Monday, January 18, 2010

நன்றி,வாழ்த்துக்கள் மற்றும் சபதம்

நேற்றைய மொக்கை; இன்றைய நகைச்சுவை; நாளைய தத்துவம்

என்ற கொள்மையுடன் ஆரம்பிக்கப் பட்ட நமது வலைப்பூ வலையுலகில் பல போட்டிகளை சந்தித்து வந்துள்ளது. நமது வலைப்பூவுக்கும் 189 பிந்தொடர்பவர்கள் சேர்ந்து இருக்கின்றனர். இருந்தாலும் ஒரு மொக்கை வலைப்பூ என்ற பிம்பத்துடனேயே காலத்தை ஓட்டி வரும் நமது வலைப்பூ தமிழ்மணம் நடத்திய போட்டிகளின் முடிவுகளின் படி அடுத்த கட்டத்தை எட்டிவிட்டதாகவே கருதுகிறேன். இந்த வலைப்பூவிலிருந்து அனுப்பப்பட்ட 


சிவாஜிக்கு விருது ஏன்? எதற்கு?


விலைமகளே பரவாயில்லை 


ஆகிய இரண்டு இடுகைகளுமே அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கு தகுதிப் பெற்று இருந்தது. இந்த வலைப்பூவிற்கு பதிவர்கள் மத்தியில் கிடைத்த பெரிய அங்கீகாரமாகவே அமைந்திருந்தது. 


அந்த இடுகைகளுடன் பெரிய பெரிய தலைகளுடன் போட்டிபோட்டதில் நம்மைவிட அதிக ஆதரவு பெற்ற இடுகைகள் நிறைய இருந்த காரணத்தால் அந்த இடுகைகள் வெற்றிக் கனியைப் பெற்று விட்டன. 


எனவே அவர்களுக்கும், அவர்களோடு போட்டியிட்டு வென்ற  மற்ற இடுகைதாரர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


பெரிய பெரிய தலைகளின் இடுகைகளோடு நமது இடுகையையும் இடம் பெற வைத்த தமிழ்மண நிர்வாகத்திற்கு நமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஓட்டுப் போட்ட வாசகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஏதோ கிவ் அண்ட் டேக் பாலிஸி மாதிரி ஆகிவிடுமோ என்ற எண்ணம் வந்தாலும், நம்மை ஊக்குவித்துக் கொண்டிருப்பதற்காக அவர்களுக்கு ஒரு சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


வாசகர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருந்தால் நமது வலைப்பூவில் வரும் எழுத்துக்கள் விரைவில் தத்துவங்களாகக் கருதப் படும் காலம் விரைவில் வந்து விடும் என்பதையும் மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.




Friday, January 15, 2010

கிரகம், கிரகஸ்தன்

சூரியனைச்

சுற்றும் கோள்கள்

குறிப்பிட்ட காலத்தில்

குறிப்பிட்ட பாதையில்

குறிப்பிட்ட வேகத்தில்

துளியும் மாறாமல்

பிசகாமல்

யோசித்து

தானும் குழம்பி

பிறரையும் குழப்பாமல்

தானுண்டு

தன்வேலையுண்டு

என்றிருக்கும்

கோள்களுக்கு இருக்கும்

பெயரை

மனைவிக்கு வைத்த

மாயம் என்ன?

காரணம் தெரியமால்

கழுத்தைச் சொறிந்த

கணங்கள் உண்டு.

கிரகம் பிடித்தால்

தெய்வதிற்கே

சக்தி கிடையாதாம்.

ந்டைசாத்தி

தெய்வத்தையே

பாதுகாக்க வேண்டுமாம்.

அப்ப சரி

அவ்வளவு

பயமும் பாதுகாப்பும்

தேவையாக

இருக்கக்கூடிய

ஒன்று

கிரகம்தான்.

அதாகப் பட்டது

நீயும்

கிரகஸ்தன் தான்

Thursday, January 14, 2010

எந்திரன் படத்திற்கு விளம்பரம் செய்வது எப்படி?

தமிழ் திரையுலகத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டை தன்னுள் எடுத்துக் கொண்டு வரும் படமாக எந்திரன் வர இருக்கிறது. எந்திரன் பட்ஜெட் ஏறக்குறைய தமிழ்திரையுல பட்ஜெட்டாகவே அமைகிறது, தமிழ் திரையுலகத்தினர் நல்வாழ்வு என்பது தமிழ்மக்களின் நல்வாழ்வோட்டு பின்னிப் பினைந்து இருப்பதால் எந்திரன் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதால் ஏதோ நமக்குத் தோன்றும் சில யோசனைகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.

பாபா, ஆளவந்தான், கஜேந்திரா போன்ற மாபெரும் சரித்திர படங்களின் வரிசையில் எந்திரன் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.  போட்டிக்கு குருவி, ஏகன் போன்ற படங்கல் ரீ ரிலீஸ் ஆகிவிடுமோஎன்ற அச்சமும் சிலரின் நெஞ்சில் இல்லாமல் இல்லை. பாபா படம் வெளியான போது திருப்பூரில் 500 ரூபாய் கொடுத்து நண்பர் ஒருவர் படம்பார்த்தார்.

இப்போது  திண்டுக்கல் சாரதி, காதலை தேடினேன் போன்ற படங்களையே மாபெரும் வெற்றிப் படம் ஆக்கிய சன் டி.வி.க்கு நாமும் சில யோசனைகளைக் கூறுவோம். விடுபட்டுப் போயிருந்தால்  பின்னூட்டங்களில் நீங்களும் கூறுங்களேன்.

யோசனை 1:-

படத்தின் ஸ்டில்களை ஊர் பெரிய மனிதர்களிடன் காட்டி  படத்தைப் பற்றி ஒரு கருத்தினை வாங்கி சன் டி.வி.யில் ஒளிபரப்பலாம். மக்கள் ஸ்டில் என்பதை திரைப்படம் என்று நினைத்துக் கொண்டு படம் பார்ப்பார்கள்.  இணையத்தில் வந்திருக்கிறதா என்பதை தேட ஆரம்பிப்பார்கள் பயங்கர விளம்பரம் கிடைக்கும்.

யோசனை 2=

சன் டி,டிஎச் சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ரகசிய எண் கொடுத்து அதற்கான கட்டணமாக குறைந்த பட்சம் 5000 வசூல் செய்யலாம். அதன் நடுவே  பத்துக்கு பத்து என்ற விகிதத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பி பணத்தை அள்ள முடியும். அதில் இரண்டு நிமிடங்கள் எந்திரன் விளம்பரமே போட்டால் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆசை அனைவரின்ன் மனதிலும் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும்.

யோசனை 3=

இப்போது பிரிண்ட் போடுவதற்கு ரூ 50,000 தான் செலவாகிறதாம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ரீலீஸ் செய்தால் படத்தைப் பற்றிய பேச்சு வருவதற்குள் பெரிய அளவில் காசு பார்த்து விடலாம். காசுக்கு காசும் ஆச்சு கின்னஸுக்கு கின்னஸும் ஆச்சு.

யோசனை 4=

படம் வெளியாகும் திரையரங்கின் இடைவேளையின் போது சூப்பர் ஸ்டாரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கையைக் காட்டச் சொல்லலாம். ரசிகர்கள் திரையரங்க வாசலில் குவிந்து இருப்பார்கள். நான் எப்ப வருவார் எப்படி வருவார்னு தெரியாட்டியும் கரெக்ட்டா வந்து கையாட்டுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும் கண்டிப்பாக படம் பார்க்க வந்து விடுவார்கள்.

யோசனை 5=

படம்பார்க்க வரும் ரசிகர்கள் டிக்கெட்டின் பாதியை அனுப்பச் சொல்லலாம். அதில் தேர்ந்தெடுக்கப் படும் ரசிகர்களின் வீட்டிற்கு ஐஸ்வர்யாவை அனுப்பி பொங்கல் வைக்கச் சொல்லலாம். தமிழர் புகழை நிலைநிறுத்திய பெருமை கிடைக்கும்.

யோசனை 6=

ஒரு நாள் எந்திரனின் வசூலை திருட்டி டிவிடியால் பாதிக்கப் பட்ட மக்கள் நிவாரண நிதியாகக் கொடுத்தால் அகில உலக திரையுலகமும் எந்திரன் வெற்றிக்காக பாடுபடும்.

யோசனை 7=

படத்தில் சாம் ஆண்டர்சனை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தால் பதிவுல நண்பர்கள் புகழ்ந்து எழுத படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்.

யோசனை 8=

அமிதாப் வழியை பின்பற்றும் ரஜினி இந்தப் படத்தின் வெளியீட்டின்போது குதா கவா படம் வெளிவந்த போது அமிதாப் கடைபிடித்த வழியை பின்பற்றலாம். ஒரு அருமையான ஒற்றுமை. அந்தப் படத்தின் நாயகி அப்போதைய மூத்த நாயகியான ஸ்ரீதேவி.

யோசனை 9=

படம் பூஜை போட்டு இரண்டு ஆண்டுகள்  நிறைவடைந்ததை முன்னிட்டு ஓராண்டுக்கு மேல் திருட்டு டி.வி.டி வைத்திருப்பவர்களின் உரிமையை ஓரளவு கட்டணம் பெற்றுக்கொண்டு உண்மை என்று அறிவித்துவிடலாம். இதன்மூலம் ஓரளவு வருமாணமும் விளம்பரமும் கிடைத்துவிடும்.

யோசனை 10=

எந்திரன் படம்  injar  என்ற ஃபெரென்ஞ் படத்தின் ரீமேக் என்று ஒரு வதந்தி கிளப்பி விட்டு   injar  என்ற பெயரில் எந்திரனை டப் செய்து வெளியிட்டு உலக அளவில் பணத்தை அள்ளி விடலாம்

டிஸ்கி:-மீள்பதிவுதான்

Tuesday, January 12, 2010

நான் சுத்தமானவள் (நடப்பது 21)

பிள்ளைங்களா......, என்ற குரலோடு வந்தாள் சவீதா. அவள் எப்போதும் அப்படித்தான் சகமாணவிகள் ஜூனியர் மாணவிகள் எல்லோரையும் பிள்ளைங்களா என்றுதான் அழைப்பாள்.  சுமத்ரா  சவீதாவின் குரலைக் கேட்டதும் சற்று நினறாள். ஒரே வகுப்பு மாணவிகள் என்பதால் சேர்ந்தே மாணவியர் விடுதிக்குச் செல்லலாம் என்ற யோசனையும் ஒரு காரணமாக இருந்தது.  சவிதாவும் சுமித்ராவும் சேர்ந்தபின் அவர்கள் இருவர் மட்டுமே கல்லூரியில் இருந்து மாணவியர் விடுதியை நோக்கிச் செல்வது போல இருந்தது. மற்ற மாணவியர் யாருமே அவர்கள் இருவருடம் வரத் தோன்றாதது போல இருவரும் தனித்து விடப் பட்டிருந்தனர்.



சுமித்ரா உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்..,

சொல்லு.., தான் மாணவர் தலைவி என்பதால் ஏதோ பிரச்சனையை தன்னிடம் சொல்லப் போகிறாள். தான் போய்தான் பஞ்சாயத்துச் செய்ய போகிறோம் என்பது போல இருமாப்புடன் கேட்டாள் சுமித்ரா

நீ தீபக் குமாரோட சுத்தரயாம்..,  ஹாஸ்டல்ல பேசிக்கறாங்க...,

சுமித்ராவுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.  இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஹாஸ்டல்ல பேசிக்கறாங்களா..,  காலேஜ்ல பேசிக்கறாங்களா..,

இல்ல  எல்லோரும் ஒரு மாதிரியா பேசறாங்க (அதற்கான காரணத்தை அறிய இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்)

நம்ம பசங்கள சுத்த மோசம்டி. எப்ப பாரு அசிங்க அசிங்கமா பேசிட்டு இருப்பாங்க..,

இல்லடி இப்ப கொஞ்சம் வேறமாதிரி சொல்றாங்க..,

நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தறீங்களாம். பல இடங்களும் போறீங்களாம். ரொம்பவே தப்புத் தப்பா பேசறாங்க..,

எனக்கு எல்லாம் மரத்துப் போச்சுடி.., ஆரம்பத்தில இங்கிலீஷ் குப்பானோட சேர்த்துப் பேசுனாங்க..,  அதற்கப்புறம் சுமனோட சேர்த்துப் பேசுனாங்க

இப்ப தீபக்கோட சேர்த்துப் பேசுறாங்க..,

ரொம்ப தத்துவஞானி மாதிரி பேசாதடி,  முதல் ரெண்டும் வேற..,  இது வேற

ஏண்டி என்னப் பார்த்தா உனக்கு எப்படித்தெரியுது? கொஞ்சம் விரக்தி மற்றும்  கடும் கோபம் கலந்த கலவையாக சுமித்ரா பேசினாள். 

கொஞ்சம் கோபம் படமா நான் சொலறதா கேளு..,

நான் ஏன் நீ சொல்றத கேக்கணும்.  நீ அந்த பசங்க பேசுற பேச்சக் கேட்டுக்கிட்டு என்ங்கூட சண்டைக்கு வற்ர..,

நான் உங்கூட சண்டைக்கு வரல..,  தவிரவும் இப்ப நான் சண்டை போட காரணமும் இல்ல. கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.

நீங்களெல்லாம் என்ன புரிஞ்சிக்க மாட்டீங்க ஆனா நான் உங்கள புரிஞ்சிக்கணுமா..,

இவனுக்கு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஆளோட சேர்த்து பேசுவானுக அதுக்கெல்லாம் நான் டென்சன் ஆக முடியாது..,  அவளுடைய கோபத்தில் அவளுடைய மூக்கு,நெஞ்சு எல்லாம் வெடித்துவிடுவது போல பேச ஆரம்பித்தாள்.

இங்க பாரு சுமித்ரா முதல் இரண்டு மேட்டரும் பசங்க சும்மா சாதரணமா  பேசுனது.  அத யாருமே என்னிக்குமே பெரிசா எடுத்துக்கல..,  அதெல்லாம்  அப்பவே போச்சு. ஆனா இந்த மேட்டர் அப்படி இல்ல..,

ஏண்டி சேர்த்து பேசரவங்க பேசுவீங்க.., அதுல இதெல்லாம் சும்மாவாம். அதெல்லாம் சீரியஸாம். உன்ன இப்படி நிறையப் பேரோடு கிசுகிசுக்க விட்டு அப்புறம் அதெல்லாம் சும்மா அப்படின்னா நீ அமைதியா போயிடுவயா..,

வெட்டியா கோபப் பட்டு பேசிட்டு இருக்காத..,  நீயும் தீபக்கும் இருக்கும் புகைப்படத்தை நாங்க பார்த்தோம். அதுனாலதான் உங்கிட்ட பேசி புரியவைக்கலாம்னு பார்த்தேன். நீ கோபப் படறதப் பார்த்தா ஏண்டா பேசுணொம்னு இருக்கு. சாரிப்பா.., நான் வாரேன்.  சூடாக சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்த சவீதா சொத் என்று சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். சுமித்ரா  மயங்கிக் கிடந்தாள்.

ஏனோ கிராமத்து மருத்துவச்சிகளெல்லாம் சவீதாவின் நினைவுக்கு வந்தார்கள்.
===============>>>>>>>  தொடரும்>>>>>> தொடரும்>>>>>>தொடரும்

இந்தக் கதையின் முந்தைய இருபது பாகங்களுக்கு  இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்   

இருபது வருஷமா தேங்காய் ஸ்ரீனிவாசன் என்ன செய்தார்னு பார்க்க இந்த காணொளியைப் பார்த்து விடுங்கள்



Friday, January 8, 2010

அருளும் பொருளும் கூட்டிய பின்னூட்டம்

பஞ்சவன் மாதேவி பற்றி கேள்வி எழுப்பி நான் கொடுத்த இடுகைக்கு (இடுகை தழுவல்தான்) மறுமொழி கொடுத்த
சங்கர் ,சிங்கக்குட்டி,Starjan ( ஸ்டார்ஜன் ),ஸ்ரீராம்,dondu(#11168674346665545885) s,அக்பர், கடைக்குட்டி,  seemangani உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி
=====================================================================


அறிவன்#11802717200764379909 said...

உடையார் பா.கு.னின் அப்பட்டமான தழுவல்.
பொ.செ.மாதிரி ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிப் பெரும்புகழ் வேண்டும் என்ற வேட்கையில் எழுதப்பட்டது உடையார்.அதற்காக வேறொரு களம் அமைத்துக் கொண்டு எழுதினால் கூட சாதாரண வாசகன் இரண்டையும் எளிதாக ஒப்பு நோக்க மாட்டான்;அதற்கு கடும் உழைப்பும் வரலாற்று ஆய்வும் தேவை.ஆனால் களம் முதல் பாத்திரங்கள் முதல் அனைத்தும் அப்பட்டமான பொ.செ.னின் தழுவலாக எழுந்தது உடையார்.

ஆனால் துரதிருஷ்ட வசமாக பொ.செ.னின் நிழலாகக் கூட வர உடையாரால் முடியவில்லை;ஒரவேளை வேறொரு வரலாற்றுச் சூழலை மையமாக எடுத்துக் கொண்டு எழுதி இருந்தால் கூட உடையார் இன்னும் நன்றாக வந்திருக்கக் கூடும் !

பாத்திரப்படைப்புகளைப் பொறுத்த வரை,கல்கி நந்தினியை கற்பனையாகப் படைத்தாலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் இடையில் நூலிழைப் பாவு போல அழகாகக் கோர்த்து ஒருவேளை நந்தினி இருந்திருப்பாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டி விட்டார்.

பொ.செ.ல் வானதி பாத்திரத்தை சிறிது தட்டிக் கொட்டி பஞ்சவன் மாதேவியைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் பா.கு.அநாவசியமாக அப்பாத்தரத்தை தேவரடியாராக்கி இல்லாத வேலைகளைச் செய்தும் அப்பாத்திரம் வானதி போல மனதில் பதியவில்லை.

உண்மையில் ராஜராஜனின் பட்டத்து ராணியாக அமர்ந்தவள் வானவன் மாதேவி;அவள் கல்கி சித்தரித்த வானதி அல்ல.

வானதி என்று கல்கி குறிப்பிட்ட பாத்தரத்துக்கு பிறந்தவனே ராஜேந்திரன்;அவனை வளர்க்கும் பொறுப்பையும் குந்தவையே ஏற்றுக கொண்டிருக்கலாம் என்று வரலாறு சுட்டுகிறது.

உடையாரைப் பொறுத்த வரை அது ஒரு இலக்கியத் தரம் மிக்க கதையின் மாதநாவல் காப்பி என்றுதான் சொல்ல வேண்டும்.அநியாயமாக அதற்கு 6 பாகங்கள் வேறு.முழுக்கப் படிப்பதற்குள் மண்டை காய்ந்து விட்டது.

ஆனால் பொ.செ.அப்படி அல்ல.ஏன் கல்கி இப்படி தடாலடியாக நிறுத்தி விட்டார் என்று தொடர் வந்து கொண்டிருந்த சமயத்தில் வாசகர்களைத் துக்கப்பட வைத்த விதத்தில் அதை முடித்தார் கல்கி.

இன்னும் என்னால் பொ.செ.னை மறு வாசிப்பு செய்ய முடிகிறது,சுமார் 50 முறை வாசித்த பிறகும் கூட..

===================================================================

ஒரு இடுகையைவிட அதில் வரும் பின்னூட்டங்கள் இடுகையை எவ்வளவு தூரம் உயர்த்தும் என்பதற்கு இந்தப்பின்னூட்டமே ஒரு அழகிய உதாரணம். நண்பர்க்கு நன்றியை உரித்தாக்கிக் கொள்வோம்.

பின்னூட்டம் பற்றிய நமது பகிர்தல்கள் சில..,

----------------------------------------------------------------------------------------------

// அறிவன்#11802717200764379909 said...

உடையார் பா.கு.னின் அப்பட்டமான தழுவல்.
பொ.செ.மாதிரி ஒரு வரலாற்றுப் புதினம் எழுதிப் பெரும்புகழ் வேண்டும் என்ற வேட்கையில் எழுதப்பட்டது உடையார்.//

தங்களின் வருகைக்கும் கூடுதல் தகவல்களுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் நன்றி

பொ.செ.வின் தொடர்ச்சியாக எழுதப்பட்டதாக பேசிக் கொள்கிறார்கள்

----------------------------------------------------------------------------

//அதற்காக வேறொரு களம் அமைத்துக் கொண்டு எழுதினால் கூட சாதாரண வாசகன் இரண்டையும் எளிதாக ஒப்பு நோக்க மாட்டான்;அதற்கு கடும் உழைப்பும் வரலாற்று ஆய்வும் தேவை.//

உண்மைதான் ஐயா, அதுவும் பொ.செ. போன்ற செம்மை இலக்கியங்களை அவற்றைப் படைத்தவர்களால் கூட பிந்தொடர்ந்து எழுத முடியுமா என்பது கேள்விக் குறியே

------------------------------------------------------------------------------------
//கல்கி நந்தினியை கற்பனையாகப் படைத்தாலும் வரலாற்று நிகழ்ச்சிகளின் இடையில் நூலிழைப் பாவு போல அழகாகக் கோர்த்து ஒருவேளை நந்தினி இருந்திருப்பாளோ என்று சந்தேகம் தோன்றும் அளவிற்கு அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டி விட்டார்.//

நான் நந்தினியைக் கற்பனை பாத்திரமாகப் பார்க்கவில்லை. பொ.செ.வில் சரித்திர ஆதாரத்துடன் கூடிய ஒரு உண்மைப் பாத்திரத்தின் சில குணாதிசயங்களை மட்டும் எடுத்து தனி பாத்திரமாக உலவவிட்டதாகவே கருதுகிறேன்.

இதைப் படித்துவிட்டீர்களா



------------------------------------------------------------------------------------

//பொ.செ.ல் வானதி பாத்திரத்தை சிறிது தட்டிக் கொட்டி பஞ்சவன் மாதேவியைப் படைத்து உலவ விட்டிருக்கிறார் //

கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

//அநாவசியமாக அப்பாத்தரத்தை தேவரடியாராக்கி இல்லாத வேலைகளைச் செய்தும் அப்பாத்திரம் வானதி போல மனதில் பதியவில்லை.//

அதற்காகத்தான் அவ்வாறு செய்து விட்டாரோ என்னமோ

--------------------------------------------------------------------------------------------------

//ஆனால் பொ.செ.அப்படி அல்ல.ஏன் கல்கி இப்படி தடாலடியாக நிறுத்தி விட்டார் என்று தொடர் வந்து கொண்டிருந்த சமயத்தில் வாசகர்களைத் துக்கப்பட வைத்த விதத்தில் அதை முடித்தார் கல்கி.//

எனக்கென்னவோ சில அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கான ஆதாரங்கள் கல்கிக்கு கிடைத்திருக்கக்கூடும். அதை வெளியிட்டுவிடக் கூடாது என்ற உறுதியை மேற்கொண்டு கல்கி முடித்திருப்பார் என்று தோன்றுகிறது

-----------------------------------------------------------------------------------------------------
//இன்னும் என்னால் பொ.செ.னை மறு வாசிப்பு செய்ய முடிகிறது,சுமார் 50 முறை வாசித்த பிறகும் கூட..//

முதல்முறை படிக்கும்போதே ஒரே மூச்சில் படிக்கத்தூண்டும் வெறி ஊட்டும் கதை அது

-----------------------------------------------------------------------------------------------------

இது பற்றி பலரும் பல இடுகைகளில் பகிர்ந்து கொண்டிருந்தாலும் மீண்டும் ஒரு பகிர்ந்து கொள்ளும்போது மகிழ்வாகவே இருக்கிறது.

Wednesday, January 6, 2010

நந்தினி =/= பஞ்சவன் மாதேவி

பொன்னியின் செல்வன் பதிவெழுதி ரொம்ப நாளாச்சில்ல..,

ஏதாவது எழுதுவோம் என்று சில மாதங்களாக யோசனை இருந்தது.

அப்போது இந்த தளத்தில்  பஞ்சவன் மாதேவி பற்றி எழுதியிருக்கிறார்கள்.

பஞ்சவன் மாதேவி ராஜராஜ சோழனின் மனைவி என்பதற்கு உடையாரை சாட்சி சொல்லுகிறார்.

பஞ்சவன்மாதேவி ராஜேந்திரனின் மனைவி என்பதற்கு உளியின் ஓசையைச் சாட்சி சொல்லுகிறார்.

அந்தக் கதையில் நந்தினி மட்டும்தான் ஒரு குழப்பமான படைப்பு என்றால் பஞ்சவன் மாதேவியுமா?

இல்லை குந்தவை மாதிரி இரண்டுபேர்களா?

உண்மையை நிலையை யாராவது சொல்லுங்களேன்.

பின்குறிப்பு:-
உடையாரின் சில பக்கங்கள் படித்ததுண்டு. அதுவும் விவாதங்களில் பாலகுமாரன் ரசிகர்களை திட்டுவதற்காக..,

உளியின் ஓசை படம்பார்க்க வெகுநாட்களாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் வாய்ப்பு அமையவில்லை.

Saturday, January 2, 2010

தமிழ் பதிவர்கள் அளித்த ஷாக்

தமிழ்மணம் விருதுகள் 2009 முதற்கட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்டுவிட்டன.

அடுத்தக் கட்டமாக வாசகர்களும் பதிவர்களும் பங்கேற்கும் சுற்று நடைபெற இருக்கிறது. முதற்கட்ட வாக்கெடுப்பு முடிவுகளின் படி அடுத்த கட்ட வாக்கெடுப்புக்கான  இரண்டு பிரிவு மட்டும் இங்கு பார்ப்போம்.
====================================================================

 பிரிவு: நூல், திரைப்படம் அறிமுகம்/விமர்சனம்/திறனாய்வுகள்





  1. எல்லைகள் இல்லா உலகம்!







  2. ( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...







  3. நான் கடவுள்







  4. நா.பார்த்தசாரதியின் ‘மொழியின் வழியே’







  5. சுண்ணாம்பு கேட்ட இசக்கி







  6. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி







  7. பெற்றோர்கள் மன்னிக்கவும்







  8. உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!







  9. சிவாஜிக்கு விருது ஏன்? எதற்கு?













  10. ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்..



=========================================================================

 பிரிவு: தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்





  1. அவர்கள் !!







  2. சாதி ஒழிப்பு: இஸ்லாமே தீர்வு







  3. தந்தியற்ற வீணை







  4. ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்? தமிழனுக்கு ஒரு நியாயமா?







  5. தலித்தை கொளுத்தினார்கள்







  6. நான் ஒரு கறுப்பினத்தவன், நான் ஒரு கறுப்பினத்தவனாகவே இருப்பேன்







  7. திரு. அம்பேத்காரின் சாதனையும் உலக புரட்சியின் வித்தும்







  8. விலைமகளே பரவாயில்லை  ======================================================================



 இந்த இரு பிரிவுகளையும் பாருங்கள் . முதல் பிரிவில் 90க்கும் மேற்பட்ட இடுகைகள். பதிவர்களின் வாக்கெடுப்பின்படி அடுத்தக் கட்ட வாக்கெடுப்பிற்கு அனுப்பட்ட இட்டுகைகள்.  இதில் பெரும்பாலானவர்கள்  மிகப் பெரிய வாசகர்கள் கூட்டத்தை தன்னகத்தை அமைத்து வைத்திருப்பவர்கள். அவர்களின் எழுத்தின்மேல் தனிபிரமிப்பே ஏற்படுத்தும் வகையில் எழுதுபவர்கள். இன்றும் பல புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பவர்கள். இவர்களோடு போட்டி போட என்னை அனுமதித்த அனைத்து பதிவர்களும் நன்றி  நன்றி...,

===============================================================

அப்படியே இடுகைகளுக்கு ஓட்டும் போட்டுவிடுங்கள். ஓட்டுப் போடும் வழிமுறைகளை இந்தச் சுட்டியைத் தட்டி

http://blog.thamizmanam.com/archives/194

http://www.tamilmanam.net/login/register.php தெரிந்து கொள்ளுங்கள்.

மின்னஞ்சலில் வாசிப்பவர்கள் அருள்கூர்ந்து சுட்டிகளின் வழியே பயணம் செய்து வாசகர்களுக்குரிய வாக்குகளை பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  முடிந்தவரை 16பிரிவு வாக்குகளையும் வீணாக்காமல் வாக்களித்து விடுங்களேன்..,

Friday, January 1, 2010

புத்தாண்டு ஆஃபர்

அனைவருக்கும்


புத்தாண்டு வாழ்த்துக்கள்..,


வலையுலகம் வளர வாழ்த்துக்கள்..,


நீங்கள் பிந்தொடரும் அனைத்து பக்கங்களையும் நீங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்குறீர்கள் என்பதை உறுதி செய்ய ஃபாலோ பட்டனையோ சைன் இன் பட்டனையோ மீண்டும் ஒரு முறை அழுத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்..,   உங்கள் நண்பர்கள் நீங்கள் விலகி விட்டதாக வருத்தப் படுவதை இந்த புத்தாண்டு முதல் நாளில் தவிர்த்துவிடுங்கள்.., 

இதன் மூலம் நீங்கள் அந்த தளத்திற்கு வருகை தந்து கொண்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்..,


நட்புகள் செழிக்க

பதிவுலகம் பரவ

வலையுலகம் வளர வாழ்த்துக்கள்..,


Tuesday, December 29, 2009

டபுள் மீனிங் 29-12-09

வழக்கம்போல் சுதந்திரப் பறவையாகவே சுமித்ரா சுற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உள்ள சாதாரணப் பொறுப்புக்களைக்கூட உடன் படிக்கும் மாணவர்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டே இருந்ததால்  அவளுக்கு தான் ஏதோ ஒரு சாதனை மங்கை போன்ற பெயர் வந்துவிட்டிருந்தது.  அதுவும் சுமன் முன்மொழிந்த நார்த்தி பீஸைத் தோற்கடித்துவிட்டதால் தனக்கு ஒட்டு மொத்த மாணவர்கள் செல்வாக்கும் நிறைந்து இருப்பதாகத் தனக்குத் தானே நினைத்துக் கொண்டிருந்தாள்.  அவளை ஓட்ட நினைக்கும் மாணவர்கள் அவள் கையசைத்தாலும் கண்ணசைத்தாலும் சூப்பர் சூப்பர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அவள் தும்மினால் கூட 1967லிருந்து இந்தக் கல்லூரியி இவ்வளவு சூப்பராக தும்ம ஆளே இல்லை என்று சொல்ல ஆரம்பித்திருந்தனர், அதையும் சுமித்ரா நம்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.


இப்படி அதீத நினைப்பில் சுற்றிக் கொண்டிருந்தவளிடம் உன்னுடன் வந்திருப்பவன் பெயர்  தீஃபக் குமார் என்றதும் அவள் கண்களில் பொறிபறக்க ஆரம்பித்தது.

கொஞ்சம் உங்கள் கால்கள் துவளுவது போலத் தோன்றியது.  அவள் த்னியாகத்தான் பொருட்காட்சிக்கு கிளம்பினால் பொருட்காட்சி வாசலில் ஹாய் சொல்லிக் கொண்டு தீபக் குமார் வந்தான். அவளும் ஒரே கல்லூரி என்பதாலும் இப்போதெல்லாம் பலரும் பல பிரச்சனைக்கு தன்னை அனுகுவதாக நினைத்துக் கொண்டிருந்ததாலும் அவனுடன் பேசிக் கொண்டுவந்திருந்தாள்.  ஆனால் இவர்கள் இப்படி பேசுவதற்கு உதட்டளவில் எதிர்ப்பு தெரிவித்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் உதருவதாகவே தோன்றியது.

தீபக் குமார் அப்போது கையில் பெரிய சைஸ் அப்பளத்துடன் வந்தான். ஒரு அப்பளத்தை  சுமித்ராவிடம் கொடுத்தான். மற்ற மாணவர்களிடம் என்ன பாஸ் நீங்க இதை ஏற்கனவே டேஸ்ட் பண்ணியிருப்பிங்களே...,


பாருடா டபுள் மீனிங் பேசறான். சுமனின் நண்பன் ஒருவன் தனக்கும் தன் அருகில் இருந்தவனுக்கும் மட்டும் கேட்பதுபோல் சொல்லிக் கொண்டது  சுமிதராவுக்கும் சேர்ந்து கேட்டுத் தொலைத்தது. 

இல்லை  எங்களுக்கு இதிலெல்லாம் இண்டரெஸ்ட் இல்ல இது சுமன்..,

நான் அப்படி இல்லப்பா ..,   டேஸ்ட் பண்ணனும்னு நினைச்சா சான்ஸ் கிடைச்ச உடனே டேஸ்ட் பண்ணிடுவேன்..,

ஆனால் பாரு..,  இதெல்லாம் ஒருநாள் சாப்பிட்டா ஓ.கே.., டெய்லினா  வயிறும் தாங்காது.., பாக்கெட்டும் தாங்காது..,

ஏண்டா.., இவன் அப்பளத்தைதான சொல்றான்,  எனக்கு என்ணென்னமோ தோணுதுடா..,

ஓ.கே பாஸ் நாங்க கிளம்புறோம். நீங்க நம்ம ஸ்டால பாத்துக்கங்க.., நாங்க சுத்திப் பார்க்கறதுக்கு நிறைய இருக்கு. சுமித்ரா போலாமா?

போம்ம்மா போ..,  போய் சுத்திப்பாரு...,  சுமன் சொன்ன குரல் அவனுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது,

தொடரும்............................................................>>>>>

முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

============================================================

Monday, December 28, 2009

நீ அறிவாயா?

எழுதிய கடிதம்

உனக்கானது

எழுதிய எழுத்தும்

உனக்காகவே

வடித்திருக்கும்

உணர்வும்

உணக்காகவே..,

கடைசியில்

கையெழுத்திட்டவனும்

உனக்கானவனே..,


உண்மை ஒன்று

உனக்காக

சொல்ல நினைத்தது

ஆனால்

சொல்ல மறந்தது

உனக்காக

அமைந்தது

உனக்கானவனால்

கையெழுத்திடப் பட்டது

வழக்கம்போல்

அடுத்த காகிதத்தில்

அடுத்த உணர்வுகளுடன்

இப்போதெல்லாம்

குப்பைத் தொட்டிக்கு மட்டும்

Friday, December 25, 2009

விஜய் மற்றும் அவரது ரசிகர்களுக்கு பிடித்த ஒரு ரீமேக் படம்

விஜய்யின் ரீமேக் படங்களை பார்த்து ஒரு புதிய உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும்  வலையுலக கண்மணிகளுக்காக இந்த புதிய ரீமேக் முயற்சி.

இன்றைய விஜய்யின் ரசனைக்கு ஒப்ப, இன்றைய ரசிகர்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில்  இங்கே ஒரு ரீமேக் ஆக்கும் முயற்சி நடைபெறுகிறது.

==========================================================================
விஜய்  பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்புகிறார். வீட்டில் அவர் அப்பா தனது  பல தொழில்கள் சம்பந்தமான டாகுமெண்ட்களை வைத்துக் கொண்டு ஏதாவது ஒன்று நிறுவணத்தை நிர்வகிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். ஆனால் விஜய் தான் படிக்க வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கும் அவரது அப்பாவுக்கும் சண்டை வருகிறது.  அவரது அம்மா இருவருக்கும் சமாதானம் செய்து வைக்கிறார். விஜய்  மெரினாவுக்கு நண்பர்களுடன் வந்து விடுகிறார்.

----------------------------------------------------------------------------

நாற்கரச்சாலையில் ஒரு டாப்லெஸ் காரினை பல சுமோக்கள் டயோட்டாக்கள் துரத்துக்கின்றன.  பல வாகனங்களையும் தடைகளையும் தாண்டி வாகனமானது  கத்திபாரா பாலத்தின் மேல் ஏறுகிறது.  காரின் வேகத்தினைக் கட்டுமடுத்த முடியாமல்  தடுமாற அதிலிருக்கும் நாயகி தமன்னா அப்படியே வானத்தில் பறந்துவந்து  மெரினாவில் விழுகிறார்.  அவர் விழும் இடத்திற்கு அருகில்  விஜய் குளித்துக் கொண்டிருக்கிறார்.  இருவரது கண்களும் பேசிக் கொள்கின்றன

இங்கு ஒரு ரீமிக்ஸ் பாட்டு

விழியில் விழிமோதி இதயக் கதவொன்று திறந்ததே

ஐஸ்ஸும்  ஐஸ்ஸும் க்ராசாகி  ஹார்ட் ஓபன் ஆனதே

கண்ணும் கண்ணும்தான் தெறந்தாச்சு

இப்படி கலவையான பாடல் ஒன்று ஒலிக்கிறது.

-------------------------------------------------------------------------------------

பாடலின் முடிவில்  தமன்னா அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். விஜய்யும் அவர் வீட்டிற்குச் சென்றுவிடுகிறார்.

சில நாட்கள் கழித்து  விஜய்  பைக்கில் சென்னை வீதிகளில் உலா வருகிறார். அப்போது சில சமூக விரோதிகள் அருகில் உள்ள சேரிப் பெண் வம்புக்கிழுக்க  அந்தப் பெண்  அந்த வீதியில் போவோர்  வருவோரையும்  பார்த்துக் காப்பாற்றுமாறு கதறுகிறார்.

அவரது அண்ணா என்ற குரல்  விஜய்  காதில் விழுகிறது.

உடனே அந்தத் தங்கையைக் காப்பாற்ற விஜய் பறந்து வருகிறார்.

அடியாள்: ஏய் யார்ரா நீ.........

விஜய்:  செவுத்தில வந்தா பல்லி..,

பறந்து வர்ரவன் கில்லி.., டா.......

அடியாட்கள் கூட்டத்தினை அடித்து நொறுக்குறார். குறிப்பிட்ட கட்டத்தில் அடியாட்கள் அதிகரித்துக் கொண்டே இருக்க விஜய் அடித்து நொருக்கிக் கொண்டே இருக்கிறார். அப்போது  ராயப்பேட்டை மருத்துவ மனையில் இடம் இல்லை என்று விஜய்க்கு குறுஞ்செய்தி வருகிறது.  உடனே சமுதாய நோக்கு கொண்ட விஜய்  வண்டியைத் திருப்பிக்கொண்டு சென்னையை விட்டு வெளியே வருகிறார்.  கத்திபாரா மேம்பாலம் நோக்கி வரும்போது  கலவரத்தை ஆரம்பித்த  முக்கிய அடியாள் தனது சுமோ வாகனத்துடன் மோதுகிறான். விஜய்  முக்கிய அடியாள் இருவரும் வானத்தில் பறக்கிறார்கள்.

நீ போக வேண்டியது ராயப்பேட்டை ஆஸ்பத்திரி இல்லடா..,

தண்டையார் பேட்டை ஆஸ்பத்திரி.., 

http://www.thehindu.com/2009/06/14/images/2009061450310101.jpg
என்று சொல்லி ஒரு உதை விடுகிறார். முக்கிய அடியாள் நேரடியாக தண்டையார் பேட்டையில் போய் விழுகிறார்.

விஜய் அப்படியே வானத்தில் பறந்து  அருகில் பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரின் கீழ் கம்பிகளை பிடித்துக் கொள்கிறார். அந்த ஹெலிகாப்டரை தமன்னா ஓட்டிவருகிறார்.

இருவரின் கண்களும் மீண்டும் பேசிக் கொள்கின்றன..  பழைய ட்யூன் மீண்டும் ஒலிக்கிறது.  விஜயின் கை வழுக்குகிறது. தமன்னா தனது இடுப்பு பெல்ட்டை கழட்டிக் கொடுக்கிறார். விஜய் அதன் துணையுடன்   தொடர்ந்து பறந்து வந்து ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடத்தில் குதித்து விடுகிறார், அடுத்து உள்ள பெண்கள் கல்லூரியில் தமன்னா இறங்கிக் கொள்கிறார். 

விஜய் ஹெலிகாப்டர் ஃபுட் போர்டில் தொங்கிக் கொண்டுவந்த நிகழ்ச்சியை  தொலைநோக்கி மூலம் அவரது அண்ணன் தலைவாசல் விஜய் பார்த்துவிடுகிறார். அவர் ராணுவத்தில் ஒரு உயர் பதவியில் வகிப்பவர்.


விஜயின் தலையில் பொறி பறக்கிறது. கட்டிடத்தில் குதித்த விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கிறார். உடனே தலையில் பறக்கும்பொறி நெஞ்சில் பறக்கிறது.  ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே..,




விஜய் தனது தந்தையிடம் சொல்லி  தனது நிறுவனம் ஒன்றைப் பார்க்க ஆரம்பிக்கிறார்.


விஜயைப் பார்த்து தமன்னா சிரிக்கும் விவகாரம் ராணுவத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குதெரிந்து விடுகிறது. அவர் விஜயை மிரட்டுகிறார்.  தமன்னாவின் அண்ணன் என்பதால் விஜய் பொறுத்துக் கொண்டு இருக்கிறார்.


விஜய்க்கு புத்திமதி சொல்லும் வகையில்  விஜயின் நிறுவனத்திற்கு வந்து செல்கிறார். இந்தக் காட்சிகளை விஜயின் தொழில் போட்டியாளர்கள் கவனித்து விடுகிறார்கள். அவர்கள் தமன்னாவைத் தூக்க தயாராகிறார்கள்.
தமன்னாவை மறக்க முடியாமல் தடுமாறும் விஜய் தூக்கத்தை இழக்கிறார். அதை சரிசெய்யும் வகையில் அனைத்து நிறுவனங்களின் நிர்வாகத்தையும் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். பல நாட்கள் தூங்காமல் தொடர்ச்சியாக வேலை பார்க்கும் ரக்சியம்  கின்னஸ் புத்தகத்திற்கு தெரிந்துவிடுகிறது. விஜய் தூங்க நினைக்கும்போதெல்லாம் தமன்னா மிஸ்டு கால் கொடுத்து கடலை போடுவதால் விஜய் துளியும் தூங்காமல் வேலை செய்கிறார்.

விஜய் தூங்க நினைப்பதால் என்னைத்தாலாட்ட வருவாளா என்று பாட்டுப் பாடிக் கொண்டு இருக்கிறார்.  விஜயைப் பார்த்து தூங்க வைப்பதற்காக தமன்னா விஜயின் நிறுவனத்தை அனுகுகிறார்.  கின்னஸ் சாதனையை நேரடியாக ஒளிபரப்பும் கேமிரா மேனா இருக்கும் மூன்றாவது அண்ணன் தமன்னா விஜயிடம் நேரில் கடலை போடுவதைப் பார்த்து காட்டிரி ஆகிரார்.  விஜயைக் கொள்ள முயற்சிக்கிறார்.  விஜயின் நண்பர்களை காப்பாற்றி அவரை அவரின் அப்பாவிடம் அழைத்துச் செல்கிறார்கள்.

விஜயின் அப்பா தமன்னாவைப் பார்த்து இது போன்ற சப்பை ஃபிகர்களை விட்டுவிடுமாறும்  விஜய்க்கு  குருவி த்ரிஷா, அ.த,ம. ஷ்ரேயா, வில்லு நயந்தாரா, வேட்டைக்காரன் அனுஷ்கா போன்று நச் ஐட்டமாக பார்ப்பதாகச் சொல்லுகிறார்.

அதெல்லாம் மார்க்கெட் போன ஆளுங்க...,  
இவ இவ இவ..  
மார்கழி மாசத்துக்கு ஏத்த ஆளு...,  என்று பன்ச் டயலாக் விடுகிறார்.  டரியலான அவரது அப்பா அடியாட்களை அனுப்புகிறார்.  இரு குடும்பத்தாரும் மிரட்டுவதால் விஜயின் நண்பனின் தந்தை  மும்பை தாதாவிடம் அனுப்புகின்றனர்.

மும்பை தாதா  தனது அடியாட்களுடன்  இந்திப் பாடல் பாடி ஆடிக் கொண்டு இருக்கிறார். அவரிடம்  விஜயின் நண்பர் அறிமுகப் படுத்தி வைக்கிறார்.

இந்த மும்பை மாநகரிலே முமைத்கான் முன்னிலையிலே நாளை உங்களுக்கு திருமணம் நடக்கும் என்று  மும்பைதாதா அறிவித்துவிடுகிறார்.  முமைத் கானின் ஆட்டமும் நடக்க ஆரம்பித்து விடுகிறார்.

திருமணத்திற்கு முன்பு ஜோடிகள் இருவரையும் ஒரே அறையில் அடைத்து வைத்து உடை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

உடை மாற்றும்போது  ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்துக் கொள்கின்றனர்.  இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்துக் கொண்டு சென்னையை நோக்கி வந்து விடுகிறார்கள்


=============================================================

வீட்டிற்கு திரும்பிய விஜய் மற்றும் தமன்னா எதிலும் பிடிப்பே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிரூக்கிறார்கள், அப்போது விஜயின் பழைய அழுக்குத் துணிகள் சலவைக்குப் போய் திரும்பிவருகின்றன, அப்போது அதில் இருக்கும் லேடிஸ் பெல்ட விஜயின் அம்மாவின் பார்வைக்கு தட்டுப் படுகிறது.
அது ஒரு முக்கிய தருணத்தில் தமன்னாவிடம் இருந்து விஜய்யின் இடுப்பில் சிக்கிக் கொண்டு அவரிடமே தங்கி விட்ட ஒரு நினைவுச் சின்னம்.


பின்னர் அவர் தமன்னாவின் அப்பாவிடம் பேசி பெல்ட்டைத் திருப்பிக் கொடுக்க வருவதாக  சொல்லுகிறார். விஜய் அப்பா, அம்மா, நண்பர்கள் சகிதம் தமன்னாவின் வீட்டிற்குள் செல்கிறார். அங்கே  தமன்னாவின் பெரிய, சிறிய நடு அண்ணன்கள் வரிசையாக நின்று வரவேற்கிறார்கள்.


அவர்கள் கையில் துப்பாக்கி, விஜயின் அப்பாவிடம் அவரது சொத்து மற்றும் நிறுவனங்களை தங்கள் பெயருக்கு மாற்றித் தருமாறு மிரட்டுகிறார்கள். உடனே  விஜயும் தனது கையிலிருந்து அதிவேக துப்பாக்கியால் பெரிய அண்ணனை மடக்கிவிடுகிறார்.

தனிவழில வர நான் தளபதியில்லடா 

உன்வழியிலயே வந்து 

உன்னையே மடக்குற இளைய தளபதிடா...,

உடனடியாக ஃபிளாஷ்பேக் விரிகிறது
================================================
ஃபிளாஷ்பேக் காட்சி:-


உலக பயங்கரவாதியான தமன்னாவின் குடும்பத்தினரை பிடிக்க இண்டர்போல் போலிஸ் தனித் திட்டம் போடுகிறார்கள்.  அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு மாணவனாக நடிக்கிறார். பின்னர் அவர் தமன்னாவை நெருங்குவது, மும்பை ஆட்களை மடக்க முடியாமல் போனது போன்றவை ஃபிளாஷ் பேக்கில் வருகின்றன..,


தமன்னாவின் காதல் உண்மைக்காதல் என்பதால் சட்டம் அவரை குற்றவாளியல்ல என்று விடுதலை செய்து விடுகிறது

இந்தியாவைக் காத்த இந்தியாவின் இளைய தளபதிக்கு பதக்கங்களும் மாலை மரியாதைகளும் குவிகின்றன
விஜய் தமன்னாவை மணந்து கொண்டு காதலுக்கு மரியாதை செய்து விடுகிறார்

============================================================

அடியாள்;  நீ யார் மேல கைவெச்சிருக்க தெரியமா?

ஹீரோ:-  உன்மேல யார் கைவச்சிருக்கா தெரியுமா?

வசனம் இடம் பெற்ற படம் மனதில் இருக்கிறதா  நண்பர்களே...,

=============================================================
இது மீள்பதிவாக இருந்தாலும் வாசகர்கள் ஓட்டுக்கள் போட்டால் தமிழ்மணப் பரிந்துரை பகுதிக்குச் செல்லும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்

Thursday, December 24, 2009

50% கண்ணீர் 50% செந்நீர்

விஜயின் அடுத்த படத்திற்கான அதிரடிக் கதை  நமது வலைப்பூவில் வெளியாக இருக்கிறது..,

நீங்கள் ஏற்கனவே பார்த்து ரசித்த கதைக்கு புதிய ட்ரீட்மெண்ட்..,

கண்ணீரும் செந்நீரும் கலந்து எழுதப் பட்ட காதல் சரித்திரம்..,

அதிரடி சந்திப்பு,, அருமையான காதல்

பாம்பே கடத்தல் மன்னர்களிடம்  புகுந்து வெளியேறல்

கடத்தல் முதலைகளின் பாசப் பிணைப்பு

தியாகம் உருக்கம்

பின் இணைப்பு

கிளைமாக்ஸில் ஃபிளாஸ்பேக்

சுபம்

விரைவில் எதிர்பாருங்கள்.

==========================================================

Mummy motherfolk, danger not leave
Heat or cyclone, never I never tell
There there hunger take means, many savoury
Measurement food is one time
For pregnancy I come free mummy
Your child also name one I keep mummy
Letter lacking person ada trusting us and coming
Address lacking street ada auto fellow knowing
Achak means achak only Gumuk means gumuk only
Achak means achak only Gumuk means gumuk only...

இது எனது இடுகைக்கு வந்த ஒரு பின்னூட்டத்தின் ஒரு பகுதி. எழுதியவர் விரும்பினால் அவரது பெயர் வெளியிடப்படும். விரும்பாவிட்டாலும் சிலகாலம் கழித்து வெளியிடப்படும். ஏனெனில் இது என்னை ரசிக்க வைத்த பகுதி

Wednesday, December 23, 2009

மகன்களுக்குள் பிரச்சனை இல்லை. மூன்றாவது மருமகளே காரணம் .=நன்றி முகிலன்

ஒரு ஊரில் ஒரு குடும்பம். அங்க மூணு பசங்க.., மூணு பேருக்கும் மூணு வகையான வேலை..,  மூணாவது பையன் கொஞ்சம் வசதியா இருக்காராம். (அவருக்கு ஐ.டி. பார்க் வச்சுக் கொடுத்ததெல்லாம் குடும்ப தலைவர்தான் என்பது சரித்திரம்) .  இப்போ மூணாவது பையனோட வருமானத்துக்குத் தகுந்த வாழக்க்கைத்தரம் இல்லைனு மூணாவது மருமகள் நினைக்கிறாராம்ம். அதனால் சாம பேத தான தண்டங்களை உபயோகப் படுத்தி தனிக்குடித்தனத்துக்கு  உறுதி வாங்கி இருக்கிறாராம்.

எனது


தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

பதிவிற்கு தொடர்ச்சியாக முகிலன் அவர்கள்


குற்றம் - நடந்தது என்ன?  இடுகை இட்டிருக்கிறார்.


ஆனால் அந்த இடுகையிலேயே  இது குடும்பத்தை வளர்ப்பதற்கான முயற்சி அல்ல. தனிக்குடித்தனம்  மூன்றாவது மருமகளின்  வீம்புக்காகவும், வரட்டுக் கவுரவத்திற்கான முயற்சியே என்று என்னைப் போன்றவர்களின் எண்ணத்திற்கு ஆதரவு இடுகை போட்டிருக்கிறார் அவருக்கு நன்றி.


=====================================================
அவரது இன்னொரு இடுகையில்

கேள்வி: தெலுங்கானா பிரச்சனைக்கு என்ன தீர்வு?
பதில்: இந்தக் கேள்வி மிகவும் சுலபம். தெலுங்கானாவைத் தனி மாநிலமாக்கி அதில் ஆந்திராவையும் ராயலசீமாவையும் சேர்த்துவிட்டால் போச்சு. அப்புறம் யாரும் தனித் தெலுங்கானா கேட்க மாட்டார்கள்.

என்று சொல்லி யிருக்கிறார். அந்த இடுகையையும் ரசித்துவிடுங்கள்.

அண்ணா, எம்.ஜி.யார், விஜய்



விஜய் அவர்களின் புதிய படமாக உரிமைக்குரல் வரப்போவதாக கில்லிகளின் வலைப்பூவில் செய்தி வெளியாகி உள்ளது. உடனடியாக உரிமைக்குரல் பழைய படத்தினை நினைவு படுத்திய போது தென்பட்ட பாடல்தான் இது. அதன் வரி வடிவம் இதோ

ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )

சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )


உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்
(ஒரு தாய் )

கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
(ஒரு தாய் )


எத்தனையோ பாடல்களை மறுவடிவம் கொடுக்கிறார்கள். இதுபோன்ற பாடல்களுக்கு மறுவடிவம் கொடுத்தால் மக்களிடம் சென்றடையுமே என்ற ஒரு ஆசை தோன்றியது. அதே நேரத்தில் இன்பமே பாடல் எங்கோ ஒலிப்பதும் கேட்டது. நல்ல பாடல்களை, நல்ல பாடல்களாகவே மக்களிடம் மறுவடிவம் கொடுத்து சேர்க்கமுடியவே முடியாதா?

பின்குறிப்பு:- விஜய்க்கும் பிடித்த வார்த்தை, ண்ணா. எல்லாப் படங்களிலும் இந்த வார்த்தையை பலமுறை உச்சரிக்கிறார். இந்தப் பாடலிலும் ண்ணா வருவதால் இந்த பாடலை அவர் உபயோகப் படுத்திக் கொள்வார் என நம்பலாம்.

2.இது ஒரு மீள்பதிவு

3. அண்ணா நூற்றாண்டுவிழாவில் நமது பங்களிப்புகளை இந்த இடுகைகள் மூலம் படித்துக் கொள்ளுங்கள்.
அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09

சமீபத்திய கேள்விகளுக்கு பதில்கள் 12.9.09

அண்ணா - சில கேள்விகள் 12.9.09

அண்ணா 11.9.09

இறைவனிடம் சில கேள்விகள்..

1.
வானத்தை மேலும்
பூமியைக் கீழும்
ஏன் படைத்தான்
இறைவா..

2.
தமிழை தமிழனும்
ஆங்கிலத்தை ஆங்கிலேயனும்
தாய்மொழியாக கொள்ளுமாறு
ஏன் படைத்தாய்
இறைவா...


3.
தலையில் ஏன்
முடி படைத்தாய்...
பின்னர்
வழுக்கை என்றோர்
நிலையை
ஏன் படைத்தாய்....


4.
காய்களை சைவம் என்றாய்
மாமிசத்தை அசைவம் என்றாய்
ஏன்..


5.
பெட்ரோலை
உலகிற்களித்தாய்.. ஆனால்
அதில்
டீசல், மண்ணெண்ணெய்
என்ற பிரிவுகளையும் படைத்தாய்.
ஏன் இறைவா.. ஏன்..?

ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன

Monday, December 21, 2009

தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

Telungana....some stupid questions 


என்ற ஆங்கில் வலைப்பூ பக்கம்  போக நேர்ந்தது. பின்னே ஃபாலோவர் என்றால் போய் படித்துவிடுவோமே..,  அதில் இருந்த சில கேள்விகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

1. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தெலுங்கானா மாவட்டங்களிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரிலிருந்து வந்தனர்?  மாஸ்கோ அல்லது நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்களா? அவர்கள் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தனர்?


2.ஒருவேளை தெலுங்கானா என்று ஒரு மாநிலம் கொடுக்கப் பட்டால் அப்போது அங்கிருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்? 

இப்போது தெலுங்கானா பகுதியில் இருக்கும் சோமாலியன் நிலப்பிரபுக்களும் உகாண்டாவைச் சேர்ந்த புரட்சிக்காரர்களும் தூக்கி யெறியப் படுவார்களா?


3. ஒருவேளை அப்படி ஒரு மாநிலம் கொடுக்கப்பட்டால் அங்கு ஆட்சி புரிய எந்த கட்சிகள் வருவார்கள்? காங்கிரஸ்,தெலுகுதேசம், தெலுங்கானா ராஸ்ட்ரீய சமிதி,பிரஜா ராஜ்யம்?   இத்தனைநாள் தெலுங்கானா முன்னேற்றத்திற்கு உதவாத கட்சிகளிடம் இனிமேல் எப்படி எதிர்பார்க்கமுடியும்?


==============================================

இவை தவிர மேலும் பல கேள்விகளை கேட்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

==================================================

இவர் தவிர இவர் மகனுக்கும் பல  சந்தேகங்கள் தோன்றுவதுண்டு.. குறிப்பாக வேட்டைக்காரன் படம் பார்த்தபின் தோன்றிய சந்தேகங்கள் அர்த்தமுள்ளவை. ஒரு எட்டுவேண்டுமானால் போய் படித்துவாருங்கள்.

The incomplete man

Sunday, December 20, 2009

பிந்தொடர்பவர்கள் பட்டியலில் பிரச்சனையா?

பல பதிவுகளில் தங்கள் பிந்தொடர்பவர்களைக் காணவில்லை என்று இடுகைகளைப் பார்த்திருக்கிறோம்.

சிலர் முகப்புக் களத்தில் இருக்கும்போது மட்டும் பிந்தொடர்பவர்களாக இருப்பதாகவும் முகப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டால் அவர்களும் ஒதுங்கிக் கொள்வதாகவும் கூட ஒரு பேச்சு அடிபடுகிறது.

இப்படிப்பட்ட பேச்சுக்கள் அடிப்பட்ட காலத்திலேயே பின்னூட்டப் பெயர்களின் மூலமாக நண்பர்களின் இடுகைக்குச் செல்லும்போது அவர்களின்   /profile/  ல் நமது பெயர் இருக்கிறதா என்று பார்ப்பது உண்டு. பிந்தொடர்பவர்கள் பற்றி பிரச்சனை ஆரம்பித்த காலத்திலேயே எனது வலைப்பூவிற்கு தொடர்வருகையாளர் ஒருவரின்  /profile/ ல் பிந்தொடரும் வலைப்பூக்களில் என்வலைப்பூவின் பெயர் இல்லை.  எனது பிந்தொடர்பவர் பட்டியலிலும் அவர்பெயர் இல்லை.  ஆனால் இன்றுவரை எனது இடுகைகளைத் தொடர்ச்சியாக படித்து பின்னூட்டம் இட்டுக் கொண்டு இருக்கிறார். 

கண்டிப்பாக அவர் பிந்தொடர்பவர்கள் பட்டியலிருந்து தனது பெயரை துண்டித்திருக்க மாட்டார். அவர் மட்டுமல்ல யாருமே பெயரை துண்டிக்கும் அளவுக்கு மெனக் கெட மாட்டார்கள் என்பது எனது கருத்து. விருப்பம் இல்லையென்றால் இடுகையைப் படிக்க மாட்டார்கள் அவ்வளவுதான்.

எனது  சச்சின், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்பதிவர்களுடன் ந...  

இடுகையின்போது கூட நட்புடன் ஜமால் மற்றும் லோகு ஆகியோர் தங்கள் பெயரை நான் விட்டுவிட்டதாக உரிமையுடன் சுட்டிக் காட்டினர். 

அப்படியென்றால் ஒரு முடிவுக்குத்தான் வரமுடிகிறது. பிந்தொடர்பவர் பட்டியல் தொழில்நுட்பத்தில் ஏதோ பிரச்சனை இருப்பதாகவே தோன்றுகிறது.  எனது கருத்தினை நான் சொல்லிவிட்டேன். தொழில்நுட்பப்பதிவர்கள் வழிகாட்டுவார்கள் என்று நம்புவோம்.

பின்குறிப்பு:- இன்று எனது பிந்தொடர்பவர்கள் பட்டியலில் எண்ணிக்கை குறைந்துவிட்டது அதனால்தான் இப்படி ஒரு இடுகை.

Saturday, December 19, 2009

வேட்டைக்காரனுக்கு நன்றி

வறட்சியாய் போய் கொண்டிருந்த பதிவுலகில் ஹிட் மழைகளை குவிய காரணமானவன் வேட்டைக்காரன்.


முண்ணனி பதிவர்களே ஒரு நாளைக்கு ஐந்நூறு ஹிட்டுகளுக்கு நாக்கு தள்ளிக் கொண்டிருந்த காலம் போய்  வேட்டைக்காரன் என்ற பெயர் கொண்ட பதிவுகள் எல்லாம் இன்று ஆயிரம் ஹிட்டுகள் குவித்துக் கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் காரணமாக அமைந்த வேட்டைக்காரனுக்கு
நன்றி
நன்றி 
நன்றி

http://www.southgossips.com/wp-content/uploads/2009/12/vettaikaran-12_001.jpg










http://icdn.indiaglitz.com/tamil/gallery/Movies/vettaikkaran/vettaikaran091209_19.jpg 



==============================================================


முதல் பகுதி வேட்டைக்காரன் இனிய துவக்கம்    
அமெரிக்க ஜனாதிபதியாக யாரைத் தேர்ந்தெடுப்பது பற்றி அமெரிக்க மக்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. அனைவரும் தொடர்ச்சியாக வேட்டைக்காரனுக்கு தந்தி அடிக்கிறார்கள். அந்த தந்திகள் தமிழ்நாட்டை வந்தடைகிறது. தந்திகாரர் வேட்டைக்காரன் எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் வேட்டைக்காரனின் இருப்பிடத்தைத் தேடுகிறார்.

அப்போது ஒரு பெரியவர்: நீ நிக்கறதே அவரோட எல்லையிலதான். நீ தந்தியைப் படி அப்பு.., வேட்டைக்காரனுக்கு கண்டிப்பா கேட்கும்
என்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்

=================================================



இரண்டாம்பாகம்நாசாவுக்குள் போன நம்மாளு
நாசாவின் ஈசானி மூலையில் ஒரு ஒருவம் அசைவது கண்காணிப்பு காமிராவில் தெரிய ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பார்த்தபோது அந்த உருவம் ஆசிய முகமாகத் தெரிய வந்தது.

மீசையில்லாத மொழுமொழு உருவம்.... அது...



ஹண்ட்டர்..,

அமெரிக்க அதிபர் இருக்கையை விட்டு எழுந்து விட்டார். ஹண்ட்டர் இப்போது வளர்ந்துவரும் ஒரு கடத்தல் மன்னன். அவன் எப்படி இங்கே?

உடனே அதிபர் ஹண்ட்டருக்கு அலைபேசியில் அழைக்கிறார்.

நான் ரொம்ப பிஸி. அப்புறம் ஃபோன் பண்ணுங்க என்று ஹண்ட்டர் பதில் சொல்கிறார்.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்
===================================================================



மூன்றாம் பாகம்வேட்டைக்காரச் சாமி


நான்
ஒரு வழியில போனா அந்த பாதையை நானே மறந்திடுவேன்..
இனி திருமபவெல்லாம் முடியாது. என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அங்கே பதினைந்து வயது தமிழரசன் நிற்கிறான்.


நீங்கெல்லாம் படிக்க போங்க.. நான் படிக்க வைக்கறேன்.


பதினைந்து வய்து தமிழரசனின் குரல் உறுதியாக ஒலிக்கிறது.

முழுதும் படிக்க இங்கு அழுத்துங்கள்


 ============================================

நான்காம்பாகம் உரிமைக்குரல் பன்ச் டயலாக்

உலக அமைதி கொஞ்ச நாட்களாகவே கேள்விக் குறியானது. ஆஃப்பிரிக்க நாடு ஒன்றில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரம் காரணமாக உலகப் பொருளாதாரமே நடுநடுங்கிக் கொண்டிருந்தது. பின்னே அந்த நாட்டில் இருந்துதானே உலக நாடுகளுக்கு தங்கமும் வைரமும் வருகின்றன.

இதனால் இந்திய நாட்டில் நடக்கும் பல திருமணங்களில் நகைகளுக்குப் பதிலாக பணத்தையும், பணம் அடங்கிய சூட்கேஸ்களையும் காதுகளிலும், மூக்குகளிலும். கழுத்து மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் தொங்க விட ஆரம்பித்தனர்.  


முழுதும் படிக்க அழுத்துங்கள்

=================================================


Friday, December 18, 2009

வேட்டைக்காரன் விமர்சனம் கல்கியில்

[Vettaikaran[10].jpg]


 கல்கியில் வந்த வேட்டைக்காரன் விமர்சனம் இது. இது பற்றிய முழு இடுகையை அகொதீகழகப்  பிரமுகர் வரைந்திருக்கிறார். இங்கே சென்று பார்த்துக் கொள்ளுங்கள்

Wednesday, December 16, 2009

உலர்ந்த உணர்வுகள்

தெரியவில்லை

மீண்டும்

உன்னைப் பார்த்தபோது

உள்ளுக்குள் வந்த

உணர்வுகளின் தன்மை..,

கல்லூரி தேவதையாய்  நீ

உலவிய போது கூட

ரசிகனாய் கூட

இருந்த நினைவு இல்லை

நட்பாய் பழகிய

நாட்களில் கூட

நண்பனாய்  இருந்த

நினைவு இல்லை.

ஒரு பெண்ணாய்

உன்னைப் பார்த்த

நினைவு

இல்லவே இல்லை,


ஆனால்

இன்று

இப்படி ஒரு பெண்

என்னோடு

பல காலம்

பழகியிருக்கிறாள்

என்பதாக

தோன்றும்போது

காரணம்

புரியவில்லை,

எப்போது

என் கண்களுக்கு

பெண்ணானாய்?

ஒன்றும்

புரியவில்லை





உன்முகத்தின்

ஜொலிப்பு


நகைப்பின் தகைப்பு


பேச்சோடு அசையும்

கைவிரல்கள்

காற்றோடு

உலாவும்

முடிக் கற்றைகள்

உடலோடு இணைந்த

உடைகள்

நாம் பழகிய

நாட்களிலும்

இப்படித்தான்

இருந்தாயா?


ஏனோ தெரியவில்லை

உன்னைப்

பார்த்தபின்

உன்னை

மறந்து விட்டேன்.

புதிய

உணர்வை

உணர்ந்துகொண்டேன்

உணர்வின்

உணர்வு

உணர முடிந்தால்

நீயும் உணர்ந்திருப்பாய்

இல்லை

உணர்வில்

உலர்ந்திருப்பாய்

உணர்வுகள்

உலர்ந்திருந்தால்

உன்னைக்

கண்டிருக்கலாம்

உன்னைக்

கண்டதால்

உணர்வுகள்

உணர்த்தியிருக்கலாம்,

உண்மையைச்

சொன்னால்

உன்னை நான்

கண்டிருக்கவே கூடாது..,

Saturday, December 12, 2009

அசோக் குமார்

குணாளின் வாழ்க்கையில் இதற்கு முன் என்ன நடந்தது என்பதை அறிய இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்
http://www.nilacharal.com/images/212/mkthyagarajan.jpgகுணாளின் தன் மனைவியின் படுக்கையறையில் தனது தந்தையின் இளம்மனைவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இனிமேல் உன்முகத்தையே பார்க்க மாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு வெளியேறிவிடுகிறார்.

அசோகர் புத்திர சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். நாடு கடத்தப்பட்ட மகனை திரும்ப அழைக்கும் விதமாக கடிதம் எழுதச் சொல்லி அதில் கையெழுத்திடுகிறார், ஆனால் அந்த கடிதத்தில் குணாளின் கண்களை குடுடாக்கும்படி எழுதி அதை தட்ச சீலத்திற்கு அணுப்புகிறார் அசோகரின் இளம் மனைவி. தட்ச சீலத்தின் பொறுப்பில் இருக்கும் மகேந்திரர் இந்த கடிதத்தை குணாளிடம் காட்ட குணாள் ஐந்து நிமிடங்கள் வசனம் பேசுகிறார், பின்னர் தனது தந்தையின் சபத்தை நிறைவேற்ற தனது கண்களை தானே குருடாக்கிக் கொண்டு தட்ச சீலத்தைவிட்டு வெளியேறுகிறார்,

அப்போது புத்த துறவி அவருக்கு வழிகாட்டுகிறார்.  நாட்டைவிட்டு வெளியேறிய குணாளின் மனைவி தனது கணவனின் பாடலைக்கேட்டு அவரைக் கண்டுபிடித்துவிடுகிறார்.  இருவரும் ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒருநாள் பிச்சை எடுத்து வரும்போது  குழந்தை இறந்துவிடுகிறது, அது தெரியாமலேயே குணாள் தாலாட்டுப் பாடுகிறார்.

பின்னர் வேறொரு நகரம் நோக்கிச் செல்கிறார்கள்.  அந்த நகரத்திற்கு அசோகச் சக்க்ரவர்த்தி வந்திருக்கிறார், அவருக்கு புத்த பிட்சுவின் பாடல் கேட்கிறது,. அசோகர் புத்த பிட்சுவை அழைத்துவரச் சொல்கிறார். காவலர்கள் குணாளனை அழைத்துவருகிறார்கள். குருடர்களை அரசர் பார்க்கக்கூடாது என்பதற்காக அவரை திரைச்சீலைக்கு பின்னாள் இருந்து பாடச் சொல்கிறார்கள் . குணாள் அந்தப் பழைய பாடலைப் பாட  அசோகர் அவரைக் கண்டு பிடித்துவிடுகிறார்.

பின்னர் தன் மகனின் கண்கள் குருடான விதத்தினை அறிந்து பொங்கி எழுகிறார், அப்போது பழைய புத்த பிட்சு வந்து புத்தர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு பாட்டைப் பாட குணாளின் கண்கள் திறந்து கொள்ள

சுபம்.


அதில் இடம் பெறிருந்த சில பாடல்கள்

-------------------------------------
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ
காலமும் செல்ல மடிந்திடவோ உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே

-------------------------------------

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

அண்டரிலே அண்டரிலே நில மண்டலமேல்
அண்டரிலே நில மண்டலமேல் பல
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தீரத்திலே தீரத்திலே உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரதிலே
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?

தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானதிலே சரச கானத்தில் தேவா

உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உன்னைக் கண்டு மயங்காத பேகளுண்டோ?

மேலும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

Thursday, December 10, 2009

கருணை காட்டுமா? தமிழ்மணம்

நான் தமிழ்மணம் போட்டியில் கலந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.  நான் கலந்துகொள்ள தொடுப்புகள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

விருதுகள் 2009 - உங்கள் இடுகைகளை பரிந்துரை செய்து விட்டீர்களா ?

 

 இடுகையில் பலமுறை பின்னூட்டம் மூலம் சொல்லிவிட்டேன்.  7ம்தேதியிலிருந்து பின்னூட்டம் மூலம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். 7, 8 தேதிகளில் கணினியில் அமர நேரம் இல்லாததால் அலைபேசி மூலம் பின்னூட்டம் இட்டிருந்தேன். நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.  எப்படி அனுப்புவது என்று புரியவில்லை.


Tuesday, December 8, 2009

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

அறிவிப்பு:  இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. அதனால் இதில் வரும் கருத்துக்களுக்கு நான் சொந்தக்காரன் அல்ல. யாருக்கேனும் மனம் புண்பட்டால் நீக்கிவிடுகிறேன்.  இதை முதலில் எழுதியவர் பெயர் அல்லது பதிவின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் அவர்களின் பெயரையும் தொடுப்பையும் போட்டுவிடுவோம்.

இது எனது கற்பனை அல்ல என்பதற்கு இதில் உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கும் எனக்கும் வெகுதூரம் என்பதே சாட்சி.

Friday, November 27, 2009

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டைப் போட முடியவில்லையா?

தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுவது என்பது ஏழுகடல் ஏழுமலை தாண்டி குகைக்குள் குடியிருக்கும் முனிவரின் வாயில் புகுந்து வியர்வை வழியாக வெளியேறுவதைப் போன்று சிரமமான காரியமாக இருந்து வருகிறது.

இதற்கு முன் இருந்தமுறையில் ஒவ்வொரு முறை கணிணியைத் திறக்கும்போது ஒரு போடும் அளவு எளிமையாக இருந்தது. இப்போது நமது ஓட்டைக்கூட நமக்குப் போட்டுக் கொள்ளமுடியாத சூழல் சில நேரங்க்ளில் ஏற்பட்டுவிடுகிறது.

இதனால்தானோ என்னவோ தமிழீஷில் ஓட்டுக்கள் நிறைய வாங்கியும் சில நேரங்களில் தமிழ்மணத்தில் ஓட்டு வாங்க முடியாமல் போய்விடுகிறது.

எப்போதெல்லாம் நமது ஓட்டுக்கள் விழவில்லை என்று கவனித்த போது ஒரு ஒற்றுமை தெரிந்தது.

கணிணியில் எப்போதெல்லாம் நாம் வரலாற்றை அழிக்கிறோமோ அதற்கடுத்து ஓட்டுப் போட முயற்சித்தால் மோசமான கையொப்பம் என்று நிராகரிக்கப் பட்டுவிடுகிறது.

அதன்பிறகு நமது மின்னஞ்சல் முகவரிக்குள் நுழைந்துவிட்டு பின்னர் நாம் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் தமிழ்மணம் நமது மின்னஞ்சல் முகவரியை உறுதிபடுத்தச் சொல்லும். நமது  முகவரியையும் கடவுச் சொல்லையும் கொடுத்தால் ஓட்டு ஏற்றுக் கொள்ளப் படுகிறது. நாம் மின்னஞ்சல் முகவரிக்குள் நுழையாமல் தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டால் உறுதிப்படுத்துப்படுத்தும்போது சரியான கடவுச்சொல் கொடுத்தாலும் மோசமான கையொப்பம் என்றே வருகிறது. முதல் முறை ஓட்டுப் போட்டுவிட்டால் அதன்பிறகு நாம் மின்னஞ்சலுக்குள் நுழையாமல் ஓட்டுப் போட்டால் கூட ஓட்டுவிழுகிறது.   ஆனால் கணிணி உபயோக வரலாற்றை அழித்துவிட்டால் மீண்டும் அதேபோல்தான் ஆகிறது.

இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்தபின் தமிழ்மணத்தில் எனது ஓட்டு சரியாக விழுந்துவிடுகிறது.

நீங்களும் பின்பற்றிப் பாருங்கள். அதை இந்த இடுகைக்கே முயற்சித்துப் பாருங்கள்.

-------------------------------------------------------------------------------------------------

சில நேரங்களில்,சில இடங்களில்  தமிழ்மண ஓட்டு தமிழீஷ் ஓட்டைவிட அதிகமாகிவிடுகிறது. அது எப்படி என்றுதான் புரியவில்லை.

Thursday, November 26, 2009

யார்க்கராய் இருந்தால் என்ன? ஃபுல்டாஸ் ஆனா என்ன?

யார்க்கர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? கிரிக்கெட் பார்ப்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஓரளவு பரிச்சையம் ஆன வார்த்தை இது. கடைசி ஓவர்களில் அல்லது பந்து பழசான நிலையில் இந்த ஆயுதத்தை உபயோகப் படுத்துவார்கள்.

இந்த யார்க்கர் பந்து வீச்சான மட்டையாளரின் காலுக்கு மிக அருகாமையில் தரையில் படும். குறிப்பாகச் சொன்னால் மட்டையாளர் மட்டைவீசும்போது அவரது மட்டைக்கும் தரைக்கும் உள்ள மிகச் சிறிய இடைவெளியில் பந்து தரையில் பட்டு உள்ளே புகுந்து விக்கெட் குச்சியை வீழ்த்தும். இதற்கு கொஞ்சம் வேகமும் அவசியம்.

வேகம் இல்லையென்றால் மட்டை பிடிப்பவர் இரண்டடி நடந்து வந்துஅல்லது பின்னால் நகர்ந்து தனது தோள்வலிமையில் ஒருவீசு வீசினால் பந்து மைதானதுக்கு வெளியே போய் விழும்.

எனவே துள்ளியமாக வீசுவது அவசியம். கொஞ்சம் தவறினாலும் பந்து புல்டாசாக மாறி வெளியே போய் விழும் அபாயம் அதிகம். அக்ரம் போன்றவர்கள் முதல்பந்திலேயே யார்க்கர் போடுவதில் வல்லவர்கள்.

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது யார்க்கர் வீசும் அளவு தோள்வலிமை இருக்காது. அப்படி யார்க்கர் நீளத்தில் போட்டால் பந்து போட்டால் மட்டைக்காரர் கொஞ்சம் நடந்துவந்து கால்களை நகர்த்தி இடது கால் பக்கத்தில் வீசி நான்காக்கி விடுவார். சில முறை இவ்வாறு நடந்தால் பந்துவீச்சாளன் தனது கைப்பந்து, கால்பந்து இன்னிங்க்ஸ்களை துவக்கி விட வேண்டிய சூழலுக்கு உள்ளாவார்கள். என்வே பள்ளிக் காலங்களில் யார்க்கரை யாரும் முயற்சித்துக் கூடப் பார்ப்பதில்லை.

ஆனால் புல் டாஸ் பந்து என்பதும் சாதாரணமானது அல்ல. நேராக மட்டையில் வந்து விழும். மட்டைக்காரனை ஓங்கி அடிக்கவைக்கும். கொஞ்சம் தூக்கியே போட்டுக் கொடுத்தால் தூக்கி அடிக்க வைக்கும். சற்றே அழகாக கோழி அமுக்கும் கைகளை உடைய களத்தடுப்பாளரை நிறுத்தி வைத்தால் புல்டாசில் விக்கெட் கிடைப்பது மிக எளிது. குறிப்பாக பின்வரிசை ஆட்டக்காரர்கள் எவ்வளவுதான் தூக்கி அடித்தாலும் மேலே போகும் பந்து புவியீர்ர்பு விதியை பூர்த்தி செய்து கீழே இறங்கும். விதியின் காரணமாக அங்கே நிற்கும் தடுப்பாளர் கோழியைப் பிடித்து வெளியே அனுப்பி விடுவார். நேராக மட்டைக்கே இறங்கும் வகையில் போடுவதால் மட்டைக்காரர் தனது கால்களை மாற்றி அமைக்கும் வாய்ப்பு குறைவே.

எனவே பள்ளிநாட்களில் யார்க்கர் பந்தினைவிட ஃபுல் டாஸ் பந்திலேயே விக்கெட் விழும் வாய்ப்பு அதிகம் என்பதால் எனது ஓட்டு ஃபுல் டாஸுக்கே..

கல்லூரி வந்தபிற்கு ஓங்கி அடித்து பந்தினைக் காணாமல் போகச் செய்யும் வாய்ப்பு இருப்பதால் போடும் வந்து கொஞ்சம் வேகம் பிடிக்கும் காரணத்தாலும் அங்கு நிலைமை மாறிவிடும்.

எனவே யார்க்கர் போட்டாலும் ஃபுல்டாஸ் போட்டாலும் களத்தடுப்பில் திட்டம் நன்றாக இருப்பின் விக்கெட் கண்டிப்பாக விழும்.

Friday, November 13, 2009

2012 ஒரிஜினல் தமிழில் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டாருக்குன்னே உருவான ஒரு கதையை வெளிநாட்டு ஆளுங்க படம் எடுத்திட்டு இருக்காங்க..,  நாம சூப்பர் ஸ்டாரை வைத்தே அந்தப் படத்தப் பார்ப்போம்.

====================================================

படத்தின் துவக்கத்தில் கிராமச் சூழலில் ஒரு கவிநயம் மிக்க குத்துப்பாட்டு.

மாயா.. மாயா எல்லாம் மாயா

சாயா  சாயா எல்லாம் சாயா

போயா போயா எல்லாம் போயா

வாயா வாயா எல்லாம் வாயா

காயா காயா எல்லாம் காயா

நாயா நாயா எல்லாம் நாயா

பாயா பாயா எல்லாம் பாயா

என்று ஒரு தத்துவப் பாடலோடு சூப்பர் திரையில் நுழைகிறார். அந்த ஊரே அந்தத் திருவிழாவில் ஆடுகிறது.
http://4.bp.blogspot.com/_03G3R_dD0Cc/SolXPYv_0AI/AAAAAAAAAc0/bLmVdKwdYxE/s320/aaa.jpg
பெரிய மீசையோடு பிரபு வருகிறார். அங்கு நின்றிருக்கும் பூசாரியிடம் சாமி என் பையன் குருவுக்கு  இன்னிக்கு பொறந்தநாள் அதுதான் உங்க ஆசீர்வாதம் வாங்க வந்தோம் என்று சொல்கிறார்.

பூசாரி அருள்வந்து ஆடுகிறார்.  தெயவமே என்ற வார்த்தையோடு அமைதியாகிவிடுகிறார்.  அடுத்ததாக பழைய கால நயந்தாரா மாதிரி இருக்கும் பாவாடை சட்டை பெண்ணை  அழைத்து சாமி இவளையும் ஆசிர்வாதம் பண்ணுங்க இவதான்  குரு கட்டிக்கப் போற பொண்ணு. அடுத்தவருஷம் படிப்பு முடிஞ்சதும் குருவுக்கும் இவளுக்கும் கல்யாணம் என்கிறார் பிரபு.

பூசாரி கூர்ந்து பார்த்துவிட்டு  நீ தலைகீழா நின்னாலும் உனக்கு குரு கிடையாது, நீவேற ஆளப் பார்த்துக்க. அடுத்த வருஷம் குரு இந்த உலகத்திலய இருக்க மாட்டார்   என்று சொல்லிவிட்டு மயங்கிச் சரிகிறார்.

மாயன் கோவிலில் சொன்னால் சொன்னது நடக்கும் என்பது ஐதீகம். அதனால் எல்லோரும் சோகமாக மாறுகிறார்கள். ஆனால் குரு மட்டும்  பகுத்தறிவு வாதம் பேசுகிறார். ஆமாம் குருதான் நம்ம சூப்பர் ஸ்டார்.

இதெல்லாம் பழைய கால மூட நம்பிக்கைங்க..,  நீங்களெல்லாம் சொன்னதுனால் நான் அங்க வந்தேன். அங்க வந்தா என்னெல்லாமோ உளர்றாங்க...,

நான் ஒரு முற்போக்கு பத்திரிக்கைக்காரன். நாலு ஜனங்களுக்கு மூட நம்பிக்கை பற்றி எடுத்துச் சொல்லிட்டு இருக்கேன். என்னோட வலைப்பூ பூரா மூட நம்பிக்கை பற்றித்தான் எழுதிட்டு இருக்கேன். என்கிட்டயே கதை விடுறீங்களா..., என்று சொல்கிறார்.

அப்படியே பழையகால அச்சு இயந்திரத்தின் மேல் அவர் முகம் தெரிகிறது

நான் ஒரு பத்திரிக்கைக்காரன்,

சண்டை சச்சரவுக்கு கத்திரிக்காரன்

நான் எழுதுவது கத்தி முனையிலே

நான் நடப்பது என் பேனா வழியிலே

என்று தத்துவப் பாடல் பாடுகிறார்.

அப்போது அவர் பின்னால் நாட்டில்  உலகில் உள்ள அனைத்து பத்திரிக்கைக் காரர்களும் அவர் பின்னால் குவிகின்றனர்.

அவரின் பின்னால் பல மதரீதியான பத்திரிக்கைக்காரர்களும் வருகின்றனர். அவருக்குப் பின்னால் வந்த உடன் அனைவரது எழுத்தும் பகுத்தறிவுச் சிந்தனையோடு எழுத ஆரம்பிக்கின்றனர்.

மாயன் கோவில் மர்மம் பற்றி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஆய்வு செய்கிறார்கள். அதற்காக தமன்னா நியமிக்கப் படுகிறார். அவர் அடிக்கடி  நான் மாயவரத்துப் பொண்ணு, மாய வரத்துப் பொண்ணு என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

அவர் மாயவரத்துப் பொண்ணு என்ற சொன்ன உடனே அவருடன் வந்திருக்கும் சந்தானம் எ ட்ரூ பீஸ் என்ற கூடுதல் வசனத்தை சொல்லிக் கொண்டே வருகிறார்.

அதைக் கேட்ட சூப்பர் ஸ்டார் என்ன டூ பீஸா என்று கேட்கிறார். திரும்பிப் பார்க்கும் தமன்னா உடனே தலைவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

மாயவரத்துப் பொண்ணு  இவ

மாயன் கோவில் வந்திருக்கா

ட்ரூ பீஸ் கண்ணு  இப்ப

டூ பீஸில் ஆடி    வாரா..,

என்று அழகான ஜோடிப் பாடல் அங்கே அரங்கேற்றமாகிறது.

தொலைக்காட்சியில் மாயன்கோவிலில் சொன்ன குறிகள் பலிதம் ஆகியிருப்பது ஊர்ஜிதம் ஆன பலசெய்திகள்வெளிவருகின்றன.

சூப்பர் ஸ்டார் பற்றிய தகவல் உண்மையா என்பதை அறிய சூப்பர் ஸ்டாருக்கே தெரியாமல்  அவரைப் பற்றி நேரடி ஒலிப்பரப்பு செய்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் வழக்கம்போல வலைப்பூ எழுதிக் கொண்டும் பின்னூட்டம் போட்டுக் கொண்டும் காலம் தள்ளுகிறார். அவரைப் பற்றிய செய்தி எதுவும் அவருக்குத் தெரியாமல் நடக்கிறது.

அப்போது உலகை அழிவில் இருந்து காக்க ஒரு யாகம் நடத்தப் படுகிறது. யாகத்தின் போது வெளியிடப் படும் புகையால் ஓசோன் மண்டலம் பாதிக்கப் பட்டு உலகம் நேரிடும் என்று சூப்பர் பிரச்சாரம் செய்கிறார். அந்தப் பாடலுக்கு ஓசோன் ஓட்டையால் செய்யப்பட்ட  ஆடை அணிந்து முண்ணனி இந்தி நடிகை ஒருவர் ஆட்டம் போடுகிறார்.  யாகம் தடுத்து நிறுத்தப் படுகிறது.  அதனால் யாகம் நடத்த நினைத்த கோடீஸ்வரர்  சூப்பரைக் கொல்ல ஆள் அனுப்புகிறார். சூப்பர் ஸ்டாரின் வீட்டில் வெடி குண்டு வைத்து விடுகிறார்கள்.

அப்போது சூப்பர் ஸ்டார் தனது லேப் டாப்புடனருகிலுள்ள மலை மேல் அமர்ந்து வலைப்பூ எழுதிக் கொண்டும், பின்னூட்டம் போட்டுக் கொண்டும் இருக்கிறார். அப்போது ஒரு வலைப்பூவில் இருந்த லின்க் மூலம் செய்தித்தாளுக்குப் போய் அங்கு தன்வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதை தடுக்க ஓடிவருகிறார்,

அதற்குள் அவர் வீட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்துவிடுகிறது. ஆனால் அவரது தந்தை  தோட்டத்தில் இருப்பதால் தோட்டத்திற்குச் செல்கிறார்.

ஆனால் அதற்குள் வீட்டிற்குள் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளிவருகின்றன. சூப்பர் ஸ்டாரின் படுக்கை அறையின் அடியில் இருந்த எரிமலை வெடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குள் அந்த ஊரே நெருப்பு குழம்புக்குள் மூழ்க ஆரம்பிக்கிறது.  வேகமாக காரை எடுக்கும் சூப்பர் மின்னல் வேகத்தில் செல்கிறார். அதற்குள் சூப்பரின் கார் வெடித்துவிடுகிறது. 


வெடித்த சிதறலில் இருந்த சூப்பர் அப்படியே வானத்தில் பறக்கிறார். அப்படியே பறந்துவந்து பூமியைப் பெயர்த்து கையில் வைத்துக் கொண்டு அந்தரத்தில் நிற்கிறார். சில நாட்களில் பூமி குளிர்கிறது.

பெயர்தெடுத்த பகுதியில் இருந்த பிரபு

குருவே சரணம்

என்று சொல்ல சூப்பர் ஸ்டார் புதிய யுகத்தின் கடவுளாக மாறிவிடுகிறார்.

http://i11.tinypic.com/42vh3r8.jpg

Wednesday, November 11, 2009

ரிக்கி பாண்டிங் எழுதாத கடிதம்

காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும்...,

நண்ப! டோனி நீங்களும் உங்கள் அணியும் செய்திருக்கும் உதவி இந்த வையகம் இருக்கும் வரையில் ஆஸ்திரேலிய அணியும், நானும் மறக்கவே மாட்டோம். முதலிடம் முடியிலிருந்து போய்விடும் என்றார்கள், உலகக் கோப்பையை விட்டுவிட்டு ஓடிவிடலாம் என்றார்கள். ஆனால் டோனி..., இந்தியர்கள் என்றும் வந்தாரை வாழவைப்பார்கள் என்ற சொல்லுக்கு இலக்கணமாக எங்களுக்கு தன்னம்பிக்கையும், வெற்றியையும் பரிசாக அளித்தீர்கள்.

உங்கள் துவக்கமும், மத்தியமும் படுவலிமையானது என்று சொல்லிச் சொல்லி பயமுறுத்தி அனுப்பிருந்தார்கள். பந்துவீச்சு படுதுள்ளியம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். அந்த வள்ர்ந்த சிறுவன்கூட என்னை கொஞ்சம் நடுநடுங்கத்தான் வைத்திருந்தான்.

கோபம் வந்தால் தாயைப் பற்றிப் பேசும் சுழல்சுறாவளி கூட கொஞ்சம் டென்சனைத்தான் கொடுத்திருந்தார்.

இதற்கு முன் ஆஸ்திரேலியா அணி இப்படியெல்லாம் யாரும் பயமுறுத்தியதில்லை. கிளார்க்க் வேறு என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தார், ஆனால் அவரும் எங்களோடுவரவில்லை. ஒருவேளை தோற்றிருந்தால் அவர் இல்லாததால்தான் தோற்றொம் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன்.

பார்டர், டெய்லர், வாக் போன்றவர்கள் அணியை மற்றவர்களிடன் கொடுக்கும் போது மிக வலிமையான அணியாகத்தான் கொடுத்தார்கள். என்னால் அப்படிக் கொடுக்க முடியாதோ என்ற பயம் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

பயிற்சியில் ஈடுபடமுடியாத எங்கள் சிறுவர்களிடம் ஒருநாள் பயிற்சியில் ஒன்றும் பெரிய வித்தியாசம் வராது என்ற நம்ப்பிக்கைச்சொல்லை நீங்கள் கூறிய போதே ஒரு ஒளி தெரிந்தது. எங்கள் அணியில் இருந்த ஒவ்வொரு வீரரின் திறமை அறிந்து அதனைக் கொணர்ந்த உங்கள் திறமையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை நண்பரே..,

எங்கே கடைசி ஆட்டம் மழையால் பாதிக்கப் பட்டுவிடுமோ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஆறாம் ஆட்டத்தில் எங்கள் வெற்றிக்காகப் போராடிய உங்கள் விருந்தோம்பல் பண்பினை என்னவென்று புகழ்வது?
http://www.thedipaar.com/pictures/politics/10391.jpgஉண்மையில் சொன்னால் டோனி என் கிரிக்கெட் வாழ்நாளில் தலைவன் என்று ஒரு ஆள் தனியே தேவைப்படாத அணிக்குத்தான் நான் தலைமை தாங்கி இருக்கிறேன். என் அணியில் இருந்த கில்லி, வார்னே போன்றவர்கள் எல்லாம் ஐ.பி.எல்லில் தலைமை தாங்கி வெற்றிகளைக் குவித்தவர்கள். அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார்களாகத்தான் இதுவரை இருந்தார்கள். ஆனாலும் வளரும் இளைஞர்களை அழைத்து வருவது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கும் உங்கள் அணியின் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருந்தால்தானே இப்படி ஒரு வெற்றியை பரிசளித்து இந்த அணியையும் ஒரு அணியாக அங்கீகாரம் வாங்கி கொடுத்திருக்கிறீர்கள்.

எங்கே 1986ல் கபில்தேவ் செய்த செயலை நீங்கள் செய்துவிடுவீர்களோ என்று பயந்து கொண்டுதான் இருந்தேன். அப்படி எதுவும் நடந்திருந்தால் ஐயகோ.., இந்திய மாணவர்களையே அடிக்கும் இளைஞர்கள் இந்தியாவிலிருந்து தோல்வியுடன் போனால் எங்களை என்ன செய்வார்களோ ? கடைசியில் காப்பாற்றிவிட்டீர்கள் டோனி. உங்களுக்கும் உங்கள் அணியினருக்கும் கோடானு கோடி நன்றிகளை உறித்தாக்கிக் கொள்கிறேன்.


இப்படிக்கு

20-20லிருந்து கட்டாய ஓய்வு கொடுக்கப் பட்ட 2011 உலகப் கோப்பை கனவினை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டுள்ள உங்கள் நண்பன் பாண்டிங்.

Saturday, November 7, 2009

மின்னல் வேகத்தில் வார்ப்புரு மாற்றுவது எப்படி?

வார்ப்புரு மாற்றுவது எப்படி?

வார்ப்புருவை மாற்றுவது கொஞ்சம் கடினமான செயல் போல தோன்றும்.

Classic Template க்குள் சென்றால் பதினாறு வார்ப்புரு மட்டுமே இருக்கும். அதை நாம் விரும்பும்போது மாற்றிக் கொண்டே இருக்கலாம். இதில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது எந்த Gadgetம் தவறாது. அதே நேரத்தில் இது பெரும்பாலானோர் வைத்திருப்பது போன்றே இருக்கும். அதில் சில வகை வார்ப்புருக்களை எப்படி மாற்றினாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். சில அடிப்படை வார்ப்புருக்களை அமைத்துக் கொண்டால் வண்ணங்களை மாற்ற மாற்ற புதிய வார்ப்புரு போலவே இருக்கும். இதில் ஹெட்டர் படத்தினையும் அவ்வப்போது மாற்ற தினம் ஒரு வார்ப்புரு அமைவது போன்ற ஒரு தோற்றத்தினைக் கொடுக்கும்.

வெளியாட்கள் கொடுக்கும் வார்ப்புருக்களை உபயோகப் படுத்த விரும்பினால் அதில் 7 அல்லது 8 காலம்கள் இருக்கக்கூடிய ஒன்றை உபயோகப் படுத்தலாம். அதிலும் மேற்சொன்ன வழியைப் பயன்படுத்தி சில காலம்களை உபயோகப் படுத்தாமல் விடுவதன் மூலமும், ஹெட்டர் படத்தினை மாற்றுவதன் மூலமும் புத்தம் புதிய வார்ப்புருவாக மாற்றம் செய்து கொண்டே இருக்கலாம்.

அவ்வாறு இல்லாமல் ஒரு வார்ப்புருவிலிருந்து மற்றொரு வார்ப்புருவுக்கு மாற்ற விரும்பினால் நாம் சந்திக்க்கும் பிரச்சனை முக்கிய Gadget கள் இழக்க நேரிடுதல். அதை இழக்காமல் தடுக்க ஒரு வழி இருக்கிறது.

பிளாக்கர் வழங்கும Gadget களை மனதில் வைத்துக் கொள்ளவும். வார்ப்புரு மாற்றியவுடன் அவைகளை add செய்து கொள்ளலாம். வெறும் லின்க் ஆக மட்டும் இருக்கும் Gadgetகளை எல்லாம் ஒரே Gadget ல் போட்டுவைத்துக் கொள்ளவும். அதைத் தனியே ஏதாவது ஒருவடிவத்தில் சேமித்துக் கொள்ளவும். புதிய வார்ப்புரு வந்தவுடன் ஒரே ஒரு பெட்டியைச் சேர்த்து அவைகளை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம். ஹிட் கவுண்ட்டர் முதலான சில விஷயங்களை மட்டும் தனியே வைத்து தனித் தனி பெட்டிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை ரிஸ்க் எடுத்தும் எளிமையாகச் செய்யலாம். தனியாக சேமிப்பதற்கு பதிலா page elements பகுதிக்கு வந்து ஒவ்வொரு Elementஐயும் தனியாக எடிட் செய்ய திறந்து வைத்துக்கொள்ளலாம்.   பின்னர்   இன்னொரு   உலாவியைத் திறந்து புதிய வார்ப்புருவை வடிவமைத்துக்கொண்டு அதில் இதை காப்பி பேஸ்ட் முறையில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த முறைகளில் சில நிமிடங்களில் பழைய வார்ப்புருவை மிக எளிமையாக புதிய வடிவத்திற்கு மாற்றிவிடலாம்.

அடிப்படை Minima template ஐ உபயோகப் படுத்திக் கொண்டு பிண்ணனியை மட்டும் மாற்றிக் கொண்டே இருந்தால் வார்ப்புருவே புதிதாக மாறியது போல இருக்கும். மற்ற வார்ப்புருக்களிலும் இவ்வாறு செய்யலாம். அவைகளில் மாற்றினால் பிண்ணனி மாறியது மட்டுமே தெரியும்.

அந்த வசதியை நிறைய தளங்கள் தருகின்றன. 

http://bloggerblogbackgrounds.blogspot.com/ 

தளமும் அதில் ஒன்று. இவர்கள் தரும் பிண்ணனியை ஒரு  Gadget ல் போட்டு சேர்த்துக் கொள்ளமுடியும். அதை மட்டும் மாற்றினாலே வார்ப்புறு புதிது புதிதாக மாறிவிடும்.

முயற்சி செய்து பாருங்களேன். அவ்வப்போது ஹெட்டர் படத்தையும் மாற்றினால் புதுப்புது வார்ப்பு வருவது போல தோற்றம் கொடுத்துக் கொண்டே இருக்கலாம்.

====================================================================

இது இல்லாமல் பாரம்பரிய முறையிலும் ஒவ்வொரு 

Elementஐயும்   Gadgetஐயும் அதற்குரிய பகுதியில் போய்  ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்துக் கொள்ளலாம். அல்லது edit templateல் போய் குறிப்பிட்ட பகுதியை copy எடுத்து வைத்துக் கொண்டு பின்னர்  paste செய்தும் புதிய வார்ப்புருவை முழுமை படுத்திக் கொள்ளமுடியும்

====================================================================

புதிய  template ல் பதிவு வரும்போது  புதிய திரையரங்கில் படம் பார்க்கும் உணர்வினை வாசகர்களுக்கு ஏற்படுத்தலாம்.  தொடர்ச்சியாக படிக்க வருபவர்களுக்கு ஒரு பிரமிப்பினையும் கொடுக்க இயலும்.

=====================================================================

பின்குறிப்பு:- எனக்கும் கணிணிக்கும் உள்ள உறவு சில மாத பந்தமே.., இந்த இடுகையில் ஏதாவது தவறோ அபத்தமோ இருப்பின் சொல்லுங்கள். சரி செய்து கொள்கிறேன். இந்த முறைகளில்தான் நான் வார்ப்புருக்களில் வித்தியாசம் காட்டிக் கொண்டு இருக்கிறேன். அதனால் ஆநேகமாக அனுபவ ரீதியில் சரி என்றுதான் நினைக்கிறேன்


Wednesday, November 4, 2009

சாலமன் பாப்பையாவை வஞ்சம் தீர்த்துக் கொண்ட பதிவு

தொடர்பதிவு என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி ஒரு மகிழ்ச்சியான விஷயம். நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் போடுவது போல இன்னொருவரின் கற்பனைக்கு நாம் ஒரு சட்டைப் போட்டு அனுப்பலாம். சட்டை ரசிக்கப் படும். பாராட்டப் படும். பரிசளிக்கப்படும். இப்போது  மாதவராஜ் அவர்களின் கற்பனை நான் ஒரு சட்டைப் போட்டு அனுப்புகிறேன். இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த   இனியவன்   லால்குடி என். உலகநாதன்,      
அவர்களுக்கு நன்றி.


1.அரசியல் தலைவர்
பிடித்தவர்:- விஜய டி.ஆர். ஆதரித்து பேசினாலும் எதிர்த்துப் பேசினாலும் ஆணித்தரமாக பேசுவார். சில நிமிடங்களில் தனது நிலையை மாற்றிக் கொண்டாலும் அதற்கான காரணத்தை மிக அழுத்தமாக மற்றவர் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்ற வகையில் பேசுவார்.

பிடிக்காதவர்:- ரஜினிகாந்த் .  இவரை நம்பி அரசியல் பயணம் மேற்கொள்ள நினைத்தவர்களை நட்டாற்றில் விட்டவர். 


2.எழுத்தாளர்
பிடித்தவர்:  கல்கி
பிடிக்காதவர்: பாலகுமாரன்   அவரின் கதையை இவர் தொடர்வதாகச் சொல்லி எழுதிய காரணத்தாலேயே எனக்கு இவரைப் பிடிக்காது. தவிரவும் இவரது ரசிகர்கள் செய்யும் அலப்பரை மற்றும் ரசனை பற்றிய விமர்சனங்களாலும் எனக்கு இவரை பிடிக்காது

3.கவிஞர்

பிடித்தவர்: வாலி  எல்லா வகைப் பாட்டுகளையும் எழுதுவார்.


பிடிக்காதவர்:விஜய டி.ஆர்.



4.இயக்குனர்

பிடித்தவர்: எம்.ஜி.யார் தனது திரைப்படத்தில் தனது கருத்துக்களை படித்திற்கு சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திணிக்கத்தெரிந்தவர். பல வித நல்ல கருத்துக்களை பாமர மக்களையும் முணுமுணுக்க வைத்தவர்.  இவருக்கு அரசியல் சாயம், மற்றும் நாயகன் வேடம் இல்லாமல் இருந்திருந்தால் திரைப்படத்தின் மூலமே ஒரு சமூகப் புரட்சி நடந்திருக்கும். தான் நடிக்கும் படத்தில் ரீமேக் படத்தில் கூட சிகரெட் பிடிக்கும் காட்சி வைக்காதவர். தண்ணியடிப்பதை தவிர்த்தவர். உடற்பயிற்சியை கடைசிப் படம் வரை வலியுறுத்தியவர். மாற்றுக்கருத்து இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துவிட்டு வரவும் 

பிடிக்காதவர்: விசு,   இவரது தம்பியின் மறைவுக்குப் பின் இவரது கற்பனை சுத்தமாக வரண்டுவிட்டது.


5.நடிகர்

பிடித்த நடிகர்:சிவாஜிக்கு அடுத்து தலைவாசல் விஜய் காதல் கோட்டை படத்திற்கு முன்பே ஆளவந்தான் கொலைவழக்கில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

பிடிக்காத நடிகர்: சாலமன் பாப்பையா (இடுகையின் தலைப்பின் நாயகர்)


6.பிடித்த விளையாட்டு: கால்பந்து


பிடிக்காத விளையாட்டு: பெரிய சைஸ் பேக்கரி கம் கூல்டிரிங்க்ஸ் கடைகளில் பந்தை உருட்டி உருட்டி  விளையாடுவார்களே அந்த விளையாட்டு. இதே போல் புரியாத விளையாட்டுக்களும் நிறைய இருக்கின்றன.

7.பிடித்த பேச்சாளர்: அறிவொளி


பிடிக்காத பேச்சாளர்: ஐ.லியோனி


இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


இதைத் தொடர  இளைய பல்லவன் மற்றும் ஸ்டார்ஜன் ஆகியோரை அழைக்கிறேன்.



 

Monday, November 2, 2009

விஜய், அஜித் யார் முதல்ல?

எத்தனையோ படங்களில் ரஜினி சிகரெட் பிடித்திருக்கிறார். எத்த்னையோ விதங்களில் அவர் சிகரெட் பற்றவைத்து இருக்கிறார். ஆனால் அவர் செய்யாத ஒரு முறையில் ஜூனியர் எண்டியார் பத்தவைக்கிறார் பாருங்கள். 




அஜித் விஜய் படங்களெல்ல்லாம் இப்போது பலவிதமான சண்டைப் படங்களாகவே வருகின்றன. ஆனால் கீழே உள்ள சண்டைக்காட்சி போன்ற சண்டைக்காட்சி இவர்களுடைய எந்த படத்துலும் இடம் பெற்றதாக தெரியவில்லை. யார் படத்தில் இந்த சண்டைக்காட்சி முதன் முதலில் இடம் பெறப்போகிறதோ தெரியவில்லை

Sunday, November 1, 2009

சில ரகசியங்கள்

மீண்டும் ஒருமுறை தொடர்பதிவிற்கு என்னை அழைத்து பெருமை கொள்ள வைத்திருக்கும் வருங்கால ஐ.நா.சபை பொது செயலாளர் காஞ்சித்தலைவன் இளைய பல்லவன் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

இந்த வலைப்பூவே என்னைப் பற்றி சுய தம்பட்டம் ஆகவே இருக்கிறது. எனவெ சிறு குறிப்பு என்பதை விட நெடுங்குறிப்பு என்று ஏற்றுக் கொண்டு இந்த வலைப்பூவை பிந்தொடர்பவராக மாறி எனது இடுகைகளைத் தொடர்ச்சியாக படித்துவருமாறு அனைவரையுமே கேட்டுக் கொள்கிறேன். 

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

அந்தச் சம்பவத்தை இன்னொரு வலைப்பூவில்  இந்த இடுகையில் போட்டு இருக்கிறேன். வாசித்துவிட்டு தங்கள் கருத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.


3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

பழனியில்


4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

வழக்கம்போல் சிறுவர்கள் வீட்டுக்கு வெளியேதான் கொண்டாடுகிறார்கள்.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

திருமணத்திற்கு பின் அதுபற்றி எனக்குத் தெரியாது. 



6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

எங்கள் பாட்டி காலத்தில் தீபாவளிக்கு இட்லி சுடுவார்களாம். அவர்கள் காலத்தில் எங்கள் கிராமத்திற்கே சிறப்பு உண்வே அதுதானாம்.  அது என்னவோ தெரியவில்லை நகரத்தில் தீபாவளிக்காக இனிப்புகளாக செய்து குவித்து, வாங்கிக் குவித்து சாப்பிடுவது என்பது எனக்கு நகைச்சுவையாகவே தெரிகிறது.


7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

தீபாவளிக்கு மட்டும் என்பதாக வைத்துக் கொண்டு பதில்


பதில் வாழ்த்துக்கள் மட்டுமே சொல்வதுண்டு. மின்னஞ்சல், அட்டை எப்படி வாழ்த்துவந்தாலும் பதிலுக்கு தொலைப்பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிடுவதுண்டு. நேரிடையாக சொல்பவர்களுக்கு நேரிடையாக வாழ்த்து சொல்லிவிடுவேன்.


8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

பள்ளிக் காலங்களில் நண்பர்களுடன் ஊர்சுற்றுவேன். கல்லூரி காலங்களில் மதியம் கிளம்பி இரவுக்கு முன் விடுதிக்குச் சென்று தீபாவளிக் கொண்டாட்டங்கள். பயிற்சி மருத்துவரான பின் அனைத்து தீபாவளியும் மருத்துவமனையில்தான். தலை தீபாவளிமட்டும் எல்லோரையும் போல


9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

நல்ல கேள்வி. இந்த இடுகையின்மூலம் ஒரு நல்ல சிந்தனை துளிர்விட்டிருப்பதை நினைக்கையில் மகிழ்ச்சி. 


10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அக்பர்  சிநேகிதன்

T.V.Radhakrishnan    தமிழா...தமிழா..

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails