Tuesday, March 31, 2009

இதய பலவீனம் உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம்

physical balance-1969 திரைப்படச் சுருக்கம்

முன்னுரை:-இதய பலகீனம் உள்ளவர்கள் இந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டாம்.
பார்க்க முயற்சி கூட எடுக்க வேண்டாம்.
http://i44.tinypic.com/207lqwg.jpghttp://orionwell.files.wordpress.com/2008/05/balance.jpg

ஒரு பெரிய பணக்காரர், அவருக்கு ஒரு வக்கீல் நண்பர். பணக்காரருக்காக ஒரு வழக்கில் வக்கீல் நண்பரே வாதாடுகிறார். கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் ஏமாற்றல். நடக்கிறது. பணக்காரர். ஏழையாகிறார்.

பணக்காரர் மகள் ஒருவனைக் காதலித்து வருகிறார். வக்கீல் மகள் வக்கீலுக்கு படிக்கிறார்.

சொத்து போனதால் காதல் போகிறது. பழைய வேலைக்காரன் பணக்காரர் மகளுக்கு அடைக்களம் கொடுக்கிறான். பின்னர் அவனையே திருமணம் செய்து கொண்டு குழந்தைகளும் பெற்றுக் கொள்கிறாள்.

பண்க்காரர் மகளின் ஏழைக் கணவனுக்கு மில்லில் வேலை போகிறது. போராட்டம் வெடிக்கிறது.அரசாங்கம் தொழிற்சாலையை எடுத்துக் கொள்கிறது. முதலாளி நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறுகிறார். பட்டினியின் கொடுமை அழகாகப் பதியப் பட்டிருக்கும். படம் வெளிவந்த 1969ல் நாடு முழுவதுமே பரபரப்பாகப் பேசப் பட்டது. முதலாளிகளின் கையாட்களால் பணக்காரர் மகளின் கணவன் கொலை செய்யப் படுகிறான்.


வறுமையில் உலவும் நாயகி தனது குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முயல்கிறாள். காவல்துறையால் கைதுசெய்யப் பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப் படுகிறாள்.

வழக்கில் முன்னாள்தோழி இன்னாள் வக்கீல் வாதாடுகிறாள். பணக்காரரின் மகளுக்கு தூக்குதண்டனை கிடைத்ததா.. வாதங்கள் எவ்வாறு இருக்கின்றன. என பரபரப்பான கிளைமாக்ஸ் காட்சியுடன் அமைந்த படம் இது.

பின்குறிப்பு:-தமிழ், மலையாளத்தில் வெளிவந்த துலாபாரம் திரைப் படத்தின் கதைச்சுருக்கம்தான் இது. இப்படத்தின் நாயகி சாரதா ஊர்வசி விருது பெற்றார். இப்படத்துக்காக.. துலாபாரம்=physical balance

Monday, March 30, 2009

நீங்க காதலிச்சு இருக்கீங்களா.. dont get emotion and irritation

வார்த்தைய எதிர்பார்த்தா எழுதிடலாம்..

வாழ்க்கைய எதிர்பார்த்தால்

.......... நழுவிடலாம்

..............................

நீங்க தெரியாம கேட்கல

தெரிஞ்சே கேட்கறீங்க

...........................
அடிபட்டவன் நான்

வலி எனக்குத்தான் தெரியும்

..............................

அந்தப் பொண்ணு உன்னக் காதலிக்கலயே

நான் அந்தப் பொண்ணக் காதலிக்கறனே

இந்தப் பொண்ணும் உன்னகாதலிக்கறாளே

ஆனா அதுக்கு நான் பொறுப்பில்ல
............................................

உயிரக் கேட்டா பரவாயில்ல

உள்ளத்தக் கேட்டா...

....................................
நீங்க மண்ண மதிக்கறீங்க

நான் மனச மதிக்கறேன்
..............................

தண்ணில எழுதியிருந்தா தானா அழிஞ்சிருக்கும்

மணல் எழுதியிருந்தா மழைப் பட்டு அழிஞ்சிருக்கும்

மனசுல எழுதிட்டனே
.............................
எழுதியது கொஞ்சம்தான், முழுசா பாருங்க



==============================================================

dont get emotion and irritation இதுக்குமேல நீங்களே பாருங்க




===================================================================

Saturday, March 28, 2009

உங்கள் குழந்தை நன்கு சாப்பிட வேண்டுமா?

நண்பர் முருகவேல் அவர்கள் சமீபத்தில் பழனிக்கு வருகை தந்திருந்தார். அவருடைய வீட்டில் ஒரு வேண்டுதல் செய்திருந்திருக்கிறார்கள். குழந்தை ஆரோக்கியமாக பிறந்தால் பழனி மலைக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு வருவதாக வேண்டியிருக்கிறார்கள். குழந்தையை தூக்கிக் கொண்டே மலை நடந்தே ஏறி வருவதாக வேண்டுதலாம்.

அவரை சந்திக்க நான் சென்றிருந்தேன். சற்று குண்டாக இருந்தார். அவரே காரணத்தையும் சொன்னார். தினமும் இரவு சாப்பாடு குழந்தையுடந்தானாம். இரண்டுவயது குழந்தைக்கு தட்டில் உணவை போட்டுவிட்டு இவரும் தட்டில் உணவை எடுத்துக் கொண்டு இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்களாம். அவரது குழந்தை இப்போது அவராகவே உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டிருக்கிறாராம். குழந்தை சாப்பிடும் நேரம் முழுவதும் அவரும் சாப்பிட வேண்டி வருவதால் அவர் சற்று கூடுதலாகவே சாப்பிட்டு விடுகிறாராம். தவிர குழந்தை மிச்சம் வைப்பதையும் சேர்ந்தே சாப்பிடுவதால் கொஞ்சம்(?) எடை போட்டுவிட்டதாக சொன்னார்.

உங்கள் குழந்தையும் நன்றாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களா.. நண்பரின் வழியைக் கொஞ்சம் பின்பற்றிப் பாருங்களேன்.

சாதீயத்தை உடைத்து என்.டி.ஆர் பேசும் வசனம்.

தெலுங்கு புத்தாண்டு கொண்டாடும் நல்ல நாளில் தெலுங்கு பேசும் நண்பர்களுடன் சேர்ந்து வாழ்த்துக்களைக் கூறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளுவோம். இந்த யூ-ட்யூப் வீடியோவைப் பாருங்களேன்.

இந்தத்திரைப் படம் தமிழிலும் வந்திருக்கிறது. ஆனால் தெலுங்கில் மக்களை அதிகமாக ஈர்க்கும்படியாக எடுத்திருப்பார்கள். சாதிதீயத்தை எதிர்த்தும் நண்பனை ஆதரித்தும் தமிழில் பேசியதைவிட தெலுங்கில் அழகாக எடுத்திருக்கிறார்கள். என்.டி.ஆர் அவர்களின் உடல்மொழியும் குரல்வளமும் தெலுங்கு தெரியாதவர்களையும் ஆர்வத்துடன் பார்க்கவைக்கும்.

தான் பேச நினைக்கும் , பதிய நினைக்கும் கருத்துக்களை திரைப் படத்தில் செருகி காட்சியை வளப் படுத்தி தன் பிம்பத்தையும் வளப்படுத்துவதில்
என்.டி.ஆருக்கு நிகர் அவர்தான். பாருங்கள், ரசியுங்கள்

இந்தக் காணொளியின் தமிழாக்கத்தை 


சித்தூர்.எஸ்.முருகேசன் இந்த இடுகையில் கொடுத்து இருக்கிறார்.





Friday, March 27, 2009

சிவாஜி மேலே சிவாஜி

இந்த இரண்டு படக்காட்சிகளையும் பாருங்கள்.

முதல் படச்சுருளில் இளமையும் துள்ளலும் தர்மேந்திராவும் அமிதாப்பும் வாரிவழங்கிருப்பார்கள். மொழி தெரியாதவர்கள்கூட இருக்கையின் மேல் ஏறி ஆடவைக்கும் பாடல் அது.





இந்தப் படம் வந்த போதெல்லாம் இந்திப்படங்கள் தமிழகம் முழுவதும் எல்லாம் வெளியாகாது. நகர மக்கள் மட்டுமே பார்ப்பார்கள். ஓடும் இருசக்கரவாகனத்தில் ஒருவர்மீது மற்றொருவர் ஏறிநின்று இசைக்கருவியை வாயில் வாசித்துக் கொண்டு அற்புதமாக தர்மேந்திராவும் அமிதாப்பும் செய்த காட்சிகளை தமிழகத்தின் கடைகோடி மக்கள் வரை கொண்டு செல்ல வேண்டுமே. அந்தப் பணியை செய்த படம்தான் இது. நடிகர்திலகத்துக்கு சரியான ஜோடி வேண்டுமே. என்றும் அவருக்கு நிகர் அவர்தான். இதில் அவரே அவர்மேல் ஏறி அமர்ந்து இன்னும்பிற சாகசங்களையும் சென்ற ஜோடி செய்ததற்கு மேலேயே செய்து அசத்தி இருப்பார்.


Tuesday, March 24, 2009

நடிகனைத் திட்டினால் ரசிகனுக்கு ஏன் கோபம் வருகிறது?

முதலில் ரசிகன் என்பவன் யார் என்பதை கவனியுங்கள்


தன்னால் எழுத முடியாத பாடலைப் பாடும் புலவனுக்கு பாராட்டுகளையும் பரிசுகளையும் கொடுத்து ரசிகனாக மாறுகிறான்.


பாடல்களை தனக்குப் பிடித்தது போல் கற்பனைகள் செய்து கொண்டு ரசனையை வளர்த்துக் கொள்கிறான். ( திருவிளையாடல் பாடலில் கூந்தலுக்கு மணம் இருக்கிறதா வாக்குவாதத்தில் இறையானரின் கூந்தலுக்கும் மணமில்லை என்று வாதம் வந்த போது எப்படி ஆராய்ச்சி நடந்து முடிவு அறியப்பட்டது என்பது பற்றி பலசுவாரசியமான வாதங்கள் வந்தது என்பதை எண்ணிப் பாருங்கள்)

இல்லையெனில் நர்சிம் அவர்களின் படைப்புகளைப் பாருங்கள். எவ்வளவு ரசித்து எழுதுகிறார் என்பது புரியும்.

தன்னால் படைக்க முடியாத சிலையை சிற்பி படைக்கும் போது சிலைக்கு ரசிகனாக மாறுகிறான்.

சிலைகளைப் பார்த்து கதைகளை உணர்ந்தது ஒரு காலகட்டம்.

பாடல்களாக வந்த கதைகளை பாடல்களாகவும், கதைகளாகவும் ரசித்துவந்தான். சிலைகளைப் பார்த்து சிலைகளையும் பாடல்களையும் ரசித்துவந்தான். அடுத்த கால கட்டங்களில் நாடகங்களாக வந்த போது சிலையே உருவெடுத்து வந்ததாக கருதி ரசித்தனர். அந்த காலகட்டங்களில் நாடகங்கள் நடிப்பதற்கும் பக்தி நாடகங்கள் பார்ப்பதற்குமே விரதம் இருந்தனர்.

வெறும் அறிவு போதனை மத போதனை கதைகளுக்கு அடுத்து சாகஸ பக்தி இலக்கியங்களை ரசிக்க ஆரம்பித்தான். அப்போதெல்லாம் சாகஸ்ங்கள் செய்யும் கடவுளின் பிம்பங்களாக வழித்தோன்றலாக தன்னை நினைத்துக் கொண்டு இலக்கியங்களை ரசிக்க ஆரம்பித்தான். (பொன்னியின் செல்வன் படித்துப் பாருங்கள் -கடவுளின் சாகஸங்களில் ஒரு பகுதி மக்கள் எவ்வளவு மயங்கி கிடந்தனர் என்றும் மற்றபகுதியினர் அதை எவ்வளவு மொக்கை என்று கூறினார்கள் என்றும் கல்கிஅழகாக விளக்கியிருப்பார்.)

அடுத்த சாகஸ சமூகக் கதைகள் வந்த போது நாயகனின் வழித்தோன்றலாக நினைத்து வந்தவன் தனது பிம்பமாகவே கருத ஆரம்பித்துவிட்டான். பரத்துக்கு பால் அபிஷேகம் செய்பவன் தன்னை கோயில் த்ர்மகர்த்தாவாகவும் முதல் மரியாதை பெருபவனாக தன்னை சமுதாயத்தில் மாற்றிக் கொள்கிறான். தனக்கு அவ்வளவு மரியாதை பெற்று தரும் தன் தலைவனை நாம் திட்டினால் அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. அவ்வாறு சொல்பவனை கண்டபடி கோபப்படுகிறான்.

தன்காலத்தில் இருப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என்ற எண்ணமும் நிறையப் பேருக்கு உண்டு. சரோஜாதேவி மாதிரி இன்னைக்கு யார் இருக்கா? என்று சொல்பவர்கள் நிறைய உண்டு. அதே போல் நந்திதா தாஸ் கூட அறிவு ஜீவியாகப் பேசப் பட்டிருக்கிறார். ஆனால் எல்லோரும் அவரவர் காலத்தவர்களை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தனது பிம்பத்தை உயர்த்துவது தனக்குத்தானே பெருமை.(இந்த காலத்துக்கு பசங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை என்று நூறு வருடங்களில் வந்த படங்களிலும் பதிவு செய்யப் பட்டிருக்கிறது)

..............................................................................................

பிரச்சனைகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், மனம்விட்டு அழ நினைப்பவர்கள், பிறரின் பரிதாபத்தை எதிர்பார்ப்பவர்கள் சிவாஜியின் ரசிகர்களாக மாறுவார்கள்.

பிரச்சனைகளை கண்டு பொங்கி எழ நினைப்பவர்களும், தன்னைக் காப்பாற்ற இன்னொரு கடவுள் வருவார் என்று நினைப்பவர்களும் எம்ஜியார், ரஜினி ரசிகர்களாக மாறுகிறார்கள்.

உருவத்தில் பேச்சில் நிறத்தில் தன்னைப் போல் இருக்கும் நாயகனுக்கு ரசிகன் மானசீக அடிமையாக மாறும்போது அந்த நடிகனை திட்டுப் போது கண்டிப்பாக அந்த ரசிகணுக்கு கோபம் வரத்தானே செய்யும்.

...............................................................................................................

தன் பசிக்காக குளத்தில் இருக்கும் அழுக்குகளை தின்று சுத்தப்படுத்தும் மீன் போல தனது படத்தின் ஓட்டத்துக்காக என்றாலும் நல்ல கருத்துள்ள பாடல்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி நல்ல இசையமைப்புடன் கொடுத்து கல்வியறிவு இல்லாத ரசிகனுக்கு கொடுத்த ந்ல்ல இதயமுள்ள நடிகர்களும் உண்டு. (அப்பா..... எம்ஜியாரையும் கலைஞ்ரையும் பேலன்ஸ் பண்ணியாச்சு)


...................................................................................................................

இன்றெல்லாம் ரசிகன் தனது இதய தெய்வங்களீன் மனைவியரை அரைகுறை ஆடையுடன் பார்ப்பதை மிகவும் விரும்புகிறானே... ஏன்?


பின்குறிப்பு:- இந்த இடுகை வெளியானபோது விகடன் குட் பிளாக் பகுதியில் இடம்பெற்றிருந்தது

Monday, March 23, 2009

இந்தியாவிலேயே ஐபில் போட்டி நடத்த ஒரு ஆக்கபூர்வமான யோசனை

ஐ.பி.எல் போட்டிகள் வெளிநாடுகளில் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு பாதுகாப்பு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஏற்கன்வே வங்கதேசமும் வெளிநாடுகளில் போட்டி நடத்தபோவதாகச் சொல்லியுள்ளது.

பிசிசிஐ இந்தியாவின் மிகப் பெரிய ஒரு அமைப்பு. அதற்கு இந்தியாவின் மூளை முடுக்கெல்லாம் அதற்கு ஆதரவுகள் உள்ளன. பிசிசிஐயில் கிரிக்கெட் ரசிக்க மட்டும் தெரிந்தவர்கள் கூட பெரிய பொறுப்புகளில் வரமுடியும். அவர்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரிந்தவர்கள்தான் பொறுப்புகளுக்கு வரமுடியும் என்றெல்லாம் கட்டாயம் இல்லை. அந்த அளவு ஜனநாயகம் நிலவும் அமைப்பு பிசிசிஐ.

பல முண்ணனி கிரிக்கெட் வீரர்கள் பலரும் பல்வேறு அரசியல் கட்சிகளில் சேர்ந்து மக்கள் சேவை செய்து வருகின்றனர். அசாருதீன், சித்து போன்றவர்கள் சேவை செய்ய தயாராக இருக்கின்றனர். அனைத்து மாநிலங்களிலும் மக்களுக்கு நன்கு தெரிந்த முகங்கள் நிறைய உள்ளன. இன்றைய சூழலில் இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை இல்லை.

பேசாமல் பிசிசிஐ ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து விடலாம். ஜனநாயகம், பணபலம், ஆள்பலம் போன்ற அனைத்தும் இருக்கும் பிசிசிஐ தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடித்து விட்டால் எந்த இடத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டியை நடத்திக் கொள்ளலாம். பாதுகாப்புக்காக தனி படையையே அமைத்துக் கொள்ளலாம்

பாதுகாப்புக்காக வெளிநாடு செல்வதாகக் கூறி அவமானப் பட்டுக் கொள்வதைவிட மக்களுக்காக சேவை செய்வதால் நாட்டுக்கும் பலன். சங்கத்துக்கும் பலன்.

செய்வார்களா.......

Sunday, March 22, 2009

சச்சினை நீக்க வேண்டும்

சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியில் ஒரு நிரந்தர நட்சத்திரம். கபில்தேவ் காலத்தில் அறிமுகமானவர். அவரது அறிமுகத்திற்குப் பிறகு பிறந்த ஆட்கள் அணிக்குள் வர வழிபார்த்துக் கோண்டிருக்கிறார்கள். அந்த அளவு நீ..........ண்ட நெடிய வரலாறு கொண்டவர். அவரது சாதனைப் பட்டியல்கள் சில. (சில புள்ளி விவரங்கள் மாறுபடலாம். இந்தப் பதிவு சாதனைகளைப் பற்றியது. புள்ளி விவரங்கள் பற்றியது அல்ல. இருந்தாலும் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ளப் படும்).http://members.tripod.com/%7Ekkv/cricket/pics/sachin_kapildev_azhar.jpg

இன்றைய தினம் 42ஆவது டெஸ்ட் சென்சூரியை அடித்துவிட்டார். இது டான் பிராட் மேனைவிட அதிகம்.

12000 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளார். அப்படி எடுத்த முதல் நபர்.

குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ்களீல்(195)களில் 10000ரன்கள் எடுத்தவர்களில் இவரும் ஒருவர்.(மற்றவர் லாரா).

ஒருநாள் ஆட்டங்களில் அதிக ரன்கள் எடுத்தவர் இவர்தான். முதல் 10000 இவர்தான் அதிலிருந்து ஒவ்வோரு ஆயிரமும் இவருக்குத்தான்.

42 சதம் அடித்தவரும் இவர்தான்.

57 முறை ஆட்டநாயகன் விருதும் 14முறை ஆட்டத்தொடர் நாயகன் விருதும் பெற்றிருக்கிறார்.

பந்துவீச்சிலும் பலவகைகளை உபயோகப் படுத்தி நூறுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார்.

இது இல்லாமல் கேட்ச், ரன் அவுட் என்றெல்லாம் சாதனைப் பட்டியல் போடுகீறார்கள்

...........................................................................................

சச்சினின் சாதனைகளைப் பார்த்தால் அவருக்கு அருகில் இருப்பவர்கள் எல்லாம் டான் பிராட்மேன்,ஆலன் பார்டர், சுனில் காவஸ்கர், ஸ்டீவ் வாக், கேரி கிரிஸ்டன், பிரைன் லாரா, கங்கூலி போன்றவர்களே. விளையாடிக் கொண்டிருப்பவர்களில் பாண்டிங் மட்டுமே இருக்கிறார்.

இந்த நிலையில் சாசின் முதலிடம் பிடித்தார். அதிக சதங்கள் வரிசையில் முதலிடம் பிடித்தவர் என்றெல்லாம் போடுவது. கொஞ்சம் கூட சரியாக படவில்லை. அவருக்கு போட்டியாள்ரே இல்லாத சூழலில் அவர் எப்படி முதலிட்ம் பெற்றவராக இருக்கமுடியும்?

ஐசிசி ரேங்கிங்கில் கடைசி ஆறு மாதம் காலம் மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுவதால் அதில் எல்லோரையும் ஒப்பீடு செய்ய முடியும். ஆனால் மற்ற சாதனைகளை எடுத்துக் கொண்டால் அவரது நீண்ட நெடிய வரலாறுகளும் சேர்ந்து வருகின்றன. அவரை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்வது என்பது மற்ற வீரர்களுக்கு இளைக்கப் படும் அநீதியாக கருத வேண்டும்.

அவர் போன்றவர்களை அவுட்ஸ்டேண்டிங் எண்று பெயரிட்டு தனியே பட்டியலிட்டு விட்டால் இந்த மொத்த சத, ஓட்ட வகையராக்களில் போட்டி என்பதற்கு சரியான போட்டி இருக்கும். அது இல்லாமல் ஒட்டு மொத்தமாக கணக்கிட்டு வந்தால் அவரின் சாதனைகள் , சாதனையாக அல்லாமல் வெறும் கணக்கீட்டு கருவியின் எண்களாகவே பதியப் படும். என்வே இது போன்ற கண்க்குகளிலிருந்து சச்சினை நீக்க வேண்டும். அப்போதுதான் சுவாரசியம் கூடும். கிரிக்கெட் என்பதே சுவாரசியத்திற்காகத்தானே..

Tuesday, March 17, 2009

டி.வி. ரைட்ஸ் வாங்கப் படாத ஒரு முழு நீள தமிழ்த்திரைபடம்

தமிழ்திரைப்படங்களில் அதுவும் வெளிவந்து சில ஆண்டுகள் ஆன திரைப்படங்களில் தொலைக்காட்சி உரிமை வழங்கப் படாத சில படங்களில் இதுவும் ஒன்று. ஒரு திரைப்படம் வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் பல நடைமுறை வாய்ப்புகளையும் மக்கள் மத்தியில் பேச வைத்த திரைப் படங்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும்.




ஒரு இயக்குநர் நினைத்தால் எந்த கதையையும் சுவாரசியமாக வழங்க முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். அவரே தயாரிப்பாளராக இருப்பது இன்னொரு வசதி. அதில் அவரே நாயகனாக நடிப்பது ஒட்டு மொத்த அறுவடையும் அவரே எடுத்துக் கொண்ட திறமை.




கண்ணதாசன் போன்ற வளரும் எழுத்தாளரின் முழுதிறமையையும் உபயோகப் படுத்திக் கொண்ட திறமை. முக்கிய கட்டத்தில் நாயகியைத் தூக்கிவிட்டு புதிய நாயகி அறிமுகப் படுத்திய மனவலிமை. ஒரு பெரிய தீவையே நீரில் மூழ்கடித்த கிளைமாக்ஸ் காட்சி சுனாமி பற்றி இந்தியாவில் பேச படுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப் பட்டிருப்பது போன்றவை இயக்குநரின் திறமைக்கு சான்றாக அமைகின்றன




கீழே தோன்றும் காட்சியைப் பாருங்கள், தொழில் நுட்பம் எவ்வளவு உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்






நாடோடி மன்னன்: கம்யூனிச சித்தாத்தங்களை எனக்கு அறிமுகப் படுத்திய படம். "நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நாங்கள் மக்களோடு இருந்து மாளிகையைப் பார்க்கிறோம்". படத்தின் மொத்தக் கதையை ஓரே வரியில் சொல்லும் வசனம்.
[nm_1.jpg]


அரச சபையில் வரும் ஒரு விவாதம் "அப்படியென்றால் நாட்டில் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள். அப்படித்தானே? தவறு. பணக்காரர்கள் இருப்பார்கள் ஏழைகள் இருக்க மாட்டார்கள்" கம்யூனிசத்தினை பாமரனுக்கும் கொண்டு செல்லும் முயற்சி. (ஆனால் இன்னும் நெறய பேருக்கு புரிந்தபாடில்லை)

"இந்த அரியாசனத்திற்கு தேவை நான் சொன்னதைக் கேட்கும் நடமாடும் ஒரு பொம்மை"
சர்வாதிகாரத்தின் குரல். அதைதான் இன்று நெறய பேர் தொடர்ராங்க.
'
கூரில்லாக் கலப்பை, அதிகாரமில்லா பதவி"
கடைசியாக படம் முடியும்போது வீராங்கன் மன்னரை எழுப்பி 'மன்னா மகாராணி குற்றமற்றவர்" என்று சொல்லிவிட்டு போவார். ஒரு action படத்தில் கடைசி வசனம் கூட கதைசொல்ல வைக்கும். ஆனால் மொழி புரியாவிட்டாலும் படம் புரியும்.

இது எனது தொடக்க காலப் பதிவு. அக்டோபர் 26,2008ல் எழுதியது.






டிசம்பர்-5,2008ல் பதிவர் முரளிக்கண்ணன் எழுதிய

1958ன் அபூர்வ படங்கள் இடுகையில் நாடோடி மன்னன் பற்றியும் எழுதியிருந்தார். அதில் நான் கொடுத்திருந்த பின்னூட்டங்கள்:-

//
SUREஷ் said...
மன்னனாவதற்கு தேவை, செங்கோல் தாங்கும் கை, மகுடம் தாங்கும் த்லை, ஆரணங்குகளை மயக்கும் அழகு, இவை எனக்கும்தான் இருக்கிறது. அதோடு சிந்தனை செய்யும் சக்தியும் எனக்கிருக்குறது. ந்ம்பியாரின் வசனம் இது.
//
SUREஷ் said...
நாடோடி மன்னன் படம் கூட நான்கு மணி நேரம் ஓடக் கூடியதே. இளவரசியி உடலில் உடை மாற்றும்போது மச்சத்தினை கண்டுபிடிப்பார்கள் இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி கிடையாது. மன்னன் அழிக்கும் மானியத்தில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்விலந்த மகளிருக்காகவும், மருத்துவ மனைக்காகவும் என் சொத்தில் நானும் பாதியை கொடுக்கிறேன்.(ராணி பேசுவது) நம் மன்னர் குடிகாரரா.......... கடைசிக் காட்சியில்... மன்னா, மகாராணி குற்றமற்றவர் நாடோடி,, மன்னனிடம் கூறவதும் கூறும் தோணியும்...
//
SUREஷ் said...
படத்திற்கு துளி கூட சம்பந்தம் இல்லாமல் இரண்டு பாடல்கள் படத்தில் உண்டு மற்ற தத்துவ பாடல்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கும் கீழ்கண்ட பாடல்களுக்கு திரைக்கதையில் ஒரு தொடர்பும் இருக்காது. ஆனால் படத்தின் கதைப் போக்கே அவைதான். எங்கும் இந்தப் பாடல்களை வெட்டுவதில்லை. அதில் இயக்குனர் வெற்றி பெற்றிருப்பார். உழைப்பதிலா உழைப்பை கொடுப்பதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுவதே இல்லை என் தோழா உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா ........... தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்திச்சு முன்னேற வேணுமடி வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து சேகரித்தால் இன்பம் திரும்புமடி நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான் நாளை வருவதை எண்ணி எண்ணி அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி எல்லாமே பாஸிடிவ் அப்ரோச் உடன் அமைக்கப் பட்டிருக்க்கும்.
//
SUREஷ் said...
நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம் 58லேயே இப்படி பாடியிருப்பார்//

எனக்கு வந்த பின்னூட்டங்களும், கருத்துப் பரிமாற்றங்களும்:-

முரளிகண்ணன் சொன்னது…
நல்ல பகிர்வு

பெயரில்லா சொன்னது…
Communism views are interesting to talk. It is not practical. It failed in all countries where communism is tried. Nehru tried socialism and that is the main reason for all the subsidies and other handnouts plaguing the country today. Look around. Communism countries are poor and Capitalistic countries are rich. That should tell you something.

நசரேயன் சொன்னது…
அருமை

SUREஷ் சொன்னது…
நன்றி முரளி கண்ணன் சார். நசரேயன் சார், மற்றும் அனானி சார். கம்யூனிசத்தைப் பற்றி அந்தப் படத்தில் தெளிவாக கூறியிருப்பார்கள் //பணக்காரர்கள் இருப்பார்கள் ஏழைகள் இருக்க மாட்டார்கள்// அதைப் பலரும் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர். வேலைக்கேற்ற ஊதியமே சரியான கொள்கை. ஆனால் ஒரு டீகடையில் வேலை செய்யும் ஆயாவுக்கும் டீ மாஸ்டருக்கும் சம்மான ஊதியம் என்னும்போது வேலை செய்யும் எண்ணம் குறைந்து அந்த நாடுகளின் வள்ர்ச்சி பாதிக்கப்பட்டது என்பதெ உண்மை

புருனோ Bruno சொன்னது…
//Nehru tried socialism// Nehru's ideas are 100 times better than the American Economy, the failure of which is for every one to see

பெயரில்லா சொன்னது…
//Nehru's ideas // Could you give me specific examples of Nehru's ideas. He followed Russsian model and introduced licenseing for everything killing free market. He protected indian industries by closing the country to outside investment. Result - Companies with outdated technology no way of surviving in open competetion and consumers are forced to pay more for substandard products. //are 100 times better than the American Economy, the failure of which is for every one to see// This is not the first economic crisis US faced and wont be the last one. Beauty of capitalism is it survives and in few years time no one will be talking about this crisis.







Sunday, March 15, 2009

கருப்பு சிவாஜி இவர்தானுங்க...

http://www.nadigarthilagam.com/papercuttings2/thyagam2.jpghttp://www.tamilvanan.com/content/wp-content/gallery/engal-aasan/Engal-Aasan9.jpg






http://www.nadigarthilagam.com/papercuttings2/aokcbe50days.jpg




http://pothusanam.files.wordpress.com/2009/01/ennakodumai.jpg


விஜயகாந்த் நடித்த எங்கள் ஆசான் திரைப்படம் இன்று வெளியாகி விட்டது. அந்த படத்தின் படங்களை அங்காங்கே பார்க்க நேரிட்டது. அதே நேரத்தில் பழைய சில படங்களின் சுவர்ப்படங்களும் ஏனோ ஞாபகத்தில் வந்து விழுந்தன. இரண்டையும் கோர்த்துப் பார்த்த போது தோன்றியது விஷயம்தான் இது. அரசியல்ல் அவரை கருப்பு எம்ஜியார்ன்னு சொல்லிக்கிற மாதிரி, சினிமாவில் கருப்பு சிவாஜின்னு இனிமேல் அவரை சொல்லிக் கொள்ளலாம். யார் எதிர்ப்பு தெரிவிச்சா நமக்கு என்ன? அவர் பிறந்த நாளைக்கு அவர்க்கும் ஒரு மாலை போட்டுவிட்டால் போச்சு.

மீள் பதிவு...,

Thursday, March 12, 2009

அவ்மானப் பட்ட ஆஸ்திரேலிய அணி.

கிரிக்கெட் உலகில் ஒரு கேவலமான நாள் ஒன்று உண்டு. பந்து வீச்சாளர்களையும், மட்டை பிடிப்பவர்களையும் இதற்கு மேல் அவமானப் படுத்த முடியுமா.. என்று தெரியவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சு உலகத்தில் இருக்கும் அனைத்து வகைக் கிரிக்கெட் (எல்.கே.ஜி. அணியைவிட) அணிகளைவிட கேவலமாக இருந்த நாள். அந்த அணியின் களத்தடுப்பு கூட அப்படித்தான். அவர்கள் களத்தடுப்பு செய்ததற்குப் பதில் பேசாமல் நட்சத்திர ஓட்டலில் குப்புறப் படுத்து தூங்கி இருக்கலாம். அந்த ஆட்டத்தின் முழு வர்ணனையும் ஒரு பதிவர் பதிவிட்டு இருக்கிறார். இங்கே பாருங்கள்.

Wednesday, March 11, 2009

இந்திய அணி பலவீனமான இரண்டாம்தர அணிதான்

தற்போது விளையாடிக் கொண்டுவரும் இந்திய அணியினை ஒரு இரண்டாம் தர அணி என்று சொன்னால் பலரும் திகைக்கக் கூடும். கல்கத்தா பாஷா (அவர்கள் மொழியில் தாதா) இந்த அணியை சிறந்த அணி அல்ல என்று சொன்ன போது பலரும் விமர்சிக்கத்தொடங்கி பிரித்து மேய்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அதுதான் உண்மை.

இந்திய கிரிக்கெட் அணிகளில் மிகச் சிறந்த அணி என்று கூறினால் 1992ல் ஆஸ்திரேலிய உலகக் கோப்பைக்குச் சென்ற அணியினைக் கூறலாம்.
உடனே சிலருக்குக் கோபம் வரலாம். சி.கே. நாயுடு தலைமையினாலான இந்திய அணியே சிறந்து எனச் சொல்லலாம். சுதந்திர இந்தியாவின் முதல் கேப்டன் லாலா அமர்நாத் தலைமையினால் ஆன அணியே சிறந்த அணி என்று கூறலாம். நாம் 1983 உலகக் கோப்பைக்கு பிந்தைய கிரிக்கெட் அணிகளை மட்டும் பார்ப்போம்.

1992 அணியில்
உலகின் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் தலைசிறந்த ஆல்ரவுண்டர் கபில்தேவ் இருந்த அணி அது. அதுமட்டும் அல்லாமல் முதல் ஓவரிலேயே அடித்தாடும் பாணியை துவக்கி வைத்த ஸ்ரீகாந்த் அந்த அணியில் இருந்தார். முழுமையான ஆல்ரவுண்டர்கள் என்று சொல்லக் கூடிய ரவிசாஸ்திரி, மனோஜ் பிரபாகர் போன்றோரும் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர். இன்னொரு பெருமைக்குரிய அறிமுகமும் (உலகக் கோப்பைக்கு)அந்த அணியில் இடம் பெற்றிருந்தார். அவர் சச்சின். அவர் மட்டுமில்லாமல் கங்கூலி, மஞ்ரேகர், காம்ப்ளி போன்றோரெல்லாம் அந்த அணியில் இருந்தனர். பந்து வீச்சில் கபில், பிரபாகர், சாஸ்திரி, ஸ்ரீநாத் போன்றோரும் அணியில் இருந்தனர். கடைசி ஆளாக இறங்கி சிக்ஸர் அடிக்கும் வல்லமை வாய்ந்த பானர்ஜி கூட இருந்தார். சிறந்த கீப்பராகவும் கபில் சிறந்த தோழமை மட்டை பிடிப்பவராகவும் விளங்கிய கிரன் மூரே கூட அந்த அணீயில் இருந்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த அணி சுற்றுப் போட்டிகளைக் கூட தாண்டவில்லை. அதற்குக் காரணமாக ஸ்ரீலங்கா (அப்போதைய பங்களாதேஷ்வகை அணி) உடன் நடந்த ஆட்டம் மழையால் பாதிக்கப் பட்டதுதான் காரணம் என்று கூறிக் கொண்டிருந்தனர்.

அவ்ருக்குப் பின் அசாருதீன் வந்தார். அந்த அணியில் யார் இருந்தார்கள் என்றே நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

அதற்கடுத்து டெண்டுல்கர் தலைமை, தலைமை நன்றாகத்தான் இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றார். அந்த அணியில் ஹர்விந்தர் என்றொருவர் அவர்தான் பெரிய பந்து வீச்சாளர். குருவில்லா போன்றவர்கள் எல்லாம் அந்த அணியில் இருந்தனர். பின்னர் மீண்டும் அசாருதீன்.

இந்த அணி கூட மிகவும் பலம் வாய்ந்த அணிதான். மும்மூர்த்திகள் மட்டை, பந்து வீச்சில் உருவானார்கள். அவர்களது சாதனைகள் மிக அதிகம். ஆனால் அதன் காரணமாக அணிவெற்றி பெற்றதா என்றெல்லாம் கேட்க கூடாது. ஃபீல்டிங்கில் கூட ஜடேஜா, அசாருதீன், சச்சின் போன்றோர் மிகச் சிறப்பாக செயல் பட்டார்கள். இந்த கால கட்டத்தில் கிரிக்கெட் அணியில் ஐந்து மட்டையாளர்கள் நிரந்தர ( சச்சின், கங்கூலி, டிராவிட்,அசார், ஜடேஜா) இடம் பிடித்தனர். அவர்களுக்கு ஐம்பத்தெட்டு வயதில்தான் ஓய்வு. அதற்குப் பின்னர்தான் மற்றவீரர்களுக்கு வாய்ப்பு என்று கூட கல்லூரியில் பேசிக் கொள்வார்கள்.




எப்படியோ ஒரு சுபயோக சுபதினத்தில் அசாரும் ஜடேஜாவும் ஓய்வு பெற மற்ற வீரர்கள் அவ்வப்போது தலைகாட்ட ஆரம்பத்தினர். கும்ப்ளே பந்து வீச்சில் முண்ணனியில் திகழ்ந்தார். இவரது பந்து வீச்சைப் பற்றி கல்லூரியில் பேச்சு உண்டு. சுழல்பந்து மாதிரி வேகப் பந்து வீசுவதாகக் கூறிக் கொள்வார்கள். அவரது பந்து திரும்பும் என எதிர்பார்க்கும் போது திரும்பாமல் நேராக வந்து காலில் பட்டு எல்.பி.டபுள்யூ. முறையில் ஆட்டம் இழக்க வைப்பார். பிரசாத் கூட இவரைவிட கொஞ்சூண்டு வேகம்தான் அதிகம் காட்டுவார்.

கங்கூலி, டிராவிட் போன்றோரெல்லாம் ஓய்வெடுக்கும் வயதில் ஒருவர் அணிக்கு வந்தார். அவர்தான் ராபின்சிங்.

இவர்களை போல தனித்தன்மை வாய்ந்த கிரிக்கெட் வீரர் யாரேனும் இந்த அணியில் இருக்கிறார்களா.. சச்சினைத்தவிர, அவர்கூட அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொள்கிறார்.

சேவக், யுவராஜ் போன்றோர் அவ்வப்போது நல்ல ஸ்கோர்களைக் குவிப்பார்கள். அவ்வளவுதான். கங்கூலி, டிராவிட், அசார் போன்ற நீண்ட நெடிய பயணங்கள் கிடையாது. இன்னுமே அணியில் நிறந்தர இடம் உண்டா என்ற பயத்துடனே இருக்கிறார்கள். சேவக், யுவராஜ் நிலைமையே அப்படி என்றால் மற்ற மட்டையாளர்களைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

பந்துவீச்சில் கூட நிறந்தர பந்துவீச்சாளர் இந்திய அணிக்கு உண்டா. என்றால் இல்லை. எந்த பந்து வீச்சாளர் அணியில் இடம் பிடிப்பார் என்றே யாரும் யூகிக்க முடியாது. அப்படியே அணியில் இடம்பிடித்தாலும் தசைப் பிடிப்பு வந்து உட்கார்ந்து கொள்வார். வேறு யாராவது பந்து வீச்சாளராக இடம்பிடிப்பார். முதலில் எல்லாம் ஸ்ரீநாத் தசைப் பிடிப்பு வந்தால் கங்கூலி, சச்சின் போன்றோர்தான் பந்து வீச வர வேண்டும். இப்போது ஓரே த்ரத்தில் நிறையப் பேர் இருக்கிறார்கள். ஆனால் பிரட்லீ, அக்ரம் போல யாரும் கிடையாது. அதனாலேயே இந்தைய் அணியின் பந்து வீச்சினை எதிர் கொள்ள மற்ற அணியினரால் திட்டம் தீட்ட முடியவில்லை என்றே கூறலாம்.


இப்படி இந்திய அணி கடந்த கால்ங்களில் இருந்த பல இந்திய  அணிகளை விட பலம் குறைந்த அணியாகவே விளங்குகிறது. இருந்தாலும் தங்கள் பலத்திற்கு தகுந்தாற்போல ஒவ்வொருவரும் அணிக்காக உழைக்கிறார்கள். அணில்களைப் போல இருக்கும் ஒவ்வொருவரிடமும் எதை எடுக்க முடியும், எப்படி உபயோகிக்க முடியும் எனத்தெரிந்த அணித்தலைவர் டோனி இருக்கிறார்.
முன்னெல்லாம் சச்சின் அவுட் ஆனால் பின்னால் வருபவர்கள் தாக்குபிடித்தல் சிரமம். ஆனால் அணி தள்ளாடும் போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் மட்டையாளராகவும் டோனி விளங்குகிறார். அவரது தனிப் பட்ட சாத்னைகள் எதுவும் சென்ற ஆண்டு பேசப் படவில்லை. ஆனால் மட்டை பிடிப்பில் அவர்தான் ஐ.சி.சி. தரம் ஒன்று.
மட்டை பிடிப்பாளருக்குப் பின் நிற்பதால் மட்டையாளருக்குத் தெரியாமல் யுக்திகளை அமைக்க முடிகிறது. எனவே அணியின் பலம் என்று பார்த்தால் இந்திய அணி இரண்டாம் தர அணிதான். ஆனால் அணியின் பலவீனத்தை பலமாக மாற்றும் கேப்டன் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறுகிறது.
டோனி கூட நாணல்போல வளைந்து கொடுக்கும் கேப்டன் போலத்தான் தோன்றுகிறார். கங்கூலி அதில் ஒரு சக்கரவர்த்தியாகவும் சர்வாதிகாரியாகவும் அல்லவா தோன்றுவார்.




ஏற்கனவே இதுபற்றி ஒரு இடுகையும் எழுதியிருக்கிறேன்.

ஆட்டக் காரர்களைப் பற்றி மாட்டும் பார்த்தால் இது இரண்டாம்தர அணிதான். ஒரு குழு என்று பார்த்தால் இதுதான் முழு முதல் அணி என்பது கூட புலப் படும்.

மீள்பதிவுதான் என்றாலும் ஓட்டுக்கள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன

Sunday, March 8, 2009

அவளிடம் கேட்டதை அவனிடம் கேட்டால்......

இன்று மதியம் டி.வி.யில் வறுமையின் நிறம் சிகப்பு படம் பார்க்க நேர்ந்தது. கமல் ஸ்ரீதேவியிடம் சொல்லிக் கொண்டிருப்பார்

"எத்தனை நாட்களுக்குத்தான் அடிமையாய் இருப்பிங்க. பிறந்ததும் அப்பாவுக்கு அடிமை,
கல்யாணம் ஆனதும் கணவனுக்கு அடிமை, குழந்தை பிறந்தால் அதற்கு அடிமை. எப்ப
சுதந்திரமாய் வெளிய வருவீங்க"

சாதரண்மாய் பார்த்தால் பெண்விடுதலைக்கான அற்புதமான ராக்கட் வசனமாக தோன்றும்.
ஆனால் கமலின் {வ.நி.சி.யில்} குடும்ப நிலையை சூழ்நிலையைப் பார்த்தால் ஒரு
உண்மை புலப் படும். இதே வசனத்தை ஸ்ரீதேவி, கமலைப் பார்த்தும் பேசலாம் .பேச விட்டுப்
பாருங்கள். வாழ்க்கையின் நிதர்சனம் புரியும்.

பாருங்கள். கமலுக்கும் அதே சூழ்நிலைதான். கமலும் தந்தைக்கு அடிமையாய் நினைக்கிறார். தந்தையும் கமலைஒரு சுமையாகவே நினைக்கிறார். இருவரும் ஒருவரிடம் இருந்து ஒருவர் சுதந்திரம் வாங்க நினைக்கிறார்கள். குடும்பம் சிதைகிறது. கமல் தனது குடும்பத்தின் ஈன நிலையை ஒரு வசனத்தின் மூலம் ஸ்ரீதேவிக்கு கூறுகிறார்.

பெற்றவர்களுக்கு பிள்ளையை நேர்படுத்தும் பொறுப்பு உண்டு. பிள்ளைகளுக்கும் பெற்றவர்களை கவனிக்கும் பொறுப்பு உண்டு, கண்வன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரனையாக (அடிமையாய் கூட இருக்கலாம்) இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்க முடியும். இல்லையென்றால் ஆளுக்கு ஒரு மூலையில் உட்கார்ந்து புரட்சி வாழ்க்கை வாழ முடியுமே தவிர மனித வாழ்க்கை வாழ முடியாது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக விரக்தியில் ஒரு கதாபாத்திரம் எதிர்மறையாய் பேசுவதை விழிப்புணர்வு வசனம் என்று இன்று பள்ளியில் கூட பேச்சுப் போட்டியில் பெண்விடுதலைக்காக இந்த வசனம் உபயோகப் படுத்தப் படுகிறது.

ஸ்ரீதேவி கமலிடம் கூறியிருந்தால் இந்த தாக்கம் ஏற்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படித்தான் பேசியிருக்க வேண்டும்.


இது ஒரு மீள்பதிவு. மகளிர்தின ஸ்பெஷல்

Wednesday, March 4, 2009

மஞ்சளழகி

ஜீவா இன்று கல்லூரி செல்வதில்லை என்று முடிவெடுத்திருந்தான். அவனது உறவினர் ஒருவரது திரும்ணத்திற்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டிய அவசியத்தில் இருந்ததால் அப்படி ஒரு முடிவு. அதிகாலையிலேயே எழுந்து திருமணத்திற்கு சென்றுவிட்டு கல்லூரிக்குச் செல்லுமாறு அவனது தந்தை அவனிடம் சொல்லி இருந்தார். வழக்கம் போல் ஜெமினி டி.வி.யில் மிட்னைட் மசாலா பார்த்துவிட்டுப் படுத்ததில் அதிகாலை என்பது தூக்கத்திலேயே சென்றுவிட்டது. முக்கிய திருமணம் என்பதால் காலைக் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிடுவது என்று முடிவு செய்தான்.

மாணவர் விடுதியை விட்டு வெளியே செல்லும்போது பேருந்து நிறுத்தத்தில் மினியைப் பார்த்தான். மினி அவனோடு படிப்பவள்தான். இருவரும் மருத்துவக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவந்தனர். வெகுநாட்களாகவே மினியின் மீது ஜீவாவுக்கு ஒரு இது. தகுந்த நேரம்வரும்போது மினியிடம் தன்னை வெளிப்படுத்தி இதுவை அதுவாக மாற்றம் செய்ய எண்ணியிருந்தான். அதற்கான நேரமும் துணிச்சலும் அவனுக்கு வந்தபாடில்லை. மூன்றாம் ஆண்டிருந்து ஏட்டுக்கல்வியுடன் அனுபவக் கல்வியும் துவங்கியிருந்தது. உள்ளுறை நோயாளிகள் பிரிவுக்கு பல குழுக்களாகப் பிரித்து எல்லோருக்கும் பாடம் ஆரம்பித்துவிட்டனர். ஜீவாவின் குழுவில் அவன் மற்றும் மினியோடு சேர்ந்து அறுவர். அவர்களுக்கு வகுப்பு எடுக்க முதுகலை மாணவர்களும் இரு உதவிப் பேராசிரியர்களும் இரு விரிவுரையாளர்களும் ஒரு பேராசிரியரும் இருந்தனர்.

இருவருமே சராசரிக்கும் கூடுதலான திறமை வாய்ந்த மாணவர்கள்தான்.

அந்த மினியைத்தான் அவன் பேருந்து நிறுத்தத்தில் பார்த்தான். பச்சைக்கலர் புடவையில் ஏதோ திருமணத்திற்குச் செல்லுவதுபோல் நின்று கொண்டிருந்தாள்.கையில் கல்லூரிக்கு(மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு) செல்லும்போது கொண்டு செல்லும் பாடப் புத்தகங்களும் கருவிகளும் இருந்தன. முகம் சற்று சோர்வாகத்தென்பட்டாலும் மஞ்சள் அதிகமாகவே தென்பட்டது. ஜீவா பேசாமல் கல்லூரிக்குக்கே சென்று விடலாம் என்றமுடிவுக்கு வந்தான். இருந்தாலும் முக்கிய திருமணம் என்பதால் திருமண மண்டபத்தைநோக்கி தனது இருசக்கர வாகனத்தைச் செலுத்தினான்.

கோயமுத்தூர் வந்து மூன்று ஆண்டுகள் அகியும் இவள்கள் திருந்தவே மாட்டார்களா.. சுத்த பட்டிக்காடு மாதிரி இவ்வளவு மஞ்சள் பூசி குளித்துவிட்டு வகுப்புக்குச் செல்கிறார்கள். ஒட்டு மொத்த பெண்களையும் திட்டிக்கொண்டே திருமணத்திற்குச் சென்றான். நல்ல சிவப்பாய் இருந்தால் கூட பரவாயில்லை. இவள் மாநிறம்தான். இதில் இவ்வளவு மஞ்சள் பூசிக் குளித்துக் கொண்டு.... என்ன ரசனையோ.. லேசாக தென்பட்ட இடுப்பில் கூட மஞ்சள் கலந்திருப்பது போல்த்தோன்றியது.

திருமணத்திற்குச் சென்ற அவனது மனம் முழுக்க முழுக்க மினியைச் சுற்றியே வந்தது. இன்று எப்படியும் அவளிடம் இது பற்றி பேசிவிட வேண்டும்.. எத்தனை நாள்தான் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது. அப்புறம் நம் கதையைக் கூட கல்லூரி ஆண்டுவிழாவில் நாடகமாய் போட்டு மானத்தை வாங்கிவிடுவார்கள். பல்வேறு நினைவுகள் அவனுக்குள் சுற்றிக் கொண்டே இருந்தது.

திருமணம் முடிந்தவுடன் நேரே மருத்துவமனைக்குச் சென்றான். அவனது வார்டுக்குச் சென்றான். வாசலிலேயே அவன் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கல்லூரி முதல்வருடன் பேசிக் கொண்டிருந்தனர். போச்சு.. திரும்பவும் ஏதாவது வேலை நிறுத்தம் செய்ய போகிறார்களா? இவர்களோடு சிக்கினால் இன்று இரவு வரைக்கும் கூட இங்கிருந்து தப்ப முடியாது. முதலில் மினியிடம் பேச வேண்டும் பின்னர்தான் மற்ற விஷ்யங்கள்.

நேராக மாணவர் விடுதிக்கு வந்து சேர்ந்தான். முதலில் அவனது ஊரினைச்சேர்ந்த மூத்த மாண்வர் ரங்கு தென்பட்டார். அவர் ஜீவாவிற்கு நன்கு நெருக்கமான நண்பர். அவருக்குஜீவாவுக்கு ஓரளவு மினியிடம் ஒரு இது என்பது தெரியும். இவனைப் பார்த்ததும் அருகில் வந்தார். ஏதோ தயங்கியது போல் தென்பட்டது. இருந்தாலும் ஜீவா அதிபயங்கர துதூகலதுடன் சொல்ல ஆரம்பித்தான்.

ஊர்ஸ் இன்னைக்கு சொல்லிறலாம்னு இருக்கேன். காலையிலமினியைப் பார்த்தேன்.

கோயமுத்தூர் வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் இவள்கள் திருந்தவே மாட்டார்களா.. சுத்த பட்டிக்காடு மாதிரி இவ்வளவு மஞ்சள் பூசி குளித்துவிட்டு வகுப்புக்குச் செல்கிறார்கள். ஒட்டு மொத்த பெண்களையும் திட்டிக்கொண்டே திருமணத்திற்குச் சென்றான். நல்ல சிவப்பாய் இருந்தால் கூட பரவாயில்லை. இவள் மாநி றம்தான். இதி இவ்வளவு மஞ்சள் பூசிக் குளித்துக் கொண்டு.... என்ன ரசனையோ.. லேசாக தென்பட்ட இடுப்பில் கூட மஞ்சள் கலந்திருப்பது போல்த்தோன்றியது.

பச்சை சேலை வேர ... தாங்கல

இன்னைக்கு எப்படியும் அவளிடம் இதைப் பற்றி பேசிவிடுவது என்று முடிவு செய்துவிட்டேன். ஆசிர்வாதம் பண்ணுங்க ஊர்ஸ்..

காதல் மயக்கத்தில் உளறிக்கோண்டே இருந்தான்.

இது ஒன்றும் புதிதல்ல. முதல் வருடம் கல்விச் சுற்றுலா சென்று வந்ததிலிருந்து வாரம் ஒருமுறையாவது மினியைப் பற்றி ஏதாவது உளறிக் கொண்டே இருப்பான்.

ஊர்ஸ் ரங்கு அமைதியாகச் சொன்னார். இனிமேல் இதைப்பத்தி யார் கிட்டயும் பேசாதே.. பேசினால் உனக்குத்தான் பிரச்சனை.

மினி குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் சாப்பிட்டு செத்து போயிட்டா.. நீ காலையில பார்த்தப்பவே விஷம் அவ உடம்பு பூரா பரவித்தான் இருந்திருக்கு. அமைதியா ரூம்ல உட்காரு. உன் வகுப்புத் தோழர்களெல்லாம் பிணவறை பக்கத்தில்தான் இருக்கிறார்கள். கல்லூரிமுதல்வர் கூட அங்குதான் இருக்கிறார்.

ஜீவா சிலையாய் மாறி நின்றான். கண்களில் மட்டும் நீர் ஆறாய் பெருக்கெடுத்தது. (அவன் பார்த்த மஞ்சள் விஷத்தின் முழு வெளிப்பாடு)

இது ஒரு மீள்பதிவு

Sunday, March 1, 2009

படையப்பா- ஒரு அலசல்

சூப்பர் ஸ்டார் படம் என்றாலே எல்லாருக்கும் கொண்டாட்டம்தான். ஒரு படம் பார்த்தாலே நூறு படம் பார்த்த திருப்தியைக் கொடுப்பவை சூப்பர் ஸ்டாரின் படங்கள். அதிலும் படையப்பா இதுவரை வந்த சூப்பர் ஸ்டாரின் படங்களுக்குள் மிகவும் சிறப்பாக அமைந்த படம். அந்த திரைக் காவியத்தில் எத்தனை எத்தனை சரித்திரங்கள் அடங்கியுள்ளன என்பதைக் காண்லாம்.
http://mail-bag.com/Images/Padayappa_small_t.gifhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVUvazSTU_CD2BbzeKFNTO_fYjXqnyaMySrF-QV3aHokB2Z2ckm3Y0FSNseHgKhMUijjRUddkJdICIrr-o80xMRt20KVY3cVwUklrS3qPmwp2tXausQ13zhSEMvJF1SELu8ih6ZcXUY2I/s400/Padayappa.JPG


துவக்கத்திலேயே நீதி தவறாத தந்தையாக வருகிறார் நடிகர் திலகம் அவர்கள். ஆனால் சின்னக் கவுண்டர், எஜமான், நாட்டாமை போன்ற படங்கள் பார்க்காதவர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்த காட்சிகள் அவை. ஒரு அழகான மேடை அமைத்து அதன் மேல் கையில் வேலுடன் சிம்மாசனத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி பல சரித்திரங்களை நமக்கு கண்முன்னே கொண்டுவரும்.
http://www.indiadirect.com/superstar/special/rajni/0012.jpg


அடுத்ததாக எதிலும் முதன்மையாக வரத்துடிக்கும் நாயகியாக பழைய குமரிக்கோட்டம் வகைப் படங்களை பார்க்காதவர்களுக்கு கண்முன்னே காட்சியளிக்க வைத்த படம்.
Kumari Kottam


இளவரசியை விட்டுவிட்டு இளவரசியின் வேலைக் காரியைக் காதலித்து நாயகன் திருமணம் செய்து கொள்ளும் காட்சி அமைப்பு பழைய தங்க மலை ரகசியம் படம் (சிவாஜி, ஜமுனாராணி நடித்த டார்ஜான் வகை ராஜா கால மந்திர தந்திர படம்) பார்க்காதவர்களுக்கு ஒரு வரம் என்றே சொல்லலாம்.
Thangamalai Ragasiyam ரம்யாவின் வேலைக்காரியாக வரும் சௌந்தர்யாவைத் திருமணம் செய்து கொள்வது போல, டி.ஆர்.ராஜகுமாரியை பெண் பார்க்க வந்து அவரது பணிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதால் ராஜகுமாரியின் பழிவாங்கும் படலமே அதன் கதை.


தவிரவும் மன்னன் படம் பார்த்துவிட்டு விஜய சாந்திக்கு பதிலாக குஷ்பூவுடன் தலைவரை ஜோடி சேர்த்து பார்க்க ஆசைப் பட்டவர்களின் பதினேழு ஆண்டுகால கனவையும் நிறைவேற்றி வைத்த படம் படையப்பா..
http://www.harsamay.com/ShowPicture/m/6618/Mannan.aspx



என் வழி தனி வழி வசனத்தின் வீரியத்தை நாளை நமதே படம் பார்க்காதவர்களையும் உணரவைத்த படம் படையப்பா..

அண்ணனை தம்பி ஒட்டு மொத்தமாக ஏமாற்றி சொத்துக்களை மாற்றிக் கொள்ளும் காட்சிகள், தர்மதுரை, முத்து போன்ற படங்கள் பார்க்காதவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தங்கைக்கு மாப்பிள்ளை பார்ப்பது, ஓரே பாட்டில் தலைவர் மிக பெரிய பணக்காரனாக மாறுவது போன்றவை இதுவரை ரஜினி படமே பார்க்காதர்களுக்கும் ரஜினி பட இலக்கண இலக்கியங்களை சொல்லிக் கொடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப் பட்டிருக்கும்.

padayaipa2.jpg


வளர்ந்த இரு பெண்களுக்கு தந்தையாக வந்து அவர்களின் திருமணம் செய்ய முற்படும்போது பார் மகளே பார் சிவாஜி கணேசனே மீண்டும் வந்தது போல் இருந்தது. அவரளவுக்கு இவரும் கஷ்டப்படுவார். ஏற்பாடு செய்த திருமணத்தை ஒரு மகள் மறுப்பார்.

அப்பாஸுடன் சேர்ந்து கடைசி சண்டைக் காட்சிகளில் ஒட்டு மொத்த தெலுங்கு பட உலகையே கண் முன் கொண்டுவந்து what a man? சொல்ல வைத்து இருப்பார்.

படத்தின் இறுதியில் சபதத்தில் வெல்ல முடியாமல் குத்துப் பட்டு சாகும் காட்சியில் நீலாம்பரி, மகாதேவி வீரப்பாவையும், தூரல் நின்னு போச்சு வில்லன் செந்தாமரையையும்(உண்மையில் அவர் நாயகியின் தந்தை- நல்லவர்) நினைவு படுத்துவார்கள்.


http://pleasantvazanth.blog.co.in/files/2008/12/ps-veerappa.jpghttp://www.behindwoods.com/features/column/images/Senthamarai.jpg

சிவப்பு புடவையைப் பார்த்து மிரளும் மாடு, பாம்பு புற்றுக்குள் கையை விடுவது போன்ற காட்சிகள் ராம நாராயணன் படங்கள் சுவை மாறியதைக் கண்டு வருத்தத்தில் இருந்த ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய படம் என்றே சொல்லலாம்.

மொத்தத்தில் ஒரு படம் பார்த்தால் நூறு படம் பார்த்த மாதிரி....

இது ஒரு மேம்படுத்தப் பட்ட மீள்பதிவு

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails