Thursday, April 30, 2009

குடியிருந்த கோவில் ரீமேக்கில் ரஜினிகாந்த்

குடியிருந்த கோவில் படம் பார்த்து இருக்கிறீர்களா.........

MGR அவர்களின் வெற்றிப் படங்களில் ஒன்று. முழுநீள சண்டைப் படமாகவும், உடைகளில் ஸ்டைலில் தனித்தன்மையுடன் விளங்கும் படம். வில்லனாகவும், நாயகனாகவும் மாறி மாறி திற்மைகாட்டியிருப்பார். நாயகிகளின் ஆடலுடன் பாடல்களும் இடம் பெற்றிருக்கும்.

ரஜினி காந்த் அவர்களின் ரீமேக் சரித்திரம் உலகறிந்த விஷ்யம்.சிவாஜி படத்தில் கூட ரிக் ஷாகாரன் எம்.ஜி.ஆர், வசந்தமாளிகை சிவாஜி, சகலகலா வல்லவன் கமல் என ஒரு கலக்கி இருப்பார்.

குடியிருந்த கோவில் படத்தை ரஜினியை வைத்து எடுத்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனைதான். (கற்பனையின் முடிவில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது)

http://movies.ndtv.com/captionthis/images/rajinikanth.jpg

..................................................................................................................................................................

இயக்குநர்: குடியிருந்த கோவில் படத்தை சூப்பர் ஸ்டாருக்காக எடுக்க போறோம். எந்த மாதிரி மாற்றங்கள் செய்யலாம்.


துணை இயக்குநர்: முதல் சண்டைய அப்படியே வச்சுக்கலாம்ண்ணே... சென்னை முழுதும் கார் சேஸிங், சூப்பர்ஸ்டார் செஞ்சு ரொம்பநாளாச்சு....
வில்லன் எம்ஜியார் தப்பிக்கிறதுக்கு ஒரு துப்பாக்கில சுடுறாரு. இன்றைய ட்ரெண்டுக்கு பெரிய கண்ட்டெயிணர் ஃபுல்லா துப்பாக்கியா வச்சு சுட வைக்கலாம்னே.... அஜித் ரசிகனா மாறினா நம்மாலுக எல்லாம் திரும்பவும் நம்ம கூடாரத்துக்கே வந்திருவாய்ங்க

இணை இயக்குநர்: உயர் போலீஸ் அதிகாரியா மேஜர் சுந்தரராஜன் ரோலுக்கு யாரைப் போடலாம். சுஜாதா ஃபிலிம்ஸ் எடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க..

தயாரிப்பாளரையே போட்டுவிடலாம். இல்லைன்னா பிரபு சார கூப்பிட்டுக்கலாம்ணே...

இயக்குநர்: வில்லன் எம்ஜியார், கோமா ஸ்டேஜுக்கு போறாரே.. அந்த சீன்லாம் அப்படியே வச்சுக்கலாமா....,

துணை இயக்குநர்: சாக வைச்சிடலாம்னே அப்பத்தான் கேரக்டர் நிக்கும்.
இணை இயக்குநர்: கோமாவுல வச்சிக்கலாம்னே. கடைசியில் யோசிச்சிக்கலாம்ணே

இயக்குநர்: சரிப்பா; ஹீரோ எம்ஜியார் எம்ஜியார். ஓப்பனிங் சாங்

என்னைத் தெரியுமா........................ வருவாரே. சூப்பர் ஸ்டாருக்கு அப்படியே வச்சிடலாமா....

து.இ. ; அண்ணே அது ஹோட்டல்ல ஆடமாதிரி இருக்குண்ணே... அத அப்படியே மக்களோடு மக்களா ஆட மாதிரி எடுத்துக்கலாம்ணே

நாட்டுக்குள்ளே தலைவருக்கு ஒரு பேரு இருக்குண்ணே.. அத நாம காப்பத்துணும்ல...

இயக்குநர்: ஹீரோ எம்ஜியார வில்லன் இடத்துக்கு மாத்திறது எல்லாம் அப்படியே வச்சிக்கலாம். தலைவர் அங்க போய் பிரமை புடிச்ச மாதிரி உக்கார வச்சிடலாம். அங்க போய் உலக பயங்கரவாதி மேப் எடுப்பாரே அந்த சீனை கொஞ்சம் மாடர்ணா எடுக்கணுமே..

து. இ;- அண்ணே.. மேப்புனா ஒரே பக்கம்ணே.. டைரி வச்சுக்கலாம்னே 365 பக்கம் இருக்கும்ணே ..,

இ.இ:- அண்ணே இப்ப அல்ட்ரா மாடர்ண் பென் டிரைவ் பிளாப்பி இப்படி போவோம்னே..

இயக்குநர்:- ஏம்ப்பா கவர்ச்சியா ராஜஸ்ரீ நடனம் போடுவாங்களே.. என்ன பண்ணலாம்.

து.இ: அண்ணே நயந்தாரா.. அனுஷ்கா இப்படி பல பேர் இருக்காங்கண்ணே.. டூ பீஸ்ல நடக்க விட்டர்லாம்

இயக்குநர்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலதான் சுகம் சுகம் பாட்டுக்கு யார புக் பண்ணலாம்..

து. இ: இந்தில இருந்து யாரையாவது வர வச்சுக்கலாம்ணே.. அந்த காலத்தில் ஹெலன்லாம் வச்சு உத்தம புத்திரன்ல இருந்து ஒரு 30 வருஷம் அவங்க வந்து கவர்ச்சி நடனம் ஆடிக் கொடுத்திருக்காங்க. இப்ப கரிஷ்மா வைக் கூப்பிடுவோம். தலைவர் சந்தோஷப் படுவார்.

இயக்குநர்:- ஹீரோ எம்ஜியார் வில்லனோட எடத்துக்கு போன பிறகு ஸ்டேஜ்ல டேன்ஸ் போடுவாரே.. அதை அப்படியே வச்சுக்கலாம்னே

துள்ளுவதே இளமை.... பாட்டு சூப்பரா இருக்கும்ல்ல..

து,இ:- அண்ணே அத ரீமிக்ஸ் பண்ணி வேறபடத்தில போட்டுட்டாணுகண்ணே. நாம அந்த இடத்துல நான் யார் நான் யார் பாட்ட வச்சுக்கலாம்..

அமாண்ணே .. ஹிந்திலயும் அந்தப் பாட்ட அப்படியே வச்சுக்கலாம்ண்ணே

மே ஹூ கோன்.. மே ஹூ கோன்.. மே ஹூ கோன்

மே ஹூ .. மே ஹூ மே ஹூ கோன் கோன் கோன் ..............

இயக்குநர்:- தம்பி இந்தில கூட நீ பாட்டு எழுதுவயாடா...... நீ ஒரு பன் மொழி வித்தகண்டா,,,,,,,

து. இ.:- அண்ணே நம்பியாரும் இதே க்ரூப்ல இருந்தா வில்லன் எம்ஜியார் டம்மியா போயிருவார்னே.. அந்தப் படத்தில் அவர ஹீரோ ஆக்கிடுவாங்க அதனால பரவாயில்ல.ஆனா பாருங்க நம்ம படத்தில் தலைவர் வில்லன்ணே


இயக்குநர்: இப்ப என்னடா பண்ணறது?



து.இ. அதுக்கு ஒரு யோசனைண்ணே... நம்பியார அமெரிக்காவிலிருந்து வர வச்சிடலாம். அப்ப வில்லன் ஹீரோ மெயின் வில்லன் ஆக்கிடலாம்.

இயக்குநர்: ரைட்.. பாட்டு முடிஞ்சதும் போலீஸ் போய் அரெஸ்ட் பண்ண போராங்க........ நாம தான் வில்லன் எம்ஜியாரை சாக வைக்கறமாதிரி கதை பண்ணலாம்ண்ணு சொல்லியிருக்கமே ...

இந்த இடத்துல ஏதாவது சொல்லுங்கப்பா...

து. இயக்குநர்;- அண்ணே ஆள்மாறாட்டம் பண்ற போலீஸ் ஆபிஸரை போட்டு தள்ளிடலாம்ண்ணே படம் பயங்கர திரில் ஆயிடும்..

தலைவர்,  வில்லன் ரஜினி இல்ல..., ஹீரோ ரஜினின்னு போராட ஒரு பெரிய ரிஸ்க் எடுத்தா பட்டைய கிளப்பும்ண்ணே...

இயக்குநர்:- நினைச்சண்டா....................... புது திரைக்கதை எழுத எழுத எங்கயோ பார்த்த மாதிரியே இருக்கேண்ணு பார்த்தா............. அப்படியே பில்லா படத்தைச் சொல்லிட்டு இருக்கீங்களேடா.....

து. இ.:= அண்ணே ஏற்கனவே குடியிருந்த கோவிலை பில்லான்னு எடுத்துட்டாங்கண்ணே............ வில்லன் எம்ஜியாரை உயிரோட விட்டு கொஞ்சம் குழப்பி ஷாரூக்கும் டான் படம் எடுத்திட்டாருண்ணே.......

அமிதாப்புக்கு அந்தப் படம் டான்னுன்னே.... எண்டியாருக்கு யுகேந்தர்ன்னேhttp://blog-imgs-32.fc2.com/c/u/r/currynokobushi/yugandhar.jpg
http://blog-imgs-32.fc2.com/c/u/r/currynokobushi/yugandhar.jpg

இந்த இடத்தில அதப் பத்தி விரிவா ஆராய்ச்சி பண்ணியிருக்காங்கண்ணே...


இயக்குநர்: சரி இந்தப் படத்தை விடுங்கடா............. வேற ஏதாவது படத்தை ரீமேக் பண்ணிக்கலாம்.

இறைவா வரிசை கவிதைகள்-இரண்டாம் தொகுதி

பேச்சுக்கும் நாக்கு
சுவைக்கும் நாக்கு
சுவையான பேச்சுக்கு
யார் பொறுப்பு
சொல் இறைவா....


சுரிதார் படைத்த
இறைவா
துப்பட்டாவை
ஏன் படைத்தாய்?

அதை
கழுத்தில் சுற்ற
கற்றுத்தந்தது
ஏன் இறைவா?


தேர்வுகள்
படைத்த இறைவா
முடிவுகள்
ஏன் படைத்தாய்?

வாகனங்கள் படைத்தாய்
இறைவா
கப்பலுக்கு தண்ணீரும்
விமானத்துக்கு ஆகாயமுமாய்
பிரிவினை
படைத்தது ஏன் இறைவா?

Tuesday, April 28, 2009

சுமித்ராவின் சரித்திரம் பக்கம்-1

மணமேடையில் சுமித்ராவின் கண்வர் அந்த கேள்வியைக் கேட்டதும் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துவிட்டோம். கல்லூரி என்ற காட்டிற்குள் கட்டவிழ்ந்த கம்பளிப் பூச்சிகளாய் சுற்றியவர்கள்தான் நாங்கள். எங்களில் முதலில் திருமணம் ஆனது சுமித்ராவிற்குத்தான். இன்னும் பயிற்சிக் காலத்தில் நாங்கள் அனைவரும் இருந்ததால் சுமித்ராவின் திருமணத்திற்கு எல்லோரும் சென்றிருந்தோம். மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.

"அடப்பாவி மணமேடையில்கூட என் வாழ்க்கையில் விளையாடுகிறாயா" என்று சொன்னாள் சுமிதரா.
..................................................................................................................................

என்ன நடக்கிறது அங்கே....

..................................................................................................................................

சுமித்ராவும் சுமன்குமாரும் எங்களுடன் கல்லூரியில் படிப்பவர்கள்தான். அடுத்தடுத்த பெயர்களாய் இருப்பதால் செயல் முறை வகுப்புகளில் அவர்கள் பெரும்பாலும் ஜோடியாக இருப்பார்கள். முதலாமாண்டில் எங்களுக்கு சதாரண்மாக எங்களுக்கு எந்த ஒரு உறுத்தலையும் அந்த ஜோடி எங்களுக்கு ஏற்படுத்த வில்லை. முதலாமாண்டு சுற்றுலாச் செல்லும்வரை...................

வழக்கமாக டேபிள்ஸ்... டேபிள்ஸ் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சுமன்குமாருக்கு சீட் போட்டு வைத்திருந்தாள் சுமித்ரா. வண்டியில் ஏறும்போதே எங்களுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. நாங்கள் கடைசியில் ஏறி எங்களுடைய குட்டி குட்டிப் பைகளை கிடைத்த் இடத்தில் வீசிவிட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தபோது சுமன்மட்டும் அமைதியாக சுமித்ராவின் பக்கத்தில் உட்கார்ந்துவந்தான். அந்த சுற்றுலாவில் ஆண்களும் பெண்களும் கலந்து உட்காரும் அளவு நாங்கள் நாகரிகமெல்லாம் அடைந்திருக்கவில்லை.

இன்னும் சொல்லப் போனால் உடன்பயிலும் பெண்களுக்கு பயந்தோ அல்லது மரியாதை கொடுத்தோ ஒரு ஓரமாய் ஒதுங்கிப் போய்தான் சிகரெட் பிடிக்கும் நிகழ்ச்சி கூட நடந்து கொண்டிருந்தது.

நாங்கல் இருந்த உற்சாகத்தில் எங்களுக்கு இது ஒரு விஷ்யமாகவே படவில்லை. கொடைக்கானலில் போய்சுற்ற ஆரம்பித்தோம். படகுவிடும் இடத்திற்குப் போன போதுதான் எங்களுக்கு இந்த மாற்றம் கொஞ்சம் தட்டுப் பட ஆரம்பித்தது. அந்தப் பகுதியில் நிறையப் பேர் மிதிவண்டி விட்டுக் கொண்டு இருந்தனர். ஏற்கனவே மூத்த மாணவர்கள் சொல்லி இருந்ததால் பின் இருக்கையில் அமர்ந்து வர யாராவது கிடைக்க மாட்டார்களா.. என்று பல மாணவர்களும் வலைப் போட்டு தேடிக் கொண்டிருந்தனர்.

நாங்கள் ஒரு ஓரமாக நின்று இயற்கை அழகையும் இயற்கை அழகை அனுபவித்துக் கொண்டிருந்த காதலர்களின் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தோம். அதுவே ஏதோ சொர்கத்தில் மிதப்பது போல இருந்தது.

அப்படியே திரும்பிப் பார்த்தால் சுமனும் சுமித்ராவும் ஒரே மிதிவண்டியில்........
வழக்கமாக ஒருவர் பின்னால் அமர்ந்துவர முன்னால் இருப்பவர் ஏதோ ஐஸ்வர்யாராய் பின்னால் அமர்ந்திருப்பதாய் நினைத்து மாங்கு மாங்கு வென மிதித்து வருவார். இங்கோ இருவரும் சேர்ந்து மிதித்துக் கொண்டிருந்தனர்.

மற்றவர்களைப் பார்த்து புகைவிட்டே (பொறாமைப் படுவதைக் குறிக்கும் சொல்) காலத்தை ஓட்டிவந்த எங்களுக்கு இந்த ஜோடி அந்தப் புகையை நேரடியாக இருதயத்திற்குள்ளேயே கொண்டு சென்றது. மூச்சுத்திணறலில் அப்போதே சிலர் கல்யாணியிடம் தஞ்சம் புகுந்தனர் (முதலாமாண்டு அல்லவா)

ஒருவாறாக அந்தச் சுற்றுலாவில் உருவான சிலபல ஜோடிகளில் ஒன்றாக சுமன் சுமித்ரா உருவானது.

ஊர்திரும்பும் பணி துவங்கியது. இம்முறையும் சுமித்ராவின் பக்கத்து இருக்கையில் ஒரு பெரிய பை இருந்தது. நல்ல உற்சாகத்தில் இருந்த தோழர்கள்
சுமன் இங்க வாடா.................. உன்சீட் ரெடி....................

என்று உற்க்க சப்தமிட்டனர்.

சுமன் வந்த உடன் சுமித்ரா கூறினாள் உன்னையும் என்னையும் தப்பா பேசுறாங்க நீ வேற சீட்டுக்குப் போ.......

===============(தொடரும்)=====================================

இந்தக் கதை சுபமாகத்தான் முடியும். அதனால் தைரியமாகக் கதையை தொடர்ந்து படிக்கலாம்




இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும்

பதினாறாம் பகுதி sweet sixteen

பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி

பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

பதினொன்பதாவது பகுதி உருகும் மனிதன், பேசும் தனித்தலை

இருபதாம் பகுதி டபுள் மீனிங் 


இருபத்தொன்றாம் பகுதி  நான் சுத்தமானவள் 

தொடரும்..,

Monday, April 27, 2009

மர்லின் மன்றோவின் முன்னோடி

முன்கதை:-அந்நியனிடம் அடிமைப் பட்டுக் கிடக்கும் தங்கள் சமஸ்தானத்தின் விடுதலைக்காக போராடுகிறார்கள் பெரிய தலயும் சின்ன தலயும்.... தங்கள் நாட்டு மக்களின் நிலை பற்றி ஆங்கிலேய கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்கள். வந்த இடத்தில் தங்கள் பெற்றோர் உயிருடன் இருப்பதை தங்கள் ஆங்கிலேயப் பாட்டிமூலம் தெரிந்து கொள்கின்றனர். இனி...........

.....................................................................................................................................

முதல் பகுதி அசல் படத்தின் கதை.

இரண்டாம் பகுதி அசல்+சுதந்திரம்+காதல் இங்கேயும் உள்ளது.

.......................................................................................................................................

கலெக்டர் அவர்கள் மாடியில் இருந்து இறங்கி வருகிறார். அப்போது கீழிருந்து மேலாக காற்று அடிக்கிறது. அவரது கவுனும் பறக்கிறது. இந்தக் காட்சியை ஓவியமாக வரைகிறார். சின்ன தல.. கீழிறங்கி வந்த உடன் கலெக்டரிடம் அந்த ஓவியத்தைப் பரிசாகக் கொடுக்கிறார். கலெக்டர் மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சின்னத்தலையின் ஓவியத்திறமையைப் பாராட்டுகிறார். ( சில நூறு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஓவியத்தை அடிப்படையாக வைத்துதான் மர்லின் மன்றோ தனது மாடலிங் போஸ்களை கொடுத்ததாக பேசிக் கொள்கிறார்கள்.)


கப்பலில் இருவரும் வரும்போதே ஓவியம் வரைவது, இதுவும் இவ்வ்ளவு அழகாக ஓவியம் வரைவது தெரிந்திருந்தால் அப்போது டைட்டானிக் போன்று நாமும் பல காலத்தால் அழியாத சித்திரங்களை உருவாக்கி இருக்கலாம் என்று சொல்கிறார்.

.............................................................................................................

பெரிய தல தாங்கள் வந்த காரணத்தைச் சொல்கிறார். தங்கள் நாட்டு மக்களின் வறுமை நிலைகளை நாக்குத் தத்தளிக்க உள்ளம் உருக எடுத்துச் சொல்கிறார். ஏற்கன்வே சின்னத்தலையின் பரிசில் மயங்கி இருக்கும் கலெக்டர் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

சிலமாதங்களுக்கு முன் கூட உங்கள் அமைச்சர் இதற்கு முன் இருந்த கலெக்டரிடம் பேசினார்கள் அல்லவா.. என்றார் கலெக்டர்.

ஆமாங்க அம்மா.., ஆனா... இது பெரிய தல..

உங்க ஆளுங்க தான் நாங்க சொன்ன எந்த தீர்வுக்கும் ஒத்து வரவில்லையே என்ன செய்வது? இது கலெக்டர்.

அம்மா.. பேச்சுவார்த்தையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க அப்படி சொல்ல மாட்டீங்க....
.......................கொசுவர்த்தி சுழல........ பழங்காட்சிகள் வருகின்றன............................


தலையின் பிரதிநிதிகள்: ஐயா.. எங்கள் நாட்டில் மக்கள் மிகவும் வறுமையில் இருக்கிறார்கள்

ஆங்கிலேய கலெக்டர்: கேள்விப் பட்டோம். அதற்குத்தான் நாங்கள் பல திட்டங்கள் வைத்திருக்கிறோம். உங்களோட வறுமையை ஒழிப்பதுத்தான் எங்களின் முதல் வேலை.

தலையின் பிரதிநிதிகள்: மழையே இல்லைங்க

கலெக்டர்: ரொம்ப சரி, அதற்காகத்தான நாங்கள் கங்கையிலிருந்து உங்கள் நாட்டிற்கு தண்ணீர் கொண்டு வரப் போகிறோம் அதற்காக நீங்கள் ஆயிரம் பவுன் தங்கம் மட்டும் கொடுத்தால் போதும். உங்கள் பகுதியில் உள்ள தண்ணீர் பஞ்சம் பறந்து போயிடும்

தலயின் பிரதிநிதிகள்: ஆயிரம் பவுன் தங்கமா.. ஐயா நாங்க வரிக்கு வட்டி கூட கட்டமுடியாது அப்படின்னு சொல்ல வந்திருக்கோமுங்க..

கலெக்டர்: எங்களுக்குத்தெரியும். நாங்கள் வட்டியாகக் கேட்கவில்லை. தண்ணீர் கொண்டுவர ஆகும் செலவுகளைக் கேட்கிறோம். அதை மட்டும் கொடுத்தால் போதும்.

பிரதிநிதிகள்: ஐயா, கால்நடைகள் எல்லாம் சரியான உண்வில்லாமல் சக்தி இழந்து இருக்கின்றன. விறகு விற்கக் கூட நாங்கள் கால்நடைகளில் எதையும் எடுத்துச் செல்லமுடியவில்லை.

கலெக்டர்: கவலை வேண்டாம் மக்களே. நாங்கள் ரெயில் பாலம் போடுகிறோம் அதற்கு ஒரு இரண்டாயிரம் பவுன் தங்கம் மட்டும் கொடுத்தால் போதும்... உங்கள் மக்கள் ரயில் மூலம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். என்ன தொழில் வேண்டுமாணாலும் செய்யலாம். உங்கள் நாட்டில் தொழிற்வளர்ச்சி அபாரமாக அமையும்.

பிரதிநிதிகள்: ஐயா எங்கள் மக்கள் விவசாயம் செய்யக் கூட வலிமை குறைந்து காணப் படுகிறார்கள். நாங்கள் எப்படி?

கலெக்டர்: கவலையே வேண்டாம். நாங்கள் அதற்கும் ஆட்கள் அனுப்புகிறோம். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு மூன்று வேளை உணவு தரப் படும். குடியிருக்க குடிசைகள், அதுவும் விவசாய நிலத்தில் இல்லாமல் தனியே குடியிருப்பு அமைத்துக் கொடுக்கப் படும். உங்களுக்கு உண்வு, உறைவிடம் இரண்டும் தருகிறோம். எல்லாமே இலவசம்தான். நாங்கள் அனுப்பும் ஆட்களுக்கு நீங்கள் வேலைப் போட்டு கொடுத்தால் போதும். விவசாய நிலத்திற்கு நீங்கள் வேலை செய்யும் போது வந்தால் போதும். அதில் ஏதும் நஷ்டம் வந்தால் கூட அது உங்களை சேராது.

பிரதிநிதிகள்; ஐயா, அப்ப நிலம் .................

கலெக்டர்:அந்த நிலத்தைப் பற்றிய எந்தக் கவலையும் உங்களுக்கு வேண்டாம். நிலம் கம்பனிக்கு சொந்தம். நீங்கள் கவலையே பட வேண்டியதில்லை

பிரதிநிதிகள்:(என்னசெய்வது என்ன பேசுவதென்றே தெரியாமல்) ( கோபத்துடன்) நாங்கள் வருகிறோம்...

கலெக்டர்: போய் உங்கள் தலைவருடன் கலந்தாலோசித்துவிட்டு நல்ல பதிலாக வந்து சொல்லுங்கள். உங்களுக்கு உதவ நாங்க தயாராக இருக்கிறோம். அது எங்கள் கடமை

....................................................................................................


பெரிய தல: இப்ப சொல்லுங்கம்மா... நாங்கள் எப்படி ஒத்துக் கொள்ளமுடியும் அம்மா...?


பெரிய தலை சொல்லிக் கொண்டிருக்கும் போது...................


.................................................................தொடரும்....................................................

பின் குறிப்பு: இது முழுக்க கற்பனை. சரித்திர ஆதாரங்கள் எதுவும் கிடையாது. எந்த நிகழ்ச்சியுடனும் சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம்

நான்காம் பகுதி இங்கே உள்ளது

Sunday, April 26, 2009

கணவன்களுக்கான நீதிக்கதை (அட்சய திரிதியை ஸ்பெஷல்)

அட்சய திரியைக்கும் ஆதிசங்கரருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

ஆதிசங்கரர் துறவி வாழ்க்கை ஏற்றதும் ஒரு வீட்டில் பிச்சை வாங்க சென்றாராம். அந்த வீட்டில் இருந்த பெண்மணி தனது வறிய நிலையையும் பொருட்படுத்தாது அவருக்க்கு ஒரு நெல்லிக் கனி கொடுத்தார். இவ்வளவு வறிய நிலையிலும் பிறருக்கு உதவுகிறாரே..........
இவரிடம் செல்வம் இருந்தால்..........................................

கனகதாரா மந்திரத்தைப் பாடி தெய்வத்தை வணங்குகிறார். தெய்வமும் அந்தப் பெண்மணிக்கு தேவையான செல்வத்தை வழங்கியதாகக் கூறுகிறார்கள். இது நடந்தது அட்சய திரியை அன்று...

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கேரளாவில் உள்ள காலடியில் தங்க நெல்லிக்கனி கொடுத்து வெகுவிமரிசையாக அட்சய திரிதியை பூஜைகள் செய்கிறார்கள்

................................................................................................................................


இந்தக் கதையில் நாம் அறியும் நீதி:-

நீங்கள் மாபெரும் பணக்காரராக மாறவிரும்பினால் நீங்கள் அட்சய திரிதியை அன்று தானங்கள் கொடுங்கள். அது தானம் பெறுபவரின் உள்ளத்தை குளிர்ச்சி படுத்துவதாக இருந்தால் மகாலட்சுமி உங்களுக்கு நிறைய செல்வம் கொடுப்பார்.



தானம் பெறுபவர் உங்கள் ஊரில் இல்லையென்றால் இன்று தங்கம் வாங்கி அதை கடவுளுக்கு சமர்ப்பித்து விடுங்கள். புண்ணியம் கிடைக்கும்

......................................................................................................................................

தங்க நகைக்கடையில் தங்க நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்பதான கதைகள் (கி.பி.2000க்கு முந்தியது) ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்

IPLன் முதல் பலி: இந்திய டென்னிஸ்

பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். இரண்டாம் ஆண்டு போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவருகின்றன. இந்த சூழலில் டேவிஸ் கோப்பைக்கான போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தன. இந்த சூழலில் எதிர்த்து விளையாட இருந்த ஆஸ்திரேலிய அணியினர் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து இருப்பதாக செய்திகள் வருகின்றன்.

இவ்வாறு ரத்து செய்ததால் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு அபராதமும், ஓராண்டுக்கு தடையும் விதிக்கப் படலாம் என்று செய்திகள் வெளியாகின்றன

................................................................................................................


இது முதல் நிகழ்வுதான். இனிமேல் பிற கிரிக்கெட் அணிகள் கூட இவ்வாறு கூறலாம். வெளிநாட்டுகள் சொல்லக்கூடிய குறைபாடுகளை உள்நாட்டுக்காரர்களே சொன்னதால் நிஜமாகவே இந்த நாட்டில் பாதுகாப்பு என்பது இல்லையோ என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பே.

இனி மற்ற விளையாட்டு அணிகள் கூட இந்தியா வர பயப் படலாம். ஏன் வெளிநாட்டு கிரிக்கெட் அணிகள் கூட இந்தியா வரத்தயங்கலாம். அப்போது இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

அனைத்து ஆட்டங்களையும் வெளிநாட்டுக்கு மாற்றிவிடுவார்களா? அல்லது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி விடுவார்களா?
வெளிநாடுகளிலேயே அனைத்து ஆட்டங்களையும் ஆடுவார்கள் என்றால் அவர்கள் இனி இந்தியா திரும்புவார்களா? இல்லை வெளிநாட்டு வாழ் இந்தியர்களாக மாறிவிடுவார்களா? ஏற்கனவே வருடத்தில் முக்கால் பகுதி வெளிநாடுகளில்தான் சுற்றுப்பயணம் செய்கிறார்கள்.

அப்படி என்றால் இந்திய கிரிக்கெட்? என்ன ஆகும்

.......................................................................................................................

இன்று டென்னிஸ் என்பது ஒவ்வொரு விளையாட்டாக மாறி இந்திய கிரிக்கெட்டையே அழித்தாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.

எச்சரிக்கை அடைவார்களா? இந்திய விளையாட்டுகளைக் காப்பாற்றுவார்களா?

Saturday, April 25, 2009

குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய லக்கிலுக் அவர்களின் பதிவும் எனது குழப்பங்களும்

[Child-Abuse.jpg]



லக்கி லுக் ஐயாவின் வலைப் பூவில் மேற்கண்ட படத்தினை பார்க்க நேர்ந்தது. குழந்தைகளின் மீதான வன்முறை பற்றிய படம் என்பதால் அவரை கேட்காமலேயே அந்தப் படத்தினை உபயோகப் படுத்தி உள்ளேன். பொறுத்துக் கொள்வாராக.


இந்தப் படத்தில் இருப்பதில் பெரும்பாலான நிகழ்வுகள் குழந்தைகளின் மீதான வன்முறைதான். இதில் எள்ளளவும் சந்தேகம் இருக்கமுடியாது. ஆனால் சில் விஷ்யங்களில் எனது கருத்து கொஞ்சம் மாறுபடுகிறது. அதைப் பதிவு செய்யவே இந்தப் பதிவு.

1.குழந்தைகளை வேலைக்காரர்களாகப் பயன்ப்டுத்துவது... அது சொந்தக் குழந்தையாக இருந்தால் கூட.....

கண்டிப்பாக குழந்தைகளை வேலைக்காரர்களாகப் பயன்படுத்துவது கொடுமைதான். ஆனால் சொந்த வீட்டில் குழந்தைகளை அவ்வப்போது சின்ன சின்ன வேலைகளைச் செய்யச் சொலவது என்பது வன்முறையில் வருமா....
சட்டத்தின் முன் குழந்தைகளை கொடுமைப் படுத்தவில்லை. என்பதை நிரூபிப்பது எப்படி?

அல்லது குழந்தைகளை ரிமோட் எடுத்துத் தருமாறு சொல்வது எல்லாம் வன்முறை என்ற வட்டத்துக்குள் கொண்டுவந்து விடுவார்களா,,,,

2.அழுக்கான கிழிந்த உடைகளை குழந்தைகள் அணிந்திருக்கும் நிலைகூட குழந்தைகளுக்கெதிரான வன்முறையில் அடங்குகிறதாம்.

அதற்கு என்ன தீர்வு? சட்டப் படி யாருக்கு தண்டனை கொடுப்பது? நல்ல உடைகள் கொடுக்கும் வசதியும், நல்ல உணவும் கொடுக்கக் கூடிய சூழ்நிலையும் இல்லாத பெற்றோரை என்ன செய்வது?

3.குழந்தைகளுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும் செய்து கொடுக்காத நிலை குழந்தை மீதான வன்முறையாக அமைகிறது.

தமிழகத்தைப் பொறுத்த வரை இந்த இரண்டும் இலவசமாக கிடைத்தாலும் இரண்டு மூன்று கிலோமீட்டர் சென்று அதைப் பெறுவது என்பதனைக் கூட கடினமான வேலையாகக் கருதும் நிலையுல் உள்ள அப்பாவி பெற்றோரை நாம் என்ன செய்ய முடியும்.? மந்தரித்தல் மட்டுமே குணப் படுத்தும், மருந்தும் மாத்திரைகளும் துணை வழிகள்தான் என நினைக்கும் பெற்றோர் இன்னும் நிறைய இருக்கிறார்கள்.

4. கண்காணிப்பிலாத சூழலில் குழந்தையை விடுதல்.

இன்றைய வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் சூழலில் தாத்தா பாட்டி இல்லாத நிலையில் வேலைக்காரர்களில் மேற்பார்வையில் குழந்தைகள் இருப்பதும் கண்காணிப்பில்லாத சூழலே என்பது என் கருத்து. ஆனால் பெரும்பாலான நகரக் குழந்தைகள் இந்த நிலையில் தான் இருக்கின்றன.

................................................................................................................

பள்ளியில் தண்டனைகள்:-

பள்ளியில் குறும்புகள் செய்யும் குழந்தைகளைச் சரி செய்வது என்பது மிகப் பெரிய செயலாகவே இருக்கிறது.

மன ரீதியான தண்டனையோ உடல் ரீதியான தண்டனையே கொடுக்கப் படுகின்றன.

தண்டனைகள் இல்லாவிட்டால் எப்படி சரி செய்வது?

நீ செய்வது தவறு என்று சொன்னால் குழந்தையின் மனம் வருத்தப் படும் என்றால அது வன்முறையில் வருமா?

மனரீதியான தண்டனையைவிட உடல்ரீதியான தண்டனைக் கொடுத்தல் பரவாயில்லை என்றால் கொண்டை பிரம்பு கொண்டு அடித்தல் குழந்தையை திருத்தி விடுமா?

ஏதோ ஒரு பள்ளியில் குழந்தை தவறு செய்தபோது ஆசிரியை தன்னைத்தானே அடித்துக் கொண்டதாகவும் அதனால் மணவன் மனம் திருந்தி தவறை ஒத்துக் கொண்டதாகவும் செய்திகள் வந்தன. இது அந்த குழந்தையின் மனத்தை க் காயப் படுத்துவது ஆகாதா? இதைப் பின் பற்றி குழந்தைகள் பெற்றோரை மிரட்டச் செய்ய மாட்டார்களா...?


ஒரு கேள்விக்கான பதிலை நூறுமுறை எழுதுமாறு பணிக்க படுவதால் குழந்தைகளின் தூக்கம் கெடாதா? அது வன்முறை என்று சொல்லப் படுமா? அப்படி என்றால் இரவு முழுவதும் குழந்தைகளை கண்விழித்துப் படிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்துதல் வன்முறைதானா? அந்த வன்முறை தவிர்க்கப் பட்டால் குழந்தைகள் எப்படி பெரிய அதிகாரிகளாகவும் தொழிலதிபர்களாகவும் வரமுடியும்? அப்படி என்றால் அவர்களை தூங்கச் சொல்லி அவர்களது எதிர்கால வலர்ச்சியை சுருக்குவது கூட வன்முறைதானா?

........................................................................................................................................

பிரம்பால் குழந்தைகளை அடிப்பதை எம்ஜியார் படத்தில் கத்திவீசுவது போல் மிகத்திறமையாகச் செய்யும் ஆசிரியர்களை ஊக்குவிப்பது யார்?

மைதானத்தை சுற்றி வருவதால் உடல் வலிமையடையும் என்றால் குழந்தையின் தாங்கும் சக்தி கூட தெரியாத நிலையில் ஆசிரியர் இருந்தால் அதற்கு யார் பொறுப்பு?
..........................................................................................................................................


இது எல்லாவற்றையும் விட பெரிய வன்முறை ஒன்று பெரும்பாலான குழந்தைகள் மீது நடந்து வருகிறது. பெற்றோர் பள்ளியில், பெற்றோர் விரும்பும் பாடங்களில் பெற்றோர் விரும்பும் விளையாட்டுகளில் குழந்தைகளை கட்டாயப் படுத்துவது.., இதற்கு ஒரு விடிவு காலம் எப்போது வருமோ தெரியவில்லை?

அப்படி வரும் காலகட்டத்தில் மாணவர்களுக்கு இந்தப்பாடம் எடுத்தால் இந்த வளர்ச்சி கிடைக்கும் என்ற முதிர்ச்சி கண்டிப்பாக இருக்குமா ? அதுவும் தெரியவில்லை.

ஆனால் இன்றைய சூழலில் பெற்றோருக்கே அது தெரியாமா என்றும் தெரியவில்லை...

..........................................................................................................................

இது குழந்தைகளின் மீதான வன்முறைதானா? என்பது எனக்குத்தெரியவில்லை. யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன்.

பல வீடுகளில் சிறு குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகிறேன் பேர்வழி என்று குழந்தையை வைத்துக் கொண்டு ஒருமணிநேரம், இரண்டு மணிநேரம் உணவு ஊட்டுகிறார்கள். இது நகர்புறத்தில் ஓரளவு வளர்ந்து கொண்டிருக்கும் கிராமங்களில் குடும்பத்தலைவியாக இருக்கும் தாய்மார்களிடம் சாதாரணமாக காணப் படுகிறது. ஒவ்வொருவேளையும் ஒருமணிநேரத்திற்கு மேல் உணவு ஊட்டுவது வன்முறையா இல்லையா?

சிலநேரங்களில் அவர்களுக்கு பிடித்த ருசியில் சமைத்துவிட்டு சாப்பிடுமாறு குழந்தைகளை கட்டாயப் படுத்துகிறார்கள். சில நேரங்களில் கணவன்மார்களையும் கட்டாயப் படுத்துகிறார்கள். இது வன்முறையா? இல்லையா?

...........................................................................................................................

குழந்தைகளின் மீதான வன்முறை பற்றி பேசும் போது பெற்றோரையும் ஆசிரியர்களையும் தனித்தட்டில் வைத்துப் பார்க்க வேண்டும். அவர்களையும் ஒட்டு மொத்த வன்முறையாளர்களுடன் சேர்ப்ப்து அதைப் பற்றிய பேச்சுகளை நீர்த்துப் போகவே செய்யும்.

பெற்றோர்களுக்கு ஏற்கனவே பல பயிற்சி வகுப்புகள் கிராமப் புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (அரசுமருத்துவ மனைகள்) தரப் படுகின்றன. ஆசிரியர்களுக்கும் கூட மாணவர்களின் மனவியல் தொடர்பான பாடங்கள் இருக்கும் என்றே நினைக்கிறேன். அவைகளை இன்னும் தரம் உயர்த்தி உணர்ந்து படிக்கச் சொன்னால் அந்தப் பிரச்சனைகளையும் சரி செய்து விடலாம்.

ஒட்டு மொத்த குழந்தைகள் மீதான வன்முறை என்று பேசுவது பல மோசமான கொடுமைகளையும் வீட்டுப் பாடம் எழுத கட்டாயம் படுத்துவதையும் ஓரே தட்டில் வைத்து பார்க்க வழிவகுத்துவிடும்

Thursday, April 23, 2009

அம்மாஇரண்டு அப்பா இரண்டு பாகம் இரண்டு

தங்கள் சமஸ்தானத்தில் வரி அதிகமாக இருப்பதால் அதைக் குறைப்பதற்காக கலெக்டர் அம்மாவைப் பார்ப்பதற்காக பெரிய தல, சின்ன தல இருவரும் கோட்டைக்கு வருகிறார்கள். இதன் முன்கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

.....................................................................................................................................................

பெண் கலெக்டராக ஒரு ஹாலிவுட் நடிகை நடிக்கிறார். அவர் அதிகாலை நேரத்தில் எழுந்து ஜாக்கிங் போகிறார். ஸ்கிப்பிங் மற்றும் இன்னபிற உடற்பயிற்கிகள் எல்லாம் செய்து கடைசியில் குளிக்கிறார். படத்தில் அன்றைய வெள்ளைக் கார கலெக்டர்களின் அதிகாலை வாழ்க்கைமுறை பற்றி அழகாகப் பதிவு செய்யும் முயற்சியாக இந்தக் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதனால் யாரும் இவற்றை ஆபாசமாகக் கொள்ள வேண்டாம்.

..................................................................................................................

கோட்டைக்கு புறப்படும் பெரிய தல, சின்ன தல இருவரையும் பாராட்டி மக்கள் பாட்டுப் பாடுகிறார்கள்


எங்கள் மன்னன் நீ......
நாட்டின் மன்னன் நீ......
அரியணையின் மன்னன் நீ....
மக்கள் மன்னன் நீ.....

அமைச்சருக்கும் மன்னன் நீ...
தளபதிக்கும் மன்னன் நீ....
..................................... இளைய
.....(ஒரு இடைவெளி).......
தலைமுறைக்கும் மன்னன்நீ......


இமய மலையையும் ஆளப் பிறந்தவன் நீ.......

.................................................. பாடல் முடியும் போது குதிரையில் ஏறி கலெக்டரைப் புறப்படுகிறார்கள்.


மக்களுக்குள் பேச்சு

ஒருவர்:- நம்ம பெரிய தல, சின்னத்தலைய ரொம்ப செல்லமா வளர்த்திருக்கார், பார்த்தியா.. கப்பல்ல போயி வெளிநாட்டில் படிக்க வெச்சிருக்காரே....
மற்றொருவர்:- பெரிய தல அவரோடு பத்து வயசிலயே ஆட்சிக்கு வந்திட்டாரு. வெள்ளைக் காரங்க கிட்ட நம்ம நாடு அடிமையா இருக்கறத பார்த்து நமக்கு விடிவு காலம் வரணும்தான் வெளி நாட்டுக்கு தன்னோட தம்பிய அனுப்பி படிக்க வச்சிருக்காரு..


வயதில் முதிர்ந்த ஒருவர்:- அவங்க வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருக்குப்பா...

பாவம் அவங்களுக்கு ரெண்டு அம்மா..., ரெண்டு அப்பா...........


மக்கள் அதிர்ச்சியுடன்..........

ஐயோ....

என்ன ரெண்டு அப்பா, ரெண்டு அம்மாவா...............

அசிங்கமா பேசாதீங்கப்பா...

பெரிய தல பெரியராஜாவுக்கும் பெரிய ராணிக்கும் பிறந்தவர்...

சின்ன தல சின்னராஜாவுக்கும் சின்ன ராணிக்கும் பிறந்தவர்...

............................

அப்ப அவுங்கெல்லாம் எங்கேப்பா.......

வெள்ளைக் காரங்க முதன் முதலா நம்ம நாட்டுக்கு படையெடுத்து வந்தப்ப.. நம்ம பெரிய ராஜாவும் சின்னராஜாவும் எதிர்த்தாங்க.....

அவுங்களும் நம்ம தலைங்க மாதிரியே ரொம்ப அழகா சிவப்பா இருப்பாங்க ........
அவங்க ரெண்டு பேரும் ஒட்டி பிறந்தவங்க அப்படிங்கறதால பெரிய தலைக்கு வலது பக்கமும் சின்ன தலைக்கும் இடது பக்கமும் தலும்பு இருக்கும் அதை வெச்சுத்தான் கண்டு பிடிப்பாங்க யார் பெரியவங்க அப்படின்னு...

......................................................

அந்த வெள்ளைக்கார துரைக்கு ஒரு பொண்ணு
அந்தப் பொண்ணுக்கு நம்ம சின்னராஜா மேல ஒரு கண்ணு

ஒரு நாள் அந்தப் பொண்ணு சின்னராஜா வ பார்க்க வந்தப்போ

வெளிநாட்டுக் காரங்க சதின்னு பெரிய ராஜா நினைச்சு அந்தப் பொண்ணு திட்டிட்டார்..

அப்ப அந்தப் பொண்ணுக்கு யார் அசல்ன்னு தெரியாததால கோவிச்சிக்கிட்டு இங்கிலாந்துக்கே போயிரிச்சு.....

கொஞ்ச நாள் கழிச்சு திரும்பி வந்து

இந்தா உங்கொழந்தைன்னு சின்ன ராஜாவ தேடி வந்து கொடுத்தப்போ...

காதல்பிரிவுல சின்னராஜா செத்து போயிருந்தாரு......

உண்மையான காதலர்களப் பிரிச்சிட்டோமேன்னு பெரிய ராஜாவும் தேசாந்திரம் போயிட்டாரு. அப்ப இருந்து நம்ம பெரிய தலதான் நமக்கெல்லாம் மன்னரா இருந்து ஆட்சி செய்துட்டு இருக்காங்க.....................

இப்ப நம்ம சின்னதலயும் வந்து விட்டதால் வெள்ளைக்காரங்கல திரும்பவும் எதிர்க்க ஆரம்பிச்சிட்டாங்க...
..........................................................................................


வெள்ளையர்களின் கோட்டைக்குள் பெரிய தலயும் சின்னதலயும் நுழைகிறார்கள்.

கப்பம் கட்டும் மன்னர்கள் என்பதால் அவர்களை வெள்ளையர்கள் உள்ளே விடுகிறார்கள்.

காத்திருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் போது ஒரு வெள்ளைக்கார கிழவி வருகிறார்..

நீங்கதான் பெரிய தலயும் சின்னத்தலயுமா........... என்று கேட்கிறார்...

பெரிய தலயும் சின்னதலயும் புரியாமல் ஆமாமென்று தலையை ஆட்டுகிறார்கள்.

நாந்தாப்பா உங்க வெள்ளைக்கார பாட்டி.

உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்லத்தான் நான் உயிரோட இருக்கேன்..

உங்க அப்பா பெரிய ராஜா துறவறம் போகவில்லை. சின்ன ராஜா சாகவும் இல்லை.. இருவரையும் கைது செய்து சிறையில்தான் வைத்து இருக்கிறார்கள்..

உயிருடன் இருக்கிறார்களா...........................

கைது செய்தவர்கள் யார்?

பெரிய தலயும் சின்ன தலயும் பொங்கி எழுகிறார்கள்.

என் மகன் தான்.. அவன் தான் இப்போதைய கலெக்டரின் தந்தை........ என்று சொல்லிவிட்டு மேலே பார்க்கிறார். வெள்ளைக்கார பாட்டி.

மேலிருந்து கலெக்டர் இறங்கி வந்து கொண்டிருக்கிறார்.

.........................தொடரும்.................. தொடரும்...............தொடரும்.........................


மூன்றாம் பாகத்திற்கு இங்கே செல்லவும்

பின் குறிப்பு:-இது அசலாகவே என்னுடைய கற்பனைதான்

Wednesday, April 22, 2009

நான்கு கொள்ளையர்கள்

http://mimg.sulekha.com/hindi/don-1978/Stills/don5.jpg


அடிபிறழாமல் எழுதுக என்று தமிழ் பாடத்தில் கேட்பார்கள்। அது போல் அமைந்த படங்கள்தான்। அமிதாப்பின் டான்ம் ரஜினியின் பில்லாவும்।



தான் வளர்க்கும் குழந்தைகளுக்காக தன் உயிரையே பணயம் வைத்து உலகத்தையே அச்சுறுத்தும் கடத்தல் கூட்டத்தைப் பிடிக்க உதவும் தெருப்பாடகன் ராஜாவின் கதைதான் பில்லா॥ அதுதான் டான்। அமிதாப்பின் படத்தில் இருக்கும் கதை திரைக்கதை, கதாப்பாத்திரங்களின் உடைகள் பெயர்கள் அனைத்தும் ஒரே மாதிரி அமைத்திருப்பார்கள்। ரஜினிக்கு மட்டும் பில்லா என்று பெயர் வைத்து இருப்பார்கள்। யார் கொடுத்த யோசனையோ॥ தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரம் ப்ளாஷ்பேக் மற்றும் உடைகள் அனைத்தும் மறுபதிப்பு செய்யப் பட்ட படம் தான் பில்லா। டான் மேல் ரசிகர்களுக்கு ஏற்படும் மலைப்பும் அப்பாவி ராஜாமேல் ஏற்படும் பரிதாபமும், ரசிகர்களின் அனுதாபமும்... தப்பிக்க அவரது முயற்சிகளுக்கு ரசிகர்களின் விசில்களும் இரண்டின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்தன। பில்லாவின் வெற்றிக்கு இன்னொரு காரணமும் உண்டு। அது பெரும்பாலான தமிழ்ரசிகர்களுக்கு டான் ப்ற்றி தெரியாததும், தெரிந்தவர்கள் பார்க்க முடியாததுமே..........









இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து ஷாரூக் கான் ரீமேக் செய்கிறார்। திரைக்கதையில் புதுமைகள் புகுத்த முற்படுகிறார்கள்। ஆனால் கதையிலேயே லேசான திருத்தங்கள் செய்யப் படுகின்றன।

கதையில் ஏற்படுத்தும் சின்ன மாறுதல் எவ்வாறு கதையையே மாற்றீ விடுகிறது என்பதனை ஏற்கனவே பார்த்துள்ளோம்। விரும்புவர்கள் இந்தச் சுட்டியில் மீண்டும் பார்த்துக் கொள்ளலாம்.



ஷாரூக்கினை ஆள்மாறாட்டத்திற்கு அனுப்பியவர்தான் கொள்ளைக் கூட்டத்தலைவன் என்னும்போது ஷாருக் மட்டுமல்ல நாம்கூட குழம்பி விடுகிறோம்। ஷாரூக் கொஞ்சம் யோசித்து ஒரு காரணம் கண்டு பிடித்து அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிக் கொள்ளும்போது நம் மணம் அதை ஏற்க மறுக்கிறது। இருந்தாலும் படம் பிரமாண்டமாகச் செல்லும் போது அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது நாமும் சென்று விடுகிறோம்। இந்திய சினிமாக்களுக்கு லாஜிக் தேவையில்லை என்பது மற்றொரு முறை நிரூபணமாகிறது।



அடுத்து வைப்பதுதான் பெரிய ஆப்பு ரசிகனுக்கு வைப்பதாக நினைத்து தனக்குத்தானே வைத்துக் கொண்டது। கடைசியில் உயிருடன் இருப்பது ஒரிஜினல் டான் தானாம்। அப்பாவியை அவன் கொண்று விட்டதாக காட்டும்போது ரசிகர்களுக்கு ஏமாற்றமே..... மும்பை தாதாக்கள் வெற்றி பெறுவதாக அமைக்கப் படும் கதைகளுக்கு வைக்கப் பட்ட பெரிய ஆப்பாகவே கருத வேண்டும்। பாஷாவின் உயிரைக் காப்பற்றியது போல் டானைக் காப்பற்றியது ரசிகற்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை। இரண்டாம் முறை பார்க்கும் ரசிகர்களுக்கு படத்தில் வரும் திருப்பங்கள் உப்புச் ச்ப்பில்லாமல் அமைகின்றன। பாஷாவில் கதை தெரிந்தவர்களுக்கு பாஷா எப்பொது பொங்கி எழுவார் என்பது தெரிந்தாலும் ஒரு ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போகும்। இதில் தெரிந்து விட்டதால் தேவையில்லாமல் டான் ஓடி ஒளிவதாகத் தோன்றும் ஒரு தமாஷாக அமைந்திருக்கும்।



இதே நிலைதான் கொடி பற்க்குது படத்துக்கும் ஏற்பட்டது। விக் வைத்த, விக் வைக்காத ரஜினிகள் மாறீ மாறி சவால் விடும்போது ஏற்படும் த்ரில் இருவரும் ஒரே ஆள் என்பது தெரிந்தபின் சப் பென்று ஆகிவிடுகிறது। இரண்டாம் முறை பார்க்கும்போது த்மாஷு தமாஷு.....



ஒட்டு மொத்தத்தில் டான் (ஷாருக்) எல்லாத்தையும் ஏமாத்திடுச்சு


அஜித்தின் பில்லாவின் வெற்றிக்கு ரஜினியின் பில்லாவும் ஒரு காரணம்। திரைக்கதையில் துணைப் பாத்திரங்களை மட்டும் வெட்டி விட்டு ஒரு ஆங்கில டப்பிங் படம் பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்। இதற்கு நயன் மற்றும் நமீ ஆகியோரின் உதவி பெரும் பங்கு வகிப்பார்கள்। மொத்தத்தில் ஷாரூக் தோற்றதால் அஜித் வென்றார் என்றே சொல்லலாம்।






இப்போது தெலுங்கிலும் தயாராகிக் கொண்டிருக்கிறதாம்
Image




மறக்காமல் மேல் நோக்கிய தமிழ்மண கட்டை விரலிலும், தமிழிஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்



இது ஒரு மீள்பதிவு

Monday, April 20, 2009

வெட்டோரிக்கு ஒரு நியாயம் /கும்ளேக்கு ஒரு நியாயம்

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதியதில் டெல்லி வென்றது. சிற்ப்பாக பந்து வீசி துவக்க விக்கெட்டுகளை வீழ்த்திய வெட்டோரி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டார்..

அவருக்கு நாம் வாழ்த்து சொல்லி விடுவோம்..

அதற்கு முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பெங்களூரு அணியும் ஆடிய ஆட்டத்தை நினைவு படுத்திப் பாருங்கள். வழக்கம்போல் சுவர்போல் டிராவிட் நிலைத்து ஆடி அரைசதம் எடுத்தார். அதன்காரண்மாகவோ என்னவோ பெங்களூரு அணி 133 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

மிகச் சுலபமாக எடுக்க கூடிய ஓட்டங்களை துரத்த ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கிய சூழலில் துவக்க விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் பிரவீன்

அடுத்து பந்துவீசிய கும்ளே திறம்பட பந்து வீசி நான்கு ஓவருக்குள் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். ஆனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப் படவில்லை...

ஆனாலும் வெற்றிக்காரணமாக இருந்த கும்ளேக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்....

..............................................................................................

Sunday, April 19, 2009

சமதர்ம சிந்தனையில் கவலையில்லாத் தத்துவம்




பேருந்து
பெரிய உந்து
தானியங்கி அல்ல
தனையன் பெயரிலிருந்தாலும்
தனியனுக்கும் சொந்தம் அல்ல



கால அட்டவணை உண்டு
காலம் தாழ்த்தலும் உண்டு
மகளிருக்கு தனி வண்டி
அதுகூட
மண்ணில்தான் ஓடும் வண்டி

அமர இருக்கை உண்டு
நிற்க இடமும் உண்டு
தொங்க படியும் உண்டு
கூரை சாகசமும் உண்டு

உருவாகும்போதே
கண்ணாடி அணிந்தாலும்
இளமையிலேயே முதுமை வந்தாலும்
ஒப்பனை அணிந்து
கற்பனை கலந்து
கவரும் வண்டி

கிராமம் பார்த்தாலும்
நகரம் பார்த்தாலும்
குமரி ஏறினாலும்
கிழவி ஏறினாலும்
பெட்ரோல் ஏறினாலும்
சாராயம் ஏறினாலும்
போதை ஏறாத வண்டி


இளமை பொங்கி நின்றாலும்
எரிபொருள்
நிறம்பி இருந்தாலும்
நடுசாலையில்
நின்று தொலைக்கும் வண்டி
பின்னழகில் கைவைத்து
முன்னோக்கி தள்ளினால்
தானே நகரும் வண்டி


ஓட்டுனர் மாறினாலும்
நடத்துநர் மாறினாலும்
பயணிகள் மாறினாலும்
பாதைகள் மாறினாலும்
கவலை கொள்ளா வண்டி

Friday, April 17, 2009

IPL இந்தப் படை போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி காய்ச்சல் மிக அதிகமாக பரவியுள்ள நிலையில் அந்த சூட்டைத் தணிக்க சில படங்கள். ஆனால் போட்டிகளில் இதை விட குளுமையான படங்களைப் பார்க்கமுடியும் என்று நினைக்கிறோம்




http://www.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01291/ipl-auction_1291126c.jpg

http://www.zorsebol.com/wp-content/uploads/2009/03/shah_rukh_khan__ness_wadia___preity_zinta_with_lalit_modi_1.jpg

IPL Cheerleaders Photos


IPL Cheerleaders Pics


IPL கிரிக்கெட் பற்றிய சில இடுகைகள்

1. ரஞ்சிக் கோப்பைக்கு IPLகாரர்கள் சொல்லித்தரும் பாடம்...

2. ஷாரூக் அணிக்கு நான்கு கேப்டன் போதுமா பற்றிய இந்த இடுகை

டோனி தேசத்தை அவமானப் படுத்திவிட்டாரா?

இந்த ஆண்டு ஏப்ரல்-14ல் பத்ம விருதுகள் வழங்கப் பட்டு விட்டன.. தமிழ்மான வீரராக விவேக் போய் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அதே நேரத்தில் டோனி மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. ஹர்பஜன்சிங் ஏதோ குடும்பசூழல் காரணமாக வரவில்லையாம். இவர்கள் அதே நேரத்தில் ஏதோ விளம்பர நிகழ்ச்சிக்காக டெல்லியில் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கில் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதோடு அனைவரும் இது போன்ற உயரிய விருதுகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு சுற்றறிக்கை அனுப்பப் போவதாக கூறியுள்ளார்.

1.என்ன நடக்கிறது அங்கே..?


2.இது போன்ற விருதுகள் ஏன் மக்களிடம் முக்கியத்துவம் இழந்துவிட்டன?இந்த விருதுகள் மிக உயர்ந்தவை என்ற எண்ணத்தை எப்படி மீண்டும் மீட்டுவருவது?

3.இதைவிட விளம்பர நிகழ்ச்சிகள் முக்கியமா? அந்த அளவு பணத்தேவை விளையாட்டுவீரர்களுக்கு இருக்கிறதா?

4.ஐபியெல் இடம் மாறியதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா? அப்படி இருந்தால்.........

5.இது டோனியின் பெற்றோருக்கு தெரியுமா? மற்றவர்களைவிட டோனியின் பெற்றோர் பத்திரிக்கைகள் சந்திப்பில் மிக முதிர்ச்சியுடன் பேசுகிறார்கள்.

6.வெளிநாட்டில் விளையாட சென்றிருந்தால் சிறப்பு அனுமதி கொடுத்து அவர்களை விருது அனுப்பி இருக்க வேண்டாமா?(கிரிக்கெட் விளையாடுவதே தேசத்தின் மானத்தைக் காக்க என்றுதானே கூறுகிறார்கள்)

Wednesday, April 15, 2009

IPL கவலைப் படாதீர்கள் ஷாரூக்

ஷாரூக் கான் காவஸ்கரிடம் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டார். காரணம் அவருக்கு மட்டும் கிரிக்கெட் தெரியுமாம். அவர் மட்டும் சாதனைகல் செய்திருக்கிறாராம். ஷாரூக் காட்டமாக திட்டியது கிரிக்கெட் தெரியாத ரசிகர்களைத்தான் திட்டினாராம். யார் சொன்னாலும் சொன்ன சொற்கள் நிஜம்தானே.. அப்புறம் ஏன் அவரிடம் மட்டும் மன்னிப்பு..

...............................................................................................................

முக்கியப் பிரச்சனையையே பார்ப்போம். நான்கு கேப்டன் போடுவதுதானே பிரச்சனை, அனைவரையுமே கேப்டன் ஆக்கிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமே.... கேப்டனுக்கெல்லாம் கேப்டனாக கங்கூலியை நியமித்து விடலாம். அனைவருமே சமாதானம் ஆகிவிடுவார்கள். ஆட்டத்துக்கு ஒரு கேப்டன் என்றில்லாமல் பேட்டிங்கிற்கு ஒரு கேப்டன், பவுலிங்கிற்கு ஒரு கேப்டன், அதிலும் சுழலுக்கு ஒன்று, வேகத்துக்கு ஒருவர், ஃபீல்டிங்கிற்கு ஒருவர், உள்வட்டத்திற்கு ஒருவர், வெளிவட்டத்திற்கு ஒருவர், கீப்பிங்கிற்கு ஒருவர்... அசத்து அசத்து என்று அசத்தி விடலாம்..

அசல் படத்தின் கதை.

அசல்


தமிழ்திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கலத்தில் இறங்கி துவக்க விழாவில் ஒரு கலக்கு கலக்கு இருந்தார். அசலில் கதை இதோ:-

கி.பி.17ம் நூற்றாண்டில் தொடங்கிறது கதை.

வெளி நாட்டில் படிக்க போன அஜித் கப்பலிலிருந்து இறங்கி தனது நாட்டிற்கு வருகிறார். வரும் வழியில் வயலில் இறங்கி சுற்றிப்பர்க்கிறார்.

அப்போது வயலில் வேலை செய்பவர்:-

தம்பி யாரு.. சிவப்பா இங்கிலீசு துரை மாதிரி அழகா இருக்கீங்களே அதுதான் கேட்டேன். என்கிறார்.


அப்போது இடி மின்னல் எல்லாம் ஒலிப்பது போன்று ஒரு நிகழ்வு. அப்போது பெரிய மீசையுடன் ஒருவர் வந்து நிற்கிறார்.

தம்பி பாக்கிறதுக்குத்தான் அசலூர் காரர்மாதிரி இருப்பார். ஆனால் அசலாவே அவர்
நம்மூருதான்.

வயலில் வேலை செய்பவர்: தல நீங்களா.. அப்போ அவரு

மீசைக்காரர்:- என் தம்பீ.......லே

படிச்ச அஜித்:- அது..
(அஜித் பேசுவதை அஜித் மாதிரி படிக்கவும். ரகுவரன் மாதிரி படித்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.) மொத்தம் இரண்டு அஜித்.

வயலில் வேலை செய்பவர்:- அதுதான் அழகா இருக்காக..


இரண்டு பேரும் சாரட் வண்டியில் போய் கொண்டே இருக்கிறார்கள். அப்போது மாவீரன்படத்தில் ரஜினி பாடும் பாடல் ரீமேக் செய்யப்பட்டு ஒலிக்கிறது. இடையிடையே முத்து பிண்ணனி இசையும் வந்து கொண்டே இருக்கிறது.


தம்பி அஜித்:-அண்ணே நம்ம ஜமீன் மக்கள்ளாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கண்ணே......

அண்ணன் அஜித்:-ஆனா இந்த வெள்ளைக் காரந்தான் சரியில்லே..

நம்மல வரி கேட்கிறான்.

தம்பி அஜித:- அப்படியாண்ணே... வானம் பொழிகிறது .பூமி விளைகிறது.........(முழு வசனத்தையும் அஜித் பேசுகீறார்.)

அண்ணன் அஜித்:-இதெல்லாம் நானும் பேசிப் பார்த்திட்டேன் ஒன்னும் வேலையாகல.. வரிக்கு வட்டி வேற போடறான். அசலையே கட்ட முடியாதுங்கறேன்

கலக்டர் பொண்ணுகூட என்கூடத்தான் கப்பல்ல வந்துச்சு. நான் போயி பேசி பாக்கட்டுமா...

அண்ணன்;- அது அசலாவா கலக்டர் பொண்ணுதானே...

தம்பி;- இல்லணே.. கலெக்டரே பொண்ணுதான்னே... வரும்போது பேசிட்டு வந்தேன்.

அண்ணன்:- நான் தனியாளு இல்லேண்ணு சொன்னியா...

தம்பி:- அதச் சொல்லிட்டுத்தாண்ணே பேசவே ஆரம்பிச்சேன்...

................................................................... தொடரும்>>>>>>>>>>>>.......

இதன் அடுத்த பகுதி இங்கே இடம் பெற்றுள்ளது

அம்மாஇரண்டு அப்பா இரண்டு பாகம் இரண்டு

 

மர்லின் மன்றோவின் முன்னோடி

 

அசல் கார்பந்தயம் (நான்காம் பாகம்)


பின் குறிப்பு:- வழக்கம் போல் நமது சொந்தக் கற்பனைதான்

Tuesday, April 7, 2009

அருந்ததி பாணியில் எந்திரன்

அ டி யே பொ ம் மா யி............

சமீப காலமாய் இளைஞர்களை தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் அருந்ததி படத்தின் விளம்பரங்களிலேயே ஆயிரம் சந்திரமுகி ஒன்றாய் வந்தது போல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கிற்கு ரசிகர்களை இழுக்கும் படங்களில் ரஜினி படங்கலுக்கு நிகராக அருந்ததி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டோம்.

அதே பாணியில் ரஜினிக்கு ஒரு கதை யோசித்தபோது தான் நாம் ஏற்கனவே எழுதிய கதை நினைவுக்கு வந்தது. அதை உங்களின் பார்வைக்கு மீள்பதிவாகக் கொடுக்கிறோம். துளி கூட மாற்றி அமைக்காமல் அப்படியே ஒரு மீள்பதிவு.
==========================================================



எந்திரன் புத்தம்புதிய கதை

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் பரிசாக இந்த பொற்காவியத்தை அவரது காலில் சமர்க்கிறோம்.

யந்திரன் entirely different entertainment

முதல் காட்சியில் நாயகன் சங்கராயனிலிருந்து இறங்கி வருகிறார். நாட்டிலேயே முதல்முறையாக பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டு வருகிறார்.

அவரது பெற்றோர் அவருக்கு திருமண்த்திற்கு பெண் பார்க்கிறார்கள். இந்திய கலாச்சாரத்திற்கு தகுந்த பெண்ணாய் பார்க்கிறார். கேரளாவிற்குச் செல்கிறார். போகும் வழியில் பொள்ளாட்சி ரோட்டில் ஒரு பாட்டு. உடன் ஆட ஸ்ரேயா..


கேரளாவில் அவரை வில்லன் கூட்டத்தினர் கடத்தி விடுகின்றனர். தலமை மந்திரவாதி திலகன்,, தலைவரின் உடலில் ஒரு யந்திர தகட்டை வைத்து விடுகிறார். யந்திர தகடு உடலில் சேர்ந்த உடன் தலைவர் வில்லன் கூட்டத்தின் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார்.

வில்லன் கூட்டத்தினர், உலகில் உள்ள பெரும்தலைகள் பலரை கொண்று குவிக்க ஆணையிடுகின்றனர். முதலில் ரஷ்யத் தொழில் அதிபரை கொல்கிறார். அதனை ஒரு அழகி விடியோ எடுத்து விடுகிறார். அடுத்து ஜெர்ம்னிக்குச் செல்கிறார்.


இந்த நிலையில் தலைவர் யந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரின் குடும்பத்திற்கு தெரிந்துவிடுகிறது. உடனே இமயமலையில் 1000ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மகான் அமிதாப்ஜியிடம் செல்கின்றனர். அவர் தனது தவ வலிமையால் தலைவரின் ஆன்மாவைத்தனியாக பிரித்து தலைவரைக் காப்பாற்ற அனுப்புகிறார். தலைவரின் ஆன்மா மனித உருக் கொண்டு தலைவரை காப்பாற்றச் செல்கிறார்.

இந்த நிலையில் எந்திரத் தலைவர் அமரிக்கா செல்கிறார். கடல் கடந்து செல்லும் சக்தியை அமிதாப்ஜி தராததால் ஆத்ம சக்தி திரும்பி விடுகிறார்.


கடல் கடந்து செல்லும் சக்தியை ஆதித்ய கணேசச் சித்தரிடம் தான் இருக்கிறது. அவர் விண்ணுலகம் பார்க்கும் ஆசையில் மண்ணுலகம் நீங்கிவிட்டார். அவரை வரவைக்க சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டும் என்கிறார். அந்த பூசைகளை அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்தான் செய்ய வேண்டும் என்கிறார்.

ஐஸ்வர்யா பூஜைகள் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜெர்மானிய தொழிலதிபரைத் தலைவர் ஐ.நா. சபை வாசலில் வைத்துக் கொண்று விடுகிறார். அடுத்த கட்ட பூஜையாக இமயமலை பனிக்கு நடுவே பூங்குண்டம் அமைத்து அங்கே கிடைக்கும் இலைகளை ஆடையாக அணிந்து நடணம் ஆடி பூஜை செய்கிறார்.கூடவே ஐந்து இளம் கன்னிப்பெண்களும் ஆடுகிறார்கள். தலைவர் செய்த கொலையால் உலகமே பரபரப்பாகிறது. இந்தியாவின் மேல் போர் தொடுக்க அமரிக்கா திட்டமிடுகிறது.



அடுத்த கட்டமாக அமெரிக்க ஜனாதிபதியை முடிக்கும் பணி கொடுக்க்ப் படுகிறது. தலைவர் மறுத்து விடுகிறார். வில்லன் குரூப் மந்திர வாதிகள் அதீத கோபம் அடைகிறார்கள். ஐஸ்வர்யாவின் பூஜை காரணமாக ஆதித்ய கணேச சித்தர் தோன்றி பல ரகசியங்களைச் சொல்கிறார்.இந்த வலுவான பாத்திரத்தை சிவாஜி சாருக்கு கொடுக்கிறார்கள். முழுக்க கிராபிக்ஸ்.

தலைவரின் நாடி, நரம்பு, ரத்தம், சதை, நகம், பனியன், ஜட்டி எல்லாமே நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் இருப்பதால் தலைவர் என்றுமே தவறு செய்யமாட்டார். இதுவரை அவர் கொன்றவர்கள் எல்லாம் உலக பயங்கரவாதிகள். அவர் என்றுமே நல்லவர்களை எதிர்க்க மாட்டார். என்று கூறுகிறார். அடுத்த ரகசியத்தையும் கூறுகிறார். தலைவர் பிறந்த அன்றுதான் வானில் துருவ நட்சத்திரம் காணாமல் போனது. அத்னால் தலைவர்தான் துருவ நட்சத்திரம். இதை வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆதம சக்தி அமெரிக்கா செல்லும் சக்தியைக் கொடுக்கிறார்.


வில்லன் கோஷ்டி யெந்திரனை அடைத்துவைத்து விட்டு இந்தியா முழுவதும் குண்டு வைக்கின்றனர். ஆத்ம சக்தி அமெரிக்கா சென்று விட்டு, யெந்திரனை விடிவித்து இந்தியா அனுப்பிவிட்டு அங்கே அவர் தங்கிவிடுகிறார். தலைவர் அனைத்து இடங்களிலும் குண்டுகளை எடுக்கிறார். அங்கே அமெரிக்க ஜணாதிபதியைக் காப்பற்றும் பொறுப்பை ஆத்மாவும். இந்தியாவில் நடக்கும் மயிர் கூச்செரியும் சாகஸங்களை யெந்திரனும் செய்கிறார்கள். கூடவே ஐஸ்ஸும் போய் மிகவும் உதவி செய்கிறார். அங்கே தலைவர்க்கு பிரபல டென்னிஸ் வீராங்கணை உதவி செய்கிறார்.


கடைசியில் அமெரிக்காவையும் இந்தியாவையும் தலைவர் காப்பாற்றீவிடுகிறார். இந்த நிலையில் வெளி கிரகங்களீலிருந்து இரண்டு வாகண்ங்கள் வருகின்றன. அதில் இருந்து இறங்குபவர்கள் தாங்கள் ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிவிட்டு

யூனிவர்ஸ் முழுவதும் உன்னை வென்றிட யாரு...
பிரபஞ்ச நாயகனே ........

பாட்டுடன் படம் முடிவடைகிறது.


டாங்கர் வண்டியில் துரத்தும் படைகளைப் பார்த்து தலைவரின் வசனம்..

யெந்திரனுக்கே யெந்திரமா........



தலைவர் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளும்போது பேசும் வசனம்

நான் ஒருத்தனக் கொண்ணா நூறு பேரை கொண்ண மாதிரி


அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் டக் டக் என்று பயணம் செய்துவிட்டு

ஆண்டவன் சொன்னான் அமெரிக்கா வந்தேன்

ஆண்டவன் சொன்னான் அமெரிக்காவிலிருந்து வந்தேன்


சொல்லி பல வகைகளில் கலகல்ப்பாக்கலாம்.



பின்குறிப்பு:-
வழ்க்கமாக ரஜினி படமென்றால் பழைய ரஜினி படங்களீன் சாயல் இருந்தே தீர வேண்டும். அதனை ஓரளவே நிறைவேற்ற முடிந்தது.

========================================================

நாம் எழுதிய பிற எந்திரன் கதைகளை இங்கே.

அடுத்ததாக இங்கே நீங்கள் படிக்கலாம்

========================================================

முதலிலேயே எழுதிவிட்டதாலும் அதிலும் தமிழுக்காக எழுதியதாலும் அருந்ததி அளவுக்கு ரத்தம் சேர்க்கப் படவில்லை.

Monday, April 6, 2009

ரஜினிக்கு நடிக்கத்தெரியுமா/தெரியாதா?

ரஜினி...

மூன்றேழுத்தில் என்மூச்சிருக்கும் என்று சொன்ன தமிழ்திரை உலகை கட்டிப்போட்ட அடுத்த தலைமுறை மூன்றெழுத்து மந்திரம்.

ரஜினியின் நடிப்பு பலநேரங்களில் கேள்வி கேட்கப் பட்டுள்ளது. கேலி செய்யப் பட்டுள்ளது. அதற்கு பதில்சொல்லும் ஒரு காட்சிதான் இந்த வீடியோ






எம்ஜியாரும் சிவாஜியும் மக்கள் மனதில் நிறைந்த தெல்லாம் முழுநீளக் கதாபாத்திரங்களும் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களின் மூலம். ஆனால் ரஜினி பெயர் வாங்கியது துண்டுக்கதாபாத்திரங்களில் , ஆபூர்வராகங்கள், மூன்றுமுடிச்சு, 16 வயதினிலே, நான்வாழவைப்பேன் போன்ற படங்களின் மூலமே மக்களின் மனம் கவர்ந்தவர்.

இப்போது நிலைமை இன்னும் மோசம். அவருக்கு நடிக்க கிடைக்கும் ஓரிரு காட்சிகளில் முழுதிறமையும் காட்டவேண்டிய சூழலில் இருக்கிறார். அப்படிப்பட்ட காட்சிதான் பாஷாவில் வந்த காட்சி.

இரண்டு வார்த்தை, நான்கே எழுத்து இதுதான் அவர் வாய்விட்டுப் பேசிய வார்த்தை. மற்றதெல்லாம் அவரது உடல்மொழியும், முகபாவனையும்,கண்களும் பேசியவையே.. அவர் மிகச் சிறந்த நடிகர் என்பதற்கு இது ஒன்றே போதுமே..

Sunday, April 5, 2009

மூன்றும் சேர்ந்த கூட்டணி

பேருந்து அமைதியாக கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்த்து. நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று மதியம் இருந்தது. ஒருநாள் கழித்து இன்னொரு நண்பனின் திருமணம் இரண்டிலும் கலந்து கொல்வதற்காக முருகன் சென்று கொண்டு இருந்தான். அநேகமாக ராஜுவின் வீட்டில்தான் தங்கலாம் என்ற முடிவில்தான் வந்து கொண்டிருந்தான். ராஜுவும், ராஜுவின் மனைவி பூஜாவும் அவனது வகுப்புத்தோழர்கள்.

ராஜு உள்ளூர்காரன் தான், ஆனால் அவன் பூஜாவைக் காதலிக்க ஆரம்பித்த பின் கல்லூரியின் விடுதியில்தான் தங்கிப் படித்தான். ராஜு எப்போதும் முருகன் கோஷ்டியுடன்தான் இருப்பான். ஆனால் மாலை வேலையில் எல்லா நாட்களுமே பூஜாவுடன்தான் இருப்பான். பூஜா எப்போதும் கலகல வென்று எல்லோருடனும் பேசிக் கொண்டே இருப்பாள்.

150ஏக்கர் பரவியுள்ள கல்லூரி வளாகத்தில் மாலைவேளையில் ஆங்காங்கே மாணவர்கள் அமர்ந்து படிப்பது வழக்கம். பல ஜோடிகள் தனியே அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். 9மணிக்கு மாணவியர் விடுதி மூடிவிடுவதால் அதுவரை இவர்களது படிப்பு தொடரும். பின்னர் எல்லோரும் விடுதிக்குச் சென்று விடுவர்.

முருகன் மாதிரி ஆட்கள் படிக்க சோம்பல் ஏற்படும் நேரங்களில் அப்படியே மயில் வேட்டைக்குச் செல்வார்கள். அந்தக் கல்லூரியில் மயில்கள் நிறையச் சுற்றிக் கொண்டிருக்கும். மயில் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்காங்கே காதலர்கள் படிக்கும் அழகை ரசித்துக் கொண்டு போவார்கள். அதுதான் மயில் வேட்டை. அப்படி செல்லும் போது ராஜு பூஜா ஜோடி கண்ணில் தட்டுப் பட்டால் ராஜுவைவிட பூஜாதான் அதிகமாக முருகன் குழுவினருடன் பேசுவாள். சிப்ஸ், பிஸ்கெட் போன்றவை வாங்கி வருமாறு தொல்லை படுத்திக் கொண்டே இருப்பாள். பூஜாவுக்குப் பயந்தே அவர்கள் இருக்கும் பகுதியை தவிர்த்துவிடுவார்கள். இருந்தாலும் அவர்கல் எந்த மூலையில் அமர்ந்து படிக்கிறார்கள் என்பது தெரியாத சூழலில் அடிக்கடி செலவு வைத்துவிடுவாள்.

ராஜு பூஜாவை விட்டுவிட்டு வந்துவிட்டால் பிறகு முருகன் குழுவினருடன்தான் இருப்பான். கோயமுத்தூரில் உள்ள பலநூறு கல்லூரிகளில் மாதமாதம் எதாவது ஒரு கல்லூரியில் கலைவிழா நடக்கும். அதற்கு முருகன் குழுவினர் போவர்கள். அதற்கான பயிற்சியில் ஈடுபடும்போது கூட மாலை வேலைகளில் பூஜாவைப் பார்க்க போய்விடுவான். பூஜாவே கூட்டி வந்தால்தான் வருவான்.

நேற்றே அலைபேசியில் ராஜுவுடன் பேசியிருந்தான். ராஜுதான் இங்கேயே தங்கியிருந்து இரண்டுதிருமணங்களிலும் கலந்து கொள்ளுமாறு யோசனை கூறியிருந்தான்.

நேராக திருமண வரவேற்பு நடந்த மண்டபத்திற்கு சென்றான் முருகன். அங்கே நண்பர்கள் கூட்டம் ஒன்றும் அதிகமாகத்தென்படவில்லை. இருந்த ஓரிருவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட நினைத்த போதுதான் பூஜ வந்தாள்.

சில ஆண்டுகளில் கொஞ்சம் குண்டாகியிருந்தாள். ஒப்பனைகளும் கூடியிருந்தன.

"ஃபோன் நம்பர் மாத்திட்டயாமே.. எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாயா"
கொஞ்சம் பயமுறுத்தும் வண்ணம்தான் பேசினாள்.

ராஜு வரலையா?

இல்ல.. அவர் கொஞ்சம் பிஸி. உன்னை வீட்டுக்கு கூட்டிவரச் சொன்னார்.

திருமண வரவேற்பு முடிந்து அவர்கள் வீட்டுக்கு புறப்படும்போது காரின் முன்பக்க கதவுகளை திறந்துவிட்டாள். முருகனுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கையில் இருந்த குழந்தைகளுக்கு வாங்கிய பரிசுகளை முன் இருக்கையில் வைத்துவிட்டு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாண். கல்லூரி நாட்களில் சிலமுறை இருசக்கர வாகனத்தில் அவளை அழைத்துவந்திருக்கிறான். இன்று கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

படித்து முடித்த சிலகாலங்களில் இருவரும் திருமணம் முடித்துமேல்படிப்பு முடித்து ராஜுவின் தந்தை கட்டி வைத்த மருத்துவ மனையை கவனித்துக் கோண்டிருந்தார்கள். முருகன் அரசுப் பணி கிடைத்து ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்தான்.

நீ ஏன் ஃபோன் செய்யறதே இல்லை இது பூஜா

இல்ல கொஞ்சம் வேலை அதிகம்.

ஃபோன் நம்பர் மாத்தினதும் சொல்லவே இல்லை. அதினாலதான் உணக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவே முடியவேயில்லை என்றாள் பூஜா..

உண்மைதான் முருகன் அலைபேசி வாங்கிய காலகட்டத்தில் பூஜாவிடம் இருந்து நிறைய குறுஞ்செய்திகள் வரும். புது எண் வாங்கிய பிறகு எல்லோரும் தெரியப் படுத்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை விட்டு விட்டான். ராஜுவுடன் அவ்வப்போது பேசுவான்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் கல்லூரிக்கு எதிரே உள்ள ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டாள். மாறவே இல்லை இந்தப் பூஜா..

பொதுவான விசாரிப்புகளுடனும் மற்ற நண்பர்களைப் பற்றிய விசாரிப்புகளுடன் மகிழ்வுந்து பூஜாவின் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் பூஜா அழ ஆரம்பித்தாள்.

தொடரும்...... தொடரும்.......... தொடரும்..........

பின் குறிப்பு:- பச்சை நிறத்தில் பூஜா பேசுவதும்
நீல நிறத்தில் முருகன் பேசுவதும் இடம் பெற்றுள்ளன

========================================================

நண்பனின் மனைவி முதல் பாகம் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தினை தொட்ருங்கள்



சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பூஜா மாதிரி ஆட்களுக்கு அழக் கூடத்தெரியுமா.. என்பதே முருகனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. என்னேரமும் பேசிக் கொண்டே இருக்கும் பெண் அவள். இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவள், காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டவள், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நெருங்கிய நண்பனின் மனைவி. இப்போது என்ன செய்வது என்றே முருகனுக்குத் தோன்ற வில்லை. அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

இப்பொழுதெல்லாம் ராஜு குடிக்கறார். சொல்லிக் கொண்டே அழுதாள். அழுதுகொண்டே சொன்னாள்.

இது அதிபயங்கர அதிர்ச்சியாக முருகனுக்கு அமைந்தது. முருகன் கல்லூரி நாட்களில் தண்ணியடித்திருக்கிறான். கல்லூரி விழாக்கள் முடிந்த பிறகு, நண்பர்களின் பிறந்த நாளில் என்று தேர்ந்தெடுத்த நாட்களில் நண்பர்கள் குடிப்பார்கள். ஆனால் அந்த நாட்கள் வாரா வாரம் வந்திவிடும். அந்த நேரத்தில் எல்லாம் ராஜு குடித்ததில்லை. சிகரெட் கூட உபயோகப் படுத்தியதில்லை. ஆனால் முருகன் உட்பட அவன் நண்பர்கள் யாருமே குடிப்பதில்லை. புகைப்பதில்லை. ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த ராஜு குடிப்பது முருகனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

என்ன ஆச்சு?

தெரியல.. என்னை சந்தேகப் படற மாதிரி தெரியுது. ஆனால் என்கிட்ட ஏதும் கேட்க வில்லை.

எத்தனை நாளா குடிக்கறான்?

ஒரு வருஷமா.. சில நேரங்கள்ல டெய்லி கோட குடிக்கிறார்.

வேலைக்கு ஒழுங்கா போறானா?

அதெல்லாம் போறார். வீட்டுக்கு வரும்போது பெரும்பாலும் குடித்துவிட்டு வருகிறார். குடித்துவிட்டு வந்தாலும் குடிக்காவிட்டாலும் வந்ததும் நெட்டில் உட்கார்ந்துவிடுகிறார்.

அப்புறம் எப்படி சந்தேகப் படுறான்னு சொல்றே..

தோணுது. ஆனால் ஏன்னுதான்னு தெரியல...

கல்லூரித்தோழந்தான். ஆறுஆண்டுகள் ஒன்றாகப் படித்தவர்கள்தான். ஆனாலும் சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவனின் குடும்ப பிரச்சனையில் தலையிடுவது எப்படி குழம்பிப் போய் நின்றான்.

தொழிலில் ஏதும் பிரச்சனை மாதிரியும் தெரியவில்லை. சந்தேகப் படுவதாக வேறு சொல்கிறாள். அவன் சந்தேகப் படுகிறானா.. இவள் அவனை சந்தேகப் படுகிறாளா...

இந்த நேரத்தில் மகிழ்வுந்து ஒன்று வரும் சத்தம் கேட்டது.

அவர்தான் வருகிறார்.

கண்ணைத்துடைத்துக் கொண்டு பூஜா எழுந்தாள்.

ராஜு உள்ளே வந்தான். இருவரையும் பார்த்தான்.

தொடரும்.............. தொடரும்................... தொடரும்............................
===================================================


ராஜூவிடம் அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை முருகன். நானும் பூஜாவும் விவாகரத்து வாங்கலாம் ன்னு இருக்கோம்.

முருகனுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏண்டா...
......................................................
இந்தக் கதையைத் தொடங்கும் முன் நண்பனின் மனைவி பாகம்-1, பாகம்-2 படித்துவிட்டு வாருங்கள்.
....................................................

பிற்பகலில் ராஜு வீட்டுக்கு வந்த போது தன்னை வரவேற்றது கூட அவ்வளவு மகிழ்ச்சியாக தெரியவில்லை என்றுதான் முருகனுக்குத் தோன்றியது. ஊட்டிவரை போய்விட்டு வருவதாகக் கூறினான். இல்லை. இங்கேயே தங்கு. தோட்டங்களைப் பார்க்கலாம் நிறைய பேச வேண்டியுள்ளது என்றுதான் ராஜு முருகனைத தங்க வைத்தான். இப்போது தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டுதான் இதெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்.
...........................................................

முருகன் கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்த்தான். அன்றெல்லாம் முருகன் கூட்டம்தான் உற்சாக பானம் அருந்துவார்கள். ராஜு வெறுமனே ஒரு சிட்ரா பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு மற்றவர்கள் போதை மயக்கத்தில் பேசுவதை ஊக்குவித்துக் கொண்டிருப்பான். கல்லூரி நாட்களில் அவன் ஒரு போதும் குடித்ததே கிடையாது. இன்று தலை கீழாக இருக்கிறது. முருகன் பெப்சி பாட்டிலுடனும் ராஜு உற்சாக பானத்துடனும் இருக்கிறான். உற்சாக பானம் உற்சாகம் கொடுப்பதற்குப் பதிலாக அவனது துக்கத்தின் கரைகளை உடைத்துக் கொண்டு இருந்தது.

காதல் திருமணம் வேஸ்டுடா...

என்னடா பிரச்சனை..

பூஜா சொல்லியிருப்பாளே.. அவள் என்னைவிட நண்பர்கள்ட்டா தானே நல்லா பேசுவா..

போச்சு இனிமெல் வாயத்திறக்கக் கூடாது. இல்லடா ஒன்னும் சொல்லலியே... ஏன் இப்படியெல்லாம் பேசுர....

நீங்க ரெண்டு பேரும் எப்படி நெருங்கிய காதலர்களா சுற்றி வந்தீங்க...


இல்லைடா நாங்க ரெண்டு பேரும் நெருக்கமாவே இல்லை. அவளுக்கு நண்பர்கள்தான் எல்லாம். அவங்களுக்கு குற்ஞ்செய்தி அனுப்புற அளவிற்கோ பேசும் அளவிற்கோ என்னிடம் அவ பேசியதே இல்லை. சாயங்காலம் ஏதாவது ஒரு ஃபிரண்டு வாங்கி தந்ததுன்னு ஒரு கிஃப்டோட வந்து நிக்கறா.. என்கிட்ட கேட்டா வாங்கி தர மாட்டனா...

வீட்டுக்கு வந்தாலும் ஃபோனும் கையும்தான்.

ஏண்டா எங்காவது வெளியே கூட்டிட்டி போகவேண்டியதுதானே..

எங்கடா இப்பதான் ஹாஸ்பிடல் நல்லா போயிட்டு இருக்கு. அப்பாவுக்குன்னு நோயாளிகள் வந்தது போக இப்ப எங்களுக்கும் நோயாளிகள் வந்துட்டு இருக்காங்க...

அப்புறம் எப்படிடா விவாகரத்து வாங்குவீங்க?

விவாகரத்து வாங்கிவிட்டு திரும்பவும் ஒரே இடத்தில் வேளை செய்வீங்களா..

இப்ப என்னை என்னடா பண்ணச் சொல்ற...
.....................................................

பிரச்சனை ஓரளவு தெளிவானது. பூஜா கல்லூரியில் இருந்த மாதிரியே இன்னும் இருக்கிறாள். அன்று அதை ஏற்றுக் கொண்ட முருகனால் இன்று அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் தொடர்ர்சியாக ஏற்படும் வாக்குவாததில் பற்பல பிரச்சனைகள்.

.......................................................

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு முருகன் ராஜுவுக்கு ஒரு ஏற்பாடு சொன்னான். பரவாயில்லை. விடுடா..

ஆளுக்கொரு வண்டி வைத்துக் கொண்டுதான ஒரே மருத்துவமனைக்கு போய்ட்டுவர்ரீங்க. இனிமேல் ஓரே வண்டில போய்ட்டுவாங்க.

பிறகு பாருங்க..

..........................................
..........................................
சில நாட்கள் கழித்து ராஜுவிடம் இருந்து முருகனுக்கு அலைபேசி அழைப்பு. நன்றி மச்சி இப்பெல்லாம் பலவிஷங்கள் நார்மல் ஆயிடிச்சு.
...................................................

இந்தக் கதை இப்போது முடிந்தது

=======================================================

சமீபத்தில் எழுதியத தொடர்கதையின் ஒன்று, இரண்டு மூன்று பாகங்களும் வெளியிட்டுள்ளேன்.

Saturday, April 4, 2009

ஏழு தலைமுறைக்கும் மாறாத ரசனை

http://upload.wikimedia.org/wikipedia/ta/7/74/Sivakavi1.jpgகூகிள் தேடுக மூலம் சுற்றி வந்த போது கிடட்த்த படங்கள் சில...
இவற்றைப் பார்த்த போது நாம், நமது ரசனை எல்லாம் எல்லாக் காலங்களிலும் ஒன்று போலவே இருக்கிறதல்லவா...

அனைத்து காதாநாயகிகளும் ஒரே மாதிரியே முக அமைப்பு உருவ அமைப்பு போன்றவற்றுடன் தோன்றுகிறார்கள் போலவே உள்ளது.http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/3/32/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.jpg/170px-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.jpghttp://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/93/Krishnabhakthi_1948.jpg/250px-Krishnabhakthi_1948.jpg[saro+002.jpg]http://awardakodukkaranga.files.wordpress.com/2008/11/thenilavu.gifhttp://awardakodukkaranga.files.wordpress.com/2008/11/thenilavu1.jpghttp://www.paristamil.com/tamilnews/wp-content/aishwarya-rai-1_001.jpghttp://onlysuperstar.com/blog/wp-content/uploads/2009/02/mgr-saroja-devij.jpghttp://img366.imageshack.us/img366/4523/trishavij254507lo.jpghttp://www.cinemaexpress.com/archaics/010803/images/01Aiswarya.jpg

Thursday, April 2, 2009

ஷில்பா ஷெட்டி வீட்டை விட பெரிசு

நமீதாவ விட நல்ல உயரமான எடை மிகுந்த, நடிக்கத் தெரிந்த நடிகைதான் வாணிஸ்ரீ. அவரோடு சேர்ந்து இந்த வீட்டை நாமும் சுற்றிப் பார்க்கலாம்.

சில்பா ஷெட்டி அவர்களின் வீட்டை இந்த இடத்தில் பார்க்க நேர்ந்தது. அதைவிட பெரிய பெரிய வீடுகளை நாம்தான் பார்த்திருக்கிறோமே. நமக்கு என்ன பிரமிப்பு வந்துவிடப் போகிறது. அவ்வாறு நாம் கண்ட வீட்டின் காட்சிகள் சில உங்கள் பார்வைக்கு......
http://www.alaikal.com/news/wp-content/vasanta-3.jpg

vasanta2.jpg



vasa5.jpg




இந்தப் பாடலில் அந்த வீட்டின் பெரும்பகுதியைக் காட்டியிருக்கிறார்கள். தவிர ஒரு பட ஆல்பத்தையும் பார்த்து ரசிப்பார். அந்த தொகுப்பில் வரும் வீட்டின் பகுதிகள் இன்னும் அழகாக இருக்கும். அந்த காட்சிகளும் உங்கள் பார்வைக்கு

Wednesday, April 1, 2009

அனுஷ்கா அழகிய தீ. அருந்ததி

சக பதிவர் குடுகுடுப்பை அவர்கள் தமிழக மக்கள் அனைவருக்கும் ஒரு அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதில் அவரது பலத்தை அவர் குறைத்து மதிப்பிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஜக்கம்மாவின் பலத்தையும் சற்று கேள்விக்குறியோடு நோக்குகிறார். அவருக்கு நமது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதில் அவரது சக்தி அவருக்கே தெரியவில்லை. ஜக்கம்மா வின் சக்தியை சாதாரணமாய் எடை போட்டுவிட்டார்.


இன்றைய தேதியில் ஆந்திர, தமிழ்நாடு மக்களில் அதிகம் மனம்கவர்ந்தவர் ஜக்கம்மாதான்........ (கர்நாடகாவிலும் மக்களின் மனத்தை மாற்ற முயற்சிகள் நடை பெறுவதாகப் பேசிக் கொள்கிறார்கள்)


ஜக்கம்மா.. எங்கள் ஜக்கம்மா பாட்டு எல்லார் மனதிலும் ஓடிக் கொண்டு இருக்கீறது,

இளைஞர்கள் பொம்மாயி, பொம்மாயி என்று கூவிக் கொண்டே இருக்கிறார்கள்.

சென்னைத்திரையரங்குகளில் பார்க்க முடியாத குழந்தைகள் இணையத்தையும் பக்கத்து ஊர்களையும் நாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

தொலைக்காட்சிகளில் முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்தே மக்கள் பிரமித்துப் போய் இருக்கிறார்கள்.

எனவே இந்த முறை மக்களின் நிறைந்த செல்வாக்கு ஜக்கம்மாவின் மறுபிறவியும் எல்லா பிறவியிலும் பொம்மாயி என்று அழைக்கப் படுபவருமான அருந்ததிக்கே......


ஜக்கம்மா அருந்ததியாய் இருக்கும்போது அவருக்கு வழிகாட்டியாகவும் தக்க பாதுகாப்பாகவும் ஒரு முஸ்லிம் இருக்கிறார். எனவே சமய நல்லிணக்கத்தையும் காப்பாற்றுவார். அவர் அவ்வப்போது இந்தி பேசுவதால் டெல்லியிலும் உபயோகப் படுவார்.

எனவே ஜக்கம்மா என்ற அருந்ததி அவர்களை நம்பி குடுகுடுப்பை தென்னிந்தியா முழுவதும் அழைப்பு விடுவிக்கலாம்..




இந்த அம்மாதான்http://i2.tinypic.com/4r1idxs.jpg
இந்த அம்மாவாய் அவதாரம்
எடுத்து வந்திருக்காங்க.. அவங்களோட லெவலுக்கு எல்லோருமே அவங்க காலடியிலதான்.


பின்குறிப்பு:- குடுகுடுப்பை அவர்களுக்கு போட்டிருக்கும் பின்னூட்டம் என்றாலும் இதையே அருந்ததி படத்திற்கு நான் எழுதிய விமர்சனமாய் கூட எடுத்துக் கொள்ளலாம்.

இன்றைய கபில்தேவ் அன்றைய கபில் தேவ்வுடன்

http://www.outlookindia.com/images/kapil_dev_world_cup_20070305.jpg

http://mirrorreflections.files.wordpress.com/2008/06/1983-squad-for-wc.jpg

http://www.hindu.com/tss/tss2705/images/20040131006901204.jpghttp://mirrorreflections.files.wordpress.com/2008/06/kapil-dev-2.jpg
http://members.tripod.com/%7Ekkv/cricket/pics/sachin_kapildev_azhar.jpghttp://tamil.webdunia.com/sports/cricket/articles/0806/17/images/img1080617008_1_1.jpg
http://www.hindu.com/af/india60/images/2007081560031005.jpg

இன்றைய கபில்தேவ்:-


கவுரவ லெடினென் ட் ஜெனரலாக....


பயிற்சி முகாமில் அவர் கூறியது
கடந்த இரண்டு நாட்களாக போர் பயிற்சி முகாம் இங்கு நடந்து வருகிறது. இன்று இரண்டாவது நாள். போர் படை அதிகாரிகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வது புதிய அனுபவமாக உள்ளது. அவர் களது வாழ்க்கை முறையை கற்றுக் கொண்டு வருகிறேன். ராணுவத்தில் கற்றுக் கொடுக்கப்படும் ஒழுக்க முறைகளை, ஒரு விளையாட்டு வீரர் தெரிந்து கொள்வது நல்லது. இங்குள்ள நடவடிக்கைகளை பார்க்கையில், இப்போது கூட நான் கிரிக்கெட் விளையாடலாம் என எண்ணத் தோன்றுகிறது.

இங்கு நான் போர் வீரனாக வரவில்லை. நாட்டை காக்கும் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ராணுவத்தில் இணைந்து உள்ளேன். ராணுவ உடை அணிந்தவுடன் புதிய உணர்ச்சி வருகிறது. பயிற்சியின் போது துப்பாக்கி சுடுதலும் கற்று கொண்டேன். இருப்பினும் துப்பாக்கி தூக்கும் கலாசாரம் சிறந்தது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 50 வயதில் ராணுவ பயிற்சி மேற் கொள்வது என்பது மிகவும் சிரமம். ஆனால் ஆர்வம் இருந் தால், எதையும் சாதிக்கலாம். 30 ஆண்டுகளுக்கு முன் ராணுவத்தில் இணையும் வாய்ப்பு எனக்கு கிடைக்காதது துரதிருஷ்டம் தான். ஆனால் எனது கனவு தற்போது மெய்யாகி உள்ளது. நான் ஒரு முழுமையான இந்தியக் குடிமகனாகி விட்டதாக கருதுகிறேன்.
Kapil Dev
http://www.telegraph.co.uk/telegraph/multimedia/archive/01318/kapil_dev3_1318297c.jpg

ஏப்ரல்-1 சிறப்புப் பதிவு; யாரையும் ஏமாற்ற அல்ல




இங்க ஒரு சிங்கத்த சீண்டப் பார்க்கறாங்க. மனைவியின் குரலில் மனைவியின் தோழியைப் பேச விட்டு சிங்கத்தை டீஸ் பண்றாங்க. பாருங்க சிங்கம் எவ்வளவு கோபம்+கடுப்பு அடைகிறார்ன்னு பாருங்க. தயவு செய்து யாரும் மற்றவர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

சிங்கம் சமாளிப்பார். சின்னப் பசங்க.......

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails