Sunday, October 11, 2009

யார் கை மாறினாலும் ஜக்குபாய் ஜக்குபாய்தான்

ஏற்கனவே ரஜினிக்காக ஜக்குபாய் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பூஜை போட்ட கே.எஸ்.ரவிக்குமார் அதே பெயரில் சரத் குமாரைவைத்து, அவருக்காக இயக்கும் படமாக ஜக்குபாய் வர இருக்கிறது. ரஜினிக்கு பூஜை போட்ட கதைதான் இதுவா. அதே கதைதான் என்றாலும் திரைக்கதை அதேதானா, என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை.



ரஜினி படத்திற்கு

இறைவா நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன்

என்று விளக்க வாசகம் கொடுத்திருந்தார்கள்.

வழக்கமாக படத்தின் பெயர் வந்த உடனேயே நமக்கு ஒரு கதை தோன்றுமல்லவா,   அப்படித் தோன்றிய சில கதைகளை ஏற்கனவே இந்த வலைப்பூவில் இடுகைக்களாக வந்திருக்கின்றன. இந்தப் படத்தில்  Official Trailer ஐப் பார்த்த பின்னர் தோன்றிய கதைதான் இது.



ஜக்குவும், ஜாக்கும் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வளர்ந்துவரும் கடத்தல் மன்னர்கள். அவர்களுடன் ஜக்குபாய் என்ற மராட்டிய பேரழகியும் வேலை செய்கிறாள். ஜக்கு, ஜாக் இருவரும் ஜக்குபாயை காதலிக்கிறார்கள். ஆனால் ஜக்குபாய், ஜக்குவையே காதலிக்கிறார்.

ஆனால் ஜக்குபாயின் சிரிப்புகள், சிணுங்கல்கள் எல்லாம் தன்னைப் பார்த்துத்தான் என்பதாக ஜாக் நினைத்துக் கொள்கிறான். (ஜாக் வில்லன் அதனால் இனிமேல் அவன் இவன் என்றுதான் வரும்).

இது தொடர்பாக நண்பர்கள் இருவருக்கும் இடையில் மெல்லிய சச்சரவுகள் வருகின்றன. இதுபற்றி ஜக்குபாயிடம் வாய் திறக்காமல் இருக்கின்றனர்.

ஜக்குவைப் பற்றி கெட்ட எண்ணத்தை தோற்றுவிக்க ஜாக் முயற்சி செய்கிறான். குறிப்பிட்ட காலகட்டத்தில் இருவரும் பிரிந்துவிடுகின்றனர். சண்டை போட்டுவரும் ஜக்குபாய்க்கு ஜாக் அடைக்கலம் கொடுக்கிறான்.

அவளை கண்ணை இமை பார்ப்பது போல கவனித்துக் கொள்கிறாள். ஆனால் ஜக்குபாய் கருவுற்று இருப்பது தெரியவருகிறது. ஆனாலும் அவனுக்கு ஜக்குபாயின்மேல் உள்ள பாசம் குறையாமல் இருக்கிறது. ஆனால் தனது காதலியை கவர்ந்து கொண்டு சென்ற ஜக்கு மீது அவனுக்கு வன்மம் வளர்ந்து கொண்டே வருகிறது.

ஜக்கு, ஜக்குபாயை கொல்வதற்காக தேடிக்கொண்டு இருப்பது போல காட்சிகளை அமைக்கிறான். தன்னை காதலித்து ஏமாற்றிய ஜக்குவை பழிவாங்கும் வகையில் அவளது எண்ண ஓட்டங்களை அமைக்கிறான் ஜாக்.
ஜக்குபாயைக் காப்பாற்ற ஜக்குபாய்  இறந்துபோன்ற காட்சிகள் அமைக்கப்படுகின்றன. அதை ஜக்கு நம்பி விடுகிறார். 

குழந்தை பிறக்கிறது. இருபது வருடங்கள் ஓடுகின்றன.

ஜாக், ஜக்கு இருவரும் மிகப் பெரிய தொழிலதிபர்களாக மாறுகின்றனர். ஜக்குபாய், ஜாக்கின் பாதுகாப்பில் இருக்கிறாள். தன்னை காப்பாற்றிவரும் ஜாக்கின் மீது உண்மையாக பாசத்தை காட்டுகிறாள். அண்ணனாக நினைத்து, அழைத்து வருகிறாள். ஜாக்கும் ஜக்குவின் மீது எந்த ஒரு களங்கமும் இல்லாத பாசத்தைக் கொட்டுகிறான்.

ஆனால் ஜக்குவின் மீது இருவருக்கும் மிகக் கொடூரமான பழிவாங்கும் எண்ணங்களை வளர்த்துவருகிறார்கள்.


இப்போது ஜக்குபாய்  இளைய வயது பெண்ணாக தன்னை அலங்கரித்துக் கொண்டு  ஜக்குவின் பார்வையில் படுகிறாள். பழைய ஜக்குபாயின் சாயலில் இருப்பதால் அவள்மீது விஷேசப் பார்வை விழுகிறது.  இருவரும் நண்பர்களாக மாறுகிறார்கள். திட்டமிட்ட படி இருவரும் ஒருவிருந்தில் ஆடிப்பாடி மகிழும்படியான காட்சிகள் அரங்கேற்றப் படுகின்றன. ஜக்குவும், ஜக்குபாயும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ஜக்குபாயால் வீடியோவாக எடுக்கப் படுகின்றன.

அதனை ஜக்குவிடம் போட்டுக்காட்டி தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக் கொள்கிறாள்.

அப்போது  ஒருகல்லூரி விழாவுக்கு ஜக்கு அழைக்கப் படுகிறார். அங்கே கல்லூரியில் பல பரிசுகளை வெல்லும் பெண்ணாக ஜக்குபாயின் மகள் அறிமுகப் படுத்தப் படுகிறார். அவளோடு ஜக்குவுக்கு அறிமுகம் கிடைக்கிறது. ஜக்குபாயும், ஜக்குபாயின் மகளும் ஒருவரே என்று நினைத்து ஜக்கு பழகுகிறார்.

சில நாட்கள் கழித்து ஜக்குபாயின் மகள், தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.  தனது தந்தை பெயர், தாய் பெயர் எல்லாம் ஜக்குவிடம் சொல்ல அதிர்ச்சி அடைகிறார்.  அவள் தனது சொந்த மகள்தான் என்ற எண்ணத்திற்கு வருகிறார்.

சொந்த மகளுடன் தந்தை தவறாக நடந்து கொண்டதாக நினைத்து மிகவும் வேதனை அடைகிறார்.

புழுப்போலத்துடிக்கிறார்.

அடுத்த ஒரு நாள் இள வயது வேடத்தில் இருக்கும் ஜக்குபாய், ஜக்குவிடம் வந்து சில நாட்களுக்குமுன் எடுக்கப் பட்ட நெருக்கமான விடீயோவைப் போட்டுக்காட்டி மிக மகிழ்ச்சியாக உணர்வதாக சொல்லிக் கொண்டே போகிறார். அங்கே மீண்டும் ஒரு கவர்ச்சி நடனம் அரங்கேறுகிறது. ஆனால் ஜக்கு அனல் மேல் போட்ட புழுப் போல் துடித்துக் கொண்டு இருக்கிறார்.


ஜக்குபாயிடன்  உண்மையைச் சொல்ல நினைத்தாலும் சில நாட்களுக்குமுன் நடந்த சம்பவத்தின் காரணமாக சொல்லக் கூசுகிறார்.

ஜக்கு மனவேதனையின் உச்சத்தில் இருப்பதால் அவரது வியாபாரங்களில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.  இந்த நேரத்தில் இருபது வருடத்திற்கு முன் ஜக்கு கடத்தல் காரனாக இருந்ததற்கான ஆதரங்களும் வெளியாகின்றன. இந்த ஜக்கு அதைப் பற்றியெல்லாம் கவலைப் படமால் போலிஸில் சரணடைகிறார்.

இந்த நேரத்தில் ஜாக் சதிவேலைகள் ஜக்குபாய்க்கு தெரிய வருகின்றன. ஜாக்கிடம் இருந்து ஜக்குவைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். ஜக்கு சிறைச்சாலைக்குள் இருப்பது தெரியவர சிறைச்சாலைக்குள் தானும் செல்வதற்காக பொது இடத்தில் மழையில் நனைந்தவாரே கவர்ச்சி நடனம் ஆடுகிறார். காவல்துறை தன் கடமையைச் செய்ய சிறைக்குச் சென்று ஜக்குவைச் சந்திக்கிறாள். ஜக்குவிடம் தான், தன் மகள், மற்றும் விடியோ காட்சிகள் பற்றிய உண்மையைத் தெரிவிக்கிறார். ஜாக்கின் சதிவேலைகளையும், ஜாக்கிடம் இப்போது தங்கள் மகளும் கைதியாக இருப்பதை தெரிவிக்கிறார்.

சிறையிலிருந்து தப்பித்து வரும் ஜக்கு, ஜாக்கின் அனைத்து சதிவலைகளையும் வீழ்த்தி, தன் மகளைக் காப்பாற்றுகிறார். கடைசியில் ஜாக் ஜக்குவிடம் ,மன்னிப்பு கேட்கிறார். இத்தனை நாள் ஜக்குபாயையும் மகளையும் காப்பாற்றிவந்ததற்காக தனது மகளை ஜாக்கின் மகனுக்கு மணமுடித்து வைக்க எல்லாம் சுபம்.
-----------------------------------------------------------------


இந்தக் கற்பனைக் கதையில் காளை, வசந்தத்தில் ஒரு நாள் சாயல் உங்களுக்குத் தென்பட்டால் அந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று பொருள். அதனால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நான் அல்ல


ஜக்குபாய் படத்தில்  கவுண்ட மணி திரும்பவும் வருவதாகச் சொல்லுகிறார்கள். மகிழ்வுடன் வரவேற்போம்.

24 comments:

  1. டிரைலர் பாத்துட்டு சூப்பரா கதை சொல்றீங்க. ஆனா சிலபேரு போஸ்டர பாத்தே கதை சொல்றாங்க பாஸ்...

    அருமையா இருக்கு...

    பிரபாகர்.

    ReplyDelete
  2. ஆஹா அருமையான விமர்சனம்

    நல்லாருக்கு

    ReplyDelete
  3. நல்லா இருக்கு கதை. இதுல இருந்தே சுட்டாலும் சுட்றுவாய்ங்க

    ReplyDelete
  4. நீங்களே ஜக்குபாய்க்கு ஸ்கிரீன்பிளே எழுதியிருக்கலாம் சுரேஷ்.. அருமை.. :))

    ReplyDelete
  5. ம்ம்ம்ம் கதை சூப்பர்....

    ReplyDelete
  6. @பிரபாகர்
    @முரளிகண்ணன்
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @வானம்பாடிகள்
    @Achilles/அக்கிலீஸ்
    @T.V.Radhakrishnan
    @ஆ.ஞானசேகரன்

    நன்றி நண்பர்களே

    ReplyDelete
  7. // சேராதே said...

    good post,bad tittle//

    நன்றி நண்பர்களே

    ReplyDelete
  8. Aduththa writer,aduththa director, aduththa hero, adhuththa C.M., athuththa P.M..kalakkunga Suresh Sir.., Pramaatham. :)

    ReplyDelete
  9. aaha.. kadha super ah irukku... :)

    epdinga trailer ah vache kadha ezhuthureenga??

    ReplyDelete
  10. இந்தக் கற்பனைக் கதையில் காளை, வசந்தத்தில் ஒரு நாள் சாயல் உங்களுக்குத் தென்பட்டால் அந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று பொருள். அதனால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நான் அல்ல

    :)

    ReplyDelete
  11. // இது நம்ம ஆளு said...

    இந்தக் கற்பனைக் கதையில் காளை, வசந்தத்தில் ஒரு நாள் சாயல் உங்களுக்குத் தென்பட்டால் அந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று பொருள். அதனால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நான் அல்ல

    :)//

    காளை படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒரே பெயர் தல

    வசந்தத்தில் ஒரு நாள் படத்தில் தாய் மகள் இரண்டுவேடங்களிலும் ஸ்ரீப்ரியா நடித்திருப்பார்.

    ReplyDelete
  12. //இந்தக் கற்பனைக் கதையில்//

    இத தனியா வேற நீங்க சொல்லனுமா சுரேஷ் :-))

    அருமை.

    ReplyDelete
  13. தல உங்க ஸ்டைலே தனிதான்.

    வழக்கம் போல சூப்பர்.

    இதை விட நல்ல கதை எங்கே இருக்கு.

    அப்புறம் நம்ம பக்கம் என்ன ஆளையே காணோம்.

    ReplyDelete
  14. //"யார் கை மாறினாலும் ஜக்குபாய் ஜக்குபாய்தான்"//

    தலைப்பிலேயே ஜக்குபாய் டபுள் ஆக்ட்னு க்ளு கொடுத்த தல வாழ்க.

    //(ஜாக் வில்லன் அதனால் இனிமேல் அவன் இவன் என்றுதான் வரும்).//

    இங்கே தான் த‌ல‌ நிக்கிறார்.

    //குழந்தை பிறக்கிறது. இருபது வருடங்கள் ஓடுகின்றன.//

    க‌தை ரொம்ப‌ ஸ்பீடு த‌ல.

    //அந்தப் படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்று பொருள். அதனால் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. நான் அல்ல//

    தல நாங்கள்லாம் பார்க்கலையே என்ன செய்ய.

    ReplyDelete
  15. Why guess the story from the trailer? See WASABI, the original film.

    ReplyDelete
  16. ஆஹா....சைடு பிசினசா திரைக் கதை எழுதலாம் போல இருக்கே...

    ReplyDelete
  17. //சிங்கக்குட்டி said...

    //இந்தக் கற்பனைக் கதையில்//

    இத தனியா வேற நீங்க சொல்லனுமா சுரேஷ் :-))

    அருமை.//

    ஒரு பாதுகாப்புக்குத்தான்..,

    ReplyDelete
  18. //அக்பர் said...

    தல உங்க ஸ்டைலே தனிதான்.

    வழக்கம் போல சூப்பர்.

    இதை விட நல்ல கதை எங்கே இருக்கு.//

    நன்றி தல.,

    ReplyDelete
  19. //azhagan said...

    Why guess the story from the trailer? See WASABI, the original film.//

    தேடிப் பார்த்தேன்.. ,தென்படவில்லை

    ReplyDelete
  20. // ஸ்ரீராம். said...

    ஆஹா....சைடு பிசினசா திரைக் கதை எழுதலாம் போல இருக்கே..//

    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails