Monday, May 25, 2009

போலியாய் ஒரு அசல்

இவை அனைத்தும் உங்கள் ரசனைக்காக.., நான்கு வெவ்வேறு நாட்களில் வெளியானது


அசல் படத்தின் கதை.

அசல்


தமிழ்திரையுலக வரலாற்றில் ஒரு மைல்கல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கலத்தில் இறங்கி துவக்க விழாவில் ஒரு கலக்கு கலக்கு இருந்தார். அசலில் கதை இதோ:-

கி.பி.17ம் நூற்றாண்டில் தொடங்கிறது கதை.

வெளி நாட்டில் படிக்க போன அஜித் கப்பலிலிருந்து இறங்கி தனது நாட்டிற்கு வருகிறார். வரும் வழியில் வயலில் இறங்கி சுற்றிப்பர்க்கிறார்.

அப்போது வயலில் வேலை செய்பவர்:-

தம்பி யாரு.. சிவப்பா இங்கிலீசு துரை மாதிரி அழகா இருக்கீங்களே அதுதான் கேட்டேன். என்கிறார்.


அப்போது இடி மின்னல் எல்லாம் ஒலிப்பது போன்று ஒரு நிகழ்வு. அப்போது பெரிய மீசையுடன் ஒருவர் வந்து நிற்கிறார்.

தம்பி பாக்கிறதுக்குத்தான் அசலூர் காரர்மாதிரி இருப்பார். ஆனால் அசலாவே அவர்
நம்மூருதான்.

வயலில் வேலை செய்பவர்: தல நீங்களா.. அப்போ அவரு

மீசைக்காரர்:- என் தம்பீ.......லே

படிச்ச அஜித்:- அது..
(அஜித் பேசுவதை அஜித் மாதிரி படிக்கவும். ரகுவரன் மாதிரி படித்து குழப்பிக் கொள்ள வேண்டாம்.) மொத்தம் இரண்டு அஜித்.

வயலில் வேலை செய்பவர்:- அதுதான் அழகா இருக்காக..


இரண்டு பேரும் சாரட் வண்டியில் போய் கொண்டே இருக்கிறார்கள். அப்போது மாவீரன்படத்தில் ரஜினி பாடும் பாடல் ரீமேக் செய்யப்பட்டு ஒலிக்கிறது. இடையிடையே முத்து பிண்ணனி இசையும் வந்து கொண்டே இருக்கிறது.


தம்பி அஜித்:-அண்ணே நம்ம ஜமீன் மக்கள்ளாம் ரொம்ப நல்லவங்களா இருக்காங்கண்ணே......

அண்ணன் அஜித்:-ஆனா இந்த வெள்ளைக் காரந்தான் சரியில்லே..

நம்மல வரி கேட்கிறான்.

தம்பி அஜித:- அப்படியாண்ணே... வானம் பொழிகிறது .பூமி விளைகிறது.........(முழு வசனத்தையும் அஜித் பேசுகீறார்.)

அண்ணன் அஜித்:-இதெல்லாம் நானும் பேசிப் பார்த்திட்டேன் ஒன்னும் வேலையாகல.. வரிக்கு வட்டி வேற போடறான். அசலையே கட்ட முடியாதுங்கறேன்

கலக்டர் பொண்ணுகூட என்கூடத்தான் கப்பல்ல வந்துச்சு. நான் போயி பேசி பாக்கட்டுமா...

அண்ணன்;- அது அசலாவா கலக்டர் பொண்ணுதானே...

தம்பி;- இல்லணே.. கலெக்டரே பொண்ணுதான்னே... வரும்போது பேசிட்டு வந்தேன்.

அண்ணன்:- நான் தனியாளு இல்லேண்ணு சொன்னியா...

தம்பி:- அதச் சொல்லிட்டுத்தாண்ணே பேசவே ஆரம்பிச்சேன்...

................................................................... தொடரும்>>>>>>>>>>>>.......

==================================================================

அசல்+சுதந்திரம்+காதல் பாகம் இரண்டு

தங்கள் சமஸ்தானத்தில் வரி அதிகமாக இருப்பதால் அதைக் குறைப்பதற்காக கலெக்டர் அம்மாவைப் பார்ப்பதற்காக பெரிய தல, சின்ன தல இருவரும் கோட்டைக்கு வருகிறார்கள். இதன் முன்கதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.

.....................................................................................................................................................

பெண் கலெக்டராக ஒரு ஹாலிவுட் நடிகை நடிக்கிறார். அவர் அதிகாலை நேரத்தில் எழுந்து ஜாக்கிங் போகிறார். ஸ்கிப்பிங் மற்றும் இன்னபிற உடற்பயிற்கிகள் எல்லாம் செய்து கடைசியில் குளிக்கிறார். படத்தில் அன்றைய வெள்ளைக் கார கலெக்டர்களின் அதிகாலை வாழ்க்கைமுறை பற்றி அழகாகப் பதிவு செய்யும் முயற்சியாக இந்தக் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதனால் யாரும் இவற்றை ஆபாசமாகக் கொள்ள வேண்டாம்.

..................................................................................................................

கோட்டைக்கு புறப்படும் பெரிய தல, சின்ன தல இருவரையும் பாராட்டி மக்கள் பாட்டுப் பாடுகிறார்கள்


எங்கள் மன்னன் நீ......
நாட்டின் மன்னன் நீ......
அரியணையின் மன்னன் நீ....
மக்கள் மன்னன் நீ.....

அமைச்சருக்கும் மன்னன் நீ...
தளபதிக்கும் மன்னன் நீ....
..................................... இளைய
.....(ஒரு இடைவெளி).......
தலைமுறைக்கும் மன்னன்நீ......


இமய மலையையும் ஆளப் பிறந்தவன் நீ.......

.................................................. பாடல் முடியும் போது குதிரையில் ஏறி கலெக்டரைப் புறப்படுகிறார்கள்.


மக்களுக்குள் பேச்சு

ஒருவர்:- நம்ம பெரிய தல, சின்னத்தலைய ரொம்ப செல்லமா வளர்த்திருக்கார், பார்த்தியா.. கப்பல்ல போயி வெளிநாட்டில் படிக்க வெச்சிருக்காரே....
மற்றொருவர்:- பெரிய தல அவரோடு பத்து வயசிலயே ஆட்சிக்கு வந்திட்டாரு. வெள்ளைக் காரங்க கிட்ட நம்ம நாடு அடிமையா இருக்கறத பார்த்து நமக்கு விடிவு காலம் வரணும்தான் வெளி நாட்டுக்கு தன்னோட தம்பிய அனுப்பி படிக்க வச்சிருக்காரு..


வயதில் முதிர்ந்த ஒருவர்:- அவங்க வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருக்குப்பா...

பாவம் அவங்களுக்கு ரெண்டு அம்மா..., ரெண்டு அப்பா...........


மக்கள் அதிர்ச்சியுடன்..........

ஐயோ....

என்ன ரெண்டு அப்பா, ரெண்டு அம்மாவா...............

அசிங்கமா பேசாதீங்கப்பா...

பெரிய தல பெரியராஜாவுக்கும் பெரிய ராணிக்கும் பிறந்தவர்...

சின்ன தல சின்னராஜாவுக்கும் சின்ன ராணிக்கும் பிறந்தவர்...

............................

அப்ப அவுங்கெல்லாம் எங்கேப்பா.......

வெள்ளைக் காரங்க முதன் முதலா நம்ம நாட்டுக்கு படையெடுத்து வந்தப்ப.. நம்ம பெரிய ராஜாவும் சின்னராஜாவும் எதிர்த்தாங்க.....

அவுங்களும் நம்ம தலைங்க மாதிரியே ரொம்ப அழகா சிவப்பா இருப்பாங்க ........
அவங்க ரெண்டு பேரும் ஒட்டி பிறந்தவங்க அப்படிங்கறதால பெரிய தலைக்கு வலது பக்கமும் சின்ன தலைக்கும் இடது பக்கமும் தலும்பு இருக்கும் அதை வெச்சுத்தான் கண்டு பிடிப்பாங்க யார் பெரியவங்க அப்படின்னு...

......................................................

அந்த வெள்ளைக்கார துரைக்கு ஒரு பொண்ணு
அந்தப் பொண்ணுக்கு நம்ம சின்னராஜா மேல ஒரு கண்ணு

ஒரு நாள் அந்தப் பொண்ணு சின்னராஜா வ பார்க்க வந்தப்போ

வெளிநாட்டுக் காரங்க சதின்னு பெரிய ராஜா நினைச்சு அந்தப் பொண்ணு திட்டிட்டார்..

அப்ப அந்தப் பொண்ணுக்கு யார் அசல்ன்னு தெரியாததால கோவிச்சிக்கிட்டு இங்கிலாந்துக்கே போயிரிச்சு.....

கொஞ்ச நாள் கழிச்சு திரும்பி வந்து

இந்தா உங்கொழந்தைன்னு சின்ன ராஜாவ தேடி வந்து கொடுத்தப்போ...

காதல்பிரிவுல சின்னராஜா செத்து போயிருந்தாரு......

உண்மையான காதலர்களப் பிரிச்சிட்டோமேன்னு பெரிய ராஜாவும் தேசாந்திரம் போயிட்டாரு. அப்ப இருந்து நம்ம பெரிய தலதான் நமக்கெல்லாம் மன்னரா இருந்து ஆட்சி செய்துட்டு இருக்காங்க.....................

இப்ப நம்ம சின்னதலயும் வந்து விட்டதால் வெள்ளைக்காரங்கல திரும்பவும் எதிர்க்க ஆரம்பிச்சிட்டாங்க...
..........................................................................................


வெள்ளையர்களின் கோட்டைக்குள் பெரிய தலயும் சின்னதலயும் நுழைகிறார்கள்.

கப்பம் கட்டும் மன்னர்கள் என்பதால் அவர்களை வெள்ளையர்கள் உள்ளே விடுகிறார்கள்.

காத்திருக்கும் அறையில் அமர்ந்திருக்கும் போது ஒரு வெள்ளைக்கார கிழவி வருகிறார்..

நீங்கதான் பெரிய தலயும் சின்னத்தலயுமா........... என்று கேட்கிறார்...

பெரிய தலயும் சின்னதலயும் புரியாமல் ஆமாமென்று தலையை ஆட்டுகிறார்கள்.

நாந்தாப்பா உங்க வெள்ளைக்கார பாட்டி.

உங்களுக்கெல்லாம் ஒரு ரகசியம் சொல்லத்தான் நான் உயிரோட இருக்கேன்..

உங்க அப்பா பெரிய ராஜா துறவறம் போகவில்லை. சின்ன ராஜா சாகவும் இல்லை.. இருவரையும் கைது செய்து சிறையில்தான் வைத்து இருக்கிறார்கள்..

உயிருடன் இருக்கிறார்களா...........................

கைது செய்தவர்கள் யார்?

பெரிய தலயும் சின்ன தலயும் பொங்கி எழுகிறார்கள்.

என் மகன் தான்.. அவன் தான் இப்போதைய கலெக்டரின் தந்தை........ என்று சொல்லிவிட்டு மேலே பார்க்கிறார். வெள்ளைக்கார பாட்டி.

மேலிருந்து கலெக்டர் இறங்கி வந்து கொண்டிருக்கிறார்.

.........................தொடரும்.................. தொடரும்...............தொடரும்.........................

அசல்- பேச்சுவார்த்தை- பாகம்-3

முன்கதை:-அந்நியனிடம் அடிமைப் பட்டுக் கிடக்கும் தங்கள் சமஸ்தானத்தின் விடுதலைக்காக போராடுகிறார்கள் பெரிய தலயும் சின்ன தலயும்.... தங்கள் நாட்டு மக்களின் நிலை பற்றி ஆங்கிலேய கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்கள். வந்த இடத்தில் தங்கள் பெற்றோர் உயிருடன் இருப்பதை தங்கள் ஆங்கிலேயப் பாட்டிமூலம் தெரிந்து கொள்கின்றனர். இனி...........

.....................................................................................................................................

முதல் பகுதி அசல் படத்தின் கதை.

இரண்டாம் பகுதி அசல்+சுதந்திரம்+காதல் இங்கேயும் உள்ளது.

.......................................................................................................................................

கலெக்டர் அவர்கள் மாடியில் இருந்து இறங்கி வருகிறார். அப்போது கீழிருந்து மேலாக காற்று அடிக்கிறது. அவரது கவுனும் பறக்கிறது. இந்தக் காட்சியை ஓவியமாக வரைகிறார். சின்ன தல.. கீழிறங்கி வந்த உடன் கலெக்டரிடம் அந்த ஓவியத்தைப் பரிசாகக் கொடுக்கிறார். கலெக்டர் மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு சின்னத்தலையின் ஓவியத்திறமையைப் பாராட்டுகிறார். ( சில நூறு ஆண்டுகளுக்குப் பின் இந்த ஓவியத்தை அடிப்படையாக வைத்துதான் மர்லின் மன்றோ தனது மாடலிங் போஸ்களை கொடுத்ததாக பேசிக் கொள்கிறார்கள்.)


கப்பலில் இருவரும் வரும்போதே ஓவியம் வரைவது, இதுவும் இவ்வ்ளவு அழகாக ஓவியம் வரைவது தெரிந்திருந்தால் அப்போது டைட்டானிக் போன்று நாமும் பல காலத்தால் அழியாத சித்திரங்களை உருவாக்கி இருக்கலாம் என்று சொல்கிறார்.

.............................................................................................................

பெரிய தல தாங்கள் வந்த காரணத்தைச் சொல்கிறார். தங்கள் நாட்டு மக்களின் வறுமை நிலைகளை நாத்தத்தளிக்க உள்ளம் உருக எடுத்துச் சொல்கிறார். ஏற்கன்வே சின்னத்தலையின் பரிசில் மயங்கி இருக்கும் கலெக்டர் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

சிலமாதங்களுக்கு முன் கூட உங்கள் அமைச்சர் இதற்கு முன் இருந்த கலெக்டரிடம் பேசினார்கள் அல்லவா.. என்றார் கலெக்டர்.

ஆமாங்க அம்மா.., ஆனா... இது பெரிய தல..

உங்க ஆளுங்க தான் நாங்க சொன்ன எந்த தீர்வுக்கும் ஒத்து வரவில்லையே என்ன செய்வது? இது கலெக்டர்.

அம்மா.. பேச்சுவார்த்தையில் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க அப்படி சொல்ல மாட்டீங்க....
.......................கொசுவர்த்தி சுழல........ பழங்காட்சிகள் வருகின்றன............................


தலையின் பிரதிநிதிகள்: ஐயா.. எங்கள் நாட்டில் மக்கள் மிகவும் வறுமையில் இருக்கிறார்கள்

ஆங்கிலேய கலெக்டர்: கேள்விப் பட்டோம். அதற்குத்தான் நாங்கள் பல திட்டங்கள் வைத்திருக்கிறோம்.

தலையின் பிரதிநிதிகள்: மழையே இல்லைங்க

கலெக்டர்: ரொம்ப சரி, அதற்காகத்தான நாங்கள் கங்கையிலிருந்து உங்கள் நாட்டிற்கு தண்ணீர் கொண்டு வரப் போகிறோம் அதற்காக நீங்கள் ஆயிரம் பவுன் தங்கம் மட்டும் கொடுத்தால் போதும்.

தலயின் பிரதிநிதிகள்: ஆயிரம் பவுன் தங்கமா.. ஐயா நாங்க வரிக்கு வட்டி கூட கட்டமுடியாது அப்படின்னு சொல்ல வந்திருக்கோமுங்க..

கலெக்டர்: எங்களுக்குத்தெரியும். நாங்கள் வட்டியாகக் கேட்கவில்லை. தண்ணீர் கொண்டுவர ஆகும் செலவுகளைக் கேட்கிறோம்.

பிரதிநிதிகள்: ஐயா, கால்நடைகள் எல்லாம் சரியான உண்வில்லாமல் சக்தி இழந்து இருக்கின்றன. விறகு விற்கக் கூட நாங்கள் கால்நடைகளில் எதையும் எடுத்துச் செல்லமுடியவில்லை.

கலெக்டர்: கவலை வேண்டாம் மக்களே. நாங்கள் ரெயில் பாலம் போடுகிறோம் அதற்கு ஒரு இரண்டாயிரம் பவுன் தங்கம் மட்டும் கொடுத்தால் போதும்... உங்கள் மக்கள் ரயி மூலம் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்

பிரதிநிதிகள்: ஐயா எங்கள் மக்கள் விவசாயம் செய்யக் கூட வலிமை குறைந்து காணப் படுகிறார்கள். நாங்கள் எப்படி?

கலெக்டர்: கவலையே வேண்டாம். நாங்கள் அதற்கும் ஆட்கள் அனுப்புகிறோம். உங்களுக்கு மூன்று வேளை உணவு தரப் படும். குடியிருக்க குடிசைகள், அதுவும் விவசாய நிலத்தில் இல்லாமல் தனியே குடியிருப்பு அமைத்துக் கொடுக்கப் படும். உங்களுக்கு உண்வு, உறைவிடம் இரண்டும் தருகிறோம். நாங்கல் அனுப்பும் ஆட்களுக்கு நீங்கள் வேலைப் போட்டு கொடுத்தால் போதும். விவசாய நிலத்திற்கு நீங்கள் வேலை செய்யும் போது வந்தால் போதும். அதில் ஏதும் நஷ்டம் வந்தால் கூட அது உங்களை சேராது.

பிரதிநிதிகள்; ஐயா, அப்ப நிலம் .................

கலெக்டர்: கம்பனிக்குத்தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்

பிரதிநிதிகள்:( கோபத்துடன்) நாங்கள் வருகிறோம்...

கலெக்டர்: போய் உங்கள் தலைவருடன் கலந்தாலோசித்துவிட்டு வந்து சொல்லுங்கள்.

....................................................................................................


பெரிய தல: இப்ப சொல்லுங்கம்மா... நாங்கள் எப்படி ஒத்துக் கொள்ளமுடியும் அம்மா...?


பெரிய தலை சொல்லிக் கொண்டிருக்கும் போது...................


.................................................................தொடரும்....................................................

அசல் கார்பந்தயம் (நான்காம் பாகம்)

முன்கதை சுருக்கம்:-மர்லின் மன்றோ போன்ற போசில் வெள்ளைக்கார கலெக்டர் பெண்மனியை படம்வரைந்து கொடுத்து அவர் மனதில் இடம் பிடிக்கிறார் சின்ன தல. நாட்டின் வறுமையும், வறட்சியையும் பற்றி கலெக்டரிடன் எடுத்துக் கூறுகிறார் பெரிய தல.

==============================

பெரிய தல, சின்ன தல பற்றி விரிவாகப் படிக்க

முதல் பகுதி,

இரண்டாம் ப்குதி,

மூன்றாம் பகுதியை சொடுக்கி படியுங்கள்

====================================

பெரிய தல சொல்லிக் கொண்டிருக்கும் போதே சின்ன தலயின் கண்களும் வெள்ளை அதிகாரியின் கண்களும் ஒன்றையொன்று கலக்கின்றன. அங்கே சப்தம் இல்லாத ஒரு யுத்தம் நடக்கிறது.

அதே நேரத்தில் பிரிட்டிஷ் அரசின் பார்வையாளராக பெண்கலெக்டரின் தந்தையும் முன்னாள் கலெக்டரும் வந்து சேருகிறார்.

அவர் சின்ன, பெரிய தல களைப் பார்த்து அதிர்கிறார்.

இந்த பையன் இவ்வளவு சிவப்பாக இருக்கிறானே...

உடனே வெள்ளைக்காரப் பாட்டி வந்து பெரிய தலக்கும் சின்னத்தலக்கும் உள்ள உறவு பற்றி சொல்கிறார். அவருக்கும் தலைகளுக்கும் உள்ள உறவு பற்றியும் சொல்கிறார்.( இங்கே சொடுக்கவும்.)
அதே நேரத்தில் அவர்களது தந்தைகள் பற்றியும் சொல்கிறார்.( இங்கே சொடுக்கவும்)

வெள்ளைக்காரர்களால் தங்கள் தந்தையர் இருவரும் அடிமைப் பட்டு இருப்பதை அறிந்த சின்ன தல குமுறுகிறார்.

பெரிய தல:- நம்ம அப்பாக்கள், அம்மாக்கள் மட்டுமல்ல தம்பி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சின்னம்மா, மாமன், மாமன் மகன் அத்தை, அத்தை மகன், மகள், பெரியப்பாவுக்கு பெண்கொடுத்தோர், பெண் எடுத்தோர், சித்தப்பாவுக்கு பெண் கொடுத்தோர், பெண் எடுத்தோர், அப்பப்பா, அப்பம்மா, அம்மாப்பா, அம்மம்மா, வருவோர், போவொர், வருவதைப் பார்ப்போர், பார்க்காதோர் எல்லோரையும் இந்த வெள்ளையர்கள் அடிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள். இவர்களை உடனே இவர்களை கைது செய்ய வேண்டும்

சின்ன தல:- அண்ணே விடுதலை செய்ய வேண்டும்.

வெள்ளைக்காரப் பாட்டி:- பேரப் பிள்ளைகளா.. வெள்ளைக்கார ராஜா ஒரு போட்டி வெச்சிருக்கார். அச்சு அசலா யார் ஜெயிச்சாலும் அவர்கள் கேட்கும் பரிசைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். வடக்கே நடந்த போட்டியில் கூட கிரிக்கெட் போட்டியில் ஜெயித்து ஒரு நாடு சுதந்திரம் வாங்கியிருக்கிறார்கள்.

பெண்கலெக்டர்( சின்ன தலயின் ஆள்தான்):- உங்களுக்கு கார் பந்தயம்.

மேலிட பார்வையாளர்:- ஹா,,,,, ஹா,,,, இன்னும் மாட்டுவண்டிக்கே டயர் வைக்காத பசங்க....... இவங்களாவது கார் ஓட்டுவதாவது... (சொல்லிக் கொண்டிருக்கும் போதே...)

சின்னத்தல:- தனது உடையின் ஒவ்வொரு முடிச்சிலிருந்தும் ஸ்கூரு டிரைவர், நட்டு, போல்ட், கிளிஞ்சு போன டயர் துண்டு, ஸ்பேன்ர் போன்ற கருவிகளை எடுத்து வைக்கிறார்.

அதிர்ச்சியில் வெள்ளைக்காரர்களின் கூடாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் உறைந்து போகின்றனர்.

பெரிய தல:- தம்பி உன்ன வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்கவச்சது வீண்போகலடா..... (புதிதாகப் படிப்பவர்கள் இங்கே சுட்டவும்)..

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

படத்தின் முக்கிய காட்சியாக கார்பந்தயம் நடைப்பெறுகிறது. அந்தக் காலத்து கார்களைப் பயன்படுத்தி போட்டி நடக்கிறது. சின்னத்தல ஒரு பழைய காரை சைக்கிள் பெடலை சேர்த்துவைத்து ஒரு புதிய தொழில்நுட்பத்தில் வண்டி ஓட்டுகிறார். அவரது கார் சுலபமாக இமயமலை பகுதிகளைச் சுற்றி வந்து வெற்றிவாகை சூடுகிறது.

அடுத்ததுதான் பிரச்சனையே....

மேலிட பார்வையாளர்கள் தல உபயோகப் படுத்தியது காரே இல்லை என்று சொல்கிறார்கள்.

அப்போது வெள்ளைக்காரப் பட்டி ஒரு பழம்பெரும் புத்தகத்தை கொண்டுவருகிறார். அந்த புத்தகம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வந்தது. அதில் கூறியுள்ள இலக்கணப் படி சின்ன தல ஓட்டிவந்தது கார்தான் என்பதை ஊருக்கு உணர்த்துகிறார்.
=====================================

கடைசியில் சின்ன தல பெரிய தல ஆகியோரின் நாடும் நாட்டு மக்களும் அவர்களின் பெற்றோரும் விடுதலை செய்யப் படுகிறார்கள்.

18 comments:

  1. என்ன கொடுமை சார் இது /? கார் ல பெடலா ?? அடுத்து வாடகை சைக்கிள் எடுத்து விண்வெளிக்கு போவாரா தல ?

    ReplyDelete
  2. //தேனீ - சுந்தர் said...

    என்ன கொடுமை சார் இது /? கார் ல பெடலா ??//



    கதாபாத்திரத்தின் எந்திர அறிவை எடுத்துக் காட்டுவதற்காக அப்படி அமைக்கப் பட்டுள்ளது. தவிரவும் உச்சக் கட்டக் காட்சிக்கு அந்த தொழில்நுட்பமே மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. போட்டியாளர்களுக்கு கேள்வி கேட்க காரணமாய் அமைகிறது.

    ReplyDelete
  3. தல,

    இது என்ன மீள் பதிவா?

    தமிழ் மணம் மற்றும் தமிலிஷ்'ல வோட்டு போட்டாச்சு தல.

    பின் குறிப்பு: தல , இந்த படத்தோட கதை உரிமைய டைடானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆங்கிலத்தில் உங்க கிட்ட கேட்டதாக ஒரு வதந்தி. அது உண்மையா தல?

    ReplyDelete
  4. //King Viswa said...

    தல,

    இது என்ன மீள் பதிவா?//

    தல இது ஒரு கூட்டு மீள்பதிவு. தனித்தனியாய் நான்கு பாகங்களாய் வெளியானதை சேர்த்து பதிப்பித்து இருக்கிறேன். அந்த வகையில் ஒட்டுமொத்தமாய் இதுவே முதல் பதிப்பு

    ReplyDelete
  5. //King Viswa said...

    தல , இந்த படத்தோட கதை உரிமைய டைடானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ஆங்கிலத்தில் உங்க கிட்ட கேட்டதாக ஒரு வதந்தி. அது உண்மையா தல?//


    இந்த ரகசியம் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சா..?

    ரகசியமாய் வச்சுக்கங்க

    ReplyDelete
  6. ”என்ன கொடுமை சுரேஷ் இது..”
    முடியல கண்ணை கட்டிகிட்டு வருது

    ReplyDelete
  7. //சின்னத்தல:- தனது உடையின் ஒவ்வொரு முடிச்சிலிருந்தும் ஸ்கூரு டிரைவர், நட்டு, போல்ட், கிளிஞ்சு போன டயர் துண்டு, ஸ்பேன்ர் போன்ற கருவிகளை எடுத்து வைக்கிறார்.//

    இப்போவே கண்ணக்கட்டுதே

    ReplyDelete
  8. //சூரியன் said...

    ”என்ன கொடுமை சுரேஷ் இது..”
    முடியல கண்ணை கட்டிகிட்டு வருது
    //

    வாங்க தல.., இதுக்கே மெரண்டு போனா எப்படி, வேட்டைக்காரச் சாமி இன்னைக்கு ரிலீஸ்.., அதையும் கொஞ்சம் படிச்சிட்டுப் போங்க..,

    ReplyDelete
  9. //பிரியமுடன்.........வசந்த் said...

    //சின்னத்தல:- தனது உடையின் ஒவ்வொரு முடிச்சிலிருந்தும் ஸ்கூரு டிரைவர், நட்டு, போல்ட், கிளிஞ்சு போன டயர் துண்டு, ஸ்பேன்ர் போன்ற கருவிகளை எடுத்து வைக்கிறார்.//

    இப்போவே கண்ணக்கட்டுதே
    //


    கதைக் களத்தோடு இளைந்து ஓடும் காட்சிகள் தல..

    தொடர்ந்து வாசித்து கருத்துக்களை வழங்குமாறு நண்றியோடு கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  10. //சின்னத்தல:- தனது உடையின் ஒவ்வொரு முடிச்சிலிருந்தும் ஸ்கூரு டிரைவர், நட்டு, போல்ட், கிளிஞ்சு போன டயர் துண்டு, ஸ்பேன்ர் போன்ற கருவிகளை எடுத்து வைக்கிறார்.//


    நல்ல சீன் தலைவரே ......

    ஒட்டு போட்டாச்சு

    ReplyDelete
  11. //ஜெட்லி said...

    நல்ல சீன் தலைவரே ......

    ஒட்டு போட்டாச்சு
    //

    நன்றி தல

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி தமிழர்ஸ்

    ReplyDelete
  13. அசலை, அசலும் வட்டியுமா கொடுத்து இருக்கீங்க, உங்க அனுமதியோட நானும் ஒரு கதை எழுதுறேன்

    ReplyDelete
  14. //நசரேயன் said...

    அசலை, அசலும் வட்டியுமா கொடுத்து இருக்கீங்க, உங்க அனுமதியோட நானும் ஒரு கதை எழுதுறேன்
    //


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  15. தல, பிஸியான ஷெட்யூல்ல இதெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன். பின்னிட்டீங்க.

    அசல் படத்தோட அசல் கதை கூட இந்த அளவுக்கு அசலா இருக்காது.

    அசல் கலக்கல் !!!

    ReplyDelete
  16. அசலா வந்து அசத்துறீங்க

    இது தலைக்கு தெரியுமா ....

    ReplyDelete
  17. // இளைய பல்லவன் said...

    தல, பிஸியான ஷெட்யூல்ல இதெல்லாம் மிஸ் பண்ணியிருக்கேன். பின்னிட்டீங்க.

    அசல் படத்தோட அசல் கதை கூட இந்த அளவுக்கு அசலா இருக்காது.

    அசல் கலக்கல் !!!//

    நன்றி தல

    ReplyDelete
  18. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    அசலா வந்து அசத்துறீங்க

    இது தலைக்கு தெரியுமா ....
    //


    ஹி.., ஹி.., மற்றும் நன்றி..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails