Friday, June 24, 2011

900/1200 க்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட்

இன்றைய தேதியில் எம்பிபிஎஸ் சீட்டுக்காக பெற்றோர் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.  (சில பெற்றோர் லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் சீட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வோம்). தமிழ்நாட்டில் கட் ஆஃப் மதிப்பெண் ஒன்று இரண்டு குறைந்தால் கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் சில லட்சங்கள் அதிகம் ஆகிக் கொண்டே இருக்கிறதாம்.

ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர 900 மதிப்பெண் எடுத்தாலே கூடப் போதும். ஆனால் என்ன கீழே கொடுக்கப் பட்டிருப்பதுபோல மதிப்பெண் வாங்கி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

உயிரியல்- 200/200
வேதியியல் 200/200
இயற்பியல் 200/200
கணிதம் 100/200
தமிழ் 100/200
ஆங்கிலம் 100/200

நம்பினால் நம்புங்கள் மேலே உள்ளமாதிரி மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் கண்டிப்பாக உங்களது 900 மதிப்பெண்ணுக்கே எம்.பி.பி.எஸ் சீட் கண்டிப்பாக கிடைக்கும்.

15 comments:

bandhu said...

ஒரு சீரியஸ் கேள்வி.. அரசு மருத்துவ கல்லூரிகளில் NRI அட்மிஷன் உள்ளதா?

வீராங்கன் said...

//bandhu said...

ஒரு சீரியஸ் கேள்வி.. அரசு மருத்துவ கல்லூரிகளில் NRI அட்மிஷன் உள்ளதா?
//

தமிழகத்தில் இல்லை

THOPPITHOPPI said...

//உயிரியல்- 200/200
வேதியியல் 200/200
இயற்பியல் 200/200 //

இப்படி கடினமான பாடங்களில் இருநூறுக்கு இருநூறு எடுத்தவனால் ஆங்கிலம் மற்றும் தமிழில் 180 மேல் எடுக்க முடியாதா என்ன? இருந்தாலும் உங்கள் கணக்குப்படி ஒத்துக்கலாம். ஆனால் உங்கள் கூற்றுப்படி ஒருவர் தேர்வாக வேண்டும் என்றால் வேண்டும் என்றே ஒரு நன்றாக படிக்கும் மாணவன் கணிதம்,தமிழ்,ஆங்கிலத்தில் குறைத்து மதிப்பெண் எடுத்தால்தான் உண்டு.

நல்ல கண்டுபிடிப்பு.இது இன்வென்ஷனா இல்லை டிஸ்கவரியா?

மதுரை சரவணன் said...

saaththiyamaana unmai.. ithil moli paadangkalukku mukkiyaththuvam illai.. pakirvukku nanri. vaalththukkal

yuvaraj said...

70 எடுத்தால் பாஸ்......so 810 enough

அமிழ்து said...

அதுக்கு 810 மதிப்பெண்களே போதுமுங்க! 70 தானே பாஸ் மார்க்.

வீராங்கன் said...

//THOPPITHOPPI said...
கடினமான பாடங்களில் இருநூறுக்கு இருநூறு எடுத்தவனால் ஆங்கிலம் மற்றும் தமிழில் 180 மேல் எடுக்க முடியாதா என்ன? //


வாருங்கள் நண்பரே.., நகரப்புற மாணவர்கள் மாநில ரேன்க் எடுக்காததன் காரணம் இதுதானாம். மொழிப் பாடங்களை கடைசி ஆறு மாதஙக்ளில் தொடுவதே கிடையாதாம். அதனால்தான் விருப்பப பாடங்களில் முழு மதிப்பெண் எடுத்தாலும் மொழிப் பாடங்களில் சற்றுக் குறைந்து மாநில தரவரிசைக்கு வருவதில்லையாம். பேசிக் கொள்கிறார்கள்

வீராங்கன் said...

//மதுரை சரவணன் said...

saaththiyamaana unmai.. ithil moli paadangkalukku mukkiyaththuvam illai.. pakirvukku nanri. vaalththukkal
//

பகிர்வுக்கு நன்றி நண்பரே

வீராங்கன் said...

//yuvaraj said...

70 எடுத்தால் பாஸ்......so 810 enough
//

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

வீராங்கன் said...

//அமிழ்து said...

அதுக்கு 810 மதிப்பெண்களே போதுமுங்க! 70 தானே பாஸ் மார்க்.
//

உண்மை நண்பரே..,

ரம்மி said...

நடந்து முடிந்த 12 வகுப்புத் தேர்வில், 1190 மதிப்பெண்கள் பெற்ற அன்புச் சகோதரி செல்வி.ரேகா, மருத்துவக்கல்லூரி தெரிவு பட்டியலில், முதல் 10 இடங்களில் காணப்படவில்லை!
1. முதல் இடம் - 1182
2. இரண்டாம் இடம் - 1187

இதற்குக் காரணம், 1190 மதிப்பெண்கள் எடுத்த ரேகா, முதலில் பிறக்கவில்லையாம்!

என்னையா கூத்து, இது?

வீராங்கன் said...

//15 73029 REKHA K BC 200.00//

வீராங்கன் said...

ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண்களைப் பெறும்போது, அவர்கள் தனித்தனியே கணிதத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம், இயற்பியலில் பெற்ற மதிப்பெண் சதவீதம், நான்காவது விருப்பப் பாடத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம், பிறந்த தேதி (வயதில்மூத்தவர்களுக்கு முன்னுரிமை), "ரேண்டம்' எண் (உயர்ந்த மதிப்புள்ள எண்ணுக்கு முன்னுரிமை) ஆகியவற்றின் அடிப்படையில், தர வரிசைப் பட்டியலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 17 மாணவர்களுக்கு, "ரேண்டம்' எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு, ஒன்பது மாணவர்களுக்கு மட்டுமே, "ரேண்டம்' எண்கள் பயன்படுத்தப்பட்டன

Anonymous said...

ரஜினி ஆண்டுகளில் ஒரு நல்ல கல்வி ஒரு தனிப்பட்ட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்று வருகின்றது. இங்கே ஏன் இருக்கிறது http://bit.ly/n9GwsR

Unknown said...

ரஜினி அது ஒரு தனிப்பட்ட ஒட்டுமொத்த மாற்றத்தை உதவுகிறது எப்படி கல்வியின் முக்கியத்துவம் பற்றி பேசுகிறது மற்றும்
http://bit.ly/n9GwsR

Post a Comment

நகைச்சுவையான பின்னூட்டங்கள் வரவேற்கப் படுகின்றன்

Recent Posts

Recent Comments

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails