Friday, May 27, 2011

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு சவால்

நாட்டில் எல்லோரும் ரொம்ப சீரியஸா யோசனை பண்ணிட்டு இருக்காங்க. சீரியஸா அப்படிங்கறத தீவிரமான்னு எழுதலாமான்னு யோசித்து பார்த்தால் தப்பா அர்த்தம் வந்திருந்தும் நினைச்சால் ஒரு வேளை அதையே மக்கள்  அதுதான் சரி என்று சொல்லி விடுவார்கள் என்று சீரியஸா என்றே எழுதி விட்டேன்.

கொஞ்சம் மென்மையாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்த போது  சில மென்மையான பாடலகள் நினைவுக்கு வந்தன. அதில் ஒரு பாடல்தான் இது.



ஆனந்த தாகம்
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி
மலர்கொடி நேரம் பார்க்குமே
உரிமையில் என்மயில் ஆடும் முன்
ஆடும் முன்
உன்மழைக்காலம் போய்விடும்
ஆசைஆகிவிட நேர்ந்திடும்
நேருமோ....
ராத்திரி அலைகள் ஓயட்டும்
...
மூத்தவர் தலைகள் சாயட்டும்
..
தீபத்தின் விழிகள் மூடட்டும்
....
ஆடை கொடு
ஆளை விடு
தேகம் கொடு
போதும் விடு
தாகம் ஊருதே
......
( மௌனம்)

வலைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே
கன்னியின் மேனி வேர்க்குதே
ஏனம்மா
ஜன்னலின் கம்பி பார்க்குதே
அடராமா..,

பேசும் ஓசை இங்கு கேட்குதே கேட்குமோ
திரிகளை விரல்கள் தூண்டுதே தூண்டாதோ
அணைகளை வெள்ளம் தாண்டுதே
ஆசைநாகம் வந்து தீண்டுதே

நாணம் வந்து போகின்றது
தீயில் விஷம் சேர்கின்றது
கண்கள் மூடுதே
......(மௌனம்

அனைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே..



அதில் ஒரு பாடல்தான் இது. இந்தப் பாடல் என்ன ராகம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் இசைக் கோர்வைகள் தனித்தனியாக அசத்தும். அதைவிட  பாடகர்கள் பாடுவதே மிக அழகாக வேறொருவரால் இப்படிக் கொண்டுவர முடியுமா என்பது போல நேர்த்தியாக வடிவமைத்திருப்பார்கள். படத்தின் பெய்ர் தெரியவில்லை. வா இந்தப் பக்கம், ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுகிறது என்றெல்லாம் யூ ட்யூப் பக்கம் பேசி இருப்பார்கள். இந்தப் பாடல் பெரும்பாலானவர்களுக்கு புதிதாக் கேட்பதாகவே அமைந்திருக்கும்.


=======================================================================







எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் , நிலாவே, நிலாவே

நான் காண்பதே உன் கோலமே அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்

உள்ளத்தின் தீபம் உள்ளே என் ஜீவன் நீ நீ நீ

கல்லானவன் பூவாகிறேன் கண்ணேஏஏஏ உன்னைஐஐஐ எண்ணீஈஈஈ

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான் நீ நாம்ம்ம்ம்



இந்தப் பாடல் பதின்ம வயதில் கேட்டு இருந்தாலும் சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது. கமல்ஹாசனை மனதில் நிறுத்தியே அசைப்போட்டு வந்த பாடல். கேட்ட்கும்போதெல்லாம் ஒரு உலுக்கு உலுக்கும்.  கதாநாயகி பாண்டியனின் போலீஸ் அக்காதான்.
இந்தப் பாடலை கேட்கும்போதே  அலைகள் ஆர்ப்பரிப்பதும்  உள்ளத்தில் புயல் அடிப்பதும்  படக்காட்சியைப் பார்க்காமலேயே நமது உள்ளத்தில் தோன்றும். அதுவும் அந்த கடைசி வரிகள்.  மீண்டும் ஒரு முறை இளைஞனாக மாறி களவு காதலைச் செய்யலாமா என்று தோன்ற வைக்கும். பாடலைப் பார்க்கும்போது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 2.50க்கு பின் வரும் நடன அசைவுகள் க்க்க்கிரேட்.,

=======================================================================







வேண்டும் வேண்டும் உங்கள் உறவு,
வெண்பனி தென்றல் உள்ளவரையில்..,

தோன்றும் இளமை, தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்..,

நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்

கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடைமழையில் நான் நனைந்திட வேண்டும்

உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்

இந்தப் பாடல் சமீப கால அரசியலில் முதல் இரண்டு வரிகளுக்காக பாடப் பட்டு வந்த பாடல். சிவாஜி, ஸ்ரீபிரியா காதல் கோடிகளாக இந்தப் பாடலைப் பாடினாலும் கூட கதை தந்தை சிவாஜிக்கும், மகள் ஸ்ரீப்ரியாவுக்கும் இடையேயானது.  தாயார் ஸ்ரீப்ரியா மகளை பெற்றவுடன் ஓய்வு பெற்றுவிடுவார்.  படம் முடியும் போது இதே பாடலை மகள் தந்தையைப் பார்த்து பாடுவார் என்றால் படத்தின் புரட்சியைப் புரிந்துதான் ஆக வேண்டும். இந்தப் படத்தோடு  மூன்றாம் பிறை, மூன்று முகம் ஆகிய வெளியானதாக பேசிக் கொள்கிறார்கள்.

கடைசி வரியைப் பாடும்போது  ஸ்ரீப்பிரியாவின் கண்களே தனிக் கவிதையாக ஒளிரும்.


டிஸ்கி:- இந்தப் பாடல்களில் இளையராஜாவின் பணி கலந்துள்ள பாடல்களை  கேட்டதும் சொல்லுங்களேன்.

8 comments:

  1. //நாட்டில் எல்லோரும் ரொம்ப சீரியஸா யோசனை பண்ணிட்டு இருக்காங்க. சீரியஸா அப்படிங்கறத தீவிரமான்னு எழுதலாமான்னு யோசித்து பார்த்தால் தப்பா அர்த்தம் வந்திருந்தும் நினைச்சால் ஒரு வேளை அதையே மக்கள் அதுதான் சரி என்று சொல்லி விடுவார்கள் என்று சீரியஸா என்றே எழுதி விட்டேன்.//

    கொலைவெறிதான் போங்க.

    கிங் விஸ்வா

    காமிக்ஸ் படிக்கும் தமிழ் ஹீரோயின்

    ReplyDelete
  2. ஆனந்த ராகம்... பாடல் அந்த கால விவதபாரதியில் கேட்காத நேயர்கள் இல்லை... அவ்வளவு பிரபலம் படத்தின் பெயர் வா இந்த பக்கம்.. இயக்கியது மௌலி, இசை ஷ்யாம், ஒளிப்பதிவு.. பி.ஸி.ஸ்ரீராம்..அற்புதமான படம் இது.

    ReplyDelete
  3. //King Viswa said...

    //நாட்டில் எல்லோரும் ரொம்ப சீரியஸா யோசனை பண்ணிட்டு இருக்காங்க. சீரியஸா அப்படிங்கறத தீவிரமான்னு எழுதலாமான்னு யோசித்து பார்த்தால் தப்பா அர்த்தம் வந்திருந்தும் நினைச்சால் ஒரு வேளை அதையே மக்கள் அதுதான் சரி என்று சொல்லி விடுவார்கள் என்று சீரியஸா என்றே எழுதி விட்டேன்.//

    கொலைவெறிதான் போங்க.

    கிங் விஸ்வா

    காமிக்ஸ் படிக்கும் தமிழ் ஹீரோயின்
    //


    வாங்க தல, முதல்வர் நீங்கள்

    ReplyDelete
  4. //Anonymous said...

    ஆனந்த ராகம்... பாடல் அந்த கால விவதபாரதியில் கேட்காத நேயர்கள் இல்லை... அவ்வளவு பிரபலம் படத்தின் பெயர் வா இந்த பக்கம்.. இயக்கியது மௌலி, இசை ஷ்யாம், ஒளிப்பதிவு.. பி.ஸி.ஸ்ரீராம்..அற்புதமான படம் இது.
    //


    வாங்க நண்பரே

    கண்டிப்பாக இது அந்தக் கட்டத்தில் சூப்பர் ஹிட்டான பாடலாகத்தான் இருக்க முடியும். மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. இன்றைய இளைஞர்கள் கேட்டிருப்பதற்கான வாய்ப்பு குறைவு

    ReplyDelete
  5. அநாநியை நான் திறந்து வைத்திருப்பதற்குக் காரணம் நான் ஏதாவது தவறாக எழுதியிருந்தால் அதை நண்பர்கள் சுட்டிக் காட்ட வசதியாக இருக்கும் என்பதே ஆகும். நல்ல கருத்துக்களை நீங்கள் உங்கள் பெயர் சொல்லியே சொல்லுங்கள். விவாதங்களிலும் பெயருடனயே கலந்து கொள்ளுங்கள்

    ReplyDelete
  6. அசல் சிந்தனை மற்றும் தீவிரமாக ஒரு வாழ்க்கையை எடுத்து பற்றி ரஜினி பேச்சு. அது அவருக்கு நன்கு எப்படி நடந்தது? மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
    http://bit.ly/n9GwsR

    ReplyDelete
  7. ஆனந்த ராகம்,

    ஷ்யாம் இசை அமைப்பாளர். MSV-இன் உதவியாளராக இருந்தவர் (ஷாம் என்ற பெயரை அவர்தான் ஷ்யாம் என உச்சரித்ததாகவும் அதனால் அதையே வைத்து விட்டதாகவும் கூறியதாக நினைவு). சமீபத்தில் விஜய் டிவியில் "Super Singer Junior"-இல் ஒரு நிகழ்ச்சியில் விருந்தினராக வந்திருந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவ்ர்.

    ReplyDelete
  8. //ஆசைஆகிவிட நேர்ந்திடும்//

    அது “ஆசை ஆறி விட நேர்ந்திடும்” என்று இருக்க வேண்டுமென நினைகிறேன். அப்போது தான், பொருள் சரியாக இருக்கும்.

    தாங்கள் அனுமதித்தால் ஒரு சின்ன suggestion. பல்லவி சரணங்களுக்கு இடையில் ஒரு வரி இடைவெளி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails