Friday, June 12, 2009

வார்த்தை தவறி விட்டாய் IPL fake player

IPL fake player அனைவரின் எதிர்பார்ப்பும் பொய்த்துவிட்டது. ஐபிஎல் போட்டி முடிந்த உடன் தன்னை வெளிப் படுத்திக்கொள்வேன் என்று சொன்ன நிழல்வீரர் இன்றுவரை தன்னை வெளிப் படுத்திக் கொள்ளவில்லை. அவரது பணி உலகக் கோப்பையிலும் தொடர்கிறது. ஆனால் அதே பெயர்தான். ஐசிசி நிழல்வீரர் என்றெல்லாம் மாற்றிக் கொள்ளவில்லை

சேவக்கின் காயம் பற்றிக் கூட திருவாய் மலர்ந்திருக்கிறார். (நாம்தான் சேவக்,டோனி பெயர்களை உபயோகப் படுத்துகிறோம். அவர் குறிச் சொற்களைத்தானே உபயோகப் படுத்துகிறார். எனவே அவர் இதையெல்லாம் மறுக்கக் கூடும்)

சேவக்கின் காயம் உண்மைதானாம். போட்டியின் முதல்பாதியில் அந்தக் காயம் குணமடைந்துவிட்டால் இரண்டாம் பாதியில் குறைந்த பட்சம் இறுதிப் போட்டியிலாவது விளையாடிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் தான் அங்கே சேவக் போனாராம். வெளிக்காயமும் குணமாகவில்லை. ஊடகங்கள் தயவால் உள்காயமும் உட்பூசலும் உருவாகிவிட்டதால் அவர் திரும்பிவிட்டதாகக் கூறியிருக்கிறார். டோனி கூட எதையும் தாங்கும் இதயத்தை எங்கோ தொலைத்தவர் போல் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

இந்திய அணிக்கு நாம்தான் மிகுந்த பக்கபலமாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.

ஆறு ஓவருக்கு அடுத்து முதல் விக்கெட் விழுந்தால் டோனியும், அதற்கு முன் முதல் விக்கெட் விழுந்தால் ரெய்னாவும் களத்தில் இறங்கும் விஷயம் கூட நிழல் விளையாட்டுவீர எழுத்தருக்கு தெரிந்திருக்கிறது.

=====================================================

அதெல்லாம் விடுங்க.......

த்ண்ணியிலயே பெறந்து தண்ணிலய வளர்ந்து, தண்ணி காரங்ககிட்ட விளம்பரம் வாங்கற வீரர் தண்ணியடிச்சா தப்பாங்க.., அதுவும் விளையாடும்போது இல்லைங்க.. அந்த இடமும் தண்ணியடிக்க தடை செய்யப் படலயே..........

அவர வீட்டுங்க போங்கண்ணு சொல்லிட்டு அவருக்கு பின்னாடியே அவர் அணியினரும் போறாங்க... என்ன நடக்குது அங்க...........................

நாம எதாவது சொல்லி நாமதான் இனவெறிய தூண்டறோம்ணு சொல்லிட்டா என்னங்க பண்றது?

அப்புறம் நான் அம்மாவைத்தான் கெட்டவார்த்தையில திட்டினேன்னு பல்டியடித்தா அவங்க விட்டுட்டாலும் நம்ம வீட்ல சோறு போடுவாங்களா?

11 comments:

  1. துடுப்பாட்டத்துக்கும் நம்மிள்க்கும் காத தூரம்!

    ReplyDelete
  2. ஆறு ஓவருக்கு அடுத்து முதல் விக்கெட் விழுந்தால் டோனியும், அதற்கு முன் முதல் விக்கெட் விழுந்தால் ரெய்னாவும் களத்தில் இறங்கும் விஷயம் கூட நிழல் விளையாட்டுவீர எழுத்தருக்கு தெரிந்திருக்கிறது.///

    எனக்கென்னமோ அந்த IPL fake player இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் ருசிகண்ட பூனையாகிட்டதுபோல் தெரியுது.

    ReplyDelete
  3. அருமையான அலசல் தல.... இன்னும் பல பேரை துவைத்து தொங்க விடுங்க....

    ReplyDelete
  4. அவர் சொன்னா நல்லா தான் இருக்கும் யாரா இருப்பாரு

    ReplyDelete
  5. அவர் சொன்னா நல்லா தான் இருக்கும் யாரா இருப்பாரு.அருமை.தொடர்ந்து கலக்குங்க

    ReplyDelete
  6. வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    பழமைபேசி சார்,

    தேவன்மாயம் சார்,

    சுகுமார் சுவாமிநாதன் சார்,

    சுரேஷ் சார்,

    இது நம்ம ஆளு சார்

    ReplyDelete
  7. அடப் போங்க தல.. :-)

    வேலயத்த பய போல :-)

    ReplyDelete
  8. //கடைக்குட்டி said...

    அடப் போங்க தல.. :-)

    வேலயத்த பய போல :-)
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  9. //வினோத்கெளதம் said...

    தல அது யாரு..
    //

    தெரியலயே தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails