Wednesday, December 25, 2013

பாட்ஷா பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

இப்போது சன் டிவியில் பாட்ஷா படம் ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்தப் படம் இந்தியில் வந்த ஹம் படத்தில் தழுவல் என்பார்கள். இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட வித்தியாசங்களை படிக்க இந்த இடத்தை கிளிக் செய்து படித்துப் பாருங்கள்.


சாம்பிள் வரிகள் சில

///////////////////////சத்யா மூவீஸாரின் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்றாலும் ஹம் படத்தில் ரஜினி ஹீரோ அல்ல. பாஷாவில் தம்பியாக ஒரு போலீஸ் வருவாரே அந்தப் பாத்திரம்தான் ரஜினிக்கு. நீங்க யாரு.., பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று ரஜினியைப் பார்த்து பேசுவது போல ரஜினி அந்தப் படத்தில் இவர் பேரு டைகர், பம்பாயில் ஒரு கிரிமினல் என்றுஅமிதாப்பைப் பார்த்து பேசுவார். அவ்வளவுதான். இத்தனைக்கும் இந்தப் படம் 1991ல் வந்திருக்கிறது. 91ல் தளபதி, மன்னன் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும் கூட மாப்பிள்ளை, பணக்காரன் என்று எல்லாமே ஹிட்டோஹிட்தான்.  ராமராஜன், மைக் மோகன், டி.ஆர். பாக்கியராஜ் போன்ற வெள்ளிவிழா குரூப்ஸ் தங்கள் கடையை காலி செய்து கொண்டிருக்கும்போது, டெண்டுல்கர் போல நின்று நிலையாக ஹிட்களைக் கொடுத்துக் கொண்டு  தான் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த ஆண்டு அது. அந்த ஆண்டில் அப்படி ஒரு படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்./////////////////  

Thursday, December 19, 2013

HUM- திரை விமர்சனம்.

ஹம் படம் தமிழ்நாட்டு மக்களுக்கே பரிச்சயம் ஆன ஒரு படம். இந்தப் படத்தை அடிப்படையாகக் கொண்டு சத்யா மூவிஸ் எடுத்த படம். அந்தப் படத்தின் வெற்றி விழா . அதைத் தொடந்து சத்யா மூவிஸ் நிர்வாகிக்க்கு ஏற்பட்ட பிரச்ச்னைகள் போன்றவை தமிழ்நாட்டுக்கே அந்த ஆண்டு பிஸியாக அமைய வைத்தன.
http://www.webmallindia.com/img/film/hindi/hum_1323173487.jpg
சத்யா மூவீஸாரின் படத்தில் ரஜினிதான் ஹீரோ என்றாலும் ஹம் படத்தில் ரஜினி ஹீரோ அல்ல. பாஷாவில் தம்பியாக ஒரு போலீஸ் வருவாரே அந்தப் பாத்திரம்தான் ரஜினிக்கு. நீங்க யாரு.., பம்பாயில என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்று ரஜினியைப் பார்த்து பேசுவது போல ரஜினி அந்தப் படத்தில் இவர் பேரு டைகர், பம்பாயில் ஒரு கிரிமினல் என்றுஅமிதாப்பைப் பார்த்து பேசுவார். அவ்வளவுதான். இத்தனைக்கும் இந்தப் படம் 1991ல் வந்திருக்கிறது. 91ல் தளபதி, மன்னன் என்று பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னாலும் கூட மாப்பிள்ளை, பணக்காரன் என்று எல்லாமே ஹிட்டோஹிட்தான்.  ராமராஜன், மைக் மோகன், டி.ஆர். பாக்கியராஜ் போன்ற வெள்ளிவிழா குரூப்ஸ் தங்கள் கடையை காலி செய்து கொண்டிருக்கும்போது, டெண்டுல்கர் போல நின்று நிலையாக ஹிட்களைக் கொடுத்துக் கொண்டு  தான் ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்த ஆண்டு அது. அந்த ஆண்டில் அப்படி ஒரு படத்தில் ரஜினி நடித்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.


அதற்கு முந்தைய சில வருடங்களில் அமிதாப் பச்சனின் படங்கள் வரிசையாக வெற்றியடையாமல் போயின. அமிதாப்பின் வெற்றிப் படஙக்ள் பலவும் ரஜினியால் ரீமேக் செய்யப் பட்டு இங்கு  ஹிட் ஆனவை. தவிரவும் ரஜினி, கமல் ஆகியோர் இந்தியில் நுழைந்த போது அந்தப் படங்கள் ஒரு துவக்கம் கொடுப்பதற்காக அமிதாப் நடித்துக் கொடுத்திருக்கிறார்.  90களில் ரஜினிக்கு தென்னிந்தியா முழுவதுமே ஒரு மார்க்கெட் இருந்தது. நம்பினால் நம்புங்கள் 94- 95 களில் பல தெலுங்கு படங்கள், வெறுமனவே ரம்பாவையும், ரம்யா கிருஷ்ணனையும் நம்பி இங்கு கல்லா கட்டியுள்ளன. இது இல்லாமல் சிரஞ்சீவி, விஜ்யசாந்திக்கெல்லாம் இங்கு தனி மார்க்கெட்டே உண்டு. அதே கணக்கில் பார்த்தால் ரஜினி நடித்திருப்பது தென்னிந்திய சிறு நகரங்களில் ஒரு நல்ல துவக்கத்தையே கொடுத்திருக்கும். இதில் அமிதாப்பிற்கு ஜோடி இருக்கு ஆனால் இல்லை.. அப்போதைய இளைஞன் கோவிந்தாவும் அதில் நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பிற்கு நிஜமாகவே அமிதாப் ஒரு ஓய்வு எடுத்தார். அதுவரை இதுதான் கடைசி, இதுதான் கடைசி என்றே சொல்வார்கள். ஆனால் அடுத்த படம் வரும். இந்தப் படம் ஓரளவு ஹிட்தான். அமிதாப்பும் ஓய்வு எடுத்தார். அந்த ஹிட்டுக்கு உதவுவதற்காக ரஜினி இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்ததாகவே எனக்குத் தோன்றுகிறது.

=======================================================================

கதைன்னுப் பார்த்தா ஒரு வரிசையில் சொல்லலாம் மூன்று அண்ணன் தம்பிகள். ஒரு குடும்பப்பாட்டு கிளைமாக்ஸ் காட்சியில் அந்தப் பாட்டைப் பாடி எல்லோரும் ஒன்று சேர்வார்கள்.  யதோன் கி பாரத் என்ற பெயரில் வந்த படம். அதில் அண்ணன் தம்பிகள் ரயிலில் பிரிவார்கள். இதில் மூவரும் சேர்ந்தே ஏறிவிடுவார்கள். அதனால் பிரியவெ மாட்டார்கள். கிளைமாக்ஸில் வில்லன் கட்டி வைத்த பின்னர் குடும்பப் பாட்டை பாடி சேர்ந்து விடுவார்கள்.  இது போலவே  அண்ணன் தம்பிகள் கடைசி வரையில் பிரியாமல் நின்று படம் முடிந்த பின் குடும்பப் பாட்டு பாடுவார்கள் விஜய காந்த் நடித்த வானத்தைப் போல படத்தில் ., அதையும் கூட இந்தப் படத்தின் ரீமேக் என்று சொல்லலாம். ஆனால் ஏனோ சொல்லவில்லை

==============================================================
பாஷா இந்தியில் மீண்டும் ரீமேக் செய்யப் பட்டு அங்கும் நன்றாக ஓடியதாகச் சொல்கிறார்கள். அந்த அளவு ஹம் மிலிருந்து பாஷா மாற்றப் பட்டுள்ளது.

இந்தியில் இந்த ஃப்ளாஷ் பேக் அதனுள் ஒரு ஃப்ளாஷ் பேக் என்றெல்லாம் கிடையாது. சீரான வரிசையாகக் காட்சிகள்தான்.   டைகர் (அவர்தாம் மாணிக் பாஷா) ஒரு கோபக் கார இளைஞர் .அவரது நண்பர்  கோன்சால் கண்ணாடி போட்ட இன்னொரு இளைஞர். இவர்கள்  மும்பை தாதா பாக்தாவர் (நம்ம ஆண்டணி)ஐ  எதிர்கிறார்கள்.  கோன்சாலின் சகோதரி ஜும்மா ஒரு நடனமாது. அவரோடு டீ கப் வைத்துக் கொண்டு ஒரு குத்துப் பாடல் இரண்டு முறை இருக்கிறது.



 டைகரின் அப்பா , மாணிக்கத்தின் அப்பாவைப் போலவே வில்லனிடம் வேலை பார்க்கிறார். டைகரின் அப்பாவுக்கும் இரண்டாம் தாரம் உண்டு. இரு மகன்கள்.  டைகரின் நண்பரைக் கொல்ல, டைகர் கொதித்து எழ  டைகரை காப்பாற்ற டைகரின் அப்பாவும் மாற்றாந்தாயும் பலியாகிறார்கள். கொதித்தெழுந்த டைகர் பாக்தாவாரின் சாம்ராஜ்யத்தை சூரையாடி விட்டு பாக்தாவரை கொல்லப் போகும்போது அங்கொரு டேஞ்சர் காமெடி போலீஸ் அனுபம் கேர் வந்து டைகரை போகச் சொல்லி விடுகிறார். வில்லனின் வீட்டை சூறையாடி விட்டு. அந்த ஊர் ஆண்டனியின் மனைவி குழந்தையை கொன்று விடுகிறார்.

டேஞ்சர் காமெடி போலிஸ் டைகர் ஒரு கெட்டவன் என்று அலுவலக குறிப்பு எழுதி வைத்து விட்டு தொழிலதிபராக செட்டில் ஆகி விடுகிறார். டைகர்தான் வில்லனின் வீட்டைக் கொள்ளையடித்துவிட்டு மனைவி குழந்தையை கொன்றதாக கதை பரப்பி விடுகிறார்.

டைகர் ரயிலில் பாம்பேயை விட்டு வெளியெறுகிறார், அவரது தோழியோடும் சின்னத் தம்பிகளோடும் ஓடும் ரயில் ஏறுகிறார். எல்லோரும் ஏறிய பின் உனது பழைய வாழ்க்கை எதுவும் வேண்டாம். நீ உன் தம்பிகளிடம் முழு அன்பைச் செலுத்து என்று சொல்லி விட்டு ஜும்மா நின்று விடுகிறார்.


கொஞ்சம் மொக்கையாகத் தெரிகிறதா?  அதனால்தான் சத்யா மூவீஸ் கதை இலாகா பிச்சுப் பிச்சு ஃபிளாஷ்பாக் ஆக்கியிருக்கிறார்.



அடுத்த காட்சியில் நேராக ஊட்டிக்கு வந்து விடுகிறார்கள்.  பெரிய தம்பி நல்லா படிச்சு இன்ஸ்பெக்ட்ராகி கல்யாணம்  ஆகி நன்றாக பாட்டுப் படிக்கக் கூடிய பெரிய சைஸ் குழந்தை ஒன்றும் இருக்கிறது.  ஃப்ளாஷ் பாக்கில் அவரை விட ச்ற்றே சின்னப் பையனாக இருக்கும் சின்னத்தம்பி கல்லூரி மாணவனாகவே  இருக்கிறார். மக்குப் பையன் ப்போல..

வீட்டில் ஒவ்வொருவரும் அவரை விரட்ட பம்பரமாய் சுற்றி வேலை செய்கிறார். அந்த வேகத்தில் அவர் கீழே விழுகிறார். விழுந்த உடன் இந்தக் குடும்பத்தின் வேகத்திற்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை என்று கூறி அழுகிறார். உடனே  குடும்பப் பாட்டைப் பாடி சமாதானப் படுத்துகிறார்கள்.



சின்னத் தம்பி  கோவிந்தா ஒரு பெண்ணைக் காதலிக்க பெண்ணின் தந்தையின் விருப்பத்திற்கேற்ப ஒரு மிலிட்டரிக்காரராக வேடமிட்டு அமிதாப் குடும்பட்த்துடன் செல்ல குட்டு  வெளிப்பட   பெண்ணின் வீட்டில் அவரை த் துப்புகிறார். உடனே ரஜினியின் மனைவியாக வரும் பெண் ஐந்து விரல்களையும் காட்டி குடும்பப் பாட்டை ப் பாடுகீறார்.



இதே மாதிரி தங்கையின் திருமணத்திற்காக ரஜினி பேசும்போது அவர்து மாற்றாந்தாய் ரஜினியைப் புகழ்ந்து பேசுவார். ரஜினி எல்லாத்தையும் விட்டு கொடுப்பதாகப் பேசுவார். இதில் பெரிய தம்பியின் மனைவி கூட்டுக் குடும்பத்தைப் ப்ற்றியே பேசுவார்.


அப்படியே படம் செல்ல மெயின் வில்லன் வெளியேறி வருகிறார். உடைந்து போன தன் வீட்டைப் பார்த்து விட்டு டைகரைத்தேட ஆள் அனுப்புகிறார்.  கடைசியில் ஊட்டி வீட்டைக் கண்டு பிடித்து விடுகிறார்கள்.

ரஜினியின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை என்று மாமியாருக்கும், மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை என்று இவர்களுக்கும் தந்தி வருகிறது.

ரஜினியின் மனைவி, குழந்தையை வில்லன் கடத்தி, தனது உடைந்து போன பழைய வீட்டில் அடைத்து வைக்கிறார். அமிதாப் வீட்டிற்கு ஃபோன் செய்து டைகரைக் கேட்கிறார். ரஜினிக்கு பழசெல்லாம் தெரியாததால் கோன் டைகர் என்று சொல்லி ஃபோனை கட் செய்கிறார்.   ரஜினியின் மனைவி மற்றும் குழந்தையைத் தேடி பெங்களூருவுக்குச் செல்கிறார்கள். இருவரையும் விசாரிக்கும்போது ஒரு டிரைவர் தவறாகப் பேச அமிதாப் கொதித்தெழுந்து அவனைப் புரட்டி விடுகிறார். அதற்கு ஈடாக தமிழில் ரஜினிக்கு கோபம் வரும் காட்சி  படும் பயங்கரமாக இருக்கும்.


அமிதாப் டைகரைப் பற்றி தெரிந்த தன் கடந்த கால நண்பர்களுடன் ஃபோன் செய்ய  ஜும்மா பெங்களூரில் இருப்பது தெரிய வருகிறது. அவரைப் பார்க்க போகிறார். இந்தக் காட்சி வரை படம் வானத்தைப் போல படம் மாதிரியே ஒரு திகிலுடன் தான் செல்கிறது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டை அடைந்த உடன் இந்தக் காட்சி வருகிறது.



ஜும்மா பழைய பாடல் ஒரு குஜாலாகப் பாடுகிறார்.  படம் அப்படியே கமர்ஷியல் ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுகிறது. இந்த நிலையில் ரஜினிக்கு திரும்பவும் ஃபோன் வருகிறது. உன் அண்ணந்தான் டைகர் என்று சொல்கிறது. உடனே அவர் பழைய ஃபைல்களை எடுத்துப் பார்க்கிறார். அதில் இன்ஸ்பெக்டர் கிரிதர் அவரைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதி இருப்பதை படித்து விட்டு வருகிறார்.  வீட்டிற்கு நுழைந்த உடன் அமிதாப்பை இவர் ஒரு பயங்கர ரவுடி என்று வீட்டிற்குள் திட்டுகீறார்.

இந்தக் காட்சியில் அவர் ஒரு இன்ஸ்பெக்டர் என்பது நினைவுக்கு வந்து துப்பாக்கியைக் காட்டி அண்ணனை கைது செய்யப் பார்க்க சின்னத் தம்பி குறுக்கே பாய்ந்து தடுக்க அண்ணன் தப்பிச் செல்ல இணைந்த கைகள் எதிரும் புதிருமாக மாறுகின்றன. அமிதாப் தப்பிச் சென்றவுடன் ஜும்மா பேச ஆரம்பிக்கிறார். தம்பிகளுக்காக அவர் வாழ்க்கையையே தியாகம் செய்ததையும், அதுவும் மாற்றாந்தாய் வழித் தம்பிகள் என்பதையும் எடுத்துச்சொல்கிறா. உடனே ரஜினி திருந்தி விடுகிறார். கதையின் பிற்பகுதி ரஜினியின் மனைவி குழந்தையைச் சுற்றி வந்தாலும் இந்தக் கதாபாத்திரம் 1991ம் ஆண்டு ரஜினிக்கானது அல்ல.   கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே தெரியும் உண்மை. மார்க்கெட்டிங்கிற்காக நடித்துக் கொடுத்தது போலவே இருக்கிறது.


அதற்குள்  அமிதாப் வில்லனின் இடத்திற்குள் சென்று விட ரஜினியின் குடும்பத்தை வெடி குண்டால் கட்டி வைத்து அவரைச் சுற்றி பெரிய அடியாள் படையுடன் வில்லன் நிற்கிறார். வழக்கம்போல உரத்த குரலில் அமிதாப் பேசுகிறார். சண்டை உனக்கும் எனக்கும்தான் . உன் குடும்பத்தை நான் ஒன்றும் செய்யவில்லை என்று பாஷா போலவே பேசுகிறார். குடும்பத்தைக் கொன்றது. சூரையாடியது எல்லாம்  இன்ஸ்பெக்டர் கிரிதர்தான் என்று சொல்கிறார். அதை உறுதி படுத்துவதற்காக சிரிப்பு போலீஸ் கிரிதர் ஹெலிகாப்டரில் வந்து அத்தனை அடியாட்களை மெஷின் கன் வைத்து சுட்டுவிட்டு படத்தின் முக்கிய வில்லனாக பிரமோசன் பெறுகிறார்.  சகோதரர்கள் பாட்டுப் பாடிவிட்டு ஒருவரை ஒரு கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்படியே ரஜியின் மனைவியைத் தூக்கி தண்ணீருக்குள் போட்டு விடுகிறார்கள்.  சண்டை நடக்கிறது.  கடைசியில் ராணுவம் வருகிறது.  பழைய வில்லன் புதிய வில்லன்மேல் வெடிகுண்டினை மாட்டிவிட பாஷா போல அமிதாப் தலைமேல் அவரைத் தூக்கி இவர் போல போடுகீறார். வெடிகுண்டு வெடித்து வில்லன்கள் சாக  இவர்கள் எல்லோரும் ஒன்று சேருகிறார்கள். சுபம்.


படத்தின் முக்கிய வித்தியாசம் என்னவென்றால் டைகர் ஒரு சராசரி கோபக்கார இளைஞர்.  பாஷா அதிபயங்கர சக்திவாய்ந்த கடத்தல் மன்னன்.

மற்றபடி சிரிப்பு போலீஸ்- கேசவன், கோவிந்தா யுவராணி அப்படி இப்படி என்று சின்ன சின்ன மாறுதல்தான்.


வில்லனின் பெண்ணை தூக்கிக் கொண்டு போய் வளர்ப்பதாக சின்ன வயதில் ஏதோ ஒரு படத்தில் பார்த்த நினைவு. ஆனால் ஹம்மில் தாய் மகள் இருவரையும் கொன்று விடுகிறார். அது எந்த படம் என்று இல்லை.

ஜும்மா பாத்திரத்தை ஃபிளாஷ்பாக் காட்சிகளில் தமிழ்படத்தில் காட்டவேவில்லை . ஃப்ளாஷ்பாக்கிலும் நக்மா வந்திருந்தால் ரசிகர்கள் குழம்பாமல் இருந்திருப்பார்கள். படத்தின் பிற்பகுதியில் வரும் ஜும்மா நக்மா போலத்தான் இளமையாக இருக்கிறார்,.



Saturday, December 14, 2013

கல்யாண சமையல் சாதம்- ஏ கிளாஸ்

டிஸ்கி:- முன்னொரு காலத்தில் முத்துராமன் மஞ்சுளா நடிப்பில் மறுபிறவி என்றொரு படம் வந்தது. 1995-98ல் சன் டிவியை இரவு 12க்கு மேல் பார்த்த ரசிக கண்மனிகளுக்கு அந்தப் படம் ரொம்பவும் பரிச்சயம். அடுத்த கட்டத்தில் கார்த்திக் ராதா நடிப்பில் வாலிபமே வா வா என்றொரு படம். அதுவும் பிரபலம்தான்.  இப்போது அடுத்த காலகட்டம். அதே போன்றதொரு கதை. ஆனால் கவுதம் கார்த்திக் நடிக்கவில்லை. பிரசன்னா நடித்து இருக்கிறார். அந்தப் படம் தான் கல்யாண சமையல் சாதம்.


முதலில் இந்தப் படம் ஆகா போன்றதொரு படம்போல என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் தயிர் சாதம் மட்டும் சாப்பிடும் எண்ணத்தில் படம் பார்க்க ஆரம்பித்தவனுக்கு ஓப்பனிங்கே ஒரு இன்ப அதிர்ச்சிதான்.  பொண்ணு உட்கார்ந்துட்டா, ஓ உட்கார்ந்துட்டாளா..., நானும்தான் உட்கார்ந்துட்டேன் என்று ஆரம்பித்து,  if u want to talk, first learn WHISPER, உடனே ஒரு கெக்கெபிக்கே சிரிப்பு என்று டைட்டில் போடுகிறது.

முதல் படத்தில் கல்யாணத்திற்கு பிறகு முத்துராமனுக்கு அதில் ஒரு பலஹீனம் தென்படும். அவரது மனைவி தனது தளராத முயற்சியால் அதை சரிசெய்வார்.

இரண்டாவது படத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் ராதா போடும் சண்டை, மற்றும் கார்த்திக்கின் ஃபேவரிட் குத்துச் சண்டை வீரரின் மேல் திணிக்கப் படும் சதியின் காரணமாக கார்த்திக் தானும் ஒரு பலவீனமான மனிதரோ என்று வீட்டைவிட்டு ஓட கிளைமாக்ஸில் ராதா தானே களத்தில் இறங்கி, அவரும் வெற்றி பெற்று கார்த்திக்கையும் வெற்றியடையச் செய்வார். அவர்கள் இருவரும் வெற்றி யடைந்ததை அவர்களது சொந்தக் காரர்கள் வரிசையாக வந்து பார்த்து மகிழச்சியடைந்து செல்வார்கள்.

இந்தப் படத்தில் என்னவென்றால் முழுக்க முழுக்க ஒரு அரேஞ்சுடு மேரேஜ். பார்த்ததும் நாயகியிடம் விழுந்து விடுகிறார். ஹீரோ .   அவரது தாசானுதாசன் ஆகி விடுகிறார்.  திருமணத்துக்கு முன்பே ஒரு முயற்சித்துப் பார்க்க்க ..........., முயற்சி தோல்வி அடைகிறது.    இந்த முயற்சிக்கு முன்னால் சில டயலாக்குகள்,, இப்பெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிய மக்கள் களத்தில் இறங்கிடறாங்க,, இன்னும் சிலர் கல்லூரியின் போதே.., நீ அப்படி இல்லையில்ல என்று......  அதாவது ஹீரோ ஹீரோயின் சுத்தமானவங்களாம்........., 


இந்த இடத்தில்தான்  பழையகால விமர்சனங்கள் சில நினைவுக்கு வ்ந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், அரங்கேற்றம் போன்ற சில ப்டங்கள் பற்றிய பேச்சுவந்த போது அந்த ப் படத்தின் நாயகிகள் எல்லாம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக படைப்பக்கப் பட்டிருப்பார்கள்,  அதற்காக சிலர் கொதித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது படைப்பாளிகளால் சொல்லப் பட்ட ஒரு விளக்கம். பொதுவாக நாயகி கெட்டுப் போகிறார் என்றால் அவர் சுத்தமானவர் என்பதை மக்களிடம் காட்டவேண்டுமாம். இயல்பான கதாநாயகி கெட்டுப் போகிறார் என்றால் மக்களிடம் அதிர்ச்சி எதுவும் வராதாம். அதனால் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த கதாநாயகியைக் காட்டுவார்களாம். அவர்கள் கெட்டுப் போனால் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி உருவாகுமாம. ஒரு வேளை அதே தியரிதான் இங்கு உபயோகப் படுத்தப் பட்டு நாயகனையும் நாயகியையும் குறிப்பிட்ட சமூகத்தில் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் கூட எழுகிறது.

நாயகி மனதளவில் நாயகனுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்.  மறுபிறவியில் திருமணம் முடிந்து விட்டதால் மஞ்சுளா தனது கணவனை மீட்டெடுக்க கண்டபடி போராடுவார். பார்க்கும் நமக்கு தண்ணீரே வந்துவிடும் கண்களில்.



வாலிபமே வா வாவில் கார்த்திக்கின் போராட்டம்தான் படம் முழுவதும் ராதாவின் அதிரடி கிளைமாக்ஸில்தான்.  கிளைமாக்ஸ் முடிந்ததும் அவர்களின் சொந்தக்காரர்கள் பார்த்து சந்தோசப் படுவதுபோல் நாமும் சந்தோஷப் படுவோம்.



 இதில் கல்யாணம் ஆகவில்லை. தவிரவும் இவர்கள் சுத்தமானவர்கள். அதனால் அவருக்கு முழு அளவில் ஆதரவு கொடுக்கிறார் மனதளவில்.  பல இடங்களில் உட்கார்ந்து இது பற்றிப் பேசுகிறார்.

கோபத்தில் மாப்பிள்ளை ஒரு புஸ்ஸூ என்று சொல்லுவிட்டு ஹீரோ வருத்தப் படுவாரோ என்று இவர் வருத்தப் படுகிறார். மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்ச்னை இருப்பது தெரிந்தும் மாமனார் திருமணத்தை தொடர்ந்து நடத்துகிறார். வாழ்க அந்த மாமனார்.   இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்வதற்குக்கூட பிரசன்னா அவ்வளவு கூச்சப் படுகிறார். அந்த அளவுக்கு அவர் நல்லவராம்.  இவ்வாறாக பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்பதிலேயேபடத்தை கொண்டு போகிறார்கள். கடைசியில் அவருக்கு எப்படி சரியானது என்பது தெரியாமலேயே சரியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

Monday, December 9, 2013

நீங்களும் ஆகலாம் அர்விந்த் கஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வாக்குகள் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கும். ஊழலுக்கு எதிராக அவதாரம் எடுத்திருக்கும் கட்சியாக துடைப்பம் கொண்டு துடைக்கக் கூடிய பொருளாக ஊழலை கற்பனை செய்து கொண்டுள்ள மக்களுக்கு ஆம் ஆத்மி ஒரு அவதாரமாகவே தோன்றும். அவர்களிடம் ஊழலை கழுவி சுத்தம் செய்யக்கூடாதா, எரித்து சுத்தம் செய்யக்கூடாதா என்பதெல்ல இந்த இடுகையின் நோக்கம்,  ஆம் ஆத்மியின் வெற்றியில் நமக்கு தெரியும் செய்தி என்ன? என்பதுதான்.

அஸ்ஸாம் கனபரிசத் கட்சியின் வரலாறு தெரியாதவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கலாம்.  ஆனானப் பட்ட அஸ்ஸாம் கனபரிசத் கட்சியே இப்போது பத்தோடு பதினொன்ரு எண்ணும்போது மற்றவர்களைப் பற்றி பேச வேண்டியதே இல்லை.

கஜ்ரிவால் போல திட்டம் போட்டால் யாவருமே வெற்றியை நோக்கிப் போக முடியும்.  கஜ்ரிவால் நினைத்திருந்தால் அகில உலக தேசிய கட்சியை ஆரம்பித்திருக்க முடியும். ஆரம்பித்து ஐந்து மாநில தேர்தல்களில் ஒரு கலக்குக் கலக்கி ஒரு விஜய காந்த் ஆகவோ அல்லது ஒரு சிரன்சீவி ஆகவோ மாறி இருக்கலாம். ஆனால் அவர்கள் டெல்லியில் மட்டும் தனது வேட்டையைக் காட்டி ஒரு சூப்பர் ஹீரோவாக மாறிவிட்டார். 

சமுதாயத்தை ஊழலற்றதாக மாற்ற நினைக்கும் மக்கள் நம் ஊரில் கூட மாநகராட்சி அளவில், நகராட்சி அளவில் கட்சி அல்லது கட்சி போன்ற அமைப்பை ஆரம்பிக்கலாம். உள்ளூரிலேயே ஆயிரக் கணக்கில் பிரச்சனைகள் இருக்கின்றன.  மாநகராட்சி போன்ற அமைப்புகள் நினைத்தால் அதிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் நினைத்தால் மிக்ச் சிறப்பான நிர்வாகத்தை தரமுடியும்.

முழுநேர அரசியலில் ஈடுபடும் அளவிற்கு வசதி இருப்பவர்கள் அவரவர் ஊர்களில் ஒன்று சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பியுங்களேன். இன்று ஒரு சில பிரதிநிதிகளின் வருமானத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் பாதி அளவுக்கு மக்களுக்கு செலவு செய்தாலே மக்கள் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

Sunday, December 8, 2013

சச்சினை வீழ்த்திய பிபாசா பாசு

டிஸ்கி:- இது கொஞ்சம் காலதாமதமாக வந்த இடுகையாக இருந்தாலுன் கூட இப்போது அலசுவது என்பது கொஞ்சம் நடுநிலையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

சச்சின் ரசிகர்களால் அப்படி இப்படி பேசப்பட்டாலும்  உண்மையில் வெளியான போது தோல்வியான திரைக்கதை அது. சச்சின் வெளியான போது நான் திரைப் படம் பார்க்காமல் இருந்த காலகட்டம் தவிர அப்போது பிளாக்கர் எல்லாம் இருந்ததா என்றும் தெரிய வில்லை. நானும் களத்தில் இல்லை.

 சமீபத்தில்தான் எனக்கு இந்தப் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய் ரசிகர்கள்  சிறப்பாகவே சொல்லியிருந்ததால் நானும் நல்ல எதிர்பார்ப்புடந்தான் பார்க்க ஆரம்பித்தேன்.  படம் பார்த்தபின் அது ஒரு படத்துக்கான எல்லா விஷயங்களுடந்தான் இருந்தது. இருந்தாலும் படத்தின் தோல்விக்கான் காரணத்தை அலசியபோது சில் விஷயங்கள் வெளிப்படையாகவே தெரிந்தன.


1.இது போன்ற ஜனரஞ்சகமான படத்துக்கு ஏ சர்டிஃபிகேட் அனாவசியம். குறிப்பாக அதைத் தவிர்த்திருக்க வேண்டும்.  முக்கியமாக குஷி மும்தாஜ் கதாபாத்திரத்திற்கு அந்த வயோதிக தோற்றம் உடைய பிபாசா அம்மையார் தேவையே இல்லை. அதுவும் கல்லூரி முடிய 30 நாட்கள் இருக்கும் நிலையில் நடனப் பயிற்சி எல்லாம் செய்யும் செய்யும் பெண்மணி தேவையே இல்லை.


2.குஷி வெற்றியடைந்திருந்த சில வருடங்கள் வெளிவந்த திருடா திருடியும் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.  இரண்டும் ஈகோ அடிப்படையில் வெளிவந்த படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  திருடா திருடிக்கும்  எம்ஜியாரின் அன்பே வாவுக்கும் உள்ள தொடர்பு ரீமேக் லேபிளை சுண்டி தெரிந்து கொள்ள முடியும். இந்தப் படத்திலும் சரோஜா தேவி சொல்லும் அதே காரணத்தை ஜெனிலியா கிளை மாக்ஸில் சொல்லுகிறார்.   இந்தப் படத்தை குஷி பார்ட் 2 என்றே ரிலீஸ் செய்து இருக்கலாம்.

3.இது போன்ற படங்களுக்கு நல்ல காதல் பாடல்கள் அவசியம். இந்த படத்தில் அவை சுத்தமாக மிஸ்ஸிங்.  ஒருவேளை நல்ல பாடல்கள் இருந்திருந்தால்  இந்தப் பாடல்களும் ஹிட் அடித்திருக்கும்.



4. அந்தப் படம் வந்த போது நாயகி தேர்வைப் பற்றியும் குறை சொல்லி பத்திரிக்கைகளில் எழுதியதாக நினைவு. ஒரு வேளை படம் வெற்றி பெற்றிருந்தால் ஜெனிலியாவை சரியான தேர்வு என்று சொல்லி இருப்பார்கள். இப்போது பார்க்கும்போது பாத்திரத்தில் அவர் சரியாகத்தான் பொருந்தி இருப்பதாகத் தோன்றுகிறது.


மொத்தத்தில்  மிக லேசான சருக்கல்களால் மிகப் பெரிய வெற்றிப் படமாக வந்திருக்க வேண்டிய படம் தூங்கி விட்டதாகவே தோன்றுகிறது. சருக்கல்கள் இருந்தாலும் இன்று மீண்டும் ரிலீஸ் செய்தாலும் படம் வெளியான போது கிடைத்த வர வேற்பை விட இன்று நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails