Sunday, March 7, 2010

வசிய மருந்து வைத்து காரியம் சாதிப்பது எப்படி?

சாமியார்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்றால் வசிய மருந்து செய்ய தெரிந்திருக்க வேண்டும். வசிய மருந்துகளை நன்றாக தயார் செய்து அதனை பக்த கோடிகளுக்குக் கொடுத்து பக்தர்களுக்கு தாங்கள் நினைத்தது நடந்துவிட்டால் கண்டிப்பாக பக்தர்கள் கூட்டம் உங்கள் பக்கம்தான்.

ஏற்கனவே பேயோட்டும்தொழில் வெற்றிகரமாக நடத்த வழிமுறைகள் பார்த்தோம். இந்த இடுகைகள் வசிய மருந்து வெற்றிகரமாக கொடுப்பது பற்றி ஆராய்வோம்.

கிராமத்திலிருந்து ஆரம்பித்து வருவதால் கிராமத்தில் வசிய மருந்து எவ்வாறு செய்து கொடுத்து வெற்றி பெறுவது என்பது பற்றி பார்ப்போம். சிறுநகரத்திற்கும் இது பொருந்தும்.  பெரு நகரத்திற்கு கொஞ்சம் தில்லாலங்கடி வேலை செய்ய வேண்டும் அவற்றைப் பின்னர் பார்க்கலாம்.


வசிய மருந்து கேட்டு வருபவர்களை  வகைப் படுத்த வேண்டும். கணவன் தன்னிடம் அன்பாக இல்லை. மனைவி அன்பாக இல்லை என்றும் அவர்களை வசியப் படுத்த மருந்து கேட்டு வருபவர்கள் ஒரு கூட்டம்.

புகுந்த வீட்டுக்காரர்களின் அன்பைப் பெற முயற்சித்து வசிய மருந்து கேட்டு வருபவர்கள் ஒரு கூட்டம்.

தான் நினைத்திருக்கும் இளைஞன், இளைஞி க்கு  மருந்து கொடுத்து மயக்க நினைக்கும் கூட்டம் ஒன்று.

பக்கத்து வீட்டுக்காரனையோ அவனது மனைவியையோ மயக்க நினைக்கும் கூட்டம் அடுத்தது.

பெரும்பாலான வசிய மருந்து பார்ட்டிகள் இந்த வரையறைக்குள் வந்து விடுவார்கள்.


முதல் இரண்டு வகையினரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களது பிரச்சனை ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் கூட பிரச்சனை தீர்ந்து விடும். யார் விட்டுக் கொடுப்பது என்ற ஈகோவில் தான பிரச்சனை வளர்ந்து கொண்டே போகும். குறிப்பிட்ட காலத்தில் இரு சாரரும் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். நிம்மதி மட்டும் கிடைத்தால் போதும் என்ற சூழலில் இருப்பார்கள்.  ஆனால் கணவனிடமோ, மனைவியிடமோ அல்லது புகுந்த வீட்டினரிடமோ  விட்டுக் கொடுப்பது என்பதை மட்டும் அவர்களது ஈகோ அனுமதிக்காது.


ஒருவர் விட்டுக் கொடுத்தால் மற்றவர் தானே வழிக்கு வந்து விடுவார். ஆனால் விட்டுக் கொடுக்க மாட்டார்.


வசிய மருந்து சாமியாராகிய உங்களிடம் இது போன்ற ஆட்கள் வந்தால் உங்கள் பாடு கொண்ட்டாட்டம்தான்.  நீங்கள் அவர்களுக்கு தேன், தினைமாவு போன்ற ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து பூஜை செய்து இதை சம்பந்த பட்டவர்களிடம் இந்த பவுர்ணமி முதல் அமாவாசை வரை கொடுத்து வரச் சொல்லுங்கள்.

மனைவி தினமும் குளித்து , பூ முடித்து இனிப்புப் பலகாரங்கள் செய்து கொடுத்தால் எந்த ஆண்மகனும் வீழ்ந்து விடுவான்.

அதேபோல கணவனும் தினமும் பூ, அல்வா வாங்கிக் கொடுத்து வந்தால் மனைவி சுலபமாக மடங்கி விடுவாள். இந்த பலகீனத்தை வசிய மருந்து சாமியாராகிய நீங்கள் உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.  நீங்கள் கொடுத்த வஸ்து வால்தான் பிணக்கு நீங்கியது என பெயர் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் மாமனார் மாமியாருக்கும் தினமும் பூஜை செய்யச் சொன்னால் வயதான அவர்கள் மிகச் சுலமாக அல்வாவில் வீழ்ந்து விடுவார்கள்.

அப்படிநீங்கள் கொடுத்த வசிய மருந்தில் மயங்க வில்லை என்றால் கவலைப் படவேண்டியதில்லை.  யாரோ செய்வினை வைத்திருப்பதாகச் சொல்லி நீண்டகால பூஜையை செய்யச் சொல்லலாம். கண்டிப்பாக நீண்டகாலம் வாழ்க்கைத்துணைகளில் ஒருவர் அடுத்தவரின் அன்புக்காகப் போராடினால் வெற்றி கிடைத்தே தீரும்.  

அதை வசிய மருந்துதான் காரணம் என்று கூறி  நீங்கள் நன்றாகப் பைசாப் பார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே போகும்.

அடுத்ததாக காதலன், காதலி, அடுத்தவன் மனைவிக்கு வசிய மருந்து கொடுத்தல்

இது கொஞ்சம் சிக்கலான பிரச்ச்னை போல் தெரிந்தாலும்  வசிய மருந்து செய்து கொடுக்கும் தொழிலுக்கு வந்து விட்டால் சவாலை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.  முதலில் மேற்கண்ட ஆட்களிடம் நேரிடையாக இந்த மருந்தினைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துவிடுங்கள்.

(சமீபத்தில் கூட ஏ என்ற நபருக்காக பி என்ற நபர் ஒரு பெண்ணிடம் வசிய மருந்து கொடுக்க பி என்ற நபருக்கு பெண் செட் ஆகிவிட பிரச்சனை கொலையில் முடிந்த கதை செய்தித்தாள்களில் வந்தததல்லவா.., அவற்றை அவர்களிடம் சொல்லிவிட வேண்டும்)

இவர்களுக்கும் அதே போல்தான். உங்களிடம் இருக்கும் தேன், தினைமாவு அல்லது அங்காடிகளில் கிடைக்கும் குழந்தை உணவுகளில் ஏதாவது கொஞ்சம் கொடுத்து சம்பந்தப் பட்ட நபரிடம் கொடுக்கச்சொல்ல வேண்டும்.

இங்கேதான்  ஒரு தொழில் நுணுக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாரென்றே தெரியாத எந்த நபரிடமும் யாரும் வாங்கிச் சாப்பிட மாட்டார்கள். உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாலே தவறுக்கு முதல் படி ஆகிவிடும். மற்றவைகளை காரியம் சாதிக்கும் நபர் முடித்துக் கொள்வார்.  ஆனால் உங்கள் வசிய மருந்தால்தான் வீழ்த்தியதாக நினைத்து புலகாங்கிதம் அடைவார்.

இதுபோன்ற எளிய முறைகள் மூலம் 95 % சதவீத வசிய மருந்துகள் வெற்றியடைய வைத்து விடலாம். மீதமுள்ளவர்களுக்கு முழு நம்பிக்கைய்ப்ப்டு கொடுக்க வேண்டும். அப்போதுதான் பலிக்கும் என்று சொல்லி காலந்தாழ்த்தலாம்.  கிரக நிலைகள் சரியில்லை என்று சொல்லி காலந்தாழ்த்தலாம்.   அல்லது கேரள் சாமியார், இமயமலை சாமியாரின் வசிய சக்தி ஏற்கனவே அங்கு செயல் கொண்டு இருப்பதால் தனது சக்தி பலிக்கவில்லை என்று சொல்லலாம்.

இது போன்று ஒப்புக் கொள்ளும்போது உங்களது நேர்மை பக்தர்கள் மத்தியில் மேலும் உயர்வடையும்.  நீங்கள் சொல்வதை அப்படியே கேட்க ஆரம்பித்து விடுவார்கள். வசிய மருந்து கொடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றுவிட்டால் உங்கள் தொழில் பண மழை கொட்ட ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

36 comments:

  1. தல உண்மையை சொன்னீங்க.

    இதை விட யாராலும் விளக்கமா சொல்ல முடியாது. பாடம் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் சாத்தியமே.ஆனால் உண்மையில் வசிய மருந்து என்று எதையோ செய்து தருகின்றனர். அதை சாப்பிட்டால் மனைவி கணவனுக்கு வசியமருந்து தந்தால் மனைவியை கண்டால் ஒருவித பயம், மனைவி சொல்லே அந்த வீட்டில் எடுபடும்.எவ்வளவு தவறாக மனைவி செய்தாலும் அதை எதிர்க்க முடியாது.கணவன் மனைவியின் நினைவாகவே இருப்பான்.சதா மனைவி ஏக்கத்தில் இருப்பான்.உடலும் சீராக இருக்காது.ஏதாவது உடல்நிலை சம்பந்த பட்ட நோய்கள் வரும்.மிகவும் பாதிப்பு ஏற்படும்.குடும்பம் கேடு ஏற்படும்.எவ்வளவு சொத்து வசிய மருந்தால் பாதிக்கப்பட்டவருக்கு இருந்தாலும் ஏமாற்றுபவர்களிடம் கைமாறிவிடும்,அல்லது ஏமாறி விற்றுவிட நேரும். வசியத்தால் பாதிக்கப்பட்டவரை உடன் பிறந்தோர் புரியாமல் கைவிட்டு விட நேரும். மனநிலை மிகவும் பாதிக்கப்படும். நீண்ட நாள் மருந்து இருந்தால் பக்கவாதம் ஏற்படும். மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடும்.எனக்கு தெரிந்து மனைவி வைத்த வசிய மருந்தால் தலையில் நரம்பு பிரச்னையில் ஒரு பையன் இறந்துவிட்டான். பிரச்சனைகள் தாங்க முடியாது,நிறைய சொத்து உள்ளவர்கள்,சிறிது சிறிதாக சொத்தை இழக்க நேரிடும்.மருத்துவ சான்று வேண்டும் என்றால் மருத்துவர் mukundan கோவை அவர்களை பார்க்கலாம்.இவர்தான் வெளிபடையாக கூறியுள்ளார்.பார்க்க http://vashiyam.blogspot.in/.. ஆகவே இதை வெறும் மனரீதியான ஏமாற்று வேலை என்று கருத கூடாது. அப்படி செய்பவர்களும் இருக்கிறார்கள்.இவர்களை வைத்து இது போன்று கட்டுரை எழுதினால் எல்லோரும் வசிய மருந்து என்றால் இப்படி தான் என்று தவறாக கருதிவிடுவர். ஆகவே ஆசிரியர் உண்மையான வசிய மருந்து அதனால் பாதிக்கப்பட்டவர்கள், வசியமருந்தின் கெடுதல்கள், இதனால் இறந்தவர்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு அதையும்,இதையும் சேர்த்து இரண்டு வகையான வசியம் பற்றி எழுதவேண்டும்.

      Delete
  2. பின்னி எடுக்கிறீர்கள் தலைவரே!

    என்ன தொழில் அனுபவம் பிரமாதமாக பேசுகிறதே.சொந்த கடை போட்ட அனுபவமா.
    நகைசுவையான பதிவு.நம் பக்கமும் வந்து போகலாமே.

    ReplyDelete
  3. // 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

    :) முடியல...!//

    ஆமாம் தல கண்டிப்பாக தொடரும்..,

    ReplyDelete
  4. // T.V.ராதாகிருஷ்ணன் said...

    aahaa....!!!//

    // தாராபுரத்தான் said...

    வசியம்...ம்ம்//



    :))

    ReplyDelete
  5. // அக்பர் said...

    தல உண்மையை சொன்னீங்க.

    இதை விட யாராலும் விளக்கமா சொல்ல முடியாது. பாடம் சூப்பர்.//


    உங்களுக்கு தெரிந்த யோசனையைச் சொல்லுங்கள் தல.., சேர்த்துக் கொள்ளலாம்,

    ReplyDelete
  6. // கக்கு - மாணிக்கம் said...

    பின்னி எடுக்கிறீர்கள் தலைவரே!

    என்ன தொழில் அனுபவம் பிரமாதமாக பேசுகிறதே.சொந்த கடை போட்ட அனுபவமா.
    நகைசுவையான பதிவு.நம் பக்கமும் வந்து போகலாமே.//


    நாம் பார்த்த நபர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டது..,

    கண்டிப்பாக உங்கள் பதிவுகளுக்கு வந்து விடுகிறோம்.,

    ReplyDelete
  7. இப்படி எல்லா தொழில் ரகசியத்தையும் வெளியிலே போட்டு உடைச்சிட்டீங்களே தல? சரி விடுங்க, நான் புது டெக்னிக் கண்டுபிடிச்சு எப்படியாச்சும் பொளப்பை நடத்திக்கிறேன் - சுவாமி ஹிட்டானந்தா

    ReplyDelete
  8. சூப்பர் தல‌

    பிரச்சினை ஒன்னுதான் அது ஆண்/பெண் ரகசிய உறவு, இதை மையமாக வைத்துதான் எல்லாமே (செக்ஸ் பத்திய நேரடி ஒளிப்பரப்பு, இதற்கு விடிவு தேடி சாமியாரிடம் செல்வது, இப்படி நிறைய....), இதை மட்டும் கொஞ்சம் தெரிந்துக்கொண்டு என்னாமா காசு பாக்குறானுங்க‌

    ReplyDelete
  9. காலையிலதான் வேற ஒரு கெட்டப்புல உலா வந்த மாதிரி இருக்குது!இப்ப வசியமா:)

    ReplyDelete
  10. சேலத்துல இருந்திருந்தா கடையாவது போட்டிருக்கலாம்:)

    ReplyDelete
  11. தல,

    உங்க பதிவுகள படித்து விட்டு நண்பர்கள் இதனை ஒரு கூட்டு பிசினெஸ் ஆக ஆரம்பிக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.
    உங்களுக்கு எவ்வளவு பங்கு வேணும் தல? (லாபத்துல தான்)

    ReplyDelete
  12. தல,

    உங்க பதிவுகளால டாக்டர் அக்பர் டவுசர் அவர்களுக்கு பெருத்த பாதிப்பாம். கேள்விப்பட்டேன். அவரின் தொழில் நுணக்கம் உங்களின் பதிவுகளில் வெளிப்பட்டு விடுகிறதாம்.

    ReplyDelete
  13. தமிலிஷ்'ல வோட்டு போட்டாச்சு தல.

    ReplyDelete
  14. பழனி ஆண்டவரே சுரேஷோட சிரிப்பு வசியத்திலிருந்து எங்களையெல்லாம் காப்பாத்து முடியல :)))

    ReplyDelete
  15. சார்! அடுத்தவங்களூக்கு ஐடியா குடுக்குறத விட நீங்களே ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கலாம்.

    ReplyDelete
  16. Eppudi Unkalla maddum ippadi mudikirathu

    ReplyDelete
  17. //சேட்டைக்காரன் said...

    இப்படி எல்லா தொழில் ரகசியத்தையும் வெளியிலே போட்டு உடைச்சிட்டீங்களே தல? சரி விடுங்க, நான் புது டெக்னிக் கண்டுபிடிச்சு எப்படியாச்சும் பொளப்பை நடத்திக்கிறேன் - சுவாமி ஹிட்டானந்தா//


    இன்னும் நிறைய தொழில் ரகசியங்கள் உள்ளன தலைவரே..,

    ReplyDelete
  18. //அபுஅஃப்ஸர் said...

    சூப்பர் தல‌

    பிரச்சினை ஒன்னுதான் அது ஆண்/பெண் ரகசிய உறவு, இதை மையமாக வைத்துதான் எல்லாமே (செக்ஸ் பத்திய நேரடி ஒளிப்பரப்பு, இதற்கு விடிவு தேடி சாமியாரிடம் செல்வது, இப்படி நிறைய....), இதை மட்டும் கொஞ்சம் தெரிந்துக்கொண்டு என்னாமா காசு பாக்குறானுங்க‌//




    உலகின் அனைத்து ஜீவராசிகள் பிரச்ச்னையும் ஆண் பெண் உறவின் மேல்தான் அமைந்திருக்கின்றன தல..,

    ReplyDelete
  19. //ராஜ நடராஜன் said...

    காலையிலதான் வேற ஒரு கெட்டப்புல உலா வந்த மாதிரி இருக்குது!இப்ப வசியமா:)//


    வசியம் சுலபமாக வருகிறதா தல..,

    ReplyDelete
  20. //King Viswa said...

    தல,

    உங்க பதிவுகள படித்து விட்டு நண்பர்கள் இதனை ஒரு கூட்டு பிசினெஸ் ஆக ஆரம்பிக்க முடிவெடுத்து இருக்கிறார்கள்.
    உங்களுக்கு எவ்வளவு பங்கு வேணும் தல? (லாபத்துல தான்)//


    அனைவரும் ஒரு கணினி வாங்கி தனிதனி ஐ.டி. உருவாக்கி ஓட்டுப் போடச் சொல்லுங்கள் தல..,

    ReplyDelete
  21. //ஸ்ரீராம். said...

    :))//

    //thenammailakshmanan said...

    பழனி ஆண்டவரே சுரேஷோட சிரிப்பு வசியத்திலிருந்து எங்களையெல்லாம் காப்பாத்து முடியல :)//


    //Sri said...

    Eppudi Unkalla maddum ippadi mudikirathu//


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  22. //ஷாகுல் said...

    சார்! அடுத்தவங்களூக்கு ஐடியா குடுக்குறத விட நீங்களே ஒரு ஆசிரமம் ஆரம்பிக்கலாம்.//


    விரைவில் ஆரம்பிக்கப் படும்..,

    ReplyDelete
  23. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..

    ReplyDelete
  24. வசியம்...ம்ம்

    ரெம்ப அவசியம்...

    பார்ரா இவரு அடங்குமாதிரி தெரியலியே
    :)))....

    ReplyDelete
  25. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    இதுல இவ்வளவு விஷயம் இருக்கா..//

    இன்னும் நிறைய இருக்கு தல..,

    ReplyDelete
  26. //seemangani said...

    வசியம்...ம்ம்

    ரெம்ப அவசியம்...

    பார்ரா இவரு அடங்குமாதிரி தெரியலியே
    :)))....//



    அதுக்கும் ஒரு மருந்து இருக்கு தல..,

    ReplyDelete
  27. எனக்கு கொஞ்சம் வசிய மருந்து அனுப்பி வைங்க தல.

    இந்த மாதிரி ஆளத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.

    ReplyDelete
  28. //Balamurugan said...

    எனக்கு கொஞ்சம் வசிய மருந்து அனுப்பி வைங்க தல.

    இந்த மாதிரி ஆளத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.//


    அதுதான் தயாரிக்கும் முறையையே சொல்லி யிருக்கிறோமே தல..,

    ReplyDelete
  29. வசிய மருந்துக்கு ஒரு அற்புதமான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள். நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கும்போது, ஒரு மந்திரவாதியின் அறிமுகம் கிடைத்தது. அடிப்படையில் அவர் மூலம் இந்த வசிய மருந்துகள் குறித்த விஷயங்களை அறிந்திருக்கிறேன். அதில் பெரும்பாலும் நீங்கள் குறிப்பிட்ட காரணங்களுக்காகத்தான் வசியம் செய்ய மக்கள் விரும்புகிறார்கள். இதை அவரே நொந்துக்கொண்டார்.

    -
    DREAMER

    ReplyDelete
  30. வசிய மருந்து பற்றி எழுதியே எங்கள் அனைவரையும் வசியம் செய்துவிட்டீர்கள் உங்களின் எழுத்துக்களால் .
    அறிந்துகொண்டேன் பல வசிய மருந்து பற்றி. பகிர்வுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  31. வசிய மருந்து வைத்தல் என்பது உண்மை. பொய்யாக ஏதோ ஒன்றை கொடுத்து இதுதான் வசிய மருந்து என்று கூறி ஏமாற்றி சிலர் தொழில் செய்யலாம். ஆனால் உண்மையாக வசிய மருந்து வாங்கி OR செய்து அதை கணவனுக்கு தெரியாமல் சாப்பாட்டில் வைக்கும்படி சொல்லித்தரும் ஜோசியர்கள், மாந்த்ரிகர்கள் உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் இது போல ஆட்களிடம் செல்லும் பெண்கள் கட்டிய கணவன் மிகுந்த பாசத்துடன் இருந்தாலும் பாசமாக இல்லை என்று பொய் கூறி, கணவனை அடிமை படுத்த மருந்து வாங்கி சாப்பாட்டில் வைக்கின்றனர்.மேலும் வசிய மருந்து பற்றி தெரிந்து கொள்ள http://seivinaivasiyam.blogspot.in/.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails