Tuesday, December 29, 2009

டபுள் மீனிங் 29-12-09

வழக்கம்போல் சுதந்திரப் பறவையாகவே சுமித்ரா சுற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உள்ள சாதாரணப் பொறுப்புக்களைக்கூட உடன் படிக்கும் மாணவர்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டே இருந்ததால்  அவளுக்கு தான் ஏதோ ஒரு சாதனை மங்கை போன்ற பெயர் வந்துவிட்டிருந்தது.  அதுவும் சுமன் முன்மொழிந்த நார்த்தி பீஸைத் தோற்கடித்துவிட்டதால் தனக்கு ஒட்டு மொத்த மாணவர்கள் செல்வாக்கும் நிறைந்து இருப்பதாகத் தனக்குத் தானே நினைத்துக் கொண்டிருந்தாள்.  அவளை ஓட்ட நினைக்கும் மாணவர்கள் அவள் கையசைத்தாலும் கண்ணசைத்தாலும் சூப்பர் சூப்பர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அவள் தும்மினால் கூட 1967லிருந்து இந்தக் கல்லூரியி இவ்வளவு சூப்பராக தும்ம ஆளே இல்லை என்று சொல்ல ஆரம்பித்திருந்தனர், அதையும் சுமித்ரா நம்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.


இப்படி அதீத நினைப்பில் சுற்றிக் கொண்டிருந்தவளிடம் உன்னுடன் வந்திருப்பவன் பெயர்  தீஃபக் குமார் என்றதும் அவள் கண்களில் பொறிபறக்க ஆரம்பித்தது.

கொஞ்சம் உங்கள் கால்கள் துவளுவது போலத் தோன்றியது.  அவள் த்னியாகத்தான் பொருட்காட்சிக்கு கிளம்பினால் பொருட்காட்சி வாசலில் ஹாய் சொல்லிக் கொண்டு தீபக் குமார் வந்தான். அவளும் ஒரே கல்லூரி என்பதாலும் இப்போதெல்லாம் பலரும் பல பிரச்சனைக்கு தன்னை அனுகுவதாக நினைத்துக் கொண்டிருந்ததாலும் அவனுடன் பேசிக் கொண்டுவந்திருந்தாள்.  ஆனால் இவர்கள் இப்படி பேசுவதற்கு உதட்டளவில் எதிர்ப்பு தெரிவித்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் உதருவதாகவே தோன்றியது.

தீபக் குமார் அப்போது கையில் பெரிய சைஸ் அப்பளத்துடன் வந்தான். ஒரு அப்பளத்தை  சுமித்ராவிடம் கொடுத்தான். மற்ற மாணவர்களிடம் என்ன பாஸ் நீங்க இதை ஏற்கனவே டேஸ்ட் பண்ணியிருப்பிங்களே...,


பாருடா டபுள் மீனிங் பேசறான். சுமனின் நண்பன் ஒருவன் தனக்கும் தன் அருகில் இருந்தவனுக்கும் மட்டும் கேட்பதுபோல் சொல்லிக் கொண்டது  சுமிதராவுக்கும் சேர்ந்து கேட்டுத் தொலைத்தது. 

இல்லை  எங்களுக்கு இதிலெல்லாம் இண்டரெஸ்ட் இல்ல இது சுமன்..,

நான் அப்படி இல்லப்பா ..,   டேஸ்ட் பண்ணனும்னு நினைச்சா சான்ஸ் கிடைச்ச உடனே டேஸ்ட் பண்ணிடுவேன்..,

ஆனால் பாரு..,  இதெல்லாம் ஒருநாள் சாப்பிட்டா ஓ.கே.., டெய்லினா  வயிறும் தாங்காது.., பாக்கெட்டும் தாங்காது..,

ஏண்டா.., இவன் அப்பளத்தைதான சொல்றான்,  எனக்கு என்ணென்னமோ தோணுதுடா..,

ஓ.கே பாஸ் நாங்க கிளம்புறோம். நீங்க நம்ம ஸ்டால பாத்துக்கங்க.., நாங்க சுத்திப் பார்க்கறதுக்கு நிறைய இருக்கு. சுமித்ரா போலாமா?

போம்ம்மா போ..,  போய் சுத்திப்பாரு...,  சுமன் சொன்ன குரல் அவனுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது,

தொடரும்............................................................>>>>>

முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

============================================================

Monday, December 28, 2009

நீ அறிவாயா?

எழுதிய கடிதம்

உனக்கானது

எழுதிய எழுத்தும்

உனக்காகவே

வடித்திருக்கும்

உணர்வும்

உணக்காகவே..,

கடைசியில்

கையெழுத்திட்டவனும்

உனக்கானவனே..,


உண்மை ஒன்று

உனக்காக

சொல்ல நினைத்தது

ஆனால்

சொல்ல மறந்தது

உனக்காக

அமைந்தது

உனக்கானவனால்

கையெழுத்திடப் பட்டது

வழக்கம்போல்

அடுத்த காகிதத்தில்

அடுத்த உணர்வுகளுடன்

இப்போதெல்லாம்

குப்பைத் தொட்டிக்கு மட்டும்

Friday, December 25, 2009

விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பிடித்த ஒரு ரீமேக் படம்

விஜய்யின் ரீமேக் படங்களை பார்த்து ஒரு புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்  வலையுலக கண்மணிகளுக்காக இந்த புதிய ரீமேக் முயற்சி.

இன்றைய விஜய்யின் ரசனைக்கு ஒப்ப, இன்றைய ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில்  இங்கே ஒரு ரீமேக் ஆக்கும் முயற்சி நடைபெறுகிறது.

==========================================================================
விஜய்  பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகிறார். வீட்டில் அவர் அப்பா தனது  பல தொழில்கள் சம்பந்தமான டாகுமெண்ட்களை வைத்துக் கொண்டு ஏதாவது ஒன்று நிறுவணத்தை நிர்வகிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். ஆனால் விஜய் தான் படிக்க வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கும் அவரது அப்பாவுக்கும் சண்டை வருகிறது.  அவரது அம்மா இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறார். விஜய்  மெரினாவுக்கு நண்பர்களுடன் வந்து விடுகிறார்.

----------------------------------------------------------------------------

நாற்கரச்சாலையில் ஒரு டாப்லெஸ் காரினை பல சுமோக்கள் டயோட்டாக்கள் துரத்துக்கின்றன.  பல வாகனங்களையும் தடைகளையும் தாண்டி வாகனமானது  கத்திபாரா பாலத்தின் மேல் ஏறுகிறது.  காரின் வேகத்தினைக் கட்டுமடுத்த முடியாமல்  தடுமாற அதிலிருக்கும் நாயகி தமன்னா அப்படியே வானத்தில் பறந்துவந்து  மெரினாவில் விழுகிறார்.  அவர் விழும் இடத்திற்கு அருகில்  விஜய் குளித்துக் கொண்டிருக்கிறார்.  இருவரது கண்களும் பேசிக் கொள்கின்றன

இங்கு ஒரு ரீமிக்ஸ் பாட்டு

விழியில் விழிமோதி இதயக் கதவொன்று திறந்ததே

ஐஸ்ஸும்  ஐஸ்ஸும் க்ராசாகி  ஹார்ட் ஓபன் ஆனதே

கண்ணும் கண்ணும்தான் தெறந்தாச்சு

இப்படி கலவையான பாடல் ஒன்று ஒலிக்கிறது.

-------------------------------------------------------------------------------------

பாடலின் முடிவில்  தமன்னா அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். விஜய்யும் அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

சில நாட்கள் கழித்து  விஜய்  பைக்கில் சென்னை வீதிகளில் உலா வருகிறார். அப்போது சில சமூக விரோதிகள் அருகில் உள்ள சேரிப் பெண் வம்புக்கிழுக்க  அந்தப் பெண்  அந்த வீதியில் போவோர்  வருவோரையும்  பார்த்துக் காப்பாற்றுமாறு கதறுகிறார்.

அவரது அண்ணா என்ற குரல்  விஜய்  காதில் விழுகிறது.

உடனே அந்தத் தங்கையைக் காப்பாற்ற விஜய் பறந்து வருகிறார்.

அடியாள்: ஏய் யார்ரா நீ.........

விஜய்:  செவுத்தில வந்தா பல்லி..,

பறந்து வர்ரவன் கில்லி.., டா.......

அடியாட்கள் கூட்டத்தினை அடித்து நொறுக்குறார். குறிப்பிட்ட கட்டத்தில் அடியாட்கள் அதிகரித்துக் கொண்டே இருக்க விஜய் அடித்து நொருக்கிக் கொண்டே இருக்கிறார். அப்போது  ராயப்பேட்டை மருத்துவ மனையில் இடம் இல்லை என்று விஜய்க்கு குறுஞ்செய்தி வருகிறது.  உடனே சமுதாய நோக்கு கொண்ட விஜய்  வண்டியைத் திருப்பிக்கொண்டு சென்னையை விட்டு வெளியே வருகிறார்.  கத்திபாரா மேம்பாலம் நோக்கி வரும்போது  கலவரத்தை ஆரம்பித்த  முக்கிய அடியாள் தனது சுமோ வாகனத்துடன் மோதுகிறான். விஜய்  முக்கிய அடியாள் இருவரும் வானத்தில் பறக்கிறார்கள்.

நீ போக வேண்டியது ராயப்பேட்டை ஆஸ்பத்திரி இல்லடா..,

தண்டையார் பேட்டை ஆஸ்பத்திரி.., 

http://www.thehindu.com/2009/06/14/images/2009061450310101.jpg
என்று சொல்லி ஒரு உதை விடுகிறார். முக்கிய அடியாள் நேரடியாக தண்டையார் பேட்டையில் போய் விழுகிறார்.

விஜய் அப்படியே வானத்தில் பறந்து  அருகில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரின் கீழ் கம்பிகளை பிடித்துக் கொள்கிறார். அந்த ஹெலிகாப்டரை தமன்னா ஓட்டிவருகிறார்.

இருவரின் கண்களும் மீண்டும் பேசிக் கொள்கின்றன..  பழைய ட்யூன் மீண்டும் ஒலிக்கிறது.  விஜயின் கை வழுக்குகிறது. தமன்னா தனது இடுப்பு பெல்ட்டை கழட்டிக் கொடுக்கிறார். விஜய் அதன் துணையுடன்   தொடர்ந்து பறந்து வந்து ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் குதித்து விடுகிறார், அடுத்து உள்ள பெண்கள் கல்லூரியில் தமன்னா இறங்கிக் கொள்கிறார். 

விஜய் ஹெலிகாப்டர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டுவந்த நிகழ்ச்சியை  தொலைநோக்கி மூலம் அவரது அண்ணன் தலைவாசல் விஜய் பார்த்துவிடுகிறார். அவர் ராணுவத்தில் ஒரு உயர் பதவியில் வகிப்பவர்.


விஜயின் தலையில் பொறி பறக்கிறது. கட்டிடத்தில் குதித்த விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கிறார். உடனே தலையில் பறக்கும்பொறி நெஞ்சில் பறக்கிறது.  ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே..,




விஜய் தனது தந்தையிடம் சொல்லி  தனது நிறுவனம் ஒன்றைப் பார்க்க ஆரம்பிக்கிறார்.


விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கும் விவகாரம் ராணுவத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குதெரிந்து விடுகிறது. அவர் விஜயை மிரட்டுகிறார்.  தமன்னாவின் அண்ணன் என்பதால் விஜய் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்.


விஜய்க்கு புத்திமதி சொல்லும் வகையில்  விஜயின் நிறுவனத்திற்கு வந்து செல்கிறார். இந்தக் காட்சிகளை விஜயின் தொழில் போட்டியாளர்கள் கவனித்து விடுகிறார்கள். அவர்கள் தமன்னாவைத் தூக்க தயாராகிறார்கள்.
தமன்னாவை மறக்க முடியாமல் தடுமாறும் விஜய் தூக்கத்தை இழக்கிறார். அதை சரிசெய்யும் வகையில் அனைத்து நிறுவனங்களின் நிர்வாகத்தையும் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். பல நாட்கள் தூங்காமல் தொடர்ச்சியாக வேலை பார்க்கும் ரக்சியம்  கின்னஸ் புத்தகத்திற்கு தெரிந்துவிடுகிறது. விஜய் தூங்க நினைக்கும்போதெல்லாம் தமன்னா மிஸ்டு கால் கொடுத்து கடலை போடுவதால் விஜய் துளியும் தூங்காமல் வேலை செய்கிறார்.

விஜய் தூங்க நினைப்பதால் என்னைத்தாலாட்ட வருவாளா என்று பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிறார்.  விஜயைப் பார்த்து தூங்க வைப்பதற்காக தமன்னா விஜயின் நிறுவனத்தை அனுகுகிறார்.  கின்னஸ் சாதனையை நேரடியாக ஒளிபரப்பும் கேமிரா மேனா இருக்கும் மூன்றாவது அண்ணன் தமன்னா விஜயிடம் நேரில் கடலை போடுவதைப் பார்த்து காட்டிரி ஆகிரார்.  விஜயைக் கொள்ள முயற்சிக்கிறார்.  விஜயின் நண்பர்களை காப்பாற்றி அவரை அவரின் அப்பாவிடம் அழைத்துச் செல்கிறார்கள்.

விஜயின் அப்பா தமன்னாவைப் பார்த்து இது போன்ற சப்பை ஃபிகர்களை விட்டுவிடுமாறும்  விஜய்க்கு  குருவி த்ரிஷா, அ.த,ம. ஷ்ரேயா, வில்லு நயந்தாரா, வேட்டைக்காரன் அனுஷ்கா போன்று நச் ஐட்டமாக பார்ப்பதாகச் சொல்லுகிறார்.

அதெல்லாம் மார்க்கெட் போன ஆளுங்க...,  
இவ இவ இவ..  
மார்கழி மாசத்துக்கு ஏத்த ஆளு...,  என்று பன்ச் டயலாக் விடுகிறார்.  டரியலான அவரது அப்பா அடியாட்களை அனுப்புகிறார்.  இரு குடும்பத்தாரும் மிரட்டுவதால் விஜயின் நண்பனின் தந்தை  மும்பை தாதாவிடம் அனுப்புகின்றனர்.

மும்பை தாதா  தனது அடியாட்களுடன்  இந்திப் பாடல் பாடி ஆடிக் கொண்டு இருக்கிறார். அவரிடம்  விஜயின் நண்பர் அறிமுகப் படுத்தி வைக்கிறார்.

இந்த மும்பை மாநகரிலே முமைத்கான் முன்னிலையிலே நாளை உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று  மும்பைதாதா அறிவித்துவிடுகிறார்.  முமைத் கானின் ஆட்டமும் நடக்க ஆரம்பித்து விடுகிறார்.

திருமணத்திற்கு முன்பு ஜோடிகள் இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்து உடை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

உடை மாற்றும்போது  ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொள்கின்றனர்.  இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்துக் கொண்டு சென்னையை நோக்கி வந்து விடுகிறார்கள்


=============================================================

வீட்டிற்கு திரும்பிய விஜய் மற்றும் தமன்னா எதிலும் பிடிப்பே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரூக்கிறார்கள், அப்போது விஜயின் பழைய அழுக்குத் துணிகள் சலவைக்குப் போய் திரும்பிவருகின்றன, அப்போது அதில் இருக்கும் லேடிஸ் பெல்ட விஜயின் அம்மாவின் பார்வைக்கு தட்டுப் படுகிறது.
அது ஒரு முக்கிய தருணத்தில் தமன்னாவிடம் இருந்து விஜய்யின் இடுப்பில் சிக்கிக் கொண்டு அவரிடமே தங்கி விட்ட ஒரு நினைவுச் சின்னம்.


பின்னர் அவர் தமன்னாவின் அப்பாவிடம் பேசி பெல்ட்டைத் திருப்பிக் கொடுக்க வருவதாக  சொல்லுகிறார். விஜய் அப்பா, அம்மா, நண்பர்கள் சகிதம் தமன்னாவின் வீட்டிற்குள் செல்கிறார். அங்கே  தமன்னாவின் பெரிய, சிறிய நடு அண்ணன்கள் வரிசையாக நின்று வரவேற்கிறார்கள்.


அவர்கள் கையில் துப்பாக்கி, விஜயின் அப்பாவிடம் அவரது சொத்து மற்றும் நிறுவனங்களை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு மிரட்டுகிறார்கள். உடனே  விஜயும் தனது கையிலிருந்து அதிவேக துப்பாக்கியால் பெரிய அண்ணனை மடக்கிவிடுகிறார்.

தனிவழில வர நான் தளபதியில்லடா 

உன்வழியிலயே வந்து 

உன்னையே மடக்குற இளைய தளபதிடா...,

உடனடியாக ஃபிளாஷ்பேக் விரிகிறது
================================================
ஃபிளாஷ்பேக் காட்சி:-


உலக பயங்கரவாதியான தமன்னாவின் குடும்பத்தினரை பிடிக்க இண்டர்போல் போலிஸ் தனித் திட்டம் போடுகிறார்கள்.  அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவனாக நடிக்கிறார். பின்னர் அவர் தமன்னாவை நெருங்குவது, மும்பை ஆட்களை மடக்க முடியாமல் போனது போன்றவை ஃபிளாஷ் பேக்கில் வருகின்றன..,


தமன்னாவின் காதல் உண்மைக்காதல் என்பதால் சட்டம் அவரை குற்றவாளியல்ல என்று விடுதலை செய்து விடுகிறது

இந்தியாவைக் காத்த இந்தியாவின் இளைய தளபதிக்கு பதக்கங்களும் மாலை மரியாதைகளும் குவிகின்றன
விஜய் தமன்னாவை மணந்து கொண்டு காதலுக்கு மரியாதை செய்து விடுகிறார்

============================================================

அடியாள்;  நீ யார் மேல கைவெச்சிருக்க தெரியமா?

ஹீரோ:-  உன்மேல யார் கைவச்சிருக்கா தெரியுமா?

வசனம் இடம் பெற்ற படம் மனதில் இருக்கிறதா  நண்பர்களே...,

=============================================================
இது மீள்பதிவாக இருந்தாலும் வாசகர்கள் ஓட்டுக்கள் போட்டால் தமிழ்மணப் பரிந்துரை பகுதிக்குச் செல்லும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

Thursday, December 24, 2009

50% கண்ணீர் 50% செந்நீர்

விஜயின் அடுத்த படத்திற்கான அதிரடிக் கதை  நமது வலைப்பூவில் வெளியாக இருக்கிறது..,

நீங்கள் ஏற்கனவே பார்த்து ரசித்த கதைக்கு புதிய ட்ரீட்மெண்ட்..,

கண்ணீரும் செந்நீரும் கலந்து எழுதப் பட்ட காதல் சரித்திரம்..,

அதிரடி சந்திப்பு,, அருமையான காதல்

பாம்பே கடத்தல் மன்னர்களிடம்  புகுந்து வெளியேறல்

கடத்தல் முதலைகளின் பாசப் பிணைப்பு

தியாகம் உருக்கம்

பின் இணைப்பு

கிளைமாக்ஸில் ஃபிளாஸ்பேக்

சுபம்

விரைவில் எதிர்பாருங்கள்.

==========================================================

Mummy motherfolk, danger not leave
Heat or cyclone, never I never tell
There there hunger take means, many savoury
Measurement food is one time
For pregnancy I come free mummy
Your child also name one I keep mummy
Letter lacking person ada trusting us and coming
Address lacking street ada auto fellow knowing
Achak means achak only Gumuk means gumuk only
Achak means achak only Gumuk means gumuk only...

இது எனது இடுகைக்கு வந்த ஒரு பின்னூட்டத்தின் ஒரு பகுதி. எழுதியவர் விரும்பினால் அவரது பெயர் வெளியிடப்படும். விரும்பாவிட்டாலும் சிலகாலம் கழித்து வெளியிடப்படும். ஏனெனில் இது என்னை ரசிக்க வைத்த பகுதி

Wednesday, December 23, 2009

மகன்களுக்குள் பிரச்சனை இல்லை. மூன்றாவது மருமகளே காரணம் .=நன்றி முகிலன்

ஒரு ஊரில் ஒரு குடும்பம். அங்க மூணு பசங்க.., மூணு பேருக்கும் மூணு வகையான வேலை..,  மூணாவது பையன் கொஞ்சம் வசதியா இருக்காராம். (அவருக்கு ஐ.டி. பார்க் வச்சுக் கொடுத்ததெல்லாம் குடும்ப தலைவர்தான் என்பது சரித்திரம்) .  இப்போ மூணாவது பையனோட வருமானத்துக்குத் தகுந்த வாழக்க்கைத்தரம் இல்லைனு மூணாவது மருமகள் நினைக்கிறாராம்ம். அதனால் சாம பேத தான தண்டங்களை உபயோகப் படுத்தி தனிக்குடித்தனத்துக்கு  உறுதி வாங்கி இருக்கிறாராம்.

எனது


தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

பதிவிற்கு தொடர்ச்சியாக முகிலன் அவர்கள்


குற்றம் - நடந்தது என்ன?  இடுகை இட்டிருக்கிறார்.


ஆனால் அந்த இடுகையிலேயே  இது குடும்பத்தை வளர்ப்பதற்கான முயற்சி அல்ல. தனிக்குடித்தனம்  மூன்றாவது மருமகளின்  வீம்புக்காகவும், வரட்டுக் கவுரவத்திற்கான முயற்சியே என்று என்னைப் போன்றவர்களின் எண்ணத்திற்கு ஆதரவு இடுகை போட்டிருக்கிறார் அவருக்கு நன்றி.


=====================================================
அவரது இன்னொரு இடுகையில்

கேள்வி: தெலுங்கானா பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: இந்தக் கேள்வி மிகவும் சுலபம். தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கி அதில் ஆந்திராவையும் ராயலசீமாவையும் சேர்த்துவிட்டால் போச்சு. அப்புறம் யாரும் தனித் தெலுங்கானா கேட்க மாட்டார்கள்.

என்று சொல்லி யிருக்கிறார். அந்த இடுகையையும் ரசித்துவிடுங்கள்.

அண்ணா, எம்.ஜி.யார், விஜய்



விஜய் அவர்களின் புதிய படமாக உரிமைக்குரல் வரப்போவதாக கில்லிகளின் வலைப்பூவில் செய்தி வெளியாகி உள்ளது. உடனடியாக உரிமைக்குரல் பழைய படத்தினை நினைவு படுத்திய போது தென்பட்ட பாடல்தான் இது. அதன் வரி வடிவம் இதோ

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )

சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )


உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்
(ஒரு தாய் )

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
(ஒரு தாய் )


எத்தனையோ பாடல்களை மறுவடிவம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற பாடல்களுக்கு மறுவடிவம் கொடுத்தால் மக்களிடம் சென்றடையுமே என்ற ஒரு ஆசை தோன்றியது. அதே நேரத்தில் இன்பமே பாடல் எங்கோ ஒலிப்பதும் கேட்டது. நல்ல பாடல்களை, நல்ல பாடல்களாகவே மக்களிடம் மறுவடிவம் கொடுத்து சேர்க்கமுடியவே முடியாதா?

பின்குறிப்பு:- விஜய்க்கும் பிடித்த வார்த்தை, ண்ணா. எல்லாப் படங்களிலும் இந்த வார்த்தையை பலமுறை உச்சரிக்கிறார். இந்தப் பாடலிலும் ண்ணா வருவதால் இந்த பாடலை அவர் உபயோகப் படுத்திக் கொள்வார் என நம்பலாம்.

2.இது ஒரு மீள்பதிவு

3. அண்ணா நூற்றாண்டுவிழாவில் நமது பங்களிப்புகளை இந்த இடுகைகள் மூலம் படித்துக் கொள்ளுங்கள்.
அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09

சமீபத்திய கேள்விகளுக்கு பதில்கள் 12.9.09

அண்ணா - சில கேள்விகள் 12.9.09

அண்ணா 11.9.09

இறைவனிடம் சில கேள்விகள்..

1.
வானத்தை மேலும்
பூமியைக் கீழும்
ஏன் படைத்தான்
இறைவா..

2.
தமிழை தமிழனும்
ஆங்கிலத்தை ஆங்கிலேயனும்
தாய்மொழியாக கொள்ளுமாறு
ஏன் படைத்தாய்
இறைவா...


3.
தலையில் ஏன்
முடி படைத்தாய்...
பின்னர்
வழுக்கை என்றோர்
நிலையை
ஏன் படைத்தாய்....


4.
காய்களை சைவம் என்றாய்
மாமிசத்தை அசைவம் என்றாய்
ஏன்..


5.
பெட்ரோலை
உலகிற்களித்தாய்.. ஆனால்
அதில்
டீசல், மண்ணெண்ணெய்
என்ற பிரிவுகளையும் படைத்தாய்.
ஏன் இறைவா.. ஏன்..?

ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன

Monday, December 21, 2009

தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

Telungana....some stupid questions 


என்ற ஆங்கில் வலைப்பூ பக்கம்  போக நேர்ந்தது. பின்னே ஃபாலோவர் என்றால் போய் படித்துவிடுவோமே..,  அதில் இருந்த சில கேள்விகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

1. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தெலுங்கானா மாவட்டங்களிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரிலிருந்து வந்தனர்?  மாஸ்கோ அல்லது நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்களா? அவர்கள் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தனர்?


2.ஒருவேளை தெலுங்கானா என்று ஒரு மாநிலம் கொடுக்கப் பட்டால் அப்போது அங்கிருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்? 

இப்போது தெலுங்கானா பகுதியில் இருக்கும் சோமாலியன் நிலப்பிரபுக்களும் உகாண்டாவைச் சேர்ந்த புரட்சிக்காரர்களும் தூக்கி யெறியப் படுவார்களா?


3. ஒருவேளை அப்படி ஒரு மாநிலம் கொடுக்கப்பட்டால் அங்கு ஆட்சி புரிய எந்த கட்சிகள் வருவார்கள்? காங்கிரஸ்,தெலுகுதேசம், தெலுங்கானா ராஸ்ட்ரீய சமிதி,பிரஜா ராஜ்யம்?   இத்தனைநாள் தெலுங்கானா முன்னேற்றத்திற்கு உதவாத கட்சிகளிடம் இனிமேல் எப்படி எதிர்பார்க்கமுடியும்?


==============================================

இவை தவிர மேலும் பல கேள்விகளை கேட்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

==================================================

இவர் தவிர இவர் மகனுக்கும் பல  சந்தேகங்கள் தோன்றுவதுண்டு.. குறிப்பாக வேட்டைக்காரன் படம் பார்த்தபின் தோன்றிய சந்தேகங்கள் அர்த்தமுள்ளவை. ஒரு எட்டுவேண்டுமானால் போய் படித்துவாருங்கள்.

The incomplete man

Sunday, December 20, 2009

பிந்தொடர்பவர்கள் பட்டியலில் பிரச்சனையா?

பல பதிவுகளில் தங்கள் பிந்தொடர்பவர்களைக் காணவில்லை என்று இடுகைகளைப் பார்த்திருக்கிறோம்.

சிலர் முகப்புக் களத்தில் இருக்கும்போது மட்டும் பிந்தொடர்பவர்களாக இருப்பதாகவும் முகப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டால் அவர்களும் ஒதுங்கிக் கொள்வதாகவும் கூட ஒரு பேச்சு அடிபடுகிறது.

இப்படிப்பட்ட பேச்சுக்கள் அடிப்பட்ட காலத்திலேயே பின்னூட்டப் பெயர்களின் மூலமாக நண்பர்களின் இடுகைக்குச் செல்லும்போது அவர்களின்   /profile/  ல் நமது பெயர் இருக்கிறதா என்று பார்ப்பது உண்டு. பிந்தொடர்பவர்கள் பற்றி பிரச்சனை ஆரம்பித்த காலத்திலேயே எனது வலைப்பூவிற்கு தொடர்வருகையாளர் ஒருவரின்  /profile/ ல் பிந்தொடரும் வலைப்பூக்களில் என்வலைப்பூவின் பெயர் இல்லை.  எனது பிந்தொடர்பவர் பட்டியலிலும் அவர்பெயர் இல்லை.  ஆனால் இன்றுவரை எனது இடுகைகளைத் தொடர்ச்சியாக படித்து பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கிறார். 

கண்டிப்பாக அவர் பிந்தொடர்பவர்கள் பட்டியலிருந்து தனது பெயரை துண்டித்திருக்க மாட்டார். அவர் மட்டுமல்ல யாருமே பெயரை துண்டிக்கும் அளவுக்கு மெனக் கெட மாட்டார்கள் என்பது எனது கருத்து. விருப்பம் இல்லையென்றால் இடுகையைப் படிக்க மாட்டார்கள் அவ்வளவுதான்.

எனது  சச்சின், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்பதிவர்களுடன் ந...  

இடுகையின்போது கூட நட்புடன் ஜமால் மற்றும் லோகு ஆகியோர் தங்கள் பெயரை நான் விட்டுவிட்டதாக உரிமையுடன் சுட்டிக் காட்டினர். 

அப்படியென்றால் ஒரு முடிவுக்குத்தான் வரமுடிகிறது. பிந்தொடர்பவர் பட்டியல் தொழில்நுட்பத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது.  எனது கருத்தினை நான் சொல்லிவிட்டேன். தொழில்நுட்பப்பதிவர்கள் வழிகாட்டுவார்கள் என்று நம்புவோம்.

பின்குறிப்பு:- இன்று எனது பிந்தொடர்பவர்கள் பட்டியலில் எண்ணிக்கை குறைந்துவிட்டது அதனால்தான் இப்படி ஒரு இடுகை.

Saturday, December 19, 2009

வேட்டைக்காரனுக்கு நன்றி

வறட்சியாய் போய் கொண்டிருந்த பதிவுலகில் ஹிட் மழைகளை குவிய காரணமானவன் வேட்டைக்காரன்.


முண்ணனி பதிவர்களே ஒரு நாளைக்கு ஐந்நூறு ஹிட்டுகளுக்கு நாக்கு தள்ளிக் கொண்டிருந்த காலம் போய்  வேட்டைக்காரன் என்ற பெயர் கொண்ட பதிவுகள் எல்லாம் இன்று ஆயிரம் ஹிட்டுகள் குவித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணமாக அமைந்த வேட்டைக்காரனுக்கு
நன்றி
நன்றி 
நன்றி

http://www.southgossips.com/wp-content/uploads/2009/12/vettaikaran-12_001.jpg










http://icdn.indiaglitz.com/tamil/gallery/Movies/vettaikkaran/vettaikaran091209_19.jpg 



==============================================================


முதல் பகுதி வேட்டைக்காரன் இனிய துவக்கம்    
அமெரிக்க ஜனாதிபதியாக யாரைத் தேர்ந்தெடுப்பது பற்றி அமெரிக்க மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. அனைவரும் தொடர்ச்சியாக வேட்டைக்காரனுக்கு தந்தி அடிக்கிறார்கள். அந்த தந்திகள் தமிழ்நாட்டை வந்தடைகிறது. தந்திகாரர் வேட்டைக்காரன் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் வேட்டைக்காரனின் இருப்பிடத்தைத் தேடுகிறார்.

அப்போது ஒரு பெரியவர்: நீ நிக்கறதே அவரோட எல்லையிலதான். நீ தந்தியைப் படி அப்பு.., வேட்டைக்காரனுக்கு கண்டிப்பா கேட்கும்
என்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்

=================================================



இரண்டாம்பாகம்நாசாவுக்குள் போன நம்மாளு
நாசாவின் ஈசானி மூலையில் ஒரு ஒருவம் அசைவது கண்காணிப்பு காமிராவில் தெரிய ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தபோது அந்த உருவம் ஆசிய முகமாகத் தெரிய வந்தது.

மீசையில்லாத மொழுமொழு உருவம்.... அது...



ஹண்ட்டர்..,

அமெரிக்க அதிபர் இருக்கையை விட்டு எழுந்து விட்டார். ஹண்ட்டர் இப்போது வளர்ந்துவரும் ஒரு கடத்தல் மன்னன். அவன் எப்படி இங்கே?

உடனே அதிபர் ஹண்ட்டருக்கு அலைபேசியில் அழைக்கிறார்.

நான் ரொம்ப பிஸி. அப்புறம் ஃபோன் பண்ணுங்க என்று ஹண்ட்டர் பதில் சொல்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்
===================================================================



மூன்றாம் பாகம்வேட்டைக்காரச் சாமி


நான்
ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்..
இனி திருமபவெல்லாம் முடியாது. என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அங்கே பதினைந்து வயது தமிழரசன் நிற்கிறான்.


நீங்கெல்லாம் படிக்க போங்க.. நான் படிக்க வைக்கறேன்.


பதினைந்து வய்து தமிழரசனின் குரல் உறுதியாக ஒலிக்கிறது.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்


 ============================================

நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக்

உலக அமைதி கொஞ்ச நாட்களாகவே கேள்விக் குறியானது. ஆஃப்பிரிக்க நாடு ஒன்றில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக உலகப் பொருளாதாரமே நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பின்னே அந்த நாட்டில் இருந்துதானே உலக நாடுகளுக்கு தங்கமும் வைரமும் வருகின்றன.

இதனால் இந்திய நாட்டில் நடக்கும் பல திருமணங்களில் நகைகளுக்குப் பதிலாக பணத்தையும், பணம் அடங்கிய சூட்கேஸ்களையும் காதுகளிலும், மூக்குகளிலும். கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் தொங்க விட ஆரம்பித்தனர்.  


முழுதும் படிக்க அழுத்துங்கள்

=================================================


Friday, December 18, 2009

வேட்டைக்காரன் விமர்சனம் கல்கியில்

[Vettaikaran[10].jpg]


 கல்கியில் வந்த வேட்டைக்காரன் விமர்சனம் இது. இது பற்றிய முழு இடுகையை அகொதீகழகப்  பிரமுகர் வரைந்திருக்கிறார். இங்கே சென்று பார்த்துக் கொள்ளுங்கள்

Wednesday, December 16, 2009

உலர்ந்த உணர்வுகள்

தெரியவில்லை

மீண்டும்

உன்னைப் பார்த்தபோது

உள்ளுக்குள் வந்த

உணர்வுகளின் தன்மை..,

கல்லூரி தேவதையாய்  நீ

உலவிய போது கூட

ரசிகனாய் கூட

இருந்த நினைவு இல்லை

நட்பாய் பழகிய

நாட்களில் கூட

நண்பனாய்  இருந்த

நினைவு இல்லை.

ஒரு பெண்ணாய்

உன்னைப் பார்த்த

நினைவு

இல்லவே இல்லை,


ஆனால்

இன்று

இப்படி ஒரு பெண்

என்னோடு

பல காலம்

பழகியிருக்கிறாள்

என்பதாக

தோன்றும்போது

காரணம்

புரியவில்லை,

எப்போது

என் கண்களுக்கு

பெண்ணானாய்?

ஒன்றும்

புரியவில்லை





உன்முகத்தின்

ஜொலிப்பு


நகைப்பின் தகைப்பு


பேச்சோடு அசையும்

கைவிரல்கள்

காற்றோடு

உலாவும்

முடிக் கற்றைகள்

உடலோடு இணைந்த

உடைகள்

நாம் பழகிய

நாட்களிலும்

இப்படித்தான்

இருந்தாயா?


ஏனோ தெரியவில்லை

உன்னைப்

பார்த்தபின்

உன்னை

மறந்து விட்டேன்.

புதிய

உணர்வை

உணர்ந்துகொண்டேன்

உணர்வின்

உணர்வு

உணர முடிந்தால்

நீயும் உணர்ந்திருப்பாய்

இல்லை

உணர்வில்

உலர்ந்திருப்பாய்

உணர்வுகள்

உலர்ந்திருந்தால்

உன்னைக்

கண்டிருக்கலாம்

உன்னைக்

கண்டதால்

உணர்வுகள்

உணர்த்தியிருக்கலாம்,

உண்மையைச்

சொன்னால்

உன்னை நான்

கண்டிருக்கவே கூடாது..,

Saturday, December 12, 2009

அசோக் குமார்

குணாளின் வாழ்க்கையில் இதற்கு முன் என்ன நடந்தது என்பதை அறிய இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்
http://www.nilacharal.com/images/212/mkthyagarajan.jpgகுணாளின் தன் மனைவியின் படுக்கையறையில் தனது தந்தையின் இளம்மனைவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இனிமேல் உன்முகத்தையே பார்க்க மாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு வெளியேறிவிடுகிறார்.

அசோகர் புத்திர சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். நாடு கடத்தப்பட்ட மகனை திரும்ப அழைக்கும் விதமாக கடிதம் எழுதச் சொல்லி அதில் கையெழுத்திடுகிறார், ஆனால் அந்த கடிதத்தில் குணாளின் கண்களை குடுடாக்கும்படி எழுதி அதை தட்ச சீலத்திற்கு அணுப்புகிறார் அசோகரின் இளம் மனைவி. தட்ச சீலத்தின் பொறுப்பில் இருக்கும் மகேந்திரர் இந்த கடிதத்தை குணாளிடம் காட்ட குணாள் ஐந்து நிமிடங்கள் வசனம் பேசுகிறார், பின்னர் தனது தந்தையின் சபத்தை நிறைவேற்ற தனது கண்களை தானே குருடாக்கிக் கொண்டு தட்ச சீலத்தைவிட்டு வெளியேறுகிறார்,

அப்போது புத்த துறவி அவருக்கு வழிகாட்டுகிறார்.  நாட்டைவிட்டு வெளியேறிய குணாளின் மனைவி தனது கணவனின் பாடலைக்கேட்டு அவரைக் கண்டுபிடித்துவிடுகிறார்.  இருவரும் ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒருநாள் பிச்சை எடுத்து வரும்போது  குழந்தை இறந்துவிடுகிறது, அது தெரியாமலேயே குணாள் தாலாட்டுப் பாடுகிறார்.

பின்னர் வேறொரு நகரம் நோக்கிச் செல்கிறார்கள்.  அந்த நகரத்திற்கு அசோகச் சக்க்ரவர்த்தி வந்திருக்கிறார், அவருக்கு புத்த பிட்சுவின் பாடல் கேட்கிறது,. அசோகர் புத்த பிட்சுவை அழைத்துவரச் சொல்கிறார். காவலர்கள் குணாளனை அழைத்துவருகிறார்கள். குருடர்களை அரசர் பார்க்கக்கூடாது என்பதற்காக அவரை திரைச்சீலைக்கு பின்னாள் இருந்து பாடச் சொல்கிறார்கள் . குணாள் அந்தப் பழைய பாடலைப் பாட  அசோகர் அவரைக் கண்டு பிடித்துவிடுகிறார்.

பின்னர் தன் மகனின் கண்கள் குருடான விதத்தினை அறிந்து பொங்கி எழுகிறார், அப்போது பழைய புத்த பிட்சு வந்து புத்தர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு பாட்டைப் பாட குணாளின் கண்கள் திறந்து கொள்ள

சுபம்.


அதில் இடம் பெறிருந்த சில பாடல்கள்

-------------------------------------
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ
காலமும் செல்ல மடிந்திடவோ உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே

-------------------------------------

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

அண்டரிலே அண்டரிலே நில மண்டலமேல்
அண்டரிலே நில மண்டலமேல் பல
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தீரத்திலே தீரத்திலே உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரதிலே
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானதிலே சரச கானத்தில் தேவா

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உன்னைக் கண்டு மயங்காத பேகளுண்டோ?

மேலும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

Thursday, December 10, 2009

கருணை காட்டுமா? தமிழ்மணம்

நான் தமிழ்மணம் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.  நான் கலந்துகொள்ள தொடுப்புகள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

விருதுகள் 2009 - உங்கள் இடுகைகளை பரிந்துரை செய்து விட்டீர்களா ?

 

 இடுகையில் பலமுறை பின்னூட்டம் மூலம் சொல்லிவிட்டேன்.  7ம்தேதியிலிருந்து பின்னூட்டம் மூலம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 7, 8 தேதிகளில் கணினியில் அமர நேரம் இல்லாததால் அலைபேசி மூலம் பின்னூட்டம் இட்டிருந்தேன். நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.  எப்படி அனுப்புவது என்று புரியவில்லை.


Tuesday, December 8, 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

அறிவிப்பு:  இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. அதனால் இதில் வரும் கருத்துக்களுக்கு நான் சொந்தக்காரன் அல்ல. யாருக்கேனும் மனம் புண்பட்டால் நீக்கிவிடுகிறேன்.  இதை முதலில் எழுதியவர் பெயர் அல்லது பதிவின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் அவர்களின் பெயரையும் தொடுப்பையும் போட்டுவிடுவோம்.

இது எனது கற்பனை அல்ல என்பதற்கு இதில் உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கும் எனக்கும் வெகுதூரம் என்பதே சாட்சி.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails