Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகள் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

இந்திய பாராளுமன்றத்தேர்தல் நமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பத்ற்காக நடைபெற்றது. அதன் முடிவுகள் இப்போது வர ஆரம்பித்திருக்கின்றன. ஒவ்வொருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ர்ப்பு இருந்திருக்கும். கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பவர்கள் போல் தேர்தல் முடிவுகள் பார்ப்பவர்கள் அங்காங்கே உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். நமது இளமைக் காலத்தில் சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும். சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் முடிவுகளுக்கு நடுவே திரைப்படங்கள் போடுவார்கள். திரைப் படம் பார்த்துக் கொண்டே முடிவுகளைப் பார்ப்போம். பாராளுமன்றத் தேர்தல் என்றால் இந்திப் படங்கள் போடுவார்கள். மூன்று நாட்களுக்கு மேல் இந்திப் படத்துடன் முடிவுகள் பார்ப்போம்.

இப்போதெல்லாம் மிண்ணனு முறை. 20-20 முறை. எல்லா முடிவுகளும் அதிரடியாக வந்து விடுகின்றன. சிலருக்கு இந்த முடிவுகள் பிடித்திருக்கும். சிலருக்கு முடிவுகள் பிடித்திருக்காது. எப்படி இருந்தாலும் ஒட்டு மொத்த இந்திய மக்களில் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்தளித்தவர்களில் (இவர்களில் 49-0 வர மாட்டார்கள்) அதிக வாக்குப் பெற்றவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகவும். அதிக மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு பெற்றவர்கள் ஆட்சியும் அமைக்கிறார்கள். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

தேர்தல் முடிவினால் சந்தோஷப் படுபவர்கள் மகிழ்ச்சியாகவும், தேர்தல் முடிவினால் வருத்தப் படுபவர்கள் தங்கள் மனதினைத் தேற்றிக் கொள்ளவும் இந்தப் பாடல்களைப் பாருங்கள்.




இந்தப் பாடலில் நடன அசைவுகளில் பிரபு தேவா தனி முத்திரையை உருவாக்கினாலும் அதை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை நக்மா அவர்களையும் சேரும். காமிக்ஸ்களின் தாக்கத்தில் இருந்து குமுதம் படிக்க ஆரம்பித்த காலத்தில் வந்தது. இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொடுத்த பாடல் இது. கிராபிக்ஸ் என்ற வார்த்தையை பட்டி தொட்டிகளெல்லாம் பரப்பிய பெருமை இந்தப் பாடலுக்கு உண்டு. ஆனால் இதில் செய்ததாகச் சொல்லப் படும் கிராபிக்ஸ் விஷயங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே படம் முழுவதும் வரும்படி விட்டலாச்சாரியா செய்து இருக்கிறார். அந்த மாமனிதரின் கையில் இது போன்ற தொழில்நுடபங்கள் கிடைத்திருக்குமெனில் உலக சினிமா இந்தியாவிலிருந்துதான் பிச்சை எடுக்க வேண்டியிருந்திருக்கும்.


பதின்ம வயதின் இறுதிக் கட்டத்தில் பார்த்த பாடல்களில் இன்னொரு பாடல். மிக மெதுவாக் மெல்லிசையை மெல்........................லிசையாக மாற்றி உருவான பாடல். புல்லாங்குழல் இசையும் கடல் நீர் கரையில் மோதுவதையும் ரசிக்கும் விகிதத்தில் கலந்து கொடுத்திருப்பார்கள். பாடல்களை என்னைப் போன்றவர்கள் பாட முயற்சித்த போது வசனமாக ஒலித்த பாடல்.

எதிர்காலம் உன்மீது பழிபேசும் கண்ணே என்ற வரிகளின் போது பூட்டப் பட்ட இரும்ப்புக் கதவின்பின்னே மனிஷா நிற்பார்.

என்வாசல் கடந்து விட்டேன் என்று மனிஷா பாடும்போது ஒரு இரும்புக் கதவைத் திறந்து கொண்டு வருவார்.

அவர் பாடும் இடம் முழுவதும் பச்சைப் பாசம் நிறைந்திருக்கும். நாயகனும் நாயகனும் ஒருவர்மீது ஒருவர் மிகவும் பாசமாக இருப்பதை காட்டுவதற்காக இயக்குநர் அந்த இடத்தை உபயோகப் படுத்தியதாக அப்போதே நாங்கள் பேசிக் கொண்டோம். ஒரு நங்கூரத்தில் சிக்கி மனிஷாவின் பர்தா சிக்கிக் கொள்ள அதைக் கழட்டிவிட்டுவிட்டு அரவிந்த சாமியை நோக்கி ஓடுவார். மதச் சின்னங்கள் நங்க்கூரமடித்திருந்தாலும் அதில் இருந்து பிரிந்து நாயகி செல்வதாகவும் ஓடி வருவதைப் பார்த்து புல்லரித்துப் போய் பேசிக் கொண்டிருந்ததை நினைத்தால் இன்றும் புல்லரிக்கிறது.



பஞ்சும் நெருப்பும் பக்கத்திலிருந்தால் சுலமாக பிடித்துக் கொள்ளும் என்ற கருத்தினை வலியுறுத்தும் ஒரு பாடற்காட்சி. ஒரே அத்தியாவசியத் தேவை ஒத்த அலைவரிசை. இருவரும் ஒருவர் பார்வையில் ஒருவர் தடுமாறுவதாக பின்னர் காட்சி அமைத்திருப்பார்கள்.
அதுவும் டைட் மினி ஸ்கர்ட் போடும் பெண்ணின் சாமியாராய் போகும் கனவு எப்படி ஒரு சிதைகிறது என்பதை உணர்வு பூர்வமாக எடுத்திருப்பார்கள். அரவிந்தசாமி மாதிரி பசங்க துரத்தினாக் கூட எங்க விதி இருக்கோ அங்கதான் செட் ஆகும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் விதைத்த நம்பிக்கை முத்திரைப் படம் இது.பிரபு தேவாவுக்கு விருதுவாங்கிக் கொடுத்த பாடல்

23 comments:

  1. தல,

    பாடல்களை நன்றாக ரசித்து எழுதி இருக்கிறீர்கள்.

    ஆனால், அந்த உயிரே படப் பாடலில் என்னுடைய நண்பன் ஆத்தா குரு கவனித்த ஒரு விஷயத்தை பற்றி ஏன் நீங்கள் எழுதவில்லை?

    ReplyDelete
  2. உயிரே !! பாட்டில் டான்ஸும்,தீமும் சூப்பர்!!

    ReplyDelete
  3. //King Viswa said...

    தல,

    பாடல்களை நன்றாக ரசித்து எழுதி இருக்கிறீர்கள்.

    ஆனால், அந்த உயிரே படப் பாடலில் என்னுடைய நண்பன் ஆத்தா குரு கவனித்த ஒரு விஷயத்தை பற்றி ஏன் நீங்கள் எழுதவில்லை?
    //


    எளிய விஷ்யங்களைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன் தல.. பிரமாண்டமான விஷ்யங்கள் சின்னப் பசங்க யோசிக்கவில்லை தல..

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  4. //thevanmayam said...

    உயிரே !! பாட்டில் டான்ஸும்,தீமும் சூப்பர்!!
    //

    நன்றி சார்

    ReplyDelete
  5. தேர்தல் முடிவுகள் மிக அருமை, இந்திய வாக்காளர்கள் மிக அருமையாக வாக்கு அளித்து உள்ளனர்.

    தங்கள் பகுதியியா சிறப்பாக ஆளும் கட்சிக்கே வாகு அளித்து உள்ளனர், குறிப்பாக , பீகார், குஜராத், ஒரிசா, ராஜஸ்தான், டெல்லி, கேரளா, தமிழ்நாடு, கர்நாடக, மும்பை, மாட்டிய பிரதேசம், ஜம்மு.

    அதே போல தங்களை ஏமாற்றி தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் கட்சிகளை புறக்கணித்து உள்ளனர், பாமாகா, பாஸ்வான் கட்சி, பங்காரப்ப்பா, அமர்சிங்க்.

    ReplyDelete
  6. தல,

    //பிரமாண்டமான விஷ்யங்கள் சின்னப் பசங்க யோசிக்கவில்லை தல// உங்க டிரேட் மார்க் டச்.

    ReplyDelete
  7. //அரவிந்தசாமி மாதிரி பசங்க துரத்தினாக் கூட எங்க விதி இருக்கோ அங்கதான் செட் ஆகும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் விதைத்த நம்பிக்கை //

    நிஜமான நிஜம் தல

    ReplyDelete
  8. வாங்க குப்பன் யாஹூ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. //King Viswa said...

    தல,

    //பிரமாண்டமான விஷ்யங்கள் சின்னப் பசங்க யோசிக்கவில்லை தல// உங்க டிரேட் மார்க் டச்.
    //

    நன்றி தல...

    ReplyDelete
  10. //பிரியமுடன்.........வசந்த் said...

    //அரவிந்தசாமி மாதிரி பசங்க துரத்தினாக் கூட எங்க விதி இருக்கோ அங்கதான் செட் ஆகும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் விதைத்த நம்பிக்கை //

    நிஜமான நிஜம் தல
    //



    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..

    ReplyDelete
  11. // அதை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை நக்மா அவர்களையும் சேரும் //

    இப்படி பதிவிட்டு விட்டு

    // பிரமாண்டமான விஷ்யங்கள் சின்னப் பசங்க யோசிக்கவில்லை தல.. //

    இப்படி ஜகா வாங்கலாமா சுரேஷு,,,,, :)

    எது எப்படியோ அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள்... இப்படி அந்த பாடலை நான் ரசித்ததாக நியாபகம் இல்லை.... :)

    ÇómícólógÝபி.கு.: சொல்ல மறந்து விட்டேனா... தேர்தலில் காசு வாங்கி கொண்டு 40 தொகுதிகளில் டம்பமாக தோற்க போகிறோம் நின்ற ஒருவருக்கும், தேர்தலுக்கு ஒரு முறை கட்சி மாறி கொண்டிருந்த ஒருவருக்கும் மக்கள் போட்ட நாமம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது... மற்றபடி முடிவுகள் சற்று ஏமாற்றம் அளித்தாலும் (நிற்க, நான் அதிமுகு அனுதாபி அல்ல, ஆனால் தேர்தல் கருத்துகளை வைத்து இரு கட்சிகளும் சரிசமமாக பங்கு போட்டு கொள்ளும் என்று கணித்தேன்), மக்கள் வாக்கை மகேசன் வாக்கென்று எடுத்து கொள்ள வேண்டியது தான்.

    ReplyDelete
  12. //ஓடி வருவதைப் பார்த்து புல்லரித்து//

    ஹி ஹி ஹி

    அந்த படம் வந்த காலாக்கட்டத்தில் குமுதத்தில் வந்த அரசு கேள்வி பதில் ஒன்று எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது (அப்பொழுது குமுதம் ஆசிரியர் சுஜாதா அவர்கள்)

    (வார்த்தைகள் சரியாக ஞாபகம் இல்லை)

    கேள்வி : உயிரே பாடலில் மணிஷா ஓடி வரும் காட்சியை பார்த்தீர்களா

    பதில் : காதலுக்காக மத அடையாளத்தை துறக்கும் காட்சி கவிதை. அந்த காட்சியில் லயித்திருந்ததால் நீங்கள் குறிப்பிடும் காட்சியை மறுபடி பார்க்கும் போதே கவனித்தேன்

    ReplyDelete
  13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ரஃபிக் ராஜா சார்

    புருனோ சார்

    ReplyDelete
  14. //ஆனால் இதில் செய்ததாகச் சொல்லப் படும் கிராபிக்ஸ் விஷயங்களை பல ஆண்டுகளுக்கு முன்பே படம் முழுவதும் வரும்படி விட்டலாச்சாரியா செய்து இருக்கிறார். அந்த மாமனிதரின் கையில் இது போன்ற தொழில்நுடபங்கள் கிடைத்திருக்குமெனில் உலக சினிமா இந்தியாவிலிருந்துதான் பிச்சை எடுக்க வேண்டியிருந்திருக்கும்.//

    முதலில் உங்கள் ரசனைக்கு ஒரு தட்டச்சு.விட்டாலாச்சார்யா உண்மையிலேயே தென்னக ஸ்பீல்பெர்க்தான்.தொழில் நுட்பம் இயலாத காலத்திலேயே அசத்திய மனிதர்.சிந்துபாத்,விக்கிரமாதித்தன் வேதாளம் வரிசையில் அசத்தும் ஃபெண்டசி.

    ReplyDelete
  15. Suresh,

    கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

    U Are also there.

    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    --
    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  16. //ராஜ நடராஜன் said...


    முதலில் உங்கள் ரசனைக்கு ஒரு தட்டச்சு.

    //


    நன்றி சார்

    ReplyDelete
  17. //பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.//


    வந்து விட்டேன் தெய்வமே

    ReplyDelete
  18. ஒன்னு மட்டும் நல்லா புரியுதுங்க.. நீங்க ரஹ்மான் ரசிகர்னுதான் ;))

    ReplyDelete
  19. இந்த பதிவை படிக்கும் போது உயிரே பாட்டில் என்ன பிரம்மாண்டம் இருக்கிறது என்று யோசித்துக்கொண்டே படித்தேன்...

    என்ன ஆச்சர்யம்...

    முடிக்கிற நேரத்தில் சன் மியூசிக் -ல் உயிரே பாட்டு போட்டார்கள்...

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் :D

    ReplyDelete
  20. //ஜியா said...

    ஒன்னு மட்டும் நல்லா புரியுதுங்க.. நீங்க ரஹ்மான் ரசிகர்னுதான் ;))
    //

    நன்றி தல

    ReplyDelete
  21. //தீப்பெட்டி said...

    நல்ல பாடல்கள்....
    //

    நன்றி தல

    ReplyDelete
  22. //Sriram said...

    இந்த பதிவை படிக்கும் போது உயிரே பாட்டில் என்ன பிரம்மாண்டம் இருக்கிறது என்று யோசித்துக்கொண்டே படித்தேன்...

    என்ன ஆச்சர்யம்...

    முடிக்கிற நேரத்தில் சன் மியூசிக் -ல் உயிரே பாட்டு போட்டார்கள்...

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் :D
    //


    நன்றி தல. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails