Monday, January 17, 2011

என்ன செய்தார் எம்.ஜி.ஆர்...?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவ்ர்களின் 95வது பிறந்த தினம் இன்று 17.1.2011. அவரிடமிருக்கும் கிடைக்கும் அரிய பல நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ள வேண்டிக்கொண்டு அவரை நினைவு கூறுவோம்.
........................................................................................................................

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ படத்தை, பல்வேறு துறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஓர் இடத்தில் கூடி, விமர்சித்தார்கள்.


அந்த விமர்சன உரையாடலில் பங்கு பெற்றவர்கள்…

1. திரு. கே.திரவியம், ஐ.ஏ.எஸ்.
2. திருமதி லீலா திரவியம், குடும்பத் தலைவி.
3. திரு. வி.கே.கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர், ஓரியன்டல் மெர்க்கன்டைல் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ், சென்னை.
4. திருமதி சாந்தி கிருஷ்ணமூர்த்தி, குடும்பத்தலைவி.
5. திருமதி குப்பம்மாள், தமிழ் வளர்.ச்சித் துறை.
6. திரு. ஏ.ஆர்.ரங்கநாதன். ஏ.ஸி.. கல்லூரி மாணவர், சென்னை.
7. திரு. ஆர்.சீனிவாசன், ஆசிரியர், வழுத்தூர்.



திரவியம்: இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் நல்லவராக இருக்கணும்னு பாடுபடுகிறார். அதே மாதிரி ‘ஜெமினி’யும் எல்லோருக்கும் நல்ல படமா கொடுக்கணும்னு பாடுபட்டிருக்காங்க. கறுப்பும் சிவப்பும் கண்ணைப் பறிக்குது. கடவுளும் பக்தியும் கலந்திருக்கு. அவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க; இவர்களுக்கு வேண்டியதையும் கொடுத்திருக்காங்க!


லீலா: ஆமாம்! எம்.ஜி.ஆரோட இந்த ஒரு படத்திலேதான் கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமாக வந்திருக்குன்னு நினைக்கிறேன்.


சீனிவாசன்: தான் ஒரு குணசித்திர நடிகர்னு இதிலே காட்டிட்டார் எம்.ஜி.ஆர்.


லீலா: கடைசியிலே, குழு நடனம் ஒண்ணு வருதே… அப்படி ஒரு நடனம் நம்ப தமிழ்நாட்டிலே உண்டா?


துணை ஆசிரியர்: இருபது முப்பது வருஷங்களுக்கு முன்னால, காமன் பண்டிகைன்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே கொண்டாடுவாங்க. அது, இந்த மாதிரிதான் இருக்கும். இப்போ அது நடை முறையிலே இல்லாமல் போனதாலே, நமக்குப் புதுசா இருக்கு!


ரங்கநாதன்: படத்திலே ‘விஷ சுரம்’, ‘விஷ சுரம்’னு மைக்ல சொல்றதும், மக்கள் ஓடறதும் இயற்கையா இல்லேன்னு நான் நினைக்கிறேன்!


சாந்தி: அது பிளேக் மாதிரி ஒரு பயங்கர நோயா இருக்கலாம்!


சீனி: அப்படித்தான் இருக்கணும். ஒரு கிராமத்திலே அந்த அளவுக்குச் சொல்லிப் பயமுறுத்தலேனா, கிராமத்து ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். கஷ்டப்படுவார்கள்!


குப்பம்மாள்: மருமகளா வந்த சௌகார்ஜானகியைப் பாராட் டாம இருக்கமுடியாது! அடேயப்பா, என்னமா நடிச்சிருக் காங்க!


சீனி: எல்லாத்துக்கும் கதைதான் காரணம். இது கருத்தாழம் மிக்க கதை. மக்களைத் திருத்தக் கூடிய கதை. ‘ஒருவன் திருடனா கவே பிறப்பதில்லை; சமுதாயத்தாலேதான் அவன் திருடனாக்கப் படுகிறான்’ என்பதை எடுத்துக் காட்டுகிற கதை. அப்புறம் மதுவை வெறுத்து ஒரு காட்சி, அதை ஒட்டி ஒரு பாட்டு வருது பாருங்க. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுது.


திரவியம்: வாலியின் பாடல்கள் என்றால் வளமாயிருக்கும்! அந்தக் குறவன் குறத்தி பாட்டிலே, ‘சீர்திருத்தக் கல்யாணம் பண்ணிக் கிட்டோம், சிக்கனமா பெத்துப் போடுவோம்’னு வருதே… அதிலே நல்ல கருத்து இருந்தது.


சீனி: அந்த நெருப்புக் காட்சிக்கு அப்புறம் சௌகார் பாடறாங்களே ஒரு முருகன் பாட்டு, அதுதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.


திரவியம்: அந்தக் காட்சியில் என் மனத்தில் பட்ட கருத்து இதுதான்… ‘கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கூட கண்ணியமான, கட்டுப்பாடான வாழ்க்கை நடத்தமுடியும்; அவர்களும் நல்லவர்கள்தான்’.


சீனி: இந்தப் படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ கிடையாது, கவனிச்சீங்களா? ஓடிப் பிடிச்சு, குதிச்சு வெளையாடற விஷயமே கிடையாது!


திரவியம்: அது சிறந்த அம்சம் தான். ஆனால், கிளப் டான்ஸ்கள் கொஞ்சம் அதிகம்னு எனக்குப் பட்டுது.


ரங்க: இந்தப் படத்திலே எல்லாமே இருக்கு. ரொமான்ஸ் இருக்கு; கத்திச் சண்டை இருக்கு; கிளப் டான்ஸ் இருக்கு; சோகக் காட்சிகள் இருக்கு. ஜனரஞ்சக மான படத்திற்குத் தேவையான எல்லாமே இருக்கு. வசனமும் ரொம்ப நல்லா இருக்கு.
‘வானத் திலிருந்து விழும் தண்ணி காவிரி யிலே விழுந்தா, தூய்மையாகுது. புழுதியிலே விழுந்தா, சேறாகுது. அதே போல சந்தர்ப்பத்தினாலே தான் ஒருத்தன் திருடனாகிறான்’
னு சொல்றாங்களே, அது ரொம்ப நல்ல கருத்து. என்னைப் போன்ற கல்லூரி மாணவர்கள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பாங்க!


சாந்தி: எம்.ஜி.ஆர். குடிச்சுட்டு சௌகார் கிட்டே வராரே… அங்கே சௌகார் பயப்படறதும், அந்த இடத்திலே என்ன செய்துடுவாரோனு நாம பயப்படறதும்… அந்தக் காட்சியை ரொம்ப அழகா எடுத்திருக்காங்க.


ரங்க: அதே போல, குருட்டுப் பாட்டிக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள அன்பை ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. அந்தப் பாட்டி இறந்த காட்சி, ரொம்ப உருக்கமா இருந்தது.


சீனி: நெருப்பு ஸீன் ரொம்பத் தத்ரூபம்! எம்.ஜி.ஆர். நெருப்புக்குள்ளே போனபோது எனக்குக் கொஞ்சம் பயமாவே இருந்தது. தமிழ்ப் படத்திலே இப்படி ஒரு ஸீனை நான் பார்த்ததே இல்லை. பின்னே, ‘ஜெமினி’ படம்னா ஒரு முத்திரைஇருக்கணுமே!


குப்: ஜெயலலிதாவுக்குதான் பாத்திரம் சரியா அமையலே.


சீனி: சௌகார் ஜானகியின் அபார நடிப்பாலே ஜெயலலிதா வின் நடிப்பு மங்கிப் போயிட்டதோ?!


கிருஷ்ணமூர்த்தி: ஷி ஈஸ் கிளாமரெஸ்! அது போதாதா? எல்லாரும் ஒரு படத்திலே நடிக்கணும்னா முடியுமா? கவர்ச்சியா இருக்காங்க. கண்ணுக்கு விருந்து. அவ்வளவுதான்!


திரவியம்: மொத்தத்திலே, நல்ல படம் பார்த்த ஒரு திருப்தி!
‘இவர் கெட்டவர்னா, ஆயிரம் ஆயிரம் கெட்டவர்களை உலகத் துக்குக் கொடு’
ன்னு இதிலே ஒரு வசனம் வருது. அந்த மாதிரி, ‘இதுதான் தமிழ்ப் படம்னா, இது போன்ற ஆயிரம் ஆயிரம் தமிழ்ப் படங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்’னுதான் நான் சொல்லுவேன்.

விகடனுக்கு நன்றி! படம் வந்தபோது(1968) எழுதப்பட்ட விமர்சனம்

எனக்கு நண்பர் ஒருவர் ஈ-மெயிலில் அனுப்பியிருந்தார்.

...................................................
ஒரு திரைப் படத்தில் மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மக்களுக்குத் தேவையான கருத்துக்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி படத்தில் திணித்து அந்த பாடல்களை மக்கள் முணுக்க வைத்தவர். எம்.ஜி.ஆர் அவர்கள்.


இன்று சொல்லுகிறார்களே.." மக்கள் விரும்புகிறார்கள் அதனால்தான் இதுபோன்ற காட்சிகளை வைக்கிறோம்." எம்.ஜி.ஆர் படத்தில் இடம் பெற்ற தத்துவப் பாடல்களுக்கு யார் பொறுப்பு? நாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் திரையலகத்தில் இருந்த காலத்தில் இருந்த எத்தனையோ நடிகர்களுக்கு எழுதாத பாடல்களை இவருக்கு மட்டும் ஏன் கவிஞர்கள் எழுதினார்கள்?

  • இன்னும் சொல்லப் போனால் சிவாஜி அவர்களின் படத்தைத்தான் ரசித்துப் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தை பொழுது போக்கினை எதிர்பார்த்து வரும் ரசிகர்களே அதிகம் பார்ப்பார்கள். அப்படி பொழுது போக்கிற்கு வரும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல நினைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த ஒரு காரணத்திற்காகவே எவ்வளவு வேண்டுமானால் அவரை புகழ்ந்து கொண்டே இருக்கலாம்.


அவர் மிகக் குறைவாக வசனம் பேசும் நடிகராக வெறும் பொழுதுபோக்கு நாயகராக அவரை பார்க்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்காக ஒரு செய்தி. அவரே தயாரித்து அவ்ரே இயக்கிய படம் நாடோடி மன்னன். நான் அவன் இல்லை. என்று கூறிவிட்டு எம்.என். ராஜம் அவர்களிடம் பத்து நிமிடம் விடாமல் வசனம் பேசுவார். அதில் நவீன தொழில்நுட்பங்கள். காமிராவை கண்டபடி நகர்த்திக் கொண்டும் அவரும் கண்டபடி நடந்து கொண்டும் ஒரே ஷாட்டில் எடுத்திருப்பார்கள். நாற்பது வருடங்கள் கழித்துதான் அந்த உத்திகளை மற்றவர்கள் பரவலாக உபயோகப் படுத்தினார்கள்.

அதே போல் அவரது நூறாவது படம்கூட அவரது விருப்பக்கதைதான் அமைந்தது.



தாயைக் காப்பாற்ற வேண்டும். குழந்தைகளை நேசிக்க வேண்டும். தன்னையே நினைத்து கனவுகாணும் பெண்கள் தன் மனைவியாக இல்லாத சூழலில் தங்கையாகவே நினைக்க வேண்டும் முதலான கருத்துக்களை தொடர்ந்து திணித்து வந்து கொண்டிருந்தவர் அவர்.


எந்த சூழலிலும் படங்களில் மது குடிப்பதையோ புகைபிடிப்பதையோ செய்யாதவர். கூண்டுக்கிளி படத்தில் கூட எரியும் சிகரெட்டை கையில் வைத்திருந்து தூக்கியெரிந்து விடுவார். ஒளி விளக்கில் மது அருந்த நினைத்து பாட்டிலை எடுத்தவுடன் மனசாட்சி வந்து அவரை கண்ட படி திட்டுமாறு பாட்டு அமைத்திருப்பார்கள். இன்று சட்டம்போட்டு செய்யும் வேளையில் மனக் கட்டுப்பாட்டோடு நடத்திக் காட்டியவர் அவர்.

அவர் வில்லனாக நடித்த நினைத்ததை முடிப்பவனில் அவருக்குமுன்னால் சிகரெட் பிடிப்பவர்களை உடனே அடித்துவிடும் குணாதிசயம் படைத்தவராக வருவார். அந்தப் படம் வெளிவந்த காலத்தில்தான் நமது பகுதிகளில் வளர்ந்துவந்த நாகரிகம் அது. அதனை வெளிப்படையாக எதிர்க்கும்வண்ணம் அந்தப்பாத்திரப்படைப்பு அமைந்திருந்தது.


அவரது 95வது பிறந்த தினம் இன்று 17.1.2011. அவரிடமிருக்கும் கிடைக்கும் அரிய பல நல்ல செய்திகளை எடுத்துக் கொள்ள வேண்டிக்கொண்டு அவரை நினைவு கூறுவோம்.

15 comments:

  1. நல்ல தகவல்களோட, வரிசைப்படுத்தி பின்னிட்டீங்க...

    ReplyDelete
  2. வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி பழமைபேசி அவர்களே...

    ReplyDelete
  3. கடைசிப் பத்தியையும் படித்துவிட்டு பின்னூட்டம் இடுங்கள்.

    நினைவு கூறும்போது நல்லவற்றையே நினைவு கூறுங்கள்

    ReplyDelete
  4. // மக்களுக்குத் தேவையான கருத்துக்களை சிறந்த கவிஞர்களிடமிருந்து வாங்கி படத்தில் திணித்து அந்த பாடல்களை மக்கள் முணுக்க வைத்தவர். எம்.ஜி.ஆர் அவர்கள்.//
    சரியாகச்சொன்னீர்கள்!!பாடல்களை எழுதி வாங்குவது மட்டுமல்ல, மெட்ட்டுப்போடும் ஓது இசையமைப்பாளர்,பாடலாசிரியர் கூடவே இருந்து நல்ல மெட்டுக்களையும் வார்ஹ்தைகளையும் அவர்களிடமிருந்து உறிஞ்சி வாங்கியவர். எத்தனை ஹீரோக்களுக்கு இத்தகைய சமூக அக்கறையிருக்கும்?

    ReplyDelete
  5. நானும் மக்கள்திலகம் பற்றி பதிவிட்டிருக்கிறேன் படித்துவிட்டு கருத்துக் கூறவும்.
    'கடை எட்டாவது வள்ளல்' என்ற தலைப்பில்

    ReplyDelete
  6. நல்ல பதிவு.

    எம்ஜியார் மேல் அவ்வளவு அபிப்ராயம் கிடையாது,ஆனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி நானானி மற்றும் குடுகுடுப்பை அவர்களே.....

    ReplyDelete
  8. * இன்னும் சொல்லப் போனால் சிவாஜி அவர்களின் படத்தைத்தான் ரசித்துப் பார்ப்பவர்கள் பார்ப்பார்கள். எம்.ஜி.ஆர் அவர்களின் படத்தை பொழுது போக்கினை எதிர்பார்த்து வரும் ரசிகர்களே அதிகம் பார்ப்பார்கள். அப்படி பொழுது போக்கிற்கு வரும் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்ல நினைப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? அந்த ஒரு காரணத்திற்காகவே எவ்வளவு வேண்டுமானால் அவரை புகழ்ந்து கொண்டே இருக்கலாம்.///

    வித்தியாசமான முழுமையான பதிவு!
    இன்று தண்ணி அடித்துவிட்டு பாடாத,ஃபைட் பண்ணாத நடிகர்களே இல்லையே!!

    தேவா...

    ReplyDelete
  9. அருமையா வந்திருக்கு ~!!~

    ReplyDelete
  10. //எத்தனையோ நடிகர்களுக்கு எழுதாத பாடல்களை இவருக்கு மட்டும் ஏன் கவிஞர்கள் எழுதினார்கள்?//

    பணம் தான்.

    //எந்த சூழலிலும் படங்களில் மது குடிப்பதையோ புகைபிடிப்பதையோ செய்யாதவர்.//

    நிஜ வாழ்க்கையிலும் பண்போடு நடப்பவர் அவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

    ReplyDelete
  11. அவரை நினைவு கூறுவோம்..வணக்கமுங்க.

    ReplyDelete
  12. அருமையான பதிவு பொருத்தமான நாளில்

    ReplyDelete
  13. //தாராபுரத்தான் said...

    அவரை நினைவு கூறுவோம்..வணக்கமுங்க.
    //

    வணக்கமுங்க ஐயா..,

    ReplyDelete
  14. //பூங்குழலி said...

    அருமையான பதிவு பொருத்தமான நாளில்
    //

    நன்றி தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails