Tuesday, January 26, 2010

ஃபாண்டஸிக் கதையின் தொடர்ச்சி 26.1.10

ஒரு ஃபேண்டஸி கதை எழுத ஆரம்பித்ததில் வித்தியாசமான கதைக்களம் என்று பாராட்டப் பட்டாலும் செக்ஸ் போதவில்லை என்ற குறையும் அதில் தென்பட்ட போதிலும் பின்னூட்டத்தில் நீளமாய், நீலமாய் இருப்பதாக சொல்லப்பட்டுவிட்டதாலும் இந்தப் பகுதியையும் அதன் போக்கிலேயே விட்டுவிடுகிறேன். எனவே போன பகுதிக்கு போட்ட முன்னறிவித்தல் இதற்கும் பொறுந்தும்.

முன்னறிவித்தல் 2: சென்ற பகுதியே மிக நீளமாகத் தென்பட்டாலும் எனக்கென்னவோ அதைச் சுருக்கி சிலவரிகளில் சொல்லமுடியும் என்று தோன்றாத காரணத்தால் இந்தச் சுட்டி மூலம் சென்ற பகுதியைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள்


========================================================================

கவுரவர்களின் மன்னன் 110ஆம் துரியோதனன் நேரடியாக வந்து கம்பு வீரனையும் அவனோடு வந்த பெண்களையும் ( அதிகாரிகள்) கைது செய்து  கொழுமண்டபத்திற்கு கொண்டுவருகிறார்கள்.

 கொழு மண்டபத்தில் குற்றவாளிக்கூண்டில் ஏற்கனவே காணாமல் போன  இரண்டு அரசு அதிகாரிகளும் ஒரு கூண்டில் நிற்க  கம்பு வீரனோடு வந்த மற்ற பெண்கள் ஒரு கூண்டில் அமர்ந்திருக்க  12203வது வது கர்ணன்  ( கர்ணனின் மகன் போரிலேயே இறந்துவிட்டதாக சிலர் பேசலாம். ராஜவிசுவாசிகள் பலருக்கு கர்ணன் எனப் பெயரிடப் படுவதை இங்கு பதிவு செய்துவிடுவோம் ) பேச ஆரம்பிக்கிறார்.

மகாராஜாவுக்கு வந்தனம்.  சென்ற யுகத்தில் உங்களுக்கும் உங்கள் தந்தைகளுக்கும் நடந்த கொடுமை சரித்திரம் அறிந்ததே..,

மூத்தவருக்கே நாடு சொந்தம் என்பது பரம்பரை பரம்பரையாக  உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப் பட்ட நடைமுறை.

ஆனால் கிருஷ்ணனின் தூண்டுதலின் காரணமாக  தங்கள் முன்னோர் திருதராஷ்ட்டிரனின் தம்பி பாண்டுவின் மைந்தர்கள்  நாட்டை துண்டாடச் சொன்னார்கள். அவர்களுக்காக கிருஷ்ணரே போர் களத்தில் இருந்தார். என்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் கிருஷ்ணரின்  படைகள் நம்மோடுதான் இருந்தன என்பது அனைவருக்கும் தெரிந்ததே..,

பாண்டுவின் மைந்தர்களின் செய்த சதிகளை பல வழிகளில் முறியடித்த தங்கள் முன்னோர்களால்  போரைத் தவிர்க்க முடியவில்லை. அபகரிக்க முடியாத சூழலில் நாட்டைத் துண்டாட நினைத்ததும், சில ஊர்களை மட்டுமாவது தனியாக பிரித்து பிரிவினை செய்தே தீரவேண்டும் என்று கிருஷ்ணரின் துணையோடு சதிவகைகள் செய்ததை இன்றைய மக்கள் திரைப்படம் மூலமாவது தெரிந்தே இருக்கிறார்கள்

கைது செய்யப் பட்டுள்ள அதிகாரி:

திரவுபதையை உங்கள் முன்னோர்கள் கையைப் பிடித்து இழுத்ததால்தான் அனைவரும் வெகுண்டு எழுந்து வன்மம் கொண்டாட வேண்டியதாகப் போயிற்று.

12203வது கர்ணன்:  கவனியுங்கள். தம்பிகளின் மனைவி யாரையும் அவர்கள் அவமதிக்க வில்லை. சகோதர்களின் பொதுவான மனைவியை மட்டுமே அவர்கள் சபைக்கு அழைத்திருந்தனர்.

இன்னொரு அதிகாரி:

அதனால் நீங்கள் செய்தது சரியாகிவிடாது. இ.பி.கோ 376ன் படி கண்டிப்பாக தண்டனைக்குரிய குற்றம் அது.

12203வது கர்ணன்:

அதெல்லாம் நடந்து முடிந்த பிரச்சனை.  பாண்டவர்களின் வம்சத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளையும் இப்போது கைது செய்தாயிற்று.

அவர்களின் வழிவந்த   பெண் அதிகாரிகள் இருவரையும் கைது செய்தாயிற்று. 

இவர்களை அழித்துவிட்டு நம் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பாரத தேசம் முழுவதும்  100 கிராமங்களில் மறைந்து வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தாக்குதலில் ஈடுபட்டால்  இந்த பாரத தேசமே மீண்டும் தங்கள் ஆட்சியின் கீழ் வந்துவிடும்.

===================================================

இரண்டு பெண்களும் மன்னரிடமும் தளபதியிடமும் தனியே பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள். தனியே பேசுவதை சபையினர் முணுமுணுத்தலாக எதிர்த்தாலும்  நேரடியாக சொல்ல் யாருக்கும் தைரியம் வரவில்லை.

முக்கிய அலுவல்கள் இருப்பதால் அதை முடித்துவிட்டு  மாலை நேரத்தில் சந்திப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு  சென்று விடுகிறார்கள்

=========================================================

மன்னர் துரியோதனனும் தளபதி கர்ணனும்  ஆயுதசாலைக்குச் செல்கிறார்கள். முக்கிய கேந்திரத்தில் உள்ள கண்ணாடி அறைக்குச் செல்ல அங்குள்ள மாயக்கண்ணாடிகள் மூலமாக மீதமுள்ள 99 கிராமங்களையும் தொடர்பு கொண்டு பேசுகிறார்.  மறைமுகத் தாக்குதலுக்கு இதுவே சரியான சமயம் என்றும் அனைவரும் தயாராக இருப்ப அறிவுறுத்துகிறார்கள்.

================================================================

மாலையில் பெண்களை சந்தித்த மன்னரும் தளபதியும் மிகவும் குழம்பிப் போகிறார்கள். அவர்களுக்கு இடையே பலத்த சண்டை ஏற்படுகிறது.

பூட்டிய அறையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் மற்றவர்கள் குழம்புகிறார்கள்.அறையில் ஏற்படும் அதிர்வுகள் மட்டும் மற்றவர்களுக்கு புலப் படுகிறது.

=============================================================

கம்புவீரன் முக்கிய கட்டுப்பாட்டு அறைக்குள் நுழைந்து கட்டுப் பாட்டு அறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். இந்திய ராணுவ தளபதிகளை  தொடர்பு கொண்டு அனைத்து நிலையங்களைப் பற்றியும் தகவல் கொடுக்கிறார்.

இந்திய ராணுவம் அனைத்து கிராமங்களையும் சுற்றி வளைக்க வலிமைவாய்ந்த கத்தி மற்றும் கதாயுதங்களின் முன் ஒவ்வொரு குண்டாக போட்டுச் சூடும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு இந்திய ராணுவம்  அனைவரையும் வீழ்த்துகிறது.

உள்ளூரில் நடக்கும் சண்டையில் கம்புவீரன் அனைவரையும் அழித்துவிடுகிறான்.  கம்புவீரனின் கையில் சக்கர ஆயுதம் வந்து நிற்கிறது. கம்புவீரனையும் மற்ற பெண்களையும் கொண்டுவந்த சேர்த்த பெரிய வகை கருடன் அவர்களின் அருகில் வந்து அமர்கிறது. (மீண்டும் முதல் பகுதியில் வந்த கருடனை நினைவில் கொண்டுவந்துவிடுங்கள்)..

6 comments:

  1. அப்போ ... அழகிரிதான் C M ன்னு சொல்றிங்களா????????? நான் என்ன பண்ணமுடியும் , நாட்ல இருக்க பிரச்னை அப்பிடி..

    ReplyDelete
  2. // அக்பர் said...

    தல ஒத்துக்கிறோம்.//

    வாங்க தல..,

    ReplyDelete
  3. /// அப்பாவி said...

    அப்போ ... அழகிரிதான் C M ன்னு சொல்றிங்களா????????? நான் என்ன பண்ணமுடியும் , நாட்ல இருக்க பிரச்னை அப்பிடி..//

    ஐயா அப்பாவி, நம் நாடு ஜனநாயக நாடு. மக்கள் ஆதரவு பெற்ற யாரும் முதல்வராக முடியும்.

    ReplyDelete
  4. தல இங்க தளபதின்னு யாரை சொறீங்க??? ;-))

    ஏதோ நம்மளால முடிஞ்சது. :-)

    ReplyDelete
  5. //ரோஸ்விக் said...

    தல இங்க தளபதின்னு யாரை சொறீங்க??? ;-))

    ஏதோ நம்மளால முடிஞ்சது. :-)//


    கர்ணன் தான் தளபதி

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails