Monday, July 6, 2009

இதுக்கு கூட டிக்கெட்? அதில் இலவசம் வேறு இருக்கிறதாம்

உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன.

சில நடப்புகளை விமர்சிக்கலாம், சில நடப்புகளை விமர்சிக்க முடியாது. அப்படி தயக்கம் காட்டக் கூடிய செய்திகளில் இதுவும் ஒன்று.

மைக்கேல் ஜாக்சனின் இறுதிச் சடங்கு செவ்வாய் கிழமை நடக்க இருக்கிறதாம்.

மைக்கேல் ஜாக்சனின் இறுதி சடங்குகளில் கல்ந்து கொள்ள 11,000 இலவச டிக்கெட்டுகள் போடுவதாக குடும்பத்தார் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் 17,000 பேர் இலவச டிக்கெட் கேட்டு விண்ணத்திருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் சொல்லுகின்றன. செய்தி இங்கே

அப்படியென்றால் இலவச டிக்கெட்டுகள் போக மீதம்..?

இதற்கெல்லாம் டிக்கெட் போடுவார்களா.. ? என்ன?


========================================================
நம் நாட்டில் எத்தனையோ பெரியமனிதர்களுக்கு இறுதி யாத்திரை நடந்திருக்கிறது. எத்தனையோ பேர் அவர்களுக்காக மொட்டை அடித்து சடங்குகள் செய்திருக்கிறார்கள்.

இலவசமாக அனுமதித்த அந்த புண்ணிய ஆத்மாக்கள் வாழ்க! வளர்க அவர்தம் புகழ்

21 comments:

  1. அவரே டிக்கெட்டு வாங்கிட்டுப் போய்ட்டார்.

    ஏகப்பட்ட கடன் வச்சிருககராமே அதை அடைக்க இரசிகர்களிடம் வசூலிக்கிறார்களோ.

    ReplyDelete
  2. you have misunderstood the reasoning behind the tickets.

    the memorial is conducted in a stadium which only fits 17000 people.

    they are giving away 11000 free tickets to fans and the rest are reserved for relatives and friends.

    considering the popularity of jackson and considering the crowd puller he was/is, they cant coordinate a 'open for all' memorial.

    btw, i read somewhere that there were 1.5 million people who registered for these free tickets.

    the website setup for issuing the free ticket received 500 million hits in the 1st hour. This shows Jacksons popularity and fan following.

    ReplyDelete
  3. என்னத்த சொல்றது தலைவரே....
    விட்டா அவுங்க குளிக்கிறத பாக்க கூட
    டிக்கெட் தருவாங்க...

    ReplyDelete
  4. //கோவி.கண்ணன் said...

    அவரே டிக்கெட்டு வாங்கிட்டுப் போய்ட்டார்.

    ஏகப்பட்ட கடன் வச்சிருககராமே அதை அடைக்க இரசிகர்களிடம் வசூலிக்கிறார்களோ.//

    ரிபீபீட்ட்ட்ட்

    ReplyDelete
  5. அண்ணா
    சில நடப்புகளை விமர்சிக்கலாம், சில நடப்புகளை விமர்சிக்க முடியாது. அப்படி தயக்கம் காட்டக் கூடிய செய்திகளில் இதுவும் ஒன்று.

    உண்மை !

    கருத்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  6. என்ன செய்றது சுரேஷ்.

    எல்லாம் நேரம்.

    ReplyDelete
  7. நல்ல விஷயத்துக்கு இலவசம் கொடுத்துடவேண்டியது தான்

    அவர் இறந்தாலும் ஊர் சொல்லுதே அவர் பெயர

    என்னதான் கடன் இருந்தாலும் சாகும் போது சந்தோசமா செத்திருக்கார்

    ReplyDelete
  8. சர்வே சொல்றதக் கேட்டீங்களா?

    ReplyDelete
  9. ஒரு வேளை கூட்டத்தை கட்டுப்படுத்த இருக்கலாம்...

    இதுவும் ஆச்சரியப்படவேண்டியதுதான்

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    கோவி. கண்ணன் சார்,

    SurveySan சார்,

    ஜெட்லி சார்,

    ஆ.ஞானசேகரன் சார்,

    இது நம்ம ஆளு சார்,


    அக்பர் சார்,

    Starjan ( ஸ்டார்ஜன் சார்,

    ராஜ நடராஜன் சார்,

    அபுஅஃப்ஸர் சார்,

    ReplyDelete
  11. // SurveySan said...

    you have misunderstood the reasoning behind the tickets.//

    நன்றி தல.., இவை எனக்கு மிகவும் புதிய தகவல்கள்..,

    ReplyDelete
  12. // ஜெட்லி said...

    என்னத்த சொல்றது தலைவரே....
    விட்டா அவுங்க குளிக்கிறத பாக்க கூட
    டிக்கெட் தருவாங்க...//

    பாவம், அவர்கள் உலகம் அப்படி..,

    ReplyDelete
  13. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...


    என்னதான் கடன் இருந்தாலும் சாகும் போது சந்தோசமா செத்திருக்கார்
    //


    சந்தோஷமாகவா தல?

    ReplyDelete
  14. //அவரே டிக்கெட்டு வாங்கிட்டுப் போய்ட்டார்.

    ஏகப்பட்ட கடன் வச்சிருககராமே அதை அடைக்க இரசிகர்களிடம் வசூலிக்கிறார்களோ.//

    இப்படியும் இருக்கலாம்.

    //ஒரு வேளை கூட்டத்தை கட்டுப்படுத்த இருக்கலாம்...//

    இப்படி கூட இருக்கலாம். அல்லது

    தங்க சவபெட்டிக்காக கூட இருக்கலாம். ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது இயலாதகாரியம். அனைவரும் கடைசியாக ஒருமுறை பார்க்க முனைவார்கள்.

    எனிவே வலி நிறைந்த அவரது வாழ்கை இனியாவது சுகமாக இருக்க பிராத்திப்போம்.

    ReplyDelete
  15. //எனிவே வலி நிறைந்த அவரது வாழ்கை இனியாவது சுகமாக இருக்க பிராத்திப்போம்.//

    பிராத்திப்போம்.., தல..,

    ReplyDelete
  16. சென்ற பதிவில் நீங்கள் எனக்கு சொன்ன பதில் புரியவில்லை விளக்கவும்.

    உங்களுக்காக சுஜாதா பற்றி பதிவு என் பக்கம் வாங்க.

    ReplyDelete
  17. சிலர் வாழும் போது மட்டும் பேசப் படுவார்கள்....இவர் அதில் ஜெயித்து இறந்த பிறகும் பேசப் பட வைக்கிறார் சிலரைப் போல.....(ஆனால் அத்தனையும் அவரது சொத்து, குற்றம்......etc.....இவைகள் பற்றி பேசப் படுவது தான் மிகப் பெரிய விந்தை..)


    நன்றி அண்ணா தொடருங்கள்....

    ReplyDelete
  18. // அக்பர் said...

    சென்ற பதிவில் நீங்கள் எனக்கு சொன்ன பதில் புரியவில்லை விளக்கவும்.//

    நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்

    ReplyDelete
  19. //சப்ராஸ் அபூ பக்கர் said...

    தொடருங்கள்....//

    நன்றி தல,,

    ReplyDelete
  20. ம்ம்ம்... இதுக்கும் மின்னால பாடி பாடி சம்பாதிச்சாரு.. இப்ப அவரு பாடி​யே சம்பாதிக்குது ​போல!

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails