுதியில் இருக்கிறது அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம். ஒரு அரசு அலுவலகம். அதுவும் ஏழை எளிய மக்கள், பிணியாளர்கள் தினமும் வந்து போகும் இடம் ஐ.எஸ்.ஓ.  தரச் சான்றிதழ் பெற்றுள்ளது என்றால் அதன் நிர்வாகி எவ்வளவு பெரிய ஆளுமைத் திறன் பெற்றிருக்க வேண்டும்.  அவரைப் பார்த்து பயந்தவர் இன்று வாய் பிளந்து நிற்கிறார்கள்.   அவரது சக மருத்துவர் சொன்னார் அண்ணாச்சியைப் பார்த்து அனைத்து அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் பயம். அவர் சொன்னால் உடனே அதை செய்துவிடுவார்கள் அதனால்தான் எங்கள் ஆரம்ப சுகாதார நிலையம் மிக எளிதில் ஐ.எஸ்.ஓ  தரச் சான்றிதல் பெற முடிந்தது என்றார்.


எப்படித்தான் நம் மக்கள் ஒரு நபர் பள்ளிக் கல்லூரியில் துடுக்காக இருப்பதையும்  முகம் தமிழ் மண்ணோடு கலந்து இருப்பதையும் வைத்து ஒரு முடிவு கட்டுகிறார்கள் என்றே தெரியவில்லை.

====================================================
1996 நிகழ்ச்சி என்பது விபத்து. அதில் பாதிக்கப் பட்டவர் ஓரேயடியாய் போய்விட்டார். அவர் பெற்றோரும் அறப்பணிகள், கல்விப்பணிகள் என்று காலந்தள்ள ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பாதிப்பை ஏற்படுத்தியவர் குடும்பத்திற்கு மாறாத ரணமாக மாறி அழுந்திக் கொண்டே இருக்கிறது. கல்வியாளர்களும் அந்த விபத்தினைப் பயன்படுத்தி ராக்கிங்கை பெருமளவு ஒழித்து விட்டார்கள். கடும் சட்டங்களையும் கொண்டுவந்து விட்டார்கள்.

============================================================





=====================================================================


=====================================================================



இந்த மாதிரி படங்கள் இந்தியாவில் 1957லேயே வந்துவிட்டன. இன்னும் நம் மக்கள்தான் உணர மறுக்கிறார்கள்

Monday, April 25, 2011

யார் சொல்லும் தேர்தல் கணிப்பு பொய்த்துப் போகும்?

இன்று நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தபோது தேர்தல் பற்றிப் பேச்சு வந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துச் சொல்லிக் கொண்டு இருந்தோம். அப்போது வயதில் மூத்த நண்பர் ஒருவர் போப்பா.., ஒவ்வொருத்தனும் ஒவ்வொண்ணச் சொல்றான். ஊழல் ஆரம்பிச்சு, மின்சாரம் வந்து, சாலை போடுவது, டாஸ்மாக் திறந்தது, ராஜா பக்‌ஷே விவகாரம் எல்லாம் பேசுறாங்க. நம்மால் ஒண்ணும் கணிக்க முடியலயே அப்படின்னு ரொம்ப ஃபீல் பண்ண ஆரம்பித்தார்.  இன்னொரு நண்பர், அண்ணே அது ரொம்ப சுலபம்ண்ணே நான் சொல்ற வகை ஆட்கள் சொல்றத அப்படியே எதிர்மறையா எடுத்துக்குங்க. அப்புறம் கணக்குப் பாருங்க எல்லாம் சரியா வரும் என்றார்.

அவர் சொன்ன ஆட்கள்:-

1.ரஜினி படம் பார்த்து விட்டு நல்லாவே இல்லை என்று சொல்பவர்கள்.

2.கமலஹாசன் படம் பார்க்காமலே சூப்பர் என்று சொல்பவர்கள்

3.சச்சின் டெண்டுல்கரை சுத்தி சுத்தி திட்டிவிட்டு சச்சின் அவுட் ஆனதும் டிவியை விட்டு நடையைக் கட்டுபவர்கள்

4.எம்.எல்.எம் சோப்புப் போட்டால்தான் சிவப்பானதாகச் சொல்பவர்கள்

5.அலுவலகத்திற்கு தினமும் ஹிண்டு வாங்கி வந்து முதல் கடைசி பக்கம் மட்டும் படிப்பவர்கள்

6.இருமல், சளி என்றால்கூட கோயமுத்தூர் போகும் புள்ளிகள்

7.பகுத்தறிவு கொள்கையில் பிஹெச்டி வாங்கி விட்டு மனைவி சொன்னதற்காக கையில் வண்ணமயமாக கயிறுகள் கட்டிக் கொண்டு சுற்றுபவர்கள்.


நண்பரிடம் இது என்ன கணக்கு என்று கேட்டபோது, இந்த ஆட்கள் அவர்களின் தெரிவை வெளியே சொல்ல தயங்குவார்கள். ரஜினி படம் என்றால் நன்றாக இருக்காது, சச்சின் சதம் அடித்தால் தோற்கும் என்று பேசினால்தான் மற்றவர்கள் மதிப்பார்கள் என்று நினைப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களித்தால் கூட வெளியே சொன்னால் ஒரு மாதிரி பார்ப்பார்கள் என்ற எண்ணத்தில் அந்தப் பகுதியில் என்ன பேசிக் கொள்கிறார்களோ அதையே சொல்லுவார்கள்.


உங்களுக்கு என்ன தோன்றுகிறது?


Saturday, April 23, 2011

மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி வருபவரா நீங்கள்?


உன் மனைவிக்கு மல்லிகைப் பூ வாங்கிக் கொடுப்பதற்கு பதிலாக ஒரு புத்தகம் வாங்கிக் கொடு 

என்று ஒரு பெரியவர் சொல்லியிருக்கிறார்.

புத்தகங்கள் சில எழுத்துக்கள் மூலம் எண்ணங்களையும் கருத்துக்களையும் குவித்து வைத்திருக்கும் இடம்.  அந்த புத்தகங்கள் ஒரு மனிதனை என்ன வேண்டுமானாலும் செய்து விட முடியும். வாழ்வின் அடிப்படை ஆதாரங்களையும் அவசியங்களையும் கற்றுக் கொடுப்பவை புத்தகங்கள்.  மனப்பாடம் செய்து ஒப்புவிக்க அல்ல, மனதில் பதித்து ஒத்து வாழ வழி செய்பவை புத்தகங்கள்.  பகுத்தறிவினை பரவலாக்க உதவுபவை புத்தகங்கள். 


செய்தித்தாள்களையும் கூட புத்தகங்களாகக் கொள்ளலாம். இப்போதெல்லாம் படிக்கும் வழக்கம் குறைந்து விட்டதாகச் சொல்லுகிறார்கள். படிப்பவை அப்படியே மனதிற்குள் காட்சிப் படுத்திக் கொண்டே செல்வது படிப்பின் உச்ச கட்டம். ஆனால் கற்பனை செய்ய சோம்பல் படும்போது வந்தது தான் நாடகம் அதன் அடுத்த கட்டமாக திரைப்படமும் சின்னத்திரையும் இருக்கின்றன், அவைகளும் ஒரு வடிவில் புத்தகங்கள்தான். ஆனால் நமக்கு என்றுமே போதைச் சுவையில்தான் விருப்பம் செல்லும் அல்லவா அதுபோல புத்தகப் படிப்பு என்பதும் வடிவம் மாறிக் கொண்டேதான் செல்கிறது. 


எப்படி இருந்தாலும் அடிதடி, வெட்டி நாவல்களைப் படித்துக் கொண்டிருந்தாலும்கூட கற்பனையை வளர்க்கும் வடிவிலான பொன்னியின் செல்வன் போன்ற நாவல்களைப் படிக்கும்போது புத்தகங்களின்பால் ஒரு பிடிப்பு உருவாகிவிடுகிறது. 



எப்படி எப்படியோ சுற்றிக் கொண்டிருந்த நான் இப்போது முகநூலில் பகிர்ந்து கொள்ளவும் நண்பர்கள் பகிரும் விஷயங்களுக்கு பதில் சொல்லவுமாகவே பல அரிய, முக்கிய விஷயங்களைப் படிக்க வேண்டியுள்ளது.  


எனவே கண்டிப்பாக படித்தல் என்பது அடுத்த கட்டத்திற்குச் சென்று மீண்டும் ஒருமுறை அறிவுப் புரட்சி மலரும்போலத்தான் தோன்றுகிறது.  


இவ்வாறாக இணைய நண்பர்களுக்கு வசதியாக பதிப்பகத்தாரும் தங்கள் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களை மட்டுமாவது இலவச மின்னூலாக வழங்கினால் சமூக வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


இன்று  உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்


Friday, April 22, 2011

மாப்பிள்ளையில் அனுஷ்கா - ஒரு மாதிரியான பார்வை

தமிழில் பல்வேறு படங்கள் ரீமேக் என்று அதிகார பூர்வமாக அறிவிக்காமல் ரீமேக் நிறைய செய்து உள்ளார்கள். சில படங்களை சொல்லிவிட்டே எடுப்பார்கள். தனுஷின் மாப்பிள்ளை ரீமேக் , படு கேவலமாக இருப்பதாக சொல்லி இணையத்தில் பேசி முடித்துவிட்டுந்தாலும் நமக்கு சில நாட்களுக்கு முன்புதான் வாய்ப்பு கிடைத்து பதிவிடும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது.




http://chennai365.com/wp-content/uploads/movies/Mappillai/Mappillai-Stills-003.jpg
திரையரங்க வாசலிலேயே அந்த ஹன்ஷிதா அம்மையார் ஒரு பக்கமும் மணிஷா அம்மையார் மறுபுறமும் நின்று தனுஷ் காட்சி அளித்திருந்தார். மணிஷா கொடுத்திருந்த பொஸ் அந்தக் காலத்தில் குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்  பாட்டுக்கு கொடுத்திருந்த மாதிரி இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்திருந்தார்.  அதைப் பார்த்த உடனேயே நமக்கு ரஜினியின் மாப்பிள்ளையை விட சிரஞ்சீவியின் கில்லாடி மாப்பிள்ளை நினைவுக்கு வந்து தொலைத்தது, ரஜினியின் மாப்பிள்ளை கூட சிரஞ்ச்சீவி தயாரித்ததுதான் எனவே அது சிரஞ்சீவியின் மாப்பிளையாகவும் கொள்ளலாம். ஆனால் இங்கு சிரஞ்சீவியின் மாப்பிள்ளை என்பது தெலுங்கு மொழிமாற்றப் படம். அதில் ரம்யா கிருஷ்ணன்., ரம்பா, மற்றும் லட்சுமி ஆகியோர் நடித்திருப்பார்கள். அதில் ஒரு முக்கியக் காட்சியாக சில நிமிட இருட்டுவேளையில்  சிரஞ்சீவியுடன் குலாவியது யார் என்பது மூன்று பெண்மணிகளுக்குள் குழப்பம் வரும்.


அந்தப் படத்திலாவது இருட்டில் நடப்பதாக கருப்ப்பு இருட்டைக்காட்டி, மீதத்தை வார்த்தையில் சொல்லி விடுவார்கள். இதில் மணிஷாவைக் கட்டியே பிடித்து விடுகிறார்கள்.   (நடுநிசி நாய்களையே பார்த்த நம்க்கு இது எம்மாத்திரம்.) அப்போதுதான் தோன்றியது பேசாமல் இந்தப் பாத்திரத்துக்கு அனுஷகாவைப் போட்டிருந்திருக்கலாம். இரட்டை வேடத்தில் நடிக்க விட்டிருந்தால் கம்பீரத்துக்கு கம்பீரமும் ஆச்சு, கவர்ச்சிக்கு கவர்ச்சியும் ஆச்சு என்று மகிழ்ந்திருக்கலாம்.

http://www.cineherald.com/newsimage/nt_9951_Anushka_Panchakshari_movie.jpg
மனீஷா முதல் காட்சியில் மட்டும் அழகாக தெரிகிறார். அதற்கடுத்த காட்சிகளில் எல்லாம் ராஜ ராஜேஷ்வரியை நினைவு படுத்துவதற்குப் பதிலாகஏனோ ஜெயமாலினியை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார். ஒரு காட்சியில் நீச்சல் குளத்திலிருந்து வருவதுபோல காட்டுகிறார்கள். அவர்களூக்கே பொறுக்கவில்லை போல முழு உடையில் துவட்டி உடை மாற்றிய பின் நீச்சல் குளக்கரையில் உரையாடுகிறார்.


மாப்பிள்ளை , மண்டபத்திற்குள் எப்படி வந்தார் போன்ற லாஜிக்குகளையெல்லாம் எதிர்பார்க்கவில்லை என்றாலும்  ராஜ ராஜேஷ்வரியின் முகம் மனிஷாவிற்கு வரவே இல்லை. முகத்தில் ராஜ கோபம் தென்படுவதற்குப் பதிலாக வெட்கப் படுவது போலவே தெரிகிறது.
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRDJHaDeUywRIbVAOQ-uKaFXDHa87-lCgzqivGY_DI3aGrNLwM6kg&t=1நெற்றிக் கண் ரஜினியை இமிடேட் செய்து விவேக் வரும் காட்சிகளில் நமக்கே குமட்டில் குத்தவேண்டும்போல்  தோன்றும்போது ராஜேஷ்வரி அவர்கள் லூசு மாதிரி அவரை நம்முவது கொஞ்சம் அல்ல ரொம்பவே டூ மச்.  விவேக்கிற்கு பதில் கருணாஸையே நடிக்க வைத்திருக்கலாம்.  அல்லது ஏதாவது ஒரு இலம் ஹீரோக்களைப் போட்டு ஒரு கண்ணீர் காதல் ட்ராக்கை ஓட விட்டிருக்கலாம்.  மொத்தத்தில் விவேக் கின் மார்க்கெட்டையும் சேர்த்து இந்த படத்தில் ஒழித்துவிட முடிவு செய்தது போலவே தோன்றியது.



ஹீரோயினைப் பார்த்து நிறைய பதிவர்கள் ஜொல்லுவிட்டதைப் போல ஹன்ஷிதா மோட்டுவாணி அப்படி ஒன்றும் சூப்பராக இல்லை. பழைய குஷ்பூ எந்திரன் வேடம் போட்டிருந்தால் எப்படி இருப்பாரோ அப்படி இருக்கிறார்.  சீவலப் பேரி பாண்டி படத்தில் வரும் அஹானாவின் சாயல் இருக்கிறது. முடிகூட கலையாமல் படத்தில் வருகிறார். அலுங்காமல் குலுங்காமல் போகிறார். அவர் அதிக வேலை செய்த இடமே போதையில் தனுஷ் ஹன்ஷதாவின் அறைக்குள் செல்வதும் அதைத் தொடர்ந்து நடக்கும் காட்சிகளுமே ( ரேப் செய்யப் பட்டதாக சொன்னாலும் அங்கே ஒன்ன்ன்னுமே இல்லை).

வசனங்களும் படு சொத்தை.  சொல்லிக்க ஒண்ணுமே இல்லை.


கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருக்கும் தனுஷின் தங்கை முகத்தை ஒரு குளோசப் கூட காட்டவில்லை.

படத்தை மொத்தமாக எடுத்து பின்னர் குலுக்கல்முறையில் காட்சிகளைத் தொகுத்து வழங்கியதுபோல் இருந்தது.


நெருடியவை :-
ஆறுமுகமாக நடித்த ரஜினி படிப்பில்தங்கப் பதக்கம் வாங்கிய நல்லபிள்ளை.  தனுஷயையும் அப்படியே காட்டித் தொலைத்திருக்கலாம். சரவணன் என்று பேரை மாற்றியது கதாபாத்திரத்தையும் போட்டுத் தள்ளிவிட்டார்கள்.

அந்தப் படத்தில் அமலா தென்றல் போல கடந்து சென்றார் என்றால் ஹன்சிதா ஷோகேஸில் இருக்கும் ஐஸ்கிரீம் போல இருக்கிறார்.

ராஜேஷ்வரி மொத்தமாக நெருடுகிறார்.


மணிஹா நான் ராயல் என்றதும் தனுஷ் நான் லோக்கல் என்று சொல்கிறார். இதை ஏன் நாங்க டீசண்ட், அல்லது கல்சுரல், எங்களுக்கு பண்பாடு இருக்கு என்று சொல்லகூடாது.

மகிழ்ச்சியான விஷயம்

ராஜராஜேஷ்வரி என்ற பதம் படத்தில் எந்த இடத்திலுமே உபயோகப் படுத்தப் படவில்லை. ராயல் என்ற சொல்கூட அந்த சவாலில் மட்டுமே உபயோகப் படுத்தப் பட்டுள்ளது.


Monday, April 18, 2011

sweet sixteen

கல்லூரி முடிந்த உடன் சுமத்ராவை மாணவர்கள் நிறுத்தினர்.


இளவரசனை நாளைக்கு சஸ்பண்ட் பண்ண போறாங்களாம். நாளைக்கு காலைல வி.பி. வரச் சொல்லி இருக்காங்க. நீ பாட்டுக்கு போயிட்டு இருக்க.

அவன் ரேக்கிங் பண்ணியிருக்கான். அதுக்கு நான் என்ன பண்ண முடியும். இது சுமத்ரா

அவன் என்ன பண்ணினாலும் பண்ணாட்டியும் நீதான் வந்து பேசணும். நீதான் இப்ப ரெப்பு.

பாருங்கப்பா; ஜூனியர் பொண்ண ரேக் பண்ணியிருக்கான்; அதை தட்டிக் கேட்ட இன்னொரு ஜூனியர் பையன அடிச்சிருக்கான். அத ஏ.பி. வேற பாத்திருக்காங்க. நான் என்ன பண்ண முடியும்.

இப்டியே பேசின உன் மண்டைதான் உடையும். மொதல்ல சஸ்பண்சன் ஆர்டர கேன்சல் பண்ண வழியப் பாரு. சச்சின் தனக்கே உரித்தான பன்ச் டயலாக்கோடு தானும் இருப்பதை உறுதி படுத்தினான்.

என்ன நடந்ததுன்னு நாமதான் சொல்லணும் சுமி.., ( பேச்சோடு பேச்சாக அஜித் அவளுடைய பெயரை சுறுக்கி கூப்பிட ஆரம்பித்தான்.

அஜித் போன்றவர்கள் பேச ஆரம்பித்த பின்னர் சுமித்ரா கொஞ்சம் நிகழ்காலத்திற்கு வர ஆரம்பித்தாள்.
என்ன நடந்துச்சு? சுமித்ராவின் அல்லக்கை ஒருத்தி கேட்டாள்.

ரொம்ப நாளாவே நம்ம இளவரசன் ஜூனியர் வினிதா பின்னால் சுத்திட்டு இருந்தான்ல.

ஆமா ..., நீங்க ரெண்டு பேர் கூட உஷாபின்னாடி சுத்திட்டு இருத்தீங்க, அதை சாக்கா வெச்சு ஒருத்தர ஒருத்தர் சகலைன்னு வேற கூப்பிட்டுக்கிட்டு திரியறீங்க, நேரங்காலம் தெரியாமல் சுமித்ராவும் நகைச்சுவை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

இப்ப இளவரசு மேட்டருக்கு வருவோம். இப்ப என்ன ஆச்சுண்ணா இரண்டு பேரும் தினமும் மதிய இடைவேளையிலும் வகுப்பு முடிஞ்சதும் கடலை போட ஆரம்பிச்சிட்டாங்க. அது கடந்த ஒரு வாரமா தினமும் நடக்க ஆரம்பிச்சிருச்சு.

ஐயோ.., ஐயோ.., என்னத் தவிர எல்லாப் பசங்களும் ஒரு திட்டத்தோடுத்தான் சுத்திட்டு இருக்கீங்களாடா.., வழக்கம்போல சச்சின் தனது முத்திரையை பதிக்க ஆரம்பித்தான்.

டேய் நடந்தத சொல்லுங்கடா இது சார்லி

இப்ப என்னண்டா வெள்ளெலி கூட கடலை போடற்து அவங்க பேட்ச்ல அக்ஷ்ய்க்கு புடிக்கல.., கொஞ்சம் இடைவெளிவிட்டு லோலாயி பண்ணிட்டு இருந்தவன். இன்னிக்கு பக்கத்திலயே வந்து கமெண்ட் அடிச்சிருக்கான்.

வெள்ளெலியா?

வினிதா பேருதான் வெள்ளெலி

உடனே தம்பிக்கு கோபம் வந்து அடிச்சிருக்கான். அதத்தான் ஏ.பி. பார்த்திருக்கார்.

அவன் ஃபஸ்ட் இயர் அப்படிங்கறதால அத ராக்கிங்கா காட்டி யிருக்கார். தவிரவும் அவர் வரும்ப்போதெல்லாம் இவன் பாட்டுக்கு வெள்ளெலிக்கூட பேசிக்கிட்டே இவருக்கு ஒரு வணக்கம் கூட போடாம இருந்திருக்கான். அவரும் ஒரு வாரம பார்த்திருக்கார்.

என்ன பேசிக்கிட்ட்ட்ட்டா..., ஓ.ஜி. போஸ்டிங்கில் இருந்த ஒரு மாணவன் கொஞ்சம் வேகமாகவே கத்திவிட்டான்.

அடச்சீ சும்மா இருடா.., எவ்ளோ சீரியஸா பேசிக்கிட்டு இருக்கோம். நீ வேற இது அஜித்

இன்னிக்கும் பார்த்திட்டார். அதுதான் போட்டுக் கொடுத்திட்டார். மீண்டும் சார்லி சொன்னான்.

இவ்ளோ மேட்டர் நடந்திருக்கா. இப்ப நான் என்ன பண்றது? நிஜமாக புரியாதது போல பேசினாள் சுமித்ரா.

இப்ப ரெண்டு வழி இருக்கு.

1. அடிக்கவே இல்லைன்னு நாம நிக்கலாம்

அதுக்கு வழியே இல்ல. ஏ.பி.கண்முன்னாடி அடிச்சிருக்கான்.

2. அக்ஷய் பண்ணினத நாம் நிரூபிக்கணும்.

அப்ப நாம அப்படியே பண்ணிடலாமே அந்த வெள்ளெலி ச்சீ வினிதாவ கூப்பிட்டு சொல்லச் சொன்னா சொல்லிட்டுப் போறா..., இது சுமத்ரா

அதெப்படிச் சொல்லுவா..., என்னத் தப்பா பேசுவாங்க அதுனால நீயெ பார்த்துக்க அப்படின்னு சொலிட்டு ஒதுங்கீட்டாளாம்.

இந்த பொம்பிளங்கலே இப்படித்தான் , சிவப்பு ரோஜாக்கள் சின்னப் பையன் ஒரு ஓரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவள் சொல்றதிலயும் நியாயம் இருக்கில்ல

ஏன் சொல்ல மாட்ட, போன வருசம் நீயும் அப்படித்தானே சொல்லிக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்த

சரி அத விடுங்கடா.., இப்ப என்ன பண்றது.

அக் ஷய் பண்ணினத நீருபிக்க ஒரு வழி அந்தப் பொண்ணுவந்து ஒத்துக்கணும். அப்படி இல்லேண்ணா அவனே ஒத்துக்கணும்.

அவன் ஒத்துக்கற மாதிரி தெரியலயே ஏற்கனவே வெள்ளெலி வேற அவன இரி பண்ணிட்டு இருந்திருக்கா.. (இரி=இரிட்டேட் ன் சுருக்கம்)
அப்ப வெள்ளெலி சொன்னாலும் நம்ப மாட்டாங்க..,

ஆமாமா, செல்லாது; செல்லாது.

அதுக்கு நானொரு ஐடியா வெச்சிருக்கேன். நீ என்ன செய்யற நாளைக்கு காலைல பத்து மணிக்கு வி.பி. ரூமுக்கு வந்திரு.

நாளைக்கா? நாளைக்கு முடியாதே! துறைத்தலைவர் வகுப்பு எடுக்கிறார். நான் தான் கேஸ் பிரசண்ட பண்ணனும். பண்ணலேன்னா தொலைச்சிடுவார்.

தாயி இதெல்லாம் நீ ரெப் ஆகறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும். நீ நாளைக்கு ஸ்கூட் விடு. அவ்வளவுதான்,

நீ இறுதி ஆண்டு தேர்வுக்கு போறதுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்கு. அதுக்குள்ள துறைத்தலைவர் ஓய்வு பெற்றுவிடுவார். நீ கட் அடிச்சித்தான் ஆகணும். நாங்கெல்லாம் கட் அடிச்சிட்டுத்தான் இருக்க போறோம். சச்சினின் இன்னொரு பன்ச் வெளிவந்தது.

இல்ல இன்னிக்கு கூட துரைத்தலைவர் கூப்பிட்டு கேட்டாரே! நாளைக்கு நான் போகலேனா தொலைச்சிடுவார். நான் வேணும்னா வார்டு வகுப்ப வேணும்ணா கட்டடிச்சிட்டு வந்திடரனே அழுதுவிடுவாள் போலிருந்தது.

உனக்கு இருசக்கர வாகனம் ஓட்டத்தெரியுமா?

ம். சைக்கிள் நல்லா ஓட்டுவா! நாமதான் அன்னைக்கு பார்த்தோமே !
அடுத்த பன்ஞ்சை சச்சின் வெளியிட்டான்.

அப்ப ரெண்டாம் எண் பேருந்த புடிச்சி கிளம்பி வந்திரு.

சீஃப் வகுப்பு, அவர் எத்தனை மணிக்கு வேணும்னாலும் முடிப்பார்.

அது நீ ஒழுங்கா கேஸ் பிரசண்ட் செஞ்சாத்தான். நீ ஊத்தை விடு. அவரும் சீக்கிரம் விட்டுவிடுவார்.

நீ வந்தாப் பரவாயில்லை. அப்படியில்லைனா நீயும்தான் ரேக்கிங்கல உடந்தைன்ன்னு நாங்க வாக்குமூலம் எழுதி வி.பி. கையில கொடுத்திடுவோம்.

இல்ல நான் வந்திருவேன்.

அதான் எப்படி?



சும்மா கதை விடாத! சுமனும் நீயும் ஒரே யூனிட் தானே; பேசாம சுமன் வண்டில வந்திடு. அங்க 9.30க்கு புறப்பட்டா 10.கெல்லாம் வி.பி. ரூம்முக்கு வந்திடலாம்.


தேர்தலுக்கு பின் சுமன் சுமத்ரா உரசல் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இப்ப நானும் அவனும் பேசிக்கறது இல்ல
சுமித்ரா சற்று குழப்ப்பத்துடன் சொன்னாள்.

அவளுக்கு எப்படி இளவரசனை விடுவிப்பது என்பதிலிருந்து எப்படி வி.பி.யின் விசாரணைக்கு வருவது என்பதுவரை குழப்பமாக இருந்தது. மாணவர்கள் எப்படி கொஞ்சமும் கவலையில்லாமல் வகுப்புகளை தியாகம் செய்கிறார்கள் என்பதும் ஆச்சரியமாகவே இருந்தது

தொடரும்----------------------------------------->

இது கதையின் பதினாறாம் பாகம், அதனால்தான் தலைப்பு இப்படி



இந்தக் கதையைப் படிக்கும்போது அப்படியே இந்தப் பாடலையும் கேளுங்கள். எஸ்.பி.பி, எஸ். ஜானகி குரலில் மிக மென்மையான பாடல் இளையராஜாவின் இசையமைப்பு. ஆனால் மிக அபூர்வமாக வானொலி, தொலைக்காட்சிகளில் வருகிறது. உங்கள் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும்.






===========================================================================

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும்

பதினாறாம் பகுதி sweet sixteen

பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி

பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை

இருபதாம் பகுதி டபுள் மீனிங்

இருபத்தொன்றாம் பகுதி நான் சுத்தமானவள்

இருபத்திரெண்டாம் பகுதிநான் ஒண்ணுமே பண்ணலயே

இருபத்தி மூன்றாம் பகுதிவெளிய வாடா

இருப்பத்தி நான்காம் பகுதி வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க?

இருபத்தி ஐந்தாம் பகுதி  தாடிக்குப் பின்னால் இரண்டு பெண்கள்

நன்றி நன்றி

Friday, April 15, 2011

என்ன வேணும்? டி. ஆர் கேள்வி(புதுசு)



பார்த்தேன், பிடித்திருந்தது, பகிர்ந்து கொள்ள இங்கு வைத்திருக்கிறேன்

நன்றி கானா பிரபா, அவர்தான் ட்விட்டடில் தட்டிவிட்டிருந்தார்

Wednesday, April 13, 2011

மாணவர்களுக்கு லேப்டாப் - முதல் படி துவங்கியது

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் லேப்டாப் கொடுக்கப் பட இருப்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதைப் பற்றி பலரும் பலவாறு விவாதம் செய்திருக்கிறார்கள். அதன் முதல் படியாக தமிழகத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் அனைத்தும் பிடிஎஃப் வடிவத்தில் வெளியிடப் பட்டுள்ளன.
 இந்தச் சுட்டியில் போய் தேவையானவற்றை பார்த்துக்  கொள்ளலாம்.


http://www.textbooksonline.tn.nic.in/
ஏற்கனவே கிராமப் புறப் பள்ளிகளில் டி.வி. , டிவிடி கொடுத்ததன் விளைவாக கிராமப் புறப் பள்ளி மாணவர்கள் ஆங்கில பாடல்கள், தமிழ் பாடல்களை நல்ல ராகத்தோடும் தெளிவான உச்சரிப்போடும் பழகி வருகின்றனர்.  இதில் சந்தேகம் அல்லது மாற்றுக் கருத்து இருப்பவர்கள் அருகிலுள்ள துவக்கப் பள்ளிக்குச் சென்று பார்க்கலாம். பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இதை நன்கு உபயோகப் படுத்தி வருகின்றனர்.

இதே போல விடியோ வடிவில் வகுப்புகளையும், இயற்பியல், வேதியியல், செயல் முறைகளையும் காண்பித்தால் உலகத்திற்கு தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்கும்.தனியாக ட்யூசன் நிலையங்களுக்குச் செல்லவேண்டிய அவசியம் இருக்காது.



http://www.textbooksonline.tn.nic.in/


டிஸ்கி:-

தமிழக அரசுதான் இதுபோன்ற செயல்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

பல நூறு கோடி ரூபாய்களை உலகவங்கியில் டெபாஸிட் செய்திருப்பதாக கூறும் எந்த ஒரு மாநில அரசாங்கமும் இது போன்ற ஆக்க செயல்களில் ஈடுபடவில்லை. ஒருவேளை அவர்கள் மூளைக்கு இதுபோன்ற செயல்கள் தெரியாமல் போயிருக்கலாம். எனக்கு அது போன்ற ஃபார்வேடு மெயில்கள் அனுப்பும் புண்ணியவான்கள் மேலே உள்ள சுட்டியை அந்த அரசுக்கு அனுப்பினால்  பணத்தை வங்கியில் போடாமல் மக்களின் கல்வியில் போட்டு வளப்படுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, April 12, 2011

தனுஷ், விஜய் ஓர் ஒப்பீடு

விஜய்:-
1991ல் நாயகனாக நுழைந்து என்னன்னவோ கஷ்டப் பட்டு, யாரோருக்கோ சோப் போட்டு திரையுலக இளம் நடிகர்களின் முதல் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்த நடிகர். சூப்பர் ஸ்டார் தனது  18 ஆவது திரையுலக ஆண்டை ஒட்டி வெளியான தளபதி, மன்னன் போன்ற போன்ற படங்கள் அளவில் இல்லாவிட்டாலும் அவரது 35, 36 வயதுகளில் வெளியான  அதிரடிப் படங்க்ளைப் போல வெளியிட்டு வந்தவர்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEijRRRNS61QdkARR3vIgE7NzcjalAsqThgoFgcvJAvnPPK53zh-YRRmsOvzvpqpCF4KnL4EpQeX-yfSYWKjZCL04C7aPoowt5p7I1YPSCyKUyS_1QfsVzOkORTOX3bXzEGjhJYg_dwDfO98/s400/normal_kuruvi_75_1days.jpg
திரையுலகின் முன்வரிசையில் ரஜினி, கமல் பொன்றொர் ஃபெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டிருக்க  விஜய் தன்வயது நடிகர்களில் முதலிடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த போது சன் பிக்சர்ஸ் வெளியீடுகளில் நடிக்க ஆரம்பித்தார்.   அவர்களது வெளியீடு காரணமாகவே படங்கள் சூப்பர் ஹிட் ஆவது போன்ற பிரம்மை உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்தது.   விஜயை முன்னிலைப் படுத்தப் படுவது போல அவரையும் மீறி விஜய் படங்களில் சன் பிக்சர்ஸ் முன்னிலைப் படுத்தப் பட்டது.    குறிப்பிட்ட சூழலில் வெளிவந்த வேட்டைக் காரன் ஒரு கமர்சியல் வெற்றிப் படத்திற்குரிய அத்தனை தகுதிகளும் இருந்தும், விஜய் ரசிகர்களுக்கு பெருமளவில் பிடித்திருந்தும், எல்லா படங்களையும் பார்க்கும் வெகுஜனங்களுக்கு பிடித்திருந்தும் படம் தோல்வி போல காட்டப் பட்டு தோல்விப் படம் ஆக்கப் பட்டது.

இதற்கடுத்த படம் சுறா, ஒவ்வொரு நடிகனின் மைல்கல்லான 50வது படம் . திட்டமிட்டே ஒரு தோல்விப் படமாக எடுக்கப் பட்டு யார் நினைத்தாலும், எவ்வளவு தீவிர ரசிகனாலும் பார்க்க முடியாத ஒரு கொடுஞ்சித்திரமாக உருவாக்கப் பட்டு விஜயின் திரையுலக வாழ்க்கையை மிகச் சாதாரண நடிகனாக மாற்றி அமைக்கப் பட்டது. இதற்கடுத்த படத்தை அவர் வெளியிட ஒரு அறிமுக நாயகன் தனது படம் வெளியாக எவ்வளவு சிரமம் படுவாரோ அவ்வளவு சிரமப் பட்டு வெளியிட்டார்.

தனுஷ்:

தனுஷின் சமீபத்திய படங்கள் எல்லாம் சன் பிக்சர்ஸ் மூலமே வெளியிடப் பட்டுள்ளது. சமீபத்தில் மாப்பிள்ளையும் மேலே விஜய்க்கு சொன்ன வழியில் வந்ததாகவே நினைக்கத் தோன்றுகிறது.


ஒரு ஆத்திகனின் பார்வையில் :  சுத்த ராசியில்லாத நிறுவனமோ..., நடிக்கறவங்க மார்க்கெட் அத்தோடு முடியுது.


பகுத்தறிவாளன் பார்வையில் : திட்டம் போட்டுச் செய்யறாய்ங்க அப்பு...,

Sunday, April 10, 2011

ஊ...ழ.....லலா.., ஊ..ஊ ழலல்லா ( தீப ஒளித் திருநாள் )

ஊழலை ஒழிப்பது என்பது ஏதோ காலனி ஆதிக்கத்திலிருந்து வெளியே வருவது போன்ற விஷயம் போலவும், அன்னிய தேச ஆதிக்கத்திலிருந்து வெளியே வருவது போலவும் முடிவு கட்டிக்க் கொண்டு  அலுவலக டீக் கடைகளிலும்,  எதற்கும் உதவாத வகையில் எல்லோரும் மோசம் என்று எல்லோரும் திருட்டுப் பசங்க என்றும் பேசிக் கொண்டும் இருப்பதும்தான் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் ஒரு வகையில் போய்  மாலை நேரத்தில் மெழுவர்த்தி ஏற்றிக் கொண்டாடுவது என்பது ஊழலை ஒழிப்பது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.( பலருக்கும் கோபம் வரலாம்).


 ஊழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது? யாரால் யாருக்காக யார் மூலம் ஊழல் செய்யப் படுகிறது?  என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள். ஊழலின் ஊற்றுக் கண் எங்கிருந்து வருகிறது என்பது புலப் படும். அதை அடைப்பது எப்படி என்றும் தெரியும்.


 எவர் மூலம் என்ற கேள்விக்கு பதில் அரசியல்வாதிகள் மூலம் என்பதில் எல்லோரும் உறுதியாக இருப்பார்கள். அவர் மாற்றிவிட்டால் ஊழல் ஒழிந்துவிடுமா என்றால் ஒழியாது. எத்தனை கமர்சியல் திரைப்படங்கள் வந்துவிட்டன. அதிலும்கூட யாருக்காக ஊழல் என்பதை தெரிந்தும் தெரியாமலும் மறைத்தே காட்டுகின்றன. யாரும் தன்க்கு தொழில்தரும் வாடிக்கையாளரை குறை சொல்ல விரும்புவதில்லை.


அர்சியலில் நேரடியாக ஈடுபடுபவர்கள் ஒருபுறம், மறைமுகமாக ஈடுபடுபவர்கள் ஒருபுறம். நேரடியாக ஈடுபடுபவர்கள் லஞ்ச ஊழல் விவகாரங்களில் மாட்டிக் கொண்டால் பெரும்பாலும் அவர்களது அரசியல் எதிர்காலம் முடிந்து விடுகிறது . இதற்கு முன் இருந்த அமைச்சர்களின் வாழ்க்கையே அதற்கு உதாரணம். எதிரிக் கட்சியில் டம்மி பீஸாக மாறி வாழ்க்கை ஓட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். நகர, பஞசாய்த்துக்களில் மக்களை எதிர்த்து ஊழல் செய்தவர்கள் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததே கிடையாது.


ஆனால் மிகப் பெரிய தலைகள் எஸ்கேப் ஆனாலும் கூட பெரும்பாலும் தேர்தலில் தோல்வியைத் தழுவுகின்றனர். வலிமையான எதிரிக் கட்சி அமைந்துவிட்டால் அவர்கள் அந்த எதிரிக் கட்சித் தலைவர் மறையும் வரை தலைதூக்க முடியாது. 1967ல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்ட காங்கிரஸ் கட்சி இன்னும்கூட தமிழ்நாட்டில் தோழமைக் கட்சியாகவேதான் இருக்கிறது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கைகூட மங்கத் தொடங்கியது இது வரலாறு.

நேரடி அரசியல்வாதிகளின் ஊழலைத் தேர்தல் மூலம் சுலபமாக ஒழித்துவிட முடியும். நம் நாட்டுத் தேர்தல் முறை இதை பல முறை நிரூபித்துக் காட்டி இருக்கிறது.

ஆனால்   அந்த அரசியல் வாதிகளையே ஊழலுக்கு தூண்டும் பின்புல அரசியல்வாதிகள் அதாவது அரசியலுக்கு நேரடியாக வராமல்  அரசியலில் முக்கிய முடிவுகளை எடுக்கும் மனிதர்களை யார் நிர்ணயிக்கிறார்கள்?  ஒவ்வொரு பகுதியிலும்  தங்கள் காரியங்களை மறைமுகமாக சாதிக்க சிலரை வளர்த்துவிடுபவர்கள் யார்?

ஒரு சாதிச் சான்று வாங்குவதற்கு கூட பிறரின் உதவியை நாடுபவர்கள்,

பத்திரப் பதிவு,  கடன் உதவி, தொழில்  போன்றவைகளில் நேரடியாக நேர்மையாக இல்லாமல்  மறைமுக ஆட்களை வளர்த்துவிடுபவர்கள், பலவந்தப் படுத்தி காரியம் சாதிக்க நினைப்பவர்கள்,  இது போன்று குறுக்குவழிகளில் காரியங்கள் சாதித்து அவர்களுக்கு  அவர்களுக்கு ஊதியம் (இதை லஞ்சம் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. இந்த ஊதியம் பெற்று வாழ்பவர்களுக்கு இதுவே வாழ்வாதாரம்) வழங்குபவர்கள் யார்?


உண்மையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் லஞ்சம் கொடுக்காமல் வாழ்வேன் என்று சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டால்


ஒவ்வொரு மனிதனும்  குறுக்கு வழியை நாட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டால்

ஊழலுக்கு தூண்டல் புரியும் எந்த அலுவலகத்திலும் நான் பணியாற்ற மாட்டேன் என்று முக்கியப் பொறுப்புவகிக்கும் நிர்வாக அதிகாரிகள் ( இந்த வகையினர் எந்த நிறுவனத்திற்குச் சென்றாலும் பெரிய அளவில் ஊதியம் பெற முடியும்). முடிவு செய்தால்,


எனது கடமை செய்வதற்கு எந்த வகையிலும் ஊட்டுத் தொகை பெறமாட்டேன் என்றும் எந்த வகையில் கடமையில் தவறுவதற்கு பணம் பெற மாட்டேன் என்று முடிவு செய்தால் ஊழல் சுலபமாக முடிவுக்கு வந்து விடும்.


உண்மையில் ஊழலை ஒழிக்க  நினைக்கபவர்கள் எதிர்த்து போராட வேண்டியது அதிகார வர்க்கத்தை அல்ல,  அடங்கி ஒடுங்கி  ஊழலுக்கு நெய்யும் பாலும் ஊற்றி வளர்க்கும் அடுத்த வர்க்கமே

==================================================================

நாட்டில் எத்தனையோ உயர் அதிகாரிகள் நேர்மையாக செயல் படுகிறார்கள். அவர்களின் நேர்மையால் சில அப்பாவிகளுக்கு இடைஞ்சல் நேரிட்டால்கூட அதை அவர்களே சரி செய்து கொடுத்துவிடுவார்கள்.  அதற்கு தேர்தல் நேரத்தில் பணியாற்றும் அதிகாரிகளை பெரும்பாலோனோர் பாராட்டவே செய்கின்றனர்.  ஆனால் கீழ்மட்ட அலுவலர்களின் நிலை. கொஞ்சம் சிரமமான சூழலே நிலவுகிறது.   பணம் கொடுக்காமல் நேரடியாக பணிக்கு வந்த அலுவலர்களில் பெரும்பாலானவர்கள்  நேர்மையாகவே இருக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு இருக்கும் பாதுகாப்பு இவர்களுக்கு இல்லை. இவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் ஊழல் எதிர்ப்பாளர்களே, பெரும்பாலான மக்கள் நேர்மையாக நடந்து, அலுவலர்களும் நேர்மையாக நடக்க நிர்பந்திக்கும்போது  குறுக்கு வழியை தூண்டும் சிலர் தானாகவே ஒதுங்கிப் போய்விடுவார்கள்.

பெரும்பாலானவர்கள் குறுக்கு வழியை நாடினால் அதில் வலிமை வாய்ந்தவன் சொல்வதே வழி என்ற நிலையை அலுவலர் நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.  நேரமையான அதே நேரத்தில் உறுதியாக இருந்தால் கண்டிப்பாக நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும்.  நிர்பந்திக்கும் நபர்களை நேர்மையாளர்களின் உதவியுடன் வெற்றி பெற முடியும். ஆனால் நடப்பது தலைகீழ்.


ஒவ்வொரும் தங்கள் காரியங்கள் நடக்க மட்டும் ஊழலை நாடுவதும். அதே வழியை மற்றவர்கள் பின்பற்றும்போது புலம்புவதும். இவர்களே நேரடியாக ஊழலை தவிர்க்கமுடியும் என்ற நிலையில்  அதைவிட்டு விட்டு  இன்னொருவர் போராடும்போது மெழுவர்த்தி ஏற்றி கார்த்திகை தீபம் கொண்டாடிவிட்டு புரட்சி வெடித்துவிட்டது என்று  சொல்லிக் கொண்டு சுற்றுவதும் காரியத்திற்கு ஆகாதவை.

 இதைவிட நேரமையாக இருப்பதும், நேர்மையாக இருப்பவர்களுக்கு  நேர்மையில்லாதவர்கள் மூலம் பிரச்சனைகள் வரும்போது நடுநிலமை வகிக்காமல் நேர்மையின் பக்கம் ஆதரித்தலே நேர்மையானவர்களுக்குத் தரும் ஊக்கமும்,  ஊழலை ஒழிக்கும் வழியுமாக இருக்கும்.


இவ்வாறு இருக்கும் நடுநிலை வாதிகள் நேர்மையின் பக்கம் இருப்பார்களேயானால் கண்டிப்பாக கட்டைப் பஞ்சாயத்து பேர்வழிகளிடமும், மிரட்டல் பேர்வழிகளிடமும்  நேர்மையாளர்கள் பயப் படாமல் இருக்க முடியும்.

===================================================================

ஊழல் என்பது தவறு  ஊழலை ஒழிக்க முடியும் என்ற எண்ணத்தை மீண்டும் நினைவு படுத்திய அன்னா ஹசாராவுக்கு இந்திய தேசமே கடமைப் பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Saturday, April 9, 2011

இன்னொரு சுதந்திரம் அடைந்தது இந்தியா

ஊழலுக்கு எதிரான போர் இந்தியாவில் நடைபெற்று வருவதாகவும், எகிப்து, ரஷ்யா புரட்சி போன்றதொரு புரட்சி இந்தியாவில் துவங்கிவிட்டதாகவும் இணையத்திலும் பலதரப்பட்ட மக்கள் மத்தியிலும் நேற்று பரவலாக செய்திகள் அடிபட்டுக் கொட்டு இருந்தன.  அதன் உச்சக் கட்டமாக நேற்று இரவு மக்கள் குழுவினருக்கும் அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப் பட்டதில் ஊழலை ஒழிக்கும் சட்ட முன்வரைவு அமைக்கும் குழுவில் தலைவராக பிரணாப் முகர்ஜிக்குப் பதிலாக வேறொருவரைப் போடுவதாக உறுதி வழங்கப் பட்டதை அடுத்து  அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.


செய்திகள்

http://timesofindia.indiatimes.com/india/India-wins-again-Anna-Hazare-to-call-off-fast-today/articleshow/7921304.cms

http://in.news.yahoo.com/live--anna-hazare-s-fast-enters-4th-day.html

Victory for Anna Hazare and India as government bends

நேற்று உண்ணாவிரத ஆதாரவாளர்கள் பேசும்ப்போது இது தான் உண்மையான சுதந்திரப் போர் என்றெல்லாம் உணர்ச்சிப் பொங்க பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

///பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை தெரிவிப்பதற்காக, மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் ஆகியோர், பிரதமர் மன்மோகன் சிங்கின் வீட்டுக்குச் சென்றனர். அவருடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். இதன் வரைவு மசோதா தயாரிக்கும் கமிட்டி குறித்த முறையான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, இந்த கமிட்டியில், மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், வீரப்ப மொய்லி, சல்மான் குர்ஷித் மற்றும் சிதம்பரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவின் துணைத்தலைவர் பதவி சாந்தி பூஷணுக்கு வழங்கப்பட்டுள்ளது.///

 இதுவும் செய்திதான்

இது குறித்தான மக்களின் கருத்துக்கள் சில

யாகூ தளத்தில்
//At last a person has shown the interest in our India. Three cheers for ANNA. He is playing as a real FATHER OF INDIA. All over the India he deserve the Salute - JAI HIND.//

//All corrupted leader should be gone in jail on 12th//

டைம்ஸ் ஆஃப் இண்டியாவில்

///Indias greatest victory.Bigger than anything. People have raised their voice against corruption and have said "Its Enough". I see a ray of hope for a corruption free india. Imagine!// // I really wish and would be very much happy if curruption is totally eliminated from this country. But it would be premature and too early to celebrate the victory now. In India anything can happen. Even the Lok Pal Bill can be got rejected or delayed (putting in Tanda Bastha) in the Parliament by the most currupt politicians. In case the entire Jantha is supporting Mr. Anna Hazare Ji and against curruption as is shown in the electronic media for the last 4 days, then this should reflect in the forthcoming Assembly elections in some States especially in Tamil Nadu. I have the feeling that the media hype about the agitation has been very well utilized by some for their cheap publicity and popularity// வாழ்த்துக்கள்.., 
http://www.annahazare.org/

Friday, April 8, 2011

சச்சின் முன் நிற்கும் சவால்.

1. லலித் மோடி இல்லாமல் நடைபெறும் முதல் ஐ.பி.எல் இது.  லலித் மோடி இப்போது தலைமறைவாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதற்கு முந்தைய உலகக் கோப்பைக்கு  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியவர் அவர்.

2.இந்திய அணியின் ஆக்ரோஷமான கேப்டன் கங்குலி இன்று என்ன செய்யப் போகிறார் என்றே தெரியவில்லை. ஃபிளம்பிங் கூட பயிற்சியாளராக வளம் வருகிறார்.

3.வாசிக் அக்ரம் பந்து வீச்சு பயிற்சியாளராக வந்திருக்கிறார், அவரே  கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு சிறந்த உதாரணம். அதை அவர் கற்றுக் கொடுக்க வேண்டும். பாகிஸ்தானில் எதிரணியினரை விளையாட்டு நுட்பங்களால் மட்டுமே பயமுறுத்திய வீரர். அநேகமாக ஒரே பாகிஸ்தானிய வீரர்.

4.சைமண்ட்ஸ், ஹர்பஜன்சிங் ஒரே உறையில் இருக்கும் இரு கத்திகள். சச்சின் சமாளிப்பாரா என்று தெரியவில்லை
http://p.imgci.com/db/PICTURES/CMS/81000/81072.jpg



5. சென்ற ஆண்டு இளையவர்களூக்கு வழிவிட்டு கேப்டன் பதவியிலிருந்து ஒதுங்கிய சேவக், கம்பீர் வேறிடம் சென்றதால் இன்று மீண்டும் கேப்டன் ஆகிவிட்டார்.  இந்திய அணியின் கேப்டன் மேக்கராக சச்சின் மாறியது போல சேவக்கும் யாராவது ஒரு புதியவருக்கு வழிவிட்டு விடலாம்.

6.இந்த ஆண்டு ஐ.பி.எல் லின் அரையிறுதி போட்டி கலந்து கொள்ளுபர்களுக்கு நல்ல வாய்ப்பினைத் தருவதாக இருக்கிறது. எதிர்காலத்தில் அனைவராலும் இந்த முறை பின்பற்றப் பட வாய்ப்பு உள்ளது. இதையே காலிறுதியில் பின்பற்றினால் நினைக்கவே தேனாக இருக்கிறது.

7.உலகக் கோப்பைக்கு பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு அனுமதி தந்தவர்கள், வசிம் அக்ரமுக்கு அனுமதி தந்தவர்கள் விளையாட விருப்பம் உள்ளவர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கலாம்.

8.ஆட்டம் முடிந்தவுடன் நடைபெறும் தேநீர் விருந்துக்கு தடை வழங்கப் பட்டுள்ளது. அதே போல் ஆட்டம் முடிந்த உடன் வீரர்கள் தங்குமிடத்தை விட்டு வெளியே செல்வதற்கும் தடை போடலாம். அனைத்து வி.ஐ.பிக்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது காவல்துறைக்கு கூடுதல் தலைவலியைத் தரும்

9.ஒவ்வொரு போட்டியிலும் நால்வர் மட்டுமே வெளிநாட்டுவீரர்கள் இருக்கலாம் என்பது போல பயிற்சியாளராக வெளிநாட்டு வீரர் இருக்கலாம். ஆனால் தலைவராக உள்நாட்டுவீரர்தான் இருக்கலாம் என்று சொல்லி விடலாம்.  துணைத் தலைவராக சர்வதேச அனுபவம் இல்லாத அல்லது மிகக் குறைந்த சர்வதேச போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள  உள்ளூர் வீரர்தான் இருக்க வேண்டும் என்று உறுதி படச் சொல்லி விடலாம்.

10. போட்டி நடத்துவதில் மட்டுமே மிகச் சிறந்த கட்டுக்கோப்புடன் திட்டமிடுகிறோம். ஆனால் போட்டி அதன் போக்கில்தான் போகிறது என்பதை ஐ.பி. எல் ரசிகர்களிடம் தங்கள் செயல் பாடுகள் மூலம் நிரூபிக்க வேண்டும்.

அன்னா ஹசாரே - ஆதரவு எவ்வளவு தூரம்?

டிஸ்கி :-  உண்ணாவிரதம், காந்திய வாதம் ஆகியவை மிக புனிதமானவை, வலிமைமிக்கவை என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்பதை இங்கு நான் அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்கிறேன்

அன்னா ஹசாரே அவர்கள் ஒரு மாபெரும் கொள்கையை நோக்கி ஒரு உண்ணாவிரதப் போரைத் தொடங்கி இருக்கிறார். அவர் சொல்லும் விஷயங்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் படவேண்டியது. ஆனால் அன்னா ஹசாரேக்கு முன்னதாக தமிழகத்திலும் இது போன்று ஒரு இயக்கம் சென்ற தேர்தலில் நடைபெற்றது.  பதிவர் ஒருவரே முன்னிலை வகித்தார். பல பதிவர்களும் அந்த வேட்பாளருக்கு ஆதரவுகளை அள்ளித் தெளித்தனர். அந்த தேர்தலுக்குப் பின்னர் அந்த நடவடிக்கைகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை.


இப்போது அன்னா ஹசாரே அவர்களைப் பற்றியும் இணையத்தில் ஆதரவுகளை வாரி வழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால் ஏதாவது பயன் இருக்கிறதா? இணைய கையெழுத்து இயக்கம் வேறு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  சில இடங்களில் பதிவர்கள் கூட்டங்கள் கூட நடக்க இருக்கின்றன.


எனக்கு சில சந்தேகங்கள்: -
1.இந்த நடவடிக்கைகள் அன்னா ஹசாரேவுக்கு எந்த விதத்தில் உதவப் போகின்றன?

2. இவ்வாறு ஆதரவுக் கூட்டங்கள் போடுவதை விட அவருக்கு ஆதரவாக பத்து, இருபது பேராக ஒவ்வொரு இடத்திலும் உண்ணாவிரதம் இருக்கலாமே. ஏன் அதைச் செய்வதில்லை. டோனிக்கு ஆதரவாக எந்திரனுக்கு ஆதவராக செயல்படும் இயக்கம்போல்தான் செயல் படப் போகிறார்களா?

அப்படி உண்ணாவிரதங்கள் ஆங்காங்கு நடைபெற்றிருந்தால் இன்னேரம் மிகப் பெரிய பேச்சாக மாறியிருக்குமே? 

3.71 ஆண்டுகள் அன்னா ஹசாரே மக்கள் பணியில் எவ்வளவு நாட்கள் ஈடுபட்டு வருகிறார்? அதனால் பொது மக்கள் எந்த அளவு நன்மை பெற்றிருக்கின்றனர் என்பதுபோன்ற  பாஸிட்டிவ் தகவலகளை சொல்லி அவருக்கு ஆதரவு திரட்ட ஏன் அவரது ஆதரவாளர்கள்  தவறுகின்றனர்?

4.அவருடன் இருக்கும் முன்னாள் நீதியரசர்கள்  சட்ட ரீதியாக இந்தச் சூழலை சமாளிக்க முடியவில்லையா?



===========================================================================
தமிழக ஊடகங்கள் ஏன் இந்த போராட்டத்திற்கு பெரிய அளவில் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று ஒரு நண்பரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில். நாங்கெல்லாம் இதவிட பெரிய பெரிய உண்ணாவிரதமெல்லாம் பாத்திருக்கோம்ல


Wednesday, April 6, 2011

சச்சினின் பாரத ரத்னாவும் டோனியின் பத்மஸ்ரீயும்

சச்சினுக்கு பாரத ரத்னா கேட்டு டோணி குரல் கொடுத்திருக்கிறார். டிராவிட்டும் கொடுத்திருக்கிறார்.  ஹிஸ்துஸ்தானி பிரபல பாடகர், பீம்சேன் ஜோஷி,  பிரபல ஷெனாய் கலைஞர் பிஸ்மில்லா கான், பிண்ணனி பாடகர் லதா மங்கேஷ்கர், ஜே.ஆர்.டி டாடா போன்றவர்களுக்கு வழங்கப் பட்ட விருதுதான் அது.



இந்த விருதினைப் போன்றே கவுரவம் மிக்க விருதுகள்தான் பத்ம விருதுகள். ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை கையில் வாங்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியடைய வேண்டும். ஆனால் 2009ல் டோனிக்கு பத்ம விருது வழ்ங்கப் பட்ட போது அதனை வாங்கச் செல்லவில்லை.  அதே நேரத்தில் ஒரு விளம்பர நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்ததாக பரபரப்பாகப் பேசப் பட்டது.  அப்போது எழுதப் பட்ட இடுகை இது.

இந்த பத்ம விருதுகளைப் பற்றி ஒரு நல்ல மரியாதை இருந்திருந்தால் கண்டிப்பாக போய் வாங்கி இருப்பார். ஒருவேளை பதம விருதுகள் அவ்வளவு மதிப்பு வாய்ந்தவை அல்ல. பாரத ரத்னா மட்டும் மதிப்பு வாய்ந்தது என்று நினைத்திருக்கிறாரோ என்னவோ? அல்லது இப்போது விருதுகள் பற்றி நல்ல எண்ணத்தை வளர்த்திக் கொண்டாரோ என்னவோ. ஒருவேளை அப்படி வளர்த்திருந்தால் நல்லதுதான். 

ஆஸ்திரேலியா  போட்டியின்போதே டோனி சிறப்பாக விளையாடுவார் என்றும். அதற்கான காரணங்கள் என்ன என்ன என்று எதிர்பார்க்கப் பட்டு எழுதப் பட்ட இடுகை இங்குள்ளது.

அனைவரையும் காத்திருக்க வைத்து அவர் ஆடிய ஆட்டம் அவரை  மீண்டும் ஒரு முறை மிகப் பெரிய ஹீரோ ஆக்கிவிட்டதைப் போல பல பிரச்ச்னைகளையும் தவிர்த்துவிட்டது.
http://www.mensxp.com/images/article/Category/Special-Features/today/rated_1.jpg

Tuesday, April 5, 2011

சைமண்ட்ஸ் - தமிழகத் தேர்தல் - ஊடகங்கள்

தமிழக அரசியலில் உவமை, உவமானங்கள் எல்லாம் கொடுத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் நம் ஆட்கள் விளையாடப் போனபோது ஹர்பஜன் சொன்ன இன்வெறி வார்த்தையை ஒரு முன்னாள் முதல்வரைப் பார்த்து முன்னாள் மத்திய அமைச்சர் சொல்லுகிறார். ஒரு வருங்கால முதல்வரைப் பார்த்து இன்னொரு வருங்கால முதல்வர் சொல்லுகிறார். ஆனால் இதெல்லாம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப  சாதாரண விஷயமாக ஊடகங்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றன.   விளையாட்டில்கூட சொல்லக் கூடாத வார்த்தையை ஊடகங்கள் முன்னிலையில், ஊர்மக்கள் முன்னிலையில் சொல்வதையும் ஊடகங்கள் ஒளிபரப்பிக் கொண்டே இருக்கின்றன.  ஹர்பஜன் மட்டும் ஆமாம் சொன்னேன் என்றிருந்தால் அவருக்கு வாழ்நாள்தடை வந்திருக்கும்.  இந்திய அணிக்குக் கூட நிறவெறிச் சாயம் பூசப் பட்டிருக்கும்.

============================================================
இந்திய இலங்கை அணியின் இறுதி ஆட்டத்தைப் பற்றி பேசப் படும் ஒரு கருத்து. இலங்கை அணி தன்பாதையில்  ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, இங்கிலாந்து போன்ற எளிமையான அணிகளைச் சந்தித்து இறுதி ஆட்டத்திற்கு வந்தது.  ஆனால் இந்திய அணியோ,   இங்கிலாந்து, தெனாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய கடுமையான அணிகளுடன் போராடி வந்திருக்கிறது. 

என்ன கொடுமைடா சாமி.

=====================================================

அஃப்ரிதிக்குத் தெரிகிறது.  கிரிக்கெட் வெற்றியை அரசியல் ரீதியில் அர்ப்பணம் செய்யக் கூடாது என்று. இத்தனைக்கும் அவர் விளையாட்டில் வெற்றி பெற பற்களை உபயோகப் படுத்தக் கூட தயங்காதவர். விளையாட்டுகளில் அரசியல் பேசும் வீரர்களுக்கு தண்டனைகள் கொண்டுவரச் சர்வதேச சட்டங்கள் போட்டால்தான் என்ன

விஜய காந்தின் ஓட்டு வங்கியும் ரஜினியும்

இந்திய அரசியலில் மூன்றாவது அணி என்று பேசுவார்கள்; நான்காம் அணி கூட உருவாக்கிக் கொண்டார்கள். அதுபோல் மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்காற்றினால் மாநில அளவில் மாவட்டக் கட்சிகள் வளரத் தானே செய்யும்


மாவட்டக் கட்சி என்ற வடிவத்தை நாம் யோசித்தால் நமது மாவட்டங்கள் அப்படி ஒன்றும் பெரிய பரப்பளவு உள்ளவை அல்ல. புதுவை மாநிலமே சிறிய அளவில் இருப்பதால் தான் தமிழகக் கட்சிகள் அங்கே கிளைகளை வெற்றிகரமாக நடத்த முடிகிறது. நமது மாவட்டங்கள் சின்னதாக இருப்பதால் சில நேரங்களில் சில மாவட்டங்கள் பரவி ஒரு கட்சி இருக்க முடியும். தமிழ் முழுவதும் தெரிந்த தலைகளால் அதை மாநிலக் கட்சியாகக் கூட மாற்ற முடியும்.

பொதுவாக நமது மக்கள் கட்சியில் சேர்வது என்பது பெரும்பாலும் மக்களுக்கு சேவை செய்வது என்பதைவிட தனக்கு ஒரு பின்புலமாக பக்க பலமாக இருக்கும் என்ற நிலையில் கட்சிகளில் சேர்கிறார்கள். திறமையாக செயலாற்றத் தெரிந்தவர்கள் மேலும் மேலும் பெரிய அளவில் வளருவதற்கு தற்போதுள்ள சூழலில் பழைய அரசியல் கட்சிகளில் இடம் இருப்பதில்லை. ஏற்கனவே கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்களும் அவர்களோடு தோள்நின்ற இளவல்களும் அந்தக் கட்சிகளில் முக்கிய நிலையில் இருப்பதால் புதிதாக பதவி எதிர்பார்த்து கட்சிகளில் சேர்பவர்களுக்கு பதவிகள் என்பது வார்டு செயலாளர் என்பதை தாண்டுவது என்பதே குறைவு.

இந்த சூழலில் புதிதாகக் கட்சி யார் ஆரம்பித்தாலும் இது போன்று பதவி இல்லாமல் சிரமப் படும் நபர்கள் புதிய கட்சிகளில் தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் திறமைக்குத் தகுந்த பதவிகளை அடைந்து மக்கள் சேவைக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ள நினைக்கிறார்கள்.

விஜய காந்த் கட்சி ஆரம்பித்த போது கூட அதுதான் நடந்தது. உழைத்து கட்சியில் முன்னேற விரும்பியவர்களும் ஏற்கனவே ஓரளவு முன்னேறியவர்கள் சுதந்திரமாக செயலாற்ற விரும்பியவர்களும் கட்சியில் சேர்ந்து உழைக்கின்றனர். அவர்களது உழைப்பின் காரணமாகவும் தமிழ்நாடு தெரிந்த கட்சித்தலைமையின் காரணமாகவும் அந்த உழைப்பினை ஓட்டுக்களாக மாற்ற முடிகிறது.

பொதுவாக கட்சிமாறித் தலைமை இருந்தால் இந்த வட்ட அளவில், பேரூராட்சி, ஊராட்சி அளவிளான த்லைகளால் தொடர்ந்து போராட முடியாது. நேற்றைய எதிரியை இன்றைய நண்பனாக ஒரு சிலரால் ஒரு சிலரை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும். அப்படிப் பட்ட சூழலில் கீழ்மட்டத்தலைவர்களால் தொடர்ந்து திறம்படச் செயலாற்றுவது மிகக் கடினம். ஆனால் விஜயக் காந்த் தனியாக நிற்பது இவர்களுக்கு தங்கள் திறமையைக் காட்டவும், தங்களை வளர்த்துக் கொள்ளவும் மிக உபயோகமாக இருக்கிறது.

நடுநிலை ஓட்டுக்களும், முக்கியக் கட்சிகளை பிடிக்காத ஓட்டுக்களும் விஜயக் காந்த்துக்கு விழுந்ததாக பேசுகிறார்கள். ஆனால் நகரங்களில் கிராமங்களில் யார் தோற்கவேண்டும் என்று போடப் படும் ஓட்டுக்களே அதிகம்.(யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப் போடு,நம்பியாருக்கு மட்டும் ஓட்டுப் போட்டுராத.. என்ற வசனத்தை கேட்டு இருக்குறீர்களா). பெருநகரங்களிலும் ஓரளவு வளர்ந்த நகரங்களிலும் முக்கிய கட்சிகளை பிடிக்காதவர்கள் வாக்களிக்கவே போக மாட்டார்கள். இவரது கட்சிக்கு மட்டுமல்லாமல் புதிதாக பெரிய அளவில் ஓட்டு வாங்கக் கூடிய மற்ற மாவட்டக் கட்சிகளுக்கும், ஜாதிக்கட்சிகளுக்கும் உள்ள நிலை கூட இதுதான்.


முக்கிய இரு கட்சிகளைப் பிடிக்காதவர்களின் ஓட்டுக்கள் என்றால் பகுஜன் சாமாஜ்கட்சி, பா.ஜ.க போன்று பிரதமர் வேட்பாளரை தன்னகத்தே வைத்திருந்த கட்சிகளுத்தான் அந்த ஓட்டுக்கள் போயிருக்க வேண்டும். ஆனால் போகவில்லை

தலைவரின் மீதான நம்பிக்கை பெரிய அளவில் இருந்தாலும் கூட அவரால் கிடைக்கக் கூடிய பலன்களை வாங்கிக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய நகர, கிராம, வார்டு தலைகளின் உழைப்பே ஓட்டு வங்கிகளை ஏற்படுத்த முடியும்.

இன்றைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் தெரிந்த தலைவர்கள் கூட குறைவாகவே இருக்கிறார்கள். அதுபோல இந்தியா முழுவதும் தெரிந்த தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களுக்குக் கூட நேரடியாகச் சந்தித்துப் பேசக் கூடிய அடுத்தடுத்த கட்ட தலைவர்கள் இந்தியா முழுவதும் இருப்பதும் கேள்விக்குறியே...

அதனால்தான் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் இது போன்று உழைக்கும் திறமை வாய்ந்தவர்கள் அவர்களது கட்சியில் முதலில் சேர்ந்துகொள்கிறார்கள். அவர்களை கட்சித்தலமை அதிகமாக உபயோகப் படுத்திக் கொள்ள தெரிந்திருந்தால் அந்தக் கட்சியால் வெற்றி பெற முடிகிறது.

அவ்வாறாக ஒரு புதிய அரசியல் கட்சி ஓட்டுக்கள் அதிகம் வாங்கினால் அது இவர்களைப்போன்ற இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவரைகளைப் பொறுத்தே அமையும்.

நடிகர்களின் நற்பணி மன்றங்களில் (இப்போது ரசிகர் மன்றம் என்று ஏதாவது இருக்கிறதா என்ன?) ஆட்கள் சேருவதும் இதற்காகத்தான். தங்கள் தலைவனை தெய்வமாக நினைத்து பாலாபிஷேகம் செய்வர்கள் ஒரு கட்டத்தில் தங்களை பூசாரிகளாக நினைத்துக் கொண்டு பூசாரிக்கு உரிய மரியாதையையும், காணிக்கைகளையும் எதிர்பார்க்க ஆரம்பித்து அதற்கான அடிப்படையாகவே இதில் உழைக்கின்றனர்.

புதிய அரசியல் கட்சி ஆரம்பித்தால் அதில் சேருபவர்கள் இதுபோன்ற பல கூட்டல், கழித்தல் கணக்குகளைப் போட்டுப் பார்த்தே சேருகிறார்கள்.

அவ்வாறு புதிய கட்சி ஆரம்பிக்கும்போது ஏதாவது உணர்ச்சிகரமான பிரச்சனைகளை முன்னிறுத்தி கட்சி ஆரம்பித்தாள். மற்றவர்கள் பெறக்கூடிய ஓட்டுகள் குறையும். ஆரம்பிப்பவர் பெறக்கூடிய ஓட்டுக்கள் வெற்றியைக் குவிக்கும்.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது சூழல் அப்படித்தான். தி.மு.க. இந்திரா கூட்டு, எதிரணியான ராஜாஜி-காமராஜ் கட்சிகள் வழுவிழந்த சூழல். அந்த சூழலில் தி.மு.க.வின் பொருளாளரான எம்.ஜி.யார் (இப்போது மு.க.ஸ்டாலின் பொருளாளராக இருக்கிறார்) தனியே பிரிந்து வந்து ஒரு உணர்ச்சிகரமான உரைகள் நிகழ்த்தப் படுகிறது. அந்த கட்டத்தில் வந்த எம்.ஜி.யார் பாடல்களைக் கேட்டாலே ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

என்.டி.யார் கட்சி ஆரம்பித்த சூழல் இன்னும் அபாரமாக இருக்கும். எம்ஜியாரைப் போல என்டியார் இருபது ஆண்டுகாலம் ஒரு அரசியல் கட்சிக்கு உழைத்தவரல்ல.மூன்று சட்டமன்றங்களில் உறுப்பினராக இருந்தவரும் அல்ல. எம்ஜியார் போல தெருதெருவாக பிரச்சாரம் செய்த அனுபவமும் அவருக்குக் கிடையாது. ஆனாலும் அவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய காங்கிரஸ் முதலவர் கட்சித் தலைமையை வரவேற்க விமான நிலையத்தில் ஒரு பொழுது முழுதும் காத்திருக்கிறார், ஆனால் கட்சித்தலைமை அவரை நிராகரித்துச் செல்கிறார்கள். அது ஒரு உட்கட்சி விவகாரம். ஆனால் அந்த பிரச்சனையை ஆந்திர மக்களின் ஒட்டு மொத்த கவுரவ பிரச்சனையாக என்டியார் எடுத்துக் கொண்டு ஒரு கட்சி ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். அவரது பிரச்சாரத்தை எதிர்கொள்ள வழியில்லாமல் மற்றவர்கள் தோற்கிறார்கள். 84ல் அதிபயங்கர காங்கிரஸ் அலை அடித்தபோது கூட ஆந்திராவில் தெலுகுதேசம் கட்சிதான் பெருவாரியான வெற்றி அடைந்தது என்பதும் பிரதான எதிர்கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தது என்பது சரித்திரம்.

96ல்கூட ஒரு உணர்ச்சிகரமான சூழல் நிலவியது. புதிதாக மூப்பனார் கட்சி தொடங்கினார். அவரது கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்தக் கூட்டணிக்கு எல்லாமே பிரச்சார பிரம்மாஸ்திரமாக அமைந்தது. தூர்தர்ஸனில் ஒலிபரப்பான ஒரு சாதாரண பேட்டி(தொலைக்காட்சி நிலையத்தை பொருத்தவரை அந்தப் பேட்டி பத்தோடு பதினொன்று) கூட தமிழகத்தில் உள்ள அனைத்து தொலைக்காட்சி பெட்டிகளிலும் பார்க்கப் பட்டது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது.

ஆனால் சிரஞ்சீவிக்கோ, விஜயகாந்த்துக்கோ இப்படி ஒரு சூழல் இல்லை, இருந்தாலும் அவர்கள் குறிப்பிடத்தக்க ஓட்டுப் பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களது கீழ்மட்டத்தலைவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்றுதான் பொருள்.

தமிழகத்தில் எத்தனையோ பெரிய தலைவர்கள் தனியே கட்சி ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் கட்சி ஆரம்பித்தபோது ஒரு உணர்ச்சிகரமான சூழல் இல்லை. தாய் கட்சியிலிருந்து வெளியேறியவர்களுடன் புதிதாகக் கட்சியில் வந்தவ்ர்கள் கடை மட்டம் வரை மற்ற கட்சிகளை எதிர்த்து வேலை பார்க்கும் தொண்டர்கள் இல்லாத சூழலில் தோல்வியையே தழுவி யிருக்கிறார்கள். (தலைவருக்குத்தான் மற்ற தலைவரோடு பிரச்சனை. கீழே உள்ளவர்களுக்கு மற்ற நண்பர்களோடு பிரச்சனை இல்லையே. அப்புறம் எங்கே கடும் எதிர்ப்பைக் காட்டுவது)

இன்றைய சூழலில் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே இணைத்து கடுமையாக அரசியல் பணி செய்யும் நிலையில் உள்ள யார் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்தாலும் அவர்களால் நிறைய ஓட்டுக்களைப் பெற முடியும். ஆனால் அந்தத் தகுதி நடிகர்களுக்கு அதிகமாக இருப்பதால் நடிகர்கள் பலரும் கட்சி ஆரம்பிக்கும் ஆவலில் இருக்கிறார்கள். ஒருவேளை எதிர்காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் கூட இம்ரான்கான் மாதிரி கட்சி ஆரம்பிக்க நினைக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் நற்பணி மன்றங்களை ஆரம்பித்து அடிப்படைப் பணிகளைச் செய்ய வேண்டும்.

உண்மையில் ரஜினி அரசியலுக்கு வந்தாலும், விஜய் அரசியலுக்கு வந்தாலும் இரண்டாம் கட்ட மூன்றாம் நான்காம்நிலை த்லைவர்களின் தொண்டர்களி ன் உழைப்பினை பெறும் திறமை இருந்தால் மட்டுமே ஓட்டுக்களைப் பெறமுடியும். அவர்களின் முகத்திற்காகவெல்லாம் ஓட்டு விழவேவிழாது



டிஸ்கி ; இது போன தேர்தல் முடிந்த பின் எழுதியது. இன்றைய விஜயகாந்த்க்கு இதெல்லாம் தெரியுமா?   என்று நினைத்த போது என்னவோ போல் இருந்தது. த்ங்களிடம் மீண்டும் பகிர்ந்து கொள்ள ஒரு மீள்பதிவு

Sunday, April 3, 2011

உலகக் கோப்பை முடிவுகள் - 12 சிந்தனைகள்

ஒரு போட்டியில் ஒருவர்தான் வெல்ல முடியும் என்ற போட்டிவிதிகளுக்கு அடங்க இந்த உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி கைப்பற்றியிருக்கிறது. வாழ்த்துக்கள். அணியின் மூத்த வீரர் சச்சினுக்கு அனைவரும் அதை சமர்ப்பணம் செய்கிறார்கள். சச்சின் பல வீரர்கள் கிரிக்கெட் மட்டையை தொட்டுப் பார்க்கும்முன்பே சர்வதேச களம் கண்டவர். இன்னும் விளையாடிக்கொண்டு இருக்கிறார்.  அவருக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுவோம்.

இந்த உலகக் கோப்பையைப் பற்றி யோசித்ததில் சில விஷயங்கள் தோன்றின அதை பகிர்ந்துகொள்ளவே இந்த இடுகை

1. சச்சினுக்காக உலக் கோப்பையை வென்றிருக்கிறோம்.  ஆனால் இதற்கு முன் சச்சின் தலைகீழாக நின்றபோதெல்லாம் கிடைக்காத கோப்பை. இன்று அவருக்கு சமர்பிக்கப் பட்டிருக்கிறது. அணியினர் அவருக்காக வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.  இந்திய அணி முழுக்க சச்சினை நம்பி இல்லை என்ற சூழல் வந்திருக்கிறது.  (முன்பெல்லாம் சச்சின் சதம் அடித்துக் கொடுத்தால்கூட வெற்றிபெரும்வரை களத்தில் இருக்கவேண்டும். இல்லையென்றால் ஊத்திவிடும்)


2. பாகிஸ்தானிலிருந்து வந்த அஃப்ரிதி நல்லவர் அஃப்ரிதியாக திரும்பி யிருக்கிறார். கிரிக்கெட்டில் வெற்றிக்காக எதையும் செய்யக்கூடியவர் அவர். அவரே  இந்தியாவுடன் நடக்கும் ஆட்டத்தை இயல்பாக பாருங்கள் என்று அங்குள்ள ஊடகங்களின் முன்னர் கூறும் அளவிற்கு நல்லவராகவும் தைரியமானவராகவும் இருக்கிறார். அவரிடமிருந்து நம்மவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.


3.சென்ற முறை அணிகள் இலங்கைக்கு சென்று ஆட மறுத்த போது இலங்கைக்கு சாதகமாக புள்ளிகள் வழங்கின. ஆனால் இந்த முறை பாகிஸ்தானை கழட்டிவிட்டுவிட்டது. இது ஒரு எல்லா அணிகளுக்குமே எச்சரிக்கைதான்.

4. பாகிஸ்தான், இலங்கை அதிபர்கள் இந்தியத் தலைமை கூப்பிட்டால் உடனே வரத்தயாராக இருக்கிறார்கள். ஒரு நாள் முழுவதும் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் பேசி பல பிரச்ச்னைகளைத் தீர்க்க இந்திய அரசாங்கம் முயலலாம். கிரிக்கெட் போட்டி முடிந்தால் என்ன? ஏதாவது கலைநிகழ்ச்சிகள் கூட நடத்தி உலக அமைதியை நிலைநாட்டலாம்.

5. வெற்றியின்போது நம் ஆட்கள் அழுகிறார்கள். கண்கள் பனிக்க இதயம் கணக்கத்தான் ஆடுகிறார்களோ?

6. பூணம் பாண்டே மாதிரி உள்ளூர் கபடி போட்டிகளிலும் அறிவிப்பு வந்தால் நல்லாயிருக்குமோ?
http://www.hindimovies.org/wp-content/uploads/2011/03/hot-poonam-pandey.jpg

7.இனிவரும் ஆட்டங்களில் முதல் சுற்றில் ஏதாவது ஒரு போட்டி டை ஆனால்தான் கோப்பை வாங்குவார்களா?

8.ஒருவேளை இந்த ஆட்டத்தில் டோனி வெற்றி இன்னிங்க்ஸ் கொடுக்கவில்லையென்றால் சென்ற உலகக் கோப்பை நிகழ்வுகள் திரும்பி இருக்குமோ?

9.சச்சின் மேல் எந்த ஒரு நெருக்குதலும் இல்லை. மற்ற வீரர்களை விட நன்றாகத்தான் விளையாடுகிறார். அவர் இருப்பதே சகவீரர்களுக்கு உற்சாகமும், எதிர் அணியினருக்கு கிலியையும் கொடுப்பதால் அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்?

10. எல்.பி.டபிள்யூ கூட மேல் முறையீடு செய்வதற்கு பதிலாக எல்லா முடிவுகளையும் மூன்றாம் நடுவருக்கு கொடுத்து விடலாமோ?



11.ரிக்கி பாண்டிங் மாதிரி வலிமையான அணியை கையில் வாங்கி அதை  குட்டிச் சுவராக்கிய அணித்தலைவர் வேறெங்காவது இருப்பார்களா? நடுவர் அவுட் கொடுத்தால் மட்டுமே வெளியேறுவேன் எறும் தரையில் பந்து பட்டது நன்றாக தெரிந்தும் நடுவர் ஏமாந்து சாதகமாக தீர்ப்பு கொடுக்கமாட்டாரா என்று எதிர்பார்க்கும் தலைவர் எந்த தேசிய அணியிலாவது இருப்பார்களா?

12. பேசாமல் பிசிசிஐ ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன? நல்ல நட்சத்திர அந்தஸ்து உள்ள ஆட்கள் இருக்கிறார்கள். பணமும் நிறைய இருக்கிறது.  பெரும்பாலான மாநிலங்களில் சரமாறியாக செலவு செய்ய ஆட்களும் இருக்கிறார்கள்.  கண்டிப்பாக ஆட்சி அவர்களுத்தான் உலக அளவில் இருந்தெல்லாம் வந்து பிரச்சாரம் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails