Thursday, February 25, 2010

சச்சினின் கடைசி ஐந்து ஓட்டங்கள்

சச்சின் தனது இரட்டைச் சதத்தின்  கடைசி ஐந்து ஓட்டங்கள் எடுக்க ஐந்து ஓவர்கள் எடுத்துக்கொண்டார். அது பற்றிய கணக்கு

45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.

46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்

.46.3ல் ரன் எதுவும் இல்லை

46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.

47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை

47.4 ஓவரில் ஒரு ரன் எடுத்த சச்சின் 199ஐ எட்டினார்.

கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.

கிரிக்கெட் உலகின் பரிதாபகரமான கேப்டன்

ஒரு உள்குத்தோடு ஒரு தொடர்பதிவு ஆரம்பித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. கிரிக்கெட் சம்பந்தமாக சில பல கேள்விகள் வைத்து அதில் நம் பதில்களை வைக்கச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இதில் என்ன கொடுமைன்னா , அதில் சில கேள்விகளுக்கான காரணமே இல்லாமல் இருப்பதுதான்.  பிடித்த வலதுகை ஆட்டக்காரர் பெயர் கேட்டு இடது கை ஆட்டக்காரர் பெயரும் கேட்கிறார்கள். ஆனால் பிடித்த ஒருநாள் ஆட்டக்காரர் பெயர் ட்டெஸ்ட் ஆட்டக்காரர் பெயரெல்லாம கிடையாது.

அதே போல நடுவர் பெயர் கேட்கிறார்கள். ஆனால் மைதானத்தின் பெயர் கிடையாது.   நாங்கள் கிரிக்கெட் பார்க்கும்போது  மைதானம் அமைந்த ஊர் பெயரைக் கவனித்து இருக்கிறோம். ஆனால் மைதானத்தின் பெயரோ , அதில் நிற்கும் நடுவர்களின் பெய்யரோ பெரிய அளவில் எங்கள் கவனத்தை ஈர்தது கிடையாது.   கிரிக்கெட்டின்பால் எங்களது கவனம் அவ்வளவுதான்.

அதற்காக எங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காது என்பதாக பொருள் கொள்ள வேண்டிய அவசியமில்லை. தேர்வுக்கு முந்தய நாள்கூட கிரிக்கெட் பார்த்துவிட்டு கண்கள் வலி ஏற்பட தூங்கும் ஒரு  சராசரி இந்திய மாணவன் தான் நான்.  ஆனால் நான் வசித்த பகுதுகளில் ஏனோ ஆஸ்திரேலியர்கள் எங்களை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அதைவிட ஒரு ஆச்சரியம். அங்கிருந்த பிற வெளிநாட்டவர்களில் ஒருவர்க்கூட என்னைப் பார்த்து நீ ஒரு இந்திய மாணவனா என்று கேட்டதில்லை, ஆனால் அவர்களைப் பார்த்து நீங்கள் எந்த தேசம் என்று கேட்டதுண்டு. ஏனென்றால் கோயமுத்தூரில் கோயமுத்தூர் வாசம் வீசும் ஒருத்தனிடம் அந்தக் கேள்விக் கேட்பது தேவையா என்று அந்த ஆட்கள் நினைத்திருக்கக் கூடும்.


ஆனால் என்னைப் பார்த்து நண்பர்  வருண் கிரிக்கெட் கேள்விகளை ஃபார்வேட் செய்திருக்கிறார். அதற்கு பதில் சொல்ல களத்தில் இறங்கி இருக்கிறேன்,.


ஏறக்குறைய முண்ணனி பதிவர்கள் களத்தில் இறங்கி பல ஹிட்டுகளை குவித்து பின்னர் நானும் இதில் குதித்து இருப்பதால் எனது ஆட்டம் எந்த அளவ்ல் எடுபடும் என்று தெரியாவிட்டாலும் இதுவும் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் ஆட்டமாகவே அமையும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.


இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷன் அஜய் ஜடேஜாதான். அவர் இறங்கும்போது களதடுப்பாளர்கள் ஏற்கன்வே வெற்றி பெற்றுவிடுவோம் எனற எண்ணத்திற்கு வந்திருப்பார்கள். அதனால் பந்துவீச்சு, ஒருமாதிரித்தான் இருக்கும். அந்த நிலையில் இவர் ஏதாவது ரன் எடுத்து தனது நிலையை ஸ்திரப் படுத்திக் கொண்டு காலந்தள்ளிவந்தார்,




1) பிடித்த கிரிக்கெட் வீரர்கள்:

நவாப் பட்டோடி என்று சொல்லிவிடுவதுதான் உத்தமம். இல்லையென்றால் சச்சின், கங்கூலி போன்றவர்களின் மனக்கசப்புக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது பாருங்கள். அவர்கள் இருவரின் பெயரைச் சேர்த்துச் சொன்னாலும் கூட சண்டக்க்கு வர வாய்ப்பு இருக்கிறது பாருங்கள்.


2) பிடிக்காத கிரிக்கெட் வீரர் :

அஃபிரிடியைத்தவிர இந்தப் பதவிக்கு யார் பொறுத்தமாக இருக்கக்கூடும். பந்தின் மீது பலாத்காரத்தை பிரயோகிக்கும் கொடுமைக்கார ஆட்டக்காரர் அவர். அந்த ரகசியவீடியோ வேறு இணையத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருந்தது.

3) பிடித்த வேகப் பந்து வீச்சாளர்-

 கபிலின் தேவ்தான்

4) பிடிக்காத வேகப்பந்து வீச்சாளர் 
என்ன கொடுமை சார்? இது . யார் பேரும் தோன மாட்டாங்குது.  அக்தர் பேர எழுதலாம்னா அவர ஒரு விளையாட்டு வீரரா ஒத்துக்கவே மனசு வரமாட்டேங்குது.



5) பிடித்த சுழல் பந்து வீச்சாளர்-  சச்சின்,  முன்னொரு காலத்தில் சச்சின் என்றொரு சுழல் பந்து வீச்சாளர் இருந்தார். அவர் வலது, இடது சுழற்சியிலும், மணிக்கட்டு, முழங்கை சுழற்சி போன்ற வகைகளிலும் பந்து போடுவார். காலத்தில் சுழற்சியில் அவர் காணாமல் போய்விட்டார்.


6) பிடிக்காத சுழல் பந்து வீச்சாளர்-  பிடிக்காத ஒரு நபர் சுழல் பந்து வீசுகிறார். அவரை இந்த இடத்தில் எழுதலாம் என்று ஆசை. ஏதாவது கெட்ட வார்த்தையில் பேசுவாரோ என்று பயமாக இருக்கிறது. அவர் அமீர்கான் வேடத்தில் நடிக்கவேறு போகிறாராம். அவர் ஹர்பஜன் சிங்க்.

7) பிடித்த வலது கை துடுப்பாட்ட வீரர்
 9) பிடித்த இடது கை துடுப்பாட்ட வீரர்-
                           பிடித்த முன்கால் துடுப்பாட்டக் காரர், பின்கால் துடுப்பாட்டக்காரர்,  ஸ்வீப் ஆட்டக்காரர். என்று ஒவ்வொரு வகைக்கும் வைக்காத மர்மம் என்ன என்று இண்டர் போல் விசாரிக்க வேண்டும் என்பதே நமது ஆசை.

8) பிடிக்காத வலது கை துடுப்பாட்ட வீரர்-
10) பிடிக்காத இடது கை துடுப்பாட்ட வீரர்     சென்ற கேள்விக்கான பதிலேதான் இங்கும். இருந்தால் கூட ஒரு துடுப்பாட்டக்காரர். ஒரு பந்து வீச்சாளருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கவேண்டும் அல்லவா? நானும் ஒரு பந்து வீச்சாளன் என்ற முறையில் எனக்கு பிடிக்காத ஒரு துடுப்பாட்டக் காரர்.  விவியன் ரிச்சர்ட்ஸ். அவருக்கு பந்துவீச வேண்டும் என்பதும் அவரது மூன்று ஸ்டம்ப்புகளையும் தனியே களட்ட வேண்டும் என்பதும் ஒருகாலத்தில் நமது லட்சியம்.


11) பிடித்த களத்தடுப்பாளர்-  ரோட்ஸ்.., அவருக்கு பிந்தான் இப்படி ஒரு பணியே வெளியே தெரிய வந்தது.


12) பிடிக்காத களத்தடுப்பாளர்-  கெட்டவார்த்தை பேசும் எல்லாரும்

13) பிடித்த ஆல்ரவுண்டர்- எனக்குத் தெரிந்து இந்தப் பெயருக்கு சொந்த காரர்கள் இருவர்தான். கபில்தேவ், இம்ரான்கான். அவர்களில் கபில் மிகவும் பிடித்தவர்,  சோபர்ஸ் முதல், யூசுப் பதான் வரை பலரையும் ஆல்ரவுண்டர் என்று சொன்னாலும் அவர்கள் எல்லாம் இரண்டு துறையிலும் முன்னிலை வகிக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டூம். அப்புறம் மனோஜ் பிரபாகர், ரவி சாஸ்திரி எல்ல்லாம் ஆல்ரவுண்டர் பேட்ஜ் கேட்டு போராடுவார்கள்.


14 & 15) பிடித்த நடுவர் & பிடிக்காத நடுவர்

இந்தக் கேள்வியை வன்மையாக கண்டிக்கிறேன்.


16) பிடித்த நேர்முக வர்ணனையாளர்-

17) பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்-   நமக்கு ஆங்கிலமும் புரியாது, இந்தியும் தெரியாது. இதில் எதைவைத்து பிடித்த, பிடிக்காத என்றெல்லாம் சொல்வது. 


இருந்தாலும் மந்திரா பேடியை பிடிக்காது என்று யாராவது சொல்ல முடியுமா?


18) பிடித்த அணி-  நியூசிலாந்து 


பிண்ணனியில் -  என்னண்ணே இது.


இனி எல்லாமே இப்படித்தான்.


19) பிடிக்காத அணி-  தென்னாப்பிரிக்கா


சுத்தமாக முதுகெலும்பே இல்லாத அணி. பல நேரங்களில் ஹன்சி குரேன்யேவின் ஆவியின் அறிவுரைப் படி ஆடுகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பிக் கொண்டே இருப்பார்கள்.


20) விரும்பிப் பார்க்கும் அணிகளுக்கான போட்டி


இங்கிலாந்து ஆஸ்திரேலியா


21) விரும்பாத அணிகளுக்கான போட்டி-  ஒருத்தனை போட்டு மொத்து மொத்துன்னு மொத்திட்டு ரொம்ப நல்லவன்னு அவார்டு குடுக்கற எல்லாப் போட்டிகளும்..,


22) பிடித்த அணித்தலைவர்-  அர்ஜூன் ரணதுங்க..,   சின்ன பசங்கள பெரிய ஆளாக்கியவர். 


23) பிடிக்காத அணித்தலைவர்- ஐந்தரைப் பெட்டி நிறைந்திருந்தால் அறியாதவளும் கரி சமைப்பாள் என்ற பழமொழிக்கேற்ப சிறந்த ஆட்டக்காரர்களை வைத்துக் கொண்டு  பெரிய கேப்டன் என்று பேட்ஸ் போட்டு சுற்றிக் கொண்டிருந்த ரிக்கிபாண்டிங். அவரது திறமை, இப்போது வெளியே தெரிந்து கொண்டிருக்கிறது.


24) பிடித்த போட்டிவகை- கிரிக்கெட் என்றாலே அது டெஸ்ட்தான். ஒண்டே என்பது  சிற்றுண்டி போன்றது. 20-20 என்பது ஃபாஸ்ட் ஃபுட் அது விரைவில் 10-10, 5-5 என்று ஆகி ஒத்தைக்கு ஒத்தை ஆகி கடைசியில் காசு சுண்டும் சூத்தாட்டமாகக் கூட மாறலாம். அப்படி மாறினாலும் பக்கத்தில் அழகிகளை ஆட விடுவார்கள். 


25) பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி-  ஹேய்ன்ஸ்,கிரினிட்ஜ்



26) பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி- ரவி சாஸ்திரி- மனோஜ் பிரபாகர்


27) சிறந்த டெஸ்ட் வீரர்-  ரீச்சர்ட் ஹாட்லி..,



28) கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்-  


லாரா  , அவர் வேறு ஏதாவது நாட்டில் பிறந்திருந்து அல்லது அவர்களது கிரீக்கெட்போர்டு  கொஞ்சமாவது கருணையோடு இருந்திருந்தால் இந்த மனிதர் சாதனைகளை குவித்து தள்ளியிருப்பார். ஆனால் ஐயோ பாவம்..,  


இந்த நிலையிலும் சாதனைகளை குவித்த ஜாம்பவான்.


இது இல்லாமல் நான் சேர்க்க நினைக்கும் கேள்வி:


உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பரிதாப கரமான கேப்டன். 


1. அவரது மிக இளவயதில் கேப்டன் ஆனவர்.


2.அவரது அணியில் பிரதான பந்துவீச்சாளர்களே இருந்ததில்லை.


3.அணியில் அவர் மட்டுமே மட்டைபிடிப்பாளர். பிற்காலத்தில் அவரது அணியிலிருந்து நல்ல மட்டையாளர்கள் உற்பத்தி ஆனார்கள். 


4ஒவ்வொரு முறையும் அப்போதைய சிறந்த அணியை அவர் நாட்டிலேயே  எதிர்கொள்ள அனுப்பப் படுவார்.


5.அணியிலிருந்த மற்ற வீரர்கள் எல்லோரும் பெரிதாக வெட்டி முறித்தது போல இவர் மட்டும் ஒழுங்காக ரண் எடுக்காதது போல பேசப் படுவார்.


6. அப்படியே அவர் எடுத்தாலும், அவர் ரன் எடுத்ததால்தான் அணி தோற்றதாக பத்திரிக்கைகள் எழுதுவார்கள். அவர் ரன் எடுக்காவிட்டாலும் அணி தோற்றுத்தான் போயிருக்கும்.


7.அவரது கேப்டன் திறமை சரியில்லை என்று கூறி ஏற்கனவே அணியைவிட்டு நீக்கப் பட்டவரை மீண்டும் அணிக்கு தலைவராக கொண்டுவருவார்கள். (அணீயில் இருக்கும் மற்றவர்கள் நிலமை அப்படி)


8.அவரது அணியிலிருந்து முக்கியத்தூண்கள் சூதாட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள்.


9.அவரது துணைத் தலைவர் பிற்காலத்தில் தலைவராக ஆக்ரோஷமான தலைவராக பேர் எடுத்தவர்.   இவரின் பந்துவீச்சுத்திறமையை சுத்தமாக குழி தோண்டிப் புதைத்தவர்.


10. அந்த பரிதாபகரமான கேப்டனே அதை மறக்க நினைப்பார் என்பதால் அந்த பரிதாபகரமான கேப்டன் கேள்வியை தொடருக்கு சேர்க்கவேண்டாம் என்று  விட்டுவிடுவோம்.  


இந்தத் தொடரைத் தொடர


இன்கம்ப்ளீட் மேன் மற்றும் மகி ஆகியோரை அழைக்கலாம்.

Wednesday, February 24, 2010

சாளுக்கிய நாட்டு ராஜகுமாரிக்கு ராஜ தந்திரம் தெரியாதா? என்ன?

சென்ற இடுகையில் சில வசனங்களைக் கொடுத்து படங்களைக் கேட்டிருந்தேன். பெரும்பாலான படங்களை நண்பர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால்



நான் லீகலுக்கு லீகல் இல்லீகலுக்கு இல்லீகல்


கொக்கு பறக்கும்: குருவி பறக்கும்: புறா பறக்கும்  பாருங்கள் வீரர்களே புலி பறக்கிறது இங்கே.., புலி பறக்கிறது இங்கே..,




ஆகிய இரு வசனங்கள் மட்டும் மக்கள் கண்டுபிடிப்பதில் சிரமப் படுகிறார்கள் அவர்களுக்கான சில க்ளூக்கள்.



லீகலுக்கு லீகல் இல்லீகலுக்கு இல்லீகல் வசனம் யாருக்குமே நினைவுக்கு வரவில்லையா..,

அடிக்கு அடி,  உதைக்கு உதை

இது நான் படிக்கும் காலத்தில் எல்லா மாணவர்களாலும் உபயோகப் படுத்தப் பட்ட வசனம். பத்திரிக்கையாளர் சந்திப்பில்  ஒரு ஐ.எஃப், எஸ் ஆபிசர் பேசுவாருங்க...,

பச்ச புள்ள நிலாவ புடிக்க ஆசப்பட்ட மாதிரி அந்த ஐ.,எஃப்,எஸ் ஆபிசருக்கு இப்படி ஒரு ஆசை


========================================================================

சாளுக்கிய தேசத்துக்கும், சோழ தேசத்துக்கும் நடைபெறும் யுத்தம், அந்த யுத்தத்தில் சாளுக்கிய தேசம் தோல்வி அடைகிறது. சோழர்களின் க்கொடி ஏற்றப் படுகிறது. சாளுக்கிய மன்னரும் இளவரசியும் கைது செய்யப் படுகிறார்கள். கொடி ஏற்றப் பட்ட உடன் துணைத் தளபதி ஆற்றும் உறையின் ஒரு பகுதிதான் 3ம் எண் வசனம்.

வழக்கின்போது சாளுக்கிய இளவரசியின் வாதத் திறமையால் நெகிழ்ச்சியடைந்த சோழப் பேரரசர் இருவரையும் விடுதலை செய்து நண்பர்களாக ஏற்றுக் கொள்கிறார். துணைத்தளபதிகள் இருவர் சாளுக்கிய அரசியை திருமணம் செய்ய ஆசைப் படுவதால் வாள்போர் எடுக்கிறார். அப்போது துணைத் தளபதி கருணாகரன் எடுக்கும் சபதம் மிகப் பிரபலமானது. போரில் கருணாகரன் வெற்றி பெற சாளுக்கிய இளவரசி தானே வாளினை எடுத்துக் களம் புகுகிறாள்.

பொம்பள சண்டை போட போறா, வெக்கமா இல்ல, போய் சேலையை வாங்கிக் கட்டிக்க என்று சொல்லி தளபதி வல்லபனை தூண்டி விடுகிறார். சோழ இளவரசர். இளவரசர் மிகவும் சிறுவர் பி.யூ.சின்னப்பாவின் புதல்வர் ராஜாபகதூர் நடித்திருப்பார்...,

போரில் வல்லபர் வெல்ல துணைத்தளபதி கருணாகரன் தனது சபதத்தை நிறைவேற்ற துடிக்க.., சாளுக்கிய தேச ராஜ குமாரியை தளபதி வல்லபருக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

தளபதி கருணாகரன் சாளுக்கிய இளவரசியை கடத்த முயற்சி செய்யும் போது சோழ மன்னரின் வளர்ப்பு மகள் மங்கம்மா அதில் சிக்கிக் கொள்வார்.

மங்கம்மாளிடம் ப்சப்பு வார்த்தைகள் பேச அதை மங்கம்மா, வல்லபர் மட்டுமல்லாமல் சோழப் பேரரசரும் நம்பி விடுகிறார்கள். வல்லபர் சாளுக்கிய இளவரசி திருமணத்துடன் கருணாகரன் - மங்கம்மா திருமணமும் நடைபெறுகிறது.


அடுத்த் ஆண்டு இரண்டு தம்பதியினருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. சோழப் பேரரசர், இளவரசர் சுந்தரருக்கு பட்டம் சூட்டி ஆட்சி அதிகாரத்தை தளபதி வல்லபருக்கு கொடுத்துவிட்டு புனிதச் சுற்றுப் பயணம் செல்கிறார்,  எல்லையில் வனவிலங்குகள் தொல்லை அதிகம் இருப்பதாக தகவல் வர அவைகளை அடக்க வல்லபர் செல்கிறார்.

 சதிவேலைகள் அரங்கேறுகின்றன. விளையாட்டாக மகுடி எடுத்து சுந்தர இளவரசர் ஊத நிறுத்தியவுடன் அவரைக் கொத்துகிறது. அதற்கு முன்னர் சாளுக்கிய இளவரசி சுந்தரனுக்கு பால்சோறு ஊட்டுகிறார்.

இளவரசர் மயக்கமடைந்த உடன் ஏற்படும் குழப்பத்தில் பாலில் விஷம் கலக்கப் படுகிறது. அரண்மனை வைத்தியர் பாம்பு கடித்த காயத்தை உறுதிப் படுத்துகிறார். அதே நேரத்தில் பாலில் விஷத்தையும் உறுதி படுத்துகிறார்.

பாலிலே விஷம், பாம்பு கடித்தது போன்ற காயம்.

 அரண்மனைக்குள்ளே அத்தனை காவலையும் மீறி அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை விட்டிவிட்டு இளவரசரை மட்டும் பாம்பு கடித்தது என்பதை ஏற்க இளைய தளபதி  கருணாகரன் ஏற்க மறுக்கிறார்.

ஊசிமுனையால் குத்திவைத்துவிட்டு ஊராரே நம்புங்கள் என்றால் யார் நம்புவாகள் என்று எள்ளி நகையாடுகிறார்.

சாளுக்கிய நாட்டு ராஜ குமார்ரி தந்திரமாக இளவரசனைக் கொன்றுவிட்டதாகச் சொல்லி அவரை கைது செய்கிறார்.

எல்லைக்குச் சென்ற வல்லபர் அது போலிப் புகார் என்பதை அறிந்து உடனேதிரும்புகிறார், அங்கே அவரை கொல்ல முயற்சி நடக்கிறது, ஆனால் தப்பி விடுகிறார். அரண்மனை திரும்பிய உடன் நிலையை அறிகிறார், இளைய தளபதி கருணாகரனுக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட இளவரசரின் பிணத்துடன் தப்பி விடுகிறார். மற்றொரு வைத்தியரிடம் பரிசோதனை செய்கிறார்கள். அவர் உயிர் ஊசல் ஆடுவதாகவும் சொல்கிறார்கள் . முட்டை, பால் போன்றவை வைத்து ம்குடி ஊதப் படுகிறது ஊரில் உள்ள பாம்புகள் வந்து முட்டை பால் ஆகியவற்றை குடித்துச் செல்ல இளவரசரைக் கடித்த பாம்பு பொழுதுசாயும்வரை வராமல் இருக்கிறது.  வல்லபர் மகுடி ஊத இளவரசரைக் கடித்த பாம்பு வந்து விஷத்தை உறிஞ்சுகிறது. இளவரசர் பிழைத்துக் கொள்கிறார்.


நாட்டுக்குள் வரும் வல்லபரை கைது செய்து விடுகிறார்கள். அவரது கண்கள் குறுடாக்கப் படுகிறார். மீண்டும் வல்லபர் தப்பி விடுகிறார்.  மக்களோடு சேர்ந்து தாயத்து விற்று ஆதரவு திரட்டுகிறார்.

சிறையில் இருக்கும் சாளுக்கிய இளவரசிக்கு கடும் துன்பங்களைக் கொடுத்து தனது ஆசைக்கு இணங்க வைக்க முயற்சிக்கிறார். இளைய தளபதி. அதிகாரத்தைக் கைப்பற்றி தன்னைச் சோழ மன்னராக அறிவித்துக் கொள்கிறார்.  சாளுக்கிய இளவரசி ஆசைக்கு இணங்காவிட்டால் மறுநாள் அவளது குழந்தையை கொண்டுவிடுவதாக அறிவிக்கிறார்.

இதுவரை சாளுக்கிய இளவரசி மீது சந்தேகக் கண் கொண்டு பார்த்துவந்த மங்கம்மாவுக்கு தன் கணவன் மேல் சந்தேகம் வருகிறது, புர்கா அணிந்து வேலைக்கு வரும் வசந்தாவைப் போன்று அவரும் புர்கா அணிந்து சிறைச்சாலைக்குச் செல்கிறார். தனது குழந்தையை , சாளுக்கிய இளவரசியின் குழந்தைக்க்கு மாற்றாக வைக்க மங்கம்மா-கருணாகரனின் குழந்தை , துணைத் தள்பதி கருணாகரனால் கொல்லப் படுகிறது.

தாயத்து விற்றுக் கொண்டுஇருக்கும் குருட்டு வல்லபர் மீண்டும் சிறைப்பிடிக்கப் படுகிறார்.  வல்லபர் சாளுக்கிய இளவரசி இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப் படுகிறது. பக்கம் பக்கமாக வசனங்கள் சாளுக்கிய இளவரசியால் பேசப் படுகிறது.

குருட்டு வல்லபரும் சாளுக்கிய இளவரசியும் தட்டுத்த்டுமாறி சந்திக்கும் காட்சியை ஏளனம் செய்கிறார் கருணாகரன்.

பாருங்கள் வீரர்களே பாருங்கள். கூட்டுப் புலியும், காட்டுக்கிளியும் கொஞ்சி மகிழ்வதை பாருங்கள் வீரர்களே பாருங்கள் என எள்ளி நகையாடுகிறார்.

குழந்தையைக் கொன்றுவிட்டதை பெருமையோடு சொல்ல வல்லபர் பொங்கி எழுகிறார். அவர் குருடர் இல்லை என்பதையும் எப்படித் தப்பித்தோம் என்பதையும் சொல்லிக் கொண்டே அனைவரையும் அடித்து வீழ்த்துகிறார்.

சண்டையின் முடிவில் சோழப் பேரரசரும் தகவல் கிடைத்து மீண்டும் நாடு திரும்புகிறார்,. கருணாகரன் திருந்தி விட்டதாகக் கூறி மன்னிப்புக் கேட்கிறார், ஆனால் அவரது சபதத்தை நிறைவேற்றிக் கொள்கிறார். மங்கம்மாவுக்கு சிலை வடிக்கிறார்கள்.

இறுதியில் படம் சுபம்


ஒரே படத்தில் அனல் பறக்கும் வசனங்களும்  ஆவேசமான சண்டைக்காட்சிகளும் நிறைந்த படம் இது, படத்தின் பெயர் மற்றும் கருணாகரனின் சபதத்தை கண்டுபிடியுங்களேன்,

Monday, February 22, 2010

மன்னிப்புக் கேட்பதை விட...,(புதியது)

1. மன்னிப்புக் கேட்பதைவிட மரணமடைவதே மேல்

(உன் மாதா கோழையின் மகளாகப் பிறக்கவும் இல்லை: கோழைக்கு மனைவியாக ஆகவும் இல்லை. கோழையை மகனாகப் பெறவும் இல்லை)

2.இந்த அரியானைக்குத் தேவை நான் சொன்னதைக் கேட்டு நடமாடும் ஒரு பொம்மை.

3. கொக்கு பறக்கும்: குருவி பறக்கும்: புறா பறக்கும்  பாருங்கள் வீரர்களே புலி பறக்கிறது இங்கே.., புலி பறக்கிறது இங்கே..,

பாத்திரம் ஒன்று: உன் முன்னாள் நிற்பவன் சோழ நாட்டு மன்னன்,

பாத்திரம் இரண்டு: மன்னன் மக்கள் தந்த பட்டமா! இல்லை மன்னன் பெற்ற செல்வமா?

4. காஞ்சு போன நதியெல்லாம் கங்கையைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த கங்கையே காஞ்சி போய்ட்ட்டா?

5. அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நீங்க! அக்காளும் அத்தானும் அங்கே. ஆசைக்குறிய கண்ணம்மா இங்கே! கிளி மாதிரி பொண்ணு  கிட்டப்போனா புலி மாதிரி பாயறா!  அடப் போயா சிரிக்காம என்ன பண்றது

(அதே படத்தில் இன்னொரு வசனம்.  பாத்திரம் 1 : நான் பெற்ற அனைத்து வெற்றிகளும் இந்த ஒரு தோல்வியில் ஒருதெரியாமல் ஆகிவிட்டதே)


6. பாத்திரம் 1: அம்மா எங்க

பாத்திரம் 2 அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க

பாத்திரம் 1 : அப்ப இது.., (அந்த அரண்மனைக்குள்ளேயே இருக்கும் சின்ன கோவிலைக்காட்டி)

7. பீம்பாய் பீம்பாய் அந்த லாக்கரிலிருந்து ஆறு லட்சத்த எடுத்து இந்த அவினாசி நாய் முகத்தில வீசு பீம்பாய்

8.அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..,

9.நான் லீகலுக்கு லீகல் இல்லீகலுக்கு இல்லீகல்

10.என்னண்ணே இதெல்லாம்..,
இனிமேல் எல்லாம் இப்படித்தான்..,


இதெல்லாம் தமிழில் வந்த வசனம்தானுங்கண்ணா.., ஏந்தப் படம் ன்னு உங்களால சொல்ல முடியுமுங்களா...,

Sunday, February 21, 2010

நான் ஒண்ணுமே பண்ணலயே (புனைவுதான், அனுபவமல்ல)

வயதுப் பெண் ஒருத்தி, கல்லூரி மாணவி, அதுவும் தீஃபக் குமாருடன் சூடான கிசுகிசுவில் இருப்பவள் பேசிக்கொண்டே மயக்கம் போட்டு விழுந்தவுடன்  சவீதாவுக்கு ஏதேதோ நினைவுகள் வந்தன. உங்கள் நினைவுக்கு ஒன்றும் தோன்றவில்லை என்றால் இந்தச் சுட்டியைத் தட்டுங்கள் ஏதாவது தோன்றும்.

சே.., சே அதெல்லாம் இருக்காது.

சவீதாவுக்கு சுமித்ராவின் மீது நம்பிக்கை இருந்தாலும் தீஃபக் குமாரின் மீது இல்லை. என்னடி பண்ணலாம்.

எனக்கு தீஃபக் குமாரைப் பத்தித் தெரியும். இதுலயெல்லாம் அவன் நல்ல தற்காப்போட தான் இருப்பான்.இது தோழி.

தோழியை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே சுமித்ராவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள். (ஏற்கனவே சுமித்ரா மயக்கம் போட்ட கதையை அறிந்து கொள்ள இந்தச் சுட்டி உதவும்.)


மயக்கம் தெளிந்த சுமித்ராவின் கண்கள் கலங்கியிருந்தன. தெளித்திருந்த தண்ணீரின் புண்ணியத்தில் முகம் முழுவதுமே நீர் திவளைகள் தேங்கியிருந்தன.

என்னடி இப்படிப் பண்ணிட்ட.., இது சவீதா


அப்படியெல்லாம் ஒண்ணும் பண்ணியிருக்க மாட்டாடி  நீ கொஞ்சம் சும்மா இருக்கியா...............,

நான் ஒண்ணுமே பண்ணிலடி.

நான் சொல்லல, இவ ஒன்னும் தெரியாத பாப்பாடி

இவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சுமித்ராவிக்கு புரியாவிட்டாலும் சவீதாவிற்கும் சவீதாவின் தோழிகளுக்கும் நன்றாகவே புரிந்துதான் இருந்தது.

அந்த ஆளு கூட நான் ஃபோட்டாவெல்லாம் எடுத்துக்கவே இல்லடி.  நெஜமாவே நீங்கெல்லாம் பாத்தீங்களாடி.

இப்போதும் சவீதாவுக்கு சுமித்ரா மயக்கம் போடும் முன் நடந்து கொண்டிருந்த பேச்சுக்கள் நினைவுக்கு வந்தன, அதே நேரத்தில் மீண்டும் அவளுக்கு அதன் தொடர்ச்சியும் எண்ண ஓட்டத்தில் வந்துகொண்டேதான் இருந்தது.

நீங்க ரெண்டுபேரும்  அன்றைக்கு பொருட்காட்சியில் சுத்துனது எல்லோருக்கும் தெரியும். பொருட்காட்சியில்தான் நீங்கள் இருவரும் ஜோடியாக உரசிக்கொண்டு நடந்து வருவது படத்தில் நன்றாகத் தெரிகிறது.

நாங்க ஜோடியாவெல்லாம் போகலப்பா..,

அவன பொருட்காட்சி வாசல்லதான் பார்த்தேன். பொருட்காட்சி எப்படி போகுது?  கலெக்சன் எப்படி? எந்த ஸ்டால் நல்லாயிருக்கும்னு பொத்தாம் பொதுவா கேட்டுகொண்டு இருந்தான். நம்ம ஸ்டால் முடிஞ்ச பிறகு நான் நம்ம ஸ்டால்லயே இருந்திட்டேண்டி.உருகும் மனிதன், பேசும் தனித்தலை  
நிகழ்ச்சி முடியும்வரை நான் அங்கேயேதான் இருந்தேன் இது எல்லோருக்கும் தெரியும்.

சரி சரி.., நீ நடந்துவந்த கொஞ்ச நேரத்தில அந்த புகைப்படம் எடுத்து இருப்பாங்க போல.., அப்புறம் ஏண்டி அந்த உரசு உரசிக்கிட்டு வர்ர..,

உரசிட்டு எல்லாம் வரலேப்பா..,  கூட்டத்தில பேசுனது கேட்கல அதுனால் கொஞ்சம் பக்கத்தில நடந்து வந்தேன். என்னப் பத்தி உனக்குத் தெரியாதா?

படத்தில பார்க்க அப்படியெல்லாம் தெரியல.., ரெண்டு பேரும் நெருக்கமாக கொஞ்சிக்கிட்டு வர்ரமாதிரி இருந்துச்சு..,

நெருக்கமாக என்று சொல்லும்போதே தோழியின் குரல் ஒரு உருக்கம் காட்டியது,

இப்ப என்னடி பண்றது?

ஒண்ணும் பண்ண முடியாது.

பேசாம   டீன் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடலாமா?

பண்ணலாம்,  ஆனால் எல்லோரும் அந்த புகைப்படத்தை அப்படியே நம்புவாங்க, நீதான் காதலிச்சு ஏமாத்திறேன்னு சொல்லுவாங்க,,

ஏண்டி யர்ருக்குமே மனசாட்சி இருக்காதா?

ஆமா மனசாட்சி இருக்கிறதா சொல்றவங்க எல்லாம் நீதான் தீபக்குமாரை ஏமாத்தினதா சொல்லிட்டு இருப்பாங்க..,   

தீபக் குமார்தான் ரொம்ப மோசம்னு எல்லோரும் சொல்றாங்களே.., யாருமாடி என்ன நம்ப மாட்டாங்க..,

அவ்வளவு மோசமான ஆளையே காதலிச்சு பழம் கொடுத்த ஆளுன்னுதான் உண்னப் பேசுவாங்க

இப்ப என்னதான் செய்யறது?

யோசிப்போம், மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தாம போய்டுவானா?  அதுதான் உன் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே..,

தொடரும்====================>>>>>>>>>>>>>>>>


முந்தைய பாகங்களுக்கு இந்தச் சுட்டி
======================================================



=========================================================

Wednesday, February 17, 2010

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது..,

முன்னறிவிப்பு:- இந்தக் கதையில் லாஜிக் இருக்காது. செக்ஸ் நிறைய இருக்கும். தற்கால அவலங்களை சாடுவதாக அங்காங்கே வசனங்கள் வரும்.  முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக முயற்சி செய்ய பட்டிருந்தாலும் சில நேரங்களில் கொஞ்சம் கொடுமையும் வருவதால் மனம் திடமானவர்கள் மட்டும் படித்தல் நலம். ஆனால் இது ஆயிரத்தில் ஒருவனின் தழுவல் அல்ல..,
அதற்காக தமிழ்ப் படத்தின் தூண்டுதலும் அல்ல.., 
==============================================================  





Saturday, January 23, 2010

இது ஒரு ஃபாண்டஸி கதை

Tuesday, January 26, 2010

ஃபாண்டஸிக் கதையின் தொடர்ச்சி

  ஆகிய இரண்டு பகுதிகளையும் தொகுத்த மீள்பதிவாக தந்திருக்கிறேன். 


===========================================================

 

கொடைக்கானல் மலையுச்சியில் இருந்து கீழே பார்த்தால் அதல பாதாளத்தில் இருக்கும் ஒரு கிராமம் அது. அதற்காக மலையின் அடிவாரம் என்று நீங்களாக கணக்குப் போட்டுக் கொள்ளக் கூடாது. அந்த பாதாள லோகத்தில் ஒரு ஓட்டுச் சாவடி. அந்த மக்களுக்கு  ஓட்டுரிமை இருப்பதே தெரியாமல் வசித்து வருகிறார்கள். ஆனால் நூறு சதவிகிதம் ஓட்டுப் பதிவு ஆகிக் கொண்டு இருக்கிறது. அங்கே பணிக்கு வரும் அரசு அதிகாரி ஒருவர் இதைக் கண்டுபிடித்து விடுகிறார்.உடனே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி அந்த கிராம மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். உயர் அதிகாரிகளும் உடனே அதற்காக எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க அந்த கிராமத்திற்குச் செல்கிறார்  அந்த அதிகாரி. அத்தோடு காணாமல் போய் விடுகிறார்.

==================================================


அவரது தோழர் இன்னொரு அரசு அதிகாரி இருக்கிறார். அவர் சத்திய மங்கலத்திலிருந்து பணிமாறுதல் வாங்கிக் கொண்டு அந்த கிராமத்திற்குச் செல்கிறார். அவரும் காணாமல் போய்விடுகிறார்.


=====================================================


உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப் படுகிறது. சாட்டிலைட்டின் உதவியோடு ஒரு தங்கப் பேழையும் பட்டுத்துணிகளும் கண்டறியப் படுகின்றன. அந்தப் பட்டுத்துணிகளில் அந்த கிராமத்திற்குச் செல்லும் வழிகள் கண்டறியப் படுகின்றன. அவைகளில்   கொடுத்துள்ளப் படி அந்த கிராமத்திற்குச் செல்லும் வழியானது லண்டன் நகரத்திலிருந்து தொடங்குகிறது. பின்னர் கோவா வருகிறார்கள். கோவாவிலிருந்து புகை வண்டி மூலமாக சென்னை வந்து சென்னையிலிருந்து மதுரைவரை சாலை பயணமாகவும். பின்னர் வத்தலகுண்டுவரை மாட்டுவண்டிப் பயணமாகவும் வத்தலக் குண்டிலிருந்து கொஞ்சம் நடை ப் பயணம் சென்று பின்னர் காட்டுக்குள் கிடைக்கும் வழிகளெல்லாம் பயணித்தால் கிடைக்கும் வழிகள் மூலமாக அந்த கிராமத்திற்குச் சென்றடைய முடியும் என்பதாக அமைகிறது. அந்தக் காட்டுக்குள் வரும் மிருகங்கள் தரும் ஆபத்திலிருந்து தப்பிக்க அந்தக் காட்டுக்குள் பிறந்த ஒரு ஆளை பிடிக்கிறார்கள்.

குழுவில் முக்கியப் பொறுப்புகளில் உடல் வலிமைமிக்க பெண்கள் நியமிக்கப் படுகிறார்கள். அவர்களுக்குத் துணையாக கிராமத்தான் கம்புவீரன் நியமிக்கப் படுகிறான்.

கம்புவீரன்: ஒரு குவாலிஸ் எடுத்துக்களாம் சார். நேரா வத்தலக்குண்டு தாண்டி அந்த கிராமம் வரைக்கும் போயிடலாம். அப்புறம் எப்படின்னு அங்க விசாரிச்சுக்கலாம்.

முக்கிய பொறுப்பாளர்: இப்படி பொறுப்பில்லாம போய்த்தான் இரண்டு அரசு அதிகாரிகள் என்ன ஆனாங்கன்னே தெரியல. பேசாம பட்டுச் சுவடிய பின்பற்றுங்க..


கம்புவீரன்: அப்பிடியில்ல சார். எப்படியும் சுத்தி சுத்தி வத்தலக் குண்டுதானே வரப்போறோம். அப்புறம் ஏன்சார்.

மு.பொ. இதுக்குத்தான் படிச்ச பசங்கள வேலைக்கு வெக்கணும்கறது.  இத்தன பேர் ஆலோசனை பண்ணி போட்ட திட்டம் இது. அந்த கிராமத்துக்கு நாம நன்மை செய்தே தீர வேண்டும். அதுக்காக எவ்வளவு இடையூறு எவ்வளவு செலவு வந்தாலும் நாங்க கவலைப் பட போறதே இல்ல.

அந்தக் காலத்தில பல ஆராய்ச்சிகள் செய்து நம்ம முன்னோர் கண்டுபிடிச்ச பட்டுப் பத்திரம்  இது. காரணம் இல்லாம எதையும் சொல்லி இருக்க மாட்டாங்க. நீங்க பேசாம ஃபாலோ பண்ணுப்பா..,

இல்லேன்னா மக்காச்சோளவீரன் தயாரா இருக்கான். அவனைக் கூட்டிட்டுப் போய்விடுவோம்.

கம்புவீரன்:- என்னமோ போங்க.., நல்ல சம்பளம் கொடுக்கறீங்க.., செய்வோம்

=======================================================================

லண்டன் மாநகரில் அவர்களுக்காக பாய்மரக்கப்பல் தயாராக இருக்கிறது.

கம்புவீரன்: யோவ் என்னய்யா இது.., இப்பல்லாம் போக்குவரத்து பயங்கர வேகம்யா.., இப்பப் போய், பாய்மரப் படகு, நீராவி எஞ்சின் அப்படின்னு..,

முக்கியப் பொறுப்பாளர்:-  கம்புவீரா., நீ இப்ப டம்மி பீஸு, வத்தலக் குண்டு வந்த பிறகு தான் உன் வேலை ஆரம்பிக்கும். அதுவரை அடக்கிவாசி

================================================================
கப்பலில் கேப்டன் தனித்தன்மை வாய்ந்த உடையுடன் இருக்கிறார்.

மு.பொ.:- கப்பலை நேராகச் செலுத்துங்கள்

கேப்டன்:- சார் நேரா போனா மேற்கிந்திய தீவுகளுக்குத்தான் போகும். அந்த வழியில போனா என்ன ஆகும்னு அமெரிக்கோ வெஸ்புகி சொல்லிட்டாரு.

மு.பொ. :- எங்க நாட்டுல ஒரு கிராமமே என்ன ஆச்சுன்னு தெரியல, உனக்கு வரலாற்று நக்கல் கேட்குதா போய்யா , சொன்ன வேலையை மட்டும் செய்.

====================================================================

படகு போகும் வழியில் கப்பலின் கேப்டன் முக்கிய பெண் அதிகாரியைப் பார்த்து ஜொள் விட்டுக் கொண்டே வண்டியை ஓட்ட கப்பல் ஒரு பெரிய பனிப் பாறையில் முட்டி பாய்மரங்கள் எல்லாம் சேதாரம் ஆகிவிடுகின்றன. கப்பலில் இருந்த முக்கிய பணியாளர்கள் இறந்து விடுகிறார்கள்.  சில பெண் அதிகாரிகள் மற்றும் கம்புவீரன் ஆகியோர் மட்டும்  பக்கத்து தீவுக்குள் கரை ஒதுங்குகிறார்கள்.

அந்த தீவில் கறுப்பாக ஆஃப்ரிக்க தேசத்தவர் போன்ற தோற்றம் கொண்ட மக்கள் சிலர் இருக்கிறார்கள்.  அவர்கள் இவர்களை கைது செய்து அவர்களின் தலைவன் முன்னாள் நிறுத்துகிறார்கள்.

தலைவன்:- ஆஹா.., நம் வம்சம் விருத்தி செய்ய சிறந்த பெண்கள் இவர்கள்தான். நாளை பூஜை நடக்கட்டும்.

மூவரும் நடுமைதானத்தில் கட்டிவைக்கப் பட்டிருக்கிறார்கள்.  பல நூறு ஆண்கள் நிர்வாணமாக மது அருந்திய படி பூஜை நடக்கிறது. .....................,
..............................................,
................................                            .......................              ..........................


...............................................................,







...........................



........................................( நடப்பதை எல்லாம் எழுதினால் ஓ.எஸ். கரப்ட் ஆகிவிடும் அபாயம் இருப்பதால் வெறும் புள்ளிகள் மட்டும் வைக்கப் பட்டுள்ளன)


இந்த நேரத்தில்  கட்டை அவிழ்த்துக் கொண்ட கம்புவீரன்  உடன் இருக்கும் பெண் அதிகாரிகளுடன் அந்த இடத்தைவிட்டு தப்பி விடுகிறான்.  தனது உடையை இரண்டாக கிழித்து அவர்களை அணியச் சொல்லி விடுகிறான்.  அங்கிருந்து பறக்கும் ஒரு பெரிய பறவையின்  காலில்  கம்புவீரன் தொங்க அவரது இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு  பெண்கள் தொங்க  பெரிய பறவை பறந்து வந்து  ஓரிடத்தில் போட்டு விடுகிறது.

எந்த இடம் என்றே தெரியவில்லையே..,

கொஞ்ச தூரம் நடந்து போவோம்.  எதாவது தென்படுகிறதா பார்ப்போம்.

சொல்லிய படியே மூவரும் நடந்து அந்தக் காட்டுக்குள் செல்கிறார்கள். போகும் வழியில் அவர்களது வழியைக் குறுக்கிடும் யானையை அடித்து தோலை உரித்து ஆடையாக அணிந்து கொண்டு நடக்கிறார்கள். ஓரிடத்தில்  ஒரு திசை காட்டி கிடக்கிறது.  அதில் வத்தலகுண்டு 30 கி.மீ. என்று எழுதப் பட்டு உள்ளது. ஆனால் அதை கவனிக்காமல் அவர்கள் போய் கொண்டு இருக்கிறார்கள்.

உள்ளே செல்லச் செல்ல  ஒரு பாறை தென்படுகிறது.  அந்தப் பாறைக்கு அருகில் ஏதாவது கிடைக்கிறதா என்று கம்புவீரன் பார்க்க உள்ளே இரு நாகரீக மனிதர்கள் தென்படுகிறார்கள். அவர்களிடம் பேச கம்புவீரனுடன் வந்த பெண்கள் முற்படுகிறார்கள்.

அப்போது அந்த மனிதர்கள் தங்களை கவுரவர்கள் சிறை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

என்ன கவுரவர்களா..,

ஆமாம். பாரதப் போரின் முடிவில் உயிர்பிழைத்த கவுரவர்கள் இந்தப் பகுதியில் குடியிருப்பதாகவும் நல்ல செய்தி கிடைத்தால் திரும்பவும் பாரத தேசத்திற்கு திரும்பலாம் என்று இருப்பதாகவும் தங்களை பாண்டவர்களின் ஒற்றர்கள் என்று கைது செய்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவுரவர்களின் மன்னன் 110 ஆம் துரியோதனன் அங்கு வந்து மூவரையும் கைது செய்கிறான்.

==================================================================


இனி இரண்டாம் பாகம்

=============================================================
கவுரவர்களின் மன்னன் 110ஆம் துரியோதனன் நேரடியாக வந்து கம்பு வீரனையும் அவனோடு வந்த பெண்களையும் ( அதிகாரிகள்) கைது செய்து  கொழுமண்டபத்திற்கு கொண்டுவருகிறார்கள்.

 கொழு மண்டபத்தில் குற்றவாளிக்கூண்டில் ஏற்கனவே காணாமல் போன  இரண்டு அரசு அதிகாரிகளும் ஒரு கூண்டில் நிற்க  கம்பு வீரனோடு வந்த மற்ற பெண்கள் ஒரு கூண்டில் அமர்ந்திருக்க  12203வது வது கர்ணன்  ( கர்ணனின் மகன் போரிலேயே இறந்துவிட்டதாக சிலர் பேசலாம். ராஜவிசுவாசிகள் பலருக்கு கர்ணன் எனப் பெயரிடப் படுவதை இங்கு பதிவு செய்துவிடுவோம் ) பேச ஆரம்பிக்கிறார்.

மகாராஜாவுக்கு வந்தனம்.  சென்ற யுகத்தில் உங்களுக்கும் உங்கள் தந்தைகளுக்கும் நடந்த கொடுமை சரித்திரம் அறிந்ததே..,

மூத்தவருக்கே நாடு சொந்தம் என்பது பரம்பரை பரம்பரையாக  உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் பட்ட நடைமுறை.

ஆனால் கிருஷ்ணனின் தூண்டுதலின் காரணமாக  தங்கள் முன்னோர் திருதராஷ்ட்டிரனின் தம்பி பாண்டுவின் மைந்தர்கள்  நாட்டை துண்டாடச் சொன்னார்கள். அவர்களுக்காக கிருஷ்ணரே போர் களத்தில் இருந்தார். என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் கிருஷ்ணரின்  படைகள் நம்மோடுதான் இருந்தன என்பது அனைவருக்கும் தெரிந்ததே..,

பாண்டுவின் மைந்தர்களின் செய்த சதிகளை பல வழிகளில் முறியடித்த தங்கள் முன்னோர்களால்  போரைத் தவிர்க்க முடியவில்லை. அபகரிக்க முடியாத சூழலில் நாட்டைத் துண்டாட நினைத்ததும், சில ஊர்களை மட்டுமாவது தனியாக பிரித்து பிரிவினை செய்தே தீரவேண்டும் என்று கிருஷ்ணரின் துணையோடு சதிவகைகள் செய்ததை இன்றைய மக்கள் திரைப்படம் மூலமாவது தெரிந்தே இருக்கிறார்கள்

கைது செய்யப் பட்டுள்ள அதிகாரி:

திரவுபதையை உங்கள் முன்னோர்கள் கையைப் பிடித்து இழுத்ததால்தான் அனைவரும் வெகுண்டு எழுந்து வன்மம் கொண்டாட வேண்டியதாகப் போயிற்று.

12203வது கர்ணன்:  கவனியுங்கள். தம்பிகளின் மனைவி யாரையும் அவர்கள் அவமதிக்க வில்லை. சகோதர்களின் பொதுவான மனைவியை மட்டுமே அவர்கள் சபைக்கு அழைத்திருந்தனர்.

இன்னொரு அதிகாரி:

அதனால் நீங்கள் செய்தது சரியாகிவிடாது. இ.பி.கோ 376ன் படி கண்டிப்பாக தண்டனைக்குரிய குற்றம் அது.

12203வது கர்ணன்:

அதெல்லாம் நடந்து முடிந்த பிரச்சனை.  பாண்டவர்களின் வம்சத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளையும் இப்போது கைது செய்தாயிற்று.

அவர்களின் வழிவந்த   பெண் அதிகாரிகள் இருவரையும் கைது செய்தாயிற்று. 

இவர்களை அழித்துவிட்டு நம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பாரத தேசம் முழுவதும்  100 கிராமங்களில் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்டால்  இந்த பாரத தேசமே மீண்டும் தங்கள் ஆட்சியின் கீழ் வந்துவிடும்.

===================================================

இரண்டு பெண்களும் மன்னரிடமும் தளபதியிடமும் தனியே பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். தனியே பேசுவதை சபையினர் முணுமுணுத்தலாக எதிர்த்தாலும்  நேரடியாக சொல்ல் யாருக்கும் தைரியம் வரவில்லை.

முக்கிய அலுவல்கள் இருப்பதால் அதை முடித்துவிட்டு  மாலை நேரத்தில் சந்திப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு  சென்று விடுகிறார்கள்

=========================================================

மன்னர் துரியோதனனும் தளபதி கர்ணனும்  ஆயுதசாலைக்குச் செல்கிறார்கள். முக்கிய கேந்திரத்தில் உள்ள கண்ணாடி அறைக்குச் செல்ல அங்குள்ள மாயக்கண்ணாடிகள் மூலமாக மீதமுள்ள 99 கிராமங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார்.  மறைமுகத் தாக்குதலுக்கு இதுவே சரியான சமயம் என்றும் அனைவரும் தயாராக இருப்ப அறிவுறுத்துகிறார்கள்.

================================================================

மாலையில் பெண்களை சந்தித்த மன்னரும் தளபதியும் மிகவும் குழம்பிப் போகிறார்கள். அவர்களுக்கு இடையே பலத்த சண்டை ஏற்படுகிறது.

பூட்டிய அறையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மற்றவர்கள் குழம்புகிறார்கள்.அறையில் ஏற்படும் அதிர்வுகள் மட்டும் மற்றவர்களுக்கு புலப் படுகிறது.

=============================================================

கம்புவீரன் முக்கிய கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து கட்டுப் பாட்டு அறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். இந்திய ராணுவ தளபதிகளை  தொடர்பு கொண்டு அனைத்து நிலையங்களைப் பற்றியும் தகவல் கொடுக்கிறார்.

இந்திய ராணுவம் அனைத்து கிராமங்களையும் சுற்றி வளைக்க வலிமைவாய்ந்த கத்தி மற்றும் கதாயுதங்களின் முன் ஒவ்வொரு குண்டாக போட்டுச் சூடும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு இந்திய ராணுவம்  அனைவரையும் வீழ்த்துகிறது.

உள்ளூரில் நடக்கும் சண்டையில் கம்புவீரன் அனைவரையும் அழித்துவிடுகிறான்.  கம்புவீரனின் கையில் சக்கர ஆயுதம் வந்து நிற்கிறது. கம்புவீரனையும் மற்ற பெண்களையும் கொண்டுவந்த சேர்த்த பெரிய வகை கருடன் அவர்களின் அருகில் வந்து அமர்கிறது. (மீண்டும் முதல் பகுதியில் வந்த கருடனை நினைவில் கொண்டுவந்துவிடுங்கள்)..

Saturday, February 13, 2010

ஐ லவ் யூ சொல்லியே ஆகணுமே..........,

பிப்பிரவரி 14 வருது. எப்படி ஐ லவ் யூ சொல்லலாம்? எதாவது புதுசா யோசித்து செய்ய வேண்டும்.  ஆனால் ஒண்ணுமே புதுசா தோணவே மாட்டாங்குதே.

ஒரு நாள் பூரா யோசிச்சி பார்த்தாச்சி. ம்........   ஏதாவது புதுசா டிரஸ் வாங்கிக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லலாமா? ஏற்கனவே கலர் கலரா டிரஸ் வெச்சிருக்கா!

புடவையெல்லாம் ஒரு முறை கட்டினத ரெண்டாவது முறை கட்டுவாளான்னே தெரியல.  ஒரு வேளை வாடகைக்கு ஏதும்  டிரஸ் எடுக்கறாளோன்னு கூட தோணும்.  தவிரவும் கொஞ்சம் காஸ்ட்லியாவே தெரியும்.  அதையெல்லாம் விட விலையுயர்ந்த உடையா வாங்கி அது புடிக்கலேண்ணா என்ன பண்ணலாம்?

எங்காவது வெளிய கூட்டிட்டுப் போய் ஐ லவ் யூ சொல்லலாமா? யோசிச்சி பார்த்தாச்சி. சன்னமா கேட்டும் பார்த்தாச்சி. ம்  சாயங்காலம் ஏதோ ஒரு அவங்க ஊர் பக்கம் போகணுமாம்.  அப்படியே வெளிய போனாலும் 9 மணிக்கு மேலே வெளிய சுத்தமாட்டா..,  இரவுக் காட்சி சினிமாவுக்கு போவதெல்லாம் கெட்ட பசங்க செயலாம் அப்படித்தான் அவங்க அப்பா அம்மா சொல்லியிருக்காங்களாம். கெட்ட பசங்களுக்குன்னு தனியா ஏதாவது காட்சிகள் சேர்த்து ஓட்டுவாங்களா என்ன?

நமக்குன்னு வந்து ..,  பார்த்த அன்னைக்கே தலய திருப்பிட்டு போயிருக்கலாம். குத்துவிளக்கு அது இதுன்னெலாம் தோணி.., சே...,   ஜாலியா என் ஜாய் பண்ண வழியில்லாம போச்சு. 

தங்கத்தில ஏதும் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணிடலாமா?  சுத்தம் பெண்ணீய கும்பல் இது. வளையல் கூட எப்பவாவது தான் போடும்.   ம் ஒருநாள் ஏதோ விழாவுக்கு நகையெல்லாம் போட்டுட்டு வந்தாளே.., நகை ஸ்டாண்டு மாதிரி.., அவகிட்ட இல்லாத நகை ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமா?  ம் கல்யாண் ஜ்வல்லரிக் காரனுக்குக்கூட தெரியுமான்னு தெரியல

ஏதாவது பண்ணி ஐ லவ் யூ சொல்லணுமே .  பேசாம கூகிள் போய் பார்ர்க்கலாமா? ஒண்ணும் புதுசா தெரியலயே இரவு முழுவதும் யோசித்து யோசித்து  எப்ப தூங்கினேன்னே தெரியல........................................






ஏங்க எந்திரிங்க..., ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா இப்படித்தூங்கிட்டு சீக்கிரம் எந்திரிங்க.., எவ்வளவு வேலை இருக்கு, மொதல்ல இந்த காஃபிய குடிச்சிட்டு ஒட்டடை அடிக்க ஆரம்பிங்க, வாரம் ஒருநாள் பண்றோம். அதையும் நேரங்காலத்தில பண்ண வேண்டாமா..,

வழக்கம்போல இந்த ஞாயிறும் கழியப் போகிறதா? ம் ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை..,

Wednesday, February 10, 2010

ஆந்திர அமைச்சர் ஆவேச கடிதம்- ஐ.பி.எல் அதிரடி துவக்கம்

ஐ.பி.எல் துவக்க விழா நடக்க இருந்த இடமான ஹைதராபாத் மற்றும் அங்கு நடக்க இருந்த போட்டிகளையும் ஐ.பி. எல் நிர்வாகம் மாற்றி விட்டதாக செய்திகள் கூறுகின்றன.

அதனால் ஆவேசமடைந்த ஆந்திர அரசு டெக்கான் சார்ஜர்ஸ் அணியை போட்டியிலிருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளதா செய்திகள் வந்துள்ளன.  இது பற்றி ஆந்திர விளையாட்டு அமைச்சர் திரு. வெங்கட் ரெட்டி  பிசிசிஐ தலைவர் திரு சரத் பவாருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. 



==================================================================

நமது கேள்விகள்:-

1. டெக்கான் சார்ஜர் ஆந்திர மாநில அணியா?

2. டெல்லி, பெங்களூரு, சென்னை போன்ற பெயர்களே இல்லாத அணியாக டெக்கான் சார்ஜர் திகழ்வதற்கு ஏதாவது காரணம் இருக்குமா?  இருக்கிறது என்றால் அந்த தீர்க்க தரிசி யார்?

3.  டெக்கான் அணி போடியிலிருந்து விலக மறுத்தால் ஆந்திர வீரர்களை மட்டும் விலக் சொல்லுவார்களா? அப்படியென்றால் டெக்கான் அணியிலிருந்து மட்டும் விலகுவார்களா? இல்லை மற்ற அணிகளிலிருந்தும் விலகுவார்களா?

4. வேணுகோபால் ராவ், அம்மன அபிஷேக் ரெட்டி போன்ற வீரர்கள் பெயர் தமிழ் பத்திரிக்கைகளில் மற்றும் உலகப் பத்திரிக்கைகளில் இடம் பெற ஆந்திர அரசு என்ன செய்யப் போகிறது? அதாவது இவர்களின் தியாகத்திற்கு என்ன ஆங்கீகாரம் கொடுக்கப் போகிறார்கள்.

5. இது கடிதத்தோடு நின்றுவிடுமா? இல்லை தந்தியும் அடிப்பார்களா?

================================================================

படித்து விட்டீர்களா!!

Friday, February 5, 2010

தேவன் மாயம் பதிவு: அம்பலமாகும் தமிழ்மணத்தின் ரகசியம்

வழக்கம் போல் தமிழ்மணத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது எலிக்குட்டியை நகர்த்தும்போது  எதோ ஒரு இடத்தில் அழுத்தப் பட்ட உடன் ஒரு புது பக்கம் விரிந்துவந்தது.

அப்போது ஒரு உண்மை புலப்பட்டது. இது எனக்குத்தான் புதியதா? இல்லை நிறைய பேருக்கு இது தெரியுமா? என்பது தெரியவில்லை. இருந்தாலும் எனக்குப் புதிதாக இருந்த காரணத்தால் இதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த இடுகை.

================================================

எந்த நிறம் அழகு?   எழுதியவர் தேவன்மாயம்



thamizmanam


இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்



thevanmayam geraldindia sridharrangaraj ktmjamal abdmalick NANDUnorandu harinicibi sureshpalani balasee Kailash
=================================================================

வாசகர் பரிந்துரைப் பகுதியில் உள்ள மேல் நோக்கிய கட்டைவிரலின் மேல் எலிக்குட்டியை வைத்து அழுத்தம் கொடுக்க இப்படி ஒரு கட்டம் விரிந்து அவருக்கு யார் யார் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது.

இதில் எதிர் ஓட்டுப் போட்டது யார் என்பது தான் தெரியவில்லை. அதைத் தெரியப் படுத்தும் தொழிற்நுட்பம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Thursday, February 4, 2010

நான், நீ, அவள், அவன், கடிதம் 4.2.10

உனக்காக

வைத்திருந்த கடிதம்தான்

உன்னைச் சுற்றி

எழுதியதுதான்

கொடுக்காமல் விட்டதுதான்

கொடுக்க நினைத்ததுதான்

பயம் காரணமல்ல

வாய் சொன்னாலும்

மெய் மொழி

மெய்யாய் தெரிந்திடும்.

ஆனால்

மகன் எடுத்தபின்னால்

மகன் மகன்

எடுக்க போகும் காலத்தில்

மகனிடம் கிடைத்த

தருணத்தில்

தாயிடம் காட்ட

தனயன் ஓட

நல்லவேளை

நீயே அவளாய்

அமைந்து

வெட்கப்பட்டாய்

எல்லாம் இன்ப மய்ம்

Tuesday, February 2, 2010

பதிவுல நண்பர் அனுப்பிய ரகசிய மின்னஞ்சல்

பதிவுலக நண்பர் ஒருவர் நமது நண்பர்கள் சிலருக்கு மட்டும் ரகசிய மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

நமக்கு ஏனோ அதை ரகசியமாக வைத்துக் கொள்ள மனதே இல்லை.

அதனால் அதை அப்படியே பொதுவில் வைக்கிறோம்.

இதைத்தான் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனார் அவர்களும்

இருக்கிறதெல்லாம் பொதுவில் வைத்தால் எடுக்கிற வேலையும் வளராது.., என்று எழுதியுள்ளார்.

====================================================================


நம்ம ஊர் பெரிசுகளின் விரல்நுனியிலிருந்து வீழ்ந்த கோலங்கள், இங்கே ஆட்டோகிராப்களாக.
ஒரு சேமிப்பு.

A P J அப்துல் கலாம்
A P J AbdulKalam



அபுல் கலாம் ஆசாத் மவ்லானா
Abul Kalam Azad Maulana



அமர்த்யா சென்
Amartya Sen, Dr.



அம்பேத்கார்
Ambedkar B. R., Dr.



அமிர்தாப்பாச்சன்
Amitabh Bachchan



ஆஷா போஸ்லே
Asha Bhosle



பாபா அம்தே
Baba Amte



பால கங்காத திலகர்
Bala Gangadhar Tilak



பிபின் சந்திர பால்
Bipin Chandra Pal



பிஸ்மில்லா கான் உசாத்
Bismillah Khan Ustad



சி.கே.நாயுடு
C.K. Nayudu



சந்து பார்டே
Chandu Borde



சிரஞ்சீவி
Chiranjeevi



சித்தரஞ்சன் தாஸ்
Chittaranjan Das



தேவ் ஆனந்த்
Dev Anand



கோபால கிருஷ்ண கோகலே
Gopal Krishna Gokhle



ஹர் கோபிந் கொரானா
Har Gobind Khorana



ஹரிபிரசாத் சவுராசிய பண்டிட்
Hariprasad Chaurasia Pandit



இந்திரா காந்தி
Indira Gandhi



டாடா
J.R.D. Tata



ஜகஜீவன் ராம்
Jagjivan Ram



ஜவஹர்லால் நேரு
Jawaharlal Nehru



ஜெயபிரகாஷ் நாராயணன்
Jayprakash Narayan



கபில்தேவ்
Kapil Dev



கான் அப்துல் காபர் கான்
Khan Abdul Gafar Khan



கொனேரு ஹம்பி
Koneru Humpy



லால் பகதூர் சாஸ்திரி
Lal Bahadur Shastri



லாலா அமர்நாத்
Lala Amarnath



லதா மங்கேஸ்கர்
Lata Mangeshkar



ஹூசைன்
M.F. Husain



மகாத்மா காந்தி
Mahatma Gandhi



மங்கலபள்ளி பாலமுரளிகிருஷ்ணா
Mangalampalli Balamuralikrishna



மன்மோகன் சிங்
Manmohan Singh, Dr.



மொராஜி தேசாய்
Morarji Desai



அன்னை தெரசா
Mother Teresa



பி.சுசீலா
P. Susheela



சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
Sarvepalli Radhakrishna



ராகுல் பஜாஜ்
Rahul Bajaj



ராஜ் கபூர்
Raj Kapoor



ராஜேந்திர பிரசாத்
Rajendra Prasad, Dr.



ராஜிவ் காந்தி
Rajiv Gandhi



சி.வி.ராமன்
Raman C.V.



ரத்தன் டாடா
Rattan Tata



ரவி சங்கர் பண்டிட்
Ravi Shankar Pandit



ரவீந்திரநாத் தாகூர்
Ravindranath Tagore



எஸ்.பி.பாலசுப்ரமணியம்
S.P. Balasubrahmanyam



சச்சின் தெண்டுல்கர்
Sachin Tendulkar



சரத் சந்திர போஸ்
Sarath Chandra Bose



சர்தார் வல்லபாய் படேல்
Sardar Vallabbhai Patel



சரோஜினி நாயுடு
Sarojini Naidu



சத்யஜித்ரே
Satyajit Ray



எம்.எஸ்.சுப்பலஷ்மி
Subbulakshmi M.S.



சுபாஷ் சந்திர போஸ்
Subhash Chandra Bose



சுனில் கவாஸ்கர்
Sunil Gavaskar



சுனிதா வில்லியம்ஸ்
Sunita Williams



தகுதுரி பிரகாசம் பந்துலு
Tanguturi Prakasam Panthulu



அடல் பிகாரி வாஜ்பாய்
Vajpayee Atal Bihari



விக்ரம் சாராபாய்
Vikram Sarabhai, Dr.



வினோபா பாவே
Vinoba Bhave



விஸ்வநாதன் ஆனந்த்
Vishwanathan Anand



விவேகானந்தர்
Vivekananda



ஜாகிர் உசேன்
Zakir Husain, Dr.


=================================================================


அவரது இடுகைகள் ஒவ்வொன்றும் தனித்தனித் தகவல் சுரங்கமாக இருக்கின்றன. உழைப்பும் அற்பணிப்பும் பளிச்சிடும் வ்கையில் அமைந்திருக்கும்.


அவரது பதிவுக்குச் செல்லும் வழி இதோ..,




அவரது பதிவுகளை பிந்தொடர்வது ஒரு  அற்புத அனுபவம்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails