Friday, January 27, 2017

நாட்டு மாட்டினங்கள் வளர என்ன செய்ய வேண்டும்?

நாட்டு மாட்டினங்கள் வளர என்ன செய்ய வேண்டும்?
நாட்டு மாட்டினங்கள் வளர்ப்போரின் வருமானம் பெருக வேண்டும்.
பால் உற்பத்தியை பெருக்கினால் மாடு வளர்ப்போரின் வருமானம் பெருகுமா?
பெருகும். ஆனால் நாட்டு பசுக்கள் கொடுக்கும் பால் நம் தேவையை விட மிகக் குறைவு. கலப்பினங்களும் இறக்குமதி இனங்களுமே பால் தேவையை சமாளிக்க முடியும்.
விவசாய வேலைக்கு மாடுகளை உபயோகப் படுத்துவதன் மூலம் காப்பாற்ற முடியுமா?
நவீன கருவிகள் வந்துவிட்ட நிலையில் மீண்டும் நாட்டு மாடுகள் உபயோகம் என்பது வேலை மிக மெதுவாக நடைபெறச் செய்து செலவை அதிகரிக்க வைத்து விடும்.
சல்லிக் கட்டுகள் மூலம்?
சில வகை மாடுகள் மட்டுமே சல்லிக் கட்டுக்கு பயன்படுத்த முடியும்.தவிர சல்லிக் கட்டு மாடுகள் மூலம் வரும் வருமானத்தை விட பல மடங்கு செல்வழித்தால் மட்டுமே களத்தில் மாடுகள் மானம் காக்கும்.
அடிமாட்டுக்கு போகும் மாட்டை தடுப்பதன் மூலம்...,
அதனால் வயோதிக மாட்டுக்கான பராமரிப்பு செலவு அதிகரிக்கும், அவ்வளவுதான், நீண்டகால அளவில் பெரிய மாற்றம் ஒன்றும் வந்து விடாது.
பின்னர் என்னதான் வழி?
பிராய்லர் கோழி வளர்ர்பு போல நாட்டு மாடுகளை வளர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோழிகளை சாப்பிடுவார்கள். எனவே நல்ல விற்பனை ஆகும் வருமானமும் கூடும்.
நாட்டுமாடுகளை..,
நாட்டு மாட்டுக் கறிகளை வெளிநாட்டில் உண்பார்கள். எனவே சரமாறியாக ஏற்றுமதி செய்யலாம்.
இந்தியாவிலேயே 125கோடி மக்கள் இருக்கிறார்களே..,
அவர்கள் மாட்டை சாபிட்டாலோ உயர் ரக மனிதர்களால் கொடுரமாக தாக்கப் படும் வாய்ப்பு இருப்பதால் அதை மட்டும் செய்யக் கூடாது,

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails