Friday, September 2, 2016

காதலும் களவும் தமிழர் ஒழுக்கம் 31.8.16

நான் சொல்ல வருவது இந்தப் பாடலில் உள்ள செய்தி அல்ல.., இது போன்ற செய்திகளை பொதுவில் சொல்ல பழந்தமிழ் மகளிருக்கு உரிமை இருந்திருக்கிறது. என்பதே ஆகும். ஆணுக்குக்கு இருக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பது புரிந்தாலே, காதலுக்காக சோகமாக சுற்றுவதும் காதலிக்க மறுத்தவளை கொல்வதும் தவிர்க்கப் பட்டுவிடும்.


யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.



இது கபிலர் எழுதிய பாடல், குறுந்தொகை 25
குறிஞ்சித் திணை அதாவது புணர்தலும் புணர்தல் நிமித்தமுமான பாடல்கள் இந்த குறிஞ்சித் திணையில் வரும்.

//யாரும் இல்லை தானே கள்வன்//
அந்த நிகழ்ச்சி நடக்கும்போது யாரும் இல்லை. தானே கள்வன் என்று சொல்வதால் அவன் திருடிவிட்டான் என்று பொருள் கொள்ளலாம். என்ன திருடிவிட்டான். குறிப்பாக சொல்லாததால் நாயகியின் அகம், அல்லது புறம் என்று நமக்கு வசதியாக பொருள் கொண்டு விடலாம்.


//
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ//
நான் நெனச்சது பொய்யாக போனால் யார் என்ன செய்ய முடியும்?


//தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான்// திணைப் பயிரின் தாள் மாதிரி சின்ன பசுமையான(இளமையான அப்படி எடுத்துக்கலாமா) காலில் ஒழுகும் நீர்... ஆரல் பார்க்கும் குருகும்..,, ஆரல்- ஒரூ வகை மீன் குருகு அப்படின்னா குருத்து..,அதாவது மீனைப் பார்க்கும் குருத்து.



//குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.//
இந்த மேட்டர்ல்லாம் திருமணம் நாளிலிருந்தே


இதையெல்லாம் திரும்ப ஒருமுறை துவக்கத்திலிருந்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்து. உங்களுக்குத் தோன்றும் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
நான் சொல்ல வருவது இந்தப் பாடலில் உள்ள செய்தி அல்ல.., இது போன்ற செய்திகளை பொதுவில் சொல்ல பழந்தமிழ் மகளிருக்கு உரிமை இருந்திருக்கிறது. என்பதே ஆகும். ஆணுக்குக்கு இருக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பது புரிந்தாலே, காதலுக்காக சோகமாக சுற்றுவதும் காதலிக்க மறுத்தவளை கொல்வதும் தவிர்க்கப் பட்டுவிடும்.
#kadhalpsk

1 comment:

  1. அருமை, அட்டகாஷ்.

    வெல்கம் பேக்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails