Thursday, May 30, 2013

அப்துல் ரகுமான் பெயரை கெடுக்கப் பார்த்த நாஞ்சில் நாடன்

டிஸ்கி:- சில நேரங்களில் சில விஷயங்கள் பேசும் போது வெளிவரும் சில விஷயங்கள் விசமாகவும் விஷமாகவும் போய்விடுவதால் உண்மை நிலை தெரிந்தவர்கள் தாராளமாக உண்மையைச் சொன்னால் நான் என்னை சரி படுத்திக் கொள்வேன். 

கடந்த சில நாட்களில் இணையத்தில் பேசப் படும் சில விஷயங்கள், பல விஷயங்களை அம்பலப் படுத்திக் கொண்டு இருக்கின்றன. இதில் எனக்குள் உறுத்திய சில விஷயங்களை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  http://neerottam.wordpress.com/2010/01/07/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/  வலைப்பூவில்  


 //விழாவுக்கு தலைமை தாங்கிய எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் அப்துல் ரகுமானைப் புகழ்ந்து சொன்ன சில வார்த்தைகள். பல வருடங்களுக்கு முன்பு தனது மகளுக்கு எழுத்தாளர் கோட்டாவில் எம்.பி.பிஎஸ் சீட் பெறுவதற்கு அப்துல் ரகுமான் காரணமாக இருந்தார் என்று குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். தனது மகள் 600க்கு 596 மார்க்குகள் எடுத்ததாக சொன்னார் அவர். “அதற்கு மேல் அவளால் எடுத்திருக்க முடியாது. ஆனால் நான் பிறந்து வளர்ந்த சாதியின் சுமை காரணமாக அவளுக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை” என்று சொன்னார்..//


எம்பிபிஎஸ் படிக்க அடிப்படைத் தகுதியாக 80களிலிருந்து +2 மட்டும் நுழைவுத் தேர்வும் சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து +2 தேர்வு மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன.   தர வரிசை கணக்கீட்டிற்க்கு உபயோகப் படுத்தும் முறையிலோ அல்லது +2 தேர்வு மதிப்பெண்களிலோ எப்போதுமோ  600க்கு என்ற கணக்கீடு வந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை பாலிடெக்னிக், திருப்புதல் தேர்வு போன்றவைகளில் அவ்வாறு கணக்கிடுகிறார்களா என்றும் தெரியவில்லை.   

மேற்கண்ட வாக்கியங்களின் படி அவர் சார்ந்த அவர் விண்ணப்பம் செய்திருக்கிறார் ஆனால் கிடைக்கவில்லை. பொதுவாக அனைத்துவகை இட ஒதுக்கீட்டுகளும் ஏறக்குறைய ஒரே நேரத்தில்தான் நிரப்பப் பட்டு வருகிறது.  அவர் மகளுக்கு அதற்கு மேல் வாங்க முடியாது என்பதை ஏனோ அவரே ஒத்துக் கொள்கிறார். அதே நேரத்தில் விண்ணப்பித்து கிடைக்கவில்லை என்பதால் அவரை பிற மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்கிவிட்டார்கள் என்பதையும் மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார்.   எழுத்தாளர் அல்லது ஏதோ ஒரு வகை இட ஒதுக்கீட்டின்படியும் அவருக்கு கிடைக்கவில்லை என்பதையும் ஒத்துக் கொள்கிறார்.  

பின்னர் திரு. அப்துல் ரகுமான் அவர்களைத் தொடர்பு கொண்டபின் எழுத்தாளர் கோட்டாவில் எம்பிபிஎஸ் சீட் வாங்க உதவியதாகச் சொல்கிறார். அப்படி என்றால் எழும் சந்தேங்கள்.

அவரது மகளின் எம்பிபிஎஸ் விண்ணப்பம் முறையாக அனுப்பப் பட்டு தரவரிசைப் பட்டியல் வெளியிடப் படும் வரை இவர் ஒரு எழுத்தாளர் என அங்கீகரிக்கப் படாமல் இருந்தாரா? அப்துல் ரகுமான் அவர்கள்தான் அவர் ஒரு எழுத்தாளர் என அங்கீகரிக்கப் பட உதவி செய்தாரா? அப்படித்தான் எனில்  உண்மையிலேயே அப்துல் ரகுமான அவர்களின் உதவி மிகப் பெரியதுதான்.  ஒரு எழுத்தாளருக்கு எழுத்தாளர் என்ற அங்கீகாரம் பெற்றுத்த்ருதல் என்றால் சும்மாவா? தவிரவும் அந்த அங்கீகாரம் மூலம் மகளுக்கு எம்பிபிஎஸ் சீட் வேறு வாங்கிக் கொடுத்தல் என்பது டபுள் நன்றிக் கடன் அல்லவா?

 ஆனால் நிலமை அப்படித் தோன்றவில்லை. ஏனென்றால் முறையான விண்ணப்பம் மூலமாக இவருக்கு சீட் கிடைக்கவில்லை. ஆனால் அப்துல் ரகுமானின் தலையீட்டுக்குப் பிறகு கிடைத்திருக்கிறது.  என்பதை அவர் ஒத்துக் கொள்கிறார்.

அப்படி என்றால்  அவரின் தலையீடுவரை எழுத்தாளர் ஒதுக்கீடு நிரப்பப் படாமல் இருந்ததா? அவரின் தலையீட்டுக்கு முன்னால் வரைக்கும் இவர் விண்ணப்பம் செய்யாமல் வைத்திருந்தாரா?

ஏற்கனவே மாணவரகளுக்கு இட ஒதுக்கீடு செய்த பிறகு யாருக்காவது கொடுத்த சீட்டை பிடுங்கி இவருக்கு கொடுத்தார்களா? இவர் சொல்வதைப் பார்த்தால்  இவருக்கு சுத்தாமாக கிடைக்காமல் போனபிறகு அப்துல் ரகுமான் அவர்களின் தலையீட்டுக்கு பிறகு சீட் கிடைத்ததாகச் சொல்வதைப் பார்த்தால்  அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. 

நண்பர்களிடம் இதைப் பற்றி பேசிய போது  ஒருவர் சொன்ன கருத்து:- இதுகெல்லாம் சிபிஐ விசாரணையா கேட்க முடியும். போய்யா போய் புள்ளைங்கள படிக்க வைக்கிற வழியப் பாரு. 


டிஸ்கி:- இவ்வாறு தன் மகளுக்கு இடம் வாங்கிக் கொடுத்த போது  தன் மகளைவிட அதிக மதிப்பெண் எடுத்த ஏழை எளிய எழுத்தாளர்களின் குழந்தைகளுக்கும் அவர் மருத்துவ சீட் வாங்கிக் கொடுத்து சமத்துவத்தை நிலை நாட்டினாரா என்று தெரியவில்லை. 






2 comments:

  1. இதுகெல்லாம் சிபிஐ விசாரணையா கேட்க முடியும். போய்யா போய் புள்ளைங்கள படிக்க வைக்கிற வழியப் பாரு.

    ReplyDelete
  2. அவரு எந்த வழியில வேனும்னான்லும் சீட் வாங்கி இருக்கட்டும்..தப்பில்ல..அவரு யாரு தெரியுமா உனக்கு? நாஞ்சில் நாடண்டா ....நம் காலத்துல வாழுற உன்னத கலைஞன்...அவனுக்கு சீட்டு கொடுத்ததுக்குகொடுத்தவன் பெருமை பட்டுக்கனும்..

    நீ ப்ளாக்ல வாந்தி எடுக்கறதா தவிர ஒன்னும் படிக்கிற வழக்கமே இல்லைன்னு தெரியுது....ஒன்னயெல்லாம் வச்சுகிட்டு இந்த நாடு வெளங்க?...

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails