Friday, December 25, 2009

விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பிடித்த ஒரு ரீமேக் படம்

விஜய்யின் ரீமேக் படங்களை பார்த்து ஒரு புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்  வலையுலக கண்மணிகளுக்காக இந்த புதிய ரீமேக் முயற்சி.

இன்றைய விஜய்யின் ரசனைக்கு ஒப்ப, இன்றைய ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில்  இங்கே ஒரு ரீமேக் ஆக்கும் முயற்சி நடைபெறுகிறது.

==========================================================================
விஜய்  பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகிறார். வீட்டில் அவர் அப்பா தனது  பல தொழில்கள் சம்பந்தமான டாகுமெண்ட்களை வைத்துக் கொண்டு ஏதாவது ஒன்று நிறுவணத்தை நிர்வகிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். ஆனால் விஜய் தான் படிக்க வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கும் அவரது அப்பாவுக்கும் சண்டை வருகிறது.  அவரது அம்மா இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறார். விஜய்  மெரினாவுக்கு நண்பர்களுடன் வந்து விடுகிறார்.

----------------------------------------------------------------------------

நாற்கரச்சாலையில் ஒரு டாப்லெஸ் காரினை பல சுமோக்கள் டயோட்டாக்கள் துரத்துக்கின்றன.  பல வாகனங்களையும் தடைகளையும் தாண்டி வாகனமானது  கத்திபாரா பாலத்தின் மேல் ஏறுகிறது.  காரின் வேகத்தினைக் கட்டுமடுத்த முடியாமல்  தடுமாற அதிலிருக்கும் நாயகி தமன்னா அப்படியே வானத்தில் பறந்துவந்து  மெரினாவில் விழுகிறார்.  அவர் விழும் இடத்திற்கு அருகில்  விஜய் குளித்துக் கொண்டிருக்கிறார்.  இருவரது கண்களும் பேசிக் கொள்கின்றன

இங்கு ஒரு ரீமிக்ஸ் பாட்டு

விழியில் விழிமோதி இதயக் கதவொன்று திறந்ததே

ஐஸ்ஸும்  ஐஸ்ஸும் க்ராசாகி  ஹார்ட் ஓபன் ஆனதே

கண்ணும் கண்ணும்தான் தெறந்தாச்சு

இப்படி கலவையான பாடல் ஒன்று ஒலிக்கிறது.

-------------------------------------------------------------------------------------

பாடலின் முடிவில்  தமன்னா அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். விஜய்யும் அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

சில நாட்கள் கழித்து  விஜய்  பைக்கில் சென்னை வீதிகளில் உலா வருகிறார். அப்போது சில சமூக விரோதிகள் அருகில் உள்ள சேரிப் பெண் வம்புக்கிழுக்க  அந்தப் பெண்  அந்த வீதியில் போவோர்  வருவோரையும்  பார்த்துக் காப்பாற்றுமாறு கதறுகிறார்.

அவரது அண்ணா என்ற குரல்  விஜய்  காதில் விழுகிறது.

உடனே அந்தத் தங்கையைக் காப்பாற்ற விஜய் பறந்து வருகிறார்.

அடியாள்: ஏய் யார்ரா நீ.........

விஜய்:  செவுத்தில வந்தா பல்லி..,

பறந்து வர்ரவன் கில்லி.., டா.......

அடியாட்கள் கூட்டத்தினை அடித்து நொறுக்குறார். குறிப்பிட்ட கட்டத்தில் அடியாட்கள் அதிகரித்துக் கொண்டே இருக்க விஜய் அடித்து நொருக்கிக் கொண்டே இருக்கிறார். அப்போது  ராயப்பேட்டை மருத்துவ மனையில் இடம் இல்லை என்று விஜய்க்கு குறுஞ்செய்தி வருகிறது.  உடனே சமுதாய நோக்கு கொண்ட விஜய்  வண்டியைத் திருப்பிக்கொண்டு சென்னையை விட்டு வெளியே வருகிறார்.  கத்திபாரா மேம்பாலம் நோக்கி வரும்போது  கலவரத்தை ஆரம்பித்த  முக்கிய அடியாள் தனது சுமோ வாகனத்துடன் மோதுகிறான். விஜய்  முக்கிய அடியாள் இருவரும் வானத்தில் பறக்கிறார்கள்.

நீ போக வேண்டியது ராயப்பேட்டை ஆஸ்பத்திரி இல்லடா..,

தண்டையார் பேட்டை ஆஸ்பத்திரி.., 

http://www.thehindu.com/2009/06/14/images/2009061450310101.jpg
என்று சொல்லி ஒரு உதை விடுகிறார். முக்கிய அடியாள் நேரடியாக தண்டையார் பேட்டையில் போய் விழுகிறார்.

விஜய் அப்படியே வானத்தில் பறந்து  அருகில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரின் கீழ் கம்பிகளை பிடித்துக் கொள்கிறார். அந்த ஹெலிகாப்டரை தமன்னா ஓட்டிவருகிறார்.

இருவரின் கண்களும் மீண்டும் பேசிக் கொள்கின்றன..  பழைய ட்யூன் மீண்டும் ஒலிக்கிறது.  விஜயின் கை வழுக்குகிறது. தமன்னா தனது இடுப்பு பெல்ட்டை கழட்டிக் கொடுக்கிறார். விஜய் அதன் துணையுடன்   தொடர்ந்து பறந்து வந்து ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் குதித்து விடுகிறார், அடுத்து உள்ள பெண்கள் கல்லூரியில் தமன்னா இறங்கிக் கொள்கிறார். 

விஜய் ஹெலிகாப்டர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டுவந்த நிகழ்ச்சியை  தொலைநோக்கி மூலம் அவரது அண்ணன் தலைவாசல் விஜய் பார்த்துவிடுகிறார். அவர் ராணுவத்தில் ஒரு உயர் பதவியில் வகிப்பவர்.


விஜயின் தலையில் பொறி பறக்கிறது. கட்டிடத்தில் குதித்த விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கிறார். உடனே தலையில் பறக்கும்பொறி நெஞ்சில் பறக்கிறது.  ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே..,




விஜய் தனது தந்தையிடம் சொல்லி  தனது நிறுவனம் ஒன்றைப் பார்க்க ஆரம்பிக்கிறார்.


விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கும் விவகாரம் ராணுவத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குதெரிந்து விடுகிறது. அவர் விஜயை மிரட்டுகிறார்.  தமன்னாவின் அண்ணன் என்பதால் விஜய் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்.


விஜய்க்கு புத்திமதி சொல்லும் வகையில்  விஜயின் நிறுவனத்திற்கு வந்து செல்கிறார். இந்தக் காட்சிகளை விஜயின் தொழில் போட்டியாளர்கள் கவனித்து விடுகிறார்கள். அவர்கள் தமன்னாவைத் தூக்க தயாராகிறார்கள்.
தமன்னாவை மறக்க முடியாமல் தடுமாறும் விஜய் தூக்கத்தை இழக்கிறார். அதை சரிசெய்யும் வகையில் அனைத்து நிறுவனங்களின் நிர்வாகத்தையும் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். பல நாட்கள் தூங்காமல் தொடர்ச்சியாக வேலை பார்க்கும் ரக்சியம்  கின்னஸ் புத்தகத்திற்கு தெரிந்துவிடுகிறது. விஜய் தூங்க நினைக்கும்போதெல்லாம் தமன்னா மிஸ்டு கால் கொடுத்து கடலை போடுவதால் விஜய் துளியும் தூங்காமல் வேலை செய்கிறார்.

விஜய் தூங்க நினைப்பதால் என்னைத்தாலாட்ட வருவாளா என்று பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிறார்.  விஜயைப் பார்த்து தூங்க வைப்பதற்காக தமன்னா விஜயின் நிறுவனத்தை அனுகுகிறார்.  கின்னஸ் சாதனையை நேரடியாக ஒளிபரப்பும் கேமிரா மேனா இருக்கும் மூன்றாவது அண்ணன் தமன்னா விஜயிடம் நேரில் கடலை போடுவதைப் பார்த்து காட்டிரி ஆகிரார்.  விஜயைக் கொள்ள முயற்சிக்கிறார்.  விஜயின் நண்பர்களை காப்பாற்றி அவரை அவரின் அப்பாவிடம் அழைத்துச் செல்கிறார்கள்.

விஜயின் அப்பா தமன்னாவைப் பார்த்து இது போன்ற சப்பை ஃபிகர்களை விட்டுவிடுமாறும்  விஜய்க்கு  குருவி த்ரிஷா, அ.த,ம. ஷ்ரேயா, வில்லு நயந்தாரா, வேட்டைக்காரன் அனுஷ்கா போன்று நச் ஐட்டமாக பார்ப்பதாகச் சொல்லுகிறார்.

அதெல்லாம் மார்க்கெட் போன ஆளுங்க...,  
இவ இவ இவ..  
மார்கழி மாசத்துக்கு ஏத்த ஆளு...,  என்று பன்ச் டயலாக் விடுகிறார்.  டரியலான அவரது அப்பா அடியாட்களை அனுப்புகிறார்.  இரு குடும்பத்தாரும் மிரட்டுவதால் விஜயின் நண்பனின் தந்தை  மும்பை தாதாவிடம் அனுப்புகின்றனர்.

மும்பை தாதா  தனது அடியாட்களுடன்  இந்திப் பாடல் பாடி ஆடிக் கொண்டு இருக்கிறார். அவரிடம்  விஜயின் நண்பர் அறிமுகப் படுத்தி வைக்கிறார்.

இந்த மும்பை மாநகரிலே முமைத்கான் முன்னிலையிலே நாளை உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று  மும்பைதாதா அறிவித்துவிடுகிறார்.  முமைத் கானின் ஆட்டமும் நடக்க ஆரம்பித்து விடுகிறார்.

திருமணத்திற்கு முன்பு ஜோடிகள் இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்து உடை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

உடை மாற்றும்போது  ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொள்கின்றனர்.  இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்துக் கொண்டு சென்னையை நோக்கி வந்து விடுகிறார்கள்


=============================================================

வீட்டிற்கு திரும்பிய விஜய் மற்றும் தமன்னா எதிலும் பிடிப்பே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரூக்கிறார்கள், அப்போது விஜயின் பழைய அழுக்குத் துணிகள் சலவைக்குப் போய் திரும்பிவருகின்றன, அப்போது அதில் இருக்கும் லேடிஸ் பெல்ட விஜயின் அம்மாவின் பார்வைக்கு தட்டுப் படுகிறது.
அது ஒரு முக்கிய தருணத்தில் தமன்னாவிடம் இருந்து விஜய்யின் இடுப்பில் சிக்கிக் கொண்டு அவரிடமே தங்கி விட்ட ஒரு நினைவுச் சின்னம்.


பின்னர் அவர் தமன்னாவின் அப்பாவிடம் பேசி பெல்ட்டைத் திருப்பிக் கொடுக்க வருவதாக  சொல்லுகிறார். விஜய் அப்பா, அம்மா, நண்பர்கள் சகிதம் தமன்னாவின் வீட்டிற்குள் செல்கிறார். அங்கே  தமன்னாவின் பெரிய, சிறிய நடு அண்ணன்கள் வரிசையாக நின்று வரவேற்கிறார்கள்.


அவர்கள் கையில் துப்பாக்கி, விஜயின் அப்பாவிடம் அவரது சொத்து மற்றும் நிறுவனங்களை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு மிரட்டுகிறார்கள். உடனே  விஜயும் தனது கையிலிருந்து அதிவேக துப்பாக்கியால் பெரிய அண்ணனை மடக்கிவிடுகிறார்.

தனிவழில வர நான் தளபதியில்லடா 

உன்வழியிலயே வந்து 

உன்னையே மடக்குற இளைய தளபதிடா...,

உடனடியாக ஃபிளாஷ்பேக் விரிகிறது
================================================
ஃபிளாஷ்பேக் காட்சி:-


உலக பயங்கரவாதியான தமன்னாவின் குடும்பத்தினரை பிடிக்க இண்டர்போல் போலிஸ் தனித் திட்டம் போடுகிறார்கள்.  அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவனாக நடிக்கிறார். பின்னர் அவர் தமன்னாவை நெருங்குவது, மும்பை ஆட்களை மடக்க முடியாமல் போனது போன்றவை ஃபிளாஷ் பேக்கில் வருகின்றன..,


தமன்னாவின் காதல் உண்மைக்காதல் என்பதால் சட்டம் அவரை குற்றவாளியல்ல என்று விடுதலை செய்து விடுகிறது

இந்தியாவைக் காத்த இந்தியாவின் இளைய தளபதிக்கு பதக்கங்களும் மாலை மரியாதைகளும் குவிகின்றன
விஜய் தமன்னாவை மணந்து கொண்டு காதலுக்கு மரியாதை செய்து விடுகிறார்

============================================================

அடியாள்;  நீ யார் மேல கைவெச்சிருக்க தெரியமா?

ஹீரோ:-  உன்மேல யார் கைவச்சிருக்கா தெரியுமா?

வசனம் இடம் பெற்ற படம் மனதில் இருக்கிறதா  நண்பர்களே...,

=============================================================
இது மீள்பதிவாக இருந்தாலும் வாசகர்கள் ஓட்டுக்கள் போட்டால் தமிழ்மணப் பரிந்துரை பகுதிக்குச் செல்லும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

25 comments:

  1. தப்பி தவறி விஜய் இதப்படிச்சி ஒரு படத்துல நடிச்சி(?) வெளி வந்துச்சு - உங்களுக்கு இருக்கு ...

    ReplyDelete
  2. இதல்லவோ கதை, விஜய்க்கு ஏத்த கதை, வாழ்க!

    ReplyDelete
  3. என்ன முழுக்க விஜய்யை சுற்றியே பதிவுகள்...?

    ReplyDelete
  4. விட்டுடுங்க ரொம்ப பாவம் :))))

    ReplyDelete
  5. 'மூன்று இடியட்ஸ்' என்கிற படத்தைப் பாருங்கள்...வேட்டைக்காரனின் அவலமும், தமிழ் சினிமாவின் பரிதாபமும் புரியும்!

    -பருப்பு ஆசிரியர்

    ReplyDelete
  6. // நட்புடன் ஜமால் said...

    தப்பி தவறி விஜய் இதப்படிச்சி ஒரு படத்துல நடிச்சி(?) வெளி வந்துச்சு - உங்களுக்கு இருக்கு .//

    இப்படித்தான் தல எல்லாப் படமும் வருது..,

    ReplyDelete
  7. // ஷங்கி said...

    எப்பா சாமி!!! :))//

    வாங்க தல..,

    ReplyDelete
  8. // பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    இதல்லவோ கதை, விஜய்க்கு ஏத்த கதை, வாழ்க!//

    ஏற்கனவே அவர் சூப்பர் ஹிட் கொடுத்த கதைதான் தல

    ReplyDelete
  9. // ஜெட்லி said...

    செம நக்கல் தல//

    ஹி.., ஹி..,

    ReplyDelete
  10. //ஸ்ரீராம். said...

    என்ன முழுக்க விஜய்யை சுற்றியே பதிவுகள்...?//


    ஹிட் மன்னர்..,

    ReplyDelete
  11. // gulf-tamilan said...

    விட்டுடுங்க ரொம்ப பாவம் :))))//

    எல்லோரும் ரொம்ப நல்லவர்னு சொல்றாங்க..,

    ReplyDelete
  12. // (Mis)Chief Editor said...

    'மூன்று இடியட்ஸ்' என்கிற படத்தைப் பாருங்கள்...வேட்டைக்காரனின் அவலமும், தமிழ் சினிமாவின் பரிதாபமும் புரியும்!

    -பருப்பு ஆசிரியர்//


    பார்த்துவிடுவோம்

    ReplyDelete
  13. தளபதி கலக்குகிறார் போல !

    ReplyDelete
  14. தல சிரிப்பு தாங்க முடியல.

    எப்படி உங்களால மட்டும்.

    ReplyDelete
  15. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    தளபதி கலக்குகிறார் போல !//

    இளைய தளபதி தல..,

    ReplyDelete
  16. // அக்பர் said...

    தல சிரிப்பு தாங்க முடியல.

    எப்படி உங்களால மட்டும்.//

    வாங்க தல

    ReplyDelete
  17. இத நான் வன்மையா கண்டிக்கிறேன் சுரேஷ்.

    மிக முக்கியமான விசையங்கள் இங்கு மிஸ்ஸிங் :-(

    இந்த படம் ரோபோவுக்கு பின் அல்லது முன் அதாவது "ரோபி" "ரோமு"

    சந்திரமுகி மற்றும் சிவாஜி-யில் ரஜினி பயன் படுத்திய சில துணிகள் இதுவரை வந்துள்ள படத்தில் பயன் படுத்தியாச்சு.

    ஆகவே இது "ரோபி" யாக இருந்தால், இன்னும் சில வாசனங்களும் தலைவரின் பழைய துணிகளும் கிடைக்க வசதியாக இருக்கும் :-)...மேலும் ...

    "சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...பேசிகிட்டு இருக்கேன்ல..."என்று நீங்கள் உறுமுவது கேட்கிறது ...:-)

    ReplyDelete
  18. //சிங்கக்குட்டி said...

    மிக முக்கியமான விசையங்கள் இங்கு மிஸ்ஸிங் :-(
    //

    முக்கிய அடியாள் சமுதாயத்தை பாதிக்கும் வியாதி என்பதால்தான் அவன் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்..,

    எவ்வளவு முக்கிய விவரத்தை தவரவிடுகிறீர்களே தல..,

    ReplyDelete
  19. போதுங்க கொஞ்ச நாளைக்கு விஜய்ய விட்டுறுங்க பாவம்.

    ReplyDelete
  20. கலக்கிட்ட்டீங்க... சுரேஷ்...

    கதைக்கான முழுக் காப்புரிமையையும் நீங்களே வைச்சிருங்க.. இல்லைன்னா சுட்டுப் படமாக்கிடுவாங்கள்:))

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails