Sunday, June 16, 2013

விகடனுக்கே ஒரு விமர்சனம்.

இந்த வாரம் விகடனில் பிடாரனின் மகள் கதை படித்தேன்.  நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கதை தான் பிடாரனின் மகள்.

கதை என்று பார்த்தால் ஏற்கனவே நமக்கு அறிமுகமான கதைதான். ஏற்கனவே அழகி படத்தில் ஒரு ஓரமாய் எட்டிப் பார்த்த கதைதான்.  செல்லியை சின்ன வயதில் பார்க்கும் கதாநாயகன். அந்த சின்ன வயதிலேயே தனது தாயாரின் ஹேர் பின்களை கொடுத்தும், கொஞ்சம் கரெக்ட் செய்த காசில் நெயில் பாலீஸ் வாங்கிக் கொடுத்தும் ஃபிரெண்டு பிடிக்கப் பட்ட அந்தச் சிறுமியை, சில பல ஆண்டுகளுக்குப் பின் நாயகன் பார்க்கிறார். அப்போது அவரது உணர்வு,. அவ்வளவுதான் கதையின் சுறுக்கம்.  சிறுமியின் பின்புலம், வளர்ந்தபின் அவரது பின்புலம். அவரது தந்தையின் சிந்தனைகள் சில, நாயகனின் கருத்துக்கள் சில என்று புதிதாக கதை எழுத வருவோருக்கு எப்படி நமக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை பெரிதாக மாற்றி கதையாக்குவது என்று சொல்வதாக இந்தக் கதை அமைந்திருக்கும்.

பாம்பு விளையாட்டுப் பொருள் இல்ல.., அது ஒரு உசிரு. அந்த உசிரு நமக்கு அடங்கியும் இருக்கும். மீறினா காவு வாங்கிடும்.

பாம்பாட்டுறது ஒரு போதை, நாம ஊதறதுக்குப் பாம்பு கிறங்கி ஆடுதேனு ஒரு மிதப்பு வரத்தான் செய்யும். நாள்பட அந்த கிறுக்கு மண்டைஇல் கிர்னு ஏறிடும்

பாம்பு சாகிறது சாதாரண விஷயமில்லை. எந்த பாம்பாவது தானாக சாகிறத பார்த்து இருக்கியா? 

அப்படி இப்படி பாம்பு பாம்பாட்டி பற்றியெல்லாம் பேசும்போது  பாம்பாட்டியின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என்று நம்மை எண்ண வைத்து விடுகிறார். 

நாமும்கூட அப்படியே அப்படியே நம்பிவிடலாம் அதனால் பாதிப்பு ஏதும் இல்லை.

அப்படியே ஒரு டாக்டரைப் பற்றியும் பேசுகிறார்கள் கதையில் அந்த டாக்டருக்கு ரத்தப் பரிசோதனையும் ஸ்கேன் பரிசோதனையும் தேவையில்லாமல் எழுதித் தருவதாகவும் அதில் கமிஷன் பெற்றுக் கொள்வதாகவும் எழுதி இருந்தார். அந்த வகையில் ஸ்கேனில் மட்டும் மாதம் மூன்று லட்சம் வருவதாக சொல்லி இருக்கிறார். 30 நாளில் மூன்று லட்சம் என்றால் ஒரு நாளில் 10,000 வருமானம். அதாவது கமிஷன்.  கணக்கிட வசதிக்காக  கமிஷன் 10%  என்று வைத்துக் கொண்டால் ஸ்கேன் செய்வது ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு வேளை கமிஷன் 2% என்று வைத்துக் கொண்டால் ஸ்கேன் செய்வது 5 லட்சம் ரூபாய்க்கு.  இந்த பெரிய தொகைக்கு கார்ப்பரேட் மருத்துவ மனைகளே செய்வார்களா என்பது சந்தேகமே..,

அதாவது கமிஷனாக பெரும்பங்கு சம்பாதிக்கும் நபர் என்று தேவையில்லாமல் புழுதியை எடுத்து விடுவதாகவே தோன்றுகிறது.  இவ்வாறான வரிகளைப் படித்த போது தனக்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி அதை இலக்கியமாக மாற்றும் திறன் நட்சத்திர எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை ஒரு வார இடைவெளியில் மீண்டும் நிரூபித்து விட்டதாகவே தோன்றுகிறது.

குருடன் யானை கண்ட கதைபோல  இது போன்ற பாத்திரங்களை படைப்பதற்கு முன் எழுத்தர்கள் எழுதுவது போலவே இருந்து விடுகிறார்கள்

Thursday, June 6, 2013

சாமிக்கு விட்றா சர்வேசா........,

+2ல் கண்ணாபின்னாவென்று மக்கள் மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கற்கால மாணவர்கள் வெகுசிலரே நூற்றுக்கு நூறு வாங்கி வந்த சூழலில் ஒரே மார்க் மாணவர்கள் வெகுசிலரே இருந்தனர். அந்த கற்கால மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்ற கூடுதல் ஐட்டம் ஒன்று இருந்தது. அதில் பொது அறிவு கேள்விகளெல்லாம் வைத்து இருந்தனர். ஒரே மதிப்பெண்களில் வந்து நிற்பது வெகுசில மாணவர்களே இருந்தனர். பின்னர் அந்த பொது அறிவுக் கேள்விகளை கட் செய்ய அதிலும் மாணவர்க்ள் முழு மதிப்பெண்கள் எடுக்க ஆரம்பித்தனர். 

வெட்டியாக ஒரு கூடுதல் தேர்வாக இருந்த அந்த நுழைவுத் தேர்வை பின்னர் வெட்டி எடுக்க மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் வித்தியாசமும் குறைந்து ஒரே மதிப்பெண்களில் பலரும் வந்து குவிய ஆரம்பித்து விட்டனர்; அந்த பிரச்சனையை சமாளிக்க அறிமுகப் படுத்தப் பட்டதுதான் குலுக்கல் எண் (ராண்டம் நம்பர்). பொறியியல் நேர்காணலில் உபயோகப் படுத்தப் படும் முறை. 

 //பி.இ., சேர்க்கை செயலர் ரைமண்ட் உதிரியராஜ் பேசியதாவது:வரும், 12ம் தேதி, அனைத்து மாணவர்களுக்கும், "ரேங்க்&' பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் தயாரிக்க, ரேண்டம் எண்கள் உதவுகின்றன. ஒரே, "கட்-ஆப்&' மதிப்பெண்களில், 350 பேர் வரை வருவர்.
இவர்களிடையே, கணித மதிப்பெண் யாருக்கு அதிகம் என, பார்க்கப்படும். இதில், அனைவரும் சமமாக இருந்தால், இயற்பியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் பார்க்கப்படும். இதுவும், சரி சமமாக இருந்தால், நான்காவது பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதுவும், ஒரே அளவு மதிப்பெண்களாக இருந்தால், மாணவர்களின் பிறந்த தேதி பார்க்கப்படும். இதிலும், "டை" வந்தால், இறுதியில், ரேண்டம் எண்களில், அதிக மதிப்புடைய எண்கள், யாரிடம் உள்ளதோ, அந்த மாணவர், முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார். இவ்வாறு ரைமண்ட் தெரிவித்தார்.//


ஏறக்குறைய இன்னபிற  தேர்வுகளிலும் அப்படித்தான்.   


இந்த குலுக்கல் முறையைவிட  தமிழ்பாட மதிப்பெண் மொத்த மதிப்பெண் போன்றவை உபயோகப் ப்டுத்தினால் தமிழுக்கு மரியாதை கொடுத்த மாதிரியும் இருக்கும்.  

சில பல பள்ளிகளில் மொழிப்பாடங்களுக்கு பெரிய முக்கியத்துவம் தராமல் நான்கு பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பாடம் எடுக்கிறார்களாம். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் என்பதால ஓரளவு படித்தாலே நல்ல மதிப்பெண்களை மொழிப்பாடத்தில் எடுத்து விடுகின்றனர். ,மற்றபடி அந்த பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம் பாஸ் செய்தாலே போதும் என சாமி விடும் மனப்பாங்கே நிலவி வருகிறது.  இது போன்று ஒரு உத்தரவு வந்தால் ஓரளவு மொழிப்பாடங்களையும் மாணவர்கள் படிக்க ஆரம்பிப்பார்கள்.

Saturday, June 1, 2013

இதுக்கெல்லாம் காந்திய வம்புக்கிழுத்தால் என்ன செய்வது?

//தற்கால சூழலில் காந்தியின் கிராம ராஜ்ஜியம் சாத்தியல்லை என மத்திய மனிதவளத் துறை இணை மந்திரி சசி தரூர் கூறியுள்ளார்.//    

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும்போல.., ஆனாலும் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், அதுவும் ஐ.நா சபையின் பெரிய பதவிக்கெல்லாம் போட்டியிட்ட நபர் இப்படியெல்லாம் பேசுவது சரியல்லதான் தோன்றுகிறது.  

இந்த நாட்டின் அடிப்படையே கிராமம்தான். கிராமங்கள் இல்லாமல் நகரங்கள் மட்டுமே இருந்தால் நகரத்த்துக்கு உணவு மட்டுமல்ல ஆட்கள் சப்ளையுமே குறைந்து போய்விடும். 

ஒரு கிராமம் எப்படி இருக்க வேண்டும் என்று பற்பல் கனவுகளை காந்தி விதைத்திருக்கிறார். காந்தியை ஒத்துக் கொள்ளாதவர்கள் கூட அவரது பல கருத்துக்களை ஒத்துக் கொள்வார்.  

சென்னை மாநகரம் என்பது இப்படி பக்கத்து மாவட்டங்கள் தாண்டி வளரும் என்று 40 ஆண்டுகளுக்கு முன் யாராவது நினைத்து பார்த்திருப்பார்களா? அப்போதைய கிராமங்கள் எல்லாம் இன்று சென்னைக்குள் வந்து விடவில்லை.  கோயமுத்தூரில் 20 ஆண்டுகளுக்கு முன்புகூட சிங்காநல்லூர் ஊருக்கு வெளியேதான் இருந்தது. பீள்மேடு கிராமம்தான். இன்று அவையெல்லாம். உள்ளே வந்து விட்டன. ஆனால் கிராமம் என்ற இயல்பை இழந்து விட்டு நகருக்குள் வந்து விட்டன. ஒவ்வொரு நகரைச் சுற்றிலும் இது போன்ற பலகிராமங்கள் இருக்கின்றன. கோவையிலிருந்து 40கிமீயில் பொள்ளாட்சி பசுமையுடன் விளங்கிக் கொண்டுதான் இருக்கிறது,. 


பழனியை எடுத்துக் கொண்டால் முன்பெல்லாம் விவசாய நிலங்களில் இருந்த  முதலாளிகள் அருகிலிருக்கும் ஓரளவு பெரிய ஊரில் இருந்து கொண்டு விவசாயத்தை கவனித்துக் கொண்டு இருந்தார்கள். இன்று தகவல் தொழில்நுட்பம் போக்குவரத்து வளர்ந்து விட்ட சூழலில் தங்களது தோட்டத்திலேயே வசதியான வீட்டைக் கட்டிக்கொண்டு, டிடிஎச் வசதி, கார், மொபைல் சகிதம் ஒரு ஹைடெக் வாழ்க்கையை விவசாயத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு விவசாயத்தின் வருமானமும் நன்றாகத்தான் வந்து கொண்டு இருக்கிறது.  ஆனால் அடுத்த தலைமுறை ஆட்கள் படித்துவெளிநாட்டிற்குச் செல்வதால்தான் அந்த குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியே வரும் சூழல் இருக்கின்றன.

சிறுவிவசாயிகளுக்கும் நஷ்டப்படாத அளவில் தண்ணீர் வசதியை செய்து கொடுத்தால் ஓரளவு அவர்களும் தங்களது தோட்டங்களைப் பெருக்கி, அங்கேயே இருந்து விவசாயத்தை கிராமத்தை பலப் படுத்துவார்கள்.  இந்த சிறுவிவசாயிகளின் சிலரின் வாரிசுகள் விவசாயத்தை விட்டு வெளியேறினாலும் பலரின் வாரிகள் அதைத் தொடருவார்கள். கிராமங்கள் வளப்படும். சுலப போக்குவரத்தையும், தேவையான நீர்வளத்தையும் ஏற்படுத்தினால் போதும். ( இதைச் சொல்லும் போது கேலியாகச் சிரிக்கலாம். இது ஒன்றும் கஷ்டம் அல்ல, நாற்கரச் சாலைக்கு நம்மால் நிலங்களை கையகப் படுத்த முடியும்போது கால்வாய்கள் அமைக்க நிலங்களை கையகப் படுத்த முடியாதா என்ன? தவிர இந்த கால்வாய்கள் வந்தால் அந்த நிலச் சொந்தக்காரர்களுக்கும் கொழுத்த லாபம்தான் கிடைக்கும். நமக்குத் தேவை சரியான களப்பணியாளர்கள்தான்)


போக்குவரத்தை சுலபமாக்கி தண்ணீர் போதுமான அளவு கிடைக்கும் வகையில் செய்து விட்டால் கண்டிப்பாக கிராமங்கள் பலம் பெறும். தொழிற்சாலைகளை நகரத்திலேயே குவிக்காமல் அருகிலுள்ள சிறு நகரஙகளுக்கு மாற்றி அங்கிருந்து பெரு நகரத்துக்கு போக்கு வரத்தினை துரிதப் படுத்தினாலே  கிராமங்கள் நன்கு பலப் படும்.  

சரிநிகர் சமப்படுத்தப் பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு கிராம ராஜ்யமே தீர்வாக இருக்க முடியும். இல்லையென்றால் பணக்காரர்கள் பணக்காரர்கள் ஆகிக் கொண்டே இருப்பார்கள். ஏழைகள் ஏழைகள் ஆகிக் கொண்டே இருப்பார்கள்.

//கோவாவில் நடைபெற்ற விழாவில் சசி தரூர் பேசியதாவது:-

தங்களுக்கு தேவையான அனைத்து வளங்களையும் கிராமங்களே உருவாக்கிக் கொள்ளக்கூடிய கிராம ராஜ்ஜியம் பற்றி மகாத்மா காந்தி பேசி வந்தார்.

உலகமயமாக்கல், தொலைத்தொடர்பில் நவீனத்துவம் என்று மாறிவரும் தற்கால சூழலில் காந்தி விரும்பிய கிராம ராஜ்ஜியம் என்பது சாத்தியமில்லாத இலக்காகவே தோன்றுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.//
//      

எனக்கென்னவே தொலை தொடர்பு வசதி என்பதை  கிராமங்களுக்கு கொடுக்க முடியாது என்பது போல பேசி இருப்பதாக தோன்றுகிறது. கிராமத்தான் முன்னேறிவிடக் கூடாது என்ற எண்ணமே அவர் நெஞ்சில் இருப்பதாக தோன்றுகிறது.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails